revise-organise-blog
revise-organise-blog
Revise Organise
15 posts
Web fanatic. General creator. Professional troublemaker. Unapologetic zombie buff. Internet specialist.
Don't wanna be here? Send us removal request.
revise-organise-blog · 8 years ago
Text
’பேரறிவாளன் பரோலை நீட்டிக்க அற்புதம்மாள் கோரிக்கை மனு!
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில், 26 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு, முதன்முறையாக ஒரு மாத கால பரோல் கிடைத்துள்ள பேரறிவாளனின் பரோல் காலத்தை நீட்டிக்க, அற்புதம்மாள் கோரிக்கை வைத்துள்ளார்.
ராஜீவ் கொலைக் குற்றத்துக்காக, கடந்த 26 ஆண்டுகளாகச் சிறையில் வாடிவரும் பேரறிவாளனை விடுவிக்க வேண்டும் என்று, அவரது தாயார் அற்புதம்மாள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துவந்தார். அவரது தந்தை ஞானசேகரனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் விடுப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். 
இதே கோரிக்கையை வலியுறுத்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அற்புதம்மாள் மனு அளித்திருந்தார். இந்நிலையில், பேரறிவாளனை ஒருமாதம் பரோலில் விடுவிக்க, தமிழக அரசு கடந்த 24-ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
திருப்பத்தூர் இல்லத்தில் தங்கியிருக்க வேண்டும் மற்றும் ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கக்கூடாது, உள்ளிட்ட நிபந்தனைகள் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளன. சுமார் 26 ஆண்டுகளுக்குப் பிறகு, சிறையிலிருந்து பரோலில் வெளியே வந்துள்ள அவரைப் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அரசியல்வாதிகளும் நேரில் சந்தித்துப் பேசிவருகின்றனர். 
இந்நிலையில், பரோல் காலம் முடிய இன்னும் ஐந்து நாள்களே உள்ள நிலையில், பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக் கோரி, சட்ட அமைச்சர் சி.வி சண்முகத்தைச் சந்தித்து அற்புதம்மாள் மனு அளித்துள்ளார்.     
0 notes
revise-organise-blog · 8 years ago
Text
சர்ச்சைக்குரிய விநாயகர் விளம்பரம்... ஆஸ்திரேலிய அரசிடம் இந்தியா புகார்
Tumblr media
இந்து மதத்தின் முதல் கடவுளான விநாயகர், ஆட்டுக்கறி சாப்பிடுவது போன்ற விளம்பரம் ஆஸ்திரேலியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், விளம்பரத்தைத் தடை செய்யக்கோரியும், இவ்வாறு படமாக்கிய விளம்பர நிறுவனத்தின்மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆஸ்திரேலிய அரசிடம் இந்தியா புகார் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில், ஆட்டிறைச்சி விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் அந்நாட்டின் இறைச்சி மற்றும் கால்நடை ஆய்வுகள் நிறுவனம், ஒரு விளம்பரத்தை சமீபத்தில் வெளியிட்டது. அதில், விருந்து நடக்கும் இடத்தில் இந்துக் கடவுள் விநாயகர், ஏசு, புத்தர், சீசர் என்று அனைவரும் ஒரே மேஜையில் அமர்ந்து பேசுகிறார்கள். அப்போது, ஒயின் குடித்துக்கொண்டே, இறைச்சியையும் அனைவரும் சேர்ந்து உண்பது போன்று காட்சி எடுக்கப்பட்டுள்ளது. 
இந்த விளம்பரம் வெளியான முதலே உலகம் முழுவதும் பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் வலுத்துவருகின்றன. இந்நிலையில், கேன்பெராவில் உள்ள இந்தியத் தூதரகம் சார்பில், ஆஸ்திரேலிய அரசிட���் புகார் தரப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த விளம்பர நிறுவனம்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆஸ்திரேலிய அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
0 notes
revise-organise-blog · 8 years ago
Text
நீங்கள் மனது வைத்தால் இரண்டு பேரின் இருட்டை விரட்டலாம்! #NationalEyeDonationDay
தேசிய கண் தான தினம் இன்று. கண்கள் இல்லாத ஒரு வாழ்க்கையைக் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்றால், சிரசுக்கு கண் தான் பிரதானம். இந்தியாவில் சுமார் ஒன்றரைக் கோடி பேர் பிறப்பில் அல்லது விபத்து காரணமாக பார்வைத்திறன் இழந்து தவிக்கிறார்கள். இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே போகிறது. 
இறந்தவர்களின் கண்களைத் தானமாகப் பெறுவதன் மூலம் பார்வையிழந்து தவிக்கும் பெரும்பாலானோருக்கு ஒளியூட்ட முடியும். அப்படியான கண் தானத்தின் தேவையையும் சிறப்பையும் உலகுக்கு உணர்த்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 8-ம் தேதி தேசிய கண் தான தினம் கடைபிடிக்கப்படுகிறது.
Tumblr media
பார்வை பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர்  'கார்னியா' குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கார்னியா எனும் விழி வெண் படலம் பாதிப்பு அடைந்தவர்களின் கண்களுக்குள், ஒளிக் கதிர்கள் ஊடுருவுவதில்லை. கண்களில் கிருமித்தொற்று,  அடிபடுவது, ஊட்டச்சத்துக் குறைவு, தவறான கண் சிகிச்சை, அதிக ஒளியை பார்ப்பது போன்ற பல காரணங்களால் கார்னியா பாதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட கார்னியாவை அறுவைச் சிகிச்சை மூலம் நீக்கி விட்டு, தானமாக கிடைத்த கண்ணின் கார்னியாப் பகுதியை மட்டும் பொருத்தி மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
Tumblr media
கண்தானம் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.  சர்க்கரை நோய், ஆஸ்துமா, காசநோய் வந்தவர்கள் கூட கண்தானம் செய்யலாம். தொற்றுநோய் காரணமாக இறந்தவர்கள், மஞ்சள் காமாலை, கல்லீரல் நோய், வெறிநாய்க்கடி, எய்ட்ஸ் வந்தவர்கள் மட்டுமே கண் தானம் வழங்க முடியாது.
சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின், கண் மாற்று அறுவை சிகிச்சை தலைமை மருத்துவர் ஆனந்த் பாபு இதுகுறித்து விரிவாகப் பேசுகிறார்.  
'தமிழகத்தைப் பொறுத்தவரை ஆண்டுதோறும் சுமார் 12,000 கண்கள் தானமாக பெறப்படுகிறது. இதில் ஏழு அல்லது எட்டாயிரம் கண்கள் மட்டுமே தகுதியான கண்களாக தேர்வாகி பார்வையிழந்தவர்களுக்குப் பொருத்தப்படுகிறது. கண்ணில் பெறப்படும் கண்கள் பல, கிருமிகள் தாக்குதல், செல்களின் எண்ணிக்கை குறைவது போன்ற காரணங்களால்  தகுதியற்றவை ஆகி விடுகின்றன. இதனால் இன்னும் ஐந்தாயிரம் கண்களுக்கு மேல் நமக்கு ஆண்டுதோறும் தேவைப்படுகிறது. முன்பிருந்த காலகட்டத்தை விட இப்போது கண் தானம் குறித்த விழிப்புணர்வு பெருகி உள்ளது. ஆனால் கண் தானம் அந்த அளவுக்கு நடை பெறவில்லை என்பதே உண்மை.
மருத்துவமனைகளில் கண் தானம் செய்ய விரும்புபவர்கள் பதிவு செய்கிறார்கள். ஆனால் இவர்கள் கண் தானம் செய்வதை யாரும் உறுதிப்படுத்தமுடியாது. அப்படி செய்வதும் தவறு. பதிவு செய்தவர் மறைந்து போனால், பதட்டத்தில் அவர்கள் வீட்டினர் மருத்துவமனைக்கு தகவல் கொடுப்பதில்லை. கண் தானம் கொடுக்க பதிவு செய்தவர்கள் பற்றி ஒவ்வொரு தெருவிலும் ஒரு பதிவேடு பராமரிக்கலாம். பதிவு செய்தவர் இறக்க நேர்ந்தால் அந்தத் தெருவைச் சேர்ந்த எவரும்  மருத்துவமனையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.  சென்னை எழும்பூர் மருத்துவமனையை பொறுத்தமட்டில் ஆண்டுக்கு 600 கண்கள் தானம் பெறுகிறோம். அதில் 400 கண்கள் பொருத்தப்படுகின்றன. 200 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு சேவை செய்து வரும் இந்த அரசு கண் மருத்துவமனை உங்களை கேட்டுக்கொள்வதெல்லாம் 'வீணாக புதைக்கப்படும் உங்கள் கண்களை தானமாகக் கொடுங்கள்; ஒளியிழந்த இருவர் வாழ்க்கை உங்களால் பயன் பெறட்டும் என்பது தான்.." என்கிறார் ஆனந்த் பாபு.
0 notes
revise-organise-blog · 8 years ago
Text
ஹார்வி புயல்: சோகத்திலும் 30 லிட்டர் தாய்ப்பால் தானம் வழங்கிய பெண்!
இயற்கைப் பேரிடர் காலத்தின்போது, பலரும் தங்களால் இயன்றதை நன்கொடையாக அளிப்பார்கள். பணமாக, பொருளாக, உடைகளாக, உணவாகத் தானம்செய்வார்கள்.
Tumblr media
அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தைச் சேர்ந்தவர், டொனிலா பால்மர். இவரின் குழந்தைக்கு, பிறக்கும்போதே இதய நோய் இருந்தது. குழந்தையால் தாயின் மார்பில் பால் குடிக்க முடியாத நிலை. குழந்தையின் நிலையால் டொனிலா மிகுந்த வேதனையில் இருந்தார்.
தாய்ப்பாலை ஃப்ரிட்ஜில் சேகரித்து வைப்பதை டொனிலா வழக்கமாகக்கொண்டிருந்தார். அப்படி, 30 லிட்டர் தாய்ப்பால் சேர்ந்திருந்தது. அண்மையில், அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரத்தை ஹார்வி புயல் புரட்டிப்போட்டது. புயலிடம் சிக்கி ஹூஸ்டன் நகரம் சின்னாபின்னமாவதைத் தொலைக்காட்சியில் பார்த்து, டொனிலா மிகுந்த வருத்தமடைந்தார்.
குழந்தைகள் பால் கிடைக்காமல் தவிக்கும் விஷயத்தையும் கேள்விப்பட்டார். உடனடியாக, டொனிலா தன் வீட்டில்  ஃப்ரிட்ஜில் வைத்திருந்த 30 லிட்டர் தாய்ப்பாலை ஹூஸ்டன் நகருக்கு அனுப்பினார்.
டொனிலா வழங்கியது 1,040 அவுன்ஸ் தாய்ப்பால். ஒரு குழந்தை ஒரு சமயத்தில் 3 அவுன்ஸ் பால் அருந்தும். கிட்டத்தட்ட 345 முறை  பால் ஊட்டுவதற்கு நிகரான தாய்ப்பாலை டொனிலா தானமாக வழங்கியுள்ளார். டொனிலாவுக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிகிறது.
0 notes
revise-organise-blog · 8 years ago
Text
மும்பை கட்டடம் இடிந்து விழுந்து விபத்து : 4 பேர் பலி
மும்பையில், மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் நான்கு பேர் பலியாகியுள்ளனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Tumblr media
மும்பையில் உள்ள பிந்தி பஜார் பகுதியில், இன்று காலை மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இந்த விபத்தில், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த  நான்கு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை எட்டுப் பேரை மீட்டுள்ளதாகவும், 20-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகவும் மீட்புக் குழு தெரிவித்துள்ளது.
மும்பையில் கட்டடம் இடிந்து விழுவது வாடிக்கையாகிவிட்டது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இதுவரை நான்கு இடங்களில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளன. கடந்த ஜூன் மாதம், மும்பை கட்கோபர் பகுதியிலுள்ள நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலியானார்கள். மும்பையில் பழைய கட்டடங்களின் எண்ணிக்கை அதிகம் என்றும், அவை இடிந்து விழும் தருவாயில் இருந்தாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்றும் மும்பைவாசிகள் ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர்.  
0 notes
revise-organise-blog · 8 years ago
Text
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் தி.மு.க எம்.பி-க்கள் சந்திப்பு!
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை தி.மு.க எம்.பி-க்கள் சந்தித்துள்ளனர்.
Tumblr media
ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இணைந்ததையடுத்து, அ.தி.மு.க-வில் மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இதனிடையே, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் வழங்கினர். இதையடுத்து, 'முதல்வர் பழனிசாமியை சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்' என்று தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்துவருகின்றன.
ஆனால், 'எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது' என்று ஆளுநர் மறுத்துவிட்டார். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவரைச் சந்திக்க முடிவுசெய்ததாக, தி.மு.க நேற்று தெரிவித்தது. இந்நிலையில், தி.மு.க எம்.பி-க்கள் கனிமொழி, திருச்சி சிவா, ஆர்.எஸ் பாரதி ஆகியோர் ராம்நாத் கோவிந்த்தைச் சந்தித்துள்ளனர்.
அதேபோல, காங்கிரஸ் எம்.பி., அனந்த் சர்மா, கம்யூனிஸ்ட் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா ஆகியோரும் ராம்நாத் கோவிந்த்தைச் சந்தித்துள்ளனர். 'பெரும்பான்மையை நிரூபிக்க தமிழக சட்டசபையைக் கூட்ட வேண்டும்' என்று அவர்கள் ராம்நாத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.
0 notes
revise-organise-blog · 8 years ago
Text
'நீட் தேர்வால் பாதிப்பு என்று பொய் பரப்புரை..!' - தமிழிசை குற்றச்சாட்டு
'தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கும் மருத்துவ மாணவர் கலந்தாய்வில் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் நடக்கும் மருத்துவ மாணவர் சேர்க்கையில், எந்த முறைகேடும் நடக்காமல் கண்காணிக்கவேண்டியதும் தமிழக அரசின் கடமை''  என்று டாக்டர் தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.
Tumblr media
தமிழக பி.ஜே.பி மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நீட் தேர்வின் அடிப்படையில் நடக்கும் மருத்துவ மாணவர்கள் ஒதுக்கீட்டில், கணிசமான இடங்கள் ஸ்டேட் போர்டில் படித்த மாணவர்களுக்கே கிடைத்துவருகிறது. நீட் தேர்வால், தமிழக மாணவர்கள் பாதிப்பு என பொய்யுரை பரப்பிய அரசியல்வாதிகள் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது வெளிச்சமாகி இருக்கிறது. இதுவரை 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் அரசுப் பள்ளி மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள், ஆண்டுக்கு 25-30 பேர்கள் மட்டுமே மருத்துவப் படிப்புக்கு தேர்வாகி வந்துள்ளார்கள். ஆனால், இந்த ஆண்டு சுமார் 2,000 பேருக்கு மேல் நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் பயிற்சிபெற்று மருத்துவப் படிப்பில் சேர்வார்கள். இங்கே, தமிழக எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் அவரவர் அரசியல் நலனுக்கு நாடகம் ஆடுகிறார்கள்.  மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள், அகில இந்திய அளவில் போட்டி போட முடியாமல் நிரந்தர விலக்கு தாருங்கள் எனக் கேட்கும் இந்த நிலைக்கு யார் காரணம்?
இதன் ஊடே நடந்துகொண்டிருக்கும் மருத்துவ மாணவர் கலந்தாய்வில் கூறப்படும் முறைகேடுகள், குறிப்பாக மாணவர்களின் பெற்றோர் குடியுரிமை மாறாட்டம் சம்பந்தமான குற்றச்சாட்டுக்களை விசாரித்து, தவறான தகவல் தந்த மாணவர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். முறைகேடாக இருப்பிடச் சான்றிதழ்கள் வழங்கிய அரசு அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். சில மாணவர்கள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் பலர் இருக்க வாய்ப்புண்டு என்பதால் தீவிர விசாரணை தேவை. பிற மாநிலப் பட்டியலிலும் தமிழகத்திலும் ஒரே நேரத்தில் இடம் பெற்றுள்ள பலரது பதிவு எண்கள்குறித்து கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்பட வேண்டும்.
மருத்துவக் கலந்தாய்வில், தமிழகத்தில் 8 இலக்க நீட் பதிவு வரிசை எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிற மாநிலங்களில் 9 இலக்க நீட் பதிவு எண்கள் மூலம் தர வரிசை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தவறும் தவிர்க்கப்பட்டிருக்கலாம். நீட் தேர்வில் தரமான மாணவர்கள் திறமை அடிப்படையில் தேர்வாகும் சூழல் தமிழகத்தில் நிர்வாக முறைகேடுகளால் பாதிக்கப்படக்கூடாது. தமிழ்நாட்டில், தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் நிகர்நிலைப் பல்கலைகழகங்களிலும் நடக்கும் மருத்துவ மாணவர் சேர்க்கையில், எந்த முறைகேடுகளும் நடக்காமல் கண்காணிக்க வேண்டியதும் தமிழக அரசின் கடமை'' என்று கூறினார்.
0 notes
revise-organise-blog · 8 years ago
Text
பத்து இடங்களில் அம்மா பெட்ரோல் பங்க்! தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் பத்து இடங்களில், அம்மா பெட்ரோல் பங்க்குகள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் காமராஜ் இன்று அறிவித்தார்.
Tumblr media
அ.தி.மு.க அரசு கடந்த 2011 ஆம் ஆண்டு பதவியேற்றது முதல், அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா மருந்தகம், அம்மா சிமென்ட், அம்மா திரையரங்கு என்று பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.  
இந்நிலையில் சட்டப்பேரவையில் பேசிய உணவுத் துறை அமைச்சர் காமராஜ், "தமிழகத்தில் பத்து இடங்களில், அம்மா பெட்ரோல் பங்க்குகள் அமைக்கப்படும்.
இதற்காக, சேலம் மாவட்டம் எடப்பாடி, சென்னை நந்தனம், தஞ்சை மாவட்டம் இரும்புத்தலை, திருவாரூர் மாவட்டம் சுந்தரக்கோட்டை, நாகை மாவட்டம் கோவில்பத்து, வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, மதுரை மாவட்டம் கப்பலூர், விழுப்புரம் மாவட்டம் வானூர், திருச்சி மாவட்டம் மணப்பாறை, கருர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஆகிய பத்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. முதல் கட்டமாக, இந்த பத்து இடங்களில் பெட்ரோல் பங்க் அமைக்கப்படும். பிறகு படிப்படியாக தமிழகம் முழுவதும், இந்தத் திட்டம் விரிவுப்படுத்தப்படும். நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், இந்திய எண்ணெய் நிறுவனங்களுடன் இணைந்து பெட்ரோல் பங்க் அமைக்கப்படும்.
காவிரி டெல்டா மாவட்டங்களில், ரூ.10 கோடி மதிப்பில் 25 நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும். அதேபோல், ரூ.5.5 கோடி மதிப்பில் 5 நேரடி நெல் உலர்த்தும் களங்கள் அமைக்கப்படும். மேலும், கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் 4,460 பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படும்" என்றார்.
0 notes
revise-organise-blog · 8 years ago
Text
'வல்லரசு இருக்கட்டும்... முதலில் நல்லரசு கொடுங்கள்' - நடிகர் விஜய் பேச்சு!
Tumblr media
பிகைன்ட்வுட்ஸ் கோல்ட் மெடல் விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் பேசியது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இந்த விருது விழாவில் 'தென்னிந்திய சினிமா பாக்ஸ் ஆபிசின் சாம்ராட்' விருது வழங்கப்பட்டிருக்கிறது. 1996 முதல் தென்னிந்திய சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் அதிக ஹிட் கொடுத்த படங்களில் நடிகர் விஜய் நடித்துள்ளார். இந்த விருதைப் பெற்றுக்கொண்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் விவசாயிகளின் அவலம் குறித்து பேசியிருக்கிறார்.
அவர் பேசியதாவது "மூன்று வேளையும் தவறாமல் உணவு கிடைப்பதால் அதைப் பற்றிய கவலையே இல்லாமல் எல்லோரும் இருக்கிறோம். ஆனால் அந்த உணவை உற்பத்தி செய்த விவசாயிகள் நன்றாக இல்லை. அவர்கள் இலவச அரிசிக்காக ரேஷன் கடைசியில் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள். இப்படி விவசாயிகளின் வாழ்க்கை நாளுக்கு நாள் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது.
வல்லரசு வல்லரசு என்று பேசிக்கொண்டிருக்கிறோம். வல்லரசு ஆவதெல்லாம் இருக்கட்டும். முதலில் நல்லரசு கொடுங்கள். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாருங்கள்" என்று பேசியிருக்கிறார்.
நாட்டில் வறட்சி மிகுந்த விவசாயிகள் தொடர்ந்து தற்கொலை செய்துகொள்ளும் அவலம் நீடித்துக்கொண்டிருக்கிறது. தமிழக விவசாயிகள் டெல்லியைத் தொடர்ந்து சென்னையில் சமீபத்தில் போராட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளனர். இந்த நிலையில் சினிமா விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் விவசாயிகள் நலன் குறித்து பேசியது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
0 notes
revise-organise-blog · 8 years ago
Text
'ஜனாதிபதி தேர்தலில் பி.ஜே.பி-க்கு அ.தி.மு.க ஆதரவளிக்கும்' - இல. கணேசன்
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு  அ.தி.மு.க-வில் நிலவி வரும் மோதலுக்கு இன்னும் ஒரு முடிவு கிடைக்கவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் முதல் இரண்டு அணிகளாக இருந்த அ.தி.மு.க, தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணி, டி.டி.வி தினகரன் அணி என்று மூன்று அணிகளாக செயல்பட்டு வருகிறது.
Tumblr media
இந்த சம்பவங்களுக்கு பி.ஜே.பிதான் காரணம் என்று கூறப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் அணிகள் இரு அணிகளுமே ஜனாதிபதி தேர்தலில் பி.ஜே.பி-க்கு ஆதரவளிப்பார்கள் என்று கூறப்பட்டு வருகிறது.  
இந்நிலையில், திருவள்ளுவர் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோயிலில், நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பி.ஜே.பி எம்.பி இல.கணேசன் கலந்து கொண்டார். பின் அவர் செய்தியாளர்களிடம், "ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை பிரதமர் விரைவில் அறிவிப்பார்.
ஜனாதிபதி தேர்தலில் பி.ஜே.பி-க்கு, அ.தி.மு.க ஆதரவளிக்கும். தமிழகத்தில், தி.மு.க-வை எதிர்க்கும் சக்தி அ.தி.மு.க-வுக்கு இல்லை. தி.மு.க-வை எதிர்க்கும் சக்தி பி.ஜே.பி-க்குதான் உள்ளது. வைரவிழாவில் கூட அ.தி.மு.க-வை விட, பி.ஜே.பியைதான் அதிகம் விமர்சித்தனர். யெச்சூரி மீதான தாக்குதலுக்கும், ஆர்.எஸ்.எஸ்-க்கும் சம்பந்தம் இல்லை" என்று கூறினார்.
0 notes
revise-organise-blog · 8 years ago
Text
இருள் ருசி உணரலாமா? - `Taste of Darkness’ உணவக அனுபவம்
மின்சாரம் துண்டிக்கப்பட்ட ஏதோ ஓர் இரவில், நிலவொளிகூட நுழைய முடியாத உங்கள் வீட்டின் இருட்டறையில், விளக்கு வெளிச்சத்தைக்கூட அனுமதிக்காமல் அன்றைய இரவு உணவை உங்களால் உண்ண முடியுமா? முடியும் என்றால், `வழக்கமாக நீங்கள் உட்கொள்ளும் கலோரியைவிட சற்றுக் குறைவாக, (ஏறத்தாழ 9% வரை) குறைவான கலோரியைத்தான் உங்களால் உட்கொள்ள முடியும்’ என்கிறது அறிவியல்.
Tumblr media
நாகரிகம் வளரத் தொடங்கியதும் உணவின் மீதான விருப்பங்களும், அதன் தேவைகளும் பன்மடங்காக வளர்ந்துவிட்டன. விருந்தினர் வருகை, விசேஷ நாட்கள், திருவிழாக்கள்... என வருடத்தின் குறிப்பிட்ட சில நாட்கள் மட்டுமே ஆடம்பர உணவை உட்கொண்டுவந்தது நம் சமுதாயம். அதிலும் இன்று, உணவை போகப்பொருளாகப் பார்க்கிற அளவுக்கு சுவையூட்டிகளின் வர்த்தக வளர்ச்சி, உணவை வைத்து மனஅழுத்தத்தைப் பன்மடங்காகப் பெருக்கியுள்ளது.
Tumblr media
ஒருபக்கம் ரேஷன் கடையில் விநியோகப் பொருட்கள் குறைவது, `அம்மா உணவக’த்தையும் `ஆந்திரா மீல்ஸை’யும் நாடுவது என மக்கள் திண்டாடினாலும், இன்னொரு பக்கம் பசிக்காக உண்ணவேண்டிய உணவு, உற்சாகத்துக்காக உண்ணும் அளவுக்கு அது என்டெர்டெய்ன்மென்ட் ஆகவும் மாறுகிறது. உணவில் அதன் ஆடம்பரம் (Luxury) என்பது மிக முக்கியமான அம்சமாகிவிட்டது. ஏன் இருக்கக் கூடாது என்று கேட்கலாம். ஆனால், அதில் உடல்நலன் பல நேரங்களில் இரண்டாம் பட்சமாகவும் பார்க்கப்படுகிறது என்பதுதான் உண்மை.
``ரொம்ப போர் அடிக்குது, சாப்பிட எதாவது கொடு!’’ - விடுமுறை மற்றும் மாலை வேளைகளில் ஒவ்வொரு மனதிலும் எளிதாகக் கேட்கும் குரல் இது. உளவியல்ரீதியாக இது மிகக் குறிப்பாக பெண்களிடமும் குழந்தைகளிடமும் அதிகமாக இருப்பதாகச் சொல்கிறது மற்றோர் ஆய்வு. `அவர்களின் மனஅழுத்தமும் சூழலும்தான் காரணம்’ என்கிறது.
அரிசி, சப்பாத்தி, பிரெட், நூடுல்ஸ், பாஸ்தா, பீட்சா, பர்கர்... என `Main course' எனச் சொல்லப்படும் முதல்நிலை உணவுக்கே இன்று மிகப் பெரிய லிஸ்ட் முன்வைக்கப்படுகிறது. இன்னமும், மூன்று வகை பன்னீர்... அதில் முப்பது வகை ரெசிபிகள், ஐந்து வகை பருப்புகள்... அதில் ஐம்பது வகைச் சமையல், வறுவல், பொரியல், டெஸர்ட், ஜாம், சாஸ்... என வண்ண வண்ணமான உணவுகளின் அணிவகுப்பு எப்போதும் நம் மூளையின் செபலிக்கை (Cephalic) தூண்டியபடியே இருப்பதை நாம் இன்பமாக அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.
Tumblr media
இதுதான் உணவு குறித்த நம் தேவைகளை உடல் அளவில் தீர்மானித்து வருகிறது. பேஸ்ட்ரீஸ், ஐஸ்க்ரீமைப் பார்க்கும்போது வாயில் எச்சில் ஊறுவதும் இப்படித்தான். உணவில் பல வண்ணங்கள், வாசனைகள் என பழகிப்போன மூளைக்கு இட்லி, தோசை போன்ற வழக்கமான ஆரோக்கிய உணவு கொஞ்சம் அலர்ஜியைத் தருவதாகவும் இது நம்மை மாற்றியுள்ளது . இதனால்தான் மேற்கத்திய நாடுகள், `சரிவிகத உணவு’ எனச் சொல்லும் நம் இட்லி, தோசையைக்கூட தந்தூரி வெரைட்டிகளாக உள்நுழைக்கவேண்டிய சூழலை உருவாக்கியுள்ளது எனலாம்.
இப்படி உணவின் வண்ணங்களையும் வடிவங்களையும் மட்டுமல்ல; தினம் உட்கொள்ளும் உணவின் அளவையும் கணக்கிட்டபடிதான் நாம் டைனிங் டேபிளிலேயே அமர்வோம். காலை உணவுக்கு, `ஒரு சாப்பாத்தி, ஒரு கப் தயிர்...’ என்றாலும், `இதுதான் என் உணவு, இதுதான் என் தட்டு, இதைத்தான் நான் உண்ணப் போகிறேன்’... எனக் கணக்கிட்டுப் பழகிவந்த நமக்கு, சூரி போட்ட பரோட்டா கணக்காக `போட்ட கோட்டையெல்லாம் அழி, மறுபடியும் புதுசா ஆரம்பிப்போம்’ என உணவின் மீது புது ஈர்ப்பை உருவாக்கும் ஒரு வழிமுறையைக் கண்டேன். அதாவது, சென்னை, இராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூவின், முதல் தளத்தில் சமீபத்தில் நான் பிரமித்து வியந்த `டேஸ்ட் ஆஃப் டார்க்னெஸ்’ (Taste of Darkness) எனும் உணவகம் பற்றி இங்கு சொல்லியாக வேண்டும்.
Tumblr media
உணவகம் என்றாலே பல வண்ண விளக்குகள், கண்ணைக் கவரும் பல நிற உணவு வகைகள் எனப் பழகிப்போன நிலையில், இங்கே இருட்டில் உணவு உண்ண வேண்டும் என்பது முற்றிலும் புது முயற்சியாகத் தெரிந்தது. `இப்படி ஒரு முயற்சிக்கு வரவேற்பு இருக்குமா?’ என யோசிக்க வேண்டாம்! அயல் நாடுகளிலும், ஹைதராபாத், மும்பை போன்ற பெரு நகரங்களிலும் பெரிதும் விரும்பப்படும் உணவக முறைகளில் இதுவும் ஒன்று. எளிமையும் ஆச்சர்யமும் இன்னும் மிக அதிகமாக புலன் விழிப்புஉணர்வை உருவாக்கும் ஒரு முயற்சியாக சென்னையிலும் அதன் கிளை விரிந்திருப்பது சென்னையின் புதுமைக்கு இன்னொரு வரவேற்பாகத் தெரிகிறது.
விடுமுறை அல்லது அவுட்டிங் என்றால் நாணயத்தின் இரண்டு பக்கம்போல பெற்றோர்களும் குழந்தைகளும் ஆளுக்கொரு பக்கமாக நிற்கும் அவஸ்தையில்தான் இன்றைய பல குடும்பங்கள், அதுவும் சென்னை போன்ற பெருநகரவாசிகள் இருக்கிறார்கள். ஏனென்றால், `எது செய்தாலும் அது வாழ்க்கைக்கான உணர்வுப்பூர்வமானதாக இருக்க வேண்டும்’ - இது பெற்றோர்களின் சாய்ஸ். `புதுமையாகவும் த்ரில்லாகவும் இருந்தால் போதும்’ - இது பிள்ளைகளின் வாய்ஸ்!
த்ரில்லும் வேண்டும், அதே சமயம் பெற்றோர்களின் எதிர்பார்ப்பும் கைகூட வேண்டும். சாப்பிடும்போது தட்டைப் பார்த்து சாப்பிடப் பழக்கப்படாத இந்த யங் ஜெனரேஷனுக்கு கண்ணைக் கட்டிச் சோறு போடுவதும், சென்னையின் எல்லைக்குள் இந்த உணவகம் இருப்பதும் ஒரு குடும்பக் குதூகல உணர்வுக்கு நிச்சயம் ஒரு `ஹாய்...’ சொல்லும் எனலாம்.
Tumblr media
இருட்டுதான் இவங்க தீம்!
தாவர உணவோ, மாமிச உணவோ அது உங்கள் சாய்ஸ். ஆனால் இருட்டில்தான் உணவு உண்ண வேண்டும் இதுதான் `டேஸ்ட் ஆஃப் டார்க்னெஸ்’ கான்செப்ட்!
`அது சரி... ஏசி, நல்ல உணவு... என இயல்பான சென்னை ஹோட்டலுக்கே பட்ஜெட் பாக்கெட்டைக் கடிக்கும். இதில், `இருட்டுதான் இவங்க தீம்’ என்றால், இவர்கள் பட்ஜெட் நம் குடும்பத்துக்கு சூட் ஆகுமா?’ என யோசித்தால், கூகுள் செய்து, அவர்களை போனில் தொடர்புகொள்ளலாம், முன்பதிவு வசதியும் இருக்கிறது.
விலை... நாலு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு அதாவது ஆளுக்கு 500 ரூபாய்! இது ஒரு பீட்சா கார்னரில்கூட எளிதாக இன்று நாம் கொடுத்துக்கொண்டிருக்கும் தொகை என்றே தோன்றுகிறது. பகலில் இரவையும், அதே சமயம் பாதுகாப்பையும், நல்ல உணவையும் அனைத்துக்கும் மேலாக புலன் உணர்வை அறியவைக்கும் ஒரு தீம் ரெஸ்டாரென்டுக்கு இந்தத் தொகை பொருத்தமானதாகவே தெரிகிறது.
Tumblr media
எக்ஸ்பிரஸ் அவென்யூவின் மூன்றாவது தளத்தை அடைந்ததுமே இந்த உணவகம் பளிச்சென்று (வெளியில் மட்டும்தான்) தெரியும். மிகப் பெரிய ஆரவாரம் ஏதும் இல்லாமல், டிக்கெட்டுக்கான தொகை, உணவக விதிமுறைகள்... என எல்லாச் சந்தேகங்களும் நுழைந்தவுடன் முதலிலேயே ஓர் இளைஞரால் விளக்கப்படுகின்றன.
விலையுயர்ந்த மற்றும் ஒளிரும் பொருட்கள் எதுவும் உணவகத்தின் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. நம் பொருள்களை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கச் சொல்லி சாவியை நம் கையில் கொடுத்துவிடுகிறார்கள். இருக்கைக்கான முன் அனுமதி பெற்று வந்திருந்தால், காத்திருப்பு நேரம் சில நொடிகள்தான்.
கையில் மெனுகார்டு போன்ற அட்டை ஒன்றைத் தருவார்கள். அதை மெனு கார்டு என நினைத்தால் நமக்கு பல்ப் நிச்சயம். அது உணவகச் சட்ட திட்டங்களை தெளிவாக அறிவுறுத்தும் ஏடு.
Tumblr media
த்ரில் அனுபவமே பிரதானம்!
அறிவுறுத்தலைப் படிக்கும்போது சமாளித்துவிடலாம் என்ற தைரியம்கூட இருக்கும். ஆனால் கதவைத் திறந்து, உள்ளே அனுப்பிய நொடியில் அவசரப்பட்டு வந்துவிட்டோமோ என யோசிக்கும் அளவுக்கு இருட்டு நம்மை அச்சுறுத்தத் தொடங்கிவிடும். தீக்குச்சி வெளிச்சம்கூடக் கிடையாது. போதாத குறைக்கு, பல காலமாக `ஈவில் டெட்’ முதற்கொண்டு `காஞ்சனா’, `காஞ்சுரிங்’ வரை வெளிச்சத்தில் பார்த்துவைத்த அத்தனை பேய்களும் விதவிதமாக மனக்கண் முன்னே வந்து நிற்கும் என்பதும் ஒரு சாராரின் பதற்றமாக இருக்கும்.
அறிவியலாகப் பார்த்தால், கண்களைத் திறந்திருந்தும் ஒளியைக் காண முடியாத முதல் அனுபவத்தை நம் மூளையால் எடை போட முடியாது என்பதே உண்மை. இதனால் பயத்துக்கான அட்ரினலினை உடல் அதிகமாகவே சுரந்துகொண்டிருக்கும்.
உண்மையைச் சொல்லப் போனால், பாதுகாப்பான ஓர் இடத்தில் நம் புலனறிவை நாம் சோதித்துக்கொண்டிருக்கிறோம் என தைரியமாக நம்பலாம். எட்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை மட்டுமே அனுமதிக்கிறார்கள் என்பதால், உங்கள் குழந்தைக்கும் ஒரு த்ரில்லான அனுபவத்தை இது தரும். எனவே, குழந்தையுடன் அதிகம் பேசிக்கொண்டே இருக்காமல், அவர்களை சிந்திக்கவும்விடுங்கள். காரணம், `பேசினால் பயம் தெரியாது’ என்பது உணவகத்துக்குச் சென்று தப்பித்து வந்த சிலரின் அறிவுரையாகச் சொல்லப்படுகிறது.
ஆகவே, `பேச்சைக் குறை!’ என்பது த்ரில்லுக்கான மெனு கார்டில் இல்லாத நமது எக்ஸ்ட்ரா அட்வைஸ்!
என்னதான் இங்கு அட்வைஸ் செய்தாலும், `சாப்பிடத்தான் அழைத்துச் செல்கிறார்கள்’, `சாப்பிட்டதும் மீண்டும் வெளிச்சத்தை பார்க்க இயலும்’ என்ற உத்தரவாதங்கள் எல்லாம் இருளில் கிடைக்கும் அசலான புலன்களின் முரண்பாட்டால் செல்லுபடியாகாத ஆயிரம் ரூபாய் நோட்டுகள்தான்.
Tumblr media
இந்தப் பதற்றத்தில் கைகாட்டியாக... இல்லை இல்லை குரல் காட்டியாக ஒரு கணீர் குரல் உணவக இருக்கை நோக்கி நம்மை அழைத்துச் செல்ல வரும். எத்தனை உற்று நோக்கினாலும், உங்களால் யாரையும் பார்க்க முடியாது. நூறு சதவிகிதம் அவர் உருவம் தெரியாது என்பதால், குரலை வைத்து, பெண் என உணர்ந்துகொள்ளலாம். இனி அவர் குரலைத்தான் பின்பற்றி ஆக வேண்டும் என்பதால், செவிக்கு முதல் உணவு அங்கேயே ஈயப்படுகிறது. இப்போது உங்கள் செவி சத்தத்தை நோக்கி தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கும். கிச்சனில் பாத்திரத்தைத் தூக்கிப்போட்டு உடைத்தால்கூட டோரிமானை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த உங்கள் குழந்தை, கைக்கடிகாரத்தின் சிறு ஒலியைக்கூட கவனிக்கத் தொடங்குவான்.
சுவர் தெரியாது, வழி தெரியாது, ஒலிவழி பயணப்படும் உங்களை, அவசியம் என்றால் மட்டுமே தொடுதல் வழி யூ டர்ன் போடவைப்பார்கள். இல்லையேல், சுவற்றைப் பிடித்துக்கொண்டு அவர் குரலைக் கேட்டுத்தான் நடந்தாக வேண்டும். இதுவரை எல்லைகளை கண்வழி பழகியிருப்பீர்கள், முதன்முறையாக தொட்டுப் பார்த்து நடக்கப் பழகுவீர்கள். இதுதான் உங்கள் முதல் தொடு பயிற்சியாகவும் இருக்கலாம். உங்கள் வீட்டு சுவர் மென்மையானதா? தெரியாது! இன்று, சுவரிடம்கூட பேசியிருக்கிறீர்கள் என்பது உங்களையே வியக்கவைக்கும் தொடு உணர்வின் அருமை.
இது வரை சத்தமோ, வாசனையோ முதலில் அதைக் கண்களால் ஊர்ஜிதம் செய்தே பழகிய எளிமையான மூளையின் செயல்பாட்டுக்கு இந்த வழிமுறைகள் பெரும் சவாலாகவே இருக்கும். பலருக்கும் புதிதாக முட்டிபோட்டு, தவ்வி நடக்கும் குட்டிக் குழந்தைபோல சுவற்றைக் கட்டிக்கொண்டே நகர்ந்து சென்ற பால்யம்கூட கண்முன் வரும். வேறு வழி இல்லை! இன்று நீங்கள் குழந்தைதான். காரணம், நீங்கள் இதுவரை பார்க்காத, பழகாத புது உலகம் இது.
Tumblr media
த்ரில் குறையக் கூடாது என்பதால், கூட்டம் கூட்டமாக அனுமதிப்பதில்லை ���ன நினைக்கிறேன். நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் என்றால், அவர்களுடன் இரண்டு பேர் கொண்ட நண்பர் குழு அல்லது தம்பதிகளை அனுமதிக்கிறார்கள். இது இருக்கைகளைப் பொறுத்து சில நேரங்களில் மாறவும் செய்யலாம்.
இதில் வெளியே சொல்லப்பட்ட ஒரு ரூல், படிக்கும் போது ஈசியாக இருந்திருக்கும். உணவகம் அனுமதிக்கும் இருக்கைகளில்தான் அமரவேண்டும், இருக்கைகள் நம் தேர்வு அல்ல என்பதுதான் அது. ஆனால், உள்ளே இருட்டு உங்களை அச்சுறுத்தும்போது, இருபது வருடங்களுக்கு முன்னர் உங்கள் கைபிடித்த கணவனோ, மனைவியோ இன்றுதான் பயத்தால் மீண்டும் உங்கள் கைகளைப் பிடித்திருப்பார்கள். ஆனால் இருக்கையில் இந்த ஆறுதல்கள் எல்லாம் கிடைக்காது. தனித் தனி சீட்; வேண்டுமென்றால், குரல்வழி உறுதி செய்துகொள்ளலாம் அல்லது கை நீட்டும் தொலைவா எனத் தொட்டுத் தெரிந்துள்ளலாம். ஆனால் பயப்படும்போது, மூளை அவ்வளவாகப் பேசுவதையும் பிறரைத் தேடும் நிலையையும் அனுமதிப்பதில்லை, சுய விழிப்புஉணர்வில் திளைத்திருக்கும் என்பதையும் அங்கு நிலவும் நிசப்தம் சொல்லிவிடும்.
`ஊசி விழுந்தால்கூட சத்தம் கேட்கணும்’ என டீச்சர் சொன்னதை உங்கள் குழந்தையும், ஏன்... நீங்களும்கூட அங்கு உணர்ந்துகொள்வீர்கள். அமைதி எப்போதாவது பயமுறுத்துமா? அனுபவித்ததால், `ஆம்’ என்கிறது மனம்.
எப்படியோ இருட்டைப் பழக்கி, இருக்கைக்குள் அமர்த்திவிட்டாலும், உங்கள் பயம் உங்களுக்கு முன் அவர்களால் யூகிப்பட்டது என்பதால் உங்களை ஆசுவாசப்படுத்தி சானிடைசர், தண்ணீர், சாப்பாடு, டிஷ்யூஸ் என வரிசையாக தன் குரல்வழி தன்னுடைய இருப்பை அவ்வப்போது ஊர்ஜிதம் செய்வார். ``அம்மா வாசல்லதான் காத்திருப்பேன்’’ எனச் சொல்ல, ப்ரிகேஜிக்குள் பயந்து நுழையும் குழந்தையின் மனநிலையைத்தான் அவர்களின் இருப்பும் உணர்த்தும். இல்லையென்றால், இருட்டு நம்மை பலவீனப்படுத்தி, திணறடிக்கவும் செய்யும்.
``சானிடைசர்...’’ என்று குரல் எழுப்பி, நம் கையில் அதை ஊற்றுவார்கள்! அது எத்தனை திண்ணமான திரவம், லெமன் கிராஸா அல்லது லாவண்டரா எனத் தொடுதலும் மோப்பமும் போட்டி போட்டுக்கொண்டு நம்மைச் சிந்திக்கச் செய்யும் . இதில் கண்முன்னே தட்டு வைக்கப்பட்டிருக்கும் என்பதைத் தடவி பார்க்கலாம் அல்லது அவர்கள் உணவைத் தரும்போது தேடிக்கொண்டிருக்கலாம் .
``உணவு...’’ என்று சொல்லி, கேரியர் ஒன்றில் உணவைத் தருகிறார்கள், `என்னடா கொடுமை இது? கிண்ணத்தில் கொடுத்தாலாவது கையைவிட்டுக் குழப்பி (இருட்டுதானே என்ற ஒரு வசதி) சாப்பிட்டுக்கொள்ளலாம்; கேரியர் என்றால் பிரித்துவைக்க வேண்டும், ஒதுக்க இடம் பார்க்க வேண்டும், தேடித்தேடி உண்ண வேண்டும் என வெளிச்சத்தில் செய்யும் நொடிப்பொழுது வேலைகளை, இன்று மூளை நோட்டு போட்டு கணக்கெழுதிப் பார்க்கும்.
கேரியர் கனம் பார்த்ததும், `அட இது போதுமா?’ எனக் கேள்வி எழும். அதை அப்படியே கண்டுகொள்ளாமல் விடுங்கள். எனக்கு மட்டுமல்ல... பலருடன் பேசியவரை 99 சதவிகிதம் பேர் `சாப்பாடு ஏ1’ என்றுதான் சொன்னார்கள். மெனுவில் பெரிய வகைகளை எதிர்பார்க்காதீர்கள். காரணம், இருக்கும் நான்கைந்து வெரைட்டியை இருட்டின் பிடியில் பிரித்துமேய்வதே பெரும்பாடாக இருக்கும். இதில் தட்டுக்குள் சரியாக கை வைக்கணும், தண்ணீரையும் பிடிக்கணும் என கமலின், `பம்மல்’ பட வசனம்போல பிதற்றவேண்டிய நிலையில்தான் அப்போது நாம் இருப்போம்.
Tumblr media
வெஜ் என்றால், சாஃப்டான இரு ரொட்டி, சூப்பரான ஒரு சைடிஷ். கூடவே வெஜ் ஃபிரைடு ரைஸ் மற்றும் கிரேவியும் வரும். நான்வெஜ் என்றால், சிக்கன் நிச்சயம். உணவு வகை எது என்றாலும் டேஸ்டுக்குக் குறை இருக்காது.
`நம்பிச் சாப்பிடுங்கள்’ எனச் சொல்கிறேன். ஆனால், `எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்....’ என்பது திருவள்ளுவரின் குறள் மட்டுமல்ல, அன்று உங்களாலேயே உணரப்படும். அதாவது, `கண்களால் பார்த்து உணரப்படாத இந்த உணவு உங்கள் உடலுக்கு உகந்ததா, இல்லையா என இன்று உங்கள் மூளை தவிக்கத் தொடங்கிவிடும். வழக்கமாக அப்படித்தானே இதுவரை பழக்கியுள்ளோம். எனவே, அந்த நேர உணவைத் தேவைக்கு மேல், சுவைக்காகவோ, உற்சாகத்துக்காகவோ எக்ஸ்ட்ராவாக ஒரு துளி உணவைக்கூட உள்ளே அனுமதிக்காது’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதனால் மிகக் குறைந்த அளவு உட்கொள்ளும்போதே பசி அடங்கிவிடும் நிலையை நான் மட்டுமல்ல, என்னுடன் இருந்த பலரும் தெரிவித்தனர். உங்கள் உண்மையான உணவுத் தேவை இவ்வளவுதானா என்பதையும் நீங்கள் முதல் சில உணவுகளை உண்ணும்போதே உணர்ந்துவிடுவீர்கள். `கொடுத்த காசுக்கு மிச்சம் வைக்காம சாப்பிட்டாகணுமே...’ என ஈட்டிக் கடைக்காரர்போல குத்தித் தள்ளினால்தான் உணவை முழுவதுமாக முடிக்க முடியும்.
அடுத்து..? `எப்படியோ சாப்பிட்டாகிவிட்டது. ஆனால் கை கழுவ என்ன செய்வது? கடவுளே...’ எனப் பதற்றம் வரும். வெட் டிஷ்யூவும் டிரை டிஷ்யூவும் கைக்குப் பரிமாறப்பட்டுவிடும். இதில் இன்னொரு ட்விஸ்ட் உங்கள் அருகில் உள்ளவருக்கான டிஷ்யூவை நீங்கள்தான் தரவேண்டும். `நல்லா கோத்துவிடுறீங்கம்மா’ எனச் சொன்னபடி உங்கள் கையைத் தேடி பின் அவர் கை தேடி, அதற்குப் பின்னர் உடன் வந்தவர் அல்லது அருகிலிருப்பவர் கை தேடி கொடுப்பதற்குள் இருட்டிலும் கண்ணைக்கட்டிக்கொண்டு வரும்.
இன்னமும் அதிகமாகச் சொல்லி முடித்துவிடலாம் ஆனால் இது உணர்வதற்கான தருணம் என்பதால், வார்த்தைகளாலும், கற்பனைவழியும் பார்த்துக்கொண்டிருந்த நாம், கொஞ்சம் உணர்ந்துகொள்ளவும் மிச்சம் வைப்போம்.
இயற்கை கொடுத்திருக்கும் ஐம்புலன்களில் ஒரு புலனை சட்டென நிறுத்திவைத்தால், மற்ற புலன்கள் எவ்வாறெல்லாம் உதவ முன்வரும் என்பதும், அதை எப்படி மூளைக்குப் பழக்கப்படுத்தப் போகிறோம் என்பதும் அத்தனை த்ரில்லான அனுபவம்.
` `Nyctophobia' எனும் இருட்டைக் கண்டு பயப்படும் போபியா சிலருக்கு இருந்தால், துணையுடன் செல்லுங்கள் அல்லது அது உங்கள் சாய்ஸ். பாதுகாப்பான ஓர் இடத்தில் உங்கள் சோல்மேட்டுடன் இந்தப் பயணம் இருட்டின் மீதான உங்கள் பயத்தை ஆராய்ச்சி செய்யவும் அல்லது அரிதாக விடுவிக்கவும் செய்யலாம். என்றாலும், உங்கள் மனதின் வலிமை பொறுத்து இதைக் கையாளலாம்’ என்கிறது அயல்நாட்டு ஆய்வு ஒன்று.
Tumblr media
`டெலிகிராப்’ இதழின் ஆராய்ச்சியில், `கண்களைக் கட்டிக்கொண்டு இருட்டில் உண்பதால், தேவையற்ற உணவுகளையும் கலோரியையும் தவிர்க்க இயலும்’ என்கின்றனர். இதை இன்னம���ம் அதிகமாக அசைபோட்டால் தேவையில்லாமல் உண்ணும் உணவைக் குறைத்து, உணவை வீணாவாக்குவதை உணர்த்தும் இந்த அனுபவம், தனிமனிதச் சிந்தனையில் முற்போக்கு எண்ணங்களை விதைப்பதாக இதன் வாடிக்கையாளர்களால் பேசப்படுகிறது..
``படுத்தபடி டி.வி பார்க்காதே! கண்ணு போயிடும்’’ என உங்கள் குழந்தைக்கு இது வரை நீங்கள் சொன்ன அட்வைஸ் எல்லாம் மூளைக்குச் சென்றடையாமல் மிதந்துகொண்டிருக்கலாம், ஆனால், கண்களின் ஒளி எவ்வளவு முக்கியமானது என்பதைச் சுட்டிக்காட்டும் ஒரு நெகிழ்ச்சியான தருணமாக நிச்சயம் இது அமையும்.
எட்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் என்றால் கட்டாயமாக உடன் அழைத்துச் செல்லுங்கள். பார்வையற்றவர்களின் வாழ்க்கை எப்படியானது என்பதையும், சக மனிதர்களுக்கான உணர்வுகளைப் புரிந்துகொள்ளவும் இது அவர்களுக்குப் பாடமாக அமையும்.
முடிப்பதற்குள் சொல்லியாகவேண்டிய இன்னொரு விஷயம், ஆரம்பத்திலிருந்து அனைவருக்கும் `குரல்காட்டி’யாக இருக்கும் அந்த கணீர் குரலுக்கு சொந்தக்காரர்... பெயர் ஜானகி! அவருக்கு பார்வை இல்லை என்பது உணவகத்தைவிட்டு வெளியே வரும்போதுதான் தெரியவரும். ஜானகியுடன் வழித்துணையாக இருக்கும் இன்னொரு உதவியாளர் செல்வகுமாருக்கும் பார்வை இல்லை என்பது, வழிகாட்டியாக இருக்க விழிப்புடன் இருந்தால் போதும் என்பதையும், அதற்கு அனைத்துப் புலன்களின் விழிப்புஉணர்வு எவ்வளவு அவசியம் என்பதையும் அசைபோடச் செய்யும்.
`திறமை மிக்கவர்கள்’ என்ற எண்ணமெல்லாம் மாற்றுத் திறனாளிகளின் விழிப்புஉணர்வின் முன் மறு விசாரணைக்குள்ளாகும் என்பது திண்ணம்.
ஹோட்டல் மேனேஜர் அனந்த நாராயணனைச் சந்தித்துப் பேசினோம்... ``இது என் அங்கிளோட ஹோட்டல். சென்னை கிளை என் பொறுப்புல இருக்கு. ஹைதராபாத், பெங்களூரூலயும் கிளைகள் இருக்கு. சென்னையில் கிளை தொடங்கி ஆறு மாசங்கள்தான் ஆச்சு. ஆனா, இங்கே எங்களுக்குக் கிடைச்சிருக்கும் ரெஸ்பான்ஸ் வேற லெவல். என் மாமா ஜெர்மனிக்குப் போயிருந்தப்போ, அங்கே இருந்த `டயலாக் இன் த டார்க்’ ரெஸ்டாரன்ட் பத்திக் கேள்விப்பட்டு போய் பார்த்திருக்காங்க. ஜெர்மனியில் இந்த ஹோட்டலின் உரிமையாளர் ஆண்ட்ரூஸின் நண்பர் ஒருவர் திடீரென ஒரு விபத்தில் தன்னுடைய கண்பார்வையை இழந்துவிட்டார். அதன் பிறகு அவரை எல்லோரும் அணுகுகிற முறை ஆண்ரூஸுக்குப் பிடிக்கவில்லை. பார்வையற்றவர்களின் மேல் இருக்கும் பொதுவான கருத்தையும், அவர்கள் மேல் காட்டும் பரிதாபத்தையும் மாத்தணும்னு அவர் யோசிச்சதோட விளைவுதான் `டயலாக் இன் த டார்க்.’
பார்வை இல்லாதவங்களோட கண்கள் எந்த அளவுக்கு இருட்டுக்குப் பழக்கப்பட்டிருக்கும், இப்படிப்பட்ட இருட்டில்கூட அவங்க தன்னம்பிக்கையோட தங்களோட வேலைகளை சக மனிதர்கள்போல எப்படிச் செய்யறாங்கனு நாம் புரிஞ்சிக்க இந்த ரெஸ்டாரன்ட்டில் சாப்பிடும் அனுபவம் சிறந்ததாக இருக்கும். மதியம் மற்றும் இரவு இயக்கப்படும் இந்த ரெஸ்டாரன்ட்டில் தினமும் மெனு மாற்றப்படும். இதிலிருந்து வரும் லாபம் `Ace Foundation’ எனப்படும் எங்களோட அறக்கட்டளைக்கு செல்கிறது. அதன் மூலம் பல பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கச் செய்வது, ஸ்கில் டெவலப்மென்ட், தொழில்நுட்பப் படிப்புகள் போன்றவையும் கற்றுத்தரப்படுகிறது’’ என்கிறார் அனந்த நாராயணன்.
சாப்பிட்டு முடித்து வழியனுப்பும் முன்னர், `ஃபேஸ்புக்கில் எங்கள் பக்கத்தை லைக் செய்யுங்கள்’ எனச் சொல்லி அனுப்புகிறார்கள். `வெளிச்சத்தில் அனுப்புவதென்றால் எதை வேண்டுமானாலும் செய்கிறோம், தயவுசெய்து வெளிச்சத்தைக் காட்டுங்கள்’ என மன்றாடாத குறையாகவே வெளிவரும் அந்த நொடி... பிறந்த குழந்தைபோல மீண்டும் ஒருமுறை உங்கள் கண்களை வெளிச்சத்துக்குப் பழக்கப்படுத்திக்கொண்டிருப்பீர்கள்.
இந்தப் பயணம் உண்மையில் உங்கள் புலன்கள் குறித்த விழிப்புஉணர்வை உங்களுக்குள் விதைத்துப் போகச்செய்யும் இலக்கு. இழந்த பின் அல்ல... இருக்கும்போதே புலன்களின் அருமையை அறிய அவசியம் பார்க்கவேண்டியதில் `டேஸ்ட் ஆஃப் டார்க்னெஸ்’-ஸும் ஒன்று!
0 notes
revise-organise-blog · 8 years ago
Text
'வணிக வளாகங்கள்மீது நடவடிக்கை எடுக்க அரசியல் நிலை சரியில்லை..!' - அரசின் விளக்கம்
Tumblr media
அங்காடித் தெருவின் அவலங்களைத் தடுக்க முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காமல், சென்னை சில்க்ஸ் தீ விபத்துக்குப் பிறகு அரசு இப்போது செத்த பிணத்தைக் கூறாய்வு செய்துகொண்டிருக்கிறது.
தொடரும் அலட்சியம்
தியாகராய நகர் ரங்கநாதன் தெருவிலுள்ள ஒரு பிரபல கடையில் சில ஆண்டுகளுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. அதேபோல கடந்த ஆண்டு பனகல் பார்க் அருகிலுள்ள ஒரு ஜவுளிக் கடையின் கட்டடம் திடீரென ஆட்டம் கண்டதாகத் தகவல் வெளியானது. இப்படி அவ்வப்போது தி.நகர் பற்றி அதன் விதிமீறல்கள் பற்றி செய்திகள் வந்தாலும் அரசாலும், அதிகாரிகளாலும் நடவடிக்கை  எடுக்கப்படாமல் இருக்கும் அலட்சியம் தொடர் கதையாகவே இருந்து வருகிறது. சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் நடந்த தீ விபத்தின் தாக்கத்தால் தி.நகரின் பாதுகாப்புத் தன்மை குறித்த சாதக, பாதகங்கள் அலசப்படுகின்றன. விவாதங்களுக்கும், அலசல்களுக்கும் ஒரு விபத்து தேவைப்படுகிறதே என்பதுதான் நிதர்சனமான உண்மை.
தியாராய நகரிலுள்ள கட்டடங்களில் தீத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று 3 ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார் தியாகராய நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தைச் சேர்ந்த செயலாளர் கண்ணன் அவரிடம் பேசினோம். " 2014-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தாக்கல் செய்தோம். அதில், தியாகராய நகரிலுள்ள கட்டடங்களில் தீத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா என்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டிருந்தோம். 
அப்போது தலைமை நீதிபதியாகயிருந்த சஞ்சய் கவுல், தி.நகர் மொத்தமும் ஆய்வு நடத்துவது சாத்தியமில்லை. எந்தெந்தக் கட்டடங்களில் ஆய்வு செய்ய வேண்டும் என்று பட்டியல் கொடுங்கள் என்று கேட்டார். அதன்படி சென்னை சில்க்ஸ், சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட 15 கடைகளில் தீத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறதா என்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தோம்.
15 கடைகளில் தீத்தடுப்பு நடவடிக்கை இல்லை
எங்கள் மனுவின் படி தீயணைப்புத் துறை சார்பில்  சென்னை சில்க்ஸ் உட்பட 15 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி 15 கடைகளிலும் தீத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரியவந்தது. எனவே, அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டோம். அதற்கு அரசு தரப்பில் ஒரு சில மாதங்களுக்கு முன்பு அளித்தபதிலில், இப்போது தமிழக அரசின் நிலைமை சரியில்லை. பிரச்னை சரியானதும் உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். இதிலிருந்து தெரிந்தே இந்த அரசு தரப்பில் பெரும் தவறை இழைத்திருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதற்கு துணை போன அதிகாரிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தி.நகரிலுள்ள வணிகக் கட்டடங்கள் டிரேடர் லைசென்ஸ் வாங்கியிருக்க வேண்டும். ஆனால், எந்த ஒரு கடையும் டிரேடர் லைசென்ஸ் வாங்கவில்லை. எத்தனை கடைகள் டிரேடர் லைசென்ஸ் வாங்கியிருக்கின்றன என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் சென்னை மாநகராட்சியில் கேட்டிருந்தோம். ஆனால், அவர்கள் உரிய பதில் தரவில்லை. டிரேடர் லைசென்ஸ் வாங்க வேண்டும் என்றால், பில்டிங் பிளான் அனுமதி, தீத்தடுப்பு லைசென்ஸ் வாங்க வேண்டும். இதனை யாருமே வாங்கவில்லை. அதிகாரிகள், போலீஸாரைக் கைக்குள் போட்டுக்கொண்டு கடைக்காரர்கள் விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர்.
Tumblr media
அப்பட்டமான விதி மீறல்
சென்னை முழுவதும் எத்தனை விதிமுறை மீறல் கட்டடங்கள் இருக்கின்றன என்று 2007-ம் ஆண்டு சி.எம்.டி.ஏ-வில் ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் தி.நகரிலுள்ள கடைகள் பற்றியும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், இவ்வளவுக்குப் பிறகும் விதிமுறைகளை மீறித்தான் கட்டடங்கள் கட்டுகின்றனர். மற்ற குற்றங்களுக்குத் தண்டனை இருக்கிறது. ஆனால், கட்டட விதிமுறை மீறலுக்குத் தண்டனை இல்லை. தண்டனை கொடுக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும். அதே போல பில்டிங் பிளான் அப்ரூவல் மட்டுமே அரசு தரப்பில் கொடுக்கப்படுகிறது. ஆனால், கட்டடத்தின் தரம் குறித்து ஆய்வு செய்வதில்லை.
சி.எம்.டி.ஏ-வில் நில உபயோக மண்டலம் என்ற வரைபடம் இருக்கிறது. அந்த வரைபடத்தின்படி குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வணிக நிலம் இருக்கிறது. ஆனால், அந்த வரைபடத்தில் இருப்பதற்கு மாறாக தி.நகரில் பல இடங்களிலுள்ள வணிகக் கட்டடங்கள் விதிமுறையை மீறிக் கட்டப்பட்டிருக்கின்றன. முதலில் இந்தச் சட்டவிரோத கட்டடங்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.  
0 notes
revise-organise-blog · 8 years ago
Text
மிஸ்டர் கழுகு: ‘பிரித்து’ ஆளும் பி.ஜே.பி!
‘‘வாரும்... வாரும்... உமக்காக நம் அலுவலகக் கதவு எப்போதும் திறந்தே இருக்கும்” என கழுகாரை வரவேற்றோம்.
‘‘என்ன... அமித் ஷா எஃபெக்டா?” என்று சிரித்த கழுகாரை அமரவைத்து, அவருக்காக வாங்கி வைத்திருந்த குஜராத்தி இனிப்புகளை டேபிளில் பரப்பினோம். எடுத்து ருசித்தவர், ‘‘ரஜினிக்காக பி.ஜே.பி-யின் கதவுகள் திறந்தே இருக்குமென அமித் ஷா சொன்னது, ரஜினி பற்றிய செய்திகள் தேசிய மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தன. 
விரைவில் ரஜினி - மோடி சந்திப்பு நிகழும். சொல்லப்போனால், கடந்த 21-ம் தேதி பிரதமர் மோடி-ரஜினி சந்திப்பு நடப்பதாக இருந்தது. ஆனால், 21, 22 தேதிகளில் மோடி குஜராத் சுற்றுப்பயணம் சென்று விட்டதால், அந்தச் சந்திப்பு தற்காலிகமாகத் தள்ளிப் போடப்பட்டுள்ளது. இனி அடுத்து எப்போது என்பது, பிரதமர் மோடி தீர்மானித்த பிறகுதான் தெரியவரும். அந்த நேரத்தில் ரஜினியும் அமித் ஷாவும் தனியாகப் பேச உள்ளார்கள். பி.ஜே.பி-யின் ‘தமிழ்நாடு பிளான்’ பற்றி ரஜினிக்கு அமித் ஷா விவரிப்பார் என டெல்லி தகவல்கள் சொல்கின்றன.’’
‘‘மோடியிடம் ரஜினிக்கு அப்பாயின்ட்மென்ட் கிடைக்கிறது... ஆனால், தமிழக பி.ஜே.பி-யினர் ரஜினியைக் கடுமையாக விமர்சிக்கிறார்களே?’’
‘‘ரஜினி அரசியலுக்கு வந்தால்... அதுவும்  பி.ஜே.பி-யின் பக்கம் வந்தால்... தாங்கள் அடிபட்டுப் போய்விடுவோம் என்ற அச்சம் சிலருக்கு. தங்களில் ய���ரையும் பாராட்டாமல், மு.க.ஸ்டாலின், அன்புமணி, திருமாவளவன், சீமான் போன்றவர்களை ரஜினி பாராட்டியதில், அவர்களுக்கு உள்ளுக்குள் கொஞ்சம் வெறுப்பு. அதனால்தான், ரஜினியின் கருத்து வெளியானதும் பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ‘ரஜினி பாராட்டிய தலைவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லையா?’ என்று கேட்டு நிறுத்திக்கொண்டார். 
ஹெச்.ராஜா, ‘போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று ரஜினி கூறியுள்ளார். போர் வரும்போது பி.ஜே.பி-யும் பார்த்துக் கொள்ளும்’ என்றவர், அதன்பிறகு ஈரோட்டில் பேசும்போது, ‘ரஜினி சிஸ்டம் கெட்டுவிட்டது என்று கூறியிருக்கிறார். அந்த சிஸ்டம் கெட்டுப்போனதற்குத் திராவிடக் கட்சிகள்தான் காரணம். அப்புறம் ஸ்டாலினை அவர் ஏன் பாராட்டுகிறார்’ என்று கேட்டார். சுப்பிரமணியன் சுவாமி, ‘ரஜினிக்கு அரசியல் பற்றி ஒன்றும் தெரியாது. அவருக்குப் படிப்பறிவு போதாது. அவர் சினிமாவில் மட்டும் நடிக்கட்டும்’ என்று சொன்னார்.
 ஆனால், அதன்பிறகு ‘அரசியலுக்கு வர படிப்பு தேவையில்லை’ என்று லேசாகப் பின்வாங்கினார். முதலில் ரஜினியின் கருத்தை விமர்சித்துவிட்டு, அதன்பிறகு பி.ஜே.பி தலைவர்கள் பின்வாங்கியதற்குக் காரணம் டெல்லியில் இருந்து வந்த உத்தரவுகள்தான்.’’
‘‘தமிழக ஆளுங்கட்சித் தரப்பிலிருந்தும் ரஜினிக்குக் கடுமையாக எதிர்ப்புகள் வந்துள்ளனவே?”
‘‘ஊட்டி மலர்க் கண்காட்சிக்குப்போன நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்      எஸ்.பி.வேலுமணியும் ரஜினி பேச்சு பற்றி ஆலோசனை செய்துள்ளனர். ‘முதல்வர் பொறுப்பில் இருந்துகொண்டு நீங்கள் பேசுவது நன்றாக இருக்காது. நான் டீல் செய்துகொள்கிறேன்’ என்று சொன்னாராம் வேலுமணி. ‘ரஜினியை யார் யாரெல்லாம் எதிர்த்தார்களோ, அவர்களை நல்லவர்கள் என்று தெரிவித்துள்ளார். தமிழக ஆட்சியைப் பற்றி ரஜினி சொல்லும் அரசியல் கருத்துகள் தவறானவை.
 காவிரி பிரச்னைக்காக நடிகர் சத்யராஜ் குரல் கொடுத்ததால் பாகுபலி-2 படத்துக்குப் பிரச்னை வந்தது. கர்நாடகாவில் சத்யராஜுக்கு எதிராகப் போராட்டம் நடந்தது. அப்போதெல்லாம் பேசாத ரஜினி, இப்போது அரசியல் பேசுவது ஏன்?’ என சீறினார். ராதாபுரம் எம்.எல்.ஏ இன்பதுரை, ‘நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாக முன்பு ரஜினி அறிவித்திருந்தார். நிஜமாகவே அவருக்குத் தமிழக மக்கள் நலனில் அக்கறை இருந்தால், அந்த ஒரு கோடி ரூபாயை நெல்லை மாவட்டம், தாமிரபரணி - நம்பியாறு - கருமேனியாறு இணைப்புத் திட்டத்துக்கு வழங்க வேண்டும்’ என்றார். அடுத்தடுத்து ஆளும் தரப்பில் இருந்து அவருக்கு நெருக்கடிகள் வரலாம் என்கிறார்கள்.’’
Tumblr media
‘‘ரஜினி இப்போது என்ன செய்கிறார்?”
‘‘ரஜினி முன்புபோல் இல்லை. ‘இந்தமுறை அவர் ஒரு தீவிரமான திட்டத்தோடு இருக்கிறார்’ என்கிறார்கள் அவரின் பால்ய கால நண்பர்கள். ரஜினியை முன்னிலைப்படுத்தும் வேலைகளும் வேகம் பிடிக்கத் தொடங்கிவிட்டன. ‘அவர் தனிக்கட்சி ஆரம்பிப்பது உறுதி’ என்கிறார்கள், அவருக்கு நெருக்கமானவர்கள். அந்த நோக்கத்தை நிறைவேற்றும் பாதையில்தான் இப்போது ரஜினியின் பயணம் இருக்கிறது. ரசிகர்கள் சந்திப்புக்குப் பிறகு ரஜினி, தன்னுடைய நண்பர்கள், பணியாளர்கள், உதவியாளர்கள் குடும்பத்தினரைச் சந்தித்தார்.
 ‘இதற்கு முன்பு ரஜினி இவ்வளவு மெனக்கெட்டு எப்போதும் களத்தில் இறங்கியது இல்லை. அவரே சொன்னதுபோல், போர் வரும்போது நிச்சயம் இந்த முறை படை எடுப்பார்’ என்கிறார்கள், ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர். அதனால், அது தனிக்கட்சியாக இருக்குமா அல்லது பி.ஜே.பி-யுடனான சங்கமமாக இருக்குமா என்பதுதான் இப்போதைக்கு அவருக்குள் இருக்கும் குழப்பம். தமிழக ஆளும் தரப்பிலிருந்து குடைச்சல்கள் வந்தால், அவர் ஒருவேளை       பி.ஜே.பி-க்கு நெருக்கமாகப் போகக்கூடும் என்பதே அவருக்கு நெருங்கிய வட்டாரங்களின் கணிப்பாக இருக்கிறது.’’
‘‘தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குப் பிரதமரைச் தனியாகச் சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கிடைக்கவில்லை... எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அப்பாயின்ட்மென்ட் கிடைக்கவில்லை... ஆனால், ஓ.பி.எஸ் சர்வசாதாரணமாகப் போய் பிரதமரைச் சந்தித்துவிட்டு வருகிறாரே?’’
‘‘இதே கேள்வியை மனம்நொந்து ஸ்டாலின் கேட்டார். ‘எந்தப் பதவியிலும் இல்லாத பன்னீர்செல்வத்தைச் சந்தித்த பிரதமர், அனைத்துக்கட்சிக் கூட்டத்தின் தீர்மானத்தை எடுத்துச் சொல்ல எனக்கு நேரம் ஒதுக்கவில்லை’ எனக் குற்றம்சாட்டினார் ஸ்டாலின். பிரதமர் மோடியின் தயாரிப்புதானே ஓ.பி.எஸ். அதனால், அவருக்குத்தான் அப்பாயின்ட்மென்ட் கிடைக்கும். அதுவும் ஒரு மணி நேரம் 35 நிமிட சந்திப்பு என்பதுதான் அதில் ஹைலைட். ஏனென்றால், மற்ற தலைவர்கள் யாராக இருந்தாலும்... அவர் எவ்வளவு பெரிய தேசியத் தலைவராக இருந்தாலும்... 
மாநிலத்தில் பி.ஜே.பி கூட்டணியில் உள்ள தலைவர்களாக இருந்தாலும்... அவர்களுக்கு எல்லாம் அதிகபட்சமே 30 நிமிடங்கள் மட்டும்தான் அப்பாயின்ட்மென்ட். ஆனால், ஓ.பி.எஸ்ஸுக்கு ஒரு மணி நேரம் 35 நிமிடங்கள். ஓ.பி.எஸ்ஸுடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், மைத்ரேயனும் சென்றிருந்தனர். நால்வரையும் உட்காரவைத்து முதலில் 45 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர். அதன்பிறகு மற்றவர்கள் வெளியில் வந்துவிட ஓ.பி.எஸ்ஸிடம் தனியாகப் பிரதமர் மோடி பேசிக்கொண்டிருந்தார்.”
‘‘சந்திப்பில் முக்கியமாக என்ன பேசப்பட்டதாம்?”
‘‘பிரதமரைச் சந்திக்கச் செல்வத���்கு முன்பாக, ‘உள்ளாட்சித் தேர்தலைத் தமிழக அரசு உடனடியாக நடத்தத் தயாரா?’ என ஓ.பி.எஸ் ஆதரவு எம்.பி. மைத்ரேயன் சவால் விட்டார். இதிலிருந்தே, சந்திப்புக்குச் செல்வதற்கு முன்பாக இருந்த மனநிலையைப் புரிந்துகொள்ளலாம். சந்திப்பில் ஓ.பி.எஸ், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், மைத்ரேயன் என நான்கு பேரும் இருந்தபோது, தமிழக அரசியல் நிலவரம் குறித்துக் கேட்டுத் தெரிந்துகொண்டாராம் மோடி. 
எடப்பாடி அரசில் இன்னமும் சசிகலா குடும்பத்தினர் செலுத்தும் ஆதிக்கம் குறித்த தகவல்களை அவர்கள் எடுத்துச் சொன்னார்களாம். அதன்பிறகு ஓ.பி.எஸ்ஸிடம் தனியாக மோடி பேசினார். அப்போது அவர், ‘ஜனாதிபதி தேர்தல் வரை எடப்பாடி ஆட்சியைத் தொந்தரவு செய்யும் நோக்கத்தில் எதுவும் செய்ய வேண்டாம். ஆனால், அவர்கள் செய்யும் தவறுகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் வேலைகளைச் செய்யுங்கள். இவர்களை விமர்சனம் செய்யும் அதே வேகத்தில் தி.மு.க-வையும் கண்டித்துப் பேசுங்கள்’ என்று சொன்னதாகத் தெரிகிறது. ரஜினியின் செல்வாக்கு, அவருடைய அரசியல் பேச்சுகள் குறித்தும் கேட்டுத் தெரிந்து கொண்டாராம்.’’
Tumblr media
‘‘அப்படியா?”
‘‘பிரதமரைச் சந்தித்துவிட்டு வந்தபிறகு விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் வழக்கத்தைவிட காரத்தோடு ஓ.பி.எஸ் பேசினார். ‘தமிழகத்தில் கையாலாகாத அரசுதான் இருக்கிறது. மக்கள் பிரச்னைகள் குறித்து அரசுக்குக் கவலை இல்லை. உள்ளாட்சித் தேர்தல் இவர்களுக்குப் பாடமாக அமையும்’ என்றார். குடிநீர், நதிநீர் பிரச்னைகளை எடுத்துக்கொண்டு எடப்பாடி அரசையும், தி.மு.க-வையும் விமர்சனம் செய்தார்.’’    
‘‘உள்ளாட்சித் தேர்தலில் பி.ஜே.பி-யோடு கூட்டணி வைக்க ரெடியாகிறாரா?”
‘‘மோடியைச் சந்தித்துவிட்டு வெளியில் வந்ததும் சில நிருபர்களுக்கு ஓ.பி.எஸ் அப்படி பேட்டி கொடுத்தார். அத்துடன் அவருடைய அதிகாரபூர்வ ட்விட்டரிலும் அப்படி ஒரு பதிவு வெளியானது. ஆனால், அடுத்த அரை மணி நேரத்தில் அந்த ட்வீட்டை ஓ.பி.எஸ் நீக்கிவிட்டார். ‘இப்போதே கூட்டணி வைப்போம் என்றால், தனிக்கட்சி ஆரம்பித்தா... அல்லது அ.தி.மு.க-வுடன் இணைந்துவிட்டா... என்றெல்லாம் தேவையில்லாத குழப்பங்கள் வரும். ஜனாதிபதி தேர்தல் ஜூலையில் நடக்கவுள்ளது. அதுவரை பொறுமையாக இருங்கள்’ என்று டெல்லி உத்தரவு வந்தது. ஆனாலும், பிரதமர் மோடியைச் சந்தித்த உற்சாகம் குறையாமல் இருக்கிறது அந்த அணி.’’
‘‘சந்திப்புப் புகைப்படங்களில் இருந்த வித்தியாசத்தைப் பார்த்தீர்களா?’’
‘‘எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் பிரதமர் மோடியை மின்துறை அமைச்சர் தங்கமணி சந்தித்தபோது, ஒரே ஒரு புகைப்படம் வெளியானது. அதில் தங்கமணியை நிற்கவைத்து பிரதமர் பூங்கொத்து வாங்கும் படம் மட்டும் வெளியானது. ஆனால், ஓ.பி.எஸ் அணி போனபோது, நான்கு புகைப்படங்கள் வெளியாகின. ஓ.பி.எஸ்ஸை மட்டுமல்ல... அவருடன் சென்ற அனைவரையும் மிக மரியாதையாக அமரவைத்தும், நெருக்கமாக இருப்பது போன்றும் புகைப்படங்கள் எடுத்து வெளியிடப்பட்டன. இதுவே எடப்பாடி அணியை எரிச்சல்படுத்துவதற்காகத்தான் என்கிறார்கள்.’’
‘‘ம்ம்ம்... முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பிரதமரைச் சந்திக்கிறாரே?
‘‘ஆம். கடந்தமுறை தமிழக முதல்வருக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுக்காத பிரதமர் மோடி இந்தமுறை கொடுத்துள்ளார். ஓ.பி.எஸ் அணியினரை ஒரு மணி நேரம் 35 நிமிடங்கள் மேலாகச் சந்தித்த மோடி, இந்தமுறையும் தமிழக முதல்வரைச் சந்திக்க நேரம் கொடுக்கவில்லை என்றால், அது சர்ச்சைகளைக் கிளப்பும் என்பதால் அப்பாயின்ட்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
‘ஆரம்பத்தில் இருந்தே மோடியும், பி.ஜே.பி-யும் ஆடும் ஆட்டத்தின் தொடர்ச்சிதான் இது.        ஓ.பி.எஸ் அணியை எடப்பாடி அணியைக்காட்டித் தட்டிவைப்பதும், எடப்பாடி அணியை ஓ.பி.எஸ் அணியைக்காட்டித் தட்டிவைப்பதும்தான் அவர்களின் விளையாட்டு’ என்று சொல்லிச் சிரிக்கிறார்கள் டெல்லியில்.’’
‘‘அப்படியானால் என்னதான் நடக்கும்?’’ ‘‘எதுவும் நடக்காது. ‘ஓ.பி.எஸ் அணிக்காக எடப்பாடி ஆட்சியைக் கலைப்பதோ... அவர்களின் அமைச்சர்களை ரெய்டுகள் நடத்தி மிரட்டுவதோ இப்போதைக்கு இல்லை. அதுபோல, எடப்பாடி அணிக்காக முற்றிலுமாக ஓ.பி.எஸ் அணியை ஒதுக்குவதும் பி.ஜே.பி-யின் திட்டத்தில் இல்லை. மாறாக, இருவரையும் பிரித்துவைத்து, இரட்டை இலையை யாருக்கும் கிடைக்காமல் செய்து, அ.தி.மு.க-வைப் பலவீனப்படுத்துவதே பி.ஜே.பி-யின் திட்டம். அது சரியான திசையில் போய்க்கொண்டிருக்கிறது’ என்கிறார் பி.ஜே.பி டெல்லி பிரமுகர் ஒருவர்.’’
‘‘தோப்பு வெங்கடாசலம், செந்தில்பாலாஜி, பழனியப்பன் உள்ளிட்ட எம்.எல்.ஏ-க்கள், திங்கட்கிழமை முதல்வர் எடப்பாடியைச் சந்தித்தார்களே?’’
‘‘கடந்த வாரம் இவர்களின் ரகசியக் கூட்டம் எம்.எல்.ஏ ஹாஸ்டலில் நடைபெற்றது அல்லவா... அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைக் கொண்டுபோய் முதல்வர் எடப்பாடியிடம் கொடுத்துள்ளனர். அதை ஒருவித மிரட்டல் தொனியில் செய்துள்ளனர். அதனால் எடப்பாடி பழனிசாமி ஏக டென்ஷனில் இருக்கிறார். ‘பிரதமரைச் சந்தித்து டெல்லியின் மனநிலையை அறிந்துகொண்டு வருகிறேன். அதன்பிறகு உங்கள் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும். பொறுமையாக இருங்கள்’ என்று சொல்லி அனுப்பினாராம்.
 அதோடு கிளம்பாத அவர்கள், வரிசையாக செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் அனைவரையும் தனித்தனியாகப் போய்ப் பார்த்தனர். மூன்று மணி நேரம் கோட்டையில் அமைச்சர்கள் இருக்கும் தளத்தில் இவர்கள் வலம் வந்துள்ளனர். அதன்பிறகு தம்பிதுரையும் வைத்திலிங்கமும் வந்து எடப்பாடியைப் பார்த்தனர். எம்.எல்.ஏ-க் களைச் சமாளிக்கும் வியூகம் அப்போது வகுக்கப்பட்டதாம்” என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகார், போகிற போக்கில்... ‘‘டெல்லியில் தமிழக அரசு சார்பில் உயர் பொறுப்பில் இருந்த அதிகாரி ஒருவர் ராஜினாமா செய்திருக்கிறார். 
தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன்மீது போடப்பட்ட வழக்கில், இவரையும் விசாரிக்க டெல்லி போலீஸ் முடிவு செய்துள்ளதாகத் தகவல். இந்த விவகாரத்தில் தினகரனுக்கும் சில அதிகாரி களுக்கும் அவர் பாலமாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. விசாரணையால் அரசுக்கு எழும் சங்கடங்களைத் தவிர்க்கவே, அவரை ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொண்டார் களாம்’’ என்று ஒரு கொசுறு தகவலைச் சொல்லிவிட்டுப் பறந்தார்.
Reference = Junior Vikatan  
0 notes
revise-organise-blog · 8 years ago
Text
Twitter Followers Seven Ways to Get More for your Business
Were you aware that @CNN has over twelve million Twitter followers? Access like that can’t be bought (well, it can, but heres why you shouldnt buy Twitter followers), but there are concrete ways your business can systematically build a bigger, deeper list of real followers.
Maybe 12,000,000 followers is a bit of a lofty goal, but what about 1,000 or even 100,000? Here are a few things you can do to help build your business’ Twitter readership without spending a fortune:
1. Follow, Follow, Follow
Really. It’s that easy. Up to a certain point, following at random can get you a lot of traction. At first, try and choose whom you follow based on whom you think makes sense: if you’re a record company follow the types of artists you like, for example. Remember to aim low (don’t just focus on celebrities and huge brands) and to keep your Followers-to-Following ratio around 1:3 if you can help it to avoid SPAM alerts.
Tumblr media
2. Tweet @ People
It’s amazing how many businesses simply throw out information and hope people read. The average Twitter user follows over 100 people, meaning your Tweets get shuffled to the bottom pretty quickly. You need to actively direct people who may be interested in what you have to say to your content. That’s what the @ function is for! Write an article about cooking tips on your business blog? Tweet it at the food influencers in your local area.
3. Tweet More Regularly
Only 41% of Twitter users say they Tweet every day or more. Be part of that 41%! The more regular you are, the more authoritative your Twitter presence will be and the more likely your content will be seen. Be sure to mix up the times of the day you Tweet and the hashtags you use to catch the most “fish.”
4. Put Out Good Content
Content marketing is all about creating content people actually want to read. The more useful, pertinent, and interesting your content, the more naturally viral it’s going to become. Create good content, Tweet said content, and watch your Twitter base grow as people share what you’ve written with their cultivated networks.
5. Utilize Twitter Promotions
You’re a business… use this to your advantage. Ask customers to follow you for 10% off or to catch weekly updates on sales and giveaways. Offer something that saves people money and they’ll follow in droves but remember, don’t be too promotional or you’re going to turn followers off.
6. Add Twitter Widgets
If your business site, Facebook page, or emails are really popular, tap into that market. Add Twitter widgets wherever you can that encourage people to follow you, ReTweet, and even share your content on Twitter. The easier you make it, the more often people will respond.
Tumblr media
7. Pick a Niche
There’s a lot of clutter on Twitter. One of the best ways you can develop a reliable following is to be the best at something. Maybe you sell pet products: why not Tweet a picture of a customer’s pet each day? Or perhaps you’re a tax professional. Give away a useful tax tip each day and people will have a reason to share and follow your handle. Incentivize.
Twitter isn’t complicated, but it does take some work to master. Never assume people will follow you “just because” and don’t think of social media as an afterthought, either. A carefully managed Twitter plan will get you far – and up your number of followers in no time.
0 notes
revise-organise-blog · 8 years ago
Text
Content Marketing Hows Your Follow-Through?
So, you just spent most of the week writing THE best ebook on something-or-other. People are downloading it like mad and youre feeling pretty good about yourself, right? Well, you should. Looks like youve mastered the are of the effective call to action and you know how to spread the word about your content.
But then what? If youre waiting for the phone to start ringing when people who read your ebook are overcome and want to buy your products or hire you immediately, you are likely to be very disappointed. You might even feel taken advantage and think, All that work, and what do I get out of it?
It doesnt have to be that way. Sure, anyone can read my blog posts without telling me anything about themselves, but on this site, I also have 14 downloadable online marketing resources that took many hours of research, writing and design. Theyre also available for free. Im happy to help!
Tumblr media
However, I do want to know who is reading my premium material and I want to be able to follow up with them.  So, I put them behind landing pages, where I collect a little information from each person who wants download them.
Wait, You Say Its Free, But You Ask For Information Doesnt That Turn People Off?
Does it limit the number of downloads for each of my ebooks, whitepapers and case studies? Sure, over half of the people who get to my landing pages dont want the content badly enough to tell me a few little things about themselves. But thats OK. Id rather have just a few downloads and be able to check in with my readers.
After the Download, Follow Up with Email
We use HubSpots software, which allows us to easily keep in touch with people who have expressed interest in our content, but you can do this manually. Ill send one email right away, thanking them for coming by and providing a link to the content they wanted, so they can get it again anytime without having to fill out the form again.
A few days later, Ill send another email, with a link to the form (so I can see who downloads again), and suggesting some related content they might want to read. This could be a blog post or another downloadable resource. I repeat the process a few more times and by then they are probably pretty confident that I know online marketing, so I offer to spend some time talking about their business, their goals and needs and to provide them with a few tips. No pressure, no sales pitch I promise!  If I get no response, thats fine, but sometimes I do!
If I dont hear back, theyll receive our monthly blog recap unless they decide to opt-out.  If they donwloaded a platform-specific ebook, I will put them in a special email list so I can update just those people when I have a new offer or an especially juicy series of blog posts that I think theyll enjoy.
After the Email, Follow Up on Twitter
When you have names and email addresses, you can often locate people on Twitter. You can add them to a special list, say, People who downloaded ebookX and keep in touch in a helpful, non-creepy way! Again, if you publish something you think they would like (or you find something really great that someone else published), you can mention them and share the link.  You could also reply to them if they post questions.
Do People Like It When You Follow Through Like This?
You will get a few unsubscribes. No problem! Maybe your content isnt quite what they were looking for. The trick to keeping people engaged and looking forward to their next contact with you is to be so incredibly helpful, that they would miss you if you stopped! How can you do that? Thats a subject for another post, but Im guessing you can figure it out.
Tumblr media
Ready to Create Your First Content Offer?
An article I wrote for Search Engine People outlines every single step I take before releasing a new piece of content:
Choosing a topic.
Writing your content.
Creating a supporting blog post.
Creating landing pages.
Creating email follow-ups.
Releasing the content.
Using Twitter to reach interested persons.
Using social media to promote your offers.
Read More: Content Strategy: Maximize Results By Following Up With Follow Throughs
Love content marketing, but just dont know how to begin? We can help. It starts with a free consultation that will help you pinpoint your goals. Well give you some actionable suggestions and then, if you think we can help, well have another talk to come up with a plan just for you.  Either way, youll come away with some ideas you can implement on your own.
0 notes