Text
சீனப் பழங்கள் இறக்குமதிக்கு தடை

சீனாவிலிருந்து பழங்கள் இறக்குமதி செய்வதற்கு இந்தியா தடை விதித்துள்ளது.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கு இந்தியா தடை விதித்துள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பழங்களில் தொடர்ச்சியாக மேற்கொண்ட சோதனைகளில் பூச்சிகள் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து இந்த தடை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து விளைபொருள் இறக்குமதிக்கு இந்தியா தடை விதிப்பது இதுவே முதன் முறையாகும். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விளைபொருள்களில் ஆப்பிள்கள் மற்றும் பேரிக்காய்கள் மட்டும் 90 சதம் இறக்குமதி செய்யப்படுகிறது.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்கள், பேரிக்காய்கள் மற்றும் ��ாமந்தி விதைகள் போன்றவற்றில் தொடர்ச்சியாக பூச்சித்தாக்குதல் கண்டறியப்பட்டதாகவும், இதனால் தற்காலிகமாக சீன பழங்கள் இறக்குமதிக்கு தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
எல்லைப் பகுதி பிரச்சினை தொடர்பாக இரு நாடுகளிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த பிப்ரவரி மாதத்துடன் முடிவடைந்த 11 மாதங்களில், சீனாவிலிருந்து 132 மில்லியன் டாலர் மதிப்புக்கு ஆப்பிள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 4 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இறக்குமதி செய்யப்படும் விளைபொருள் தகுதிச் சோதனைகளில் தேற வில்லை என்பதையும், கதிரியக்கச் சோதனை நெறிமுறைகள் மீறப்பட்டுள்ளது குறித்தும் பலமுறை இந்திய அதிகாரிகள் சீன அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதி உள்ளதாகவும், ஆனால் அத்தகைய பழங்கள் சப்ளை மற்றும் சிப்பமிடலின் போது வந்திருக்கலாம் எனவும் சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந் நிலையில் குறிப்பிட்ட மூன்று விளைபொருள்கள் குறித்த கூடுதல் தகவல்களை மத்திய அரசு கோரி உள்ளது.
சீனாவிலிருந்து பால், பால் பொருள்கள் மற்றும் பால் கலப்புப் பொருள்கள் இறக்குமதி செய்ய இந்தியா ஏற்கனவே தடை விதித்துள்ளது.
இது போன்ற மேலும் பல தகவல்களுக்கு இந்த Link யை உபயோகிக்கவும்: https://tinyurl.com/h9rncl2
0 notes
Text
பயறுகள் இருப்புக் கட்டுப்பாட்டை விலக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

பயறுகளை அவசர காலத்திற்காக இருப்பு வைப்பதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ளும் படி மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அவசர காலத்தில் பயன்படுத்துவதற்காக பயறு வகைகளை இருப்பில் வைத்துக் கொள்வதற்கான கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் விலக்கிக் கொள்ளும் படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ள��ு.
நடப்புப் பயிர் பயறு வகைகளின் உற்பத்தி அதி��ரித்ததை அடுத்து, மத்திய தொகுப்பில் சேர்ப்பதற்காக அதிகளவில் கொள்முதல் செய்ய வேண்டிய தேவை அரசுக்கு ஏற்பட்டது. மேலும் குறைந்த பட்ச ஆதரவு விலையில் பெருமளவு பயறு வகைகளை அரசு கொள்முதல் செய்த போதும், சந்தையில் இன்னும் பயறு வகைகளின் விலை மிகவும் குறைவாகவே உள்ளது விவசாயிகளுக்கு கவலை அளித்துள்ளது.
நாட்டில் தற்போது போதுமான அளவுக்கு பயறுகள் இருப்பில் உள்ளதாலும், அவற்றின் விலைகள் குறைவாக உள்ளதாலும் பயறுகள் மீதான இருப்புக் கட்டுப்பாட்டை உடனடியாக நீககும் படி உத்தரவிடப்பட்டு உள்ளதாக மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். பயறு வகைகளை விளைவிக்கும் விவசாயிகள் பலனடையும் விதமாக அனைத்து மாநில அரசுகளும் பயறு வகைகள் மீதான கட்டுபபாடுகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டில் துவரம் பருப்பு விலை மிக அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ.250 வரை உயர்ந்தது. இதனை அடுத்து விவசாயிகள் துவரம்பருப்பை அதிகளவில் சாகுபடி செய்தனர். பருவநிலை சாதகமாக இருந்ததால் பயறு வகைகளின் மகசூலும் சிறப்பாக உள்ளது. மேலும் இறக்குமதியும் மேற்கொள்ளப்பட்டதால் துவரம் பருப்பு விலை குறைந்தது. தற்போது துவரம் பருப்பு விலை கிலோ 51-52 ரூபாய் என்ற அளவுக்குக் குறைந்து விட்டது.
இதனிடையே அரசு கொள்முதல் நிலையங்களில் துவரம் பருப்பை விற்பனை செய்ய விவசாயிகள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர். இதனால் பல மாநிலங்கள் தங்கள் கொள்முதல் காலத்தை நீட்டித்துள்ளன.
இந் நிலையில் இருப்புக் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளதால் பருப்பு வர்த்தகர்கள் மற்றும் இதர பொருள்கள் தயாரிப்பாளர்கள் அதிகளவில் துவரம் பருப்பை வாங்குவதற்கு வாய்ப்பு ஏற்படும் எனவும் இதனால் விலை மேலும் குறைவது தடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
இது போன்ற மேலும் பல தகவல்களுக்கு இந்த Link யை உபயோகிக்கவும்: https://tinyurl.com/h9rncl2
0 notes
Text
நிலத்தடி நீர்மட்ட சரிவை ஈடுசெய்ய புதுவை அரசு அதிரடி திட்டம் படுகையணை, குளங்களில் செயல்படுத்த முடிவு

புதுச்சேரி,
பருவ மழை பொய்த்து புதுச்சேரியில் நிலத்தடி நீர் மட்டம் கடும் சரிவை சந்தித்துள்ளதால், படுகையணை, கோவில் குளங்களில் ரீசார்ஜ் ச���ய்யும் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
புதுச்சேரி மக்கள் குடிநீருக்கு முழுவதுமாக நிலத்தடி நீரையே நம்பி உள்ளனர். போர்வெல் மூலம் நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு, வினியோகிக்கப்படுகிறது.
இதுமட்டுமன்றி, பெரும் பகுதி விவசாய நிலங்கள் பாசனத்திற்கு நிலத்தடி நீரையே சார்ந்துள்ளன. பரவலாக ஏரிகள் அமைந்திருந்தாலும் ஆண்டு முழுவதும் பாசனத்திற்கு நிலத்தடி நீரே கைகொடுத்து வருகிறது. புதுச்சேரி மாநிலம் கடற்கரையோரத்தில் அமைந்திருப்பதால், உப்புநீர் நிலத்தடி நீரில் கலப்பது, பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் சராசரி மழையளவு 1200 மி.மீ., கடந்த நவம்பர் மற்றும் டிசம்பரில், வரலாறு காணாத அளவிற்கு 2144 மி.மீ., மழை கொட்டித் தீர்த்தது.
இதனால், புதுச்சேரியின் மிகப் பெரிய ஏரிகளான ஊசுடு ஏரி, பாகூர் ஏரி உள்ளிட்ட 84 ஏரிகளும் நிரம்பின. அனைத்து குளங்களும் நிரம்பி வழிந்தன. ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள படுகை அணைகளில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு தண்ணீர் நிரம்பியது. இதன் எதிரொலியாக, புதுச்சேரியில் நிலத்தடி நீர் மட்டம் 6 மீட்டர் முதல் 7 மீட்டர் வரை உயர்ந்தது.
பருவமழை கைவிட்டதால் இந்தாண்டு நீர்மட்டம் அனைத்து பகுதிகளிலும் படுபாதாளத்திற்கு சென்றுள்ளது. காட்டேரிக்குப்பம், காலாப்பட்டு, ஆலங்குப்பம், சேதராப்பட்டு உட்பட அனைத்து பகுதிகளிலும், 12 மீட்டர் வரை நிலத்தடி நீர் மட்டம் சரிந்துள்ளது.
மாநில நிலத்தடி நீர் பிரிவு, டிஜிட்டல் வாட்டர் லெவல் ரெக்கார்டிங், டெலி மீட்டர் கொண்டு நடத்தப்பட்ட அதிநவீன சோதனையில், நிலத்தடி நீர் மட்டம் கடும் சரிவை சந்தித்துள்ளது உறுதியாகியுள்ளது. மேல் ஊற்றுகள் 6 அடியில் இருந்து 15 மீட்டராகவும், கீழ் ஊற்றுகள் 17 மீட்டரில் இருந்து 27 மீட்டராகவும் படுபாதாளத்திற்கு சென்றுள்ளது.
அனைத்து பகுதிகளிலும் நிலத்தடி நீர் மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றுள்ளதையடுத்து, ஏரி, குளத்திற்கு நீர்வரத்து வாய்க்கால் பற்றிய விபரங்கçe புலப்பட நகலுடன் (எப்.எம்.பி.,) சேகரித்து வருகிறது.
குறிப்பாக கோவில் குளங்கçe பற்றிய விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மழைக்காலத்திற்கு முன்பாக முன்மாதிரி திட்டமாக 30 கோவில் குள தண்ணீரை மண்ணில் ரீசார்ஜ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. படுகை அணையிலும் இதே தண்ணீர் நிலத்தடியில் ரீசார்ஜ் செய்யப்பட உள்ளது.
ஏரி, கோவில் குளங்களில் அந்தந்த பகுதியில் உள்ள வீட்டு கழிவு நீர் சேருகிறது. மழைக்காலத்திலும் இதே நிலைமையே நீடிக்கிறது. நேரடியாக நிலத்தடிநீரில் சேர்த்தால் சிக்கல் வரும் என்பதால், மண்ணில் பல அடுக்குகளில் தண்ணீரை விட்டு, இயற்கையான முறையில் வடிக்கட்டி, சுத்திகரிக்கப்பட்ட சுத்தமான தண்ணீரே ரீசார்ஜ் செய்யப்பட உள்ளது.
இதுமட்டுமின்றி விவசாயத்திற்கு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது போன்ற மேலும் பல தகவல்களுக்கு இந்த Link யை உபயோகிக்கவும்:https://tinyurl.com/h9rncl2
0 notes
Text
பெரிய கண்மாய் மடைகளை சீரமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

ராமாதபுரம்,
ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் உள்ள மடைகçe மழைக்காலம் துவங்கும் முன் சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாயாக ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் உள்ளது.
இந்த கண்மாய் 20 கி.மீ., நீண்ட கரையை கொண்டுள்ளது. இதில் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் வகையில் 20 வது வெளிப்போக்கி மடைகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த கண்மாயில் 1,205 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கப்படுகிறது. இதன் மூலம் 12 ஆயிரத்து 142 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறுகிறது.
இக் கண்மாய் 2006ல் துர்வாரப்பட்டது. அதன் பின் இந்த பெரிய கண்மாயை துர்வாரி அதன் மடைகள் மற்றும் வரத்து கால்வாய்கçe சீரமைக்க அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் பெரும்பாலான பாசன மடைகள் கருவேல மரங்கள் சூழ்ந்து சிதிலமடைந்து வருகின்றன.
மேலும் இந்த கண்மாய்க்கு தெற்கில் உள்ள அரசரடி வண்டல் வரத்து கால்வாய் மற்றும் வடக்கு பகுதியில் இருந்து வரும் சூரியான் கோடை ஆறு வரத்து கால்வாய் ஆகியவை கடந்த சில ஆண்டுகளாக துர்வாரப்படாமல் உள்ளதால் மழைகாலங்களில் இந்த கண்மாய்க்கு உபரி தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த கண்மாய் முழு நீர் கொள்ளளவை எட்ட முடியாத நிலையில் விவசாயிகள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். என���ே பொதுப்பணித்துறை அதிகாரிகள் பெரிய கண்மாய் மடைகள் மற்றும் வரத்து கால்வாய்கçe மழை காலம் துவங்கும் முன் சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
இது போன்ற மேலும் பல தகவல்களுக்கு இந்த Link யை உபயோகிக்கவும்:https://tinyurl.com/h9rncl2
0 notes
Text
உணவுப் பொருட்கள் குறித்து புகாருக்கு வாட்ஸ் ஆப் எண் அறிமுகம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உணவுப் பொருட்கள் குறித்த புகார் தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என ஆட்சியர் ��திரவன் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், உணவு பாதுகாப்புத்துறை மூலமாக கலப்படம், தரம் குறைந்த மற்றும் லேபிள் உள்ள உணவு பொருட்கçe கண்டறிந்து, உணவு மாதிரி எடுத்து ஆய்வு செய்யப்படுகிறது. இதன்படி, கடந்த, ஓராண்டில் மட்டும், 61 மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆய்வு முடிவின் அடிப்படையில், கலப்படம், தரம் குறைந்த மற்றும் லேபிள் குறைகள் கொண்ட உணவு பொருட்கçe தயாரித்தவர், விற்பனைக்கு வழங்கியவர் மற்றும் விற்பனையாளர் ஆகியோர் மீது, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டப்படி வழக்கு தொடுக்கப்படும். மேலும், கடந்த காலங்களில் மாவட்டத்தில், 37 வழக்குகள் மாவட்ட கூடுதல் நீதிபதி முன் பதிவு செய்யப்பட்டு, தண்டனையாக, மூன்று லட்சத்து, 99 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது. மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில், மூன்று வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. 15 வழக்குகள் தொடர குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்டு வருகிறது.
எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நுகர்வோர் அமைப்புகள், பொதுமக்கள் அனைவரும், உணவு பொருட்களின் தர குறைபாடு, கலப்படம் மற்றும் சுகாதாரமின்மை, முகப்பு சீட்டில் குறைபாடுகள் பற்றிய புகார்கçe, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையரின் வாட்ஸ்ஆப் எண்ணான, 94440‡42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். உணவு பொருட்கள் சம்பந்தமான புகார்கçe, 04343?230102 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்திலோ நேரடியாக தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இது போன்ற மேலும் பல தகவல்களுக்கு இந்த Link யை உபயோகிக்கவும்:https://tinyurl.com/h9rncl2
#உணவுப் பொருட்கள்#உணவு பாதுகாப்பு#விற்பனையாள��்#உணவு பாதுகாப்புத்துறை#நுகர்வோர் அமைப்புகள்#AgriDoctor
0 notes
Text
நெல்லுக்கான ஆதாய விலையை குவிண்டாலுக்கு ரூ.80 உயர்த்த பரிந்துரை

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதாய விலையை, குவிண்டாலுக்கு ரூ.80 உயர்த்தி வழங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதாய விலையை, குவிண்டாலுக்கு ரூ.80 உயர்த்தி ரூ.1550 ஆக நிர்ணயிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
நடப்பு 2016-17ம் பயிர் ஆண்டில் நெல்லைப் பொருத்தவரை, சாதாரண ரகத்திற்கு ரூ.1470 மற்றும் உயர் ரகத்திற்கு ரூ.1510 குறைந்த பட்ச ஆதாய விலையாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பான அறிக்கையை இதர அமைச்சகங்களின் ஆலோசனையைப் பெறுவதற்காக விவசாய அமைச்சகம் அனுப்பி உள்ளதாகவும், இந்த உத்தேச அறிக்கைக்கு விரைவில் அமைச்சரவையின் ஒப்புதல் கிடைக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் ஜூலை மாதம் துவங்கும் 2017-18ம் பயிர் ஆண்டில், நெல்லுக்கு கடந்த ஆண்டில் வழங்கப்பட்ட குறைந்த பட்ச ஆதரவு விலையில் ரூ.80 உயர்த்தி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து சாதாரண ரகத்திற்கு ரூ.1,550 மற்றும் உயர் ரகத்திற்கு ரூ.1,590 குறைந்த பட்ச ஆதாய விலையாக வழங்க அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் முடிவடைய உள்ள நடப்புப் பயிர் ஆண்டில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதாய விலை குவிண்டாலுக்கு ரூ.60 உயர்த்தி வழங்கப்பட்டது. இந் நிலையில் ��டுத்த பயிர் ஆண்டுக்கு குவிண்டாலுக்கு ரூ.80 உயர்த்தி வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பரிந்துரையானது வேளாண் செலவினம் மற்றும் கட்டணங்கள் கமிசன் அளித்த பரிந்துரைக்கு ஏற்ப அமைந்துள்ளது.
கோடை சாகுபடி (காரீப்) மற்றும் குளிர் சாகுபடி (ராபி) ஆகிய இரு பருவங்களிலும் நெல் முக்கிய பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. எனினும் காரீப் பருவத்திலேயே பெரும்பாலான சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. தென் மேற்குப் பருவ மழை துவங்கும் போது காரீப் பருவத்துக்கான நடவுப் பணிகள் துவங்கும்.
நடப்புப் பயிர் ஆண்டில், அரிசி உற்பத்தி இது வரை இல்லாத அதிகபட்சமாக 109.15 மில்லியன் டன்னை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 95.09 மில்லியன் டன் காரீப் பருவத்தில் உற்பத்தி செய்யப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக 2013-14ம் பயிர் ஆண்டில், அதிகபட்சமாக 106.65 மில்லியன் டன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டது.
இது போன்ற மேலும் பல தகவல்களுக்கு இந்த Link யை உபயோகிக்கவும்:https://tinyurl.com/h9rncl2
0 notes
Text
கரும்புக்கான நிலுவைத்தொகை ரூ.1510 கோடி முதல்வரிடம் கரும்பு விவசாயிகள் சங்கம் மனு

மதுரை,
தமிழகத்தில், தனியார் சர்க்கரை ஆலைகளில் அரவை செய்த கரும்புக்குரிய பாக்கித்தொகை ஆயிரத்து 510 கோடி ரூபாயை வழங்க அரசு உத்தரவிட வேண்டும் என கரும்பு விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
மாநிலத்தில் விவசாயிகள் பயிரிடும் கரும்பை, கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு அரவைக்கு அனுப்புகின்றனர். நான்காண்டுகளாக, தமிழக அரசு அறிவித்த மாநில அரசின் பரிந்துரை விலையை (எஸ்.ஏ.பி.,) விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் முழுமையாக வழங்கவில்லை.
ஆயிரத்து 510 கோடி ரூபாய் பாக்கியை, பெற்று தரக் கோரி வெள்ளிக்கிழமை மதுரையில் முதல்வர் பழனிச்சாமியிடம் கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் என்.பழனிச்சாமி தலைமையில் மனு வழங்கினர்.
மாநிலத் தலைவர் கூறியதாவது:
வறட்சியால் இந்தாண்டு வாங்கிய கடனை கட்ட முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். எனவே கூட்டுறவு, தனியார் சர்க்கரை ஆலைகள் பாக்கி தொகையை வழங்க முதல்வர் உத்தரவிட வேண்டும்.
கரும்பு கட்டுப்பாடுச் சட்டம் 1966ல் பிரிவு 5 ஏ ஐ (லாபத்தில் பங்கு) சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி 2004 முதல் 2009 வரை கரும்பு விவசாயிகளுக்கு 550 கோடி ரூபாய் வழங்க மறுக்கின்றனர். இதை வழங்க தனியார் ஆலைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். 2016‡17 ஆண்டுக்கு கரும்பு விலையை மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும்.
இந்தாண்டு உற்பத்தி செலவு அதிகரித்து வி��்ட நிலையில், கரும்பு டன் ஒன்றுக்கு 9.5 சதவீத பிழித்திறன் கொண்ட கரும்புக்கு விலையாக 4000 ரூபாயாக அறிவிக்க வேண்டும். கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் 2500 கோடி ரூபாய் கடன் சுமையில் உள்ளது.
வாங்கிய கடனுக்கு வட்டியை ஆண்டாண்டாக வங்கிக்கு செலுத்தி விடுவதால், ஆலைகள் கடன் நெருக்கடியில் உள்ளன. இந்த கடன் தொகையை அரசு ஏற்று அரசின் பங்கு தொகையாக மாற்றி கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகçe பாதுகாக்க அரசு முன்வர வேண்டும், என்றார்.
இது போன்ற மேலும் பல தகவல்களுக்கு இந்த Link யை உபயோகிக்கவும்: https://tinyurl.com/h9rncl2
0 notes
Text
விவசாயிகளுக்கு 156 வகையான நெல் விதைகள் வழங்க ஏற்பாடு

திருவாரூரில் நடக்கும் விழாவில் 156 வகையான பாரம்பரிய நெல் விதைகçe 1,000 விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 2006 முதல் பாரம்பரிய நெல் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்தாண்டுக்கான நெல் திருவிழா ஜூன் 17 ல் நடக்கிறது. அத்துடன், பாரம்பரிய உணவு திருவிழாவும் நடத்தப்பட உள்ளது.
இதில், பல மாநிலங்கçe சேர்ந்த வேளாண் வல்லுனர்கள் பங்கேற்க உள்ளனர். இதில், பாரம்பரிய நெல் சாகுபடி மற்றும் அதன் மருத்துவ குணங்கள், இயற்கை வேளாண்மையின் அவசியம், விçe நிலங்கள் மற்றும் நீராதாரங்கள் பாதுகாப்பு, உழவர்களுக்கான நபார்டு திட்டங்கள், பருவநிலை மாற்றம் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள், விற்பனை வாய்ப்புகள் மற்றும் சந்தை நிலவரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன.
மேலும், 156 வகையான பாரம்பரிய நெல் விதைகள் 1,000 விவசாயிகளுக்கு தலா 2 கிலோ வீதம் வழங்கப்பட உள்ளன.
இதற்கான ஏற்பாடுகçe, "நம் நெல்லையே காப்போம்' இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் நெல் ஜெயராமன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
இது போன்ற மேலும் பல தகவல்களுக்கு இந்த Link யை உபயோகிக்கவும்: https://tinyurl.com/h9rncl2
0 notes
Text
செயற்கையாக பழுக்க வைக்கப்படும் பழங்கள்

ஈரோடு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களால், வாய் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. ��க்கள் கவனமாக இருக்க, ஈரோடு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
கோடை காலமான தற்போது மாம்பழங்கள் மற்றும் பல்வேறு பழங்கள் செயற்கை முறையில் கார்பைடு கல் மற்றும் எரித்ரான் போன்ற ரசாயன கலவைகçe பயன்படுத்தி பழுக்க வைக்கப்படுகிறது. கார்பைடு கல் காற்றில் உள்ள ஈரப்பதத்துடன் சேர்ந்து, அசிட்டிலின் வாயுவை உருவாக்குகிறது. அசிட்டிலின் பழங்கçe பழுக்க வைக்கிறது. இது வாய் புற்றுநோய் உருவாக காரணமாக அமைகிறது.
எரித்ரான் என்ற ரசாயன கலவை, நேரடியாக பழங்களின் மீது தெளிக்கப்படும்போது, விசத்தன்மை பெறுகிறது. இப்படி செயற்கையாக பழுக்க வைத்த, பழங்கçe சாப்பிடும்போது வயிற்று வலி, தொண்டை எரிச்சல், வயிற்றுபோக்கு, வயிற்றுபுண் என காலப்போக்கில் புற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம் பழங்கள், மேற்பகுதி பளபளப்பாகவும் ஆங்காங்கு பச்சை நிறத்திலும் காணப்படும். பழமாக காணப்பட்டாலும், உட்பகுதி காயாகவும் இருக்கும்.
மணம், இனிப்பு தன்மை மற்றும் சாறு குறைவாக இருக்கும்.
எனவே கடைகளில் வாங்கும் பழங்கçe, உப்பு நீரில், 10 முதல், 15 நிமிடங்கள் ஊற வைத்து, பின் இரண்டு நிமிடம் வரை, மிதமான சூடான நீரில் நன்கு கழுவ வேண்டும். தோல் நீக்கி சாப்பிட வேண்டும்.
மாம்பழம் மட்டுமின்றி வாழைப்பழம், சப்போட்டா, கொய்யா போன்ற பழங்களும் இதே முறையில் பழுக்க வைக்கப்படுகின்றன. செயற்கை முறையில், பழங்கçe பழுக்க வைத்தால், வியாபாரிகள் மீது நடவடிக்கை பாயும். இது போன்ற புகார்கள் தெரிந்தால், 0424‡2223545 என்ற எண்களில் புகார் அளிக்கலாம். இதை ஈரோடு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது போன்ற மேலும் பல தகவல்களுக்கு இந்த Link யை உபயோகிக்கவும்: https://tinyurl.com/h9rncl2
0 notes
Text
சேலம், தர்மபுரி மாவட்டத்தில் கடும் வறட்சி

மலையோர நாட்டு மாடுகள் மடிந்தாக அதிர்ச்சி தகவல்
சேலம், தர்மபுரி மாவட்டங்களில் கடுமையான வறட்சி நிலவுவதால், மலையோர கிராமங்களில் வளர்க்கப்படும், 2,000க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகள் மடிந்துள்ளதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
சேலம் மாவட்டத்தில் கஞ்ச மலை, ஜருகு மலை, கல்வராயன் மலை, ஏற்காடு மலை, தர்மபுரி மாவட்ட எல்லையை ஒட்டிய கர்நாடக மாநில எல்லைப்பகுதியில் உள்ள காடுகளில், தண்ணீர் இல்லை. இதனால், இப்பகுதிகளில் வளர்க்கப்படும் கால்நடைகள் மடிந்து வருகின்றன.
இதுகுறித்து, தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி மாநில தல��வர் பூமொழி கூறியதாவது:
சேலம், தர்மபுரி மாவட்டங்களில், காவிரி ஆறு ஓடும் பகுதியில் கடுமையான வறட்சி நிலவுகிறது. குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால், மாடுகள் செத்து மடிகின்றன. கடந்த வாரம், சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத், அதிகாரிகளுடன் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சியின் சார்பில் நாங்கள் கள ஆய்வு மேற���கொண்டோம். அதில், கோவிந்தம்பாடி, செட்டிப்பட்டி, ஏரியூரில் மட்டும் 300க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளன. இவை தவிர, பென்னாகரம், சேலம் மாவட்டம் சுக்கம்பட்டி, கஞ்சமலை, ஜருகுமலை, கல்வராயன் மலையை ஒட்டிள்ள மலை கிராமங்களில் நாட்டு பசுக்கள் 2,000க்கும் மேற்பட்டவை இறந்துள்ளன.
இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மறுப்பதோடு உண்மையை மறைத்து வருகிறது. வனப்பகுதியில் யானைகள், மான்கள், காட்டுப்பன்றிகளுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில், ஆங்காங்கே குழிகள் வெட்டப்பட்டுள்ளன.
அந்த தண்ணீர், நாளடைவில் மாசடைந்து விடுவதால், அவற்றை குடிக்கும் மாடுகள் தொற்றுநோயின் பிடியில் சிக்கி மடிகின்றன. மலை கிராமங்களில் உள்ள மாடுகçe காப்பாற்றும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும். மாடுகçe இழந்து வாடும் விவசாயிகளுக்கு, விசாரணை நடத்தி நிவாரண உதவி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இது போன்ற மேலும் பல தகவல்களுக்கு இந்த Link யை உபயோகிக்கவும்: https://tinyurl.com/h9rncl2
0 notes
Text
பெரியாறு அணையில் மழை

பெரியாறு அணை நீர்பிடிப்பில் மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டது.
பெரியாறு அணை நீர்பிடிப்பில் போதியளவு மழை பெய்யாததால், அணையின் நீர்மட்டம் சனிக்கிழமையன்று 109 அடியாக குறைந்தது. இந்நிலையில் இரவு நீர்பிடிப்பு பகுதியில் 6 மி.மீ., மழை பதிவானது. இதனால் அணைக்கு வினாடிக்கு 19 கனஅடி நீர்வரத்து ஏற்பட்டது.
அணையின் நீர்மட்டம் ஞாயிறு காலை நிலவரப்படி 109.10 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது. நீர்இருப்பு 771 மில்லியன் கனஅடியாகும். ஒரு சில நாட்களுக்கு நீர்பிடிப்பில் கனமழை பெய்தால், கோடைகாலம் முடியும் வரை குடிநீர் பிரச்னையை சமாளிக்க முடியும்.
இது போன்ற மேலும் பல தகவல்களுக்கு இந்த Link யை உபயோகிக்கவும்: https://tinyurl.com/h9rncl2
0 notes
Text
பயறுகள் இறக்குமதி 20 சதம் உயர்வு

கடந்த நிதி ஆண்டில் பயறு வகைகளின் இறக்குமதி 20 சதம் அதிகரித்துள்ளது.
கடந்த 2016-17ம் நிதி ஆண்டில், பயறு வகைகளின் இறக்குமதி 19.9 சதம் அதிகரித்து 5.67 மில்லியன் டன்னாக உள்ளது.
நடப்புப் பயிர் ஆண்டில் 22.14 மில்லியன் டன் பயறு வகைகள் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாலும், 5.67 மில்லியன் டன் பயறு வகைகள் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளதாலும் நடப்பாண்டில் சந்தையில் 27.8 மில்லியன் டன் பயறு வகைகள் கையிருப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வழக்கமான பயன்பாட்டு அளவான 24 மில்லியன் டன்னைக் காட்டிலும் 3 மில்லியன் டன் அதிகமாகும்.
மார்ச் மாத இறுதியில், துவரம் பருப்பு இறக்குமதிக்கு மத்திய அரசு 10 சதம் வரி விதித்தது. இருப்பினும் இது விவசாயிகளுக்கு பெரிய அளவில் உதவி செய்ய வில்லை. மேலும் அக்காலத்திற்குள் சுமார் 4.47 மில்லியன் டன் துவரம் பருப்பு இறக்குமதி செய்யப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில், சந்தையில் இருப்பு உச்சவரம்பு கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்றும், ஏற்றுமதிக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் பயறுகள் மற்றும் தானியங்கள் (ஐபிஜிஏ) கூட்டமைப்பைச் சேர்ந்த சில வர்த்தகர்கள் விரும்புகின்றனர்.
ஐபிஜிஏ அமைப்பு திரட்டிய தகவல்களின் படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் தான் இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்துள்ளது. மொத்த பயறு வகைகள் இறக்குமதியில் மூன்றில் இரண்டு பங்கு கடந்த இரண்டு ஆண்டுகளி்ல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் 2015-16ம் பயிர் ஆண்டில், வறட்சி கடுமையாக இருந்ததை அடுத்து, 16.35 மில்லியன் டன் பயறு வகைகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்ட��ு. பயறு வகைகள் இறக்குமதி ஒப்பந்தங்கள் மிக முன் கூட்டியே மேற்கொள்ளப்படுகின்றன என்றும், அதனால் உள்நாட்டு பயிர் வரத்து துவங்கும் போதே, இறக்குமதி பயிர்களும் வந்து சேர்வதால் சந்தைகளில் விலை குறைகிறது.
மொத்த இறக்குமதியில் பாதிக்கும் அதிகமாக, சுமார் 29.3 லட்சம் டன் மஞ்சள் பட்டாணி இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. அடுத்த படியாக கொண்டைக் கடலை 8.8 லட்சம் டன் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.
மார்ச் மாதத்தில் துவரம் பருப்பு இறக்குமதி சுமார் 24 சதம் குறைந்தது. டிசம்பர் மாதத்தில் மொத்த பயறு வகைகள் இறக்குமதியில் பாதிக்கும் அதிகமாக சுமார் 4.47 லட்சம் டன் இறக்குமதி செய்யப்பட்டது.
நடப்புப் பயிர் ஆண்டில் 42.3 லட்சம் டன் துவரம் பருப்பு உற்பத்தி செய்யப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதனால் இதில் சுமார் 10 சதம் அளவுக்கே இறக்குமதி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந் நிலையில் நடப்பாண்டில் பயறு வகைகள் இறக்குமதி மொத்தமாக 20 சதம் அளவுக்குக் குறையும் என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
இது போன்ற மேலும் பல தகவல்களுக்கு இந்த Link யை உபயோகிக்கவும்: https://tinyurl.com/h9rncl2
0 notes
Text
நுண்ணீர் பாசனக் கருவிகள் : விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு

நாகை,
பிரதம மந்திரி கிரி´ சிஞ்சய் யோ��னா திட்டத்தின்கீழ், நுண்ணீர் பாசனத்தை மேம்படுத்துவதற்காக மழைத்தூவான் ரூ.31,600 மானிய விலையிலும், எடுத்து செல்லும் தெளிப்பான் கருவி ரூ.19,600 மானிய விலையிலும் மொத்தம் 2,500 கருவிகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டான்ஹோடா திட்ட நெறிமுறைகளின்படி சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் வழங்கப்படும்.
கருவிகçe பெற போதிய நீர் ஆதாரமுள்ள பயறுவகை பயிரிகள் பயிரிடும் விவசாயிகள், விண்ணப்பம், ஆதார் அட்டை, ரேன் கார்டு, கணினி சிட்டா, அடங்கல், புகைப்படம் 2, நில வரைபடம் கடந்த 10 ஆண்டுகளில் நுண்ணீர் பாசனத்திற்கான மானியம் பெறப்படவில்லை என்பதற்கான சான்று, சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று ஆகியவற்றுடன் அந்தந்த பகுதி வட்டார வேளாண் உதவி இயக்குனரை அணுகி விண்ணப்பித்து பயன்பெறும்படி ஆட்சியர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இது போன்ற மேலும் பல தகவல்களுக்கு இந்த Link யை உபயோகிக்கவும்: https://tinyurl.com/h9rncl2
0 notes
Text
கண்மாய் வறண்டதால் தண்ணீருக்காக அலையும் மக்கள்

விருதுநகர்,
அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியில் மாங்குளம் கண்மாய் வறண்டு விட்டதால் தண்ணீரின்றி விவசாயம் மற்றும் மக்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். அருப்புக்கோட்டை ஒன்றியத்தை சேர்ந்த பாலையம்பட்டி ஊராட்சி உட்பட்டது மாங்குளம் கண்மாய். ஒரு காலத்தில் இக்கண்மாயில் எப்போதும் இருக்கும் தண்ணீரில் சுற்று பகுதியில் உள்ள 80 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களில் விவசாயம் நடந்தது. கடலை, நெல், சோளம் உட்பட பயிர்கள் பயரிடப்பட்டன.
கண்மாயை சுற்றி புறநர் பகுதிகள் மற்றும் பாலையம்பட்டி கிராம மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக இருந்தது. குடிப்பதற்கும், மற்ற புழக்கங்களுக்கும் கண்மாய் நீரை மக்கள் பயன்படுத்தி வந்தனர். கண்மாயை பராமரிக்காமல் விட்டதாலும், கண்மாய்க்கு நீர்வரத்து ஓடைகளை சீர் செய்யாமல் விட்டதாலும், கண்மாயில் தண்ணீர் வரத்து குறைந்தது.
மேலும், புற நகர் பகுதிகளின் வீடுகளில் உள்ள கழிவு நீர் கண்மாயில் விடப்பட்டது. தற்போது கண்மாய்க்கு நீர் வரும் ஓடைகள் அடைத்தும் ஆக்கிரமிப்பு, முட்புதர்கள் அடைத்து இருப்பதால், மழைநீர் வருவது நின்று போனது. கடந்த 2 ஆண்டுகள் மழை பெய்யாமல் போனதால் கண்மாய் வறண்டு விட்டது.
இதனால் விவசாயம் செய்ய முடியாமல் நி��ங்கள் தரிசாகின. குடிநீருக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கண்மாயை நம்பி இருந்த மக்கள் தற்போது தண்ணீர் தேடி அலைகின்றனர். கண்மாயை துர் வாரி நீர்வரும் ஓடைகளை சீரமைத்து கண்மாய்க்குள் மழை நீர் வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரூர் அருகே, ஏமூர் பகுதியில் விவசாயிகள் குறைந்த நிலத்தில் எள் பயிரிட்டும் தண்ணீரீன்றி விளையாமல் கருகிக் காணப்படுவதால் செலவு செய்தும் பயனில்லாத அவல நிலை காணப்படுகிறது.
இதுகுறித்து, ஏமூர் விவசாயி நாச்சிமுத்து கூறியதாவது:
எண்ணெய் வித்துக்களான, எள், சூரியகாந்தி ஆகியவற்றை, அவ்வப்போது காலச்சூழ்நிலைக்கு ஏற்ப பயிரிடப்படுவது வழக்கம். தற்போது மானாவாரி பயிர் கூட செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியில் வாய்க்கால்க¼ளா, ஆறுக¼ளா கிடையாது. போர்வெல் மூலம் தான் விவசாயம் செய்ய முடியும். இருப்பினும் நாங்கள் இருக்கும் நீரை வைத்து குறைந்த பரப்பளவில் எள் பயிரிட்டோம். அதுவும் தற்போது வாடி வதங்கி காய்ந்து காணப்படுகிறது.
ஓர் ஏக்கருக்கு, 20 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் செலவு செய்தும் பயனில்லை. கூலி ஆட்கள் பற்றாக்குறை காரணமாக தவிக்கிறோம். இருக்கும் கிணறுகளும் வறண்டு கிடக்கிறது. சாகுபடிக்கு செலவு செய்தும் எந்தவித பயனும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இது போன்ற மேலும் பல தகவல்களுக்கு இந்த Link யை உபயோகிக்கவும்: https://tinyurl.com/h9rncl2
0 notes
Text
வறட்சி எதிரொலி; மேய்ச்சலுக்கு வழியின்றி கால்நடைகளுடன் இடம் பெயரும் விவசாயிகள்

ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் வறட்சி காரணமாக மேய்ச்சலுக்கு வழியின்றி கால்நடைகள் தவித்து வருகின்றன. விவசாயிகள் கால்நடைகளுடன் மேய்ச்சல் நிலங்களை தேடி இடம் பெயர்ந்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனது. சராசரியாக ஆண்டுக்கு மழையளவு 827 மி.மீ., பெய்ய வேண்டும். 2016 ல் 348.07 மி.மீ., 2017ல் இது வரை 110.21 மி.மீ., மட்டுமே மழை பெய்துள்ளது. கோடை காலத்தில் மழை பொழிவு இருக்கும். இந்தாண்டு கோடை மழையும் பொய்த்து போனது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், ராமேஸ்வரம், திருவாடானை, பரமக்குடி, முதுகுளத்துர், கமுதி, கடலாடி ஏழு தாலுகா பகுதிகளிலுள்ள 429 ஊராட்சிகள், 2,362 கிராமங்களில் வறட்சி காணப்படுகின்றன.
நீர் நிலைகளான கண்மாய், குளம், ஊரணி போன்ற நீர் நிலைகள் வறண்டு கட்டாந்தரைகளாக மாறிவிட்டன. வைகை கரைப்பகுதியில் உள்ள கிராமங்களில் கிணற்று பாசனங்களில் மட்டுமே ஒரளவு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதிலும் குறைந்த அளவு தண்ணீரில் பயிரிடப்படும் மானாவாரி பயிர்களான பருத்தி, பயிறு, எண்ணெய் வித்துக்கள் மட்டுமே பயிரிடப்பட்டுள்ளன.
வறண்ட பூமியை நம்பி பயனில்லை என்ற விவசாயிகள் தங்களது வீடுகளில் கால்நடைகள் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பான்மையான கிராமங்களில் பால் மாடுகள், இறைச்சிக்காக ஆடுகள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. தற்போது மழை இல்லாததால், விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில் தரிசு நிலங்களாக காட்சியளிக்கின்றன.
ஆடு, மாடுகள் தீவனத்திற்கு மேய்ச்சல் நிலங்கள் இல்லாத நிலையில் கால்நடை தீவனத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசு தரப்பில் மானிய விலையில் வைக்கோல், தீவனங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. அது போதுமானதாக இல்லை.
டெல்டா மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் வைக்கோல் வாங்கி அரசு மானிய விலையில் வழங்கி வருகிறது. இது விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. பசுந்தாள்கள் கிடைக்காததால், மாடுகளின் கறவைத்திறன் குறைந்துவிட்டது. விவசாயிகளின் வருமானம் குறைந்து விட்டது.
கறவை மாடுகளுக்கு வைக்கோல் வழங்கப்படுகிறது. ஆடுகள் புல், மற்றும் மரங்களில் உள்ள இலை, தழைகளை மட்டுமே உண்ணும். வறட்சியால் மரங்களில் போதுமான இலை தழைகள் கிடைப்பதில்லை. மேய்ச்சல் நிலங்களை தேடி ஆடுகளுடன், விவசாயிகள் இடம் பெயர்ந்து வருகின்றனர்.
ராமநாதபுரத்தை சேர்ந்த கண்ணன் கூறியதாவது: விவசாயத்தில் வழியில்லை என்பதால், ஆடுகளை வளர்த்து பயன் பெற நினைத்தோம். அதற்கான மேய்ச்சல் நிலங்கள் இல்லாததால், மேய்ச்சல் நிலங்களை தேடி இடம் பெயர்ந்து வருகிறோம்.இதே நிலை நீடித்தால், ஆடு, மாடுகள் வளர்க்க முடியாத நிலை ஏற்படும். விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், என்றார்.
இது போன்ற மேலும் பல தகவல்களுக்கு இந்த Link யை உபயோகிக்கவும்: https://tinyurl.com/h9rncl2
0 notes
Text
வீடுகளில் மழைநீர் சேமிப்பு : ஆட்சியர் வலியுறுத்தல்

திண்டுக்கல்,
பழநி அருகே ஆண்டிப்பட்டியில் மக்கள் தொடர்புமுகாம் புதன்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் வினய் தலைமை வகித்தார். பழநி சப் ஆட்சியர் வினித், வேளாண் இணை இயக்குனர் தங்கச்சாமி, மக்கள் குறை தீர்ப்பு பிரிவு துணை ஆட்சியர் இந்திரவள்ளி, பிற்படுத்தப்பட்டோர் நலஅலுவலர் சேதுராமன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜான்சன், தாசில்தார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.
இதில் ஆட்சியர் வினய் பேசியதாவது:
மக்கள் இருப்பிடத்திற்கே அரசு அலுவலர்கள் வருகின்றனர். பல்வேறு நல்ல திட்டங்களை மக்கள் பயன்படுத்த வேண்டும். வறட்சியில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளை பாதுகாத்து, மழைநீரை வீடுதோறும் சேகரித்தால் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு பிரச்னை இருக்காது. குளங்கள், வாய்க்கால்களை துர்வாரி சீரமைக்கப்படுகிறது.
விளைநிலத்தில் மண் தரத்தை உயர்த்த வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது. அதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் செல்லச்சாமி ஆகியோர் ஆண்டிப்பட்டியில் தெருவிளக்கு, சாக்கடை, குடிநீர், ரோடுவசதி இல்லை என புகார் தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
சுகாதாரத்துறை துணை இயக்குனர் வரதராஜன், வனரேஞ்சர் கணேஷ்ராம், வேளாண் உதவி இயக்குனர் சுருளியப்பன், உட்பட பலர் பங்கேற்றனர்.
இது போன்ற மேலும் பல தகவல்களுக்கு இந்த Link யை உபயோகிக்கவும்: https://tinyurl.com/h9rncl2
0 notes
Text
பருத்தி சாகுபடி அதிகரிக்க வாய்ப்பு

அடுத்த 2017-18ம் பருவத்தில் பருத்தி சாகுபடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த 2017-18ம் பருத்தி பருவத்தில் (ஜூலை - ஜூன்), பருத்தி விவசாயிகள் கூடுதல் பரப்பில் சாகுபடி செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த பருவத்தில் உற்பத்தியும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கடந்த 2016-17ம் நிதி ஆண்டில் பருத்தி வருவாய் சிறப்பாக இருந்ததாலும், நடப்பு நிதி ஆண்டிலும் அதே அளவிலான வருவாய் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு காரணமாகவும் விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஆர்வமாக உள்ளனர்.
அதேவேளையில் உள்நாட்டுப் பஞ்சாலைகளில் பருத்திக்கான தேவை அதிகரித்து வருவதால், நடப்புப் பருவத்தின் முடிவில் மீதி இருப்பு குறைவாகவே இருக்கும் என சர்வதேச பருத்தி ஆலோசனை கமிட்டி (ஐசிஏசி) தெரிவித்துள்ளது.
அடுத்த 2017-18ம் ஆண்டில் உலக அளவில் பருத்தி சாகுபடிப் பரப்பு சுமார் 5 சதம் அதிகரித்து 30.8 மில்லியன் ஹெக்டேராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் இந்தியாவில் 7 சதம் அதிகமாக சுமார் 11.3 மில்லியன் ஹெக்டேர் பரப்பில் பருத்தி சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்ப்பதாக ஐசிஏசி தெரிவித்துள்ளது.
நடப்புப் பருத்தி ஆண்டில் விலைகள் அதிகமாக இருப்பதாலும், மகசூல் அதிகரித்து உள்ளதாலும் கூடுதல் வருவாய் பெறும் நோக்கில் அதிக பரப்பில் விவசாயிகள் சாகுபடி செய்ய ஆர்வமாக உள்ளதாகவும் ஐசிஏசி தெரிவித்துள்ளது.
நடப்புப் பருவத்தில் கடந்த 5 ஆண்டுகளின் சராசரி அளவுக்கு மகசூல் இருக்கும் எனவும், அதேவேளையில் ��ற்பத்தி 3-6 சதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், நடப்புப் பருவத்தில் ஹெக்டேருக்கு 568.29 கிலோ வரை மகசூல் கிடைக்கும் என இந்திய ஜவுளித் துறை கமிசனர் அலுவலகம் மதிப்பிட்டுள்ளது.
நடப்புப் பருவத்த��ல் பண மதிப்பு நீக்க சிக்கல் ஏற்பட்டதால், விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை தாமதமாக விற்பனை செய்யத் தொடங்கியதாகவும், இதனால் பழைய விலையே நீடித்ததாகவும், இருப்பினும் ஆலைகள் குறைந்த விலையில் பருத்தியைக் கொள்முதல் செய்யும் வாய்ப்பை தவற விட்டு விட்டதாகவும் வர்த்தகர்கள் தெரிவி்க்கின்றன.
இந்தியாவில் பருத்தியை அதிகம் பயன்படுத்தும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானா பிராந்தியம் இரண்டாவது இடத்தில் உள்ளன. குஜராத்தில் பருத்தி உற்பத்தி குறைந்ததாலும், அதேவேளையில் தேவை அதிகரித்ததாலும் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பருத்திக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவானது.
இந் நிலையில் வட இந்திய ஆலைகள் அமெரிக்காவிலிருந்து அதிகளவில் பருத்தியை இறக்குமதி செய்தன. நடப்புப பருவத்தில் இந்தியாவின் பருத்தி உற்பத்தி 6 மில்லியன் ட ன்னகாகஇருக்கும் பட்சத்தில், சீனா மற்றும் அமெரிக்காவின் உற்பத்தியைக் காட்டிலும் அதிகமாக இருககும்.
சீனாவில் 4.8 மில்லியன் டன்னும், அமெரிக்காவில் 4.3 மில்லியன் டன்னும் உற்பத்தி செய்யப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள உள்ளது.
மேலும் சர்வதேச அளவில் சோயா புண்ணாக்கு விலை குறைந்ததால், பல விவசாயிகள் பருத்தி சாகுபடிக்கு மாறி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் பருத்தி விலைகள் அதிகமாக இருந்த போதும், இறக்குமதி கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபர் - மார்ச் காலத்தில், 9,80,000 பொதிகள் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டின் இதே காலத்தில் 4,50,000 பொதிகள் இறக்குமதி செய்யப்பட்டது.
நடப்புப் பருவத்தில் சுமார் 30 லட்சம் பொதிகள் இறக்குமதி செய்யப்படும் என ஆலைகள் தெரிவிக்கும் நிலையில், இனி இறக்குமதி குறையும் என எதிர்பார்ப்பதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். 2015-16ம் பருவத்தில் 23 லட்சம் பொதிகளை இந்தியா இறக்குமதி செய்தது.
இது போன்ற மேலும் பல தகவல்களுக்கு இந்த Link யை உபயோகிக்கவும்:
https://tinyurl.com/h9rncl2
0 notes