விவேகானந்தரைக் கற்போம் ! ஒளிமிகுந்த பாரதம் படைப்போம் !
Don't wanna be here? Send us removal request.
Text
பக்தியோகம் 18
II. சொற்பொழிவு 1. பக்தி நெறி9 பிப்ரவரி 1896 ஏதோ ஒருசில மதங்கள் தவிர, அனேகமாக எல்லா மதங் களும் உருவக் கடவுள் பற்றிய கருத்தைக் கொண்டுள்ளன. புத்த, சமண மதங்கள் நீங்கலாக, ஏறக்குறை�� உலகிலுள்ள பிற மதங்கள் எல்லாமே உருவக் கடவுள் கருத்தைப் பெற்றவை யாகவே உள்ளன. உருவக் கடவுள் பற்றிய கருத்துடன் பக்தி மற்றும் வழிபாடு பற்றிய கருத்துக்கள் இயல்பாகவே எழு கின்றன. பௌத்தரும் சமணரும் உருவக் கடவுளை வழிபட வில்லை…

View On WordPress
0 notes
Text
பக்தியோகம் 17
I. வகுப்புச் சொற்பொழிவுகள் ஆ. உயர்நிலைப் பாடங்கள் 10. நிறைவுரை பக்தியின் இந்த உயர்ந்த லட்சியத்தை அடைந்த பிறகு தத்துவ விளக்கங்கள் வீசியெறியப்படுகின்றன. அவற்றை யார் பொருட் படுத்துவது? சுதந்திரம், முக்தி, நிர்வாணம் எல்லாம் உதறப்பட்டு விடுகின்றன. தெய்வீக இன்பத்தில் திளைத்திருக்கும்போது யார்தான் முக்தியை விரும்புவார்? ‘ஓ என் பிரபோ, எனக்குச் செல்வம் வேண்டாம், நண்பர்கள் வேண்டாம். அழகு, கல்வி, முக்தி…

View On WordPress
0 notes
Text
பக்தியோகம் 16
I. வகுப்புச் சொற்பொழிவுகள் ஆ. உயர்நிலைப் பாடங்கள் 9. பக்தியை மனித உறவுகளில் காணல் உண்மை அன்பின் முழு நிறைவாக விளங்கும் இந்தப் பரா பக்தியின் இயல்பைச் சொற்களில் விளக்குவது இயலாததாகும். அதன் குறைவற்ற முழுநிறைவையும் அழகையும் அறிய, மனிதனின் எல்லை மீறிப் பறக்கும் கற்பனைகூடச் சக்தியற்றது. ஆனாலும் பக்திநெறியை அதன் தாழ்ந்த நிலையினாலும் சரி, உயர்ந்த நிலையினாலும் சரி, பின்பற்றி வருபவர்கள் பக்தியை…

View On WordPress
0 notes
Text
பக்தியோகம் 15
I. வகுப்புச் சொற்பொழிவுகள் ஆ. உயர்நிலைப் பாடங்கள் 8. அன்புக் கடவுளுக்குச் சான்றுஅந்த அன்புக் கடவுளே! தன்னலம், கணக்குப் பார்த்தல், பேரம் பேசுதல், பயம் முதலி யவற்றைக் கடந்து சென்றுவிட்ட பக்தனின் லட்சியம் எது? இத்தகையவன் இறைவனிடம்கூட, ‘என்னிடம் உள்ள எல்லா வற்றையும் உனக்குத் தருகிறேன். உன்னிடமிருந்து எனக்கு எதுவும் வேண்டாம். உண்மையில் என்னுடையது என்று இந்த உலகில் எதுவுமில்லை’ என்று கூறுகிறான்.…

View On WordPress
0 notes
Text
பக்தியோகம் 14
I. வகுப்புச் சொற்பொழிவுகள் ஆ. உயர்நிலைப் பாடங்கள் 7. பக்தி முக்கோணம் பக்தியை ஒரு முக்கோணத்துடன் ஒப்பிடலாம். அதன் ஒவ் வொரு கோணமும் பக்தியின் பிரிக்க முடியாத ஒவ்வொரு பண்பைக் குறிக்கிறது. மூன்று கோணங்களும் சேராமல் எந்த முக்கோணமும் இருக்க முடியாது. அதுபோலவே பின்வரும் மூன்று பண்புகள் இல்லாமல் உண்மையான பக்தி இருக்க முடியாது. நமது பக்தி-முக்கோணத்தின் முதல் கோணம், அன்பு வியாபாரப் பொருள் அல்ல…

View On WordPress
0 notes
Text
பக்தியோகம் 13
I. வகுப்புச் சொற்பொழிவுகள் ஆ. உயர்நிலைப் பாடங்கள் 6. உண்மையான பக்தனுக்கு உயர்ஞானமும் உயர்பக்தியும் ஒன்றே உயர் ஞானத்தையும்(பரவித்யை), தாழ்ந்த ஞானத்தையும் (அபரவித்யை) உபநிடதங்கள் வேறுபடுத்திக் காட்டுகின்றன. ஒரு பக்தனைப் பொறுத்தவரையில் உயர் ஞானத்திற்கும், உயர் பக்தி அதாவது பராபக்திக்கும் எந்த வேற்றுமையும் இல்லை. முண்ட க உபநிடதம் (1. 1. 4, 5) பின்வருமாறு கூறுகிறது: ‘நாம் அறியத் தகுந்த ஞானம்…

View On WordPress
0 notes
Text
பக்தியோகம் 12
I. வகுப்புச் சொற்பொழிவுகள் ஆ. உயர்நிலைப் பாடங்கள் 5. உலகம்தழுவிய அன்பும் சரணாகதியும் முதலில் சமஷ்டியை நேசிக்காமல் வியஷ்டியை எப்படி நேசிக்க முடியும்? நாம் காண்கின்ற இந்த உலகம் வியஷ்டி. இதுபோன்ற கோடிக்கணக்கான வியஷ்டிகளை உள்ளடக்கிய மொத்தம்தான் சமஷ்டி-அது இறைவன். எனவே உலகம் முழுவதையும் நேசிக்க வேண்டுமானால், அதனைத் தன்னிடத்தே ஒரு சிறுகூறாகக் கொண்டுள்ள முழுமுதற் பொருளை நேசிக்க…

View On WordPress
0 notes
Text
பக்தியோகம் 11
I. வகுப்புச் சொற்பொழிவுகள் ஆ. உயர்நிலைப் பாடங்கள் 4. பக்தி வெளிப்படும் வழிகள் பக்தி வெளிப்பட்டுத் தோன்றும் சில வழிகளைக் காண்போம்.! முதலாவதாக வருவது மரியாதை (பஹுமானம்) –கோயில் களையும் புண்ணியத் தலங்களையும் மக்கள் மரியாதையுடன் அணுகுவது ஏன்? அங்கெல்லாம் இறைவன் வணங்கப்படு வதால்தான்; அவரது சான்னியத்தியம் அந்த இடங்களில் எல்லாம் நிறைந்திருப்பதால்தான். எல்லா நாடுகளிலும் ஆச்சாரியர்கள் ஏன்…

View On WordPress
0 notes
Text
பக்தியோகம் 10
I. வகுப்புச் சொற்பொழிவுகள் ஆ. உயர்நிலைப் பாடங்கள் 3. பக்தியோகத்தின் எளிமையும் ரகசியமும் ‘கிருஷ்ணா! உன்னையே இடைவிடாது ஆழ்ந்து சிந்தித்து வழிபட்டு வரும் பக்தர்கள், நிர்க்குண பிரம்மத்தை வழிபடும் ஞானிகள் இவர்களுள் சிறந்த யோகி யார்?’ என்று அர்ஜுனன் கேட்டான். அதற்கு ஸ்ரீகிருஷ்ணர் கூறினார்: ‘யார் தங்கள் மனத்தை என்மீது நிலைநிறுத்தி என்னிடம் அசைக்க முடி யாத நம்பிக்கையுடன் எப்போதும் என்னை…

View On WordPress
0 notes
Text
பக்தியோகம் 9
I. வகுப்புச் சொற்பொழிவுகள் ஆ. உயர்நிலைப் பாடங்கள் 2. அன்பிலிருந்து எழுவது பக்தனின் தியாகம் இயற்கை எங்கும் அன்பைக் காண்கிறோம். சமுதாயத்தில் எவையெல்லாம் நல்லவையோ, உயர்ந்தவையோ, நுண்மை மிக்கவையோ அவை எல்லாம் அன்பின் செயல்கள். தீயவையும் பேய்த்தனமானவையும்கூட அதே அன்புணர்ச்சியின் செயல் பாடுதான். ஆனால் இது முறைதவறிய செயல்பாடு. கணவன் மனைவியரிடையே தூய, புனிதக் காதலாகத் திகழ்கின்ற அதே அன்புதான்…

View On WordPress
0 notes
Text
பக்தியோகம் 8
I. வகுப்புச் சொற்பொழிவுகள் ஆ. உயர்நிலைப் பாடங்கள் 1. ஆரம்பநிலை தியாகம் இதுவரை பக்தியின் ஆரம்ப நிலையைப் பார்த்தோம். இனி பராபக்தி அல்லது முதிர்ந்த பக்திபற்றிக் காண்போம். முதலில் இந்தப் பராபக்தியைப் பழகுவதற்கான சில ஆரம்ப சா���னைகளைச் சற்று ஆராய்வோம். இந்தச் சாதனைகள் எல்லாம் மனத்தைத் தூய்மைப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டவை. ஜபம், பூஜை, உருவங்கள், சின்னங்கள் போன்ற அனைத்தும் மனத் தூய்மைக்காகவே.…

View On WordPress
0 notes
Text
பக்தியோகம் 7
I. வகுப்புச் சொற்பொழிவுகள் அ. ஆரம்பநிலைப் பாடங்கள் 7. நிஷ்டை கடந்த வகுப்பில் பிரதீகங்களைப்பற்றிப் பார்த்தோம். ஆரம்பநிலை பக்தியில் இன்னும் ஒரு விஷயத்தை மட்டும் பார்த்துவிட்டு, பராபக்தியைத் தெரிந்துகொள்வோம். நாம் பார்க்கப்போவது நிஷ்டை, அதாவது ஒருமுகப்பட்ட ஈடு பாடு. வழிபாடு பற்றிய எல்லா கருத்துக்களும் சரியானவை, நல்லவை என்பது நமக்குத் தெரியும். இறைவனை, இறைவனை மட்டுமே வழிபடுவதுதான் பக்தி, வேறு…

View On WordPress
0 notes
Text
பக்தியோகம் 6
I. வகுப்புச் சொற்பொழிவுகள் அ. ஆரம்பநிலைப் பாடங்கள் 6. இஷ்டம் நான் ஏற்கனவே குறிப்பிட்ட இஷ்டக் கோட்பாட்டை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். இதைச் சரியாகப் புரிந்துகொள்வதன்மூலம் உலகின் பல்வேறு மதங்களையும் அறிந்துகொள்ள முடியும். விரும்பு, தேர்ந்தெடு என்று பொருள் படுகின்ற ‘இஷ்’ என்ற மூலச்சொல்லிலிருந்து தோன்றியது இஷ்டம் என்ற சொல். துன்பத்திலிருந்து நீங்கி விடுதலை பெறு வதுதான் எல்லா…

View On WordPress
0 notes
Text
பக்தியோகம் 5
I. வகுப்புச் சொற்பொழிவுகள் அ. ஆரம்பநிலைப் பாடங்கள் 5. பல்வேறு சின்னங்கள் ‘பிரதீகம்’, ‘பிரதிமா’ என்று இரண்டு சம்ஸ்கிருதச் சொற்கள் உள்ளன. பிரதீகம் என்றால் நோக்கி வருவது, நெருங்கி வருவது. எல்லா மதங்களிலுமே வழிபாட்டில் பல படிகளைப் பார்க் கிறீர்கள். இந்த நாட்டிலும் சிலர் மகான்களின் திருவுருவங் களை வழிபடுகிறார்கள். சிலர் குறிப்பிட்ட உருவங்களையும் சின்னங்களையும் வழிபடுகிறார்கள். வேறு சிலர் மனிதர்களை…

View On WordPress
0 notes
Text
பக்தியோகம் 4
I. வகுப்புச் சொற்பொழிவுகள் அ. ஆரம்பநிலைப் பாடங்கள 4. சின்னங்களின் தேவை பக்தி இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று வைதீக பக்தி; அதாவது விதிமுறைக்கு உட்பட்டது, புறச்சடங்கு களுடன் கூடியது. மற்றொன்று முக்கிய பக்தி; அதாவது மிகச் சிறந்தது. பக்தி என்ற சொல், மிகவும் கீழ்நிலையிலிருந்து மிக உயர்ந்த நிலை வரையிலுமுள்ள எல்லா வழிபாட்டு நிலை களையும் தழுவி நிற்கிறது. உலகத்தில் எந்த நாட்டைச் சேர்ந்த…

View On WordPress
0 notes
Text
பக்தியோகம் 3
I. வகுப்புச் சொற்பொழிவுகள் அ. ஆரம்பநிலைப் பாடங்கள் 3. குரு ஒவ்வோர் ஆன்மாவும் பூரணத்துவத்தை எய்த வேண்டும் என்பது நியதி. ஒவ்வோர் உயிரும் கடைசியில் அந்த நிலையை அடைந்தே தீரும். முன்பு இருந்த நிலை அல்லது நினைத்த எண்ணங்களின் விளைவே நாம் இப்போது உள்ள நிலை. எதிர்காலத்தில் நாம் எப்படி இருப்போம் என்பது, இப்போது நாம் செய்யும் காரியங்களையும், எண்ணும் எண்ணங்களை யும் பொறுத்தது. அதனால் நாம்…

View On WordPress
0 notes
Text
பக்தியோகம் 2
I. வகுப்புச் சொற்பொழிவுகள் அ. ஆரம்பநிலைப் பாடங்கள் 2. முதற்படிகள் இறைவனிடம் கொள்ளும் ஆழ்ந்த அன்புதான் பக்தி என்று பக்தி ஆச்சாரியர்கள் பக்தியை. விளக்குகின்றனர். எதற்காக ஒருவன் கடவுளை நேசிக்க வேண்டும் என்ற கேள்விக்குப் பதில் கண்டுபிடித்தாக வேண்டும். இதை நாம் அறிந்துகொள்ளாத வரையில், இந்த விஷயத்தைப்பற்றி எதுவுமே புரிந்துகொள்ள முடியாது. ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்ட இரண்டு லட்சியங்கள்…

View On WordPress
0 notes