Don't wanna be here? Send us removal request.
Text
GOD FORSAKEN LAND – KASHMIR
GOD FORSAKEN LAND – KASHMIR
Kashmir – the abode of snow, serenity and often spirituality in the Indian Nation was admired for its beauty and geographical significance amidst the chaos and the conflict lasting for several decades. The Subcontinent countries – India and Pakistan are fighting over Kashmir as an integral part of their nation and in upholding their supremacy in the South East Asia. The nuclear powers are…
View On WordPress
0 notes
Photo

இந்தியா நிறைய விஷயங்களை சரியாக கையாளவில்லை – அரசியல் துறைத் தலைவர் பேராசிரியர் இராமு மணிவண்ணன் நேர்காணல் சென்னைப் பல்கலைக்கழகத் துறைகளின் தலைவர்களை நேர்காணல் செய்யும் பணி நிமித்தமாக பேரா. மணிவண்ணன் அவர்களை சந்தித்தோம். துறை அலுவல்கள், ஆய்வு மாணவர்களுடனான உரையாடல்களுக்கு மத்தியிலும் அமைதி புன் சிரிப்புடன் வரவேற்று விவரங்களை கேட்டறிந்துவிட்டு பத்து நிமிடங்களில் வருவதாக கூறிவிட்டு சென்றார். கேள்விகளுடனும் பதிவு செய்வதற்கான கருவிகளுடனும் தயார் நிலையில் இருந்தோம். பேராசிரியர் மணிவண்ணன் சர்வதேச உறவுகள், தெற்காசியா சார்ந்த ஆய்வுகளிலும் அண்டை நாடுகளான மியான்மர், இலங்கை போன்ற நாடுகள் சார்ந்து பணி செய்தவர். இலங்கை போர் குற்றங்களை பதிவு செய்து அது இனப்படுகொலை என்பதை தனது புத்தகத்தின் (Sri Lanka: Hiding behind the Elephant) மூலம் நிறுவியவர். அவரிடம் சமீபத்திய மியான்மர் ரோஹிங்யா இனப்படுகொலை, அதில் இந்தியாவின் செயல்பாடுகள், இலங்கை உள்நாட்டு போருக்கு பிறகான சூழல்கள், தமிழக அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் பற்றி கண்ட நேர்காணலை பின்வருமாறு காணலாம். உங்களுடைய ஆரம்ப கால வாழ்க்கையைப் பற்றி? எனக்கு சொந்த ஊர் வேலூர். விவசாயத்தை பின்னனியாக கொண்ட குடும்பம். எனது தந்தையின் குடும்பம் இந்திய தேசிய போராட்டத்திலும், மலேசியாவிலிருந்து செயல்பட்ட இந்திய தேசிய இரானுவத்திலும் இணைந்து செயல்பட்டனர். ஆயுதம் ஏந்திய போராட்டம், அஹிம்சை வழி போராட்டம் என இரண்டு வகையான சுதந்திர போராட்டத்திலும் தொடர்பு கொண்ட அரசியல் பின்னனியுடையது. அரசுப் பள்ளிகளில் தான் எனது பள்ளிக் கல்வி இருந்தது. பின்னர் சென்னைக் கிறித்தவக் கல்லூரியிலும், ஆய்விற்காக டெல்லி பல்கலைக்கழகத்திலும் உயர்கல்வி முடித்து அங்கேயே விரிவுரையாளராகவும் பணி சார்ந்த வாழ்க்கை தொடங்கியது. உங்களுடைய சமூகம் சார்ந்த் பணிகள், மனித உரிமை செயல்பாடுகளின் ஆரம்பமாக அமைந்த்து எது? எனது சமூக பணிகளின் துவக்கம் என நான் பார்ப்பது, பள்ளிப் பருவத்திலே நான் பார்த்து உணர்ந்த ஏழை, பணக்காரன் என சமூகத்தில் இருந்த வேறுபாடுகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் அத்தகைய சமூக சூழலை நேரடியாக பார்ப்பதற்கான வாய்ப்புகளும் கிடைத்தன. மக்களின�� வறுமை, வேலையின்மை, ஏழை, தொழிலாளர்கள் என இருந்த பிளவுகளை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன். இந்த அமைப்பின் மீதான வருத்தம் மற்றும் அதற்கான மாறுதல்களுக்கு உழைக்கும் சமூக நீதி, மனித உரிமை செயல்பாடுகள் என அன்றாடம் வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களையும், செயல்பாட்டாளர்களையும் சந்தித்தது தான் இன்றைக்கு நான் ஒரு மனித உரிமை செயற்பாட்டாளனாக இருக்க காரணம். மியான்மரில் ரோஹிஞ்யாக்கள் இனப்படுகொலையும் அதற்கு ஆங் சாங் சூகி எடுத்திருக்கக்கூடிய நிலைப்பாடுகளையும் நாம் நியாயப்படுத்த முடியுமா? நிச்சயமாக நியாயப்படுத்த முடியாது. ஒரு மனித உரிமை செயற்பாட்டாளனாக மியான்மரின் ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் எனக்கு இருபது ஆண்டுகள் ஆளமான தொடர்பு உண்டு. அதற்கான போராட்டங்களில் பல்வேறு தளங்களில் நான் பங்கு பெற்றிருக்கிறேன். பர்மாவில் இருந்து அரசியலுக்காக இந்தியாவில் தஞ்சம் அடைந்த (National League for Democracy சார்ந்த) செயல்பாட்டாளர்களுடன் எனக்கு ஒரு நல்ல உறவு உண்டு. அதன் தலைவர் தான் ஆங் சாங் சூகி. அவர் மீது நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தது. இரானுவ ஆட்சியிலிருந்து விலகி புதிய ஆட்சியில் ஜனநாயகத்தை காப்பார் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் ஒரு மிகப் பெரிய ஏமாற்றமும் வருத்தமும் என்னவென்றால் அவர் பெரும்பான்மை அரசியல் சார்ந்த நிலைப்பாட்டில் தான் இருந்து வருகிறார். அவருடைய கருத்துகளின் அவர் பேசியதும் பேச மறுப்பதும் இரண்டுமே மிகப் பெரிய ஏமாற்றம் தான். அவருக்கு உலக அரங்கில் மக்களின் மத்தியில் இருந்த எதிர்ப்பார்ப்புகளுக்கும் அவரின் மீதான நம்பிக்கைக்கும், அவரின் செயல்பாடுகளால் இது ஒரு மிகப்பெரிய அவலம் தான். ரோஹிஞ்யாக்களின் பிரச்சனைகளை இந்தியா எவ்வாறு கையாண்டதாக நினைக்கிறீர்கள்? இந்தியா நிறைய விஷயங்களை சரியாக கையாளவில்லை. மியான்மரை பொருத்தவரை குறிப்பாக அங்கே இரானுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற தேசிய ஜனநாயக லீக் போராட்டத்திற்கு கூட இந்தியா தன்னுடைய முழுமையான ஆதரவை அளித்தது இல்லை. ஒரு அரசாங்கம் இன்னொரு அரசாங்கம் சார்ந்ததாகவே அவர்களுடைய அனுகுமுறை இருந்ததே தவிர அது என்றைக்குமே அரசாங்கம் மக்கள் சார்ந்ததாக இல்லை. 1960 களில் பர்மாவிலிருந்து இந்தியர்கள் வெளியேற்றப்பட்ட போதும் கூட இந்தியா அவர்களின் வெளியேறுவதை தடுக்கவோ அவர்களின் உரிமைகளை காக்கவோ. பெரும் முனைப்புகளை எடுத்தது இல்லை. பின்னர் கடந்த 22 ஆண்டுகள் ஜனநாயக போராட்டத்திலுமே இந்தியா இரானுவ ஆட்சிக்கு ஆதரவாகத் தான் செயல்பட்டு வந்தது. தற்போதைய ஆட்சி மாற்றத்தில் முழுவதுமாக இரானுவத்தின் கட்டுப்பாடு தளரவில்லை என்றாலும் ஜனநாயகத்தின் முகவரியாக பார்க்கப்படக் கூடிய ஆங் சாங் சூகியின் ஆட்சியில் இந்தியாவைப் போன்ற பன்முக கலாச்சாரம், அரசியல் கட்டமைப்பு கொண்ட பர்மாவிலுமே, சிறுபான்மை மக்களான ரோஹிஞ்யாக்களின் பிரச்சனைகளயும், மனித உரிமை மீறல்களையும் பெரும் இனக் கலவரத்திற்கு உட்படுத்தப்பட்டு அதற்கான வெளிப்பாடுகளையும் நாம் பார்க்கின்ற போதும் கூட அதைப் பற்றி பேச மறுக்கின்ற நிலையில் அவர்களுக்கு கிடைக்கப்பட வேண்டிய அடிப்படை மனித உரிமை அங்கிகாரங்களை, அவர்கள் இந்தியாவிற்கு வந்து தங்குவதையோ அல்லது அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிபடுத்துவது போன்ற பொறுப்புகளை கூட இந்தியா செய்ய மறுப்பது மிகவும் மோசமான ஒரு செயல்பாடு. திபெத், இலங்கை, பர்மா என பல அண்டை நாடுகளிலிருந்தும் கூட அகதிகள் பல ஆண்டுகளாக தங்கியிருக்கின்ற வேளையிலே மத்திய அமைச்சர் திரு. கிரன் ரிஜ்ஜு அவர்கள் பதற்றமான சூழல் மியான்மரில் நிலவிக் கொண்டிருக்கும் போது ரோஹிஞ்யா அகதிகளை அவர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பி விடுவோம் எனக் கூறுவதை எவ்வாறு பார்ப்பது? சந்தர்ப்பவாதம் தான். மியான்மர் அரசாங்கத்தோட ஆதரவாக நீங்க இருக்க வேண்டுமென்றால் நீங்கள் எப்பவுமே உண்மையைப் பேசக் கூடாது. குறிப்பாக இரானுவ ஆட்சிக்கு எதிராக ஆங் சாங் சூகி போராடிய போது அவரைப் பற்றிப் பேசவோ அல்லது அவருக்கு ஆதரவாக தீவிரமான முனைப்புகளை எடுக்கவோ இல்லை. இப்போது ஆங் சாங் சூகி ஆட்சி அதிகாரத்தில் இருக்கிற போது ரோஹிஞ்யா மக்களுக்கு இந்த பிரச்சனைகள் நடைபெறுகிற போதும் கூட இந்திய அரசு பேச மறுக்கிறது. தொடர்ந்து அரசாங்கம் சார்ந்த தளத்திலே இயங்க நினைக்கும் இந்தியா மக்கள் சார்ந்த தளத்தில் இயங்க மறுக்கிறது. Idealist Politics என இன்று இந்த பிரச்சனைகளை உலகம் பேச மறுப்பதைப் போல அன்றும் பேச மறுத்திருந்திருந்தால் இன்று ஆங் சாங் சூகி இந்த நிலைக்கே வந்திருக்கவே முடியாது. மனித உரிமைகள் மீறல்களை தடுக்க முடியாவிட்டாலும் கூட இப்படி ஒரு சூழலில் அவர்களை தங்கள் நாட்டிற்கே திருப்பு அனுப்புவது அவர்களை நாடு கடத்துவது போன்ற செயல்களின் மூலம் இந்தியா சரியான முன்னெடுப்புகளை எடுக்காதது, ஒரு பக்கம் மனித உரிமை மீறல்களை பதிவு செய்யாத்து ஒரு பக்கம் இதற்கு இடையில் பாதிக்கப்பட்ட அந்த ரோஹிஞ்யா இன மக்களுக்கு மேலும் இன்னல்களை விளைவிப்பது மனித தன்மைக்கு ஒத்த செயல் அல்ல. இந்தியாவின் இத்தகைய செயல்பாடுகளுக்கு அவர்கள் இஸ்லாமியர்கள் என்பது தான் காரணமாக இருக்குமா? இஸ்லாமியர்கள் என்பதால் தான் என்று முதன்மையான காரணமாக பார்க்கமுடியாது. இருக்கின்ற மூன்று முக்கிய காரணங்களில் அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அது தான் பிரதானமான காரணமாக இருக்க முடியாது. ஏனென்றால் ஆங் சாங் சூகி இதே போன்ற ஒரு நிலையில் வீட்டுச் சிறையில் இருந்த போதும் கூட இந்தியா அவருக்கு ஆதரவாக இல்லை. அவர் ஒரு பௌத்தர் தானே இஸ்லாமியர் கிடையாதே. உலக நாடுகளும் கூட இந்த பிரச்சனைகளை தீவிரமாக அனுகும் போது, அரசு சார்ந்த நிலைப்பாட்டில் தான் இந்தியா இதில் செயல்படுகிறது. இஸ்லாம் என்ற அடையாளத்தை இந்த அளவில் முதன்மையாக கருத முடியாது ஏனெனில் ஆங் சாங் சூகிக்கும் இது பொருந்தும். அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளும் ஐ.நா வும் கூட ரோஹிஞ்யா பிரச்சனையை இனப் படுகொலை என்றே குறிப்பிடுகிறார்கள். ஆனால் மியான்மர் அரசாங்கம் அவர்களின் உரிமைகளை மீறுவது அவர்கள் இஸ்லாமியர்கள் என்கிற காரணத்தால் தான். இந்த சூழலில் அவர்களுக்கு எதிராக மட்டுமல்ல மற்ற இன்ங்களுக்கு எதிராகவும் கூட மியான்மர் ஒடுக்குமுறைகளை நடத்திவருகிறது. குறிப்பாக கச்சின் என்கிற ஆயுத குழுக்களும் உண்டு மற்ற மொழி, மதம் சார்ந்த அமைப்புகளும் கூட அதன் எல்லைப்பகுதிகளில் இருக்கின்றன. எனவே இந்தியாவை பொருத்தவரையில் அதனை முதன்மையான காரணமாக கருத முடியாது காரணம் இதற்கு முந்தைய அரசாங்களும் கூட இதே நிலைப்பாட்டில் தான் இருந்து வந்தன. இலங்கையில் 2009 ஆயுத போராட்டத்திற்கு பிறகான சூழலில் அரசிற்கும் தமிழர்களுக்குமான பேச்சுவார்த்தைக்கான ஒரு வெளி விடுதலைப் புலிகள் இல்லாத சூழலில் அமையவில்லை. இன்றைய சூழலில் அங்கு இருக்கக்கூடிய அரசியல் அமைப்புகள் ஈழத் தமிழர்களின் பிரச்சனைகளை எவ்வாறு அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்? ஈழத் தமிழர்கள் பிரச்சனையை இரண்டு விதமாக பார்க்கலாம். ஒன்று சமஷ்டி வரையறைக்குள்ள உள்நாட்டு பிரச்சனையாக இதைப் பார்க்க வேண்டுமென்றால் அரசிலைமப்பு அளவிலும், அதிகாரப் பகிர்விலும் நிர்வாகம், கல்வி, வேலைவாய்ப்பு என்கிற சமூக பொருளாதார அளவில் அரசியலமைப்பு ரீதியாகவும், சட்டமாகும் கொண்டு வரப்பட வேண்டும். ஆனால் அதற்கான ஆயத்தங்கள் இது நாள் வரையில் நடைபெறவில்லை. இது ஒரு உள்நாட்டு பிரச்சனை கிடையாது, இது ஒரு இனப் பிரச்சனை. இதை ஒரு சர்வதேச பிரச்சனையாக பொது வாக்கெடுப்பு, சுய நிர்ணயம் என்கிற தளத்தில் பேசக் காரணம் உள்நாட்டு பிரச்சனையாக இது நாள் வரையில் தீர்வு எட்டப்படாததால் தான். சிங்களர்களுக்கும், தமிழர்களுக்கும் சமமான உரிமைகள் என்றிருக்கவில்லை. அரசியலமைப்பு சட்ட்த்திலே இதற்கான தீர்வுகளை காண முற்படாததால் உள்நாட்டு பிரச்சனை உலக பிரச்சனையாக மாறுகிறது. இது போன்றதொறு சூழல் இந்தியா உட்பட அனைத்து உலக நாடுகளுக்கும் பொருந்தும். பன்னாட்டு தளத்தில் இது பேசப்படுவதற்கான காரணம் மிகப் பெரிய ஒரு போரை தமிழர்களும், சிங்களர்களும் சந்தித்தாலும் இதில் பெரும் அளவு பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள். 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் போரினால் உயிரிழந்துள்ளார்கள், 80,000 க்கும் அதிகமான விதவைகள் உள்ளார்கள், 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் திறந்த வெளி சிறையில் வைக்கப்பட்டிருந்தனர். ஒரு உள்நாட்டு போர் என்றால் இந்த அளவிற்கான உயிர்ப்பலி ��ருந்திருக்காது. தமிழர்களை தங்கள் மக்கள் என்று சொல்கிற நாடு இது போன்ற ஒரு இன அழிப்பில் ஏன் ஈடுபட வேண்டும். இது ஒரு தேசிய இனப் பிரச்சனை. இதற்கு ஒரு தேசியத் தீர்வு காணப்பட வேண்டும். அதற்கான சுய நிர்ணயம், பொது வாக்கெடுப்பு ஈழம் கொடுத்து விட வேண்டும் என்றில்லை. அதை மக்கள் தீர்மானிக்கட்டும். ஆனால் நடந்த போருக்கும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும். இவ்வளவு மோசமான ஒரு போரில் பாலியல் துன்பங்கள், மனித உரிமை மீறல்கள் என சந்தித்த பிறகும் எந்த ஒரு நியாயமும் இல்லை என்றால் இது ஒரு உள்நாட்டு பிரச்சனையாக இருக்க முடியாது. இதை ஒரு தேசிய இனப்பிரச்ச்னையாக அனுகினால் தான் தீர்வு காண முடியும். 2009 பிறகான 8 வருட காலத்தில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மாவீரன் எழுச்சி நாள் பெருமளவு இலங்கையில் கொண்டாடப்படுவது எதைக் குறிப்பிடுகிறது? எதை மூடி மறைத்தாலும் மக்களுடைய மண்ணின் உரிமையை மறுக்கவும் முடியாது. மூடி மறைக்கவும் முடியாது. இதுவும் அதைத்தான் காட்டுகிறது. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு மைத்ரிபால சிரிசேன அரசு அரசியலமைப்பு சட்ட்த்தில் மாற்றம் கொண்டு வருவதாக சொன்னார். ஆனால் பெரும்பான்மை கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தற்போது சுயாட்சி உரிமைகள் வழங்கப்பட மாட்டாது, பௌத்தத்திற்கும் சிங்கள த்திற்கும் தான் முன்னுரிமை அளிக்கப்படும் என்று பழைய ஆட்சியாளர்களின் கருத்தையே சொல்வதை எப்படி பார்ப்பது? சிங்களவர்களுக்கு இரண்டு முகம் ஒன்று தேர்தல் முகம். தேர்தல் காலத்தில் தமிழர்களுக்கு உரிமைகள் கொடுப்போம், சுய நிர்ணயம் வழங்குவோம் என்று பேசுவது. தேர்தல் முடிந்த பிறகு தன்னுடைய சிங்கள பேரினவாதத்தின் அடிப்படையில் தான் அவர்களின் ஆட்சி செயல்படும். பிறகு உலக நாடுகளுக்காக அரசியல் சாசன மாற்றம், அரசியல் சீர்திருத்தம், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வீடுகள் என இவையெல்லாம் உலக நாடுகளுக்கான ஒரு ஏமாற்று வித்தைத் தான். அடிப்படையில் அங்கு தொடர்ந்து சிங்களக் குடியேற்றம் நடந்து வருகிறது. தமிழர்களுக்காக ஒதுக்கப்படும் வீடுகளையும் பெரும்பாலும் சிங்கள இரானுவத்தினருக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் தான் கொடுக்கிறார்கள். அதுபோல கிழக்கிலும் இந்த குடியேற்றங்கள் நடக்கின்றன. சமஷ்டியைப் (தமிழர்களுக்கான உரிமை, சுய நிர்ணயம்) பற்றி பேசுபவர்கள் இது போன்ற குடியேற்றங்களை ஏற்படுத்த தேவையில்லையே. இது பௌத்தமும் சிங்கள பேரினவாதமும் அந்த நிலப்பரப்பை முழுமையாக கையாள வேண்டும் என்பது தான். தமிழர்களுக்கேன பூர்வீக மரபு சார் நிலங்கள் வடக்கும். தெற்கும் இருக்கும் போது அதன் அடிப்படையில் தான் அரசியலும் நிர்ணயிக்கப்பட வேண்டும். இந்தியப் பல்கலைக்கழகங்களில் வளர்ந்து வரும் ஒரு சகிப்பின்மை, ஜனநாயக ரீதியிலான செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டைகள் என்பதை எவ்வாறு பார்க்கலாம். இது இந்த ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அதிகம் ஆகியிருக்கிறதா? முன்பிருந்தே பல்கலைக்கழகங்களில் அரசியல், சமூக செயல்பாடுகளுக்கும் அரசுக்கும் முரண்பாடுகள் இருப்பது உண்மை தான். ஆனால் இந்த அரசினுடைய அடிப்படை சித்தாந்தமும், அதனுடைய தன்மையும் தான் இந்த முரண்பாடுகளை பெருமளவில் வளர்த்தது. இன்றைய இளைஞர்கள் அரசியல், சமூக செயல்பாடுகளிலிருந்து விலகி நிற்பதாக ஒரு பார்வை முன்வைக்கப்படுகிறதே அதை எப்படி பார்க்கிறீர்கள்? தமிழகத்தை பொறுத்த வரையில் அது மாறிவிட்டது. இன்றைய இளைஞர்கள் மாணவர்களை 2009ல் நடந்த ஈழப் போரும், இனப்படுகொலையும் அவர்களை சமூக தளத்திற்கு அழைத்து வந்துவிட்டது. அவர்கள் இன்றைக்கு சமூக தளத்தில் ஈடுபடவில்லை என்றால் தங்களை கட்டாயப்படுத்திக் கொண்டு விலகி நிற்கிறார்களே தவிர அவர்களை அதில் செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். இன்றைய தமிழகத்தின் அரசியல் நிலையை எவ்வாறு பார்க்கிறீர்கள்? தமிழகத்தில் இதைவிட மோசமான ஒரு அரசு இருந்தாலும் ஒன்று தான் இல்லை என்றாலும் ஒன்று தான். ஆனால் இதில் இருந்த கிடைத்த ஒரு பெரிய அரசியல் படிப்பினையாக நான் பார்ப்பது நமக்கெல்லாம் ஒரு அரசு இல்லாமல் செயல்பட முடியாது என்று பள்ளிகளிலும் அரசியல் கல்விகளும் கற்பிக்கப்பட்டு வந்தது. ஆனால் ஒரு அரசாங்கமே இல்லாமல், அரசியல் தலைமைகளே இல்லாமல் மக்கள் தங்களுக்கான தேவைகளை பார்த்துக் கொள்கிற ஒரு சூழல் உருவாகும். இது இனி வரும் அரசியல் தலைவர்களுக்கு ஒரு அரசு இருந்தால் என்ன வித்தியாசம், அரசு இல்லையென்றால் என்ன வித்தியாசம் என்பதை சொல்லக் கூடிய மாற்றம் வரும். தமிழகத்திலும் மத்தியிலிமே இந்த இரு துருவ அரசியலைத் தாண்டி மூன்றாவதாக ஒரு மாற்று வருவதற்கான சூழல் இந்த அரசியல் அமைப்புமுறையில் இருக்கிறதா? நிச்சயமாக வரவேண்டும் என்று மக்கள் தளத்திலுமே பலரும் வேலை செய்கிறார்கள். ஆனால் அதற்கு தடையாக இருப்பது மக்கள் கிடையாது. தமிழக மக்கள் சினிமா மோகம், சினிமா பைத்தியம் என்றெல்லாம் சொல்லப்படுவது பொய். இந்த சினிமாக்காரர்களை முன்னிறுத்துவதே இந்த அரசியல் தலைவர்கள் தான். பாரதிய ஜனதா சித்தாந்தம் சார்ந்த அரசியல் தானே பேசுகிறார்கள் அவர்கள் ஏன் சினிமாக்கார்ர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டும். அவர்கள் தான் கங்கை அமரணை கொண்டு வருகிறார்கள். அவர்கள் தான் ரஜினிகாந்தை இங்கிருந்து டெல்லி சென்றாலும் அங்கிருந்து இங்கு வந்தாலும் சென்று சந்திக்கிறார்கள். தமிழகத்தில் வேறு யாருமே இல்லையா? பத்திரிக்கைகளுக்கும் இது ஒரு வியாபாரம். எத்தனையோ செயற்பாட்டாளர்கள் பொது விஷயங்களுக்காக எவ்வளவோ இழந்து வேளை செய்கிறார்கள் சசி பெருமாள் போன்று உயிரையும் இழந்து இருக்கிறார்கள். அவர்கள் செய்த பணிகளை அவர்கள் மறைந்த பிறகு தான் பேசுகிறோம். சினிமாக்காரர்களுக்கே அவர்கள் அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். இது மக்களை முட்டாளகவே வைத்திருக்க வேண்டும் என்ற அரசியல் வாதிகள், அரசியல் இயக்கங்கள் கூடவே பத்திரிக்கைகளும் சேர்ந்து செய்கின்றன செயல் தான். இவர்களுக்கு வியாபாரத்தை மிஞ்சியது தான் எல்லாம் விழிப்புணர்வு எல்லாம் மூன்றாம் பட்சம் தான். அரைமணி நேரத்திற்கும் மேலாக நீண்ட நேர்காணல் போதிய நேரமின்மையால் அத்துடன் முடிந்தது. கேட்கப்படாத கேள்விகளும் பல இருக்கின்றன. அடுத்த ஒரு வாய்ப்பில் அது மேலும் தொடரும். மத்திய ஆசியாவில் நடைபெற்ற குர்திஸ்தான் வாக்கெடுப்பு, ஐரோப்பாவின் கடலோனியா வாக்கெடுப்பு பல்வேறு தேசிய இனங்களின் எழுச்சி, காஷ்மீரின் எதிர்காலம் என அடுத்த நேர்காணளுக்கு வாய்ப்பிருந்தால் இது தொடரும். நன்றி
0 notes
Text
பாலஸ்தீன் - இஸ்ரேல் பிரச்சனை துரோகத்தின் வரலாறு - 8
பாலஸ்தீன் – இஸ்ரேல் பிரச்சனை துரோகத்தின் வரலாறு – 8
அமெரிக்காவின் இஸ்ரேல் ஆதரவும் உதவிகளும்:
சிறிய தேசமான இஸ்ரேலை மத்திய கிழக்கின் வலிமை மிக்க சக்தியாக மாற்றியதில் அமெரிக்காவிற்கு பெரும்பங்கு இருக்கிறது. இஸ்ரேல் உருவாக்கத்தில் பிரிட்டன் உதவியதை விடவும் அதனை ஒரு இரானுவ வளமிக்க நாடாக மாற்ற அமெரிக்கா பெரும் உதவிகளை செய்தது. அதற்காக ஜியோனிஸ்டுகள் அமெரிக்காவுடன் பலமான கூட்டனியையும் ஏற்படுத்திக் கொண்டனர். அமெரிக்கா வெளி நாடுகளுக்கு…
View On WordPress
0 notes
Text
பாலஸ்தீன் - இஸ்ரேல் பிரச்சனை துரோகத்தின் வரலாறு - 7
பாலஸ்தீன் – இஸ்ரேல் பிரச்சனை துரோகத்தின் வரலாறு – 7
ஹமாஸ் வெற்றி – மக்கள் செல்வாக்கு:
தீவிரவாத குழுவாக அறியப்பட்ட ஹமாஸ் இயக்கம் தொர்ச்சியாக இஸ்ரேலுக்கு எதிராக சமரசமின்றி போராடி வந்தது. முதலாம் மற்றும் இரண்டாம் பாலஸ்தீன மக்கள் எழுச்சியில் ஹமாஸ் பெரும் பங்காற்றியது. அதன் நீட்சியாக 2006 நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஹமாஸ் இயக்கம் 132 இடங்களில் 76 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. இஸ்ரேலை ஆதரிக்காத இயக்கம்…
View On WordPress
0 notes
Text
பாலஸ்த���ன் - இஸ்ரேல் பிரச்சனை துரோகத்தின் வரலாறு - 6
பாலஸ்தீன் – இஸ்ரேல் பிரச்சனை துரோகத்தின் வரலாறு – 6
ஹமாஸ் தோற்றம்:
பாலஸ்தீனத்தின் விடுதலைக்காக பல்வேறு அமைப்புகள் போராடி வந்தன. அவ்வாறு 1987 ஆம் எகிப்தின் முஸ்லிம் சகோதர அமைப்பின் தாக்கத்தினால் ஹமாஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது. காஸா பகுதி எகிப்தின் கட்டுப்பாட்டில் இருந்தபோது அந்த பகுதியில் முஸ்லிம் சகோதர அமைப்பு பரவலாக பரவியிருந்தது, பின்னர் மேற்குக் கரையிலும் கிளைகள் கொண்டு செயல்பட தொடங்கியது. அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தான் ஹமாஸ்…
View On WordPress
0 notes
Text
பாலஸ்தீன் - இஸ்ரேல் பிரச்சனை துரோகத்தின் வரலாறு - 5
பாலஸ்தீன் – இஸ்ரேல் பிரச்சனை துரோகத்தின் வரலாறு – 5
அல்��படா – பாலஸ்தீனிய விடுதலை இயக்கம்: (யாசர் அராஃபட்)
இன அழிப்பில் வெளியேற்றப்பட்ட அகதிகளின் குழந்தைகள் அகதிகள் முகாம்களில் படித்து வளர்ந்தனர். 1970 களில் புதிய இளைஞர் தலைமுறை உருவாகியிருந்தது விடுதலைக்கான வேட்க்கை அவர்களிடத்தில் இருந்து கொண்டே இருந்தன. அதன் நீட்சியாக சிறு சிறு போராட்டக்குழுக்கள் அங்கும் இங்குமாக தோன்ற ஆரம்பித்தன. அவ்வாறு 1957 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முதல் போராட்டக்குழு…
View On WordPress
0 notes
Text
பாலஸ்தீன் - இஸ்ரேல் பிரச்சனை துரோகத்தின் வரலாறு - 4
பாலஸ்தீன் – இஸ்ரேல் பிரச்சனை துரோகத்தின் வரலாறு – 4
1948 அரேபிய இஸ்ரேல் போர்:
ஐ.நா வின் தீர்மானத்தை அரபு நாடுகள் ஏற்றுக் கொள்ளவில்லை. அரேபியர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டதாக அவர்கள் கருதினர். அதனால் இஸ்ரேலின் சுதந்திர பிரகனத்திற்கு எதிராக எகிப்து, ஜோர்டான், லெபனான், சிரியா, இராக் ஆகிய ஐந்து நாடுகளும் 1948 ஆம் ஆண்டு மே14ந் தேதியன்று போர் பிரகடனம் செய்தனர். போரிட்ட நாடுகளுக்கு பல்வேறு நோக்கங்கள் இருந்தாலும் இஸ்ரேலை எதிர்ப்பதே பொதுவான நோக்கமாக…
View On WordPress
0 notes
Text
பாலஸ்தீன் - இஸ்ரேல் பிரச்சனை துரோகத்தின் வரலாறு - 4
பாலஸ்தீன் – இஸ்ரேல் பிரச்சனை துரோகத்தின் வரலாறு – 4
1948 அரேபிய இஸ்ரேல் போர்:
ஐ.நா வின் தீர்மானத்தை அரபு நாடுகள் ஏற்றுக் கொள்ளவில்லை. அரேபியர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டதாக அவர்கள் கருதினர். அதனால் இஸ்ரேலின் சுதந்திர பிரகனத்திற்கு எதிராக எகிப்து, ஜோர்டான், லெபனான், சிரியா, இராக் ஆகிய ஐந்து நாடுகளும் 1948 ஆம் ஆண்டு மே14ந் தேதியன்று போர் பிரகடனம் செய்தனர். போரிட்ட நாடுகளுக்கு பல்வேறு நோக்கங்கள் இருந்தாலும் இஸ்ரேலை எதிர்ப்பதே பொதுவான நோக்கமாக…
View On WordPress
0 notes
Text
பாலஸ்தீன் - இஸ்ரேல் பிரச்சனையின் துரோகத்தின் வரலாறு - 3
பாலஸ்தீன் – இஸ்ரேல் பிரச்சனையின் துரோகத்தின் வரலாறு – 3
ஐ.நா தலையீடு – (இஸ்ரேல் – பாலஸ்தீனம் பிளவு):
ஐ.நா சபையில் பாலஸ்தீன விவகாரம் எடுத்துச் செல்லப்படுவதற்கு முன்னதாகவே அமேரிக்காவால் அமைக்கப்பட்ட ஆங்கிலோ – அமேரிக்கன் குழு பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரிக்கும் யோசனையை 1946 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியிட்டது.
பிரிட்டன் இந்த விவகாரத்தை 1947 ஆம் ஆண்டு ஐ.நா சபைக்கு எடுத்துச் சென்றது. இதற்காக சிறப்பு குழு ஒன்றை அமைத்து ஐ.நா சபை விவாதித்தது. பல கட்ட…
View On WordPress
0 notes
Text
பால்ஃபர் தீர்மானம்: ( நவம்பர் - 2 நூறு ஆண்டுகள் நிறைவுற்றது): - 2
பால்ஃபர் தீர்மானம்: ( நவம்பர் – 2 நூறு ஆண்டுகள் நிறைவுற்றது): – 2
ONE NATION SOLEMNLY PROMISED TO A SECOND NATION, THE COUNTRY OF A THIRD”, Is how a famous writer once quoted about the Balfour Declaration.
“ஒரு நாடு, அந்நிய நிலத்தில் புதிய தேசம் ஒன்றை உருவாக்கி தருவதாக மற்றுமொரு நாட்டிற்கு உறுதி அளித்த்து” என புகழ்பெற்ற எழுத்தாளர் ஒருவர் பால்ஃபர் தீர்மானத்தை குறிப்பிடுவார். பிரிட்டன் தனக்கு துளியும் சம்பந்தமில்லாமல் ஆக்கிரமித்து…
View On WordPress
0 notes
Text
பால்ஃபர் தீர்மானம்: ( நவம்பர் - 2 நூறு ஆண்டுகள் நிறைவுற்றது): - 2
பால்ஃபர் தீர்மானம்: ( நவம்பர் – 2 நூறு ஆண்டுகள் நிறைவுற்றது): – 2
ONE NATION SOLEMNLY PROMISED TO A SECOND NATION, THE COUNTRY OF A THIRD”, Is how a famous writer once quoted about the Balfour Declaration.
“ஒரு நாடு, அந்நிய நிலத்தில் புதிய தேசம் ஒன்றை உருவாக்கி தருவதாக மற்றுமொரு நாட்டிற்கு உறுதி அளித்த்து” என புகழ்பெற்ற எழுத்தாளர் ஒருவர் பால்ஃபர் தீர்மானத்தை குறிப்பிடுவார். பிரிட்டன் தனக்கு துளியும் சம்பந்தமில்லாமல் ஆக்கிரமித்து…
View On WordPress
0 notes
Text
பாலஸ்தீன் - இஸ்ரேல் பிரச்சனையின் துரோகத்தின் வரலாறு
பாலஸ்தீன் – இஸ்ரேல் பிரச்சனையின் துரோகத்தின் வரலாறு
ஒரு நிலத்தில் வந்தேறியவர்கள் அங்கு வாழ்ந்த மக்களை சிறுபான்மை ஆக்கி அடையாளம் மறுத்து உள்நாட்டு அகதிகள் ஆக்கும் நிகழ்வுகள் உலக வரலாற்றில் தொடர்ச்சியாக நடக்கின்றன. அப்படியான இன ஆக்கிரமிப்புகளையும் அடக்குமுறைகளையும் சந்தித்த ஒரு தேசம் மத்திய கிழக்கில் உள்ள பாலஸ்தீனம். யூதர்களின் படையெடுப்பால் நிலமிழந்து பாலஸ்தீன மக்கள் அகதிகளாக உள்நாட்டில் அடிப்படை உரிமைகளை இழந்து வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.…
View On WordPress
0 notes
Text
Tribunal’s benches lack judges, cases are stagnating in large numbers
Tribunal’s benches lack judges, cases are stagnating in large numbers
Indian Judiciary have set up special tribunals to inquire and settle minor disputes and for special cases. National Green Tribunal for environment related cases are established under the National Green Tribunal Act 2010, for disposal of cases relating to Environmental protection, Conservation of forest and Natural resources. The tribunals have autonomous authority to investigate on cases and give…
View On WordPress
0 notes
Text
Tribunal’s benches lack judges, cases are stagnating in large numbers
Tribunal’s benches lack judges, cases are stagnating in large numbers
Indian Judiciary have set up special tribunals to inquire and settle minor disputes and for special cases. National Green Tribunal for environment related cases are established under the National Green Tribunal Act 2010, for disposal of cases relating to Environmental protection, Conservation of forest and Natural resources. The tribunals have autonomous authority to investigate on cases and give…
View On WordPress
0 notes
Text
தனியார், தனி யார்?
அரசாங்கம் அறிவித்திருக்கும் பேருந்து கட்டண உயர்வு என்பது கடந்த ஆறு ஆண்டுகளில் முதல்முறை என கூறிக் கொள்கிறார்கள். அதற்கு முன்பாக நெல்லை ஜங்ஷனில் இருந்து பாளையங்கோட்டை சென்று வர தனியார் பேருந்தில் இரண்டு ரூபாய் கட்டணம். சென்று திரும்ப நான்கு ரூபாய், ஒரு டீ நான்கு ரூபாய், வடை அல்லது சமோசா ஏதேனும் இரண்டு ரூபாய். ஆக ஒரு பத்து ரூபாயை பாக்கெட் மணியாக வைத்துக் கொண்டு சென்று திரும்பிய காலம். மூன்னூறு…
View On WordPress
0 notes
Text
If I were... A fictional writing Experiment - 1
If I were… A fictional writing Experiment – 1
It is with much pain and disappointment we stand in solidarity with the Islam brotherhood in expressing our support to them and console our fellow citizens of this country on the eve of what is a disgrace to the secularism that is enshrined in the constitution drafted by our forefathers. The Demolition of Babri Masjid in Ayodhya by the Sangh Pariwars have been result of a long intention to divide…
View On WordPress
0 notes
Text
Agrarian crisis and the Indian Media – P. Sainath
Agrarian crisis and the Indian Media – P. Sainath
Agriculture is the most helpful, healthy and noble profession to man, as quoted by George Washington.
The backbone of our Nation on which majority of its population is dependent – Agriculture and farmers are facing their worst time in decades. No mainstream channels or papers have given much emphasis on rural affairs and…
View On WordPress
0 notes