உண்மையன்பே உயரிய நித்தியமாகிய நல்ஞானம் - வாழ்க்கை கவிதை வரிகள்
வாளெடுத்து போர் புரிய வீரவேசமாய் கிளம்பிய நெஞ்சம் கலங்கி நின்றது போரின் இறுதி முடிவுக் கண்டே…செங்குருதி பெருக்கெடுக்க உருவாகிய சேற்றில் ருத்ரதாண்டவம் ஆடிய நெஞ்சம் கண்ணீர் சிந்தியது தம்மவர் செங்குருதி பெருக்கெடுக்க மாய்வதைக் கண்டே…நாட்டுடைமைக்காகவே,அரசுரிமைக்காகவே,நெஞ்சம் கொண்ட பகைமையைத் தீர்ப்பதற்காகவே போராடி, வேட்டையாடி அரசு அதிகாரம் பெற்று,வெற்றியென்னும் கனியைச் சுவைத்த பின்னும் அமைதி…
View On WordPress
0 notes
எதற்கு என்று சொன்னால் நம்பமுடியாது! அமெரிக்காவில் வெடித்தது மாணவர் போராட்டம்!
அமெரிக்கா என்றவுடன் முதலில் நமக்கு நினைவில் வருவது அதன் செல்வச்செழிப்பும் உலகநாடுகளிடம் அதற்கு இருக்கும் அதிகாரப் பலமும் தான். உலகின் எந்த மூலையில் எந்தப் பிரச்சனை இருந்தாலும் அமெரிக்காவின் பெயர் அடிபடாமல் இருக்கவே முடியாது. ஊடகங்களுக்குத் தற்போதையச் சூடான செய்தி எதுவென்று பார்த்தால் மத்திய கிழக்கு நாடான பாலஸ்தீனத்தில் நடந்த இனவழிப்புப் போர்த் தான். இந்தப் பூமிப்பந்தில் இருக்கும் பெரிய திறந்த வெள…
View On WordPress
0 notes
சனாதனிகளே...! சமூகநீதிக்காரர்களே...!!
அன்புத் தமிழ்ச் சொந்தங்களே !
சனாதனிகளே…! சமூகநீதிக்காரர்களே…!! எந்த சமூக நீதிக் கட்சியானாலும் சரி,,, எந்த சனாதனக் கட்சியானாலும் சரி,,,, அரசியல் கட்சிகள் இனி வருங்காலங்களிலாவது தங்களை திருத்திக் கொள்ள வேண்டும். பொது மக்களாகிய எங்களை உங்களுடைய கொள்கைகளுக்கு ஏற்றார் போல் இனியும் வளைக்கக்கூடாது இனியும் திணிக்கக் கூடாது இனியும் நசுக்கவும் கூடாது.
மரபான பெருங்குடியுமான ஆதிநீதித் தமிழர்களாம் எங்களை…
View On WordPress
0 notes
புளோரிடா கவர்னர் ரான் டிசாண்டிஸ் அரசியல் நோக்கங்களுக்காக புலம்பெயர்ந்தோரை இடம் மாற்ற தனியார் ஜெட் விமானங்களைப் பயன்படுத்தியதால் சர்ச்சை வெடித்தது - தமிழ் பிக்ஸ்
அரசியல் நோக்கங்களுக்காக புலம்பெயர்ந்தோரை இடமாற்றம் செய்ய வரி செலுத்துவோர் நிதியுதவி பெற்ற தனியார் ஜெட் விமானங்களைப் பயன்படுத்தியதற்காக புளோரிடா கவர்னர் ரான் டிசாண்டிஸ் விமர்சனத்தை எதிர்கொண்டதால், சர்ச்சை அவரைச் சூழ்ந்துள்ளது.
Source link
View On WordPress
0 notes
அவர் சண்டாளர்தான்; அவர்தான் சக்கிலியர்; அவர்தான் நாவிதர் | நெல்சன் சேவியர்
அவர் சண்டாளர்தான்.
அவர்தான் சக்கிலியர்.
அவர்தான் நாவிதர்.
அவர்தான் வண்ணார்.
அவர்தான் அருந்ததியர்.
அவர்தான் பள்ளர்.
அவர்தான் பறையர்.
இன்னும் தமிழ்நாட்டில் இருக்கிற அத்தனை கடைநிலை சாதிகளும் கலைஞர்சாதிதான். இந்திய அரசியலிலேயே பிறந்த சாதியின் காரணமாக தன் வாழ்நாள் முழுவதும் நேரடியாகவும் மறைமுகமாகவும் மிக மோசமான சாதிய தாக்குதலுக்கு உள்ளானவர் கலைஞர்.
இப்படி எழுதணும்னு நேத்து எழுதி வெச்சேன். ஆனா…
0 notes
லோக்சபா தேர்தலில் தோல்வியடைந்தாலும் அமைச்சர் ஆக்கப்பட்டார் என பிரபுல் படேல் குறித்து என்சிபி தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்
உத்தவ் தாக்கரே இன்று முதல் 2 நாள் விதர்பா சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்
கட்சித் தலைவரும், துணை முதலமைச்சருமான அஜித் பவாரால் உருவாக்கப்பட்ட என்சிபி பிளவுக்குப் பிறகு மகாராஷ்டிராவில் அரசியல் கொந்தளிப்பு மற்றும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது சொந்தக் கட்சியில் பிளவு ஏற்பட்டு ஒரு வருடம் கழித்து, சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே இரண்டு நாள் தொடங்குகிறார். பாஜக கோட்டையாக கருதப்படும் விதர்பாவில்…
View On WordPress
0 notes
திராவிட மாடல் நூல்: தொடரும் விவாதம்
திராவிட மாடல் நூல் மீது நடந்த விவாதம் குறித்து ...
பேரா. வி. முருகன்
“ திராவிட மாடல்-தமிழ்நாட்டின் அரசியல் பொருளாதரத்திற்கான ஒரு விளக்கம்” என்ற புத்தகத்தை கேம்ப்ரிரிட்ஜ் பல்கலைக் கழக பிரஸ் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டது. திரு கலையரசன் அவர்களும் திரு விஜய பாஸ்கரும் இதன் ஆசிரியர்கள். பொருளாதாரம், அரசியல் அறிவியல் மற்றும் சமூகவியல் ஆகிய துறைகளில் சிறந்த ஆராய்ச்சி வல்லுனர்கள் என்று அறியப்படுபவர்கள்.
இந்தப் புத்தகம் அரசியல்…
View On WordPress
0 notes
அரசியல் என்பது ஒரு சாக்கடை என்று...
அரசியல் என்பது ஒரு சாக்கடை என்று அதை ஒதுங்கிவிடாதீர்கள்!
அறிந்து கொள்ளுங்கள் அந்த ஒரு சாக்கடையில் தான் உங்களது அதிகாரங்களும் உரிமைகளும் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றது!
தெரிந்து கொள்ளுங்கள் அந்த ஒரு சாக்கடையில் தான் உங்களது சுதந்திரமும் நீதியும் நியாயமும் ஒழித்து வைக்கப்பட்டுருக்கின்றது!
புரிந்து கொள்ளுங்கள் அந்த ஒரு சாக்கடையில் தான் உங்களது பதவியும் பாதுகாப்பும் எதிர்காலமும் பதுக்கி…
0 notes
உலகம் எதை நோக்கிப் பயணிக்கிறது?
“தான் வெற்றி பெற யாரையும் வீழ்த்தலாம் என்னும் நரி தந்திரங்களில் ஊறிப் போய் கொண்டிருக்கும் மனநிலையை எவரிடமும் காண முடிகிறது.”
சாமானியர்கள் வயிற்றுப் பிழைப்பிற்காக ஓடிக் கொண்டிருக்கும் போது, இங்கு பணக்காரர்கள் நரித்தந்திரம் செய்து கொண்டிருக்கிறார்கள். சாமானிய மக்களிடமும் தொழிற்நுட்பம் சென்றடைய வேண்டும் என்று சில நிறுவனங்கள் குறைந்த விலையில் மொபைல் போன்களை விற்கிறார்கள் என்று நினைத்தால் அது தவறு.…
View On WordPress
0 notes
யார் தமிழர் | பெருமான் பெருவேல்
மனப்பூர்வமாக தங்களைத் தமிழர் என உணரும், தான் தமிழன் என பெருமையுடன் கூறும் எவரும் தமிழர்களே. ஆதியில்; எந்த சாதியினர், எந்த மதத்தினர், தமிழ் மொழியை உருவாக்கினார்கள் என ஆதார ரீதியாக எவரும் கூற இயலாது. மொழி என்பது பொதுவானது. தங்களது உணர்வுகளை, வாழ்க்கைச் சூழலைப் பறிமாறிக்கொள்ள, எவரும் எந்த மொழியினையும் ஏற்றுக்கொள்ளலாம். விரும்பினால் மதம் மாறிக்கொள்ள முடிவதைப்போல, விரும்பும் மொழியினை எவரும் ஏற்றுக்கொள்ள இயலும். தமிழ் மொழிக்கும் மற்ற மொழிகளுக்கும் உள்ள வேறுபாடு யாதெனில்; நாம் ஆங்கிலம் கற்றாலும், நம்மால் ஆங்கிலேயராக உணர இயலாது. ஆங்கிலேயர்கள் நம்மை ஆங்கிலேயராக ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். இதற்கு காரணம், நாம் பண்பாட்டு ரீதியில், அடிப்படையிலேயே வேறுபாடு உடையவர்களாக இருக்கிறோம். ஆனால், இந்திய துணைக்கண்டத்தில் ஒரே மாதிரியான பண்பாடு கொண்டோர், தமிழ் மொழியைக் கற்று, தங்களைத் தமிழர்களாக உணர இயலும். இவ்வாறு தங்களைத் தமிழர்களாக உணர்பவர்கள் அனைவரும் தமிழர்களே. உணர்வால் தங்களைத் தமிழர்களாக உணர்பவர்களை, சாதியை முன்வைத்து தமிழரல்ல என வாக்கு அரசியலுக்காக கூறுவது சரியல்ல. இதனால் தமிழின் வளர்ச்சிக்கு எந்த நன்மையும் இல்லை.
உலகில், தமிழ் மொழிக்குத்தான் நான் அறிந்தவரை தாய்மை குணம் உள்ளது. எவர் தங்களைத் தமிழராக உணர்ந்தாலும், அவர்களை அன்புடன் அரவணைத்து, தன் பிள்ளைகளாக ஏற்றுக்கொள்வதில், தமிழன்னைக்கு நிகராக வேறு எந்த மொழிகளும் இல்லை.
என்னைப்பொருத்தவரை; மொழியை முன்னிருத்தி, சமூகநீதியை ஏற்படுத்த இயலாது. மொழி அனைவருக்குமானது. பொதுவானது. தமிழ்ப் பற்றுடன் இருப்பவர்களின் சாதியை வைத்து, இவர் தமிழர், அவர் தமிழர் அல்ல எனக் கூறிக்கொண்டிருப்பது, தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு எந்த வகையிலும் உதவியாக இருக்கப்போவதில்லை.
அரசியலில், வாழ்வாதார உரிமைகளில், மொழியை வைத்து சரியான பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்த இயலாது. இந்தியா போன்ற நாட்டில்; ஒவ்வொரு சாதியினரின் எண்ணிக்கை, ஒவ்வொரு மதத்தினரின் எண்ணிக்கை சார்ந்து மட்டுமே, அவர்களுக்கான சரியான அரசியல் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்த இயலும்.
“கம்யூனிசஸம், மதச்சார்பின்மை, இந்துத்துவம், திராவிடம், தலித்தியம், தமிழ்த்தேசியம்” என எந்த வகை அரசியலை செய்தாலும்; அதற்குள், ஒவ்வொரு சாதியினருக்கும், ஒவ்வொரு மதத்தினருக்கும், அவர்களது சமூகத் திரளின் எண்ணிக்கை சார்ந்து, பிரதிநிதித்துவம் அளித்தால��� மட்டுமே, அதனை மக்களுக்கான அரசியல், சமூக நீதிக்கான அரசியல் எனக் கூற இயலும்.
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தமிழ் மொழியைக் கற்றுக்கொடுத்து, அனைவரையும் தமிழராக ஏற்கும் மனோபாவத்தையும், தொலைநோக்குச் சிந்தனைகளையும், தமிழர்கள் கொள்கையாக கொண்டிருக்கவேண்டும். இதுவே தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் நன்மை தரும்.
10 April 2024
2 notes
·
View notes