senthilkumarvision
senthilkumarvision
எனது இந்தியா
36 posts
இயற்கை வளமுடன் கூடிய பசுமையான இந்தியாவை உருவாக்குவோம். பாரதமே விழித்தெழு, உலகை ஒளியூட்டச் செய்.
Don't wanna be here? Send us removal request.
senthilkumarvision · 6 months ago
Text
வாசிப்பு பழக்கத்தின் மூலமாக எழுதும் கலையினை கற்றுக் கொள்ளுதல்..
2016ம் வருடமாக, பிப்ரவரி மாதத்தில் மெட்ராஸில் ராமாபுரத்தில் வசிக்கும் நண்பன் ராமகிருஷ்ணன் இந்த வலைப்பூவில் எழுதப்பட்ட கட்டுரைகளை வாசித்தபோது, எனது  பார்வையிலிருந்து சொல்லப்படும் நினைவுக் குறிப்புகள் ஆரம்ப நிலையில் நன்றாக உள்ளது. இ��ைசெவல் ஊரில் பிறந்து புதுச்சேரியில் வசிக்கும் கரிசல் இலக்கிய எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்கள் எழுதிய  நூல்களையும், பசுமை விகடன் இதழ்களையும் தொடர்ச்சியாக படித்து வரும் பட்சத்தில், ஊரில் நடைபெறும் விவசாயப் பணிகள் சார்ந்த துல்லியமான, நுட்பமான விசயங்களை நன்றாக எழுத முடியும். பத்து வருடங்களுக்குப் பிறகு பார்க்கையில், செயற்கை நுண்ணறிவு(AI) தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தப்போகும் உலகத்தில் இந்த கிராமத்து வலைப்பூவில் எழுதப்பட்ட கட்டுரைகள் அனைவரிடமும் கவனம் பெறக்கூடும் என்ற விசயத்தை தீர்க்கதரிசனமாக சொல்லி ஊக்கப்படுத்தினார்.
பண்ணிரெண்டு வருடங்களுக்கு முன்பு கொங்கு மண்டலமான கோவை நகருக்கு வந்து காளப்பட்டி ஊருக்குச் செல்லும் சாலையிலுள்ள நல்லாம்பாளையம் பழனிசாமி கவுண்டர் என்ற பெயரில் செயல்படும் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரியில் முதுகலை கணினி வகுப்பில் சேர்ந்து படிக்கையில், கணிப்பொறி பாடங்களுடன் இலக்கியம், வரலாறு, அறிவியல் புனைகதை, ஆன்மீகம் சம்பந்தமான புத்தகங்களுடன் விகடன், குமுதம், இந்தியா டுடே போன்ற பத்திரிகை குழுமத்திலிருந்து வெளிவரும் வார இதழ்களை படிப்பது ஆரம்ப நிலையிலிருந்து படிப்படியாக முன்னேறி இருபது வருட காலகட்டங்களில் பல்வேறு விசயங்களை கற்றுத் தந்துள்ளதை நினைத்து பிரமிக்க வைத்தது. நம்முடைய வாழ்க்கையில் நடைபெறும் பல்வேறு விதமான துன்பகரமான விசயங்கள், சமூகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அத்தகைய தீமைகளை வேருடன் பிடுங்கி எறிந்து எதிர்கால சமுதாய குழந்தைகளுக்கு நம்மால் இயன்ற ஒரு சிறு மாற்றத்தையாவது ஏற்படுத்த வேண்டும் என்ற முனைப்பு 2008ம் வருடத்தின் ஆரம்ப காலகட்டத்திலே உருவானது, கிரியா ஊக்கியாக அமைந்தது.
Tumblr media
விகடன் பத்திரிகை குழுமத்திலிருந்து மாதம் இருமுறை வெளிவரும் பசுமை விகடன் இதழானது, எண்பதிலிருந்து(80) எண்பத்தி ஐந்து(85) பக்கங்களை கொண்டதாக வேளாண்மை உற்பத்தியில் சாதிக்கும் மனிதர்களின் நேர்காணல்கள், பல்வேறுவிதமான பயிர் சாகுபடியில் கடைபிடிக்கும் முறைகளை அவர்களே செய்முறை விளக்கங்களுடன் சொல்லுவதை படிக்கையில், குளக்கட்டாக்குறிச்சி ஊரில் பருவ மழையை நம்பி கரிசல் பூமியில் மானாவரி விவசாயம் செய்யும் பணிகளுடன் ஒப்பீடு செய்து பார்க்க முடிந்தது. ஆடு, கோழிகள், வாத்து, முயல், காடை போன்ற சிறு விலங்கு பிராணிகளை வளர்த்து பெருவாரியான லாபத்தினை பார்க்கும் மனிதர்களுடைய சாதனைகளை பேசும் கட்டுரைகள், நம்முடைய ஊரில் ஆடு, கோழிகளை எப்படியாக வளர்த்து லாபம் பார்க்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. ஆக, தொடர்ந்த வாசிப்பு பழக்கமும், சிந்திக்கும் திறனும் இருந்தால் மட்டுமே இந்த வலைப்பூவில் டைரி குறிப்புகளைபோல தொடர்ச்சியாக விசயங்களை எழுதிக் கொண்டிருக்க முடியும் என்பதை அகத்தில் உணர முடிந்தது. இத்தைகைய நினைவுகளை டிஜிட்டலின் மூலமாக மற்றவர்களுக்கு பகிரப்படும் வேளையில், நம்முடைய மனதையும் மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ள பேருதவி செய்கிறது. 
புகைப்படம்: கடந்த வருடம் அக்டோபர் 10 நாளின் தேதியுடன் வெளியான பசுமை விகடன் இதழின் அட்டைப் படம்.
1 note · View note
senthilkumarvision · 6 months ago
Text
அறுவடை எந்திரங்களின் வரவு..
எனது தாயின் கருவிலிருந்து நான் குழந்தையாக பிறந்த 1982ம் வருடம் தொடங்கி பத்து வருட காலகட்டத்தில் கரிசல் காட்டு மண்ணில் வேளாண்மை பணிகளைச் செய்யும் விவசாய மனிதர்களுக்கு கடினமான பணியாகவே இருந்தது. வெள்ளை நிறத்தில் யானையின் தந்தத்தினை போன்று இரண்டு கொம்புகளை வைத்துக் கொண்டு சாதுவான குணத்துடன், இந்த நாட்டு மாடுகளை பராமரிக்கும் மனிதர்கள் சொல்லும் வேலைகளை எந்த விதமான எதிர்ப்புகளுமின்றி சக்கர வண்டியில் மூட்டைகள், உரங்களை எடுத்துச் செல்லுதல் போன்ற பணிகளை செய்வதை பார்ப்பதற்கே ஒருவிதமான பரவசமான அனுபவமாக இருக்கும். வரப்பு அடித்த பிறகு விதைகளை நடுவதற்கு இரண்டு மாடுகளை கொண்டு நடுவினில் ஏர் கலப்பையினை கட்டி வைத்து இந்த கலப்பையின் மீது இரண்டு கைகளை அழுத்திப் பிடித்துக் கொண்டு பாய்.. பாய்.. எனச் சொல்லிக் கொண்டே போகையில், பின்னால் வரும் வேலையாட்கள் விதைகளை நடவு செய்துகொண்டே வருவார்கள்.
Tumblr media
விதைகளை நடவு செய்த பிறகு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள்ளாக நல்ல மழை பெய்ய வேண்டும். ஒரு வார காலம் தாமதமானால் நடவு செய்த விதைகளை அழித்துவிட்டு மீண்டும் விதைகளை நடவு செய்ய வேண்டும். இந்த சமயத்தில் விவசாய பெருமக்களுக்கு கூடுதலாக செலவு செய்த சுமையும் ஏறிக்கொள்கிறது. கடந்த 2024ம் வருடத்தில், விதைகளை நடவு செய்த பிறகு மழைப் பொலிவு இல்லாமல் இரண்டு, மூன்று முறைகள் விதைகளை நடவு செய்த துன்பகரமான காலகட்டமாக அமைந்தது. களை  எடுத்தல், அறுவடை செய்தல் என பருத்தி, உளுந்தம் பயிறு, பாசிப் பயிறு, மக்காச்சோளம், சூரியகாந்தி, நிலக்கடலை, அவுரி என அனைத்து விதமான வெள்ளாமையை வீட்டிற்கு கொண்டு வந்து சேர்ப்பதற்குள்ளாக கடினமான பணியாக இருக்கும்.
மேலே சொன்னதுபோல, விவசாயம் செய்யும் ஊரில் வாழும் மனிதர்களுக்கு கடினமான பணிச்சுமைகள் இருப்பதை பார்க்கும் வேளை, என்னுடைய அப்பா ராமகிருஸ்ணன் அவர்கள், காட்டிற்கு வந்து விவசாய வேலைகளில் ஒத்தாசையாக இருப்பதற்கும்,சின்ன சின்ன உதவிகளை செய்வதற்கும் அவசியம் வரவேண்டும் என்று சொல்லி கட்டாயப்படுத்தமாட்டார். தண்ணீர் குடிப்பதற்கு இரண்டு குடங்களை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு காட்டிற்குச்  செல்லுதல், தேநீர் மற்றும் உணவுகளை கொடுப்பதற்கு மட்டுமே பெரும்பாலான நேரங்களில் செல்வது உண்டு. பள்ளிப் பாடங்களை நன்றாக படித்து, நல்ல மதிப்பெண்களை எடுக்க வேண்டும். இத்தகைய கஷ்டமான விவசாய வேலைகள் எங்களுடனே இருக்கட்டும் எனச் சொல்லுவார்.
2010ம் வருட காலகட்டத்த்தில், விவசாய பணிகளை செய்வதற்கு அனைத்து விதமான எந்திரங்களும் வரத்தொடங்கி பெரிய நில உடமைகளுக்கு உரிமையாளராக அப்போது இருந்த கந்தசாமி நாயக்கர் அவர்களுடைய வீட்டில் மக்காச் சோளம் அறுவடை எந்திரம், உழவுப் பணிகளை செய்யும் எந்திரம் என்று மூன்றுக்கும் மேற்பட்ட எந்திரங்களை இவருடைய வீட்டிற்கு அருகே கிணற்றிலிருந்து அருகிலுள்ள பெரிய காலி இடத்தில் கம்பீரமாக நின்று கொண்டு இருப்பதை பார்த்தது. பன்னிரெண்டு லட்சம், இருபது லட்சம் மதிப்புடைய அறுவடை மற்றும் விவசாய எந்திரங்களை வாங்கியுள்ளோம் என கந்தசாமி அவர்களின் மூத்த மகனும், எனது சிறுவயது நண்பனுமான ராஜேஸ்கண்ணன் சொன்னார். ராஜேஸ்கண்ணனுடைய வீட்டில் இரண்டு, மூன்று டிராக்டர்கள் எப்போதுமே நின்று கொண்டு இருக்கும்.
Tumblr media
நான் பிறந்த 1982ம் வருடம் தொடங்கி ஒவ்வொரு பத்து வருடங்களிலும் விவசாயம் செய்வதில் ஏற்பட்ட தொழிற் புரட்சிகள், ஊரில் வாழும் மக்களுடைய வாழ்க்கை முறையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்த தொடங்கியது. அறுவடை எந்திரங்களுடைய வருகையினால், விவசாயப் பணிகளில் கடுமையான வேலைப்பாடுகள் குறைந்து முப்பது, ஐம்பது, நூறு ஏக்கர்களில் விவசாயம் செய்யும் அளவிற்கு பெரிய அளவிலான பொருளாதார முதலீடுகளுடன் வேளாண்மைப் பணிகளைச் செய்யும் உற்சாகம் கரிசல் காட்டினை நம்பி வாழும் விவசாயப் பெருமக்களிடம் உருவானது. 
புகைப்படம்: 2024ம் வருடம், பிப்ரவரி தினமாக.. கழுகுமலை ஊருக்குச் செல்லும் சாலையில் வந்து கொண்டிருந்த மக்காச்சோளம் அறுவடை செய்யும் எந்திரத்தினை மொபைலில் புகைப்படம் எடுத்தது.
1 note · View note
senthilkumarvision · 9 months ago
Text
தமிழ்நாடு பட்டு வளர்ச்சித் துறையின் சார்பில் 2023ம் ஆண்டுக்கான சிறந்த பட்டுக்கூடு உற்பத்தி விவசாயி என்ற மாநில அளவிலான விருதைப் பெற்று தன்னுடைய காரிப்பட்டி ஊருக்கு பெருமை சேர்த்திருக்கிறார் பண்ணைத் தொழில் விவசாயியான ஜெயந்தி அவர்கள்.
மாம்பழத்திற்கு பெயர் பெற்ற சேலம் மாநகரிலிருந்து ஆத்தூர் செல்லும் சாலையில் சுமார் 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது காரிப்பட்டி கிராமம்.
தனக்குச் சொந்த நிலமான ஒரு ஏக்கரில் பட்டுப்புழு வளர்ப்புக்குத் தேவையான மல்பெரி செடிகளை சாகுபடி செய்கிறார். சேலம் மாநகரிலுள்ள பட்டு வளர்ச்சித் துறை அலுவலகத்தில் முறையான பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகளை பெற்று 2018ம் வருடங்களில் பட்டுப்புழு உற்பத்தி பண்ணைத் தொழிலில் இறங்கி ஐந்து வருடங்களுக்குள்ளாக இந்த தொழிலில் சாதனை புரிந்துள்ளார். ஜெயந்தி அவர்களுடைய மகன் சதீஷ்குமார் இவருக்கு பக்கபலமாக இருக்கிறார்.
ஆண்டுக்கு பதினோரு முறை பட்டுக்கூடுவினை விற்பனை செய்து ஒரு தடவைக்கு 30,000 ரூபாய் வீதம் மொத்தமாக மூன்று லட்சத்தி முப்பதாயிரம் ரூபாய் வரையிலும் லாபத்தை ஈட்டுகிறார்.
ஜெயந்தி அவர்களுடைய அலைபேசி எண்.. 9629609087
குறிப்பு: மேற்கண்ட கட்டுரை இந்த வாரம் பசுமை விகடன் இதழில் வெளியானது.
இதேபோல.. குளக்கட்டாகுறிச்சி ஊரிலிருந்து இளையரசனேந்தல் செல்லும் சாலையில் ஆறு கி.மீ தொலைவில் அமைந்த மேலப்பட்டி ஊரிலுள்ள விவசாய நிலத்தில் எனது உறவினரான சீனிவாசன் அவர்களின் புத்திரன், பட்டுக்கூடு உற்பத்தி பண்ணைத் தொழிலில் நல்ல லாபத்தை ஈட்டுகிறார். ஊருக்கு அருகிலுள்ள சாலையில் செல்லும்போதே வலதுபுறமாக பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் கட்டிட அமைப்பினை பார்க்க முடியும்.
Tumblr media
1 note · View note
senthilkumarvision · 11 months ago
Text
ஸ்ரீமந் நாராயணின் கல்கி அவதாரம்..
ஒவ்வொரு குறிப்பிலும் மனதிற்கு நன்றாக ஞாபகம் வரும் நினைவுகளை மையமாக கொண்டே எழுதுவது மிகவும் எளிதாக இருந்தது. எழுதுவதின் மூலமாக ஞாபக சக்தியின் அளவு அதிகரிப்பதுடன், நம்முடைய நினைவுகளின் அடுக்கிலிருந்து கடந்த காலங்களின் நிகழ்வுகளை வெளிப்படுத்த முடிகிறதா..? என்பதை நினைக்கையில் வியப்பாக இருக்கும். பிறந்த ஊரிலிருந்து பெற்றோர்கள், உறவினர்களை பிரிந்து வெகுதொலைவில் உள்ள ஊர்களுக்குச் சென்று படிப்பு, வேலை விசயமாக வசிக்கையில், இருபது வருடங்களுக்கு முன்பு கடிதங்களின் மூலமாக நம்முடைய பாசம், அன்பான உணர்வுகளை வெளிப்படுத்த எழுதும் அதே உணர்வோடுதான் இந்த வலைப்பூவில் எழுதுவது. பெரிதாக வரலாற்று, பூகோள சம்பந்தமான ஆராய்ச்சிகளை செய்து எழுதுவதை போன்று எழுதுவது கிடையாது. எனது அன்புத் தங்கை அற்புதமாக கடிதம் எழுதுவார். இப்போது எழுதுகிறாரா..? என்பதை உறுதியாக சொல்ல முடியாது. ஸ்மார்ட் போன் தொழில்நுட்பம் நம்முடைய வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய பிறகு கடிதங்களை எழுதும் பழக்கம் நம்மிடமிருந்து விடைபெற்று செல்ல முடியாத அளவிற்கு டிஜிட்டலில் எழுதுவதின் மூலமாக எழுதுகிற ஆற்றலை தக்க வைத்துக் கொள்ள முடியும். 
2013ம் வருடத்தில் நடைபெற இருந்த காளியம்மன் கோவில் வருடாந்திர கொடை விழாவிற்கு இரண்டு மாதம் முன்பாக நல்ல நல்ல புகைப்படங்களை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு தங்கை அனுப்பியபோது, 1983ம் வருடத்தின் மே 12 நாளில் காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியில் பிறந்ததை ஞாபகமாக குறிப்பிட்டு சொன்னார். அப்பா கிருஸ்ணசாமி அவர்கள், காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியில் பணிபுரிகையில் இந்திய ராணுவத்தின் மருத்துவமனை ஒன்றில் உடன்பிறவா தங்கை பிறந்த நிகழ்வு, ஒரு வரலாற்று நிகழ்வுபோல மெய்சிலிர்க்க வைத்தது. 
Tumblr media
பிறந்த ஊரிலிருந்து முன்னூறு அல்லது ஐநூறு கிலோ மீட்டருக்கு அப்பாலும் இருக்கையில் பிரபஞ்சத்தின் மின்காந்த அலைகளின் மூலமாக தங்கையுடன் எண்ணங்களை பரிமாறிக் கொள்ள முடியும் என்பதற்கு ரமண மஹரிஷி, சந்திரசேகர பாரதி சுவாமிகள் எனும் இருவரின் ஆன்மீகப் பேராற்றல் உறுதுணை புரிந்தது. இந்த வருடத்தின்  ஜூலை மாதம், இரண்டாவது வாரத்தின் முதல் தினமாக காளியம்மன் சாமியின் முன்பாக தங்கையுடன் சில நிமிடங்கள் பேசியபோது, கராத்தே மணியுடன், சூப்பர் ஸ்டார் ரஜின�� நடித்த @ரங்கா படத்தின் இயக்குநர் தியாகராஜன் அவர்களின் நினைவு நாளான ஜூலை 1 அன்று.. கோவை நகரின் அவிநாசி சாலையிலுள்ள பிராட்வே சினிமாஸில் @கல்கி 2898 AD படத்தினை பார்த்த நிகழ்வினை பேசியது.
1 note · View note
senthilkumarvision · 1 year ago
Text
குளக்கட்டாகுறிச்சி ஊரிலிருந்து இரண்டு கி.மீ தொலைவில் பயணமாக இளையரசனேந்தல் செல்லும் சாலையிலிருந்து இடதுபுறமாக வடக்கு திசை நோக்கி நான்கு கி.மீ தொலைவு வரை அமைந்த பனைமரங்களின் வரிசையை பார்க்கும்போது நம்மை பிரமிக்க வைக்கும். ராய் மாக்ஸம் இங்கிலீஷில் எழுதி தமிழில் வெளியான "உப்புவேலி" நாவலை மின்னூலில் படித்த பிறகு பனைமரங்களின் வரிசையுடன் ஓடைகளின் இருபுறமும் அடர்த்தியாக வளர்ந்துள்ள கருவேல மரங்களை அருகாமையில் சென்று ஒரு கி.மீ தொலைவு வரை நடந்து பார்க்கையில்..
உப்புக் கடத்தலை தடுப்பதற்காக மத்திய, வட இந்தியாவில் பிரிட்டீஷ் அரசாங்கம் அமைத்த உப்புவேலியை போன்றே இருப்பதை கண்டு மேலும் பிரமிக்க வைத்தது. 1880ம் வருடங்களில் பிரிட்டீஷ் அரசாங்கத்தின் நிர்வாகத்திலிருந்த இளையரசனேந்தல் ஜமீனுக்கு உட்பட்ட விவசாய பெருமக்களால் விதைக்கப்பட்ட பனை விதை கம்பீரமாக வளர்ந்து நின்று இயற்கையின் சாட்சியாக உள்ளது.
Tumblr media
1 note · View note
senthilkumarvision · 1 year ago
Text
காட்பாதர் @மைக்கேல் கார்லியோன்..
1988ம் வருடம் தொடங்கி ஐந்தாம் வகுப்பு வரையிலும் படித்த 1992ம் வருடம் வரையிலும் என் வயது ஒத்த பையன்களுடன் சில்லாங்குச்சி, பம்பரம் விடுதல், கோலி விளையாடுதல், கள்ளன் @போலீஸ் பிடித்து விளையாடும் விளையாட்டு என்று ஊருக்கு உள்ளே முக்கியமான வீதிகளில் தினமும் விளையாடுவது பழக்கமாக இருந்தது. என்னைவிட ஐந்து வயது அதிகமான, ஐந்து வயது குறைவான, சமமான வயது உடைய பையன்கள் என இருபத்தி ஐந்து பேர்கள் ஊரிலுள்ள முக்கியமான வீதிகளில் ஏதேனும் ஒரு விளையாட்டினை விளையாடிக் கொண்டே இருப்பதை பார்க்க முடியும். 
சேட்டிலைட் சேனலின் வரவு இல்லாமல் தூர்தர்ஷன் சேனல் மட்டுமே இருந்தது. தினமும் டிவியில் சினிமாப் படங்களை பார்ப்பதற்கு உண்டான வாய்ப்பு கிடையாது. வாரத்தின் சனி, ஞாயிற்று கிழமைகளில் மாலை வேளை ஒரு சினிமாப் படம் ஓடும். இந்த ஒரு படம் ஆக்ஸன், காமெடி, குடும்பத்தின் கதை சம்பந்தமான படம் என்று எந்த வகையான படமாகவும் இருக்கலாம். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சரத்குமார், விஜய், சிலம்பரசன் போன்ற நடிகர்கள் நடித்த படங்களுக்கு சிறுவயது பையன்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும்.
Tumblr media
மற்றபடிக்கு விளையாட்டுக்களை விளையாடுவதில் அதிகமான ஆர்வமுடன்  இருப்போம். 1993ம் வருடத்திற்கு பிறகுதான் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு கரிசல் காடுகளில் அறுவடை காலம் முடிந்த பிறகு 
கழுகுமலை சாலையின் ஓரமாக அமைந்துள்ள ஏதேனும் ஒரு கரிசல் காட்டில் காரட் அல்லது ரப்பர் பந்தினைக் கொண்டு பையன்களுடன் விளையாட வந்தது. கனகராஜ், ராசா ஆசாரியின் மகன் ஈஸ்வரன், லெஃப்ட் முருகன், கண்ணன் போன்ற பையன்கள் பேட்டிங் செய்கையில் சிக்ஸர், போர்களை விளாசி அதிரடியாக ரன்களை எடுத்து விளையாடுவார்கள். நான் மிதமான வேகத்திலே விளையாடுவேன். ஒரு சிக்ஸர் சாட்டினை அடிக்கும் பட்சத்தில் வெகுதொலைவில் சென்று பந்து விழும்படியாக மட்டையை சுழற்றுவது மிகவும் பிடிக்கும். ஸ்பின் பவுலிங் பந்தினை வீசி லெக் ஸ்பின்னில் விக்கெட்டை எடுத்த பின்பு அதிரடியாக விளையாடும் பையன்களுக்கு எப்படி..? அவுட் ஆனோம் என்பது தெரியாமலே குழம்பிபோய் இருப்பார்கள். ஸ்பின் பவுலிங்கை நன்றாக வீச வேண்டும் என்பதற்காக, ரப்பர் பந்தினை கொண்டு வீட்டிலே பயிற்சி செய்வதால் கிரிக்கெட் விளையாடுகையில் நன்றாக பந்து வீச வரும். நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் அதிரடி பேட்ஸ்மேனாக இருந்த நாதன் ஆஸ்ட்லேவின் பெயரினை சொல்லி என்னை அழைப்பார்கள். உயரே தூக்கி அடிக்கப்பட்ட பந்து கேட்சாக வரும் பட்சத்தில், லாவகமாக பிடித்து விடுவது உண்டு. கேட்ச் வாய்ப்பினை தவற விடுவதே இல்லை. பெரிதாக ரிஸ்க் எடுத்து விளையாடுவது கிடையாது. 
காலை வேளை, கழுகுமலை சாலையில் ஒரு அரை மணி நேரம் ஓட்டப் பயிற்சினை செய்வது மிகவும் பிடித்தமான பழக்கமாக இருந்தது. +1 +2 வகுப்பினை படித்த பிறகு 1999ம் வருடத்தில் சாத்தூரிலுள்ள எஸ்.ராமசாமி நாயுடு கல்லூரியில் இளங்கலை கணிப்பொறி படிப்பில் சேர்ந்த பிறகு ஊரில் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தியது. மற்றபடிக்கு, பையன்கள் கிரிக்கெட் விளையாடுவது தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது. 
2002ம் வருடம்போல.. திருமலை யாதவ் அவர்களுடைய மகன் தமிழ்நாடு போலீஸில் வேலையில் சேர்ந்த பிறகு இன்று வரையிலும் கிரிக்கெட் விளையாடுவதை பார்க்கையில் வியப்பாக இருக்கும். கண்ணனுக்கு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியை மிகவும் பிடிக்கும். ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் கிரிக்கெட் விளையாடும்போது மிகவும் ஆர்வமுடன் பார்ப்பான். 1999ம் வருடம், ஜூலை மாதம் 5ம் தேதி.. சாத்தூர் ஊருக்கு அருகிலுள்ள சடையம்பட்டி ஊரில் அமைந்துள்ள எஸ்.ராமசாமி நாயுடு கல்லூரியில் இளங்கலை கணினி வகுப்பில் சேர்ந்த பிறகு மூன்று நாட்களுக்கு முன்பு The God Father எனும் இங்கிலீஸ் நாவலை எழுதிய எழுத்தாளர் மரியோ புஸோ அவர்கள், சிவபதவி அடைந்த நிகழ்வினை இந்து ஆங்கில இதழில் பார்த்த பின்பு வரலாற்றுத் துறை பேராசிரியர் கோவிந்தராஜ் அவர்களிடம் மரியோ புஸோ குறித்தான விபரங்களை கேட்டபோது, The God Father நாவலினை தழுவி ஹாலிவுட் நடிகர் அல்பசினோ நடித்த "காட்பாதர்" மூன்று பாகங்களை கொண்ட படங்களாக ரிலீசாகி கேங்ஸ்டர் கதையாக உலகமெங்கும் உள்ள  ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதை சொன்னார்.
Tumblr media
முதுகலை வரலாற்றுப் படிப்பினை மெட்ராஸ் நகரிலுள்ள லயோலா கல்லூரியில் படித்தபோது, @காட்பாதர் படத்தின் முதல் இரண்டு பாகங்களை பார்த்த பிறகு சில வருடங்கள் இடைவெளியில் மதுரை நகரிலுள்ள மாப்பிளை விநாயகர் திரையரங்கில் மூன்றாவது பாகம் படத்தினை பார்த்ததாகச் சொன்னார். அதிகார வர்க்கத்தினர், அரசியல் ரெளடிகள் போன்றவர்களின் மூலமாக பெரிய பிரச்சினைகளை சந்திக்கும் நடுத்தர வர்க்கத்து மனிதர்களின் குடும்பங்களை காப்பாற்றுவதற்காக தன்னுடைய அப்பாவின் மறைவிற்குப் பிறகு கேங்ஸ்டர் மைக்கேல் கார்லியோன் கேரக்டரில் நடிக்கும் அல்பசினோவின் நடிப்பு, அப்போதைய காலகட்டங்களில் இளைஞர்களிடம் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்திய வேளை, மைக்கேல் கார்லியோன் கேரக்டரில் அல்பசினோ அணிந்திருக்கும் ஆடைகளை இளைஞர்கள் விரும்பி அணிந்து கொண்டு பொது இடங்களில் சுற்றித் திரிவதை பார்த்த அனுபவங்களை பேசியதை கேட்கையில் வியப்பாக இருந்தது. கோவில்பட்டி நகரில் கடலையூர் செல்லும் சாலையில், ஜான் பாஸ்கோ பள்ளியின் எதிர்புறமுள்ள தெருவில்  கொடிக்காம்பரம் ஊரினைச் சேர்ந்த ஜமீன்தாரின் குடியிருப்பு வளாகத்தில் வழக்கறிஞர் பெரியப்பா அய்யலுசாமி அவர்களுடைய வீட்டிலுள்ள டிவியில் 2003ம் வருடம்போல HBO சேனலில் @காட்பாதர் முதல் பாகம் படத்தினை பார்க்கும் வாய்ப்பு அமைந்தது.
Tumblr media
இணையத்தில் விக்கிபீடியா வளர்ச்சி அடைந்த பிறகு நடிகர் அல்பஸினோவின் பிறந்த நாள் 1940ம் வருடத்தில் ஏப்ரல் 25 என்பதை பார்த்தபோது, 1987ம் வருடமாக.. ஊரிலுள்ள இந்து துவக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் படிக்க நான் சேர்ந்தபோது, என்னுடைய அப்பா ஏப்ரல் 25ம் நாளினை பள்ளிக்கூடத்தின் பதிவேட்டில் பதிவு செய்து ஏதோ ஒரு மாயாஜாலம் செய்திருப்பதை அறிந்து மெய்சிலிர்க்க வைத்தது.
1 note · View note
senthilkumarvision · 1 year ago
Text
கோவை நகரிலுள்ள நகர்மண்டபம் அருகே ஈஸ்வரன் கோவில் வீதியிலுள்ள பிரசித்தி பெற்ற கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில் தெற்கு திசை நோக்கி அருள்புரியும் காலபைரவரின் சந்நிதியில் காலபைரவருக்கு உகந்த 108 போற்றி மந்திரங்களை சொல்லி தரிசனம் செய்து மகிழ்ந்த வேளை, காலபைரவருக்கு உகந்த நாளான தேய்பிறை அஷ்டமி இந்த வருடம் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரம் செவ்வாய்கிழமை அன்று வருகை தந்து சென்றதை கண்டது.
ஓம் சம்ஹார பைரவனே போற்றி ஓம் தெற்கு நோக்கனே போற்றி..
பங்குனி 20 பூராடம் நட்சத்திரம் சூலம்: வடக்கு சந்திராஷ்டமம்: கார்த்திகை, ரோகிணி நட்சத்திரம்..
Tumblr media
1 note · View note
senthilkumarvision · 1 year ago
Text
நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை 2022ம் வருடம் மார்ச் 9 தினமாக, காட்ஃபாதர் படத்தில் நிழல் உலக தாதா கேரக்டரில் மைக்கேல் கார்லியோனாக நடித்த அல்பசினோ பற்றிய சிறப்புக் கட்டுரையை வெளியீடு செய்து இதுவரை வெளிவராத காட்ஃபாதர் படத்தில் இடம்பெற்ற அல்பசினோவுடைய அற்புதமான புகைப்படத்தை பிரசுரம் செய்த பின்பு உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான ரசிகர்கள் அல்பசினோ பிறந்த நாளான ஏப்ரல் 25 அன்று முகநூல், இன்ஸ்டாகிராம், டுவிட்டரில் இந்த புகைப்படத்தை பதிவு செய்து வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டது உலக அளவில் கவனம் பெற்றது.
2022ம் வருடத்தில் கோவில்பட்டி நகரில் வசித்தபோது அல்பசினோ பிறந்த நாளுடைய தொப்புள் கொடி உறவு பிரமிக்க வைத்த வேளை, என்னுடைய பிறந்த நாளினை ஏப்ரல் 25 அன்று அப்பா பதிவு செய்த தீர்க்கதரிசனம் கண்டு வியக்க வைத்தது.
Tumblr media
1 note · View note
senthilkumarvision · 1 year ago
Text
விவசாய பணிகளில் அறுவடை எந்திரங்களின் வருகைக்குப் பிறகு மக்காச்சோளம், உளுந்துப் பயிறு போன்றவைகளை அறுவடை செய்வதில் துரிதமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இளைய தலைமுறையினரிடம் விவசாயம் செய்வதில் ஆர்வம் அதிகமாக அறுவடை எந்திரங்களின் வருகையும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. இந்த எந்திரங்கள் சிறிய சாலைகளில் வரும்போது எதிர்வரும் பெரிய வாகனங்கள் கடந்து செல்வதற்கு காலதாமதம் ஏற்படும். சாலைகள் விரிவாக்கம் அடையும்போது இதனுடைய பணிகளும் எளிதாகும்.
விவசாய பணிகளுக்கு மனித சக்திகள் குறைந்துவிட்ட இப்போதைய கடினமான காலகட்டத்தில் அறுவடை எந்திரங்களே விவசாயத்தை மீட்டெடுத்துள்ளதை, நாம் பார்க்கிறோம்.
புகைப்படம்: கழுகுமலை சாலையில் பயணிக்கும் அறுவடை எந்திரம்.
Tumblr media
1 note · View note
senthilkumarvision · 1 year ago
Text
சபாநாயகர் செல்லபாண்டியன் மேம்பாலத்தை கடந்து பாளையங்கோட்டை செல்லும் வழியில் இயற்பகை நாயனாரின் நகருக்கு 20..22ம் வருடம், ஜூன் மாதத்தின் கடைசி இரண்டு நாளிற்கு முந்தைய தினமாக சென்றபோது, இயற்பகையார் எனும் பெயர் பிரபஞ்சமே அதிரும்படியாக இருந்த வேளை, இயற்பகை நாயனாரின் தொப்புள் கொடி உறவினர் இங்கு வசித்தமையால் "இயற்பகை நாயனார்" நகர் எனும் பெயர் சூட்டப்பட்டதாக அங்கு வசிக்கும் நண்பர் சொன்னபோது, கங்கைகொண்டான் ஊரிலுள்ள ஆனந்தவல்லி அம்மன் உடனுறை ஶ்ரீகைலாசநாதர் கோவிலில் இயற்பகையாரின் குருபூஜை விழாவில் தரிசனம் பெற்ற நிகழ்வினை பேசி மகிழ்ந்தது.
Tumblr media
1 note · View note
senthilkumarvision · 1 year ago
Text
பெரியபுராணம் வசன கதையின் மின்னூலை டெலிகிராம் குழுமத்திலிருந்து பதிவிறக்கம் செய்தபோது, 1996ம் வருடம் உலககோப்பை லீக் போட்டிகள் நடந்தபோது ஓய்வு நாளாக இருந்த மார்ச் 3 தினமாக இருந்த வேளை,
Tumblr media
அறுபத்து மூவரில், இயற்பகை நாயனாரின் குருபூஜை விழா அனுசரிக்கப்படும் மார்கழி மாதம் உத்திரம் நட்சத்திரம் நாளில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 153 ரன்னிலிருந்து ஒரு ரன்கூட எடுக்க முடியாமல் AllOut ஆனதைக் கண்டு பிரமித்த வேளை,
Tumblr media
திருநீலகண்ட நாயனாரின் வரலாறு முடிந்து இயற்பகை நாயனாரின் வரலாறு தொடங்கும் பெரியபுராணம் நூலின் பக்கம் 153 உடன் இணைந்ததை கண்டு, ஓம் நமசிவாய.. என்றது.
1 note · View note
senthilkumarvision · 2 years ago
Text
குந்தியின் மகனான அர்ஜூனனுக்கு, பரமேஸ்வரன் பாசுபதாஸ்திரம் வழங்கிய நிகழ்வு நடந்த இடத்தில் உருவான பாசுபதேசுவரர் கோவில் சிதம்பரம் ஊரிலுள்ள அண்ணாமலை பல்கலைகழக வளாகத்தில் அமைந்துள்ளதாக சிதம்பரத்தில் வசிக்கும் நண்பர் சொல்லி அறிந்தது.
பாசுபதாஸ்திரம் வேண்டி பரமேஸ்வரனை நோக்கி கடுமையான தவத்தினை புரியும் அர்ஜூனன் தபஷூ சிற்பம், பரமேஸ்வரன் அருள்புரியும் கோவிலின் தூண்களில் செதுக்கப்பட்ட சிற்பத்தில் ஏதேனும் ஒரே இடத்தில் இருப்பதுபோல, சங்கரன்கோவில் நகரிலுள்ள பிரசித்தி பெற்ற சங்கரநாராயணசுவாமி கோவிலில் மாமன்னர் பூலித்தேவனின் அறைக்கு முன்பாக இடது புறமாக, நந்திக்கு வலது புறமாக உள்ள தூணில் அர்ஜூனன் தபஷூ சிற்பத்தை பார்க்கும் வேளை,
ஒரு வீரனை நோக்கி பாசுபதாஸ்திரத்தை எய்யும்போது அந்த வீரனைவிட பத்து மடங்கு பலமுடன் சென்று வென்று காட்டி, பாசுபதாஸ்திரம் எய்த வீரனை மாவீரன் என்பதை உலகிற்கு காட்டும். இதுவே இந்த அஸ்திரத்தின் புகழுக்கு காரணம். குருஷேத்திரப் போரில் பீஷ்மர், துரோணர் போன்ற மஹாரதர்களை வெற்றி கொள்ள பரமேஸ்வரனை நோக்கி தவமிருந்து 🐖பாசுபதாஸ்திரத்தை பெற வேண்டுமென கிருஷ்ணனின் ஆலோசனையின்படி அர்ஜூனன் தவமிருந்து பரமேஸ்வரனிடமிருந்து பெற்றதை மஹாபாரத இதிகாசம் சொல்கிறது.
ஓம் நமசிவாய..
Tumblr media
1 note · View note
senthilkumarvision · 2 years ago
Text
ஒன்பது வருடங்களுக்கு முன்பு ஜூலை 29 அன்று குளக்கட்டாக்குறிச்சி கிராமத்தில் நடைபெற்ற காளியம்மன் கோவில் பொங்கல் திருவிழா நாளன்று, சப்பரத்தில் தெய்வம் காளியம்மனின் வீதி உலாவுடன், ஜோசியர் ராஜேந்திரன் அக்கினி சுட்டியை ஏந்தி வரும் வேளையில் எடுத்த வீடியோ காணொளி. புதிய நூற்றாண்டு தொடங்கிய மூன்று வருடங்கள் பிறகு 2003ம் ஆண்டு தொடங்கி காளியம்மன் கோவில் திருவிழாவில் ஜோசியர் ராஜேந்திரன் அக்கினி சட்டியை ஏந்தி வலம் வருவதை அண்ணன் ராஜேந்திரன் அவர்களே சொல்லி அறிந்தது. தனது 20 வயதில் ஜோதிட சாஸ்திரங்களை கற்றுக் கொள்ளத் தொடங்கி 27 வயதில் ஜோதிடத்தில் நிபுணத்துவம் பெற்று சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, அமெரிக்கா நாடுகள் என அந்த நாட்டில் வசிக்கும் நண்பர்களின் அழைப்பை ஏற்று அந்த நாடுகளுக்குச் சென்று ஜோசியம் சொல்லும் அளவுக்கு புகழ் பெற்றவர்.
கூகுள் வலைப்பூவிற்காக வீடியோ காணொளியை பதிவு செய்தது, இன்று காண்பதற்கே பிரமிப்பாக உள்ளது.
1 note · View note
senthilkumarvision · 2 years ago
Text
திருமலைக்கோவிலுக்குச் செல்லும் சாலையிலுள்ள வடகரை ஊரைச் சேர்ந்த நண்பனிடம், பாசுபதாஸ்திரம் வேண்டி பரமேஸ்வரனை நோக்கி கடுமையான தவத்தினை புரியும் அர்ஜூனன் தபஸூ சிற்பத்தினை தென்காசி நகரிலுள்ள உலகம்மன் சமேத காசிவிஸ்வநாதர் சுவாமி கோவிலில் உள்ள தூணில் சிற்பமாக உள்ளதை பார்க்கும் வாய்ப்பு அமைந்ததா..? எனக் கேட்டபோது, நானும் தேடித் தேடி பார்த்தேன், எங்குமே பார்க்க முடியவில்லை என்றான். ஐந்து மாதங்கள் முன்பு இப்படி சொன்ன பிறகு,
ஒரு வருடம் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு உலகம்மன் சமேத காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு விஜயமாகி தரிசனம் செய்த பின்பு கோவிலில் எங்கு காணினும் அர்ஜூனன் தபஸூ சிற்பத்தை காண முடியாது, கோவிலின் வானுயர்ந்த கோபுரத்திற்கு வருகையில் நுழைவாயிலாக அமைந்து ஒரு மணி நேரத்திற்கும் மே��ாக பெருமழை பெய்தது. வடகரை நண்பன் எதிரில் நிற்க, பின்னால் திரும்பி பார்த்தபோது பாசுபதாஸ்திரம் வேண்டி பரமேஸ்வரனை நோக்கி கடுமையான தவத்தினை புரியும் அர்ஜூனன் தபஸூ சிற்பத்தினை கண்டு பிரமித்த வேளை, ஓம் நமசிவாய என்றது.
குறிப்பு: காக்கும் பெருமாள் எழுதிய ஆதிகேசவ பெருமாள் கோவில் வரலாற்று நூலின் பக்கம் 243ல் அர்ஜூனன் தபஸூ சிற்பம் உள்ளதுபோல, தென்காசி நகரின் காசிவிஸ்வநாதர் கோவிலில் இருந்தது.
Tumblr media
1 note · View note
senthilkumarvision · 2 years ago
Text
🌎மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அதிபராக திகழும் பில்கேட்ஸின் பிறந்த நாளன்று நடந்த உலககோப்பை லீக் 35வது போட்டியில், காலதாமதம் ஆனாலும் முதல் முறையாக களமிறங்கிய ஓபனிங் பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட், நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சுகளை சிதறடித்த வேளை 12.5 ஓவரின் பந்தில் கேட்ச் வாய்ப்பிலிருந்து தப்பி 67 பந்தில் 109 ரன்களை விளாசி South Africa அணியின் ஹென்ரிச் கிளாசன் விளாசிய 67 பந்தில் 109 ரன்களுடன் இணைந்த வேளை,
டீம் ஸ்கோர் 200 ரன்களில் டிராவிஸ் ஹெட் அவுட்டாகி பெவிலியன் திரும்பிய பின்பு நவம்பர் 4 அன்று, நியூஸிலாந்து அணி விளாசிய 400 ரன்கள் எனும் இமாலய இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு டிராவிஸ் ஹெட் பெவிலியன் திரும்பிய வேளை இருந்த டீம் ஸ்கோர் 200 ரன்கள் வெற்றிக்கான திறவுகோலாக ஆனதைக் கண்டு பிரமிக்க வைத்தது.
🇮🇳குறிப்பு: நவம்பர் 4, தேசமெங்கும் புற்றுநோயாக பரவியுள்ள லஞ்சம், ஊழலுக்கு எதிராக போராடும் என்.ஸி.ஸி ஆபீஸராக நடித்த "ரமணா" படம் ரிலீசான நாள். கிளைமேக்ஸில் பில்கேட்ஸ் குறித்து இளைஞர்களிடம் பேசுவது நம்மை பிரமிக்க வைக்கும். ஒரு இந்தியா, நான்கு பாகிஸ்தானுக்கு சமம் என்பார்.
Tumblr media
1 note · View note
senthilkumarvision · 2 years ago
Text
தம் மாரோ தம்(Dum Maro Dum) பாடலின் மூலம் புகழ்பெற்ற நடிகையான ஜீனத் அமன், ஶ்ரீராமர்_ஶ்ரீகிருஷ்ணரின் பக்தையாக சிவப்பு உடையுடன் ஒரு புரட்சிகரமான பெண்ணாக "ஹரே கிருஷ்ணா ஹரே ராம்" எனப் பாடி 1971ம் ஆண்டின் டிசம்பர் மாதம் தொடங்கி பத்து ஆண்டுகளாக லட்சோப லட்சம் ரசிகர்களை தன்னுடைய நடனத்தின் மூலம் வசீகரம் செய்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் விழாக்களில் "ஹரே கிருஷ்ணா ஹரே ராம்" என ஜீனத் அமனைப் போன்றே மாணவச் செல்வங்களை பாடச் செய்த ஆன்மீகப் பேராற்றலை, கடந்த வருடம் ஆரியங்காவிலுள்ள ஶ்ரீஐயப்பன் கோவிலுக்கு விஜயமானபோது..
அந்தக் காலத்தைய ஜீனத் அமனின் தீவிரமான ரசிகராக இருந்த ஐயப்பனின் பக்தர் சொன்னதை கேட்டபோது, "ஹரே கிருஷ்ணா ஹரே ராம்" எனப் பாடி மகிழ்ந்தது.
இதன் பிறகு யூடியூப் சேனலில் தம் மாரோ தம்(Dum Maro Dum) பாடலை நூற்றுக்கணக்கான முறை பார்க்கும்போது, ஒவ்வொரு முறையும் புதிதாக பார்ப்பதை போன்ற பிரமிப்பு உண்டானதைக் கண்டு வியந்த கணம்,
இந்தியாவில் நடைபெறும் உலககோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டம் ஜீனத் அமனின் பிறந்த நாளான ஞாயிறன்று(நவம்பர் 19) நடைபெறுவதைக் கண்டு பெரும் மகிழ்ச்சியானது.
Tumblr media
1 note · View note
senthilkumarvision · 2 years ago
Text
திருவட்டாறு ஊரில் அமைந்த ஆதிகேசவ பெருமாள் கோவிலின் மஹாகும்பாபிஷேகம் 418 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த வருடம் ஜூலை 6 புதன்கிழமை நடந்தபோது, காட்ஃபாதர் படத்தில் தனது உடன் பிறந்த தங்கையின் புருஷனை தண்ணீர் குழாயை உடைத்து அதனைக் கொண்டு முரட்டுத்தனமாக அடிக்கும் புகழ்பெற்ற நடிகர் ஜேம்ஸ்கேன் நண்பகல் வேளையில் சிவபதவி அடைந்ததை, வில்லிசேரி ஊரின் நேஷனல் ஹைவே சாலையிலுள்ள உய்காட்டு சுடலை மாடசாமி கோவிலின் பூசாரியிடம் சொன்னது.
நேற்று நடந்த உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள் மூன்று பேர் நூறு ரன்களை விளாசி சரித்திரம் படைத்த வேளை, டீம் ஸ்கோர் 428 ரன்களை திருவட்டாறு ஊரிலுள்ள ஆதிகேசவ பெருமாளே கொடையாகத் தந்ததை தமிழ் பேராசிரிய நண்பரிடம் சொன்னபோது, தென்னாப்பிரிக்கா அணி உலககோப்பையை வென்று வாகைசூடும் நாள் ஒரு சரித்திர நாளாக இருக்கும் என்பதையும் பேசி மகிழ்ந்தது.
குறிப்பு: அ.கா.பெருமாள் எனும் பேராசிரியர் காக்கும் பெருமாள் எழுதிய ஆதிகேசவ பெருமாள் கோவில் பற்றிய நூலை தமிழினி பதிப்பகம் வெளியீடு செய்து பெருமை பெற்றது.
Tumblr media
1 note · View note