#வ���யக
Explore tagged Tumblr posts
Video
youtube
இராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த அமெரிக்கா-இலங்கை தீர்மானம் இராணுவத்துக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கு அமெரிக்காவும் இலங்கையும் இணங்கியுள்ளன. வொஷிங்டனில் நடந்த உயர்மட்டப் பேச்சுக்களை அடுத்து வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையிலேயே இரண்டு நாடுகளும் இதனைத் தெரிவித்துள்ளன. “ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றுக்கான அர்ப்பணிப்பின் அடிப்படையில், அமெரிக்கா-இலங்கை பங்குடமை கலந்துரையாடல் மே 6 ஆம் திகதி வொஷிங்டனில் நடைபெற்றது. வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலர் டேவிட் ஹாலே ஆகியோரின் இணைத் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது. இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவத்தையும், இரண்டு அரசாங்கங்களும் மீள உறுதிப்படுத்தின. பங்குடமையை மேலும் வலுப்படுத்துவதற்காக பணியாற்றுவதற்கும் உறுதி பூண்டுள்ளன. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலை அடுத்து, தீவிரவாதத்துக்கு எதிரான இலங்கையுடன் இணைந்து நிற்பதை வெளிப்படுத்தி அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்ட அறிக்கை மற்றும் இலங்கைக்கு உதவி வழங்குவதாக எடுக்கப்பட்ட முடிவை அமெரிக்கா மீண்டும் உறுதிப்படுத்தியது. அமெரிக்காவின் இந்த உதவியை இலங்கை மதிக்கிறது. கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரக��்தின் பன்முக உதவிகள், எவ்.பி.ஐ. புலனாய்வாளர்களின் விசாரணை உதவிகள் மற்றும் எதிர்காலத்தில் சாத்தியமாகக் கூடிய உதவிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அனைத்துலக சட்டங்களை மதிக்கும் வகையில் இந்தோ -பசுபிக் சமுத்திரங்களில், பாதுகாப்பான கடல் பயணங்களை உறுதிப்படுத்துவதற்கு, அமெரிக்காவும் இலங்கையும் இணைந்து பணியாற்றும். கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான அமெரிக்க ஆதரவு, கூட்டு இராணுவ செயற்பாடுகள், இலங்கையின் அமைதி காப்பு நடவடிக்கைகள், இலங்கை அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் பயிற்சி அளிப்பது அமெரிக்க கப்பல்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளின் வருகைகள், உள்ளிட்ட தற்போதுள்ள இருதரப்பு பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை இரண்டு நாடுகளும் வரவேற்றன. இராணுவ- ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தவும் இணக்கம் காணப்பட்டுள்ளது. நிலையான அமைதி மற்றும் செழிப்பை ஏற்படுத்துவதற்கான, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், நீதி மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிக்கும் இலங்கையின் அர்ப்பணிப்பை அமெரிக்கா வரவேற்கிறது. காணாமல் போனோர் பணியகம், இழப்பீடுகளுக்கான பணியகம், மற்றும் படையினர் வசமிருந்த நிலங்களை மீளளிப்பது தொடர்பான விடயங்களில் காணப்பட்டுள்ள முன்னேற்றங்களை அமெரிக்கா ஏற்றுக் கொள்கிறது. ஜனநாயகம், ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் நடைமுறைகள், நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சி, நீதி மற்றும் பாராளுமன்ற நடைமுறைகளை வலுப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் தனது கடப்பாடுகளை வலியுறுத்தியுள்ளது. இந்த கடப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு அமெரிக்கா ஊக்கமளிக்கும்.” என்றும், அதில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தின்போது, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டனையும் வெளிவிவகார அமைச்சர் சந்தித்துள்ளார். @ஊர்குருவி by Oor Kuruvi - ஊர்குருவி
0 notes
Text
முடிந்தது விடுமுறை எகிறியது காய்கறி விலை
முடிந்தது விடுமுறை எகிறியது காய்கறி விலை
சென்னை:பள்ளி விடுமுறை முடிவடைந்ததை தொடர்ந்து, காய்கறி விலை ஏறத் துவங்கியுள்ளது.கோயம்பேடு சந்தையில், ஒரு கட்டு, 2 ரூபா��்க்கு விற்ற கொத்தமல்லி நேற்று, 25 – 30 ரூபாய்க்கு விற்றது. அதே போல், புதினா, ஒரு கட்டு, 20 ரூபாய்க்கும்; கறிவேப்பிலை, 1 கிலோ, 20 ரூபாய்க்கும் விற்பனையாகின.தற்போதைய சந்தை நிலவரம் குறித்து,காய்கறி விற்பனையக ஆலோசகர் சவுந்திரராசன்கூறியதாவது: கொத்…
View On WordPress
0 notes
Text
சந்தை இதையும் கடந்து செல்லும்
மத்தியில் ஆளும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் இறுதி பட்ஜெட், சில தினங்களில் தாக்கல் செய்யப்பட உள்ளது.அடுத்த ஆண்டின் பார்லி மென்ட் தேர்தலுக்கு முன்வரும் இந்த பட்ஜெட், தேர்தலில் ஆளும் தரப்பின் நிலைப்பாட்டிற்கு ஒரு பொருளாதார முன்னோடியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக, பொருளாதார வளர்ச்சி குறியீடுகள் குன்றிய சூழலில், இந்த பட்ஜெட்…
View On WordPress
0 notes