மௌனிகா பாகம்2
அன்று இரவு புகழேந்தி வீட்டிற்கு செல்லும் வழியில்,யாரும் இல்லா ரோட்டில் அந்த ராத்திரியில் ஒரு அடையாளம் தெரியாத நம்பர் ப்ளட் இல்லாத ஒரு வெள்ளை நிற வேண் ஒன்று வேகமாக வந்து அவரின் பைக்கை இடித்து விட்டு சென்றது... அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவிற்கு அழைத்து செல்லப்பட்டார் அவருக்கு கை கால் உடைந்து 1 மாதம் பெட் ரெஸ்டில் இருக்கவேண்டுமென டாக்டர் சொன்னார்.....சூர்யாவிடம்,
புகழேந்தி சூர்யாவிடம்,இந்த கேஸ் சம்பந்தமாக யாரோ செய்திருக்கலாம் என சொன்னார், சூர்யாவுக்கு இதைப்போன்று ஒரு வேண் வந்து இடித்தது நியாபகம் வந்தது,அதை புகழேந்தியிடம் சொன்னார்..அடுத்து நம் டார்கெட் வேண் தான் என்றார்,சூர்யாவின் கனவில் வந்த ஆள் இல்லா ரோடு இதுவாக இருக்கலாம் என்ற சந்தேகம் வந்தது!
அன்று சூர்யா வீடு திரும்பியதும், தன் மனைவியிடம் கனவில் வந்த சம்பவமும் நடக்கும் விஷயம்
சிறிது ஒன்றாக இருப்பதை சொன்னார்.....🤔சூர்யா அந்த பழைய பேப்பர்களை எடுத்து ஏதேனும் இக்ளூ கிடைக்கிறதா என்று தேட ஆரம்பித்தார்.முதலில் மூன்று பெண்களின் போட்டோக்களை எடுத்து அவருடைய போர்டில் ஒட்டினார்.,
முதலில் இந்த மூன்று பேரில் உள்ள ஒற்றுமை என்ன என்று பார்பதற்கு அவர்களுடைய பழைய பைலை எடுத்தார் சூர்யா,அதில் அவர்கள் மூவரும் 13 வயது, அனுஷா கடத்தப்பட்ட இடம் அந்த ரயில்வே ட்ராக் அருகில்,ஷரியாவும் அதே இடத்தில்,மௌனிகாவும் அங்கேதான்....யோசித்தார் கடத்தப்படுவது ஏன்,இப்படி செய்வதின் நோக்கம் என்ன?
அன்று இரவு சூர்யா சேரில் அமர்ந்தபடியே தூங்கிவிட்டார்,இரவு வேளை யாரோ ஒருவர் அவருடைய வீட்டை கடந்து சென்றார் முகமூடிஉள்ள கோட்டுடன்,ஒரு பெண்ணை பின் தொடர்ந்தபடி,சட்டென சூர்யா கத்தினார்! அவருடைய மனைவி சஞ்சனா பயந்தபடியே வந்து பார்க்க மறுபடியும் சூர்யாவுக்கு கனவு,சஞ்சனா பார்த்து விட்டு எதையும் பேசாமல் சென்று விட்டாள் ......
இந்த விஷயத்தை புகழேந்தியிடம் சொன்னார், அதுவும் அவருக்கு அடிக்கடி கனவு வருவதாகவும் அது இந்த கேஸை ஆரம்பித்த நாளிலிருந்தே என்கிறார், அதற்கு புகழேந்தி அப்படியென்றால் இந்த கேஸுக்கும் உங்கள் கனவுக்கும் எதோ தொடர்பு இருக்கிறது என்று சொன்னார். நாம் இந்த விஷயத்தை உங்கள் கனவில் வந்த நிகழ்வையும் சேர்த்து பார்ப்போம் ஏதேனும் இக்ளூ கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா என்று பார்க்கலாம் என்றார்....
புகழேந்தி பிறகு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்,சூர்யா எப்போதும் வேலையாக இருப்பதால் தன் குடும்பதோடு ட்ரிப் போகலாம் என மனைவியும் குழந்தைகளின் வற்புறுத்தலால்,ஒரு அவுட்டர் பகுதிக்கு செல்லலாம் என முடிவெடுத்தனர், அதோடு சூர்யா புகழேந்தியையும் தன்னுடன் அழைத்துச்செல்ல முடிவெடுத்தார்,இருவரும் ஒரு தனிமையான வீடு ஒன்றை தங்குவதற்கு வாடகைக்கு எடுத்தனர். மறுநாள் அனைவரும் ஒரு 7சீட்டெர் காரில் கிளம்பினர்,அங்கிருந்து ஒரு 300கிமீட்டர் தொலைவில் அந்த அழகான இடம்... அந்த இடத்திற்கு பக்கத்தில் ஒரு ஆறும் இருந்தது,அதனால் குழந்தைகள் விளையாடுவதற்கு அவர்களின் விளையாட்டுப்பொருட்களையும் எடுத்து வந்தனர்.
ஒரு வழியாக இடத்தை அடைந்தனர்,சூர்யா கேஸ் பைலையும் எடுத்து வந்திருந்தார்,
பயணக்களைப்பில் எல்லோரும் குளித்துவிட்டு இரவு உணவு சாப்பிட்டுவிட்டு,தூங்கச்சென்றனர்.
சூர்யாவும் புகழேந்தியும் தூங்காமல் பேசிக்கொண்டிருந்தனர்,திடீரென ஜன்னலின் அருகே யாரோ நின்றுகொண்டிருப்பதை போல் உணர்ந்தனர்,புகழேந்தி உடனே ஓடிபோய் பார்க்க யாரும் இல்லை,
இருவரும் திகைத்தனர்.
0 notes
அம்மா,
அம்மா அம்மா எந்தன் அம்மா உன் வலியை
நான் உணர்ந்தேன் என் மகளை ஈன்றபோது,
உன்னோடு கை கோர்த்து நடந்த நாட்கள்
என் கண்களில் கானல் நீராய் நிற்கின்றது,
நான் தோல்வி அடையும் போது
நான் நிற்க தூண்டு கோலாக,
ஊன்று கோலாக
உன்னை வருத்தி நின்றாய்,
என் வயது வந்த காலங்களில் என்
தோழியாக, இருந்தாய்....
கடவுளிடம் வேண்டுகிறேன்
இனி ஒரு ஜனனம் இருக்குமானால்
நீ என் மகளாக பிறந்திட வேண்டுகிறேன்.......
0 notes
அழகுக்குறிப்பு:
முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்குவது எப்படி (பெண்களுக்கு) upper lips no plucking and no pain
ஜெலட்டின் பவுடர் - 1 டீஸ்பூன்
கடலை மாவு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
பால் (காய்ச்சாத பால்) - டீஸ்பூன் ( 2 - 3 )
ஒரு சிறிய கிண்ணத்தில் ஜெலட்டின் பவுடர்,மஞ்சள் தூள்,கடலை மாவு இந்த மூன்றையும் எடுத்து அதோடு இரண்டிலிருந்து மூன்று ஸ்பூன் காய்ச்சாத பாலை நன்றாக கலந்துவிடுங்கள்,பிறகு அதை 10நொடிகள் மைக்ரோஅவனில் சூடுபடுத்தி நன்றாக கலந்து பேஸ்ட் பதத்திற்கு வந்த பிறகு உடனடியாக முகத்தில் தேவையற்ற முடிகள் உள்ள இடங்களில் இந்த பேஸ்டை அப்ளை செய்யுங்கள் 10 - 15 நிமிடங்கள் காயவிடுங்கள்,பிறகு அதை மேல்பக்கவாட்டில் இருந்து உரியும் மாஸ்க்கை எடுங்கள்,தேவையற்ற முடிகள் அனைத்தும் மாஸ்கோடு வந்துவிடும்.இதை நீங்கள் கை கால் முகம் எல்லா பகுதிகளிலும் உபயோகிக்கலாம். புருவம் மற்றும் கண்களுக்கு அருகில் அப்ளை செய்ய வேண்டாம் அந்த முடிகளும் வந்துவிட வாய்ப்பு உண்டு.இந்த மாஸ்க்கை ரிமூவ் செய்த பிறகு எதாவது ஒரு மாய்ஸ்சுரைசிங் கிரீமை தடவ மறக்காதீர்கள்.....
0 notes
1 note
·
View note
புத்தர்
புத்தனாவது சுலபம்,
ஆனால் புத்தனின்
மனைவியாய் இருப்பது?🌺🌸
புத்தர் ஞானம் பெற்றதும்
தன் மனைவி,
குழந்தையை பார்க்க போகிறார்.
மனைவி கேட்கிறாள்:
“என்னை விட்டுப் போனது பரவாயில்லை.
ஆனால் என்னிடம் சொல்லி விட்டு போயிருக்கலாமே! நான் ஒன்றும் உங்களைத் தடுத்திருக்க மாட்டேன்.
ஆனால்
நீங்கள் என்னை நம்பவில்லை
என்ற நினைப்பே
என்னை இத்தனைக் காலமும் மிக நோகடித்து விட்டது.
ஏன் என்னை காயப்படுத்தினீர்கள்?”
புத்தர் அவளிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தான் பயந்தது அவளை அல்ல தன்னைத் தான் என்கிறார்.
மனைவி மகனின், முகம் பார்த்தால் தான் உறுதி குலைந்து அங்கேயே தங்கி விடுவேன் என பயந்ததாய் கூறுகிறார்.
அடுத்து அவர் மனைவி மிகச்செறிவான ஒரு கேள்வி கேட்கிறாள்.
அது இது தான்: “நீங்கள் இந்த அரண்மனையை விட்டு போகாமல் இங்கேயே தங்கி இருந்தால் ஞானம் பெற்றிருக்க முடியாதா?”
புத்தர் சொல்கிறார்:
“தாராளமாக. அதற்கு நான் மலை, காடு, ஆசிரமங்கள் எல்லாம் தேடி அலைய வேண்டியதில்லை தான்.
ஆனால்
இங்கிருந்து ஓடிப் போகும் போது நான் அதை அறிந்திருக்கவில்லை. உண்மையில் எங்கிருந்தாலும் எனக்கு இந்த ஞானம் கிடைத்திருக்கும்.
இடம் பொருட்டே அல்ல”
புத்தனின் வாழ்க்கையை போற்றும் யாரும் அவர் மனைவி யசோதராவைப் பற்றிப் பேசுவது இல்லை.
புத்தர் போனது போல் யசோதரா ஒரு நள்ளிரவில் வெளியேறி இருந்தால் இந்த உலகம் ஒப்புக் கொண்டிருக்குமா...
ஓடுகாலி என்றிருக்கும்..
சரி,
புத்தர் போன பின்பும்தான் என்ன செய்தது...
அவளை வாழாவெட்டி என்றது.
அப்படி ஒன்றும் வயதாகிவிடாத அழகு மங்கை.
ஒற்றைக் குழந்தை ராகுலன்.
விடுமா ஆண்வர்க்கம்.?
சாதாரணமாய் இருந்தாலே விடாது. உரிமையாய் ஒரு ராஜ்ஜியம் வேறு.
எவ்வளவு போராடியிருப்பாள்.?
புத்தர் போனதும் தன் தலையை மழித்துக் கொண்டாள்.
தன் ஆடை அலங்கோலமாக்கிக் கொண்டாள்.
ஒற்றைப் பிள்ளையின் "அப்பா எங்கே" எனும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமலேயே பதின்வயது வரை வளர்க்கப் போராடினாள்.
எல்லாவற்றையும் துறந்து எத்தொல்லையும் இல்லாமல் துறவியானான் புத்தன்....
எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு, எல்லாத் துயரையும் அனுபவித்தபடி துறவியாய் வாழ்ந்தாள் யசோதரா.
எது கடினம��� .?
சொல்லுங்கள் யார் துறவி இப்போது.!!!
பெண்களின் தியாகங்கள் அளப்பரியது....
ஆனால் உலகம் ஒருபோதும் அதை ஒப்புக்கொள்வதில்லை....
2 notes
·
View notes
1 note
·
View note