#BusFareHike
Explore tagged Tumblr posts
meespandananews · 15 days ago
Text
Tumblr media
తెలంగాణలో పెరిగిన బస్ పాస్ ధరలు.. నేటి నుంచి అమలు
0 notes
being-gaby · 7 years ago
Photo
Tumblr media
#Tamilnadu #busfarehike
0 notes
latest-news-pm · 5 years ago
Video
youtube
ടാക്സ് ഇളവ് വേണമെന്നുള്ള ആവശ്യം കമ്മീഷൻ തള്ളി; ബസ് ചാർജ് വർധന കോവിഡ് കാലത്തേക്ക് മാത്രം
ബസ് ചാർജ് വർധനയുമായി ബന്ധപ്പെട്ട് അന്തിമ തീരുമാനം മന്ത്രിസഭയാണ് എടുക്കേണ്ടത് എന്ന് ഗതാഗത മന്ത്രി മാധ്യമങ്ങളോട് പറഞ്ഞിരുന്നു. ബസുടമകൾക്ക് ടാക്‌സ് ഇളവ് വേണമുണ്ണുള്ള ആവശ്യം കമ്മീഷൻ തള്ളിയിരുന്നു.
#BusFareHike #Kerala #JusticeRamachandranCommission #News18Kerala #MalayalamNewsLive #LatestKeralaNews #TodayNewsMalayalam #മലയാളംവാർത്ത
About the Channel: -------------------------------------------- News18 Kerala is the Malayalam language YouTube News Channel of Network18 which delivers News from within the nation and world-wide about politics, current affairs, breaking news, sports, health, education, and much more. To get the latest news first, subscribe to this channel.
ന്യൂസ്18 കേരളം, നെറ്റ്വർക്ക് 18 വാർത്താ ശൃoഖലയുടെ മലയാളം യൂട്യൂബ് ചാനൽ ആണ്. ഈ ചാനൽ, രാഷ്ട്രീയം, സമകാലിക വൃത്താന്തം, ബ്രേക്കിംഗ് ന്യൂസ്, കായികം, ആരോഗ്യം, വിദ്യാഭ്യാസം, തുടങ്ങി ദേശീയ അ���്തർദേശീയ വാർത്തകൾ കാണികളിലേക്ക് എത്തിക്കുന്നു. ഏറ്റവും പുതിയ വാർത്തകൾ ഏറ്റവും വേഗം ലഭ്യമാവാൻ ഈ ചാനൽ സബ്സ്ക്രൈബ് ചെയ്യൂ...
Subscribe our channel for the latest news updates: https://tinyurl.com/y2b33eow
Follow Us On: ----------------------------- Facebook: https://www.facebook.com/news18Kerala/ Twitter: https://twitter.com/News18Kerala
0 notes
tamilnewstamil · 7 years ago
Photo
Tumblr media
ரூ.50 தினசரி பஸ் பாஸ் தற்காலிகமாக நிறுத்தம் – வாராந்திர பாஸ் கட்டணம் அதிகரிப்பு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வழங்கும் 50 ரூபாய் தினசரி பாஸ் பாஸ் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். #BusFareHike சென்னை: தமிழகத்தில் அரசுப்பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் கடந்த மாதம் கனிசமாக உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ��றங்க, கட்டண உயர்வை சிறிதளவு குறைத்து அரசு அறிவித்தது. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் வழங்கப்படும் ஒருநாள் பயண டிக்கெட், மாதாந்திர பஸ் பாஸ் கட்டணம் ஆகியவை உயராது என முன்னதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 1000 ரூபாய் மாத பஸ் பாஸ் 1300 ரூபாய் ஆக உயர்வதாகவும், 50 ரூபாய் ஒரு நாள் பயண டிக்கெட் 80 ரூபாய் உயர்வதாகவும் இன்று காலை தகவல்கள் வெளியாகின. ஆனால், பஸ் பாஸ் கட்டண உயர்வு என்று பரவும் செய்தி முற்றிலும் தவறானது என்று போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் விளக்கமளித்தார். இந்நிலையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “1000 ரூபாய் மாதாந்திர பஸ் பாஸில் எந்த மாற்றமும் இல்லை, அது தொடர்ந்து வழங்கப்படும். தினசரி வழங்கப்படும் 50 ரூபாய் டிக்கெட் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. ரூ.240-க்கு வழங்கப்படும் வாராந்திர பஸ் பாஸ் கட்டணம் ரூ.320 ஆக உயர்த்தப்படுகிறது” என அவர் தெரிவித்தார். Source: Maalaimalar
0 notes
tamilnewstamil · 7 years ago
Photo
Tumblr media
போராட்டத்தில் ஈடுபட்ட பஸ் ஊழியர்களின் 7 நாள் சம்பளம் பிடித்தம் போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்த 5-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை 7 நாட்கள��க்கான சம்பளத்தை அரசு பிடித்தம் செய்துள்ளது. இதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. #BusFareHike #Busworkersalary சென்னை: தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்களில் சுமார் 1½ லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களுக்கு 13-வது சம்பள கமி‌ஷன்படி சம்பளத்தை உயர்த்துவது பற்றி கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பஸ் ஊழியர்கள் தங்களது சம்பள உயர்வு 2.57 மடங்காக இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் அரசு தரப்பில் 2.44 மடங்கு ஊதியம் தர சம்மதிக்கப்பட்டது. அரசின் ஒப்பந்தத்தை ஏற்க மறுத்த அரசு போக்கு வரத்து கழகங்களின் 14 தொழிற்சங்கத்தினர் தங்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும், ஓய்வூதிய நிலுவை தொகைகளை தர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். அதை வலியுறுத்தி அவர்கள் கடந்த 5-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை வேலை நிறுத்தம் செய்தனர். 22 தடவை அரசுக்கும், போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் பேச்சு வார்த்தை நடந்தும் எந்த முடிவும் எட்டப்பட வில்லை. இதையடுத்து இந்த விவகாரம் சென்னை ஐகோர்ட்டுக்கு சென்றது. ஐகோர்ட்டு ஒரு நீதிபதியை நியமித்து ஊதிய உயர்வு தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டதின் பேரில் போக்குவரத்து தொழிலாளர்கள் 12-ந்தேதி முதல் வேலைக்கு திரும்பினார்கள். போக்குவரத்து தொழிற் சங்கத்தினர் வேலை நிறுத்தம் காரணமாக அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது. அதுமட்டுமின்றி பொது மக்களுக்கும் கடும் சிரமம் ஏற்பட்டது. அரசு போக்குவரத்து கழகங்களை சீரமைக்கவும், புதிய பஸ்கள் வாங்கவும் டிரைவர், கண்டக்டர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி கொடுப்பதற்காகவும் தமிழக அரசு சமீபத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் அரசு போக்கு வரத்து கழகங்கள் வி‌ஷயத்தில் தொடர்ந்து சர்ச்சை நிலவியபடி உள்ளது. இந்த நிலையில் சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்த போராட்டம் செய்த போக்குவரத்து ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் வேலை நிறுத்தத்த��ல் ஈடுபட்ட சுமார் 1 லட்சம் ஊழியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் அவர்களது சம்பளத்தில் பிடித்தம் செய்து அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்த 5-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை 7 நாட்களுக்கான சம்பளத்தை அரசு பிடித்தம் செய்துள்ளது. இதுபற்றிய தகவல்கள் இன்று மதியம் அதிகாரப் பூர்வமாக வெளியானது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட சுமார் 1 லட்சம் ஊழியர்களில் சாதாரண ஊழியர்கள் முதல் மூத்த ஊழியர்கள் வரை அனைவருக்கும் சம்பள பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஊழியர்கள் தங்களது சர்வீசுக்கு ஏற்ப ரூ.3,500 முதல் ரூ.10 ஆயிரம் வரை சம்பளத்தை பெற இயலாது. பிப்ரவரி மாதம் அவர்களுக்கு முழு சம்பளம் கிடைக்காது என்பது உறுதியாகி உள்ளது. இன்று மதியம் தங்களது ஜனவரி மாத சம்பளத்தில் 7 நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதை அறிந்ததும் போக்குவரத்து கழக ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சம்பள பிடித்தம் செய்யப்பட்டது தொடர்பாக போக்கு வரத்து தொழிற்சங்கத்தினர் நாளை சென்னையில் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர். அதில் சம்பள பிடித்தம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. சம்பள உயர்வு தொடர்பான பிரச்சினை கோர்ட்டில் இருப்பதால் நீதிமன்றத்தை அணுக தொழிற்சங்கத்தினர் முடிவு செய்துஇருப்பதாக தெரிகிறது. இதுபற்றி சி.ஐ.டி.யூ. தலைவர் சவுந்தரராஜன் கூறுகையில், “அரசின் முடிவு தன்னிச்சையானது. இதுபற்றி நாங்கள் கோர்ட்டில் முறையிடுவோம்” என்றார். எச்.எம்.எஸ். தொழிற்சங்க தலைவர் சுப்பிரமணியம் மாலைமலர் நிருபரிடம் கூறுகையில், “சம்பள பிடித்தம் குறித்து நாங்கள் நாளை போக்குவரத்து கழக செயலாளரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளோம். அவர் தெரிவிக்கும் தகவல்களை பொருத்து எங்களது அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையும்” என்றார். எனவே சம்பள பிடித்தம் வி‌ஷயத்தில் தொழிற் சங்கத்தினர் எத்தகைய எதிர்ப்பை தெரிவிப்பார்கள் என்பது நாளை தெரியவரும். #BusFareHike #Busworkersalary #tamilnews Source: Maalaimalar
0 notes
tamilnewstamil · 7 years ago
Photo
Tumblr media
பஸ் கட்டண உயர்வு: மின்சார ரெயில்களில் அலைமோதும் கூட்டம் பஸ் கட்டண உயர்வுக்கு பிறகு மக்களின் பார்வை மின்சார ரெயில் மீது விழுந்துள்ளதால் காலை 6 மணிக்கே ரெயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. #BusFareHike சென்னை: தமிழகத்தில் கடந்த 20-ந்தேதி பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டன. சென்னையில் மக்கள் அதிகளவில் மாநகர பஸ்கள��� பயன்படுத்தினர். பஸ் கட்டண உயர்வையடுத்து நடுத்தர மக்கள், தொழிலாளர்கள் நாகராஜன் மின்சார ரெயில் பயணத்துக்கு மாறினார்கள். பஸ் பயணத்துக்கே குறிப்பிட்ட தொகையை செலவு செய்ய வேண்டி இருப்பதால் மக்களின் பார்வை மின்சார ரெயில் பக்கம் திரும்பியது. நீண்ட தூரம் செல்பவர்கள் முடிந்தவரை மின்சார ரெயிலில் பயணம் செய்து செலவை குறைத்தனர். பாதி தூரம் ரெயிலில் சென்று விட்டு அதன்பின் மாநகர பஸ்களில் செல்கிறார்கள். இதன் மூலம் பயண செலவை குறைக்கிறார்கள். சென்னையில் தினமும் மின்சார ரெயில் சேவை அதிகாலை 4 மணிக்கு தொடங்கும். 6.30 மணி வரை ரெயிலில் குறைந்த அளவே கூட்டம் இருக்கும். 7 மணிக்கு பிறகே கூட்டம் அதிகரிக்க தொடங்கும். தற்போது பஸ் கட்டண உயர்வுக்கு பிறகு மக்களின் பார்வை மின்சார ரெயில் மீது விழுந்துள்ளதால் காலை 6 மணிக்கே ரெயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரிப்பதால் தினமும் ரெயில்களில் வழக்கத்தைவிட பயணிகள் கூட்டம் அதிகரித்து நிரம்பி வழிகிறது. இதனால் காலை, மாலை நேரங்களில் ரெயில் நிலையங்களில் நெரிசல் ஏற்படுகிறது. மேலும் தென் மாவட்ட ரெயில்களில் வருபவர்களும் தாம்பரத்தில் இறங்கி மின்சார ரெயில்களில் பயணம் செய்கிறார்கள். இதன் மூலம் ரெயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைத்து வருகிறது. பஸ் கட்டண உயர்வுக்கு பிறகு கடந்த 20-ந்தேதி முதல் 7 நாட்களில் வழக்கத்தை விட கூடுதலாக 2.7 லட்சம் பேர் பயணம் செய்து இருக்கிறார்கள். மேலும் ஒரு வாரத்தில் சீசன் டிக்கெட் எடுப்பவர்கள் எண்ணிக்கை 5½ லட்சமாக உயர்ந்து இருக்கிறது. காகிதமில்லா டிக்கெட் சேவையில் 2 லட்சம் பேர் டிக்கெட் முன்பதி��ு செய்துள்ளனர். இதன் மூலம் சென்னை கோட்டத்தில் 20-ந்தேதி முதல் 7 நாட்களில் ரு.1.95 கோடி கூடுதலாக ரெயில்வேக்கு வருமானம் கிடைத்துள்ளது. #Tamilnews Source: Maalaimalar
0 notes
tamilnewstamil · 7 years ago
Photo
Tumblr media
பஸ் கட்டணம் உயர்வு எதிரொலி: ஒரு வாரத்தில் 2 கோடி வருமானம் அதிகரிப்பு – தெற்கு ரெயில்வே தமிழகம் முழுவதும் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதன் எதிரொலியாக, கடந்த ஒரு வாரத்தில் ரெயில்வேக்கு கூடுதலாக 2 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. #BusFareHike சென்னை: தமிழகம் முழுவதும் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதன் எதிரொலியாக, கடந்த ஒரு வாரத்தில் ரெயில்வேக்கு கூடுதலாக 2 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 19-ம் தேதி பஸ் கட்டணத்தை அரசு உயர்த்தியது. பஸ் கட்டண உயர்வு அதிகமாக இருப்பதாக கூறி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. போராட்டம், எதிர்ப்பு காரணமாக தமிழக அரசு நே��்று முன்தினம் திடீரென பஸ் கட்டணத்தை குறைத்துள்ளது. இதற்கிடையே, பஸ் கட்டண உயர்வை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ரெயில் சேவையை பயன்படுத்த தொடங்கி விட்டனர். இரு நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் ரெயில்களில் பொதுமக்கள் அதிகமாக பயணிக்க தொடங்கினர். சென்னையில் பஸ் கட்டண உயர்வை அடுத்து மின்சார ரெயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மின்சார ரெயில்களில் நிற்ககூட இடமில்லாமல் பயணிகள் பயணம் செய்யும் நிலையும் காணப்படுகிறது. ரெயில்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து உள்ளதால் ரெயில்வேக்கு கூடுதலாக வருவாய் கிடைத்து உள்ளது. இந்நிலையில், கடந்த ஒரு வாரத்தில் ரெயில்வேக்கு 2 கோடி ரூபாய் வருவாய் கூடுதலாக கிடைத்துள்ளது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், சென்னை புறநகர் ரெயிலில், ஜனவரி 20-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 7.95 லட்சம் பயணிகள் ரெயில்களில் கூடுதலாக பயணம் செய்துள்ளனர். இந்த வகையில் ரெயில்வே துறைக்கு கடந்த ஒரு வாரத்தில் கூடுதலாக ரூ.1.96 கோடி வருவாய் கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளனர். #BusFareHike #tamilnews  Source: Maalaimalar
0 notes
tamilnewstamil · 7 years ago
Text
பொதுமக்கள் போராட்டம் எதிரொலி: பஸ் கட்டணத்தை குறைத்து தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசுப் பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் க��ிசமாக உயர்த்தப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், தற்போது கட்டணங்களை குறைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #BusFareHike #BusFare சென்னை: தமிழக அரசு கடந்த 19-ந் தேதி அரசு போக்குவரத்து கழக பஸ்களின் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. மாநகர பஸ்களில் 3 ரூபாயாக இருந்த குறைந்த பட்ச கட்டணம் 5 ரூபாயாகவும் அதனுடன் விபத்து…
View On WordPress
0 notes
tamilnewstamil · 7 years ago
Text
பஸ் கட்டண உயர்வு: தமிழகம் முழுவதும் பயணிகள் போராட்டம்
தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். அவர்கள் கண்டக்டர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பல இடங்களில் மோதல் ஏற்பட்டது. #BusFareHike சென்னை: டீசல், உதிரிபாகங்கள் விலை ஏற்றம், வாகன இயக்கம், பராமரிப்பு செலவு அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து ஊழியர்களுக்கான நிலுவைத் தொகை வழங்குதல் போன்றவை காரணமாக தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. மாநகர பஸ்கள்,…
View On WordPress
0 notes
tamilnewstamil · 7 years ago
Text
தமிழகம் முழுவதும் 27-ந் தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி தமிழகம் முழுவதும் வருகிற 27-ந் தேதி தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #BusFareHike சென்னை: தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தி.மு.க. ஆட்சியில் மாநகர பேருந்துகளில் 2 ரூபாயாக இருந்த குறைந்தபட்ச கட்டணம் 2011 அ.தி.மு.க. ஆட்சியில் 3 ரூபாயாக உயர்த்தப்பட்டு, இப்போது 5 ரூபாயாக…
View On WordPress
0 notes
tamilnewstamil · 7 years ago
Text
அரசுப்பேருந்து டிக்கெட் கட்டணங்களை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு - நாளை முதல் அமலுக்கு வருகிறது
அரசுப்பேருந்து டிக்கெட் கட்டணங்களை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு – நாளை முதல் அமலுக்கு வருகிறது
தமிழக அரசுக்கு சொந்தமான பேருந்துகளின் கட்டணங்களை உயர்த்தி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #TNSTC #SETC #Busfarehike சென்னை: தமிழக அரசுக்கு சொந்தமான பேருந்துகளின் கட்டணங்களை உயர்த்தி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, நகர, மாநகர பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் 3 ரூபாயில் இருந்து 5 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண பேருந்துகளுக்கான கட்டணம் ரூ.5ல் இருந்து ரூ.6 ஆக…
View On WordPress
0 notes
being-gaby · 7 years ago
Photo
Tumblr media
#busfarehike #Tamilnadu girls and future brides. 😂
0 notes