#நாரயணசாமி
Explore tagged Tumblr posts
muthtamilnews-blog · 4 years ago
Text
என்னை மிரட்டி பாருங்கள்: பாஜகவுக்கு நாராயணசாமி சவால்
என்னை மிரட்டி பாருங்கள்: பாஜகவுக்கு நாராயணசாமி சவால்
என்னை மிரட்டி பாருங்கள் என்று பாஜகவுக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி சவால் விடுத்துள்ளார். புதுச்சேரி ஆட்சி கவிழந்ததையடுத்து மத்திய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் நாராயணசாமி இன்று பேசியதாவது, " புதுச்சேரி நடந்ததுபோல் ஜனநாயக படுகொலையை இந்தியாவில் பல மாநிலங்களிலும் பாஜக அரங்கேற்றியுள்ளது. muthtamilnews
Tumblr media
View On WordPress
0 notes
dailyanjal · 5 years ago
Photo
Tumblr media
நிவர் புயல் பாதிப்பு தொடர்பாக முதற்கட்டமாக ரூ.100 கோடி வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல்வர் கடிதம் புதுச்சேரி: நிவர் புயல் பாதிப்பு தொடர்பாக முதற்கட்டமாக ரூ.100 கோடி வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல்-மந்திரி நாரயணசாமி கடிதம் எழுதி உள்ளார்.
0 notes
tamilnewstamil · 7 years ago
Photo
Tumblr media
என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் மிக்சி-கிரைண்டரை வழங்கியதில் ஊழல் செய்துள்ளனர்: நாராயணசாமி என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் ரூ.120 கோடி இலவச மிக்சி-கிரைண்டர் வழங்கியதில் ஊழல் நடந்ததாகவும், இது சம்பந்தமாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாரயணசாமி நேற்று அறிவித்தார். #Narayanasamy புதுச்சேரி: என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் ரூ.120 கோடி இலவச மிக்சி-கிரைண்டர் வழங்கியதில் ஊழல் நடந்ததாகவும், இது சம்பந்தமாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாரயணசாமி நேற்று அறிவித்தார். இந்த திட்டத்தில் எந்த முறையில் ஊழல் நடந்துள்ளது என்பது பற்றி, அவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- இலவச மிக்சி-கிரைண்டர் வழங்குவது என்று முடிவெடுத்து முதலில் டெண்டர் விட்டுள்ளனர். பின்னர் அந்த டெண்டரை கைவிட்டுவிட்டு தன்னிச்சையாக நேரடியாக ஒரு நிறுவனம் மூலம் மிக்சி, கிரைண்டர்களை கொள்முதல் செய்துள்ளனர். இதில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. மேலும், குறிப்பிட்ட தரத்தில் மிக்சி-கிரைண்டர் தயாரிக்கப்படவில்லை. குறிப்பிட்டிருந்ததை விட தரம் குறைந்த பொருட்களை அதில் பயன்படுத்தி உள்ளனர். இதிலும் முறைகேடு நடந்துள்ளது. இதில் எந்தெந்த மாதிரி முறைகேடு நடந்துள்ளது என்பதை கண்டுபிடிக்கும்படி அதிகாரிகளிடம் கூறியிருக்கிறேன். அதன்பிறகு விசாரணை நடத்தி உரியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் இதேபோல பல திட்டங்கள் டெண்டர்விடாமல் முறைகேடுகளை செய்திருக்கிறார்கள். அவற்றையும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்போம். என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி 60 மாதங்கள் இருந்தது. அதில் 24 மாதங்களுக்கு மட்டுமே இலவச அரிசி வழங்கி உள்ளனர். 36 மாதங்களுக்கு வழங்கவில்லை. மேலும் எம்.எல்.ஏ. தொகுதி வளர்ச்சி நிதி ரூ.30 கோடி வழங்கவில்லை. அதில் ரூ.20 கோடியை நாங்கள் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு வழங்கி இருக்கிறோம். ரங்கசாமி ஆட்சியில் வாங்கிய கடன்களை நாங்கள் இப்போது திரு��்பி செலுத்தி வருகிறோம். அவர்கள் ஆட்சியில் முதியோர் உதவித்தொகை குறிப்பிட்ட நாளில் ஒதுபோதும் கொடுக்கப்பட்டதில்லை. ஆனால் இப்போது எவ்வளவு கஷ்டம் வந்தாலும் முதியோர், விதவை உதவித்தொகைகளை குறிப்பிட்ட நாளில் கிடைக்க வழிவகை செய்துள்ளோம். நான் எம்.பி.யாக இருந்த காலத்தில் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் ஏதாவது ஒரு ரெயில் திட்டத்தை புதுவைக்கு கொண்டு வந்தேன். ஆனால் இப்போது ஒரு திட்டம் கூட புதுவைக்கு வரவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டம், துறைமுக திட்டம் போன்றவற்றை டெல்லி சென்று மத்திய மந்திரிகளை சந்தித்து பெற்றுவந்துள்ளோம். இதேபோல பல திட்டங்களை கொண்டுவர முயற்சித்து வருகிறோம். ஆனால் ரங்கசாமி தனது ஆட்சிகாலத்தில் ஒரு தடவை கூட டெல்லிக்கே சென்றதில்லை. இவ்வாறு நாராயணசாமி கூறினார். #Narayanasamy #tamilnews Source: Maalaimalar
0 notes
muthtamilnews-blog · 4 years ago
Text
புதுச்சேரியில் அடுத்த திருப்பம்; திமுக எம்.எல்.ஏ.வும் ராஜினாமா:ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கு கடும் நெருக்கடி | DMK MLA resigns from Puducherry ruling party alliance
புதுச்சேரியில் அடுத்த திருப்பம்; திமுக எம்.எல்.ஏ.வும் ராஜினாமா:ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கு கடும் நெருக்கடி | DMK MLA resigns from Puducherry ruling party alliance
புதுச்சேரி சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தொடர் ராஜினாமாவால் ஆளும்கட்சி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை குறைந்த நிலையில், கூட்டணிக்கட்சி திமுகவின் எம்.எல்.ஏ வெங்கடேசனும் ராஜினாமா செய்து விட்டார். எம்எல்ஏக்கள் தொடர் ராஜினாமா பற்றி பாஜக ஏற்கெனவே தெரிவித்த நிலையில், அடுத்தடுத்த திருப்பதால் காங்கிரஸ் தவிக்கிறது. புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு காங்கிரஸில் 15, திமுகவில் 3,…
Tumblr media
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 4 years ago
Text
புதுச்சேரியிலிருந்து விடைபெற்றார் கிரண்பேடி
ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு ராஜ்நிவாஸில் தங்கியிருந்த கிரண்பேடி புதுச்சேரியில் இன்று விடைபெற்றார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடந்த 16ம் தேதி பதவியிலிருந்து நீககப்பட்டார். அதையடுத்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டதையடுத்து அடுத்த நாள் அவர் புதுச்சேரி வந்தார். 18ம் தேதி காலை பதவியேற்றார். muthtamilnews
Tumblr media
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 4 years ago
Text
கனமழையால் தத்தளிக்கும் புதுச்சேரி; ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது | Puducherry battered by heavy rains
கனமழையால் தத்தளிக்கும் புதுச்சேரி; ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது | Puducherry battered by heavy rains
புதுச்சேரியில் நள்ளிரவு முதல் கொட்டி தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததோட��, சாலைகளும் மூழ்கியது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. நிவர், புரெவி புயலால் புதுச்சேரியில் கடந்தாண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகள் சேதம் அடைந்தன. ஏராளமான வீடுகளுக்குள் மழைநீர்…
Tumblr media
View On WordPress
0 notes