Don't wanna be here? Send us removal request.
Text
வாக்கு எந்திரம் மூலம் ஏமாற்ற முடியாது என்று நீங்கள் நினைத்தால், இதை படிக்க வேண்டாம்!
ஒரு மனுஷன ஏமாத்தனும்னா அவனோட ஆழ் மனசுக்குள்ள ஒரு பொய்யான நம்பிக்கைய விதைக்கனும். அதுவே மத்த வேலைகளை நமக்காக பாக்கும். நம்பிக்கைக்கு அவ்வளவு பலம். 2014- ல அப்டி வெதச்ச நம்பிக்க தான் "ஆப் கி பார் மோதி சர்கார்" (Ab ki baar modi sarkar). 2014 தேர்தல்ல எப்படி அந்த நம்பிக்கை வேலை செஞ்சுதுனு அப்புறமா விரிவா சொல்றேன். இப்போ நடந்து முடிந்த தேர்தல்ல அந்த நம்பிக்கை ஒட்டுமொத்த இந்தியாவையும் கண் மூடித் தனமா நம்ப வச்சி ஒரு பெரிய ஏமாற்று வேலைய BJP செஞ்சி முடிச்சிருக்கு.
2014 நாடாளுமன்ற தேர்தல் அப்போ மக்கள் காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருந்தாங்க. 2ஜி ஊழல் வழக்கு காங்கிரஸ் ஆட்சி மாற முக்கிய காரணமா இருந்துச்சு. அதே சமயத்துல மோடிய ஒரு promising Chief Minister-ஆ பாஜக முன்னிலை படுத்தி அடுத்த பிரதமர் வேட்பாளரா அறிவிச்சாங்க. 2014 தேர்தல் காக Prashant Kishor அவர அந்த தேர்தலுக்கான வியூகம் வகுக்குறவரா (Political Strategist) BJP நியமிக்கிறாங்க. அவர் ஏற்கனவே 2012 குஜராத் சட்ட மன்ற தேர்தல்ல நரேந்திர மோடி 3வது முறை முதல்வராவதற்கு வியூகம் வகுத்துக் கொடுத்தவர். அவர் முயற்சி பலன் தர, 2014 தேர்தல்காக Prashanth kishor தலைமையிலான குழு களத்திற்கு சென்று மக்கள் மனநிலை என்னவா இருக்கு, அவங்க எப்படிப்பட்ட தலைவர எதிர்பார்க்குறாங்கனு தெரிஞ்சிகிட்டு அந்த qualities லாம் மோடிகிட்ட இருக்குறதா branding பண்ணாங்க. அதில பாதிக்கும் மேல் பொய்னு தெரிஞ்சேதான் பண்ணாங்க. (அவர் ஒரு secularist போல, குஜராத் சம்பவங்களை மறக்கடித்து, மேலும் பல..)
மக்களோட ஆழ் மனதுல ஒரு நம்பிக்கைய விதைக்கணும்னா அந்த நம்பிக்கை அசாத்தியமானதா இருக்கனும். அப்படி விதைக்கப்பட்ட நம்பிக்கை தான் ₹1.76 ஆயிரம் கோடி. இவ்வளவு பெரிய நம்பர சாதாரண மனிதன் கேள்வி பட்டப்போ இது surrreal- ஆ தான் இருந்துச்சு. ஆனா கொஞ்சம் கொஞ்சமா மக்கள் அத நம்ப ஆரம்பிச்சாங்க. ஒரு கட்டத்துல தீர்ப்பெல்லாம் வர்றதுக்கு முன்னாடியே மக்கள் காங்கிரசயும் திமுக வையும் ஊழல் கட்சின்னு அவங்க மனசுல நம்பிட்டாங்க. அந்த வழக்கும் ரொம்ப complicated. அதனால அந்த வழக்கை நீதிபதி புறிஞ்சிக்கவே பல வருடங்கள் ஆயிடுச்சு. 2018 ல வந்த தீர்ப்பு அனைவரையும் அதிர்ச்சியாக்குச்சு. தீர்ப்புல அப்படி ஒரு ஊழல் நடக்கவே இல்ல, அத்தனையும் ஜோடிக்கப்பட்டதுனு நீதிபதி சொல்லிருந்தார். (மேலும் இந்த வழக்கை பற்றி தெரிந்து கொள்ள ஆ.ராசா எழுதிய 2ஜி அவிழும் உண்மைகள் புத்தகம் பயன்படும்)

youtube
ஆனா தீர்ப்பு வரப்போ மோடி ஆட்சி 3 ஆண்டுகள கடந்துருச்சு. இன்னும் சில மக்கள் அது உண்மைனு நம்புறாங்க. கேட்க கவர்ச்சியா இருந்தா பொய் வேகமா பரவிடும். பொய்யோட வலிமை இதுதான்.
2017 வருடம் கோவா, உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், மணிப்பூர், ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்ட மன்ற தேர்தலில் BJP வெற்றி பெற்று ஆட்சி கட்டிலில் ஏறியது.

பாஜக முன் வச்ச பொருளாதார முன்னெடுப்புகள் , மற்றும் அவங்களோட ஹிந்துத்துவ கொள்கைகள் பல மக்கள கோபமடைய வச்சுது.
2018 ல தான் கிஸான் லாங் மார்ச் (Kisan Long March) என்ற பேர்ல பல்லாயிர கணக்கான விவசாயிகள் நடை பயணம் மேற்கொண்டாங்க. இதுவும் நாடு முழுவதும் ஒரு அதிர்வலை உருவாக்குச்சு. மேலும் உ.பி ல ஆக்ஸிஜன் இல்லாம பல குழந்தைகள் இறந்தது, ரஃபேல் scam குற்றச்சாட்டு, Demonetization ஒரு failure ஆன method னு மக்கள் புறிஞ்சிக்கிட்டது இதல்லாம் மோடி மேலையும் BJP மேலையும் கடும் கோபத்த create பண்ணுச்சு.



2018 BJP நினைச்சது போலவே நடந்து முடிந்த சில மாநிலங்களுக்கான சட்ட சபை தேர்தல் BJP க்கு சாதகமா இல்ல. திரிபுரா மற்றும் நாகாலாந்து தேர்தல்களில் மட்டும் BJP தனியாகவும் கூட்டணி பலத்தோடும் வெற்றி பெற்றது. ஆனா மற்ற பல மாநிலங்கள்ல நிலமை அப்படி இல்ல, ஆட்சி ல இருந்த BJPய அகற்றிவிட்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாங்க. கர்நாடகா வுல ஆட்சிய தக்க வச்சிக்கிறதுக்கு என்ன என்னலாம் நடந்ததுனு மக்களுக்கு தெரியும். ஆனா சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் முடிவுகள் மூலமா நாட்டுல மோடி எதிர்ப்பலை இருக்கிறது தெல்ல தெளிவா தெரிஞ்சுது.

இந்த கோபமெல்லாம் ஒரே வருஷத்துல நீத்து போச்சா? தோல்வி கண்ட பாரதிய ஜனதா ஒரு வருஷத்துல அப்படி என்ன சாதிச்சுட்டாங்க இந்த கோபமெல்லாம் ஓட்டா மாருற அளவுக்கு?
Pulwama தாக்குதலுக்கு முன்னர் வரைக்கும் மக்கள் மோடி மேல அதிருப்தில தான் இருந்தாங்க. அதுக்கு பதிலடி கொடுத்து ஒரு F16 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கூறி, அபிநந்தனனையும் மீட்டு ஒரு நாளில் ஹீரோஆனார் நரேந்திர மோடி. பாகிஸ்தானிற்கு F16 விமானங்களை கொடுத்தது அமெரிக்கா தான். பாகிஸ்தான் விதிமுறையை மீறி F 16 விமானத்தை பயன் படுத்தியதாக குற்றம் சொன்ன அமெரிக்கா, ஆய்வுக்கு பின் எந்த F 16 விமானமும் வீழ்த்தப்படவில்லை என்று அமெரிக்கா கூறியது. இதுல எது உண்மைனு நாம தெரிஞ்சிக்க வாய்ப்பு இல்லை. ஆண்டவனுக்கே வெளிச்சம். ஆனால் சாதாரண மோடி, "Chowkidar" மோடியாக Re entry கொடுத்தார்.
"Divide, Divert and Rule" என்பதுதா அவர்களோட தாரக மந்திரம். இந்த முறை ஊழல் குற்றச்சாட்டுலாம் தேவப்படல. ஏன்னா, காலமும் காட்சிகளும் வேறு.

மேல் உள்ள வரைபடம் படி இதுதான் பிஜேபி ஆளும் மாநிலங்கள். அவங்க ஆளுற மாநிலங்கள்ல வெற்றி பெற்றாலே கணிசமான MP அவங்களுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கு. ஆனா அவங்களோட திட்டம் அத விட பெருசு. அவங்களுக்கு தேவை வெறும் வெற்றி மட்டும் இல்ல. பெரும்பான்மையுடன் வெற்றி. So அவங்களோட analyst team வச்சு எந்தெந்த தொகுதில கண்டிப்பா பாஜக வெற்றி பெரும், எந்த தொகுதில இழுபறி இருக்கும்னு தெரிஞ்சிக்கிட்டாங்க. மேலும் எங்க வெற்றி வாய்ப்பு கம்மியா இருக்குனு தெரிஞ்சிக்கிட்டு அந்த தொகுதிய மட்டும் தேர்வு செஞ்சு தங்களோட இரகசிய திட்டத்தை செயல் படுத்த தொடங்குனாங்க. அதுல முக்கியமான மாநிலங்கள் சட்டீஸ்கர், பீஹார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம். Final-ஆ தமிழகம்.
தேர்தல்கு முன்னாடியே எந்தெந்த தொகுதில என்னென்ன முறை ல முறைகேடு பண்ணலாம்னு plan பண்ணி execute பண்ணாங்க.
1. சில பூத்ல ஆட்கள் வச்சு மிரட்டி ஓட்டு போடுறது.
youtube
2. EVM machines-ஐ மாத்துறது.
youtube
3. Evm machines dummy வச்சுட்டு புதுசா machine ல இரவு பகல் பாராம ஹோட்டல்ல லட்சக்கணக்கான ஓட்டுகளை ஆட்களை வச்சு போடுறது.
youtube
இப்படி பல முறைல பண்ணியிருக்காங்க. மேலும் சில வீடியோக்கல கீழ add பண்றேன். ஒரு மாதத்துக்கும் மேலாக EVM கள் சில இடங்கள்ள பாதுகாக்க பட்டுச்சு. இது போல் நடந்தே இருக்காது என்று சொல்றவங்க அனைத்து இடங்களோட ஒரு மாத சிசிடிவி footage இருக்கானு முதல்ல கேளுங்க, மற்றத நாம அப்புறமா பேசுவோம். #digitalindia
தேர்தல் ஆணையம் நேர்மையா? இல்லையா? என்று கேட்பவர்களுக்கு. அவர்கள் Aliens இல்லை, இங்கே நம் அருகில் வாழும் சக மனிதர்கள் தான். ஆணையர் நேர்மையாக இருப்பார் என்றால், லட்ச கணக்கில் என்றாவது ஒரு நாள் தேர்தல் பணிபுரியும் அதிகாரிகள் நேர்மையாக இருப்பதாக அர்த்தமில்லை.
"சரி அப்போ தமிழ் நாட்டு result அப்படி சொல்லலையே, வச்சிருந்தா எல்லா இடத்துலயும் தான வச்சிருக்��னும்" என்று கேட்பவர்களுக்கு. அவர்களுக்கு தேவை 542 இல்லை, வெறும் 272 மட்டுமே. அப்படி கேவலமா மாட்டிக்கிறா மாதிரி பண்ண பாஜக முட்டாள் இல்லை.


பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் தற்போது வெற்றி பெற்ற பகுதிகள். இதை உற்று கவனித்தாலே அந்த Mathematics புரியும்.
இவ்வளவு நடந்தும் ஏன் துளி கூட மக்கள் சந்தேகிக்கவில்லை. அதுதான் mind conditioning. மோடி வெற்றி பெறுவது, அடுத்த முறை பிரதமர் ஆவது கடினம் என்று மக்கள் நம்பி வந்த நிலையில். தேர்தல் முடிவுகளுக்கு சில நாள் முன்னர் Exit Polls வந்தது. அனைத்து survey-யும் மோடி வெற்றி பெற்று விடுவார் என Polls வந்து. ஆனால் ஆச்சர்யப்படும் விதமாக ஒரு Poll கூட பாஜக தனிப் பெரும்பான்மை பெரும் என்று கூறவில்லை.

முன்னாடியே நம் மனங்கள பக்குவப் படுத்தி அவர்கள் வெற்றி சந்தேகிக்காக வகையில் நம்மள tune பண்ணிட்டாங்க. 50 முதல் 70 தொகுதி வரை அவர்கள் EVM scandal மூலம் வெற்றி பெற்றுள்ளனர். தமிழ் நாட்டில் திமுக நாடாளுமன்றத் தொகுதியில் வரலாற்று வெற்றி பெற்ற பின்னும் ஏன் சட்டமன்ற தொகுதிகள்ல வெற்றி பெற முடியல? இந்த கணக்கு மட்டும் கொஞ்சம் இடிக்கும். ஆனா காரணம் என்னன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.
இவை எல்லாம் கேட்ட பிறகு நீங்க எதோ மாய உலகத்துல வாழ்ந்து போல் தோணலாம். சந்தேகமே வேண்டாம் உண்மை தான்.
கருத்து ரீதியாக பாஜக-வை கடுமையாக எதிர்த்தது தமிழகமும் கேரளமும். இந்த 5 ஆண்டு முடிவதற்குள் என்னென்ன சந்திக்கப் போகிறோம் என்று தெரியவில்லை. நேற்று ஒரு செய்தி
இது போல் செய்தி இனி அடிக்கடி தென்படலாம். நிதின் கட்கரி அவர்கள் காட்டும் திடீர் பாசம் மேலும் பதட்டம் அடைய வைத்துள்ளது.
எது உண்மை எது பொய் என்று தெரியாமல் குழப்பத்திலேயே வாழ்க்கை நகரப் போகிறது.
5 ஆண்டுகள் ஆட்சி செய்த மோடி இந்நாட்டின் காவல்காரன் என்கிறார். பல்லாண்டு காலமாக இந்நிலத்தை தாங்களே காத்து வரும் தமிழர்களே உண்மையான CHOWKIDARS என்று கருதுகிறேன்.
பாஜக-வின் உளவியல் ரீதியான அரசியலை வெறும் தர்க்க ரீதியாக எதிர்கொள்வதில் பயனில்லை. தமிழக இளைஞர்கள் தான் மாற்றத்திற்கு வித்திடவேண்டும். அவர்களே இந்த நிலத்தின் last hope. நான் கூறிய எதையும் நம்ப வேண்டாம். வாய்ப்பிருந்தால் 5 வருடங்கள் கழித்து மீண்டும் சந்திப்போம்.
#தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
வீடியோக்கள் link கீழ:
youtube
youtube
youtube
youtube
youtube
youtube
1 note
·
View note