ஏலியன் பற்றிய கேள்விக்கு எங்கெல்ஸ் சொன்ன பதில் என்ன? : இயற்கையின் இயக்கவியல் நூல் ஓர் அறிமுகம்
இரா. சிந்தன்
இந்தப் பூமியே மொத்தமாக அழிந்துபோனால், வேறு எங்காவது உயிர் தோன்றவோ, பிழைத்திருக்கவோ சாத்தியம் உண்டா? பூமியை போலவே உயிர்கள் வாழ சாத்தியமுள்ள கோள்கள் உள்ளனவா? நம்மைப் போலவோ, நம்மை விட முன்னேறியோ, உயிரினங்கள் இந்த பிரபஞ்சத்தில் வாழ்கின்றனவா? என்ற கேள்விக்கு விஞ்ஞானம் இப்போதும் நிரூபணம் தேடி வருகிறது. அதையே பலரும் கற்பனையான வேற்றுலக வாசிகள் என்ற பெயரால் கதைகளாகவும், அச்சுறுத்தும்…
0 notes
மாநிலங்களின் உரிமைக்காக ஒன்றுபட வேண்டும் - பிரகாஷ் காரத்
எதிர்க் கட்சிகள் மாநில உரிமைகள், கூட்டாட்சியின் மீதான தாக்குதல்களை ஒருங்கிணைந்து எதிர்கொள்வதில்லை. நிறைய மாநில அரசுகள் எதிர்க்கட்சிகள் வசம் உள்ளன. எல்லா மாநிலங்களும் பாதிக்கப்படும்போது ஒருங்கிணைந்த எதிர்ப்பை காண்பிக்க வேண்டும்...
நேர்காணல் – சுவாமிநாதன், சிந்தன்
இந்தியாவின் கூட்டாட்சியின் மீதான தாக்குதல் ஆளும் வர்க்கங்களுடைய நலனில் இருந்து எழுகிறதா?
மாநிலங்களின் ஒன்றியமே இந்தியா என்பதை, கூட்டாட்சி கருத்தாக்கத்தின் முதல் அம்சமாக பார்க்கிறோம். மாநில அரசுகளுக்கு தனித்த அதிகாரங்களும், செல்வாக்கும் உண்டு. இத்தகைய தன்மையை அங்கீகரிப்பதாக கூட்டாட்சி கட்டமைப்பு அமைந்துள்ளது.
இந்த ஏற்பாடு, நம் நாட்டின் பெரும் செல்வந்தர்களின்…
View On WordPress
0 notes
ரஷ்யாவை ‘அடக்க முயலும்’ அமெரிக்க ஆட்டம் !
பேரா. பிரபாத் பட்நாயக்
உலக நாடுகள் அடைந்துள்ள ‘வளர்ச்சி’ நிலைக்கும், இயற்கை வளங்களின் மீது அவர்கள் கொண்டிருக்கும் கட்டுப்பாட்டிற்கும் இடையில் மிகப்பெரும் அசமத்துவம் நிலவுகிறது. உதாரணமாக, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி, ஜப்பான் மற்றும் கனடா ஆகிய பெரும் வளர்ச்சியடைந்த நாடுகளின் குழுவான ஜி-7 நாடுகளை எடுத்துக்கொள்வோம். இந்த நாடுகளில், உலகத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 10…
View On WordPress
0 notes
ரஷ்யாவை ‘அடக்க முயலும்’ அமெரிக்க ஆட்டம் !
உக்ரைனில் நடந்துவரும் போர், ஓராண்டுக்கு முன்புதான் தொடங்கியதாகவும், ஒரு சிறிய அண்டை நாட்டின் மீது மிகப்பெரிய சக்தி மூர்க்கத்தனமாக நடந்துகொண்டதன் விளைவுதான் இந்தப் போர் என்றும் மேற்கத்திய ஊடகங்கள் காட்ட முயற்சிக்கின்றன. ஆனால் உண்மையில், ஏறக்குறைய ....
ஏகாதிபத்தியமும் இயற்கை வளங்களும்:
ரஷ்யாவை ‘அடக்க முயலும்’ அமெரிக்க ஆட்டம் !
பேரா. பிரபாத் பட்நாயக்
உலக நாடுகள் அடைந்துள்ள ‘வளர்ச்சி’ நிலைக்கும், இயற்கை வளங்களின் மீது அவர்கள் கொண்டிருக்கும் கட்டுப்பாட்டிற்கும் இடையில் மிகப்பெரும் அசமத்துவம் நிலவுகிறது. உதாரணமாக, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி, ஜப்பான் மற்றும் கனடா ஆகிய பெரும் வளர்ச்சியடைந்த நாடுகளின் குழுவான ஜி-7 நாடுகளை…
View On WordPress
0 notes
தென்னகத்தில் இடம்பெயர் தொழிலாளர்: வருகையும் பின்னணியும் !
இந்த பிரச்சனையின் ஆழத்தை புரிந்துகொள்ள, இடம் பெயர்ந்து வந்து உழைக்கும் வட இந்திய தொழிலாளர்களைப் பற்றிய தரவுகளை ஆய்வு செய்வோம்.
இரா.சிந்தன்
இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய விவாதம் அவ்வப்போது பொதுத் தளத்தில் எழுகிறது. முன்பு அது பரவலாக நிகழ்ந்தபோது, அந்த விவாதத்திற்கு கொரோனா ஊரடங்கு காரணமாக இருந்தது. இந்தியாவின் சாலைகளில், சொந்த ஊர்களை நோக்கி, நடந்தே கடந்த தொழிலாளர்கள், மிகக் கடுமையான மனித வதைக்கு ஆளாயினர். இந்தக் கொடுமைக்கு எதிராக, ஒருமைப்பாட்டுணர்வு பரவலாக வெளிப்பட்டது.
இந்த முறை, வெறுப்புப் பிரச்சாரம், போலியான…
View On WordPress
0 notes
லெனின் 153 : புதியதோர் பொன்னுலகமே, இன்றைய நிகழ்ச்சிநிரல்!
மார்க்சியத்தால் ஒரு புதிய உலகை படைக்க இயலும் என்பதற்கு சான்றாக லெனின் வாழ்க்கை அமைந்துள்ளது. அத்துடன் மார்க்சியமே மாற்றத்தை ஏற்படுத்த வல்ல மாபெரும் தத்துவம் என்பதை உறுதியாக நிரூபிக்கும் வரலாறாகவும் லெனின் வாழ்க்கை அமைந்துள்ளது.
என்.குணசேகரன்
மார்க்சிய தத்துவம் நடைமுறைக்கு வழிகாட்டி; புரட்சிகரமான முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் தத்துவமாக மார்க்சியம் விளங்குகிறது. மார்க்சியத்தால் ஒரு புதிய உலகை படைக்க இயலும் என்பதற்கு சான்றாக லெனின் வாழ்க்கை அமைந்துள்ளது. அத்துடன் மார்க்சியமே மாற்றத்தை ஏற்படுத்த வல்ல மாபெரும் தத்துவம் என்பதை உறுதியாக நிரூபிக்கும் வரலாறாகவும் லெனின் வாழ்க்கை அமைந்துள்ளது.
அவர் வாழ்ந்த காலம்,…
View On WordPress
0 notes
வைக்கம் 100 : போராட்டக் களம் தரும் பாடங்கள் !
காந்தியாரை அனுமதிக்க மறுத்து அவமதித்த அந்த மனை தற்போது 'கள் இறக்கும் தொழிலாளர்களுடைய சங்கத்தின்' அலுவலகமாக செயல்படுகிறது. வரலாறானது முன்னோக்கியே நகரும் என்பதற்கான முன்னுதாரணம் இது. - தோழர் பினராயி விஜயன்
பினராயி விஜயன்
கேரள முதல்வர்
(கேரளாவில் நடைபெற்ற வைக்கம் சத்தியாக்கிரக போராட்டத்தின் நூற்றாண்டு தொடக்க விழாவில், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆற்றிய உரை இங்கு தமிழில் தரப்படுகிறது – ஆசிரியர்குழு)
வைக்கம் சத்தியாக்கிரக போராட்டம், ஈடு இணையில்லாத, மிகப்பெரிய போராட்டம் ஆகும். அந்த போராட்டத்தின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தை இன்று தொடங்குகிறோம். கேரளத்தில் மாறுமரக்கல் சமரம், அருவிபுரம் சிலை வைத்தல்,…
View On WordPress
0 notes
2023-24: தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை குறித்து
குஜராத் மாடல் என்ற கதையாடலை தகர்த்தெறிவதில் தமிழக வளர்ச்சி அனுபவம் ஓரளவிற்கு உதவும் என்பது சரியே. ஆனால் பிற அணுகுமுறைகளையும் கணக்கில் கொண்டு முன்னேற வேண்டியுள்ளது.
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா
2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான தேர்தல் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து திமுக தமிழகத்தின் ஆளும் கட்சியானது. பத்தாண்டு அதிமுக ஆட்சியை மக்கள் நிராகரித்து, திமுகவை ஆட்சி கட்டிலில் அமர்த்தினர். மக்களிடம் நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன. திமுக பல வாக்குறுதிகளைக் கொண்ட தேர்தல் அறிக்கையை முன்வைத்திருந்தது அதன் வெற்றிக்கு குறிப்பிடத்தக்க பங்கு ஆற்றியது.…
View On WordPress
0 notes
திராவிட மாடல் நூல்: தொடரும் விவாதம்
திராவிட மாடல் நூல் மீது நடந்த விவாதம் குறித்து ...
பேரா. வி. முருகன்
“ திராவிட மாடல்-தமிழ்நாட்டின் அரசியல் பொருளாதரத்திற்கான ஒரு விளக்கம்” என்ற புத்தகத்தை கேம்ப்ரிரிட்ஜ் பல்கலைக் கழக பிரஸ் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டது. திரு கலையரசன் அவர்களும் திரு விஜய பாஸ்கரும் இதன் ஆசிரியர்கள். பொருளாதாரம், அரசியல் அறிவியல் மற்றும் சமூகவியல் ஆகிய துறைகளில் சிறந்த ஆராய்ச்சி வல்லுனர்கள் என்று அறியப்படுபவர்கள்.
இந்தப் புத்தகம் அரசியல்…
View On WordPress
0 notes
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை 2023-24:மக்கள் மீதான துல்லிய தாக்குதல்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா
அறிமுகம்
ஆட்சியில் உள்ள ஆர்எஸ்எஸ்–பாஜக அரசின் இறுதி முழுநிதிநிலை அறிக்கை பாராளுமன்றத்தில் பிப்ரவரி 1இல் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கம் போல நிதி அமைச்சர் பட்ஜெட் உரை வார்த்தை ஜாலங்கள் நிறைந்ததாக அமைந்தது. பங்கு சந்தையையும் பெரு முதலாளிகளையும் குஷிப்படுத்த பல அறிவிப்புகள் அவரது உரையில் இருந்தன. ஆளும் கட்சி உறுப்பினர்கள் வழக்கம் போல, அவ்வப்பொழுது குரல் ஒலியும் கர ஒலியும்…
View On WordPress
0 notes
சீனாவின் சோசலிசமும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் !
சீனாவின் சோசலிசமும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் !
இரா. சிந்தன்
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் புதிதாக ஒரு சினிமா வெளியாகியிருந்தது. கணிணி தொழில்நுட்பத்தில் வல்லவரான ஒரு பெண், கணிணி மென்பொருட்களில் புகுந்து அவற்றின் பிழைகளைக் கண்டறிந்து, அதனை முடக்கக் கூடிய வேலையை செய்கிறார். உலகத்திற்கு ஆபத்தானசூழலை கொடுக்கும் சில பெரிய நிறுவனங்களின் கணிணியை முடக்கி அவர்களின் சொத்துக்களை ஏதாவது நலப்பணிகளுக்கு திருப்பி விடுகிறார். இந்த சமயத்தில், அவரால் பாதிக்கப்பட்ட…
View On WordPress
0 notes
இந்துத்துவா: உருவாக்கம், திட்டம், பரவல் ...
இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் தொடங்கி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சமீபகால செயல்பாடுகள் வரையிலும் பின்தொடர்ந்து அதன் உள்அம்சங்களை இந்தநூல் விவரிக்கிறது...
ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல் நூல் விமர்சனம்
வெறுப்பின் வேர்கள் – !
சிந்தன்
ஏ.ஜி. நூரானி எழுதிய, ‘ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்’ என்ற நூல் அண்மையில் தமிழில் வெளியானது. ஃபிரண்ட்லைன் ஆங்கில இருவார இதழின் ஆசிரியராக இருந்த ஆர். விஜயசங்கர், தன் பணிக் காலத்திலேயே சுமார் 2 ஆண்டுகள் கடுமையான உழைப்பைச் செலுத்தி இந்த நூலை தமிழில் கொடுத்திருக்கிறார். பாரதி புத்தகாலயம் இந்த…
View On WordPress
0 notes
பணவீக்க எதிர்ப்பு கொள்கையும், நவ தாராளமயமும்!
பணவீக்க எதிர்ப்பு கொள்கையும், நவ தாராளமயமும்! - பேரா. பிரபாத் பட்நாயக்
பேரா. பிரபாத் பட்நாயக்
Neo-Liberalism and Anti-Inflationary Policy
முதலாளித்துவ நாடுகளில் இருக்கும் மத்திய வங்கிகள் அனைத்துமே, பணவீக்கம் அதிகரிக்கும் சூழ்நிலையை எதிர் கொள்வதற்காக, வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளார்கள்; அல்லது விரைவில் உயர்த்த இருக்கிறார்கள். பெருந்தொற்றினால் ஏற்பட்ட விளைவுகளில் இருந்து மீள்வதற்கே, உலக பொருளாதாரம் திணறுகிறது. அது தேக்க நிலையை நோக்கியும், அதிக வேலை இழப்புகளை…
View On WordPress
0 notes
அமெரிக்கா எப்படி ‘ஏகாதிபத்தியமாக’ நிலவுகிறது?
"தற்காலத்தில்ஆட்சிக் கவிழ்ப்புகள் இராணுவ டாங்கிகளைக் கொண்டு ஏற்படுத்தப்படும் அவசியம் கிடையாது; பல சமயங்களில் அது வங்கிகளின் வழியாகவே நடக்கிறது"
இரா. சிந்தன்
முக்கண்ட சமூக ஆய்வுக் கழகத்தின் செயல் இயக்குனரும்,லெஃப்ட்வேர்ட் பதிப்பகத்தின் ஆசிரியருமான விஜய் பிரசாத் எழுதிய ‘வாஷிங்டன் தோட்டாக்கள்’ என்ற புத்தகம், அமெரிக்கா எப்படி ‘ஏகாதிபத்தியமாக’ தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது என்பதை விளக்குகிறது. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த புத்தகத்தை பேராசிரியர் பொன்ராஜ் தமிழில் கொடுத்துள்ளார்.
‘புரட்சியை கட்டமைக்கிற இடதுசாரிகளின் சொற்களை கொண்டதாகவும்,…
View On WordPress
0 notes
லெனின் வாசிப்பு எனும் புரட்சிகர பணி
என்.குணசேகரன்
“என்ன செய்ய வேண்டும்?” என்பது லெனினது நூல் தலைப்பு. அது, அவரது வாழ்க்கைத் துடிப்பாகவும் இருந்தது. ‘என்ன. செய்ய வேண்டும்?’ -கேள்வியை இடையறாது எழுப்புவதும், செயல் வியூகத்தை வகுத்து செயல்படுவதும்தான் லெனினது மகத்துவம்!
சொந்த வாழ்க்கையில் சொந்த நோக்கங்கள் அவருக்கு இருந்ததாக எதிரிகள்கூட எழுதவில்லை. பாட்டாளி வர்க்க விடுதலை, உலகப் பாட்டாளி வர்க்க புரட்சிதான் அவரது…
View On WordPress
0 notes
இந்திய வர்க்கங்களின் நிலைமையில் மாற்றமும், கம்யூனிஸ்டுகள் செய்ய வேண்டியதும் !
நவ-தாராளமய காலகட்டத்தில், தொழிலாளி வர்க்க சேர்மானத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எண்ணிக்கை விரிவடைந்துள்ளது...
(கொல்கத்தா பிளீனம் ஆவணத்தில் இருந்து, இந்தியாவின் ஊரக மற்றும் நகர்ப்புற சூழலில் நவ-தாராளமய காலத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களுக்கு தக்க நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை விளக்கும் பகுதிகள் சுருக்கமாக வழங்கப்படுகின்றன– ஆசிரியர் குழு )
ஊரக இந்தியா:
ஊரக இந்தியாவில் விவசாய உறவுகளின் தற்போதைய நிலைமை, காலத்திற்கு ஒவ்வாத அமைப்புகளும், சமூக உருவாக்கங்களும் கொண்டதாகவும், இதன் ஊடாகவே முதலாளித்துவ…
View On WordPress
0 notes
மார்க்சிய தத்துவ போராட்டத்தை முன்னெடுக்கும் வழிமுறைகள் !
இந்திய சூழலில் எப்படி சோசலிச சமூகம் உருவாக முடியும் என்பதை படைப்பாற்றலுடன் விளக்கிட வேண்டும். இளைய தலைமுறையினைக் கவர்ந்திட சோசலிச அமைப்பு பற்றிய பார்வையினை இன்றைய இந்திய சூழலில் விளக்கிச் சொல்வது மிக முக்கியமான பணியாகும்.
குரல்: பூங்கொடி மதியரசு
(கொல்கத்தா பிளீனம் ஆவணத்தில் இருந்து)
மக்களிடத்தில் அரசியல் தத்துவார்த்த இயக்கம் நடத்துவது மிகவும் முக்கியமானதாகும். கட்சி உறுப்பினர்களின் தத்துவார்த்த ��ுரிதலை உயர்த்துவது அணிகளுக்கு ஊக்கம் கொடுத்து கட்சிக்கு வலிவும் பொலிவும் கொடுக்கும்.
கட்சி உறுப்பினர்களின் தத்துவார்த்த மட்டத்தை உயர்த்துவது என்பது தத்துவார்த்தப் பணியின் மற்றொரு அம்சமாகும். அதற்குக் கட்சிக்குள்ளும்,…
View On WordPress
0 notes