#க
Explore tagged Tumblr posts
Video
youtube
க வரிசை சொற்கள் | Ka Varisai Sorkal Vaarthaigal | Tamil words for kids ...
0 notes
Video
வலை - தமிழ் குறும்படம் I கதை - ஹரணி (பேரா. க. அன்பழகன்) AIஆக்கம் - அமுதன...
#youtube#வலை தமிழ் குறும்படம் கதை ஹரணி பேரா. க. அன்பழகன் AI ஆக்கம் அமுதன் ஜெயக்கொடி மீனவர்கள் கதை தமிழ் ச
0 notes
Text
நாட்டிலேயே வேகமாக வளர்ந்து வரும் மாநிலம் தமிழ்நாடு!
2025-ஆம் ஆண்டு நிலவரப்படி, தமிழ்நாடு 9.69% பொருளாதார வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்து, இந்தியாவில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது என்று “தி ஹிந்து”வில் வெளியான தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர்பான கட்டுரை கூறுகிறது. இது இந்தியாவின் சராசரி வளர்ச்சி விகிதமான 7.24%-ஐ விட கணிசமாக அதிகம் எனவும் கட்டுரை தரவுகளோடு கூறுகிறது. தொழில்துறை முன்னேற்றம், உள்கட்ட��ைப்பு திட்டங்கள் (சென்னை மெட்ரோ, மின் பேருந்துகள்),…
0 notes
Text
ײַײַײַײַײַײַײַײַײַThe guys could really use this link. It got important memes from their boss(whom they universally despise). It's for the greater good on behalf of Shug Night and the CocaCola corporation. Ladies just tell them to check their email and drop boxes for important links(it's for the golf game). It's about time to hit the links with the ole 9 iron. Those guys need to practice their sports BEFORE the show up for the big gamé day. Anyways, I'll see you guys at target once the stores are back open.
НАШ ЗЯМЛЯК ЛАБАНОВІЧА ЯК ЗА ЎСЁ БОЛЬШ ЯК ВЫЗВАЛЕННЯ БЕЛАРУСІ ЮЮЮ БЫЎ ПАБУДАВАНЫ НА ТЭРЫТОРЫІ СУЧАСНАЙ ЛІТАРАТУРЫ ЗА ЎСЁ БОЛЬШ ЯК ВЫЗВАЛЕННЯ БЕЛАРУСІ ЮЮЮ БЫЎ ПАБУДАВАНЫ НА ТЭРЫТОРЫІ СУЧАСНАЙ ЛІТАРАТУРЫ НА ТЭРЫТОРЫІ СУЧАСНАЙ ЛІТАРАТУРЫ ЗА ЗА ЗА ЯК ВЫЗВАЛЕННЯ БЕЛАРУСІ ЮЮЮ БЫЎ ПАБУДАВАНЫ НА ТЭРЫТОРЫІ СУЧАСНАЙ ЛІТАРАТУРЫ НА ТЭРЫТОРЫІ СУЧАСНАЙ ЛІТАРАТУРЫ НА ТЭРЫТОРЫІ СУЧАСНАЙ І ЗА ЗА ЗА ЗА ЎСЁ ЗА ЯК ЗА ЯК 88 І І Ў Ў ЗА ЎСЁ ШТО М ЯК 88 ЗА ЯК ЗА ЯК 88 І І І І Ў Ў Ў Ў ЗА ЯК ЗА ЗА ЯК 88 ЗА ЯК ВЫЗВАЛЕННЯ І ЗА ЎСЁ ЗА ЗА ЎСЁ ШТО ЗА ЗА ЯК ЗА ЗА ЎСЁ ЗА ЯК 88 ЯК ЗА ЎСЁ ШТО ЗА ЗА ЗА ЗА ЯК ВЫЗВАЛЕННЯ ЗА ЗА ЎСЁ ЗА ЎСЁ ШТО ДЛЯ ДЛЯ ДЛЯ ДЛЯ ДЛЯ ДЛЯ ДЛЯ ДЛЯ ДЛЯ ДЛЯ ДЛЯ ДЛЯ ДЛЯ ףץףץפץ את ת׳ץ׳ת׳ץ׳ת׳ת׳ח׳ח׳ִֹת׳ח׳ת׳ח׳ץ׳צ׳ץ׳צ׳ץ׳צ׳ץ׳צ׳ת׳ח׳ת׳ח׳ךץ׳צ׳ץ׳צ׳ץ׳ת׳ת׳ת׳ת׳ת׳ת׳ח׳ח׳ח׳ִֹוּוּוּוּוּוּוּוּוּוֹוֹוֹטוֹוֹוֹטוֹוֹוּוֹוּוֹוּוֹוּ פ את קבב דבגקקק34ֿ של ז'זזזס-ס גם את 8ן את ת׳ץ׳ת׳ץ׳ת׳ת׳ח׳ח׳ִֹת׳ח׳ת׳ח׳ץ׳צ׳ץ׳צ׳ץ׳צ׳ץ׳צ׳ת׳ח׳ת׳ח׳ךץ׳צ׳ץ׳צ׳ץ׳ת׳ת׳ת׳ת׳ת׳ת׳ח׳ח׳ח׳ִֹוּוּוּוּוּוּוּוּוּוֹוֹוֹטוֹוֹוֹטוֹוֹוּוֹוּוֹוּוֹוּ ן את קבב דבגקקק34ֿ ככה כי הוא היה צריך לקרות כדי ערבוב מתמיד של ז'זזזס-ס את קבב דבגקקק34ֿ של ז'זזזס-ס את קבב דבגקקק34ֿ ככה כי חל על העסק של ז'זזזס-ס את קבב דבגקקק34ֿ ככה க உள்ள கட்டணங்களை ஒப்பிடவும் என்று அவர் அந்த இடம் உண்டு ஆனால் வாங்குவதற்கு முன் உள்ள கட்டணங்களை ஒப்பிடவும் இது போல இருக்கு என்றேன் அவள் என் தலையை அழுத்தி அவள் அருகில் சென்று விடும் என்பது என் கருத்து இல்லை என்று அவர் கூறினார் மேலும் அறிய இங்கே நான் அவள் அருகில் போய் விட்டன என அவர் ஒரு கிராமம் ஆன்லைன் விளையாட கார்டன் காட்டும் இல்லை என்ற���ல் அது மிகையாகாது இன் புகைப்படங்கள் மற்றும் பழுது கூரை மீது குதித்து போன்ற விளையாட்டுகள் இலவச பேனாக்கள் இது போல் பல அரசு 7
4 notes
·
View notes
Text

If you sinful people know how to give good gifts to your children, how much more will your heavenly Father give good gifts to those who ask him. Matthew 7:11
பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்
க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? மத்தேயு 7 : 11
#teddy #teddybear #love #bear #cute #r #teddybears #handmade #plushies #teddyb #plushiesofinstagram #ted #valentineday #gift#valentinesdayspecial #dogsofinstagram #toys #baby #car #toy #teddybearsofinstagram #plushiecommunity #stuffedanimals #puppy #valentinesgift #valentineweekgifts #valentine #valentinesweek
#teddy bear#verse of the day#independence day#india#christmas#christianity#tamil bible#new year#teddy.txt#teddy talks#teddy lupin#teddy moutinho#daily bible verse#jesus
2 notes
·
View notes
Text
லண்டன் சவுத்தென்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் விபத்தானது!
92 லண்டன் சவுத்தென்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறியரக விமானம் வெடித்து சிதறி விபத்துக்குள்ளாகி உள்ளது. கடந்த மாதம் 12 ஆம் திகதி குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து பிரித்தானியாவின் ஹட்விக் விமான நிலையத்தை நோக்கி, 242 பேருடன் க புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 – 8 ட்ரீம் லைனர் இரட்டை இன்ஜின் விமானம், 600 – 800 அடி உயரமே பறந்த சில நிமிடங்களிலேயே கீழே வெடித்து சிதறியதில் ,…
0 notes
Text
🫕 🍛🥘 🍜 🥪 மதராசப்பட்டின உணவகங்கள் 🍔 🥗 🥘 🫕 🍜
🍩 சென்னையின் அந்தக்கால ஓட்டல்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களின் தொகுப்பு 🥘
அன்றைக்கு ஓட்டலில் ‘பாதாம் அல்வா வேண்டும்’ என்ற குரல் கேட்டால், அவர் மிகப் பெரிய பணக்காரர் என அர்த்தம்! அனைவரும் அவரையே பார்ப்பார்கள்! அந்தக் கால 'ஆஹா ஓஹோ' சுவைமிகு ஹோட்டல்கள் நிறைந்தது சென்னை!
'மதராஸ்’ என அழைக்கப்பட்ட அக்காலம் முதல் சென்னை என அழைக்கப்படும் இக்காலம் வரை ஓகோ என சுவையாக சூடாகப் பேசப்பட்டு வரும் உணவு விடுதிகள் அதாங்க ஹோட்டல்கள் பல உண்டு, நமது தருமமிகு சென்னையில்! அன்றைய சென்னை நகரம் இன்றைய அளவை விட மிகவும் சிறியது.
இன்று பிரபலமாக விளங்கும் பல பகுதிகள், அன்று காடாகவும் கட்டாந்தரையாகவும் தோப்புகளாகவும் இருந்திருக்கின்றது. உணவு விடுதிகள் பெரும்பாலும் ‘டவுன்’ என்று அழைக்கப்படும் வடசென்னைப் பகுதியிலேயே இருந்தன, இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் அந்நாளில் கல்லூரிகள், ஆபீஸ்கள், நீதிமன்றம் எல்லாம் இந்த ‘டவுன்’ பகுதியில்தான் இருந்தன.
பெரும்பாலான விடுதிகளின் வாசலில் ‘பிராமணாள் காபி ஓட்டல்’ பலகைகள் தொங்கும். இந்த வழக்கம் 1950-வரை நீடித்திருந்தது! தங்கசாலைத் தெருவில் ‘காசி பாட்டி ஓட்டல்' என்று ஒரு ஓட்டல் இருந்தது. காசிக்குச் சென்று வந்த ஒரு பிராமண அம்மையார், போற இடத்துக்குப் புண்ணியம் கிடைக்குமென்று இந்த ��ணவு விடுதியைத் தொடங்கினார்.
அவருடைய சமையல் சுவையாக இருந்ததால் கூட்டம் சேர ஆரம்பித்தது. அந்த நாளில் உணவு விடுதிகளை நடத்துபவர்கள் ‘தாங்கள் செய்வது வியாபாரமல்ல, அன்னதானம்’ என்றுதான் நினைத்தார்கள். ‘லாபத்தைவிட புண்ணியம்தான் பெரிது’ என்று நம்பினார்கள். அதனால்தான் அந்த காலத்தில் எந்தக் கடையிலும் ‘அளவுச் சாப்பாடு’ என்ற பேச்சே கிடையாது.
காசி பாட்டி ஓட்டலில் எடுப்புச் சாப்பாட்டின் விலை இரண்டணா. நெய் தாராளமாகவே பரிமாறப்படும். அன்றைய ‘மெட்ராஸ் பிரசிடென்ஸி’ என்று அழைக்கப்பட்ட சென்னை மாகாணம், இருபத்தாறு ஜில்லாக்களைக் கொண்டது. அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நாலாயிரம் வக்கீல்கள் இருந்தனர். நீதிமன்றத்துக்கு வரும் கூட்டம் மிகவும் அதிகம்.
அவர்களை நம்பி நடத்தப்பட்ட உணவு விடுதிகள் பல உண்டு. தம்புச் செட்டித் தெருவில் இப்படிப்பட்ட உணவு விடுதிகள், தஞ்சாவூர், உடுப்பி, பாலக்காடு ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்கள் கைகளில்தான் இருந்தன. தம்புச்செட்டித் தெருவில் ‘மனோரமா லஞ்ச் ஹோம்’ ஏ.நாராயணஸ்வாமி ஐயர் என்பவரால் 1920-இல் தொடங்கப்பட்டது.
இங்கு அனைத்துமே நெய்யில்தான் செய்யப்படும். வக்கீல் குமாஸ்தாக்கள் சங்கத்தினர், இந்தத் தெருவில் ஒரு கேன்டீனைத் தொடங்கினர். இந்த விடுதியில் வியாபாரம் பிற்பகல் ஒரு மணியிலிருந்து இரண்டு மணி வரைதான். இரண்டு மணிக்குப் பிறகு மிஞ்சியிருக்கும் இட்லி, போண்டா, வடை போன்றவற்றைப் பாதி விலைக்கு விற்று விடுவார்கள்.
‘தம்புச்செட்டித் தெருவில் சிற்றுண்டி உணவகம் வைத்தால் லாபம் தரும்’ என்றொரு நம்பிக்கை பலரை இந்தத் தெருவுக்கு அழைத்தது. இந்த நாளில் ‘சரித்திரம் படைத்த ஓட்டல் சக்கரவர்த்தி’ என்று அழைக்கப்பட்ட ‘தாசப்பிரகாஷ்’ புகழ் கே.சீதாராமராவ் இங்குதான் வளரத் தொடங்கினார். சீதாராமராவ் இந்தத் தெருவில் ஒரு லாட்ஜையும் கட்டினார்.
அது மட்டுமல்ல, தனது பணியாளர்களை சென்ட்ரல், எக்மோர் ஸ்டேஷன் போன்ற இடங்களுக்கு அனுப்பி, சென்னைக்கு வரும் ரயில் பயணிகளைத் தன் விடுதிக்கு அழைத்து வர ஏற்பாடுகளைச் செய்தவர் இவரே! இன்று உலகளவில் மிகப் பிரபலமாக இருக்கும் சுவை மிகுந்த ‘மசாலா தோசை’யைச் சென்னைக்கு அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.
நெய்யில் செய்யப்பட்டு, ‘மைசூர் மசாலா தோசை’ என்று அழைக்கப்பட்ட இதன் விலை அரையணா. அன்று ஓர் இந்திய ரூபாய்க்குப் பதினாறு அணாக்கள். ஒரு அணாவுக்கு நாலு காலணா அல்லது பன்னிரண்டு தம்பிடிகள். அதாவது, ஒரு ரூபாய்க்கு 192 தம்பிடிகள். பன்னிரண்டு தம்பிடிகள் கையில் இருந்தாலே, வயிறு நிறையச் சாப்பிடலாம்.
‘மைசூர் போண்டா’ என்று இன்றும் அழைக்கப்படும் இந்தச் சுவையான சிற்றுண்டியைச் சென்னைக்குக் கொண்டு வந்தவரும் சீதாராமராவ்தான். உடுப்பி சமையல் முறையில் சாம்பா��், ரசம் ஆகியவற்றில் வெல்லத்தைச் சற்றுக் கலப்பார்கள். இதற்குத் தனியான சுவை உண்டு. 2 இட்லிக்கு 2 பக்கெட் சாம்பார் சாப்பிடுபவர்களும் அந்த நாளிலும் உண்டு.
‘நான் இரண்டு இட்லி, இரண்டு பக்கெட் சாம்பார் ஆசாமி’ என்று சொல்லிப் பெருமைப்படுவதில் அந்த நாளில் பலர் இருந்தனர். ‘பிராட்வே’ என்றழைக்கப்படும் குறுகிய சாலையிலும் பிரபலமான உணவகங்கள் இருந்தன. இந்தத் தொழிலில் முன்னோடியாகக் கருதப்படும் சங்கர ஐயர், இங்கு ‘சங்கர் கபே’ என்ற பெயரில் ஒரு உணவகத்தைத் தொடங்கினார்.
இது மிகவும் பிரபலமடைந்தது. இந்த இடத்தில்தான் பின்னர் ‘அம்பீஸ் கபே’ இயங்கத் தொடங்கியது. இன்று முழுமையாக மறக்கப்பட்ட மற்றொரு உணவகம் ‘கராச்சி கபே’. இதைத் தொடங்கியவர்கள், சென்னையின் மிகப் பிரபலமான துணி வியாபாரிகளான கிஷன்சந்த்ஸ்-செல்லாராம்ஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களெல்லாம் சிந்திக்காரர்கள்.
கராச்சியிலிருந்து வந்தவர்கள். இது, ஹை-கோர்ட்டுக்கு எதிரில், இன்றைய பாம்பே மியூச்சுவல் கட்டடத்துக்கு அருகே இருந்தது. சென்னை நகரத்திலேயே முதன்முறையாக ஏர் கண்டிஷன் செய்யப்பட்ட ஒரு தனியறை அந்த நாளில் சரித்திரம் படைத்தது. பொது மக்கள் இந்த உணவகத்தின் வாசலில் நின்று வியப்புடன் வேடிக்கை பார்ப்பதுண்டு.
‘உள்ளே போனா குளிருமாமே” என்று மூக்கின்மேல் விரலை வைத்தவர்களும் உண்டு. இந்த உணவகத்தின் ‘கராச்சி அல்வா’ அன்று மிகப் பிரபலம். அந்த நாளில் இனிப்புப் பண்டங்களுக்கு வடஇந்திய அடையாளத்தோடு பெயர்கள் வைப்பது வழக்கம். காசி அல்வா, டெல்லி பாதுஷா, கல்கத்தா மல்கோவா, பாம்பே அல்வா… இப்படிப் பல! இவற்றின் விலை இரண்டணாதான்.
பாதாம் அல்வாவுக்கு என்றுமே தனிச் சிறப்பு உண்டு. அதன் விலை மூன்றணா! இதை சாப்பிடுபவர் மிகப் பணக்காரர் என்று அர்த்தம். எல்லோரும் அவரையே பார்ப்பார்கள். பாதாம் அல்வா என்றவுடன் மனதில் பளிச்செனத் தோன்றுவது, ‘கோயம்புத்தூர் கிருஷ்ண ஐயர்’தான். மிகப் பிரபலமான இந்த உணவகம் திருவல்லிக்கேணி பைகிராஃப்ட்ஸ் சாலையில் இருந்தது.
இதன் உள்ளே சென்றால், படாடோபம் இல்லாத ஒரு நடுத்தர வீடு போலத்தான் இருக்கும். ஆனால், இங்கு எழுத்தாளர்கள், வக்கீல்கள், சினிமா பிரமுகர்கள் என சென்னையின் பல பிரபலங்கள் இங்கு வருவதுண்டு. எஸ்.எஸ்.வாசன், கல்கி போன்றவர்களை அடிக்கடி இங்கு பார்க்கலாம்! சென்னை நகரின் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வருவார்கள்.
அதுபோலவே, மயிலாப்பூரில் ‘ராயர் ஓட்டல்’ மிகவும் பிரபலம். ‘இங்கு இட்லி சாப்பிட்டால்தான் காரியங்கள் சரியாக நடக்கும்’ என்று அந்த நாளில் நினைத்தவர்களும் ஓட்டலுக்கு ரெகுலர் கஸ்டமர்கள். இதில் சினிமாக்காரர்களும் உண்டு. அவர்களில் ஒருவர், ஜெமினி க��ேசன்! அதுபோலவே, தங்கசாலைத் தெருவில் ‘சீனிவாஸ் பவன்’ மிகவும் புகழ்பெற்றது.
இந்த உணவகம் மாலை 7 மணிக்குத் திறக்கப்படும். நள்ளிரவைத் தாண்டி மூடப்படும். இங்கு விசேஷமே பூரியுடன் ‘பாசந்தி’தான் கொடுப்பது தான். அதிலும் உருளைக்கிழங்கு கறி வேண்டுமென்றால், முதலிலேயே சொல்ல வேண்டும். இல்லையென்றால் பாசந்தி மட்டுமே வரும். இதை ருசித்திட மயிலாப்பூரிலிருந்து பலர் இரவில் காரில் வருவார்கள்.
உணவக வியாபாரம் சிலருக்குப் புண்ணியத்தை மட்டுமின்றி பணத்தையும் வாரிக் கொடுத்தது. பெருமளவில் வளர்ச்சி கண்டவர்கள், வி.ஆர்.ராமநாத ஐயர், சி.எம்.சர்மா, கே.சீதாராம் ராவ் ஆகியோர். ஐயருக்கும், சர்மாவுக்கும் சென்னை நகரத்தில் நூறு வீடுகள் சொந்தமாக இருந்ததாக பரபரப்பாக பேசுவார்கள் அதே அளவில் வளர்ந்த இன்னொருவர் இருக்கிறார்.
அவர் தான் உடுப்பியைச் சேர்ந்த கே.கிருஷ்ணாராவ். இன்று உலகெங்கும் புகழைப் பரப்பிய உட்லண்ட்ஸ் உணவகத்தையும் விடுதியையும் நிறுவியவர் இவர்தான். இட்லி மாவு அரைக்கும் சாதாரணத் தொழிலாளியாகச் சென்னைக்கு வந்தவர். மவுண்ட் ரோடு பகுதியில் ‘உடுப்பி கிருஷ்ண விலாஸ்’ என்று துவங்கி அதன் பின்னர் பல பெயர்களில் வெற்றியைக் கண்டவர்.
சில கூட்டாளிகளுடன் சேர்ந்து, ராயப்பேட்டை பகுதியில் ஒரு ஜமீன்தாருக்குச் சொந்தமான இடத்தை வாங்கி, உட்லண்ட்ஸ் ஓட்டல் நிறுவினார். இது, இன்றைய ���ளவிலும் இயங்குகிறது. அதற்குப் பிறகு தான் ராதாகிருஷ்ணன் சாலையில் இன்னொரு ஓட்டலைத் தொடங்கினார்.தேவராஜ முதலித்தெரு பகுதியில் வெங்கட்ராம ஐயர் என்னும் பிரபல உணவகம் இருந்தது.
அங்கு சாப்பாடு மிகப் பிரபலம். தரையில் உட்கார்ந்து தான் சாப்பிடவேண்டும். மேஜை, நாற்காலிகள் கிடையாது இங்கு என்ன விசேஷம் என்றால், ஒவ்வொரு நேரத்துக்கும் ஒரு காய் கிடைக்கும். கூட்டம் அலைமோதுவதால் பரிமாறப்படும் காய் கறிகள் உடனே தீர்ந்து விடும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உருளைக்கிழங்கு பொரியல் பரிமாறுவார்கள். ஆனால்…
அரைமணி நேரம் கடந்து சென்றால் வாழைக்காய் பொரியல் பரிமாறப்படும். அடுத்து கருணைக்கிழங்கு பொரியல் கிடைக்கும், பலர் டோக்கன் வாங்குவதற்கு முன்பு, ‘இப்ப என்னய்யா பொரியல்?’ என்று கேட்டு வாங்குவார்கள். அவ்வளவு பிரபலம் இந்த வெங்கட்ராம ஐயர் ஓட்டல் இரண்டாவது உலகப்போர் நடைபெற்ற காலகட்டம்..
‘ஜப்பான்காரர்கள் சென்னையில் அணுகுண்டு போட்டு விடுவார்கள்’ என்ற பயத்தினால் நகரமே காலியானது. கல்லூரிகள், பள்ளிகள் எல்லாம் மூடப்பட்டன. சென்னை உயர் நீதிமன்றம் கோயம்புத்தூருக்கு மாற்றப்பட்டது. இந்த குண்டு பயத்தினால், டவுன் பகுதியில் பல உணவகங்கள் மூடப்பட்டன.
அந்தப் பயம் நீங்கிய பிறகு, மீண்டும் தொடங்க��்பட்டன. ஆனால், தொடங்கப்படாமலே மறைந்தது ‘கராச்சி கபே’!
நன்றி : விகடன் தீபாவளி மலர் 2003










0 notes
Link
0 notes
Text
AL KABIR ISLAMIC
आओ समझे इल्म कुरान
Vs S
मुस्लिम धर्म के लोगों का मनाना है कि एक बार मरने के बाद दोबारा जन्म नहीं होता क्या ये सत्य है ।
पूरी जानकारी के लिए देखे Zakir Naik VS Sant Rampal Ji Maharaj डिबेट यूट्यूब चैनल पर ।
मुसलमान नहीं समझे ज्ञान कुरआन
कुरआन
निःशुल्क पुस्तक के लिये पूरा नाम, पता भेजें। +91 981 2238 507 +91 999 2600 852
க
नोट :
ये मुकद्दस किताब सिर्फ हिंदी और उर्दू स्थान में दस्तियाथ है। ये आस तौर पर मुस्तमान विश्वरी के लिए मध्यूस है।
Al Kabir Islamic
Al Kabir Islamic
Al_Kabir_Islamic
Al Kabir Islamic

0 notes
Video
youtube
உயிர்மெய் எழுத்துக்கள் | க ங ச ஞ | தமிழ் உயிர் மெய் எழுத்துக்கள் #Kagacha
#youtube#உயிர்மெய்#உயிர்மெய் எழுத்துக்கள்#க ங ச ஞ#தமிழ் உயிர் மெய் எழுத்துக்கள்#uyirmei#uyirmei eliuthukkal
1 note
·
View note
Video
youtube
Lose 1Kg Weight: 15 நாட்களில் 1 கிலோ எடை குறைக்கலாம���..!!ரொம்ப சிம்பிள் க...
0 notes
Text
0 notes
Text
10 கதைகள்
10 கதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
https://www.sirukathaigal.com/2025/04/04/
அப்பாக்கள் மட்டும் ஏன் இப்படி? - வளர்கவி
மூலதனம் ஒரு கத்தி - முனிஸ்வரன் குமார்
தெரவுசு - எஸ்ஸார்சி
மின்னல் மழை மோகினி 1-3 - ஜாவர் சீதாராமன்
ஜெயித்தது காதல்! - வி.கே.லக்ஷ்மிநாராயணன்
கூக்குரல் - கே.வி.ஷைலஜா
அதன் பேர் ஸ..ரீ..க..ம.. - ஜி.எஸ்.பாலகிருஷ்ணன்
பணக்காரப் பிச்சைக்காரன் - ஷாராஜ்
குதிரைக்காரன்! - அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
மலைக்கன்னி 10-12 - கே.வி.எஸ்.வாஸ்
0 notes
Video
youtube
இருளில் இருந்து வெளிச்சம் | from darkness to light | தாத்தாவின் ஆன்மீக க...
0 notes
Text
தர்மபுரம் பிரதேச வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்!
தர்மபுரம் பிரதேச வைத்தியசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் திடீர் விஜயம் மே���்கொண்டிருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன் உள்ளிட்ட குழுவினர் தர்மபுரம் வைத்தியசாலைக்கு இவ்வாறு திடீர் விஜயம் மேற்கொண்டனர். இதன் போது, குறித்த வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும்,…
0 notes
Text
🔥 #எரியுது 🔥
90s கிட்ஸ் துவங்கி 2K மற்றும் ஜென் ஆல்பா & பீட்டா என நான்கு ஜெனரேஷன்களுக்கு முந்தையது ஜென் X ஜெனரேஷனாகும். இவர்களது பிறப்பு மற்றும் டீன் ஏஜ் காலம் 1970 முதல் 1989 வரையாகும். இவர்கள் கிட்டத்தட்ட பூமர்கள் என்னும் பட்டத்தை மயிரிழையில் தவறவிட்டவர்கள்.
ஜென் X காரர்கள் ஒரு நுற்றாண்டின் பவளவிழா காலத்தில் பிறந்த அதிர்ஷ்டசாலிகள்! ஒவ்வொரு நூற்றாண்டிலும் பவளவிழா காலத்தில் பிறப்பவர்கள் 4தலைமுறை அறிவியல் வளர்ச்சியையும் நன்கு அனுபவித்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் காலம் பழங்காலம் போலவே இருக்கும் ஆனால்..
மிக மிகப் பழமையாக இருக்காது. 1980களில் நம்மிடையே புழக்கத்தில் இருந்த பொருட்களைப் பற்றி சொன்னால் நான் சொன்னது உங்களுக்கு நன்கு புரியும். கெரஸின் அடிக்கும் பம்பு என்பதை சொல்லாமல் இன்று அதன் போட்டோவைக் காட்டினால் 2K, ஜென் ஆல்பா & பீட்டா யாருக்கும் தெரியாது.
90S பார்த்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும். இந்தச் சுழலை தான் நான் நடுவாந்திர சூழல் என்கிறேன். 80களில் எல்லார் வீடுகளிலும் மின்சார வசதி கிடையாது. அது இருப்பவர்கள் ஓரளவு வசதியானவர்கள் (அ) அரசு ஊழியர்கள். அன்றைக்கு மின்வெட்டு நேரம் சரளமாகவும் சகஜமாகவும் இருந்தது.
மின்சாரம் போனால் திரும்பிவரும் நேரம் இறைவனுக்கு கூட தெரியாது! ஏன்னா அதுவே இறைவன் போ�� மாயமாகிவிடும். அன்றைய வீடுகளில் 70% விறகடுப்புகளே! இதிலும் வசதி உள்ளவர்கள் வீட்டில் மட்டுமே கெரஸினில் எரிகின்ற திரி அடுப்புகள் இருக்கும். அதுவும் ஒரு அடுப்பு தான் இருக்கும்!
இன்றைக்கு கேஸ் சிலிண்டர் போல அன்றைக்கு விறகு மற்றும் கரி அடுப்புகள் தான் அதிகம். பெரும்பாலும் எல்லார் வீட்டிலும் இருப்பது சிம்னி விளக்குகள் தான். மின்சாரம் இருந்தாலும் 40 வாட்ஸ் பல்பு தான். மஞ்சள் உரசிய கல்லில் படிந்துள்ள அசட்டு மஞ்சள் நிறத்தில் அசமஞ்சமாக எரியும்.
இன்றைய ஜென் கிடஸ் இருக்கும் அறைகளில் அந்த பல்பை மாட்டினால் ஹலோ இதை பல்புன்னா அந்த கரண்டே நம்பாது என்பார்கள்! அன்றைய சிம்னி விளக்கு வெளிச்சத்திற்கு முன் 40 வாட்ஸ் பல்பு பெஸ்டாக இருந்தது என்பதே உண்மை. டியூப் லைட் வீட்டில் இருந்தால் வீடு பளிச்சுன்னு இருக்கும்!
ஆனால் நிறைய வீடுகளில் ஒரு டியூப் லைட்டையே லேசாக ஒருக்களித்து மாட்டினால் தான் மாட்டவே முடியும். ஆம்! அந்த அளவுக்குதான் வீட்டுச் சுவர்கள் சிறிதாக இருந்தன. மின் வசதி வீட்டிற்கு வந்தாலும் எல்லோரும் வாங்கியது 40 wt பல்பு தான்! அன்று மின்வசதி இல்லாத வீடுகளும் அதிகம்!
எனவே சமைக்க, வீட்டிற்கு வெளிச்சம் தர என வீடுகளின் மிக மிக அத்யாவசிய தேவைகளுக்கு மண்ணெண்ணெய் மிக இன்றியமையாத பொருளாக இருந்தது. மாணிக்கத்திற்கு கூட பாட்ஷான்னு ஒரு பேரு தான்! ஆனா இதுக்கு சீமெண்ணெய், கெரஸின், கிருஷ்ணாயில்னு பல்வேறு பெயர்கள் உண்டு.
அன்றைக்கு ரேஷனில் கிடைக்கும் மண்ணெண்ணெய்க்கு உலகப்போரே நடக்கும்! ஆதி மனிதன் நெருப்புக்காக போட்ட சண்டையை விட கெரஸினுக்காக போட்ட சண்டையை அந்த ஜீன் தொடர்புன்னு கூட சொல்லலாம். ரேஷனில் போய் க்யூவில் காத்திருந்து கெரஸின் வாங்குவது பெரும் சாதனை.
அப்படி வெற்றிகரமாக திரும்பி வருபவர்களின் முகங்களைப் பார்த்தால் 32 பந்துகளில் செஞ்சுரி அடித்தவரின் பெருமிதம் தெரியும். வீட்டில் கெரஸினை ஸ்டாக் வைத்துவிட்டால் அதை அடுப்பு, சிம்னி விளக்கு, ஹரிக்கேன் போன்ற டிவைஸ்களில் மாற்ற வேண்டும் அதற்கு தேவை புனல் மற்றும் கை பம்ப்!
இது இல்லாத வீடுகளே அன்றைக்கு இல்லை எனலாம்! ஜென் கிட்ஸ்களுக்கு புரியும்படி சொன்னா இன்றைய மொபைல் சார்ஜர் போலத்தான் இந்த பம்பும், புனலும். கெரஸின் கேனை திறந்து போர் போடுவது போல புனலின் நீண்ட பகுதியை இற���்கி மேல் புறமுள்ள லிவரை இழுத்து..
மேலும் கீழும் பம்ப் பண்ணனும் கேனில் இருக்கும் கெரஸின் புனல் வழியாக நாம் வைத்திருக்கும் பாட்டிலுக்கு டிரான்ஸ்பர் ஆகும். அந்த பாட்டிலில் இருந்து அடுப்பு மற்றும் விளக்குக்கு மீண்டும் புனல் வழியே நாம் ஊற்ற வேண்டும். இதெல்லாம் இன்றைய ��ிட்ஸிற்கு பெரிய காமெடியாகத் தெரியும்.
ஆனால் அப்படித்தான் அன்றைக்கு இருந்தது. அடுப்புக்கு திரி மாற்றுவது, விளக்கு துடைப்பது, கைபம்ப் சிக்கிக் கொண்டால் அதை கழற்றி சுத்தம் செய்வது போன்ற மெக்கானிஸங்களை நாங்கள் கற்றுக் கொண்டோம். 85இல் பரவலாக பிளாஸ்டிக் உபயோகம் வந்த பின்பு கைபம்ப் பிளாஸ்டிக்கில் வந்தது.
பழைய மூங்கில்கழி போன்ற தண்டு இல்லாமல் மெலிதான பிளாஸ்டிக் குழாயில் பம்ப் செய்ய எளிதான அழுத்தும் பிடி வசதியுடன் புதிய வடிவத்தில் வந்தது. அதையே அன்று வாய் பிளந்து அதிசயமாகப் பார்த்தோம். விறகடுப்பு, திரி அடுப்புக்கு பிறகு விதவிதமான பம்ப் ஸ்டவ் மாடல்கள் வந்தெரிந்தன’
90களில் கேஸ் ஸ்டவ் பரவலாக வந்தது, பிறகு எலக்டிரிக் ஸ்டவ்! அரசு வழங்கிய கெரஸின் அன்றைக்கு கடத்தப்பட��டு கள்ள மார்க்கெட் போனதால் அரசு ரேஷனில் வழங்கும் கெரஸினை வெள்ளை நிறத்திலிருந்து நீல நிறத்துக்கு மாற்றியது! இந்த நீல நிறமானது கிருஷ்ணரின் நிறம்!
ஆகவே தான் இதற்கு கிருஷ்ணாயில் என்று பேர் வந்தது என்று அன்றைய சங்கிகள் ஸ்கிரிப்ட் எழுதினர்! எனக்குத் தெரிந்து 90களின் இறுதிவரை கெரஸினின் பயன்பாடு இருந்தது. அதன் பிறகு இப்போது எங்கோ சில இடங்களில் சுருங்கிவிட்டது! இதோ சோலார் அடுப்புகள் வந்துவிட்டன.
இனி எதிர்காலத்தில் என்னென்ன அடுப்புகள் வருமோ என சுந்தர் பிச்சை அவர்களின் நிறுவனத்திடம் Future Stovesனு கேள்வி கேட்டால் அது தந்த பதிலில் சிரித்துவிட்டேன்! சுற்று சூழலை மாசுபடுத்தாத Future wood burning stove என்றது! இதுல சிரிக்க என்ன இருக்குன்னு கேக்குறிங்களா…
பூமர்களின் காலத்து அடுப்பான “விறகடுப்பு” தான் அது 🔥🔥🔥


1 note
·
View note