#இயற்பகையார்
Explore tagged Tumblr posts
Text
பெரியபுராணம் வசன கதையின் மின்னூலை டெலிகிராம் குழுமத்திலிருந்து பதிவிறக்கம் செய்தபோது, 1996ம் வருடம் உலககோப்பை லீக் போட்டிகள் நடந்தபோது ஓய்வு நாளாக இருந்த மார்ச் 3 தினமாக இருந்த வேளை,

அறுபத்து மூவரில், இயற்பகை நாயனாரின் குருபூஜை விழா அனுசரிக்கப்படும் மார்கழி மாதம் உத்திரம் நட்சத்திரம் நாளில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 153 ரன்னிலிருந்து ஒரு ரன்கூட எடுக்க முடியாமல் AllOut ஆனதைக் கண்டு பிரமித்த வேளை,

திருநீலகண்ட நாயனாரின் வரலாறு முடிந்து இயற்பகை நாயனாரின் வரலாறு தொடங்கும் பெரியபுராணம் நூலின் பக்கம் 153 உடன் இணைந்ததை கண்டு, ஓம் நமசிவாய.. என்றது.
1 note
·
View note
Text
இயற்பகை நாயனார்

╔═══❖•ೋ° °ೋ•❖═══╗
🔥 பதிவு 2
🔥 பிறந்த தளம்: தில்லை
🔥 முக்தித் தளம்: தில்லைப்புலீச்சரம்
சோழநாட்டு பூம்புகார் நகரத்தில் வணிகர் குலத்தில் தோன்றியவர் இயற்பகை நாயானர். இவர், சிவனடியார் எது கேட்டாலும் இல்லையென்னாது வழங்கும் இயல்புடையவராய் வாழ்ந்தார். சிவபெருமான் எதனையும் இல்லை என்னாது சிவனடியார்க்கு ஈயும் இவரது அடியார் பக்தியினை உலகத்தார்க்கு வெளிப்படுத்த எண்ணிக் காம உணர்வுடைய வேதியராக இயற்பகையார் இல்லத்தை அடைந்தார். “இல்லை என்னாது கொடுக்கும் இயற்பகையாரே, நாம் உமது மனைவியைப் பெறவேண்டி இங்கு வந்தோம்” என வேதியர் கேட்டார். இயற்பகையார் “நம்மிடத்தில் உள்ள பொருளையே இவர் கேட்டார்” என எண்ணி உளம் மகிழ்ந்து அடியாரை வணங்கித் தம் மனைவியை அவர்க்கு கொடுத்து அனுப்பினார். அதனைக் கேட்ட மானமுடைய அவர் தம் சுற்றத்தார் காமுக வேதியரைத் தடுத்து எதிர்த்தனராக, இயற்பகையார் சுற்றத்தார்களை வாளால் வீழ்த்தி வேதியரை மாதினொடு வழியனுப்பிவிட்டு வீட்டிற்குத் திரும்பினார். அந்நிலையில் வேதியராய் வந்த இறைவர் “இயற்பகை முனிவா ஓலம், ஈண்டு நீ வருவாய் ஓலம், என ஓலமிட்டழைத்தவர் இயற்பையாரும் “இதோ வந்தேன்” என்று விரைந்து திரும்புமுன், வேதியராய் வந்த இறைவர் மறைந்தார். விடையின் மீது அம்மையப்பராய் தோன்றிக் காட்சியளித்து இயற்பகை நாயனார்க்கும் அவர் மனைவியார்க்கும் இறந்த சுற்றத்தார்களுக்கும் வீடு பேற்றை நல்கியருளினார்.
_தொகுப்பு: இரா. சுமன் மலேசியா_
╚═══❖•ೋ° °ೋ•❖═══╝
2 notes
·
View notes
Text
சபாநாயகர் செல்லபாண்டியன் மேம்பாலத்தை கடந்து பாளையங்கோட்டை செல்லும் வழியில் இயற்பகை நாயனாரின் நகருக்கு 20..22ம் வருடம், ஜூன் மாதத்தின் கடைசி இரண்டு நாளிற்கு முந்தைய தினமாக சென்றபோது, இயற்பகையார் எனும் பெயர் பிரபஞ்சமே அதிரும்படியாக இருந்த வேளை, இயற்பகை நாயனாரின் தொப்புள் கொடி உறவினர் இங்கு வசித்தமையால் "இயற்பகை நாயனார்" நகர் எனும் பெயர் சூட்டப்பட்டதாக அங்கு வசிக்கும் நண்பர் சொன்னபோது, கங்கைகொண்டான் ஊரிலுள்ள ஆனந்தவல்லி அம்மன் உடனுறை ஶ்ரீகைலாசநாதர் கோவிலில் இயற்பகையாரின் குருபூஜை விழாவில் தரிசனம் பெற்ற நிகழ்வினை பேசி மகிழ்ந்தது.

1 note
·
View note