Don't wanna be here? Send us removal request.
Text
The Cholas and Sambuvarayas are Kshatriyas
The "Imperial Cholas" and "Sambuvarayas" are "Kshatriyas". The following chola's period inscription says very clearly without any doubt :-
The war held between Pandya Kulasekhara and the Sri Lankan King, in which Chola helped Pandiya by sending their army. Edirili Chola Sambuvaraya, the Commander-in-Chief for Chola army victorious over Ceylon army.
Edirili Chola Sambuvaraya, says in the inscription of Rajathiraja Chola-II, 1171 A.D :-
"சோழராஜ்யத்துக்கு ராஜாவாநார் அவர்கள் பரிபாலிப்பது எங்கள் வம்சத்து தர்ம்மம் பரிபாலிப்பது" (Chola king doing the duties of our Dharma).
(S.I.I. Vol-VI, No.456), (Line-47&48, page-98), (Kanchipuram, Tiruvalisvara temple inscription). (Select Inscriptions of Tamil Nadu, Serial No : 117 : 7), (Department of Archaeology, Govt of Tamil Nadu).
The term "Engal Vamsathu" (எங்கள் வம்சத்து) refers to "Kshatriya Vamsam". Therefore, Vanniyas are "Kshatriyas". Their clans "Surutiman" and "Nattaman", who also came from "Agni Kundam" (Yaga Kundam) belongs to "Kshatriyas".
-----x-----x-----x----- Thanks to N. Murali Naicker
0 notes
Text
மழவர்கள்
மழவர்கள் என்பவர்கள் "சிலை வீரர்கள்" (வில் வீரர்கள்) என்று நச்சினார்கினியர் அவர்கள் கி.பி.12-ஆம் நூற்றாண்டில் குறிப்பிடுகிறார்கள். இன்றைய "அரியலூர், பெரம்பலூர்" மாவட்டங்கள் சங்ககாலத்தில் "மழ நாடென்றே" வழங்கப்பெற்றது. "மழவர் பெருமகன் அதியமான்" நாடான தகடுரும் (தருமபுரி), "மழவர் பெருமகன் வல்வில் ஓரியின்" நாடான கொல்லிமலையும் "மழவர் நாடென்று" சங்க காலத்தில் வழங்கப்பெற்றது. மழநாட்டில் தொன்றுதொட்டு வாழ்ந்து வரும் குடிகளில் "மழவர் குடியும்" ஒன்றாகும். அத்தகைய குடியோர் "வன்னியர்கள்" ஆவார்கள். இவ் மழவர் குடியில் வந்தவளே சோழர்களின் ராஜமாதாவாக விளங்கிய "செம்பியன் மாதேவி" ஆவாள். பிற்காலச் சோழர்கள் காலத்தில் "வன்னியர்கள்" மழநாட்டின் "வில் வீரர்களாக" சோழர் படையில் பணியாற்றியிருக்கிறார்கள். அவர்கள் "பள்ளிகள்" என்ற பெயராலும் அழைக்கப்பெற்றிருக்கிறார்கள். கிழ் காணும் சோழர்கள் காலத்து கல்வெட்டு "மழவர்களின்" பராக்கிரமம் பற்றி தெரிவிக்கிறது மற்றும் அவர்களுடைய எல்லைகளையும் எடுத்து சொல்கிறது (மழ நாட்டின் எல்லை, 180 Kms approx) :-
The scholar "Noboru Karashima" says about the "Aduturai Inscription" (A.R.E. No.35 of 1913) :-
"The Pannattar (also called Palli Nattar) from the Nadu and Nagaram of all Mandalams met at the garden called Periyanattan-Ka in a large assembly and decided to collect one panam (a coin) per bow held by members, etc, for worship in the local temple. The decision was made to revive an old arrangement made by their ancestors and recorded in an inscription of Vikrama Chola (1122 A.D). According to that inscription a large assembly of the Palli Nattar, including all the Pallis living within the area bounded by the Pachchai hills in the west, the tank Viranarayana-Pereri in the east, the Pennai river in the north, and the Kaveri river in the south, had decided to contribute 50 Kasu and One Kuruni of rice from each family to the temple at Iraiyanpunchai Kurangadu(urai) on the happy occasion of the reconsecration of images recovered from Dorasamudram, the Hoysala capital where they had been taken during a Hoysala invasion. At that time the king also permitted them to carry their banner with the words Pannattar Tampiran (the god of Pannattar) on festival processions.
The Palli people described here composed the bowmen regiment of the Chola army and this regiment seems to have recovered the images by attacking the Hoysala capital under the command of Vikrama Chola. The area of their habitation defined in this inscription covers a hilly and dry area extending roughly a hundred kilometers from north to south and eighty kilometers from east to west in Tiruchirapalli and South Arcot Districts.
-----x-----x-----x-----
Evidences for "Mazhavarayars as Vanniyas" ==================================
Mazhavarayar / Kadanthaiyar Chieftains :
"ராச ராச வள நாட்டு ராசெந்திர சொழ வளநாட்டுள் மிழலை நாட்டுள்ச் செர்ந்த சொழவளமாகிய தலத்துள் வன்னியர் குல கிரில தரில நாட்டுக் அதிபதியராகிய குண்ணத்தூர்க் கட்டியப்ப நாயினார் குமாரர் நாகய மளவாரய நயினாரவர்களும் பென்னாடகம் பிரளையங்காத்த கடந்தையார் கொத்திரத்தில் பொன்னளந்த கடந்தை குமாரன் பெரியனாயக்க நயினாரவர்களும் நம்முட குண்ணத்தூர் காணிக்கும் பென்னாடக காணிக்கும்"
(South Indian Temple Inscriptions, Vol-III (Part-1), 1511 A.D.)
"மகா ராஜ ராஜ ஸ்ரீ வன்னிய குல சந்திரன் மகிதலத்தினில் இந்திரன்" (அரியலூர் அரசர் விஜய ஒப்பிலாத மழவராயர்)
(இராமதாச பரம பாகவதர், கோதண்டராமசுவாமி சதகம், பாடல்-101)
"சும்மாபோகும் பள்ளிக்கேன் அதிவீர பூபனெனும் பட்டந்தானே"
(இராமசந்திரகவிராயர் அரியலூர் அரசரை "பள்ளி" என்று குறிப்பிடும் பாடல்), (தனிப்பாடல் திரட்டு).
"Palli Vellur Peraraiyan Sendan Kuttadudevan" (A.R.E. No.210 of 1940-41) (1125 A.D, Sendurai, Ariyalur Dist).
"Sendan Kuttaduvan alias Rajaraja Vangara Muttaraiyan" (A.R.E. No.16 of 1903) (1160 A.D, Tittakudi).
"Kadandai Sendan Adittan alias Rajaraja Vangara Muttaraiyan" (A.R.E. No.26 of 1903) (1171 A.D, Tittakudi).
=======================================================================
தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் செல்லம்பட்டி என்ற ஊரில் நுளம்பமன்னன் நடுக��் உள்ளது. சகஆண்டு 822 என்பதால் கி.பி.900 ஆகும். நுளம்பமன்னன் ஐய்யப்பதேவன் மகன் சிவமாரைய்யனும் கங்காணுமன் மகன் இரண்டாம் பிருதிபதியும் மறவகுன்று என்ற இடத்தில் போரிட்டனர். நுளம்பனுக்குத் துணையாகத் தகடூர் நாடாண்ட மாவலிவாணராயரின் சேவகன் கூடல் மாணிக்கன் இருந்துள்ளான். போரில் மாணிக்கம் இறந்துவிட அவனுக்கு நடுகல் எடுக்கப்பட்டது. வீரனின் பெரிய மகன் "மாதேவன்னி" நடுகல் ஏற்படுத்தியுள்ளான்.
"தகடூருடைய மாவலிவாணராயரடியா ன் கூடல் மாணிக்கன் சிவமாரைய்யனுக்காய் எறிந்து பட்டாரவர் பெ ரியம் மகன் மாதேவன்னிக் கல்லு நடுவித்தான் ஸ்ரீ மதியுளி"
(தர்மபுரி கல்வெட்டுகள், தொடர் எண் : 1973/15)
"தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் செல்லம்பட்டி என்ற ஊரில் உள்ள மற்றொரு நடுகல் கல்வெட்டு, கி.பி.898-ல் கங்கானுமான் ஆட்சியின் போது தகடூர் நாடாண்ட மாவலிவாணராயரின் அடியான் கூடல் மாணிக்கன் உளைக்குன்று என்ற ஊரினை ஆண்டுவந்தான். இவனுடைய மாமனும் கோவூர் நாட்டைந்நூறும் உடையவனுமான மழற்பையன் என்பவரின் அடியான் சூழ்புனியன் என்பவன் புலியைக் கொன்று தானும் இறந்தபட்டுள்ளான். இவனுக்கு 'மாதேவன்னி' நடுகல் எழுப்பியுள்ளான்.
"தகடூர் மாவலிவாண ராயரடியான் கடல் மாணிக்கன்[னு]லை குன்றினை ஆ[ள்] வன் மாமன் கோவூர் நாட்டைந்நூறுமுடைய மழற்பை யன்னடியான் சூழிபுளியன் புலி எறிந்து ப ட்டான் மதியுளி"
(தர்மபுரி கல்வெட்டுகள், தொடர் எண் : 1973/14)
கோவூர் நாடு ஐந்நுறு உடையவனான 'மழவர் மகன்" (மழற்பையன்), மாதேவன்னியனின் தந்தைக்கு "மாமன்" ஆவான். அப்பகுதி அக்காலகட்டத்தில் "மழவூர்" என்று விளங்கியது. மழவர் வாழ்ந்த பகுதி மழவர் நாடாகும்.
"ஸ்ரீசிரீ புருச பருமற்கு.......... தாவது பிருணிதுவியார் புறமலை நாடாள மழவூர்த் தொருக்கொண்ட ஞா ன்று செருப்பச்சடையன் பட்டான்"
(தர்மபுரி கல்வெட்டுகள், தொடர் எண் : 1973/18), (தருமபுரி, ஆரூர் வட்டம், சின்னாங்குப்பம்), (கி.பி.8-9 ஆம் நூற்றாண்டு).
இதுவரை நாங்கள் (வன்னியர்கள்) 'மழவர்' என்பதற்கு சான்றாக காண்பித்த ஆதாரங்களில் இதுவே காலத்தால் மிக பழமையானது ஆகும்.
=======================================================================
நாகமரபினர் என்று கங்கரைக் கூறுவர். அரவக் கொடியையே கொடியாகப் பெற்றனர். கங்கர் கிளையினர் வாழ்ந்த பகுதி 'பங்களநாடாகும்'. பங்களநாடு என்பது இன்றைய திருவண்ணாமலை மற்றும் போளூர் பகுதிகளாகும். பங்களநாட்டு கங்கரையர் என்று இவர்கள் அறியப்படுகிறார்கள். இவர்கள் பல்லவர்கள், இராஷ்டிரகூடர்கள் மற்றும் சோழர்களுக்கு குறுநிலமன்னர்களாக இருந்துள்ளனர். இவர்கள் "வன்னியர்கள்" என்று திருவண்ணாமலை கிளிகோபுரகல்வெட்டு குறிப்பிடுகிறது :
"பங்களநாட்டுக் கூத்தாடுந் தெவன் பிரதிவிகங்கன் வந்னிய மாதெவன் அழகிய சொழநென்" (Line-2)
"கூத்தாடுந் தெவன் பிரதிவிகங்கன் வந்நிய மாதெவன் அழகிய சொழநென் என் வங்சத்தில் இது இறக்குவான் கெங்கை இடைக் குமரி இடை" (Line-5)
(Thiruvannamalai, Kiligopuram Inscription, Kulotunga chola-III) (A.R.E. No.546 of 1902), (S.I.I. Vol-VIII, No.137)
The Rajapura plates of Madhurantaka Deva, 1065 A.D. says, there are 36 "Agni Kulas" :
"The grant was made by the King Madhurantaka Deva, who belonged to the Chhindaka family of the Naga (Cobra) race" (page-178).
"Madhurantaka Deva belonged to the Chhindaka family, one of the 36 Agnikulas mentioned by Chand Bardai, the court poet of Prithviraja" (page-178).
(Epigraphia Indica, Vol-IX No.23).
The "Nagavamsi Inscriptions" reveals, that they are "Kshatriyas" and they belongs to "Kasyapa Gotra" and their symbol is "Tiger with a calf" :
"The dynasty claims to belong to the Nagavamsa and the Kasyapa gotra, to have a tiger with a calf as their crest and to be the lords of Bhogavati the best of the cities"
(Epigraphia Indica, Vol-IX, No.19, page-161), (Narayanpal stone inscription of queen Gunda-Mahadevi, the mother of Somesvara Deva).
"In front of this temple, I found a slab with a ancient sanskrit and Telugu inscription on both sides ; the temple of Mahadeva where the slab was found was built by a Raja Somesvara Deva, a Nagavamsi Kshatriya, in the year 1130 A.D."
(Epigraphia Indica, Vol-IX, No.19, page-162), (Barsur inscription of Ganga-Mahadevi wife of Somesvara Deva).
From the above evidence, it is established that, the "Nagavamsi Kshatriyas" (Agni kula Kshatriyas) generated from the "Yaka-kunda" to rule this earth. "Vanniya Kula Kshatriyas" are called as "Agni Kula Kshatriyas" in Andhra Pradesh. "Vanniya" is the synonym of "Agni".
-----x-----x-----x----- Thanks to N. Murali Naicker
1 note
·
View note
Text
பள்ளி வேளான்கள் (வேளிர்கள்)
திண்டுக்கல்லிருந்து கரூர் செல்லும் வழியில் பண்டைய முக்கியப் பெருவழியில் அமைந்த ஊர் "வேடசந்தூர்" ஆகும். இவ்வூர் தமிழ் நாட்டின் வடபகுதியிலிருந்து பழனி செல்லும் பயணிகள் தங்கும் முக்கிய இடமாக இருந்துள்ளது. இவ்வூரில் பழங்காலக் கோட்டை ஒன்று இருந்து அழிந்துள்ளது. இதற்கான தடயங்கள் ஹசரத் சயீது அரபு அப்துர் ரஹிமான் என்ற பெரியார் அடங்கிய தர்காவின் அருகில் காணப்படுகிறது.
இவ்வூரின் பழையப்பெயர் "பெரும்பள்ளியாகும்". இதுவே இன்று "பெரும்புள்ளி" என்று மருவி வழங்குகிறது. இவ்வூர்ப் பாசன ஏரியின் கரையில் அமைந்த பாறையிலுள்ள கி.பி.9-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு அவ்வேரியைப் "பெரும்பள்ளி பெருங்குளம்" என்று குறிப்பிடுகிறது. பெரும்புள்ளிக் கன்னிமார் கோயில் அருகில��ள்ள பாறையிலுள்ள மற்றொரு 9-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு இப்பகுதியை ஆண்ட நாடாள்வார்கள் பற்றி முக்கிய செய்திகளை தருகின்றது. முற்காலப் பாண்டியர்களுக்குக் கட்டுப்பட்டுப்பெரும்பள்ளியைச் சுற்றியிருந்த "பள்ளிநாடு" என்ற சிறுநாட்டுப் பிரிவின் தலைவர்களாக இவர்கள் இருந்துள்ளனர். பாண்டியரின் அதிகாரிகளாகவும், படைத்தலைவர்களாகவும் விளங்கியவர்கள் இந்நாடாள்வார்கள் "பள்ளி வேளான்கள்" என்று இவர்கள் அழைக்கப்பட்டனர். இப் "பள்ளி வேளான்கள்" (வேளிர்கள்), வன்னிய குல க்ஷத்திரிய மரபினை சேர்ந்தவர்கள் ஆவர்.
கி.பி.8-9 ஆம் நுற்றாண்டுகளில் பாண்டியர்க்குப் பல்வகையிலும் துணையாய் நின்ற நான்கு "பள்ளி வேளான்களின்" (வேளிர்களின்) பெருமைகளைப் பெரும்புள்ளி கன்னிமார் கோயில் அருகிலுள்ள பாறைக் கல்வெட்டு தொகுத்துக் கூறுகிறது. இவர்களில் கல்வெட்டின் இறுதியில் குறிப்பிடப்படும் "பள்ளி வேளான் நக்கன்புள்ளன்" இரண்டாம் வரகுணபாண்டியனிடத்துப் பணிபுரிந்தவன். இவனும் இவன் மகன் "அண்டவேளான் குறும்பராதித்தன் புள்ளன்நக்கனும்" சேர்ந்து பூமிதானமாக நிலம் ஒன்றினைக் கோயில் ஒன்றுக்கு அளித்ததை இக்கல்வெட்டு கூறுகிறது.
இக்கல்வெட்டில் பின்வரும் நான்கு "பள்ளி வேளான்கள்" (வேளிர்கள்) குறிப்பிடப்படுகின்றனர் :-
"பள்ளி வேளான்"
"பராந்தக வேளான்"
"அண்டவேளான் குறும்பராதித்தன் புள்��ன்நக்கன்"
"பள்ளி வேளான் நக்கன்புள்ளன்"
(திண்டுக்கல் மாவட்டத் தொல்லியல் கையேடு-2007)
இவ்வழிமுறையில் மூத்தவன் "பள்ளி வேளான்" முற்பாண்டிய மன்னன் முதலாம் இராஜ சிம்மன் காலத்திய (கி.பி. 730 - 768) குறுநில மன்னன். இவன் இராஜ சிம்மனுக்கு ஆதரவாகக் குழும்பூர் போரில் பங்கு கொண்டு பல்லவர்களை வெல்ல உதவினான் என்று பெரும்புள்ளிக் கல்வெட்டும், வேள்விக்குடிச் செப்பேடும் கூறுகின்றன.
"பள்ளி வேளானின்" மகன் "பராந்தக வேளான்" என்பவன் சோழநாட்டில் உள்ள இடவை என்ற ஊரில் நடைபெற்ற போரில் பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடைய வரகுணனுக்கு (கி.பி. 768 - 815) வெற்றியைத் தேடித் தந்தவன். இப்போர் பல்லவர்க்கும் பாண்டியர்க்கும் நடைபெற்ற போராகும். இப்போரில் பங்கு கொண்ட "பராந்தக வேளானின்" மகன் "அண்டவேளான் குறும்பராதித்தன் புள்ளன்நக்கன்" ஸ்ரீமாற ஸ்ரீவல்லவன் (கி.பி. 815 - 862) என்ற பாண்டியனிடத்துப் பணிபுரிந்தவன். இம்மன்னனுக்காக இடவை, குடமூக்கு (கும்பகோணம்) முதலிய இடங்களில் பல்லவர்களோடு நடைபெற்ற போர்களில் பங்கு கொண்டவன் "அண்டவேளான் குறும்பராதித்தன் புள்ளன்நக்கன்" ஆவான். மேலும் இவன் ஆய்வேள் என்ற மலைநாட்டு மன்னருடன் விழிஞம் என்ற கடற்கரைப் பட்டினத்தில் பாண்டியன் நடத்திய போரில் படைத்தலைவனாகக் கலந்துகொண்டான் என்று பெரும்புள்ளி கல்வெட்டு கூறுகிறது. விழிஞம் என்ற கடற்கரைப் பட்டினம் இன்று அரபிக்கடற்கரையில் திருவனந்தபுரத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
"அண்டவேளான் குறும்பராதித்தன் புள்ளன்நக்கனின்" மகன் "பள்ளி வேளான் நக்கம்புள்ளன்" ஆவான். இவன் இரண்டாம் வரகுணன் சிங்கள மன்னருடன் சாளக்கிராமம், சென்னிலம் முதலிய இடங்களில் நடத்திய போர்களில் யானைப்படையைக் கொண்டு சென்று உதவி வெற்றியைத் தேடித் தந்தவன் என்று பல அறிய செய்திகளைப் பெரும்புள்ளிக் கல்வெட்டு தெரிவிக்கின்றது.
"பள்ளிவேளான் நக்கன்புள்ளனும்" அவன் மகன் "புள்ளன் நக்கனும்" இவ்விருவரும் சேர்ந்தே வடமதுரைக்கு அருகிலுள்ள இராமநாதபுரத்தில் நீர்ப்பாசன ஏரி ஒன்றை உருவாக்கி அதற்குப் புள்ளனேரி என்றே பெயரிட்டனர். ஏரியை உருவாக்கும் வேலையில் ஈடுபட்ட தச்சனுக்குச் காணியாகப் "பள்ளி நாட்டின்" இரண்டு பகுதிகளிலுமுள்ள ஊர்குளங்களிலிருந்து தலைநீர் பாயும் பதக்கு விதைநெல்பாவும் நிலம் அளிக்கப்பட்டது என்று இராமநாதபுரம் வரகுணபாண்டியன் கல்வெட்டு தெரிவிக்கிறது.
வேடசந்தூர் வட்டம் பழைய கரட்டுப்பட்டி சிறுமலை அடிவாரத்தில் உள்ள கன்னிமார் கோயில் அருகில் இரண்டாக உடைந்து போன கி.பி.10 ஆம் நூற்றாண்டு நடுகல் ஒன்று உள்ளது :-
"ஸ்ரீ அரையரெள்ளி கோய்த்திரனான மதுராந்தகப் பள்ளி வேளான் பள்ளி நாட்டு நிரை போகயில் பட்டான்" (கல்வெட்டு காலாண்டிதழ்-65, பக்கம் 39-40).
பள்ளி நாட்டு ஆநிரைகளை எதிரிகள் கவர்ந்து சென்ற போது மதுராந்தகப் பள்ளி வேளான் என்ற வீரன் சண்டையிட்டு இறந்தான். அவன் தன்னை "அரசபள்ளி கோத்திரம்" என்று அழைத்து கொண்டிருக்கிறான். வேடசந்தூர் பகுதியில் பிற்கால "பள்ளி வேளான்" கல்வெட்டுகள் காணப்படுகிறது.
"பள்ளி வேளான்கள்" பாண்டிய மன்னர்களிடம் குறுநிலமன்னர்களாக இருந்துள்ளனர். பாண்டியர்கள் மேற்கொண்ட பல போர்களில் இவர்கள் தளபதிகளாக இருந்து பெரும் வெற்றியை அவர்களுக்கு தேடித்தந்துள்ளனர். மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கருங்காலக்குடியில் உள்ள கி.பி. 8 ஆம் நூற்றாண்டை சார்ந்த கல்வெட்டு ஒன்று "பள்ளி தறையன்" என்பவனை பற்றி குறிப்பிடுகிறது. அவன் "பள்ளி வேளான்களின்" உறவினனாக இருக்ககூடும்.
எறியோடு கோணக்க முத்துவல்லக் கொண்டம நாயக்கர் காலத்தில் பெரும்பள்ளியில் கோட்டை ஒன்று இருந்தது இதனை முத்துவல்ல கொண்டம நாயக்கர் சண்டையிட்டுக் கைப்பற்றி விரிவுபடுத்தி ஆண்டார் என்று "எறியோடு பாளையப்பட்டு வம்சாவளி கூறுகிறது. அவர் கைப்பற்றிய கோட்டை "பள்ளி வேளான்களின்" கோட்டையாகும்.
-----x-----x-----x-----
1 note
·
View note
Text
வரலாற்றில் மலையமான்கள்
சேரர்களின் கிளை மரபினர்களாக மலையமான்கள் குறிப்பிடப்படுகிறார்கள். சேரர்கள் சங்ககால இலக்கியங்களில் தங்களை "மழவர்" என்றே குறிப்பிட்டுள்ளார்கள். கொல்லி மழவர் வல்வில் ஓரி, மழவர் பெருமகன் அதியமான் மற்றும் மலையமான்கள் சேரர்களின் கிளைப்பிரிவினர்கள் ஆவர். சேரர்கள் "வன்னியர்கள்" ஆவர். வில்லிபாரதம், திருவிளையாடல் புராணம், பேரூர் புராணம் மற்றும் பிற்காலச் செப்பேடுகள் சேரர்களை "அக்னி குலம்" என்றே குறிப்பிடுகிறது. தமிழ்நாடு அரசு வெளியிட்ட, பாண்டிய பெருவேந்தர் காலம் என்ற நூலில் "பள்ளிகள் க்ஷத்��ியர்கள் என்றும் சேர குல அரசர் குலசேகர ஆழ்வார் வழிவந்தவர்கள்" என்றும் தெரிவிக்கிறது. சேரர் குலத்தில் அவதரித்த குலசேகரப் பெருமானார் அவர்கள் யது வம்சத்தில் திருஅவதாரம் செய்த கிருஷ்ண பகவானைக் குழந்தைப் பருவத்தில் தாதிகள் சொல்லும் பாவனைபோல "எந்தன் குலப்பெருஞ்சுடரே" என்றும் "நந்தகோபன் அடைந்த நல்வினை நங்கள்கோன் வசுதேவன் பெற்றிலனே" என்றும் அவர் (குலசேகரர்) அருளிச்செய்த "நாலாயிர திவ்ய பிரபந்தம்" பாசுரத்தில், ஆலைநீள் கரும்பு என்ற பாடலில் குறிப்பிட்டுள்ளார்கள். கி.பி. 1283-ஆம் ஆண்டில் கேரளாவுக்கு விஜயம் செய்த சீன யாத்ரீகன் "யாங்-திங்-பி" (Yang Ting-pi), சேரர் குலத்து கொல்லம் அரசர்களை "வன்னி" என்றும் "பன்னாட்டார்" என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். சேரமான் பெருமாளுக்கு முடிசூட்டுதல் விழாவில் வேளாளர்கள் கலந்து கொண்டதை பற்றி "வெள்ளாளர்களின் கொங்கு ஆவணம்" குறிப்பிடுகிறது. அது:- "நற்குடி நாற்பத்தெண் ணாயிரங் கோத்திர நாட்டவர்கள் பொற்கிரீ டந்தனைச் சாற்றவந் தார்புவிக் காவலனாம் அக்கினி கோத்திரன் புகழ்சேர மான்பெரு மான்றனுக்கு வைக்கவும் வந்திடும் வேளாளர் வாழ்கொங்கு மண்டலமே. எனவே "சேரர்கள் வன்னிய குல க்ஷத்ரியர்கள்" என்பது முற்றிலும் உண்மையாகும். அத்தகைய சேரர்களின் கிளை மரபினர்களே "மலையமான்கள்" ஆவர். வன்னிய சமுகத்தை சார்ந்த மலையமான்கள் தங்களை "வன்னியர்" என்றும் "பள்ளி" என்றும் கல்வெட்டுகளில் குறித்துள்ளார்கள். திருவண்ணாமலை மாவட்டம், அரூர் மற்றும் செங்கம் கல்வெட்டுகள், "வன்னியநார் ஆன மானாபரணச் செதியராயர்" என்றும் "வன்னியநாயன் செதிராயனென்" என்றும் "பெரிஉடையான் அம்மட்டாழ்வார் வந்னிய மக்கள் நாயன் கரிகாலசொழ ஆடையூர் நாடாழ்வானென்" என்றும் குறிப்பிடுகிறது. மலையமான்களின் தலைநகரான திருக்கோவலூர் கல்வெட்டுகள் அவர்களை "வன்னிய மலையமான்" என்றும் "வன்னிய தேவேந்திர மலையமான்" என்றும் "ராஜ ராஜ சேதிராயன் வன்னியநாயன்" என்றும் "கிள்ளியூர் மலையமான் பெரிய உடையான் இறையூரான் சற்றுக்குடாதான் வன்னிய நாயன்" என்றும் குறிப்பிடுகிறது. குறிப்பாக "வன்னிய நாயன் சற்றுக்குடாதான்" தன்னை 25-ற்கும் மேற்பட்ட கல்வெட்டில் "வன்னிய நாயன்" என்றே குறிப்பிட்டுள்ளான். இம் மன்னனைப் போலவே சம்புவராயர் மன்னர்களும், நீலகங்கரைய மன்னர்களும் தங்களை "வன்னிய நாயன்" என்றே சோழர் காலத்திய கல்வெட்டுகளில் குறித்துள்ளார்கள். சங்க காலத்தில் குறிப்பிடப்பட்ட "மழவர் பெருமகன்" என்பதும் சோழர்கள் காலத்தில் வழங்கப்பட்ட "வன்னிய நாயன்" என்பதும் ஒரே பொருளை உடையதாகும். அதாவது "வன்னியத் தலைவன்" என்பதாகும். மழவர்கள் வன்னியர்கள் ஆவர். கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் தருமபுரி கல்வெட்டு "வன்னியர்களை மழவர்" என்று குறிப்பிடுகிறது. "மழவூர்" என்ற ஒரு நாடு அக் காலக்கட்டத்தில் தருமபுரியில் இருந்ததை அக் கல்வெட்டு மேலும் குறிப்பிடுகிறது. பிற்கால அதியமான்கள் தங்களை கி.பி.14-ஆம் நூற்றாண்டில் "திரிபுவன மல்ல பூர்வ அதியரையர்கள்" என்று "கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டில்" குறிப்பிடப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒருவரது மகனை "பள்ளி" என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. அது :- "திரிபுவன மல்ல புர்வாதிய குமரனானச் சிக்கரசிறுப் பிள்ளைகளில் சொக்கந் கருவாயன் பள்ளி இடுபூசலில் குதிரை குத்திபட்டான்" (பொருள் : அதியமான் மரபின அரசன் குமரனானசிக்கரனின் கடைசிப் பிள்ளையான 'சொக்கன் கருவாயன் பள்ளி' இடுபூசலில் குதிரைக்குத்தி இறந்துள்ளான்). மேலும் தருமபுரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், ஆம்பள்ளி என்ற ஊரில் உள்ள கல்வெட்டில் : "ராஜராஜ அதியமானர் விடுகாதழகிய பெருமாள் பள்ளிகளில் கங்க காமிண்டன் கட்டிய குட்டையைப் பள்ளிச் சாந்தமாகக் காக்கன் கிளை விடுகாதழகிய பெரும்பள்ளியாழ்வார்க்கு " என்னுடைய குருநாதர், தொல்லியல் மேதை திரு. நடன. காசிநாதன் ஐயா அவர்கள், மேற்குறிப்பிட்ட கல்வெட்டிற்கு பொருள் தந்துள்ளார்கள். அது :- "ராஜ ராஜ அதியமானின் உறவினர்களில் (பள்ளிகளில்) கங்க காமிண்டர்கள் இருந்துள்ளார்கள்" என்று ஐயா அவர்கள் பொருள் தந்துள்ளார்கள். எனவே "மழவர்களான அதியமான்கள் வன்னியர்கள்" ஆவர். திருக்கோவலூர் வட்டம், ஜம்பை கல்வெட்டு, "பள்ளிச்சேரியடிய நம்பியான கோவலரையப் பேரையன்" என்ற மலையமான் பற்றி தெரிவிக்கிறது. வன்னியர் வாழ்விடத்தை (பள்ளிச்சேரி) குறித்துள்ளமையால் இம் மலையமான் "பள்ளி" என்பது பெறப்படுகிறது. சோழர் காலத்தில் "பிராமணர் வாழ்விடத்தையும் சேரி" என்றே கல்வெட்டில் வழங்கப்பட்டிருக்கிறது. செஞ்சி வட்டம், சிங்கவரம் கல்வெட்டு "பள்ளிக்கட்டுச் செதிராயன்" என்று குறிப்பிடுகிறது. இவன் வன்னிய சமூகத்தவன் என்பதை "ஸ்ரீ மதுராந்தகச்சதுர்வெதி மங்கலத்துப் பிடாகையாந மதுவூற் குடிப்பள்ளி சாமந்தன் மும்மலராயன் மகன் அருமொழிதெவனாந பள்ளிக்கட்டு மும்மலராயன்" என்ற செய்யார் கல்வெட்டின் மூலம் தெரியவருகிறது. இச் செதிராயன் (மலையமான்) "பள்ளி இனக் குழுவை" (பள்ளிக்கட்டு) சேர்ந்தவன் என்பதை மேற்குறிப்பிட்ட கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. மேலும் "மும்மலராயன்" என்பது "மலையமான்களைப் குறிப்பதாகும். சாமந்தன் என்பது அரசனைக் குறிப்பிடும் பதமாகும். மலையமான் வன்னிய மன்னர்களுக்கும் காடவராய வன்னிய மன்னர்களுக்கும் இருந்த திருமண உறவை திருக்கோவலூர் வட்டம், திருவெண்ணைநல்லூர் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் "கவிச்சக்ரவர்த்தி கம்பர் எழுதிய சிலைஎழுபது" என்ற நூலில் "மலைய மன்னர்" என்று மலையமான் அரசர்களை வன்னிய சமூகத்தவர்களாக குறிப்பிடுகிறது. மேற்சொன்ன உறுதியான சான்றுகள் மூலம், சேரர்களின் கிளை மரபினர்களான மலையமான்கள், "வன்னிய குல க்ஷத்ரியர்கள்" என்பது உறுதியாகிறது.
0 notes
Text
விளந்தை கச்சியராயர்கள்
அரியலூர் மாவட்டம், உடையார் பாளையம் வட்டம், ஆண்டி��டத்தின் ஒரு பகுதியாக விளங்கி வரும் சிறு நகரப் பகுதியே விளந்தையாகும். கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பிலிருந்து கும்பகோணம் செல்லும் நெடுஞ்சாலையில், காடுவெட்டியிலிருந்து மேற்காகச் செல்லும் சாலையில், ஆண்டிமடத்துக்கு முன்பாகச் சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் "விளந்தை" அமைந்துள்ளது. விளந்தை கச்சியராயர்களின் முன்னோர்கள், சோழப் பேரரசின் வலிமைமிகு குறுநில மன்னர்களாக விளங்கிய "காடவராயர்கள்" ஆவார்கள். சோழப் பேரரசும் பாண்டியப் பேரரசும் வீழ்ச்சியடைந்தபிறகு இவர்கள் "பருவூரையும்", "விளந்தையையும்" தலைநகராகக் கொண்டு இரண்டு அரச குடும்பங்களாக ஆட்சிபுரிந்துள்ளனர். "பருவூர்" இன்று "முகாசப் பருவூர்" (விருதாசலம் அருகில்) என்றும் "விளந்தை" விளந்தை என்ற பெயர் மாறாமலும் வழங்கப்படுகிறது. "கச்சியராயர்கள்" (காடவராயர்கள்) சோழர் காலம்தொட்டு ஆங்கிலேயர் காலம் வரை இப்பகுதிக்கு குறுநிலமன்னர்களாகவும், பாளையக்காரர்களாகவும், ஜமீன்களாகவும் ஆட்சிப்புரிந்துள்ளனர். இவர்கள் "வன்னிய குல க்ஷத்ரியர்" மரபைச் சார்ந்தவர்கள் ஆவார்கள். விளந்தையை தலைமை இடமாகக் கொண்டு கிழ்காணும் கச்சியராய மன்னர்கள் ஆட்சிபுரிந்துள்ளனர் என்று கல்வெட்டுக்களின் வாயிலாக தெரியவந்துள்ளது. 1. இராகுத்தமிண்டன் அரசமார்தாண்டன் வெட்டுங்கை அழகிய கச்சியராயர் - I. (கி.பி. 14 ஆம் நூற்றாண்டு). 2. இளமைப் பெருமாள் கச்சிய���ாயர். (கி.பி. 14 ஆம் நூற்றாண்டு). 3. சேவகப் பெருமாள் கச்சியராயர். (கி.பி. 1372). 4. ஸ்ரீ ரங்கநாதரான வலங்கைமீகாம வாணகோவரையன். (கி.பி. 1394). 5. ஏகாம்பரநாதர் கச்சியராயர். 6. இராய இராகுத்தமிண்ட மல்லீகார்ச்சுன கச்சியராயர். (கி.பி. 1471). 7. வெட்டுங்கை அழகிய கச்சியராயர் - II. (கி.பி. 1473). 8. பள்ளி கொண்ட பெருமாள் கச்சியராயர் - II. (கி.பி. 1491). 9. திரிநேத்ரநாத கச்சியராயர். (கி.பி. 1504). இக் கட்டுரையை நான் 2007 - ல் எழுதியப் பிறகு, மற்றொரு விளந்தை கச்சியராய அரசரைப் பற்றிய பெயர் தெரியவந்தது. அவர் பெயர் "சிருப்பராயர்க் கச்சிராயர்" (கி.பி.1451). அவரது முழு பெயர் :- "ஸ்ரீமத் இராகுத்த மிண்டன் அரசமாத்தாண்டன் சங்கிராமதீரன் இளவரச மணவாளன் சோணாடு காத்தான் கங்கை விடங்கப் பெருமாள் ஸ்ரீபாதபக்தன் விளந்தை சிருப்பராயர்க் கச்சிராயர்" Thanks to Mr N. Murali Naicker ----- xx ----- xx ----- xx -----
0 notes
Text
நரசிங்க முனையதரையர்
திருநாவலூரைத் தலைநகராகக் கொண்டு திருமுனைப்பாடி நாட்டை ஆட்சி செய்தவர் நரசிங்க முனையரையர் ஆவார். 63 நா��ன்மார்களில் ஒருவரான இவர் சிவனடியார்க்கு செய்யும் தொண்டையே சிவத் தொண்டாகக் கருதியவர். திருவாதிரை நாள்தோறும் சிவனடியார்களுக்கு திருவமுது செய்வித்து அவர்களுக்குத் தனித்தனியே நூறு பொன் கொடுத்து வந்தார்கள். அவ்வாறு செய்து வரும் நாளில் தூர்த்த (வஞ்சகன் அல்லது காமுகன்) வேடம் தரித்த ஒருவன், திருநீறு தரித்து அடியார் குழுவில் இணைந்து கொண்டான். அவனை அனைவரும் இகழ்ந்து ஒதுக்கினர். இது கண்ட நரசிங்க முனையதரைய நாயனார் அவர்கள், திருநீறு தரித்த காரணத்திற்காக அந்த தூர்த்தனிடம் இன்மொழிகள் பேசி இருநூறு பொன் கொடுத்து அனுப்பினார்கள். நம்பியாரூரை (சுந்தரர்) மகன்மை முறையில் வளர்த்த பேரு பெற்ற இவர் சிவப்பணியாற்றி சிவகதி அடைந்தார்கள். "திருமுனைப்பாடி நாடாளுங் காவலனார் நரசிங்க முனையரையர்" என்றும் "குலமரபினர சளித்து" என்றும் "பெருந்தகையா ரிருந்தரசு புரந்து" என்றும் "தெம்முனைகள் பலகடந்து" என்றும் "கொற்றவனார்" என்றும் புலவர் சேக்கிழார் அவர்கள் நரசிங்க முனையரையரை "க்ஷத்ரியர்" என்று குறிப்பிட்டுள்ளார்கள். உமாபதி சிவாச்சாரியார் அவர்கள் "குறுநில மன்னராக" நரசிங்க முனையரையரைக் குறிப்பிடுகிறார்கள். முனையதரையர்கள் ஆண்ட நாடு "முனைப்பாடி நாடு" எனப்பட்டது. அதாவது "திருமுனைப்பாடி நாடு" எனப்பட்டது. இத்தகைய பெருமை வாய்ந்த முனையதரைய மரபினர்கள் யார் என்பதை, விஜயநகர பேரரசர் ஸ்ரீ அச்சுத தேவ மகாராயரின் (கி.பி.1531) எலவானாசூர் (இறைவாநரையூர்) கோயில் கல்வெட்டு நமக்கு தெரிவிக்கிறது. இறைவாநரையூரில் பன்னிரண்டு பற்றில் நயினார் கச்சிராயரும் நாட்டவர்களும், திருக்கோவலூர் உடையார் திருநரசிங்கமுடைய நயினார் கோயிலில் ஸ்ரீ சண்டேசுர நயினார் ஸ்ரீ பண்டாரத்துக்குத் தருமசாசனப் பட்டயம் கொடுத்து நரசிங்க முனையதரையப் பெருமாள் நயினாருக்கு பொன் தானமும் கொடுத்து பூஜை மற்றும் இன்னசில நற்காரியங்களைச் செய்ய கட்டளையிட்டிருக்கிறார்கள். விஜயநகர மன்னர்கள் காலத்தில் திருநாவலூர்ப் பகுதி "வழுதிலம்பட்டு உசாவடி" என்று கல்வெட்டில் அழைக்கப்பெற்றது. அது :- "வழுதிலம்பட்டு உசாவடி புவனேகவீரந்பட்டண சீமை கெடிலத்துக்கு தெர்க்கு திருமுனைப்பாடி நாடு பன்னிரண்டு பற்றில்" "வழுதிலம்பட்டுச் சாவடி நாடும் கரணிக்கரும் பரிவாரமும் தொண்டைமானார் கச்சிராயர் கச்சிராயரும்" "வழுதிலம்பட்டு உசாவடி" என்றும் "திருமுனைப்பாடி நாடு பன்னிரண்டு பற்றில்" என்றும் அழைக்கப்பெற்ற முனையதரையர்களின் திருநாவலூர் காரணிகர்களாக "பரூர் கச்சிராயர்கள்" விளங்கியிருக்கிறார்கள். மேற்குறிப்பிட்ட விஜயநகரப் பேரரசரின் கி.பி.1531 ஆம் ஆண்டுக் கல்வெட்டில், பன்னிரண்டு பற்றில் நயினார் கச்சிராயரும் நாட்டவர்களும் "நரசிங்க முனையதரைய நயினாரை" கிழ் கண்டவாறு குறிப்பிடுகிறார்கள் :- "பன்னிரண்டு பற்றிலும் நாங்கள் இருப்பதாக பதிஞ்சு கொண்டு எங்கள் நயினார் நரசிங்கமுடைய நயினாற்கு சறுவமானிம் மாக" வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தை சேர்ந்த, பரூர் அரசரான நயினார் கச்சிராயரும் நாட்டவர்களும், 63 நாயன்மார்களுள் ஒருவரான நரசிங்க முனையதரைய நயினாரை "எங்கள் நயினார்" என்று கல்வெட்டில் குறிப்பிடுகிறார்கள். இது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த சான்றாகும். மே��ும் அக் கல்வெட்டில், பன்னிரண்டு பற்று நாட்டவரும் தங்களது நாட்டை "எங்கள் சீர்மை" என்றே குறிப்பிடுகிறார்கள். சரித்திரச் செம்மல் ச. கிருஷ்ணமூர்த்தி அவர்கள், வரலாற்றில் பெண்ணாகடம் என்ற நூலில் "கச்சியராயர்" என்ற தலைப்பில் கிழ் கண்டவாறு குறிப்பிடுகிறார்கள் :- "நாட்டவர் என்பது கச்சிராயரையே குறிக்கும். இவர்களே 15-16 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியில் அரசாட்சி புரிந்தனர் எனலாம்" என்று தெரிவித்திருக்கிறார்கள். எனவே "பன்னிரண்டு பற்றில் நயினார் கச்சிராயரும் நாட்டவர்களும்" என்பது "வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தையே" குறிப்பிடுவதாகும். இதை மெய்பிக்கும் விதமாக "தொண்டைமானார் கச்சிராயர் கச்சிராயரும்" என்ற கல்வெட்டு வரிகள் நமக்கு சான்று பகர்கின்றது. விஜயநகர பேரரசர் ஸ்ரீ அச்சுத தேவ மகாராயரின் (கி.பி.1531) எலவானாசூர் கோயில் கல்வெட்டில் குறிப்பிடப்படும் பரூர் அரசரான "நயினார் கச்சிராயர்" அவர்களைப் போலவே இரண்டாம் புக்கண்ண உடையார் காலத்திய (கி.பி.1398) விருத்தாசலம் கல்வெட்டில் "நயினார் கச்சிராயர்" என்ற பரூர் அரசர் குறிப்பிடப்படுகிறார்கள். எலவானாசூர் கோயில் கல்வெட்டில் மேலும் பல கச்சியராய அரசர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். அவர்கள் :- "பருவூர் உடையார் தேவர் கச்சியராயர் பிள்ளைகளில் காளத்திநாதர்" (மாற வர்மன் ஸ்ரீ வல்லப பாண்டியன் காலம், கி.பி.1313). "பருவூர் கச்சியராயர் பிள்ளைகளில் காளத்திநாதன்" (வீர கம்பண்ண உடையார் காலம், கி.பி.1372). "தொண்டைமானார் கச்சிராயர் கச்சிராயரும்" (ஸ்ரீ வீரப் பிரதாப விசயராய மகாராயர் காலம், கி.பி.1446). "பல்லவநாந இராச நாராயணக் காடவராயன்" (சோழர்கள் காலம்). "கூடலூர் அரசநாராயணன் ஏழிசை மோகனாந ஜநனாத கச்சியராயநேன்" (சோழர்கள் காலம்). "கூடலூர் முனையதரையன் அசல குலோத்துங்கனான ராஜ ராஜக் காடவராயனேந் (சோழர்கள் காலம்). "சகல புவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ கோப் பெருங்சிங்க தேவர்" (சோழர்கள் காலம்). போன்றோர்கள் ஆவார்கள். கூடலூர் முனையதரையன் அசல குலோத்துங்கனான ராஜ ராஜக் காடவராயன் என்ற அரசர் "முனையதரையன்" என்று அழைக்கப்படுவதைப் போல, முதலாம் குலோத்துங்கச் சோழனின் ஆட்சி காலத்தில் பெருங்கானூர் நாட்டுக் கூடலூரைச் சேர்ந்த "அரையன் முனையன் மோகனனான ராஜேந்திர சோழக் காடவராயன்" என்ற காடவராய அரசரும் "முனையதரையன்" என்று குறிப்பிடப்படுகிறார்கள். இவர்கள் "பரூர் கச்சியராயர்களின்" முன்னோர்கள் ஆவார்கள். விருதாச்சலம் அருகில் உள்ள இப் பரூர் இன்று "மூகாசாப் பரூர்" என்று அழைக்கப்படுகிறது. சோழ மன்னர்களின் மிக நெருங்கிய உறவினர்களான இக் காடவராயர்கள் தங்களை "முனையதரையர்" என்றும் 63 நாயன்மார்களுள் ஒருவரான நரசிங்க முனையதரைய நயினாரை "எங்கள் நயினார்" என்றும் குறிப்பிடுவதன் மூலம், "முனையதரையர்கள்" காடவராயர்களின் வழி வந்தவர்கள் அல்லது உறவினர்கள் என்பதை சான்றுகள் மூலம் அறியமுடிகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அமைவது காடவராயர்களுக்கும் மலையமான்களுக்கும் இருந்த மிக நெருங்கிய திருமண உறவே ஆகும். நரசிங்க முனையதரைய நயினார் அவர்கள் "திருக்கோவலூர் உடையார் நரசிங்கமுடைய நயினார்" என்று கல்வெட்டில் மிகத் தெளிவாக குறிப்பிடப்படுவதன் மூலம் அவர் "மலையமான் மரபினர்" என்று பெறப்படுகிறது. சோழர்கள் காலத்து பல கல்வெட்டுகளில் மலையமான் மரபினர்கள் தங்களை, "வன்னியர்", "வன்னிய மக்கள் நாயன்", "வன்னிய நாயன்", "பள்ளி" என்று மிகத் தெளிவாக குறிப்பிடுகிறார்கள். மலையமான்கள் தங்களை "பார்கவ கோத்திரத்தினர்" என்றும் "பார்கவ குலத்தினர்" என்றும் சோழர்கள் காலத்து கல்வெட்டுகளில் குறிப்பிடுகிறார்கள். வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தைச் சேர்ந்த உடையார்பாளையம் அரசர்களும், கடலங்குடி 'ஆதி கலிங்கராய உடையார்' பாளையக்காரர்களும் தங்களை "பார்கவ கோத்திரத்தினர்" என்றே குறிப்பிடுகிறார்கள். தொல்லியல் அறிஞர் திரு. எஸ். இராமச்சந்திரன் அவர்கள், பள்ளி குல காடவராய அரசர்கள் தங்களை "அசல (மலையர்) குல உத்தவன்" என்று சோழர்கள் காலத்து கல்வெட்டில் குறிப்பிடுவதாக சான்றுகளைத் தெரிவித்திருக்கிறார்கள். அது :- "இறையானனயூருக்கு (எலவானாசூருக்கு) அருகிலுள்ள கூடல் என்ற ஊரைச் சேர்ந்த மோகன் ஆட்கொண்டான் என்ற பெயருடைய குறுநிலத் தலைவன் கி.பி.1129 இல் விக்கிரம சோழனிடத்துப் படைத் தலைவனாகவும், அதிகாரியாகவும் இருந்தான். இவன் இப்பகுதியில் வேளாண்மையை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளான். செங்குறிச்சி என்ற ஊரிலுள்ள பாசன ஏரிக்கு இவன் மதகு அமைத்தது குறித்துக் கல்வெட்டு உள்ளது. இவனது வம்சத்தவர் சோழ அரச குலத்துடன் மிகவும் நெருக்கம் எய்தி, மண உறவும் கொண்டனர். மோகன் ஆட்கொண்டானின் கொள்பெயரனே, கூடல் பள்ளி என்றும், அசல (மலையர்) குல உத்தவன் என்றும், காடவர் குல திலகன் என்றும், பல்லவ குல பாரிஜாதன் என்றும் கல்வெட்டுகளில் குறிப்பிட்டுக்கொள்ளும் கோப்பெருஞ்சிங்கன் ஆவான். இவன் சோழ குலப் பெண்ணைத் தில்லையில் வைத்து மணம் புரிந்தான்." என்று தெரிவிக்கிறார்கள். முனையதரையர்கள் வன்னியர்கள் தான் என்பதை மெய்ப்பிக்க மேலும் ஒரு சான்று கிடைக்கிறது. முனைவர் இல. தியாகராஜன் அவர்கள் குறிப்பிடும் அச் சான்று :- "கி.பி. 1394 இல் எழுதப்பெற்ற ஒரு கல்வெட்டு இவ்வூர் (பெண்ணாகடம்) மேல்பிடாகை கொத்திட்டையில் வன்னிய இனத்தைச் சேர்ந்த 'முனியன் கச்சிக்கு வாய்த்த முனையதரையன்' என்பவருக்கு 3750 குழி நிலம் உரிமை உடையதாக இருந்ததைக் குறிப்பிடுகிறது. இவர் இப்பகுதியை ஆட்சி செய்த வன்னிய குலத்துச் சிற்றரசனான 'ஸ்ரீ ரெங்கநாதர் ஆன வலங்கைமீகாம வாணகோவரையன்' என்பவரின் அடியான் ஆவார்". என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதைப்போலவே மேலும் சில சான்றுகள் "முனையதரையர்களைப்" பற்றிக் குறிப்பிடுகிறது. அது :- "விக்கிரம சோழனின் எறும்பூர் கல்வெட்டு ஒன்று 'திருமாம்பலம் சூரியான முனையதரையப் பல்லவராயன்' என்ற தொண்டை மண்டலத்து 'சாளுக்கியரைப்' பற்றி குறிப்பிடுகிறது". "குறுக்கைக் கூற்றத்துச் சிக்காட்டுப் பற்று அதகூரில் நல்லுருடையான் கூத்தன் அதியமான் சேவகனான நரசிங்க முனையதரையர்" (எலவானாசூர் கல்வெட்டு, கி.பி.1362). "அதகூர் நல்லுருடையான் சேவகன் இராசநாராயண நரசிங்க முனையதரையன்" (எலவானாசூர் கல்வெட்டு, கி.பி. 16 ஆம் நூற்றாண்டு). இச் சான்றுகளும் வன்னியர்களைத் தான் குறிப்பிடுகிறது என்பதை குறிப்பால் உணரமுடிகிறது. இன்றும் வன்னியர்களில் பலர் "முனையதரையர்", "முனையரையர்", "நரசிங்கராயர்" போன்ற பட்டங்களை தாங்கி வாழ்ந்து வருகிறார்கள். எனவே "நரசிங்க முனையதரைய நாயனார்" அவர்கள் "வன்னிய குல க்ஷத்ரிய" சமூகத்தைச் சார்ந்த மன்னர் என்பது முற்றிலும் உண்மையாகிறது. இது மிகத் தெளிவான சான்றுகளின் அடிப்படையில் அமைந்த மிகச் சரியான முடிவாகும். ----- xx ----- xx ----- xx -----
0 notes
Text
அரியலூர் மழவராயர்கள்
அரியலூர் மழவராயர்கள் ========================
டாக்டர் மா. இராசமாணிக்கனார் அவர்கள் பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்னும் நூலில் அரியலூர் மழவராயர்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். அவர்கள் சங்ககால மழவர்களின் மரபினர்கள் என்றும் அவர்கள் வன்னியருள் படையாட்சி மரபினர்கள் என்றும் ஒப்பிலா அம்மனை வழிப்படுபவர்கள் என்றும் கு��ிப்பிட்டுள்ளார்கள்.
அரியலூர் மழவராயர்களைப் பற்றிய குறிப்புகள் சங்க காலம் முதற்கொண்டு கி.பி. 20 ஆம் நூற்றாண்டு வரை காணப்படுவதாகவும், டாக்டர் மா. இராசமாணிக்கனார் அவர்கள் குறிப்பிட்டு பற்பல சான்றுகளையும் கொடுத்துள்ளார்கள். அவற்றில் ஒன்று :-
"இரண்டாம் மாற வர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1239 - 1251) தனது பத்தாம் ஆட்சியாண்டில், ஐயன் மழவராயன் விருப்பப்படி, திருமாலுகந்தான் கோவில் என்னும் ஊரிலுள்ள ஒப்பிலா முலையார் என்ற அம்மன் கோவிலுக்கு வரியிலியாக நிலங்களை விட்டான் என்று குறிப்பிடுகிறார்"
தொல்லியல் அறிஞர் நடன. காசிநாதன் ஐயா அவர்கள், அரியலூர் மழவராயர்களைப் பற்றி "வன்னியர்" என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். கர்னல் மெக்கென்சி சேகரித்த குறிப்புக்களில் "அரியலூர் பாளையக்காரர் கைபீது (கி.பி. 1805)" என்ற கைபீதும் ஒன்றாகும். இக் கைபீது "மாளவராயர் அரியலூர் பாளையக்காரர் ஸம்ஸ்தானம் மதுரை, திருச்சிராப்பள்ளி வகையறா" என்று தொடங்கப்பெற்றிருக்கிறது. ஜாதியில் வன்னிய குலத்தவர்களுடைய வமிசாவளி என்று குறிப்பிடுவதாக தொல்லியல் அறிஞர் நடன. காசிநாதன் ஐயா அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
டாக்டர் மா. இராசமாணிக்கனார் அவர்கள் குறிப்பிட்ட "ஐயன் மழவராயன்" அவர்கள் இரண்டாம் மாற வர்மன் சுந்தர பாண்டியனின் (கி.பி. 1239 - 1251) ஆட்சி காலத்தில் மதுரை அழகர் கோயிலுக்கும், திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கும் கொடைகள் வழங்கியுள்ளதை கல்வெட்டு சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.
அரியலூர் பாளையக்காரர்களின் சமஸ்தானம் "மதுரை திருச்சிராப்பள்ளி வகையறா" என்று கைபீது தெளிவாக குறிப்பிடுவதால், வன்னிய குல க்ஷத்ரியர்களான மழவராயர்கள் சோழர் மற்றும் பாண்டியர் காலங்களில் மதுரையை ஆட்சி செய்திருக்கிறார்கள் என்று தெரியவருகிறது. மேலும் கைபீது "பள்ளிக் கொண்ட ஒப்பிலா மழவராயர்" என்ற அரியலூர் அரசரை குறிப்பிட்டு அவருடைய ஆட்சியாண்டையும் (கி.பி. 1422 - 1457) குறிப்பிடுகிறது.
கி.பி. 1450 ஆம் ஆண்டில் "பள்ளி கொண்ட பெருமாள் மழவராயர்" என்ற அரசர் பட்டுக்கோட்டைப் பகுதிக்குத் தலைவனாயிருந்தான் என்று திருச்சிற்றேமம் கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது. கி.பி. 1582 ஆம் ஆண்டின் புதுக்கோட்டை செப்பேட்டில் வன்னியர்களான அரியலூர் மழவராயர், பருவூர் கச்சியராயர், பிச்சாவரம் சோழகனார் மற்றும் உடையார்பாளையம் கால��ட்கள் தோழ உடையார் குறிப்பிடப்படுகிறார்கள்.
எனவே வன்னிய அரசர்கள் புதுக்கோட்டை பகுதியை கி.பி. 16 ஆம் நூற்றாண்டிலும் அரசாட்சி செய்திருக்கிறார்கள் என்று தெரியவருகிறது. கள்ளர் குல தொண்டைமான்கள் கி.பி. 1686 ஆம் ஆண்டு முதலே (கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் இறுதி காலகட்டம்) புதுக்கோட்டைப் பகுதியை அரசாட்சி செலுத்த தொடங்கினார்கள் என்பது வரலாறாகும்.
அரியலூர் மழவராயர்கள், சோழ மன்னன் வீர ராஜேந்திர சோழனின் (கி.பி. 1070) நன்னிலம் கல்வெட்டிலும் குறிப்பிடப்படுகிறார்கள் என்று நான் இன்றைய ஆய்வில் கண்டறிந்து பெரும் மகிழ்ச்சியடைந்தேன். அக் கல்வெட்டு :-
"விளை நிலத்துக்கு கிழ்பாற் கெல்லை கன்னரதேவன் மருதமாணிக்க தேவன் நிலத்துக்கு மேற்கும் தென்பாற் கெல்லை அரியலூருடையான் மழவதரையன் நில......."
மேலும் ஒரு நன்னிலம் கல்வெட்டு "பரமேச்சுவர மங்கலத்து அரியலூருடையான்" என்று குறிப்பிடுகிறது. அக் கல்வெட்டு கி.பி. 12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஸ்ரீ வல்லபப் பண்டியனுடையதாகும்.
பாண்டியர்களுடைய பல கல்வெட்டுகளில் "பள்ளிப் பீட மழவராயன்" என்றும் "பள்ளிக் கட்டில் மழவராயன்" என்றும் குறிப்பிடப்படுகிறது. இப் பெயர்கள் என்பது பாண்டிய அரசர்கள் தாங்கள் பயன்படுத்திய "பள்ளிக் கட்டிலாகும்". அதாவது "பாண்டிய அரசர்களது சிம்மாசனமாகும்". அத்தகைய பெருமைமிகு சிம்மாசனத்திற்கு வன்னியர்களான மழவராயர்களது பெயரினை பாண்டியர்கள் வைத்திருக்கிறார்கள் என்பது வன்னியர்களுக்கு கிடைத்த மிகப்பெரும் பெருமையாகும். இதன் மூலம் "பள்ளி" என்னும் சொல் "வேந்தனை" குறிப்பிடும் சொல்லாக அறியமுடிகிறது.
அரியலூர் மழவராயர்களைப் பற்றி பல கல்வெட்டுகளும் செப்பேடுகளும் காணக்கிடைகின்றன. அவர்கள் பல கோயில்களை எழுப்பியும் கொடைகளை வழங்கியும் வரலாற்றில் புகழ் பெற்றிருக்கிறார்கள். அரியலூரில் கோதண்டராமஸ்வாமி கோயிலில் மழவராயர்கள் கட்டிய "தசவதார மண்டபம்" என்பது தமிழகத்தில் வேறெங்கும் காணக் கிடைக்காததாகும்.
Thanks to N. Murali Naicker
----- xx ----- xx ----- xx -----
1 note
·
View note
Text
வாணர்கள் என்ற பாணர்கள்
பள்ளி சேந்தன் சுத்தமல்லனான வாணகோவரையன் ===================================================
வாணர்கள் (அல்லது) பாணர்கள் என்போர் "க்ஷத்ரிய சமூகத்தை" சேர்ந்த மன்னர்கள் ஆவார்கள். இவர்களைப் பற்றி நூற்றுக்கும் அதிகமான கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றன. இவர்கள், "பல்லவர் சோழர் பாண்டியர்" காலங்களில் குறுநிலமன்னர்களாகவும், அரசியல் அதிகாரிகளாகவும் விளங்கியுள்ளார்கள். தங்களை "க்ஷத்ரியர்" என்றும் "இராசகுலவர்" (Royal Families, Kshatriyas) என்றும் குறிப்பிட்டனர்.
அரியலூர் மாவட்டம், சென்னிவனம் தீர்க்கபுரிஸ்வரர் கோயிலில் இருக்கும் இரண்டாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு ஒன்று (கி.பி. 1137) "பள்ளிச் சேந்தந் சுத்தமல்லனாந வாணகோவரையந்" என்ற "வாணர் குல குறுநிலமன்னரைப்" பற்றி குறிப்பிடுகிறது. (ஆவணம், இதழ்-20, பக்கம் 65 & 66).
வடகரை விருதராஜபயங்கர வளநாட்டுக் கிழ்க்காரைக்காட்டு சென்னிவலக் கூற்றத்து நெடுவாயில் ஊரவர்களான :-
"நெடுவாயிலுடையான் திருவரங்கமுடையான் ஒற்றி கொண்டானும்"
"குலோத்துங்க சோழச் சென்னிநாட்டு வேளானும்"
"நெடுவாயில் உடையான் ராஜேந்திர சோழச் சென்னி நாட்டு வேளானும்"
"சோழன் தேவனான எதிரிலிசோழச் சென்னி நாட்டு வேளானும்"
"நெடுவாயிலுடையான் திருவரங்கமுடையானும்"
இவர்கள் அனைவரும் கோயிலுக்கு நிலதானம் வழங்குவதற்கான அரசாணையை "பள்ளிச் சேந்தன் சுத்தமல்லனான வாணகோவரையன்" அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.
மேற்குறிப்பிட்ட கல்வெட்டு (கி.பி. 1137), "வாணர் குல அரசரை" கிழ்கண்டவாறு குறிப்பிடுகிறது :-
"வடகரை விருதராஜபயங்கர வளநாட்டு மேற்கானாட்டு பெண்ணாகடமான முடிகொண்ட சோழச் சதுர்வேதிமங்கலத்துப் பிடாகை கோட்டையில் இருந்து திருமுந் கைப்படி திருமுக காணி பெற்ற பள்ளிச் சேந்தந் சுத்தமல்லனாந வாணகோவரையந்" (Line - 16 to 21).
வடகரை விருதராஜபயங்கர வளநாட்டு மேற்கானாட்டில் இருக்கும் பெண்ணாகடமான முடிகொண்ட சோழச் சதுர்வேதிமங்கலத்துப் பிடாகை கோட்டையில் இருந்து, வன்னிய அரசனான "பள்ளிச் சேந்தன் சுத்தமல்லனான வாணகோவரையன்" அவர்கள் அரசாணையை வெளியிட்டிருக்கிறார்கள்.
பள்ளிச் சேந்தன் சுத்தமல்லனான வாணகோவரையன் அவர்கள் "திருமுந் கைப்படி திருமுக காணி பெற்ற" என்று கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறார். அதாவது இவர் அரசாணையை வெளியிடுவதற்கான அதிகாரத்தையும் மற்றும் அரச நிலங்களையும் பெற்றவர் என்பதாக கல்வெட்டு குறிப்பிடுகிறது.
மேலும் இவர், பெண்ணாகடமான முடிகொண்ட சோழச் சதுர்வேதிமங்கலத்துப் பிடாகை "கோட்டையில்" இருந்தவர் என்பதாக கல்வெட்டு குறிப்பிடுகிறது.
பிடாகை என்ற சொல்லானது சிற்றூரைக் குறிப்பிடும் சொல்லாகும். குறிப்பாக பிரமதேய ஊருக்குச் சொந்தமான சிற்றூர்களாகும். எனவே பெண்ணாகடமான முடிகொண்ட சோழச் சதுர்வேதி மங்கலத்துப் பிடாகை "கோட்டை" என்பது ஓர் சிற்றூராகும்.
அவ் ஊரில் வாணர் குல அரசனான "பள்ளி சேந்தன் சுத்தமல்லனான வாணகோவரையன்" அவர்கள் "அரச நிலங்களை" பெற்றிருக்கிறார். மேலும் அவர் அவ் ஊரில் ஒரு "கோட்டையை" அமைத்திருக்க வேண்டும். எனவே தான் அவ் ஊருக்கு "கோட்டை" என்ற பெயர் இருந்திருக்கிறது. அக் "கோட்டையில்" இருந்தே வன்னிய மன்னர் அவர்கள் "அரசாணையை" பிறப்பித்துள்ளார்கள் என்பதை கல்வெட்டு (கி.பி. 1137) நமக்கு தெளிவுப்படுத்துகிறது.
"பள்ளி சேந்தன் சுத்தமல்லனான வாணகோவரையன்" அவர்களுக்கு, க்ஷத்ரியர்களான சோழர்கள் இதுபோன்ற பல்வேறு அதிகாரங்களை வழங்கியதன் மிக முக்கிய காரணம் என்னவென்றால், அவர் "க்ஷத்ரியர்களான வாணகோவரையர் வம்சத்தைச் சேர்ந்த மன்னர்" என்பதேயாகும்.
எனவே அரியலூர் சென்னிவனம் தீர்க்கபுரிஸ்வரர் கோயில் கல்வெட்டில் (கி.பி. 1137) குறிப்பிடப்படும் "பள்ளி சேந்தன் சுத்தமல்லனான வாணகோவரையன்" என்பவர் "வாணர் குல குறுநிலமன்னர்" ஆவார்கள். மேலும் அவரை "பள்ளி" என்று கல்வெட்டு மிகத் தெளிவாக தெரிவிப்பதால், அவர் "வன்னிய குல க்ஷத்ரிய" சமூகத்தை சேர்ந்த மன்னர் ஆவார்கள்.
முதலாம் குலோத்துங்க சோழனின் (1070 - 1120) ஆட்சி காலத்தில், வாணர் குல மன்னர்களாக இருந்தவர்கள் :-
"வாணகோவரையன் சுத்தமல்லன் உத்தம சோழனான இலங்கேஸ்வரன்" என்பவரும், அவரது மகன் "சுத்தமல்லன் முடிகொண்டானான விருதராசபயங்கர வாணகோவரையன்" என்பவரும் ஆவார்கள்.
இதில் கலிங்கத்துப் போரில் பங்குபெற்ற (கி.பி. 1112), "சுத்தமல்லன் முடிகொண்டனான விருதராசபயங்கர வாணகோவரையன்" என்பவரே "பள்ளி சேந்தன் சுத்தமல்லனான வாணகோவரையன்" என்பவராவார்கள்.
ஏனென்றால் அவர் தந்தையான "வாணகோவரையன் சுத்தமல்லன் உத்தம சோழனான இலங்கேஸ்வரன்" என்பவரும் "பள்ளி" (வன்னியன்) என்றே கல்வெட்டில் குறிப்பிடப்பட்டார்கள். அவரது பல்வேறு பெயர்கள் வருமாறு :-
"பள்ளி செங்கேணி சாத்தன் சோழனான சேனாபதி வாணராஜர்"
"வாணாதிராஜர்"
"சுத்தமல்லன் சோழ குல சுந்தரனான கங்கைகொண்டசோழ வாணகோவரையன்"
போன்றவைகளாகும். வாணர் குல அரசர்களான "இலங்கேஸ்வரன்" என்பவரும், அவரது மகன் "முடிகொண்டானும்", எங்களது "வன்னிய குல க்ஷத்ரிய" சமூகத்தில் தோன்றிய புகழ்மிகு அரசர்கள் ஆவார்கள்.
மேலே நான் குறிப்பிட்டது முற்றிலும் உண்மை என்பதை நிருபிக்கும் விதமாக, முனைவர் இல. தியாகராஜன் அவர்களின் "கடந்தையார் வரலாறு" நமக்கு மேலும் சான்றுகளைத் தருகிறது.
சோழர்களிடம் குறுநிலமன்னர்களாக இருந்த "வன்னிய குல க்ஷத்ரிய" சமூகத்தைச் சேர்ந்த "கடந்தையார்கள்", தங்களை "வங்கார முத்தரையன்" என்றும் "இராசகுலவர்" (க்ஷத்ரியர்) என்றும் குறிப்பிட்டனர். அவர்களது வரலாற்றை எழுதிய முனைவர் இல. தியாகராஜன் அவர்கள், மிக முக்கிய குறிப்பை தந்துள்ளார்கள். அது :-
அரியலூர் மாவட்டம், கோயில் பாளையம், சோழீசுவரர் கோயிலை, முதலாம் குலோத்துங்க சோழனின் (கி.பி. 1070 - 1107) 37-வது ஆட்சி ஆண்டில் (கி.பி. 1107) "வாணகோவரையன் சுத்தமல்லன் முடிகொண்டான்" என்னும் "வன்னிய இனத்து படைத் தளபதியால்" கட்டப்பெற்றதாகும் என்று குறிப்பிடுகிறார் முனைவர் இல. தியாகராஜன் அவர்கள்.
தம் இனத்து முன்னோரால் கட்டப்பெற்ற கோயில் பாளையம் சோழீசுவரர் கோயிலுக்கு 15 சந்தி விளக்குகளையும் மற்றும் பல நற்காரியங்களையும் செய்தவர் "கடந்தை சேந்தன் ஆதித்தனான இராஜ ராஜ வங்கார முத்தரையன்" என்பவர் என்று இரண்டாம் இராசாதிராச சோழரின் கல்வெட்டு (கி.பி. 1170) ஒன்று குறிப்பிடுவதாக முனைவர் இல. தியாகராஜன் அவர்கள் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள்.
எனவே கலிங்கத்துப் போரில் பங்கு பெற்ற வாணர் குல அரசனான "வாணகோவரையன் சுத்தமல்லன் முடிகொண்டான்" என்பவர் "வன்னிய குல க்ஷத்ரிய" சமூகத்தைச் சேர்ந்த அரசர் ஆவார்.
வாணர்களின் கிளைப் பிரிவினர்கள் இருந்திருப்பதும் கல்வெட்டின் வாயிலாக நமக்கு தெரியவருகிறது. சோழர்கள் காலத்தில் குறுநிலமன்னர்களாக விளங்கிய "துண்ட நாடு உடையார்கள்" என்பவர்கள் தங்களை கல்வெட்டுகளில் :-
"துண்ட நாடு உடையான் ஏகவாசகன் உலகுகண் விடுத்தப்பெருமாள் வாணகோவரையன்"
"துண்ட நாடு உடையான் ஏகவாசகன் குலோத்துங்கரான பிள்ளை வாணகோவரையன்"
என்று குறிப்பிட்டார்கள். துண்ட நாடு உடையார்கள் தங்களை "பள்ளி" என்று கல்வெட்டில் குறிப்பிட்டனர். வீரராஜேந்திர சோழனின் கல்வெட்டில் (கி.பி. 1067), "பள்ளி கூத்தன் பக்கனான ஜெயம்கொண்டசோழ துண்ட நாடாழ்வான்" என்பவர் குறிப்பிடப்படுகிறார். எனவே "வேளிர் குல துண்ட நாடு உடையார்கள்" என்பவர்கள் "வன்னிய குல க்ஷத்ரிய" சமூதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இதைப் போலவே, "வேளிர் குடி வழிவந்த நத்தமான் உடையார்" அரசர்களான "வேட்டவலம் வாணாதிராயர்களும்", வாணர் குல அரசர்களின் கிளை மரபினர்கள் ஆவார்கள். அதாவது "க்ஷத்ரிய சமூகத்தைச்" சேர்ந்த மரபினர்கள் ஆவார்கள்.
வாழ்க "வாணர் குல அரசர்களின் புகழ்".
Thanks to Mr N. Murali Naicker
----- xx ----- xx ----- xx -----
0 notes
Text
சிவந்தெழுந்த பல்லவராயர் :
சிவந்தெழுந்த பல்லவராயன் ============================
சிவந்தெழுந்த பல்லவராயன் உலா என்ற நூலிலும், புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டுகளிலும் "சிவந்தெழுந்த பல்லவராயனைப்" பற்றியும் அவனது முன்னோர்களைப் பற்றியும் அறியமுடிகிறது.
அதில் அவர்கள் "பல்லவர்" வழிவந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளனர். தமிழ் தாத்தா உ.வே. சாமிநாதய்யர் சேகரித்த சிவந்தெழுந்த பல்லவராயன் உலாவினை, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் முனைவர் இரா. நாகசாமி அவர்கள் கல்வெட்டு காலாண்டிதழில் வெளியிட்டுள்ளார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோகர்ணம், குடுமியான்மலை, திருவரங்குளம் முதலிய ஊர்களில் இப் பல்லவராயர்களைப் பற்றிய கல்வெட்டுகளை காணமுடிகிறது.
சிவந்தெழுந்த பல்லவராயன் உலாவின் பாட்டுடையத் தலைவனான "மல்லை சிவந்தெழுந்த பல்லவன்" தன்னை சோழர், பாண்டியர் ஆகிய இரண்டு குடிகளுடனும் தொடர்பு உடையவன் என்று குறிப்பிடுகிறான். ஐயடிகள் காடவர் கோனும், காடவர் கோன் கழற்சிங்கப் பல்லவனும் இவனது முன்னோர்கள் என்று குறிப்பிடுகிறான். மேலும் இவனது முன்னோர்கள் தில்லையிலும் (சிதம்பரம்), காவிரிப் பூம்பட்டினத்திலும் பல்லவனீச்சுவரத்தை தோற்றுவித்தவர்கள் என்பதை உலாவின் மூலம் அறியமுடிகிறது :-
"சூடுமுடிக் காடவர்கோன் பல்லவனுங் கட்டுகழற் சிங்கரெனப் பாடியதொண் தத்தொகையிற் பல்லவனும்" (சி.ப.உலா, பாடல் - 19).
கலிங்கத்துப் பரணியில் புகழ்பெற்ற "கருணாகரத் தொண்டைமானும்", ஒட்டக்கூத்தனால் பரணியில் பாடப்பெற்ற "திருச்சிற்றம் பலமுடையான் பெருமானம்பி பல்லவராயனும் "சிவந்தெழுந்த பல்லவராயனின் முன்னோர்கள் ஆவர் :-
"தேரிய காவிரி நாடன் கலிங்கத் தமிழ்பரணி பாவினில் வீறுமொழிப் பல்லவனும்" (சி.ப.உலா, பாடல் - 24).
"மூவருலா பாத்தன் தமிழினுமுன் பாடும் பரணியினும் கூத்தன் கவிகொண்ட கொற்றவனும்" (சி.ப.உலா, பாடல் - 25).
சிவந்தெழுந்த பல்லவராயன் உலாவில், பல்லவராயர்கள் "பதினெட்டு வன்னியர் கண்டன்" என்றும் "பல்லவர் கோன்" என்றும் குறிப்பிடப்படுகிறார்கள் :-
"கருந்துளப மாமா லைதினெட்டு வன்னியர்கண் டன் பனுவற் பாமாலை மாலையிட்ட பல்லவர் கோன்" (சி.ப.உலா, பாடல் - 40).
பல்லவராயர்கள் தங்களை "சம்பு பல்லவன்" (சம்பு குல பல்லவன்) வழிவந்தவர்கள் என்பதனை சிவந்தெழுந்த பல்லவராயன் உலாவில் குறிப்பிட்டுள்ளார்கள் :-
"நிம்பமெனும் பல்லவமே சூட்டிமுடி பாலித் தரசிருந்து பல்லவதே சம்புரக்கும் பல்லவனும்" (சி.ப.உலா, பாடல் - 9).
ஏகாம்பரநாதர் உலாவில் வரும் பல்லவனான சம்புவராய மன்னனை, சிவந்தெழுந்த பல்லவராயன் தன்னுடைய முன்னோர் என்று சிவந்தெழுந்த பல்லவராயன் உலாவில் குறிப்பிடுகிறான் :-
"நத்தமும்ப மெச்சியத் தத்துபரி மேலாநின் றேகம்பர் கச்சியுலா வில் வந்த காவலனும் (சி.ப.உலா, பாடல் - 26).
இரட்டைப் புலவர்களால் "கச்சி ஏகாம்பரேஸ்வரர்" மீது பாடப்பட்ட நூலே "ஏகாம்பரநாதர் உலாவாகும்". இவ்வுலாவில் சம்புவராய மன்னனான மூன்றாம் இராசநாராயண சம்புவராயன் (என்னும்) திருமல்லிநாதன் (கி.பி. 1356 - 1379), ஏகாம்பரேஸ்வரருக்கு அளித்த பல கொடைச் சிறப்பை பற்றி இரட்டை புலவர்கள் பல பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்கள். அவை :-
"உள்ளமகிழ் செம்பதுமை கேள்வன் திருமல்லிநாதனுயர் சம்புபதி நல்கும் தடந்தேர்போல்" (ஏ.நா.உலா, பாடல் - 146).
"தனக்கமையச் சம்புகுலத் தொருவன் சாத்துகைக்காம் என்றளித்த செம்பொன் மணிமகுடம் சேர்வித்தும்" (ஏ.நா.உலா, பாடல் - 61).
"விருப்பால் வடித்தசுடர் வேற்சம்பன் வாழ்மல்லிநாதன் கொடுத்த திருத்தேர்மேற் கொண்டு" (ஏ.நா.உலா, பாடல் - 102).
"திங்கள் முடித்த முடிக்கு முடிகொடுத்த சம்பன் படைத்ததுலா மண்டபமும் பார்த்து" (ஏ.நா.உலா, பாடல் - 321).
"வெஞ்சமரில் தத்துபரி பல்லவன் சம்பு குலப் பெருமாள் வைத்த துலாபார மண்டபத்தும்" (ஏ.நா.உலா, பாடல் - 161).
சிவந்தெழுந்த பல்லவராயன் உலாவில் குறிப்பிடப்படும் சம்புவராய மன்னனை சிவந்தெழுந்த பல்லவராயன் தன்னுடைய வம்சத்தவனாக குறிப்பிடுகிறான். எனவே சிவந்தெழுந்த பல்லவராயன் "வன்னிய குலத்தில்" தோன்றியவன் என்பது உறுதியாகிறது.
சிவந்தெழுந்த பல்லவராயன் தன்னை "ஆளப்பிறந்த அரசர் கோன்" என்றும் "கூடலர் கோன்" என்றும் குறிப்பிடுகிறான். இது "வன்னிய குல க்ஷத்திரிய அரசர்களான "காடவராயர்களை" குறிப்பிடுவதாகும்.
புதுக்கோட்டை பகுதியில் "பல்லவராயர்கள்" பல நூற்றாண்டுகளாக ஆட்சி செய்திருக்கிறார்கள் என்றும், கி.பி. 1378 ஆம் ஆண்டு முதலே அவர்களைப் பற்றிய கல்வெட்டுகள் காணக்கிடைக்கிறது என்று தமிழ்நாடு தொல்லியல் துறையில் பணியாற்றிய முனைவர் சொ. சாந்தலிங்கம் அவர்கள் "குடுமியான்மலை" என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். பல்லவராயர்கள் புதுக்கோட்டை பகுதியில் ���ல கோயில்களுக்கும் செய்துள்ள கொடைகளை கூறும் கல்வெட்டுகளைக் கொண்டு இவர்களது ஆட்சிப் பரப்பினையும், அவர்கள் இன்னார் என்பதனையும் அறிந்து கொள்ளவும் முடிகிறது என்று முனைவர் சொ. சாந்தலிங்கம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
மேலும் அவர் குறிப்பிடுவது என்னவென்றால், சிவந்தெழுந்த திருமலை ராஜ பல்லவராயன் என்பவன் கி.பி. 1539 இல் ஆட்சி ஆண்டவன் (I.P.S. No. 752). இவனுக்கு அடுத்து அச்சுதப் பல்லவராயனும், இவன் மகன் மல்லப்ப பல்லவராயனும் (மல்லப்ப நாயக்கப் பல்லவரையர், I.P.S. No. 906) ஆண்டனர். அச்சுதப் பல்லவராயன் மதுரை திருமலை நாயக்கனின் சமகாலத்தவன். மல்லப்ப பல்லவராயரின் மகள் வழிப்பேரனே "சிவந்தெழுந்த பல்லவராயன்". இவன் பல்லவராயர் மரபில் இறுதியாக ஆண்ட சிறந்த மன்னன் ஆவான்.
இ��ன் காலத்தில் குடுமியான்மலைக் கோயிலில் பல திருப்பணிகள் செய்தான், மலர்வனங்கள் வைத்தான் என்றும் வரலாறு கூறும். இவன் பெயரில் உலாவும், பிள்ளைத் தமிழும் அக் காலத்தில் எழுந்தன. சிறந்த சிவபக்தனான இவனை ராமநாதபுரம் சேதுபதியான கிழவன் சேதுபதியின் மகன் காளையார் கோயிலுக்கு அருகில் கந்ததேவி என்னும் இடத்தில் எதிர்பாரத விதமாகத் தாக்கிக் கொன்றான்.
சிவந்தெழுந்த பல்லவராயன் மறைந்த பிறகு இதே பகுதியை தொண்டைமான்களுக்குக் கொடுத்து ஆள ஏற்பாடு செய்தார் கிழவன் சேதுபதி. இவர்களும் பல்லவராயர்களைப் போன்று தொண்டை மண்டலத்திலிருந்து வந்தவர்களே. யானைப் பிடிப்பதில் திறமை சாலியாக இருந்த இவர்கள் புதுக்கோட்டை பகுதியில் வந்து குடியேறினர். இவர்கள் "கள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்கள்" என்று முனைவர் சொ. சாந்தலிங்கம் அவர்கள், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறையால் 1981 இல் வெளியிடப்பெற்ற "குடுமியான்மலை" என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.
மேற்குறிப்பிடப்பட்ட சான்றுகளில் இருந்து தெரியவரும் கருத்து என்னவென்றால் :-
க்ஷத்திரிய மரபில் வந்த அரசர்களான "பல்லவராயர்கள்" புதுக்கோட்டை பகுதியில் ஆட்சி செலுத்தியவர்கள் ஆவர். வன்னிய குல க்ஷத்திரிய அரசனான சிவந்தெழுந்த பல்லவராயனை மறவர் வம்சத்து கிழவன் சேதுபதியின் மகன் கொலை செய்தான். இக் கொலைக்கான காரணம், மறவர் வம்சத்து சூரைக்குடி தலைவர்களை சிவந்தெழுந்த பல்லவராயன் வென்றதின் காரணமாக இருக்கலாம்.
சிவந்தெழுந்த பல்லவராயன் தன்னை (பாடல் - 37) "சூரைக்குடி கவர்ந்த தூயோனும்" என்று குறிப்பிடுகிறான். அதாவது "சூரைக்குடி தலைவர்களான மறவர்களை வென்ற தூயவன்" என்று தன்னை குறிப்பிடுகிறான்.
திருமெய்யம் வட்டம், நெய்வாசல், அகத்தீஸ்வரர் கோயிலில் இருக்கும் விஜயநகர் காலத்து கல்வெட்டு ஒன்றில், சூரைக்குடி அரசுபள்ளிகொண்ட பெருமாள் விசையாலைய தேவர் குமாரர் வயிரவ நயினார் விசையாலைய தேவர் அவர்கள், "பதிநெட்டு வன்னியரை முதுவுபுறம் கண்டன்" என்று தெரிவிக்கிறார். பல்லவராயர்கள் தங்களை "பதினெட்டு வன்னியர் கண்டன்" என்று சிவந்தெழுந்த பல்லவராயன் உலாவில் குறிப்பிடுகிறார்கள். எனவே அகத்தீஸ்வரர் கோயில் கல்வெட்டு குறிப்பிடும் "பதினெட்டு வன்னியரை முதுவுபுறம் கண்டான்" என்பது பல்லவராயர்களை சூரைக்குடி அரசர்கள் வென்றதின் காரணமாக இருக்கலாம். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி போர் நிகழ்ந்திருக்கவேண்டும்.
சிவந்தெழுந்த பல்லவராயன் கொல்லப்பட்ட பிறகு, ராமநாதபுரம் சேதுபதியின் உறவினர்களான "கள்ளர் குல தொண்டைமான்களுக்கு", சிவந்தெழுந்த பல்லவராயன் ஆட்சி செலுத்திய "புதுக்கோட்டையை" ஆள ஏற்பாடு செய்தார் கிழவன் சேதுபதி. கள்ளர் வம்சத்து ரகுநாதராய தொண்டைமான் (கி.பி. 1686) அவர்களே புதுக்கோட்டையை முதன் முதலில் கள்ளர் வம்சத்தின் சார்பில் ஆட்சி செலுத்தியவர்கள் ஆவர்.
புதுக்கோட்டையை ஆட்சி செய்த வன்னிய குல பல்லவராயர்கள் "க்ஷத்திரியர்கள்" என்பதை முனைவர் சொ. சாந்தலிங்கம் அவர்கள் குடுமியான்மலை கல்வெட்டின் மூலம் தெரிவிக்கிறார்கள் :-
"கி.பி. 1615 ஆம் ஆண்டில் அச்சுதப் பல்லவராயனின் மகன் மல்லப்ப பல்லவராயன் வைத்தூர் சீமையை ஆண்டான். அக்கால் அவன் சிகாநல்லூர் வாசிகளிடம் 30 பொன்னுக்கு நிலம் வாங்கி, அதைக் கோயிலுக்குக் கொடுத்து, கோயிலில் உள்ள அந்தணர்களுக்கும் சூத்திரர்களுக்கும் இலவசமாக மனைநிலம் வழங்கும்படி ஆணையிட்ட��ன்". (I.P.S. No. 866).
மல்லப்ப பல்லவராயர் ��வர்கள் குடுமியான்மலை கோயிலில் உள்ள இறைவனுக்கு பூஜை செய்யும் "பிராமணர்களுக்கு" இலவசமாக மனைநிலம் வழங்கினார். அதைப்போலவே அவர், அக் கோயிலில் மற்ற பணிகளில் ஈடுபட்டிருந்த "சூத்திரர்களுக்கும்" இலவசமாக மனைநிலம் வழங்கினார் என்பதை குடுமியான்மலை கல்வெட்டு (கி.பி. 1615) குறிப்பிடுகிறது. பல்லவ வம்சத்து "க்ஷத்ரியரான" அரசர் மல்லப்ப பல்லவராயர், உயர்நிலையில் இருந்த "பிராமணர்களுக்கும்" கிழ்நிலையில் இருந்த "சூத்திரர்களுக்கும்" நிலதானம் வழங்கியுள்ளார்கள்.
சங்ககாலத்திலிருந்து தமிழகத்தில் நிலவிய "நால் வருண" முறையானது (பிராமணர், க்ஷத்ரியர், வைசியர், சூத்திரர்) கி.பி.17 ஆம் நூற்றாண்டிலும் தமிழகத்தில் நிலவியது என்பதற்கு குடுமியான்மலைக் கல்வெட்டு நமக்கு சான்றாக அமைகிறது.
இப்படி வாழ்வாங்கு வாழ்ந்த "புதுக்கோட்டை பல்லவராயர்கள்" காலத்தின் கோலத்தினால் அழிவுற்றாலும், அவர்களது வரலாறு, பராக்கிரமம் மற்றும் புகழானது தமிழக மக்களிடம் என்றென்றும் நிலைத்து வாழும்.


Thanks to Mr N. Murali Naicker
---- xx ----- xx ----- xx -----
1 note
·
View note
Text
அறந்தாங்கி தொண்டைமான்கள் வன்னியர்கள்(tondaiman-vanniyar)
அறந்தாங்கி தொண்டைமான்களும் மற்றும் புதுக்கோட்டை தொண்டைமான்களும் இந்திர குலத்தை சார்ந்த "புதுக்கோட்டை தொண்டைமான்கள்" கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். புதுக்கோட்டை தொண்டைமான்கள், சூரியனார் கோயில் ஆதினப் பட்டையத்தில் தங்களை "இந்திர குல வங்கிஷன்" (இந்திர குல வம்சத்தவர்) என்று குறிப்பிடுகிறார்கள். சூரிய குலத்தை சார்ந்த "அறந்தாங்கி தொண்டைமான்கள்" வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அறந்தாங்கி தொண்டைமான்கள் "அழுஞ்சியேந்தல் செப்பேடு" மற்றும் "கிழ்ப்பாப்பனூர்ச் செப்பேட்டில்" தங்களை "சூரிய குலத்தில் தோன்றிய வள்ளல்" என்று குறிப்பிடுகிறார்கள். மேலும் அவர்கள் "ஏனாதிச் செப்பேட்டில்" தங்களை "சூரிய வங்கிச திலகன்" என்று குறிப்பிடுகிறார்கள். அறந்தாங்கி தொண்டைமான்கள் "பிறாந்தனில் ஏந்தல்கள் குறிச்சிகள் செப்பேட்டில்" தங்களை "முகிலின் கிழ்திரியும் இள வன்னிய மகா கண்டன்" என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது "மேகத்தில் திரியும் இளம் சூரியனை போன்ற மகா கண்டன்" என்பதாகும். எனவே "இள வன்னிய" என்பது "இளம் சூரியன்" என்று பொருள்படும். அறந்தாங்கி தொண்டைமான்கள் "வன்னியராகிய சூரிய குலத்தவர்கள்" ஆவார்கள். இதைப்போலவே புதுக்கோட்டை மாவட்டக் கல்வெட்டிலும் தங்களை பற்றிக் குறிப்பிடுகிறார்கள். அதில் "முகிலின் கிழ்திரியும்" என்ற பகுதி சிதைந்து காணப்படுகிறது. ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் மற்றும் மணியம்பலம் கல்வெட்டுகளில், அறந்தாங்கி தொண்டைமான்கள் தங்களை "இள வன்னியர் மீசுர கண்டன்" என்று குறிப்பிடுகிறார்கள் (I.P.S. No.738 & 845). இக் கல்வெட்டுகளின் மூலம் இவர்கள் "வன்னிய குல க்ஷத்ரிய" சமூகத்தவர்கள் என்று அறியமுடிகிறது. அறந்தாங்கி தொண்டைமான்களின் முன்னோர் என்று அவர்களால் குறிக்கப்பெற்ற தொண்டைமான் இளந்திரையான் நாககன்னிகைபால் பிறந்த சோழன் மகன் என்ற காரணத்தால் தங்களைச் சோழர் குலமாகவே குறிப்பிட்டுக்கொண்டனர். அவர்கள் மெய்க்கீர்த்தியில் அதைக் குறிக்கும் பல தொடர்கள் உள்ளன. அவை :- "சூரிய குலத்தில் தோன்றிய வள்ளல்" "நலம்பெறு சோழ ராசாவின் மரபினன்" "புலிக்கொடி மேருவில் பொறித்தருள் புகழோன்" "புறாவினுக்காகத் துலைபுகு பிரபலன்" "கிடாரத்து அரசன் தெய்விதம் அளித்தோன்" "கலிங்கம் திறக்கொண்டு பரணி புனைந்தோன்" "கம்பன் தமிழுக்குச் செம்பொன் அளித்தோன்" "ஓட்டக் கூத்தன் உயர்தமிழ் புனைந்தோன்" இத் தொடர்கள் சோழர் குல தொடர்பை குறிப்பிடுவதாகும். இவற்றில் சோழர்களின் சூரிய குலம், இமயத்தில் சோழர்கள் பொறித்த புலிக்கொடி, புறாவுக்காக தன் சதையை கொடுத்த சிபிச்சக்ரவர்த்தி, கிடாரத்தை வென்ற முதலாம் ராஜேந்திர சோழன், முதலாம் குலோத்துங்கச் சோழன் மற்றும் கருணாகர தொண்டைமான் பற்றிய கலிங்கத்துப்பரணி, வன்னியர்களின் புகழினைப் பற்றி சிலைஎழுபது கவி பாடிய கவிச்சக்ரவர்த்தி கம்பருக்கு கருணாகர தொண்டைமான் செம்பொன் பரிசளித்தது, ஓட்டக்கூத்தர் சோழர்கள் பற்றி பாடிய மூவருலா போன்றவைகள் குறிப்பிடப்படுகின்றன. பல்லவர்களான அறந்தாங்கி தொண்டைமான்கள், தங்களை "பண்ணைவயல் செப்பேட்டில்" கிழ் கண்ட வாசகங்களில் குறித்துள்ளனர் :- "பாலாறு உடைய பாக்கிய சம்பன்னன்" (சம்பு மன்னன்). "மலை கலங்கினும் மனங்கலங் காதான்" (இவ் வாக்கியம் வன்னியர் பற்றியது, பல வன்னியர் செப்புபட்டயங்களில் இது வந்துள்ளது). "கச்சியம் பதியான் கருணா கடாட்சன்" (காஞ்சிபுரத்தவன்). "மல்லை மயிலை வண்டை நகராதிபன்" (மாமல்லபுரம், மயிலாப்பூர், வண்டலூர் நகரத்தின் அதிபன்). "கம்பன் தமிழுக்குச் செம்பொன் அளித்தோன்" (கம்பர் எழுதிய, வன்னியர் புகழ்பாடும் "சிலை எழுபதிற்கு" செம்பொன் அளித்தவன்). "நலம்பெறு சோழ ராசாவின் மரபினன்" (சோழரும், பல்லவரும் "க்ஷத்திரியர் என்பதாலும், இவர்களிடையே இருந்த மிக நெருங்கிய திருமணஉறவும் இதை உறுதிப்படுத்துகிறது). "கலிங்கத் திறைகொண்டு பரணி புனைந்தோன்" (அறந்தாங்கி தொண்டைமான்களை, கலிங்கத்தை வென்று பரணி படைத்த "கருணாகர தொண்டைமான்" வம்சத்தவர்கள் என்று குறிப்பிடுகிறது). எனவே மேற்சொன்ன காரணங்களால் "அறந்தாங்கி தொண்டைமான்கள்" பல்லவர்கள் என்பதும் அவர்கள் "வன்னிய குல க்ஷத்திரிய" சமூகத்தை சார்ந்த மரபினர்கள் என்பதும் பெறப்படுகிறது. சோழர்கள் காலத்தில் குறுநில மன்னர்களாகவும் மற்றும் அவர்களுக்கு நெருங்கிய உறவினர்களாகவும் விளங்கிய "காடவர்கள்" (பல்லவர்கள்) வன்னியர் சமூகத்தவர்கள். இக் காரணமும் அறந்தாங்கி தொண்டைமான்களின் சமூக வரலாற்றுக்கு வலிமை சேர்கிறது. எனவே சோழர்களும், பல்லவர்களும் "வன்னிய குல க்ஷத்ரிய இனத்தை" சேர்ந்தவர்கள் என்பது வரலாற்றில் உறுதியாகிறது.
Thanks to Mr N. Murali Naicker
1 note
·
View note
Text
பழுவேட்டரையர்கள் என்ற மழவரையர்கள்(PALUVETTARAIYAR-MALAVAR)

பழுவேட்டரைய அரசர்கள் பிற்காலச் சோழர்களின் தொடக்க காலத்தில் மிகவும் சிறப்புற்று விளங்கிய குறுநிலமன்னர்கள் ஆவார்கள். இப் புகழ் மிகு அரசர்கள் எந்த மரபை சார்ந்தவர்கள் என்பதை பற்றி விளக்குவதே இக் கட்டுரையின் நோக்கமாகும். பழுவேட்டரையர்களை "கேரள அரசர்கள்" என்று அன்பில் மற்றும் உதயேந்திரம் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. இவர்கள் சோழர்களுடன் திருமணஉறவும் புரிந்திருக்கின்றனர்.
(1 & 2).சேரர்குடி, கொல்லிமழவர்குடி, அதியமான்குடி இவர்கள் யாவரும் "மழவர்குடியை" சார்ந்தவர்கள் என்று பல சான்றுகள் மூலம் நமக்கு நன்கு அறியக்கிடைக்கின்றது.
(3) பழுவேட்டரையர்களும் தங்களை "மழவர்" ஏன்றே குறிப்பிட்டுள்ளனர். பழுவேட்டரையன் மறவன் கண்டனின் மாமன் என்று "மழவர் கொங்கணி சென்னி நம்பி" என்பாரைக் கிழப்பழுவூர் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
(4) அது :- "பழுவேட்டரையர் மறவன் கண்டநார் மாமடிகள் மழவர் கொங்கணி செந்நி நம்பியார் வைத்த விளக்கு ஒன்று" பிற்காலச் சோழர் காலத்தில் தகடூரை (தர்மபுரி) தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்த அதியமான் மன்னர்களும் தங்களை "சேரர்குடியை" சார்ந்தவர்கள் என்றும் மற்றும் அவர்கள் தங்களை "கேரள அரசர்கள்" என்றும் திருமலை கல்வெட்டில் இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருத பகுதியில் தெரிவித்துகொண்டிருகின்றனர்.
(5) அது :- "ஸ்ரீமத் கேரள பூபரிதா யவநிகா நாம்நா" "ஸ்வஸ்திஸ்ரீ சேரவம்சத்து அதிகைமான் எழினி" மேலும் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், புங்கனூருக்கு அருகே உள்ள லட்டிகம் நீலகண்டேஸ்வரர் கோயிலில் இருக்கும் கல்வெட்டு, விடுகாதழகிய பெருமாள் "சேர அரசன் அதிகேந்திர வ்யாமுக்த ச்ரவனேஸ்வரன்" என்றும் "திருமால் போன்ற அவன் வடதிசைக்குச் சென்று தன்னுடைய சின்னமான வில்லை பொறித்தான்" என்றும் தெரிவிக்கின்றது. அக் கோயிலில் பல இடங்களில் தன் குலச் சின்னமான "வில்" லினை மேடையில் அமர்த்தி அதன் இருபுறங்களிலும் சாமரம் வீசுவது போலவும், அவ் "வில்லின்" சிற்பத்தின் மீது வெண்கொற்றக்குடையையும், விடுகாதழகிய பெருமான் பொறித்துள்ளான். இதன் மூலம் "அதியமான்கள்" சேரர்களின் வழித்தோன்றல்கள் என்பது முடிவாகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டில்
(6) பிற்கால அதியமான் மன்னர்கள் தங்களை "தகடூர் அதியரையன்" (ஸ்வஸ்திஸ்ரீ குலோத்துங்க சோழ தகடாதராயந் விடுகாதழகிய பெருமாளான சேரமான் பெருமாளேந்) என்றும் "திரிபுவன மல்ல பூர்வ அதியரையர்கள்" என்றும் அவர்களில் ஒருவரது மகனை "பள்ளி" என்றும் குறிப்பிட்டுள்ளனர். எனவே அதியமான்கள் "வன்னிய மரபினர்" என்று பெறப்படுகிறது. பழுவேட்டரையர்களும் தங்களை "கேரள அரசர்கள்" என்று தெரிவித்து கொண்டிருப்பதால், அதியமான் மன்னர்களும் பழுவேட்டரைய மன்னர்களும் "மழவர் குடியை" சார்ந்த "சேர குல வன்னியர்கள்" என்று நிறுவப்படுகிறது. "சேரர்கள்" அக்னி குலத்தில் உதித்தவர்கள் என்று திருவிளையாடல் புராணம், வில்லிபாரதம், பேரூர் புராணம் மற்றும் பிற்கால செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. "கேரள அரசர்கள்" என்பதும் "சேர அரசர்கள்" என்பதும் ஒன்றாகும் அது முறையே சமஸ்கரிதம் மற்றும் தமிழ் பெயர்களின் விளக்கங்களாகும் என்பதை நமக்கு திருமலை கல்வெட்டு புலப்படுத்துகிறது.
(7) பழுவேட்டரையர்களின் ஆலந்துறையார் கோயிலுக்கு பூப்பலகை ஒன்றளித்த "சேரமானாரின்" கைக்கோமாணி மாதேவன் பரமேஸ்வரன் அக்கோயிலில் "கொல்லிப்பெரியான்" என்ற பெயரில் திருச்சுற்றாலை அமைத்துத்தந்தார். இந்த கல்வெட்டில் குறிக்கப்படும் "சேரமானாரின்" மனைவியே அக்காரநங்கை. இவள் பழுவேட்டரையர் மகளாக அவனிகந்தர்ப்ப ஈஸ்வரகிருகக் கோயிலுக்கு விளக்குதானம் செய்துள்ளாள்.
(8) சேரமானாரின் கைக்கோமாணி அச் சேரனின் பெயரில் "கொல்லிப்பெரியான்" (கொல்லி தலைவன்) என்ற திருச்சுற்றாலை அமைத்ததும் அந்த சேரனின் மனைவி அக்காரநங்கை என்பதும், அவள் பழுவேட்டரையர் மகள் என்பதும், இவர்கள் யாவரும் "மழவர் குடியை" சார்ந்த "வன்னிய குல க்ஷத்ரியர்கள்" என்பதும் தெரியவருகிறது. தமிழ்த்தாத்தா டாக்டர். உ. வே. சா, டாக்டர். மா. இராச. மாணிக்கனார், கல்வெட்டறிஞர் திரு. சதாசிவ பண்டாரத்தார், கல்வெட்டறிஞர் திரு. நடன காசிநாதன் போன்ற அறிஞர் பெருமக்கள் மழநாட்டை சார்ந்த "அரியலூர் மழவராயர்களே", "மழவர் குடி" வழிவந்தவர்கள் என்று எழுதியிருக்கிறார்கள். பழுவேட்டரையர்கள் திருவாலந்துறை மகாதேவர்க்குத் திருவமுது, நெய்யமுது, கறியமுது, தயிரமுது ஆகியன படைக்கவும் கோயிலில் இருந்த கணபதி திருமேனிக்குப் பங்குனித் திருவோணத் திருநாளன்று அவலமுது, தேங்காய் பத்து மற்றும் சர்க்கரை பத்துப் பலம் படைக்கவும் வெட்டக் குடியிலிருந்த "வன்னிச் செய்" என்ற நிலத்தை தனமாக தந்துள்ளார்கள்.
(9) பழுவேட்டரையர்கள் "வன்னியர்கள்" என்பதால்தான் "வன்னிச் செய்" என்ற நிலத்தை திருவாலந்துறை மகாதேவர்க்குத் தனமாகத் தந்துள்ளனர். அடிக்குறிப்புகள் : =============== (1) S.I.I. Vol-II (Parts III, IV & V) No.76, Page-386, Verse-8. (He (Parantaka-I) married the daughter of the Lord of Kerala) (2) S.I.I. Vol-XIII, Introduction-V, Para-12. (Amudanar who is referred to in the Anbil plates of Sundara Chola as a Kerala Prince whose daughter was married to Parantaka-I and born him prince Arinjaya (Ep. Ind. Vol-XV, P-50). By "Kerala Prince" should be meant a relation of the Chera King). (3) வன்னியர் மாட்சி, தொல்லியல் அறிஞர் திரு. நடன.காசிநாதன் ஐயா மெய்யப்பன் பத்திப்பகம், Year-2006. (4) S.I.I. Vol-XIX, No.237, page-122. (5) S.I.I. Vol-I, No.75, Page-106. (6) கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள், தமிழக தொல்லியல் துறை, Year-2007. "திரிபுவன மல்ல புர்வாதிய குமரனானச் சிக்கரசிறுப் பிள்ளைகளில் சொக்கந் கருவாயன் பள்ளி இடுபூசலில் குதிரை குத்திபட்டான்" (பொருள் : அதியமான் மரபின அரசன் குமரனானசிக்கரனின் கடைசிப் பிள்ளையான 'சொக்கன் கருவாயன் பள்ளி' இடுபூசலில் குதிரைக்குத்தி இறந்துள்ளான்). மேலும் தருமபுரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், ஆம்பள்ளி என்ற ஊரில் உள்ள கல்வெட்டில் அதியமான் மன்னர்கள் தங்களை "பள்ளி" என்று குறிப்பிட்டுள்ளனர் :- "ராஜராஜ அதியமானர் விடுகாதழகிய பெருமாள் பள்ளிகளில் கங்க காமிண்டன் கட்டிய குட்டையைப் பள்ளிச் சாந்தமாகக் காக்கன் கிளை விடுகாதழகிய பெரும்பள்ளியாழ்வார்க்கு " என்னுடைய குருநாதர், தொல்லியல் மேதை திரு. நடன. காசிநாதன் ஐயா அவர்கள், மேற்குறிப்பிட்ட கல்வெட்டிற்கு பொருள் தந்துள்ளார்கள். அது, "ராஜ ராஜ அதியமானின் உறவினர்களில் (பள்ளிகளில்) கங்க காமிண்டர்கள் இருந்துள்ளார்கள்" என்று ஐயா அவர்கள் பொருள் தந்துள்ளார்கள். எனவே "மழவர்களான அதியமான்கள் வன்னியர்கள்" ஆவர். (7) Atigaiman of the Chera race and he was the son of some Rajaraja and a descendant of a certain yavanika, King of Kerala, or (in Tamil) Erini, King of Vanji. (S.I.I. Vol-I, No.75, Page-106). (8) பழுவூர், இரா. கலைக்கோவன், பக்கம்-243. (9) S.I.I. Vol-XIX, No.406, page-214. Thanks to Mr N. Murali Naicker
1 note
·
View note