comn17
comn17
Co1 Comn 17
1K posts
Social Blog Posts, Fun videos, Images and more in the year 2017 Powered by Co1 Internet
Don't wanna be here? Send us removal request.
comn17 · 5 years ago
Text
Comn 17 Logo Updated
Tumblr media
0 notes
comn17 · 7 years ago
Text
Comn 17 Logo
Tumblr media
0 notes
comn17 · 7 years ago
Text
பூவில் வண்டு கூடும் கண்டு
🌾🌾🌾🌾இரவின் மடியில்🌾🌾🌾🌾 🎻🎺🎧📲🎷🎸🎼🥁🖥🎤🎹🎬🎤 🎤🎬🎹🖥🥁🎼🎻🎺🎧📲🎷🎸🎷 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 பாடல்: பூவில் வண்டு கூடும் கண்டு குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் வரிகள்: வைரமுத்து இசை: இளையராஜா திரைப்படம்: காதல் ஓவியம் இயக்குனர்: பாரதிராஜா 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 நம்தம் நம்தனம்தம் நம்தனம்தம் நம்தனம்தம் பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும் பூவினம் மானாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும் நம்தம் (பூவில்) ராகம் ஜீவனாகும் நெஞ்சின் ஓசை தாளமாகும் கீதம் வானம் போகும் அந்த மேகம் பாலமாகும் தேவி எந்தன் பாடல் கண்டு மார்பில் நின்று ஆடும் நாதம் ஒன்று போதும் எந்தன் ஆயுள் கோடி மாதம் தீயில் நின்றபோதும் அந்தத் தீயே வெந்து போகும் நானே நாதம்…ஆஆஆஆஆஆஅ நம்தம் (பூவில்) வானம் என் விதானம் இந்த பூமி சன்னிதானம் பாதம் மீது மோதும் ஆறு பாடும் சுப்ரபாதம் ராகம் மீது தாகம் கொண்டு ஆறும் நின்று போகும் காற்றின் தேசம் எங்கும் எந்தன் கானம் சென்று தங்கும் வாழும் லோகமேழும் எந்தன் நாதம் சென்று ஆடும் வாகை சூடும்…ஆஆஆஆஆஆஅ நம்தம் (பூவில்) 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
0 notes
comn17 · 7 years ago
Text
மௌனமான நேரம்
மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள் மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள் ஏனென்று கேளுங்கள் இது மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் இளமைச் சுமையை மனம் தாங்கிக் கொள்ளுமோ புலம்பும் அலையை கடல் மூடிக் கொள்ளுமோ குளிக்கும் ஓர் கிளி கொதிக்கும் நீர்த் துளி குளிக்கும் ஓர் கிளி கொதிக்கும் நீர்த் துளி ஊதலான மார்கழி நீளமான ராத்திரி நீ வந்து ஆதரி மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் இவளின் மனதில் இன்னும் இரவின் ஈரமோ கொடியின் மலர்கள் குளிர் காயும் நேரமோ பாதை தேடியே பாதம் போகுமோ பாதை தேடியே பாதம் போகுமோ காதலான நேசமோ கனவு கண்டு கூசுமோ தனிமையோடு பேசுமோ மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் இது மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள் மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள் ஏனென்று கேளுங்கள் இது மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்
0 notes
comn17 · 7 years ago
Text
இல்லாள்
நெஞ்சைத் தொட்ட குட்டிக்கதை.. ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடுவார்.. ஒருநாள் 'ஆபீஸ்' போய் வேலை செய்து பார்.. சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம் என்று புரியும் என்று அடிக்கடி சவால் விடுவார்.. அவள் ஒருநாள் பொறுமை இழந்து, ஒருநாள் நீங்க வீட்ல இருந்து பசங்களை பார்த்துக்கோங்க.. காலைல குளிப்பாட்டி சாப்பிட வச்சு, வீட்டுப் பாடங்கள் சொல்லிக்கொடுத்து சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க.. அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும் செஞ்சுதான் பாருங்களேன்.. என எதிர் சவால்விட்டாள்.. கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்.. அவன் வீட்டில் இருக்க.. இவள் ஆபீஸ் போனாள்.. ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ்.. முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள்.. வருகைப் பதிவேட்டை சரிபார்த்து தாமதமாய் வருபவர்களை கண்டித்தாள்.. கணக்கு வழக்குகளைப் பார்த்தாள்.. மாலை 5 மணி ஆனதும் வீட்டுக்குப் புறப்பட நினைத்தபோது, ஓர் அலுவலரின் மகள் திருமண வரவேற்பு குறித்து உதவியாளர் சொல்ல, பரிசுப் பொருள் வாங்கிக்கொண்டு கல்யாண மண்டபத்திற்கு சென்றாள்.. கணவர் வராததற்கு பொய்யான காரணம் ஒன்றை சொல்லிவிட்டு, மணமக்களின் கட்டாயத்தால் சாப்பிட சென்றாள்.. பந்தியில் உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம் வீட்டைப் பற்றியே.. இலையில் வைத்த 'ஜாங்கிரியை' மூத்தவனுக்கு பிடிக்கும் என்று கைப்பையில் எடுத்து வைத்தாள்.. முறுக்கு கணவனுக்குப் பிடிக்குமே என்று அதையும் கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள்.. அவள் சாப்பிட்டதை விட, பிள்ளைகளுக்கும் கணவனுக்கும் என பைக்குள் பதுக்கியதே அதிகம்.. ஒரு வழியாய் வீடு வந்து இறங்கியவள், கணவன் கையில் பிரம்போடு கோபத்துடன் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள்.. இவளை பார்த்ததும், பிள்ளையா பெத்து வச்சிருக்க..? அத்தனையும் குரங்குகள்.. சொல்றதை கேட்க மாட்டேங்குது.. படின்னா படிக்க மாட்டேங்குது.. சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்குது.. அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல படுக்க வச்சிருக்கேன்.. பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள கெடுத்து வச்சிருக்கே என்று பாய.. அவளோ, அய்யய்யோ பிள்ளைகளை அடிச்சீங்களா... என்றவாறே உள்ளே ஓடி கதவை திறந்து பார்த்தாள்.. உள்ளே ஒரே அழுகையும் பொருமலுமாய் பிள்ளைகள்.. விளக்கை போட்டவள் அதிர்ச்சியுடன், ‘ஏங்க.. இவனை ஏன் அடிச்சு படுக்க வச்சீங்க..? இவன் எதிர்வீட்டு பையனாச்சே ‘ என்று அலற.. ஓஹோ , அதான் ஓடப் பார்த்தானா..! என கணவன் திகைக்க.. அந்த நிலையில் இருவருக்கும் ஒன்று புரிந்தது.. இல்லாள் என்றும் , மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம் தொடங்கி நம் மூதாதையர்கள் சொல்வது சும்மா இல்லை... இல்லத்தைப் பராமரிப்பதிலும்பிள்ளைகளுக்கு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும் ஒரு பெண்ணின் பங்கு தலையாயது.. அதுபோல, பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும் அளப்பரியது.. ஆனால் இருவரும் வேலைக்கு செல்லும் இந்த காலத்தில் இது ஆணுக்கு, இது பெண்ணுக்கு என்று குடும்பப் பொறுப்புகளை இனம்பிரிக்க இயலாதபடி வாழ்க்கை சமத்துவம் ஆகிவிட்டது.. இந்த சூழ்நிலையில் ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் கணவன்மீது மனைவியோ, மனைவிமீது கணவனோ ஆதிக்கம் செலுத்தாமல் அன்பால் சாதிக்கும் மனநிலையை கொண்டிருந்தால்தான் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ முடியும்... வாழ்க வளமுடன்... படித்ததில் மீண்டும் படிக்க வேண்டும் என்று நினைத்தது
0 notes
comn17 · 7 years ago
Text
Happy Days
😊 I asked God to keep all "my friends and Family be happy all the time." ☺ God said: OK, but only for 4 days! Now you select that 4 days! 😊 I said "OK" 🌞" summer day " ❄ "winter day " ☔ " rainy day " and 🌺 " spring day " _____________________________ 😯 God got confused and said, no you can select only 3 days. 😊 I said "OK" ❌ " yesterday " ✅ " today " ❓ " tommorow " _____________________________ 😯 God got confused and said, NO, you can select only 2 days, 😊 I said "OK" 💖 " current day AND ❓ " the next day " _____________________________ 😯God again got confused and said, NO you can select only☝one day!! 😊 " I said "OK" 🌞" everyday " _____________________________ 😀😀God started laughing and said 🆒🙏 all your friends and family will be happy at all times". 😊😆😛 💖💖💖💖💖💖💖💖💖 🌹pls forward this to all your sweet Friends And Family..............💝💛💙💜💚❤💛💙💜💚
0 notes
comn17 · 7 years ago
Text
நவக்கிரகங்களுக்குரிய நிவேதனங்கள் எவை?
சூரியன் ---சூடான சர்க்கரைப் பொங்கல்  சந்திரன் --- குளிர்ந்த பால் பாயாசம்  செவ்வாய் --- பொங்கல்  புதன் --- புளியோதரை  குரு ---- தயிர்சாதம்  சுக்கிரன் ---- நெய்ப்பொங்கல்  சனி ----- எள்ளுசாதம்  ��ாகு ---- உளுந்து சாதம்  கேது ---- அன்னம போன்றவையாகும்.
0 notes
comn17 · 7 years ago
Text
இறைவனுக்குரிய நிவேதனங்கள் எவையென்று கூறமுடியுமா?
சிவன் ------ வெண் பொங்கல், வடை, வெறும்சாதம். பார்வதி ------ சர்க்கரைப் பொங்கல், உழுந்து வடை. விநாயகர் ------ மோதகம், அவல், சர்க்கரைப் பொங்கல், கொண்டைக்கடலை, அப்பம் முக்கனிகள் போன்றவையாகும். முருகன் ------ வடை, சர்க்கரைப் பொங்கல், வேகவைத்துத் தாளித்த கடலைப்பருப்பு, தினைமாவு. பெருமாள் ------ லட்டு, வெண்பொங்கல், புளியோதரை.
0 notes
comn17 · 7 years ago
Text
திருக்கோவில்களை எத்தனை முறை வலம்வந்து வணங்க வேண்டும்?
சிவன் கோவில்கள் :-- குறைந்தது 3 முறை : அதன் மேல் 5, 7, 9 ------------இவ்வாறாக விநாயகர் :- ஒரு முறை அம்பாள் :- 4 முறை விஷ்ணு :- 4 முறை முருகன் :- 3 முறை
0 notes
comn17 · 7 years ago
Text
நான்கு மனைவிகள்
வாழ்க்கையின் உண்மை ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள். ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான். அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான். அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான். பிறரோடு ஓடி விடுவாளோ என்று பயந்தான். அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான். ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள். ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்து கொண்டாள். ஒருநாள்... அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான். எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான். தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான். அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள். அவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான். அவளோ நீயோ சாகப்போகிறாய். நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள். பிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான். அவளும் சாரி என்னால் உன் கல்லறைவரைக்கும் கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது என்று மறுத்துவிட்டாள். நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது. அப்போது தான் அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது. ‘’ நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன். உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன் ‘’ என்று சொன்னாள். ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும் தருவாயில் இருந்தாள். காரணம் அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன் வருந்தினான். நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேன் என்று அழுதான். அந்த வருத்தத்திலேயே மரித்தும் போயினான். உண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு. 1. நான்காவது மனைவி நமது உடம்பு. நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை. நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது. 2. மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான். நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது. 3. நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள். அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள். அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை. 4. நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா. நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மாதான்.
0 notes
comn17 · 7 years ago
Photo
Tumblr media
: சமாளிக்க முடியாமல் திணறினார் அந்த இளம் பெண் ! அந்த பெண்ணைச் சுற்றி ஏராளமான நிருபர்கள் கூட்டம் ! கேள்வி மேல் கேள்வியாக தொடுத்தார்கள் தொலைக்காட்சி நிருபர்கள் ..! . அந்த பெண்ணின் பெயர் ஸ்ருதி ... வயது 24 ..! பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கோர்ட்டில் இப்போது ஜட்ஜ் ஆக இருக்கிறார் ...! கோர்ட் வளாகத்துக்குள்தான் நிருபர்கள் சந்திப்பு ! . அந்தப் நீதிபதிப் பெண்ணிடம் நிருபர்கள் கேட்ட கேள்வி : “இவ்வளவு இளம் வயதில் எப்படி மேடம் , இவ்வளவு பெரிய பதவிக்கு வந்தீர்கள் ? உங்கள் குடும்பம் மிகப் பெரிய செல்வாக்கு படைத்த குடும்பமா..?” . ஸ்ருதி சற்று நேரம் மௌனமாக இருந்தார். எதுவும் பேசவில்லை . பின் அமைதியாக சொன்னார் : “இல்லை .. என் குடும்பம் மிக மிக எளிமையான குடும்பம் .. ஒரு சாதாரண கிராமத்து பெண் நான் ..!” நிருபர்கள் அடுத்த கேள்வியை வீசினார்கள் : “ மேடம் ..உங்கள் குடும்பம் .... அம்மா அப்பா பற்றி சொல்லுங்களேன் ..?” . ஸ்ருதியிடம் மீண்டும் மௌனம் . நிருபர்களுக்கு ஒன்றும் புரியவில்லை . ஒருவேளை தாங்கள் கேட்டது ஜட்ஜ் ஸ்ருதிக்கு புரியவில்லையோ ..? “மேடம் .. நாங்கள் கேட்டதற்கு நீங்கள் இன்னும் பதில் சொல்....” “ஸாரி ..என்ன கேட்டீர்கள் ..?” “உங்கள் அப்பா – அம்மா ...?” ஸ்ருதி நிருபர்களை உற்று நோக்கினார் . “ஒரு நிமிடம் என்னோடு வெளியே வர முடியுமா..? ப்ளீஸ் ” நிருபர்கள் பதில் கேள்வி கேட்டார்கள் : “எங்கே மேடம்..? எங்கே வரச் சொல்கிறீர்கள்?” . ஸ்ருதி நடந்தபடியே நிருபர்களை திரும்பிப் பார்த்து சொன்னார் : “என் அப்பாவை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப் போகிறேன்..” “ஓஹோ”- நிருபர்கள் கேமராவை தயார் செய்தபடி ஸ்ருதியை பின் தொடர்ந்தார்கள் . ஸ்ருதி வேகமாக நடந்தபடியே சொன்னார் : “என் அப்பா இந்த கோர்ட்டுக்குள்தான் இருக்கிறார் !” நிருபர்களுக்கு ஒரே ஆச்சரியம் ! ஒரு நிருபர் கேட்டார் : “ ஓ ... உங்கள் அப்பாவும் நீதிபதியா மேடம்?” “இல்லை..” இன்னொரு நிருபர் கேட்டார் : “சீனியர் வக்கீலா ..?” “இல்லை..” . வெகு வேகமாக நடந்து சென்ற ஸ்ருதி , கோர்ட் வளாகத்தின் ஒரு மரத்தின் நிழலில் ஒதுங்கி நின்றார் . நிருபர்களைப் பார்த்து கேட்டார் : “நாம் ஆளுக்கு ஒரு கப் டீ சாப்பிடலாமா ?” நிருபர்களும் மரத்தடியில் ஒதுங்க ... சற்று தள்ளி நின்ற டீ விற்பவர் நிருபர்களை நோக்கி வந்தார் . அவர் ஒவ்வொரு கப்பாக டீயை ஊற்றிக் கொடுக்க ... ஸ்ருதி தன் கையாலேயே அதை வாங்கி எல்லா நிருபர்களுக்கும் கொடுக்க ... டீயை குடித்து முடித்த நிருபர்கள் “ மேடம் .. நாம் போகலாமா..?” ஸ்ருதி நிருபர்களை நோக்கி கேட்டார் : “எங்கே..?” நிருபர்கள் சற்றே குழம்பி .. “மேடம் ..உங்கள் அப்பாவை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பதாக ....” ஸ்ருதி புன்னகைத்தார் : “ஓ...ஆமாம் ..அவரை உங்களுக்கு இன்னும் நான் அறிமுகப்படுத்தவில்லை அல்லவா..?.....ஓகே ...போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்”..என்று சொன்ன ஸ்ருதி புன்னகையோடு , சற்றுமுன் அவர்களுக்கு டீ கொடுத்த அந்த டீ விற்பவரை அழைத்தார் : “அப்பா ..இங்கே கொஞ்சம் வாங்க !” . திகைத்துப் போனார்கள் அத்தனை நிருபர்களும் ! . ஸ்ருதி அந்த டீ விற்பவரின் அருகில் நின்று கொண்டு , நிருபர்களை நோக்கி பெருமையாக சொன்னார் : “ இவர்தான் என் அப்பா ...பல வருஷங்களாக டீக்கடை நடத்தி வருகிறார் . இதோ .. இந்தக் கோர்ட்டுக்கு எதிரேதான் எங்கள் டீக்கடை இருக்கிறது ... கோர்ட்டுக்கு உள்ளே வருபவர்களுக்கும் என் அப்பாதான் டீ விற்பனை செய்கிறார் .. இவரது கடும் உழைப்பினால்தான் கஷ்டப்பட்டு படித்து , இன்று இதே கோர்ட்டுக்குள் நான் ஜட்ஜ் ஆக இருக்கிறேன் ...!” நிருபர்கள் இன்னும் திகைப்பு மாறாமல் நின்றார்கள் . ஸ்ருதி அவர்களைப் பார்த்து புன்னகையோடு சொன்னார் : “ஓகே .. என் அப்பா மற்றவர்களுக்கு டீ வழங்க வேண்டும் .. நானும் சிலருக்கு தீர்ப்பு வழங்க வேண்டும் .. நான் வரட்டுமா ..?” ஜட்ஜ் ஸ்ருதி கம்பீரமாக கோர்ட்டுக்குள் நடந்து சென்றார் . அந்த தந்தை ஆனந்தக் கண்ணீரோடு அதைப் பார்த்து நின்றார் . . “தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே”
0 notes
comn17 · 8 years ago
Photo
Tumblr media
திருவண்ணாமலைமாவட்ட ஆட்சியர் அரசு பள்ளி மாணவிக்கு அளித்த பாராட்டு..... நேற்று செய்யார் சிப்காட் லோட்டஸ் நிறுவனம் சார்பில் கல்வி துறைக்கு பல நலதிட்டங்கள் மாவட்ட ஆட்சியர் திரு.கந்தசாமி அவர்களது தலைமையில் வழங்கப்பட்டது. மாவட்டத்தில் சிறந்த கல்வி பணி ஆற்றிவரும் முதன்மை கல்வி அலுவலர் திரு.ஜெயக்குமார் அவர்களும் கலந்து கொண்டார். விழாவில் செய்யார் அரசு மகளிர் மேனிலைப் பள்ளி 11ஆம் வகுப்பு மாணவி மோனிஷா 10ஆம் வகுப்பில் 491 மதிப்பெண் பெற்றதை பாராட்டி கல்வி உதவி தொகை மாவட்ட ஆட்சியர் மூலம் மாணவிக்கு வழங்கப்பட்டது. அந்த மாணவி மோனிஷா மாவட்ட ஆட்சியரிடம் " நான் படித்து உங்களை போல மாவட்ட ஆட்சியர் ஆக போகிறேன்" என்றார். உடனே நம் மதிப்புமிகு ஆட்சியர் " வாழ்த்துக்கள் மோனிஷா! என் காரில் என் இருக்கையில் உட்கார்ந்து கொள்" என கூறி யாரும் எதிர்பாராத நிலையில் அந்த மாணவியை சற்று நேரம் ஆட்சியரின் சைரன் பொருத்திய அரசு காரில் தன் இருக்கையில் அமர வைத்து தான் நின்று கொண்டு அந்த மாணவியை புகைப்படம் எடுக்க சொன்னார். பின்னர் அந்த மாணவியிடம், " இந்த புகைப்படத்தை நீ பார்க்கும் போதெல்லாம் மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்ற உத்வேகம் எப்போதும் இருக்கும். நானும் உன்னை போல்தான் அரசு பள்ளியில் படித்துதான் மாவட்ட ஆட்சியராக உயர்ந்தேன்" என்றார். இந்த நிகழ்வு அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. நமது மாவட்ட ஆட்சியர் கல்விக்காக பல பணியாற்றி வருகிறார். அவருடன் இணைந்து நம் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களும் மாவட்ட கல்வி முன்னேற பாடுபட்டு வருகிறார். நம் மாவட்ட ஆட்சியர் அளித்து வரும் ஊக்கத்தின் மூலம் நம் மாவட்டம் இந்த ஆண்டில் மாபெரும் வெற்றி பெறும். மேற்காண் இந்த நிகழ்வு மாணவர்களுக்கு ஊக்கத்தை அளித்தது. மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள் ...... வாழ்த்துக்கள்..... வணக்கங்களுடன் L.பாஸ்கர் மாவட்ட எகஸ்னோரா & மூன் சிட்டி ரோட்டரி சங்கம்.
0 notes
comn17 · 8 years ago
Text
Not Easy to be a Teacher !!!!!
*TEACHER* : John is climbing a tree to pick some mangoes. ( Begin the sentence with Mangoes) *Student* : Mangoes, John is coming to pick you . . 😁😁😁😁😁😁 . *Definitely Not Easy to be a Teacher !!!!!* . *TEACHER* : What do you call mosquitoes in your language? *Student*: We don't call them, they come on their own. . . 😬😬😬😬😬😬 . *TEACHER* : How can we keep our school clean? *Student*: By staying at home. . . 😊😊😊😊😊😊 . *English Grammar class.* Teacher: What's the difference between *"He cleans the plate"* and *"the plate is cleaned by him."* Student: In first sentence *'HE' is not married,* but in second sentence *'He' is married....* . 😬😬😬😬😬😬 .
0 notes
comn17 · 8 years ago
Text
இது தான் கலிகாலமா?
தமிழகத்தின் முதல் அமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம். காமராஜரின் தாயார் உடல்நலம் சரியில்லாமல் இருப்பதாகத் தகவல் வந்தது. உடனே மதுரைக்குச் சென்று அங்கிருந்து நெடுமாறனுடன் காரில் விருதுநகருக்குச் சென்றார் காமராஜர். வீட்டிற்குள் நுழைந்ததும் படுக்கையில் இருந்த காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாள் கண் விழித்துப் பார்த்தார். மகனைப் பார்த்ததும் நெகிழ்ந்து கண்ணீர் விட்டார். அருகில் உட்கார்ந்த காமராஜர் அம்மாவிடமும், சகோதரியிடமும் விசாரித்து விட்டுக் கிளம்பினார். '' அப்போ..நான் வர்றேன்.. உடம்பை நல்லாப் பார்த்துக்க'' கிளம்பிய போது உலர்ந்த குரலில் சிவகாமி அம்மாள் சொன்னார். '' ஒரு வாய் சாப்பிட்டுட்டுப் போ'' ''வேண்டாம்மா'' - என்று முதலில் மறுத்தவர் '' சரி..சரி.. எடுத்து வைங்க''-அடுக்களைக்குள் சென்று தரையில் உட்கார்ந்தார். அவருடைய சகோதரியின் மகள்கள் உணவு பரிமாறினார்கள். அவசரமாய்ச் சாப்பிட்டு விட்டு அம்மாவைப் பார்த்துக் கைகூப்பினார் காமராஜர். '' அப்போ நான் வரட்டுமா?'' சொந்த வீட்டில் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு தாயாரின் இறுதிக்காலத்தில் காமராஜர் சாப்பிட்டதாக இது குறித்து எழுதியிருந்தார் எழுத்தாளர் சாவி. '' மரணத்தின் போது இன்னொருவர் பணம் கொடுக்கிறார். பல்லக்குக் கட்டுகிறவர் இலவசமாகக் கட்டித் தருகிறார். வந்தவர்களுக்கு ஒரு வேளை சோறு போட இடமும் இல்லை; பணமும் இல்லை; பத்து வருஷம் ராஜாங்கம் நடத்தினான் மகன்! பெற்ற தாய் வாழ்ந்த கதை இப்படி!'' - என்று காமராஜரின் தாய் சிவகாமி அம்மாள் மறைந்தபோது எழுதினார் கவிஞர் கண்ணதாசன். விருதுநகரில் காமராஜர் வாழ்ந்த அந்த எளிய வீட்டை- இந்திரா காந்தியிலிருந்து, லால்பகதூர் சாஸ்திரி வரை பலரும் வந்திருக்கிற வீட்டை ப் பிறகு அரசுடமை ஆக்கியிருந்தார்கள். குமுதத்தில் எழுதுவதற்காக 95ல் விருதுநகரில் உள்ள காமராஜரின் வீட்டுக்குப் போயிருந்தேன். அருகில் இன்னொரு வாடகை வீட்டில் காமராஜரின் ��ங்கை நாகம்மாளின் மகளான கமலாதேவி வசிப்பதாகச் சொன்னதும் அங்கு போனேன். மிக எளிய வீடு. காமராஜர் மறைந்த பிறகு பாரத ரத்னா கொடுக்கப்பட்ட போது அதைப் பெற்றுக் கொண்டவர்கள் நாகம்மாள் குடும்பத்தினர் தான். அறுபத்து மூன்று வயதான,காமராஜரின் மருமகளான கமலாதேவி வறுமையில் ஒடுங்கிப் போயிருந்தார். கணவர் இறந்துவிட அவருடைய மகன்கள் தீப்பெட்டி ஆபிஸில் ஐநூறு ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். மிகக் குறைந்த வருமானம் குடும்பத்தைத் தவிக்க வைத்திருந்தது. '' நாங்க ஏழு பேர் இருக்கோம். சாப்பிடவே கஷ்டமா இருக்குப்பா. கஷ்டம் தாங்காம கலெக்டர் காலில் கூட விழுந்து அழுது கூடக் கேட்டுப் பார்த்துட்டேன். எந்த வேலையும் கிடைக்கலைப்பா.. '' - எதிரில் இருந்த நாகம்மாளின் குரல் ஏறி இறங்கியது. பெருமூச்சு விட்டார். '' இப்போ பக்கத்து வீடுகளில் வேலை செய்றேன்.. கூட்டுறேன்.. இந்தா இருக்கு..பாருப்பா ( பக்கத்தில் இருக்கும் காமராஜரின் வீட்டைச் சுட்டிக்காட்டுகிறார்.) எங்க மாமா வீட்டிலே பெருக்கிற வேலையாவது வாங்கிக் கொடுக்கச் சொல்லுப்பா.. உனக்குப் புண்ணியமா இருக்கும்.. அங்கே கூட்டினாலாவது கையில் ஐம்பதோ, நூறோ கூலியாக் கிடைக்குமில்லைப்பா.. நான் அங்கே போய்ப் பெருக்கினா அவமானம்னு சொல்றாங்க.. நம்ம நிலைமை இப்படி இருக்கிறப்போ எங்க மாமா வீட்டைக் கூட்டிப் பெருக்கிறதில என்ன அவமானம் இருக்குப்பா..'' - சொன்னபடி கசிந்து அழுதார் ஒரு முதல்வராக இருந்தவரின் மருமகள். சேலை முந்தானையால் முகத்தைத் துடைத்துக் கொண்டார். '' மாமா இருக்கிற வரை அவருக்கும் சேர்த்துக்கலை.. குடும்பத்துக்கும் சேர்த்துக்கலை..இப்போ பாருப்பா..விதவை பென்ஷனுக்கு மனுப் போடுற நிலைமையிலே இருக்கேன்''- -சொல்லும் போது கைகூப்பின காட்சி முள்ளாய் உறுத்தியது. அடுத்த வாரம் 96, மே மாதத்தில் குமுதத்தில் ''வீட்டுவேலை செய்யும் காமராஜரின் மருமகள்'' என்ற தலைப்பில் என்னுடைய கட்டுரை வெளிவந்தது. வெளிவந்த மறுவாரத்தில் ஆச்சர்யமானதொரு மாற்றம்! முதல்வர் ஜெயலலிதா காமராஜரின் குடும்பத்திற்கு வீடும், வேலை வாய்ப்பும், வங்கியில் 11 லட்சம் ரூபாய் டெபாசிட்டும் பண்ணுவதாக அறிவிப்பு வெளியானது. அந்த்த் தகவலைச் சொல்ல மறுபடியும் விருதுநகரில் உள்ள கமலாதேவி வீட்டுக்குப்போனபோது அந்த அம்மையார் நெருங்கி வந்து கையைப் பிடித்துக் கொண்டார். கண்கள் ததும்பின. கனிந்த பார்வையில் நன்றி சொன்னார் கமலாதேவி அம்மாள்என்று எழுத்தாளர் மணா மணா அவர்கள் எழுதியுள்ளார். இப்படியும் ஒரு மனிதர் தமிழகத்தில் முதல்வராக இருந்துள்ளார். இன்று ஆர்.கே.நகர் ஒரு தொகுதியில் வெற்றி பெற தினகரன் பல நூறு கோடி செலவு செய்கிறார்.எங்கிருந்து வந்தது?எதற்காக செய்கிறார்?இதற்கு முன் என்ன பதவியில் என்ன வேலையில் இருந்தவர்.எப்படி வந்தது இவ்வளவு பணம்? பன்னீர் அவர்கள் டீ கடையில் வாழ்க்கையை தொடங்கியவர் இன்றைய நிலை? தி.மு.க.ஸ்டாலின் அவர்களின் தந்தை எப்படி பட்ட பொருளாதார சூழ்நிலையில் அரசியலுக்கு வந்தவர்.இன்று அவர்களின் கும்பத்தினரின் நிலை? இதை எல்லாம் நாம் ஒவ்வொருவருமே அறிந்துதான் வைத்துள்ளோம்.இருந்தும் நாம் இவர்களைத்தான் தவைர்களாக ஏற்று கொண்டுள்ளோம். இது என்ன மன நிலை? காமராஜரை தோற்க்கடித்து இப்படிப்பட்ட அரசியில் வாதிகளை கொண்டு வந்து கொண்டாடுகிறோம். இது தான் கலிகாலமா?
0 notes
comn17 · 8 years ago
Text
அன்புள்ள சனீசுவரனார்க்கு...
எப்படி இருக்கிறீர்கள் ? நலமாகத்தான் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இன்று நீங்கள் வீடு மாற்றிக்கொண்டு செல்வதாகக் கேள்விப்பட்டோம். புது வீட்டில் பால் காய்ச்சிக் குடியேறுகிறீர்கள்போல. உங்களுடைய புதுமனை புகுவிழாவுக்கு வரும்படி உங்கள் அடியார்களான சோதிடர்கள் எல்லாரையும் அழைத்திருக்கிறார்கள். உங்கள் அடிக்கு அஞ்சுகிறவர்கள் நீங்கள் இருக்குமிடங்களுக்குச் சென்று பயபக்தியோடு வணங்கி நிற்கின்றார்கள். புதுவீட்டில் குடியேறினாலும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களையும் ஒருவழி பண்ணிவிடுவீர்கள் என்று கூறுகிறார்கள். நீங்கள் இருக்குமிடத்திற்கு நான்காம் வீட்டுக்காரரையும் எட்டாம் வீட்டுக்காரரையும் போட்டுத் தாக்கிவிடுவீர்கள் என்று அச்சுறுத்துகிறார்கள். இருக்கும் வீட்டையுமேகூட பெயர்த்துப் போட்டுவிடுவீர்கள் என்றுதான் எல்லாரும் சொல்கிறார்கள். அப்படியெல்லாம் செய்யாதீர்கள். ஏதோ வந்தது வந்துவிட்டீர்கள். வந்த இடத்திற்கு வஞ்சகம் செய்யாமல் வாழ வைக்கப் பாருங்கள். அக்கம் பக்கத்தார் உங்களைக் கண்டாலே ஓடி ஒளிகின்றார்களாம். அப்படியா அவர்களை அச்சுறுத்தி வைப்பது ? பிள்ளைகுட்டிகள் எல்லாம் பயப்படுகின்றன. உங்களுக்கே தெரியும்... இன்றைய நிலவரப்படி ஒரு மனிதன் பிழைத்துக் கிடப்பதே பெரும்பாடு. பிழைப்புக்கொரு வேலை பார்த்து, பிடித்தம்போகக் கிடைப்பதை வீட்டுக்குக் கொண்டு வந்து கொடுத்து, விலைவாசியால் கொண்டாயத்தில் ஏறி நிற்கும் பொருள்களை வாங்கி ஆக்கித் தின்று, பொடுசுகளுக்குப் பள்ளிக் கட்டணம் கட்டி, பெண்டாட்டி முகம் கோணாதபடி கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து வாழ்க்கை என்ற பெயரில் ஏதோ அரையும்குறையுமாய் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறோம். இதில் நீங்களும் வந்து நட்ட நடு வீட்டில் அமர்ந்து கும்மியடித்துவிடாதீர். வலி தாங்க முடியாது. காணாமல் போனவர்களைக்கூடக் கண்டுபிடித்துத் தராத அரசுபோல் ஆளும் ஓர் அரசின்கீழ் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் சிக்கித் தவிக்கிறோம். உங்களிடம் அகப்பட்டுக் கொண்டமைக்காக நீங்களும் இரண்டு மொத்து மொத்தினால் நாங்கள் என்ன கதியாவோம் என்று எண்ணிப் பாரும். எங்களைப் பார்த்தால் பாவமாக இல்லையா ? எங்களைப் பார்த்தால் ”இரண்டு வீக்கு வீக்குவோம்” என்றா உமக்குத் தோன்றுகிறது ? ஏற்கெனவே ஏழெட்டுச் சனிகள் ஏறியிறங்கியதுபோலத்தானே இருக்கிறோம் ? வடிவேலைப்போல “ஔ” என்று அழுதபடிதானே தலைக்குத் துண்டைப் போட்டு உட்கார்ந்திருக்கிறோம் ? இதற்கும் மேலுமா எங்களை போட்டுத் துவட்டுவதற்குத் துணிவீர்கள் ? போதும் போதும்... கொஞ்சம் கருணை காட்டுங்கள். வந்த இடத்தில் வந்தது தெரியாமல் இருந்துவிட்டு, அக்கம் பக்கத்தாரையும் அனுசரித்து, ஏதோ உம்மால் முடிந்த நன்மைகளைச் செய்துவிட்டுப் போவீராக. வழக்கம்போல் ஆட்டிப் படைக்க நினைக்காமல் அமைதி காப்பீராக. இங்ஙனம் சனிப்பெயர்ச்சியால் பாதிப்படையும் இராசிக்காரர்கள் . (ஒப்பம்)
0 notes
comn17 · 8 years ago
Text
பட்டர்ஃபிளை
இன்றைய சிந்தனை 🤔🤔🤔🤔 பட்டர்ஃபிளை என்றவுடன் "லவ்வர்" ஞாபகம் வந்தால் நீ காதலன்... "குக்கர்" ஞாபகம் வந்தால் நீ கணவன்.. *இவ்வளவு தான்யா வாழ்க்கை*😝😝😜
0 notes
comn17 · 8 years ago
Text
தோசை தத்துவம்
👌👌👌👏👍👏👌👌👌 *ஒரு தோசையில் இவ்வளவு தத்துவமா* *தோசை* நாம் அன்றாட உண்ணும் தோசையும் அதன் பின்னால் இருக்கும் ஆன்மிகமும்,ஜோதிடமும்... தோசை செய்ய உபயோகிக்கும் பொருட்களுள் நவ கிரகங்கள் அடக்கம். *அக்னி = சூரியன்* *அரிசி = சந்திரன்* *உளுந்து = ராகு-கேது* *வெந்தயம் = புதன்* *தோசை கல் (இரும்பு) = சனி* *தோசையின் நிறம் = செவ்வாய்* அதை உண்பவர்கள் *குரு (ஆண்)* *சுக்கிரன் (பெண்)* இதன் உருவம் (Galaxy) பிரபஞ்சமே தோசையை Clock vice சுட்டால் தான் வரும், பிரபஞ்சம் சுற்றுவதும் அப்படித்தானே இந்த தோசையை ஒரு ஜோதிட பரிகாரமாக இருந்திருக்க வேண்டும் ஏன் நிச்சயம் இருந்திருக்க வேண்டும் ஆரம்ப காலத்தில் விஷேச நாட்களில் தோசையை தெய்வத்திற்கு படையலாக படைத்தது பின் உண்டுவந்தர்கள் ஏன் இன்றும் பெருமாளுக்கு தோசையை படையலாக படைத்தது பிரசாதமாக கோவில் வழங்குகிறார். அப்போது இருந்த நம் முன்னோர்களுக்கு தோசை பலகார வகையாகத்தான் இருந்தது. பின் நாளில் மக்களுக்கு வசதி வந்த பிறகு அன்றாட உணவு வகையாக மாறிவிட்டது. தோசை இந்தச் சொல் எப்படி வந்தது என்பதற்கு மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், ( கல்லில் ) தோய்த்துச் செய்வது என்னும் பொருளில் *தோய் + செய் என்னும் சொற்கள் இணைந்து உருவான இச்சொல்,* மக்கள் வழக்கில் தோசை என்று ஆனது என்ற குறிப்பு உண்டு. 🍪🍳 *படித்தேன் பகிர்ந்தேன்* 👌👌 👌👍👏👍👌👌👌
0 notes