https://noolagan.com/2022/10/blog-post_32/
மனம் அமைதியாக இருந்தால்
உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார்.
தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் அவரை சிறை பிடித்து ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது.
சிறையில் மன் உளைச்சலில் அவரின்
கடைசி காலம் கழிந்தது.
அவரை பார்க்க வந்த அவரின் நண்பர் ஒருவ்ர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார்.
ஆனால் சிறை படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல் அதன் மீது கவனம் போகவில்லை.சிறிது கால்த்தில் இறந்தும் போனார்.
பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட அதை ஆய்வு செய்த போது அந்த அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறீப்பு இருந்தது.
அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்க்கான வழியை அந்த குறிப்பு சொல்லி இருந்த்து.
ஆனால் அவரின் மனஉளைச்சலும்,பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கி வைத்து அவரின் தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது.
உறுதியான சிமெண்ட் தரையையும், மரபெட்டியையும் தன் கூர்மையான் பற்களாலும், நகத்தாலும் குடைந்து
ஓட்டை போடும் எலி.
ஆனால் அதே மரத்தால் செய்யப்பட்ட எலிப்பொறியில் சிக்கி கொண்டால் அதற்கு ஏற்படும் மன உளைச்சலாலும், பதட்டத்தாலும் அந்த எலி பொறியை உடைக்கும் வழியை விட்டு விட்டு அந்த பொறியின் பின்னால் இருக்கும் கம்பிக்கு முன்னால் பின்னாலும் பதட்டத்துடன் சென்று சிந்தனை செய்யாமல் மனிதர்களிடம் மாட்டிக்கொண்டு விடும்.
மாவீரனுக்கும் சரி,சாதாரண எலிக்கும் சரி, பதட்டமும் மன உளைச்சலும் அவர்களின் சிந்தனையை செயல்படாமல் வைத்து முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது.
மனம் அமைதியாக இருந்தால்
பிரச்சனையை எதிர்நோக்கும்
சிந்தனை சிறப்பாக செயல்படும்.
இதற்கு தியானம் உதவும்......
0 notes
ஜனாதிபதி பிடன் வெள்ளை மாளிகை திரையிடலில் ஹாலிவுட் எழுத்தாளர்களுக்கு 'நியாயமான ஒப்பந்தம்' அழைப்பு விடுத்தார் - தமிழ் பிக்ஸ்
தற்போது நடைபெற்று வரும் ரைட்டர்ஸ் கில்ட் ஆஃப் அமெரிக்கா வேலைநிறுத்தம் குறித்து ஜனாதிபதி பிடன் பகிரங்கமாக கருத்து தெரி��ித்துள்ளார்
Source link
View On WordPress
0 notes
2020 டெல்லி கலவரத்தில் காயம் காரணமாக பள்ளிப் படிப்பை இரண்டு ஆண்டுகள் நிறுத்திய 17 வயது சிறுவன் 10 தேர்வுகளில் தேர்ச்சி பெற்றான்.
– மொயின் ஷா
முகமது 17 வயதான சமீர், பிப்ரவரி 24, 2020 அன்று இரவை நினைவு கூர்ந்தார், அது தனது வாழ்க்கையை உயர்த்தி, பள்ளியை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தியது. அவர் ஒரு இஜ்தேமாவிலிருந்து (ஒரு மத சபை) முஸ்தபாபாத்தில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அவருக்கு முன்னால் ஒரு மோதல் வெடித்தது மற்றும் அடையாளம் தெரியாத ஒரு ஆசாமி அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது.
இந்த துண்டுகள்…
View On WordPress
0 notes
தமன்னா பாட்டியா, பெண்பால் பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொள்வது உடல் ரீதியாக சோர்வாக இருந்தது என்று பகிர்ந்து கொள்கிறார் | இந்தி திரைப்பட செய்திகள்
தமன்னா பாட்டியா அறிமுகம் தேவையில்லாத பெயர். தன் வேலையால் கோடிக்கணக்கான ரசிகர்களை உருவாக்கி தன் அழகால் ஒவ்வொரு ஆணும் தன் மீது காதல் கொள்ள வைத்துள்ளார். அவள் நடக்கிற விதம், பேசுவது மற்றும் அவளைப் பற்றிய எல்லாமே ஆண்களுக்கு முழங்கால்களில் பலவீனத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும், சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு தமன்னா பாட்டியா பொழுதுபோக்கு துறையில் நுழைந்தபோது, அவருக்கு பெண்பால் பழக்கம் இல்லை…
View On WordPress
0 notes
நிலையில்லா காரியத்தை நிறுத்த வேண்டாம்
நடக்காது என்பது நன்கு தெரிந்தும் பொறாமையால் முயன்ற வான்கோழி அவமானப்பட்டு நின்றது. இதைத்தான் செய்யுளின் இந்தவரி உணர்த்துகிறது.
புலவர் உலகநாதர் இயற்றிய ‘உலகநீதி’ யில் இரண்டாவது செய்யுளில் உள்ள இரண்டாவது நீதி ‘நிலையில்லா காரியத்தை நிறுத்த வேண்டாம்’ என்பதாகும். இதன் பொருள் : நடவாது என்று தெரிந்த காரியத்தை நிலை நிறுத்தக் கூடாது.இதை விளக்கும் விதமாக அமைந்த சிறுவர்கான கதை நிலையில்லா காரியத்தை நிறுத்த வேண்டாம்.
பெரிய சோலை ஒன்று இருந்தது. அந்த சோலையில் மயில்,குயில்,மைனா,கிளி, காகம், சிட்டுக்குருவி, ஆந்தை,காடை,வான்கோழி,…
View On WordPress
0 notes
பிடித்த தமிழ் கவிதைகள் ஏதேனும் உள்ளதா?
பாரதியார் மற்றும் பாரதிதாசன் கவிதைகள் மீது ஈர்ப்பு உண்டு.
தேடிச் சோறு நிதந் தின்று
பல சின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப�� பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரை யெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?
👆this one had a lasting imrpession on me
3 notes
·
View notes
கதிரவன் முழித்திடும் முன்
இரவில் நடமாடும் நிழல்களாய் நம் கதைகள்
2 notes
·
View notes
மோகினி - ந.பிச்சமூர்த்தி
கதையாசிரியர்: ந.பிச்சமூர்த்தி
மோகினி (சிறு கதைகள்),
முதற் பதிப்பு: நவம்பர் 1951,
கலைமகள் காரியாலயம், சென்னை.
பொருளடக்கம்
1. மாப்பிள்ளை சமர்த்து
2. காணிக்கை
3. காட்டுச் சங்கிலி
4. விஜயதசமி
5. பரீட்சை தாண்டி
6. கிட்டாத ஜெயில்
7. சிங்கக் குட்டி
8. விட்டுப் போன கதை
0 notes
https://noolagan.com/2024/03/ஆயிரம்-கோடி-செல்வம்-இருந
ஆயிரம் கோடி செல்வம் இருந்தாளும் சொந்த பந்தமும் , நல்ல நட்புமுமே கடைசி வரையில் நம்முடன் இருக்கும்
எலி ஒன்று வைர வியாபாரி வீட்டிலிருந்து ஒரு வைரத்தை விழுங்கிவிட்டது..
மிகவும் விலை உயர்ந்த வைரம் அது. வியாபாரி எலி பிடிப்பவனை பார்த்து எப��படியாவது அந்த எலியை "ஷூட்"செய்து வயிற்றில் இருக்கும் வைரத்தை எடுக்க உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார்..
எலி பிடிப்பவனும் தன் துப்பாக்கி’யுடன் வந்துவிட்டான்.. அதை ஷூட் செய்ய..
எலி அங்கே இங்கே என்று போக்கு காட்டி ஓடியதில் திடீரென்று ஆயிரக்கணக்கான சக எலிகள் ஒன்று கூடிவிட்டன..
ஆயிரக்கணக்கான
எலிகளுக்கிடையேயும் அந்த வைரம் முழுங்கிய எலி மட்டும் அந்த எலிக்கூட்டத்தோடு சேராமல் ஒதுங்கி தனித்தே நின்றிருந்தது .
எலி பிடிப்பவனுக்கு அது வசதியாக போய்விட்டது..
சரியாக குறி பார்த்து அந்த எலியை டுமீல்.. என சுட்டான்..எலி *spot out..
வைர வியாபாரி சந்தோஷமாக அந்த எலியின் வயிற்றைக் கிழித்து வைரத்தை எடுத்துக்கொண்டான்..
ஆனால் ஒரு கேள்வியை எலி பிடிப்பவனைப் பார்த்து வைர வியாபாரி கேட்டான்..
ஆமா…! அந்த எலி மாத்திரம் மற்ற எலிகளோடு சேராமல் தனியே தனித்தே இருந்ததே! நீயும் அதை சரியாக அடையாளம் கண்டு சுட்டுவிட்டாய்.. என்ன காரணம்? என்றான்.
அந்த எலி பிடிப்பவன் பதில் சொன்னான்…
இப்படித்தான்…
'பலபேர், திடீர் பணக்காரர்கள் ஆனதும் மற்றவர்களை விட நாம் உயர்ந்தவர் என்ற எண்ணம் கொண்டு மற்றவர்களுடன் தன்னை சேர்க்காமல், தூரத்தில் வைத்துக் கொள்வார்கள்" அதுவே.. ஆபத்தில் அவர்களுக்கு உதவாமல் போய்விடுகிறது. என்றான்.
உறவுகளும் அப்படித்தான் சிலர் இடையில் வந்து அழிந்துபோகும் செல்வத்தை நம்பி கடவுள் கொடுத்த உறவுகளை அசட்டை செய்து விட்டுவிடுகிறார்கள்.
ஆயிரம் கோடி செல்வம் இருந்தாளும் சொந்த பந்தமும் , நல்ல நட்புமுமே கடைசி வரையில் நம்முடன் இருக்கும்….
0 notes
#புராணத்தில்_வடை
வடை என்னும் பலகாரம் இதிகாச காலத்திலேயே இருந்துள்ளது என பல்வேறு சுவையான தகவல்கள் தெரிவிக்கின்றன! மகாபாரதத்தில் சமையல் கலைஞனான பீமன் சுவையான வடைகள் சுடுவதில் சூரன் என்கிறார் வியாசர்! கடோத்கஜனுக்கு வடைகள் என்றால் அவ்வளவு பிரியமாம்! அவனது டெய்லி ஸ்நாக்சுக்கு இன்று மதுரையில் 100 கடைகளில் போடும் அளவுக்கு வடைகளை சுட்டுத் தந்தனராம்!
பிதாமகர் பீஷ்மரே வடைகள் மீது சிறந்த ப்ரியம் கொண்டவர் என்றும் கூறப்படுகிறது! இராமயணத்தில் புத்திர வரம் வேண்டி அஸ்வமேத யாகம் செய்த ஶ்ரீதசரத மகாராஜா யாகம் முடிந்து நாட்டு மக்கள் அனைவருக்கும் வடை, பாயாசத்துடன் விருந்தளித்தார் என்று விவரிக்கிறார் வால்மீகி! ஆனால் அந்த வடை உளுந்து வடையா? மசால் வடையா? என்பது குறித்த முழுத் தகவல்கள் ஏதுமில்லை!
ராமர் விஷ்ணுவின் அவதாரம் என்பதால் அந்த வடை உளுந்து வடையே என்று அடித்துக் கூறுகிறார் உத்திரபிரதேசத்தை சார்ந்த பண்டிட் கேஷவ்ஜி என்னும் ஒரு மடச் சாமியார்! எப்போதும் விஷ்ணுவின் விரலில் சக்கரம் இருக்கும்! அதைப் போல நடுவில் துளை உள்ள உளுந்துவடையையே அந்த யாக விருந்தில் பரிமாறி இருக்கலாம் என்பது அவரது ஆழ்ந்த தீர்க்கமான கருத்தாகும்!
இதை கேஷவ்ஜியின் சீடர்களும் ஆமோதித்து மெய்சிலிர்த்து வருகிறார்கள்! ராமர் எப்போதும் ஜவ்வரிசியால் செய்யப்பட்ட வடையை மிகவும் விரும்பி சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது! இன்றும் ராமநவமியன்று ராமருக்கு ஜவ்வரிசி வடைகள் செய்து படைப்பதை ஆன்மீக ஆன்றோர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்! ராமரின் வனவாசத்தில் கூட குகனின் வீட்டில் காட்டுக் கீரையில் செய்த..
கீரவடையை ருசித்து இருக்கிறார் என்னும் ஒரு ருசிகரத் தகவலும் உண்டு. சூர்ப்பனகையே லட்சுமணன் வனத்தில் வடை சுட்ட வாசனையை மோப்பம் பிடித்து காட்டுக்குள் வந்ததாகவும், ராமர் பாலம் கட்டும் போதும் சரி இராவணனுடன் போர் செய்த போதும் சரி வானரப் படைகளுக்கு தினம் தினம் லட்சக்கணக்கில் வடைகள் சுட்டு தந்திருப்பதாகவும் நேபாள நாட்டு செவிவழிக் கதைகள் உண்டு!
ஆம்! இராமயணத்தில் கிஷ்கிந்தாவில் தான் மெய்யான, யாரும் மறுக்க முடியாத வடையின் சரித்திரம் துவங்குகிறது! ஆம் வானர தேசமான அங்கு தேசிய உணவே வடை தான்! (இன்றும் அனுமாருக்கு நாம் வடை மாலை சாற்றி வழிபடுவதே இதற்கான ஆதாரம்) இராமர் பட்டாபிஷேகத்திலும் நாட்டு மக்களுக்கு வடை பாயாசத்துடன் விருந்தளிக்கப்பட்டதாம்! இவ்வாறு நமது இதிகாசமெங்கும்..
பலப் பல வடைகளைக் காணாலாம்! ஆனால் உ.பியில் இருக்கும் இன்னொரு மடச் சாமியாரான மகாதேவ்ஜி இதிகாசத்தில் வடைகள் பற்றி வரும் தகவலே ஒரு வடை தான்! அந்த காலத்தில் வடைகளே கிடையாது! அதை சுட்டு விற்கும் கடைகளும் கிடையாது! ஆனால் சிவபக்தர்களே சமோசா சிவனின் பண்டம் ஆகும்! சமோசாவை நன்கு உற்று கவனியுங்கள்! அப்படியே ஒரு லிங்கம் போலவே இருக்கும்!
அது தட்டில் கம்பீரமாக வீற்றிருக்கும்! என்று கூறி அவரது சீடர்களை புல்லரிக்கவிடுகிறார்! இப்படி வடையில் வைணவமும் சைவமும் போட்டி போட்டாலும் இந்தத் தகவல்களை படிக்கும் போது மெய்யாகவே இதிகாசத்தில் வடைகள் இருந்திருக்கலாம் என்று நம்பத் தோன்றுகிறது! எதேஏஏ! இதிகாசமே ஒரு பெரிய வடையா!
ரைட்டு.! நீங்க நடத்துங்கப்பா…
படித்ததில் பிடித்தது..
1 note
·
View note
திருக்குறள் கதைகள் 265 | அதிகாரம் 27 | தவம் | குருவும் சீடனும்
0 notes
போகவிட்டுப் புறஞ்சொல்லித்திரிய வேண்டாம்
ஒரு கோவிலுக்கு அருகில் பெரிய குளம் இருந்தது. அந்த குளத்திலே ஒரு பக்கம் தாமரைக் கொடிகளும் எதிர்பக்கம் அல்லிக் கொடிகளும் வளர்ந்திருந்தன. அந்த குளத்திலே கெண்டை, கெளுத்தி, விரால், குரவை, தவளை, நண்டு, நத்தை, aஆமை, தண்ணீர் பாம்புகள் என்று நீரில் வாழும் உயிரினங்கள் நிறைய இருந்தன. அதில் விலாங்கு என்கிற மீனும் இருந்தது.
இந்த விலாங்குமீன் தந்திரம் தெரிந்த மீன். இதன் தலை பாம்பு போல இருக்கும்; வால் பகுதி…
View On WordPress
0 notes