Tumgik
mrpuyal · 4 years
Link
Tamanna, who starred in porn like Sunny Leone? 
0 notes
mrpuyal · 4 years
Photo
Tumblr media
Tamanna, who starred in porn like Sunny Leone? https://mrpuyal.com/cinema-news-tamil/kollywood/tamannaah-video-leaked-in-social-media/
0 notes
mrpuyal · 4 years
Link
do you like watch this web series, before read this article. 
0 notes
mrpuyal · 4 years
Photo
Tumblr media
do you know this legend?
0 notes
mrpuyal · 5 years
Text
கண்ணனுக்குத் தெரியாத சுள்ளான்: 5 லட்சம் கோடி அவுட்
Tumblr media
கண்ணனுக்குத் தெரியாத சுள்ளான் கொரோனா வைரஸ் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தது பங்குச்சந்தை-யில் 5 லட்சம் கோடி அவுட். இன்று காலை வர்த்தக நேரத் துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1515.01 புள்ளிகள் சரிந்தது. 36,061.61 என்ற நிலவரத்தில் சந்தை ஆரம்பம் ஆனது. நிப்டி 417.05 புள்ளிகள் சரிந்தது 10,572.40 என வர்த்தம் ஆரம்பம் ஆனது. மதியம் 1 மணி அளவில், சென்செக்ஸ் 2200 புள்ளிகளும், நிப்டி 620 புள்ளிகளும் அதிரடியாக சரிவை சந்தித்தன. கொரோனா வைரசால் கச்சா எண்ணை விலையும் கடும் வீழ்ச்சி கண்டு உள்ளது. மேலும் எஸ் வங்கி சரிவை சந்தித்துள்ளது. இதன் தாக்கம் பங்குசந்தையில் எதிரொலித்தது. இந்த சரிவால் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு 5 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டு உள்ளது. Read the full article
0 notes
mrpuyal · 5 years
Text
ஹோலி பண்டிகை வரலாறு; இதுதான் கலர் பூச காரணமா?
Tumblr media
ஹோலி பண்டிகை வரலாறு; இதுதான் கலர் பூச காரணமா? ஹோலி கொண்டாட்டங்கள் இந்தியாவில் எப்படி பிரபலம் அடைந்தன. முதலில் யார் ஹோலி கொண்டாடியது. ஹோலி பண்டிகை என்பது வண்ணங்களின் பண்டிகை. வட இந்தியாவில் இந்த பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப் படுகிறது. இந்த பண்டிகை பால்குனி மாதத்தில் பௌர்னமி அன்று கொண்டாடப்படுகிறது. ஹோலி என்று மனதில் நினைத்தாலே வண்ணம், கேளீக்கை, பாட்டு, பொழுது போக்கு மற்றும் மேளம் போன்றவை நம் நினைவுக்கு வரும். இந்த பண்டிகை கொண்டுவதற்கான நோக்கம் தீமையை களைந்து ஏறிவது ஆகும். இந்த பண்டிகையை பற்றி புராணங்களில் பல கதைகள் மூலம் அரிய படுகிறது. வசந்த காலத்தில் வரும் முழுநிலவில் ஹோலிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியா, நேபாளம் மற்றும் வங்கதேசம் போன்ற ஆசிய நாடுகளிலும் ஹிந்துகள் வாழும் ஒருசில மேற்கத்திய நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஹோலியின் முக்கிய நாளில் மக்கள், ஒருவர்மீது ஒருவர் வண்ணப்பொடிகளையோ அல்லது வண்ணம் கலந்த நீரையோ பூசி அல்லது எறிந்து கொண்டாடுகின்றனர்.
Tumblr media
ஹோலி பண்டிகை வரலாறு  அந்த நாளுக்கு முன்னதாக பெரிய நெருப்புகளை மூட்டுவார்கள். இது ஹோலிகா தகனம் (ஹோலிகாவை எரித்தல்) எனவும் அழைக்கப்படும். இரண்யகசிபுவின் சகோதரி அரக்கி ஹோலிகா இளம் பிரகல்லாதனை நெருப்பில் போட முயன்றபோது அதிலிருந்து வியக்கத்தக்க வகையில் அவர் தப்பித்தார். ஹோலிகா எரிந்தாள், ஆனால் கடவுள் விஷ்ணுவின் மீது விடாப்பிடியான பக்தி கொண்ட பிரகல்லாதன், தனது தெய்வ பக்தியின் காரணமாக எவ்வித காயமும் இன்றி உயிர் பிழைத்தான். இதன்  நினைவாக நெருப்புகள் மூட்டப்படுகின்றன. அண்டத்தில் ஒளியின் திருவிழாவாக ஹோலி எண்ணப்படுகிறது. இப்பண்டிகையின்போது, வேறுபட்ட அலைகளைக் கொண்ட ஒளிக்கதிர்கள் அண்டமெங்கும் பரவுகின்றன. இதனால் பல்வேறு வண்ணங்கள் தோன்றி சூழ்நிலையில் உள்ள தனிமப் பொருட்களின் செயல்பாட்டிற்கு ஊட்டமும் முழுமையும் அளிக்கின்றன. இதன் மூலம் நன்மை, தீமையை வென்றதாக கருதப்படுகிறது. இதன் மூலம் மனதில் உள்ள காமம்,க்ரோதம்,பேரசை போன்றவற்றை களைந்து,ஆசை மற்றும் தேவை போன்றவைகளை சமச்சீராக எடுத்துக் கொள்ள வழி வகுக்கிறது. Read the full article
0 notes
mrpuyal · 5 years
Text
தர்மயுத்தம் அணிக்கு சபாநாயகர் நோட்டீஸ்; பதவி பறிபோகுமா?
Tumblr media
தர்மயுத்தம் அணிக்கு சபாநாயகர் நோட்டீஸ்; பதவி பறிபோகுமா? ஓபிஎஸ் தலைமையிலான 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரம் மீண்டும் தூசி தட்டப்பட்டு உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் இருந்து பிரிந்த ஓபிஎஸ் தர்மயுத்தத்தில் ஈடுபட்டார். எடப்பாடி அரசுக்கு எதிராக அவர் அணியில் இருந்த 11 பேர் வாக்களித்தனர். பின்னர் சிறிது நாட்களிலேயே எடப்பாடியும், பழனிச்சாமியும் இணைந்து அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கினர். அப்போது டிடிதினகரன் தலைமையில் ஒரு அணி அதிமுகவில் இருந்து பிரிந்தது. அவர்கள் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் திமுக ஓ.பி.எஸ். உடபட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்தபோது ஏன் பதவி நீக்கம் செய்யவில்லை என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அங்கு தீர்ப்பு சாதகமாக வரவில்லை எனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதுகுறித்து சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாக உச்சநீதிமன்ற கூறியது. தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்க உள்ளது. இந்நிலையில் சபாநாயகர் தனபால், ஓபிஎஸ் உட்பட 11 பேருக்கு நோட்டிஸ் வழங்கி உள்ளார். எனவே மீண்டும் அதிமுகவில் உட்��ட்சி பூசல் ஏற்பட்டு உள்ளதா? ஓபிஎஸ் பதவி பறிபோகுமா? எனச் சந்தேகம் எழுந்து உள்ளது. Read the full article
0 notes
mrpuyal · 5 years
Text
16 வயது வீராங்கணை கதறல்; உலகக்கோப்பை தோல்விக்கு காரணம் என்ன?
Tumblr media
16 வயது வீரங்கணை கதறல்; இந்தியா உலகக்கோப்பை தோல்விக்கு காரணம் என்ன? லீக்சுற்றில் அனைத்துப்போட்டிகளும் வெற்றி. இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வி எப்படி நடந்தது? இந்தியா குவித்த வெற்றிகள் மகளிர் உலகக்கோப்பை டி20 போட்டி நடைபெற்று முடிந்துவிட்டது. ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை 5-வது முறையாக தட்டிச் சென்றுவிட்டது. லீக் சுற்றில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்கதேசம், ஸ்ரீலங்கா என அனைத்து அணிகளையும் அடித்தது நொறுக்கி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இந்தியா. அரையிறுதியில் இங்கிலாந்து அணியுடன் மோதாமலேயே இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்தியா இறுதி போட்டிக்கு செல்வது இதுவே முதல்முறை. ஆஸ்திரேலியா குவித்த வெற்றிகள் இதுவரை 7 முறை நடந்த மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், சொந்த ஊரில் 5-வது உலகக்கோப்பையை வென்றுள்ளது. இந்த வருட போட்டியில் லீக் சுற்றில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது ஆஸ்திரேலியா. வங்கதேசம், நியூசிலாந்து, ஸ்ரீலாங்கா என மற்ற மூன்று அணிகளுடன் மோதி வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் மழை குறுக்கிட்டு சவால்கள் ஏற்படுத்தினாலும், தென்னாப்ரிக்கா அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. இறுதி போட்டி என்ன மேஜிக் நிகழ்ந்தது இறுதி போட்டி நெற்றியில் வீரத் திலகம் எல்லாம் இட்டு பக்காவாக பந்து வீச சென்றது இந்திய மகளிர் அணி. 2003 கங்குலி தலைமையில் ஆடவர் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மோதியதை போன்று. அன்று இந்தியா முழுவதும் சிறப்பு பூஜைகள் யாகங்கள் நடந்தது. நீண்ட வருடங்களாக இந்தியா உலகக்கோப்பை கனவில் மிதந்த தருணம் அது. முக்கியமாக எதிர்பார்க்கப்பட்ட சச்சின் 4 ரன்களில் அவுட். மொக்கையாக தோற்றது இந்திய அணி. அதே போன்றே மகளிர் ஆஸ்திரேலிய அணியும் இந்திய அணியின் பந்து வீச்சை அடித்து நொறுக்கியது. குறிப்பாக ஹீலி ஆரம்பம் முதலே அடித்து நொறுக்கினார். ஹாட்ரிக் சிக்சர்கள் பறக்க விட்டு மைதானத்தில் இருந்த 80 ஆயிரம் ரசிகர்களை குஷிப்படுத்தினர். குறிப்பாக அவரது கணவர் ஸ்டார்க்-யை களிப்படைய வைத்தார். சொந்த ஊர், ஏற்கனவே 4 முறை சாம்பியன். பிறகு ஆஸ்திரேலியா சும்மா இருக்குமா? ஸ்கெட்ச் போட்டி இந்திய பவுலர்களை தாக்கியது. முதல் முறை உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நுழைந்த இந்திய அணி நிச்சயம் சற்று பதற்றத்தில் இருந்திருக்கலாம். சிலர் ஏற்கனவே வெற்றி பெற்ற அணி தானே என சற்று அஜாக்ரதையாகக் கூட இருந்திருக்கலாம். அதுவரை நன்கு விளையாடி வந்த ஷபாலி இறுதிப்போட்டியில் என்ன ஆயிற்று எனத் தெரியவில்லை பீல்டிங், பேட்டிங் என அனைத்திலும் சொதப்பினார். ஹீலி 15 ரன்கள் பக்கம் இருந்த நிலையில் அடித்த கேட்ச் ஒன்று கையில் கிடைத்தும் பிடிக்காமல் கோட்டை விட்டார் ஷபாலி. போட்டிங் முரட்டு சொதப்பல், 2 ரன்களில் நடையைக்கட்டினார். இந்திய அணி ஹிமாலயா இலக்கு ரன் சேசிங் என்ற நினைத்த அந்த தருணமே தோற்றுவிட்டனர். பந்துவீச்சு சரியாக தேர்வு செய்யாமல் விட்டதே இதற்கு காரணம். ஆஸ்திரேலியாவை 120 முதல் 130  ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இருந்திருந்தால் ஸ்கோரைக் கண்டு மலைக்கத் தேவையில்லை. கண்மூடி திறப்பதற்குள் ஹீலி 39 பந்துகள் 75 ரன்களை கடந்ததார். இது இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய தோல்வி. அதே நேரம் ஹீலி அவுட் ஆகிய உடன் விக்கெட் சீரான இடைவெளியில் பறிகொடுத்தது ஆஸ்திரேலியா அணி. ஷபாலி அந்த ஒரு கேட்ச்-யை பிடித்து இருந்தால் இந்த மேட்ச் தலைகீழாக மாறி இருக்க நிச்சயம் வாய்ப்பு உண்டு. 16 வயதே ஆனா ஷபாலி, சச்சின் டெண்டுல்கர் போன்று இளம் வயதில் இந்திய அணிக்காக விளையாட வந்துள்ளார். 1989 முதல் இந்திய அணிக்காக விளையாடிய சச்சின் டெண்டுல்கரின் உலகக்கோப்பை கனவு  2011-ஆம் ஆண்டு தான் நிறைவேறியது. உலகக்கோப்பை தொடரில் எத்தனை போட்டிகள் வென்றாலும், எத்தனை போட்டிகள் சிறப்பாக விளையாடினாலும், இறுதி போட்டியில் நாம் என்ன செய்தோம் என்பதைத்தான் இந்த உலகம் நினைவில் கொள்ளும். எனவே, இந்தப் போட்டி இந்தியர்கள் மறக்க வேண்டிய நாள். மகளிர் தினத்தை ஆஸ்திரேலியா அமோகமாக கொண்டாடிவிட்டது. இந்தியாவிற்கும் ஒரு நாள் வரும் காத்திருப்போம்..! Read the full article
0 notes
mrpuyal · 5 years
Text
சூப்பர் வோர்ம் மூண் (Super Worm Moon) வரப்போகிறது பார்க்க ரெடியா?
Tumblr media
சூப்பர் வோர்ம் மூண் (Super Worm Moon) வரப்போகிறது பார்க்க ரெடியா? சூப்பர் வோர்ம் மூண் என பெயர் எப்படி வந்தது? சூப்பர் வோர்ம் மூன் எப்பொழுது தெரியும். சூப்பர் வோர்ம் மூண் மார்ச் 9ஆம் தேதி ஆரம்பித்து புதன் கிழமை வரை தெரியும். இந்த வருடத்தின் இரண்டாவது சூப்பர் மூண் இதுவாகும். ஏற்கனவே பிப்ரவரி 9ஆம் தேதி முதல் சூப்பர் மூண் வந்து போனது. இன்று இரவு வரும் சூப்பர் வோர்ம் மூண் மாலை 6.30 மணியில் இருந்து தெரிய ஆரம்பிக்கிறது. பிற நாட்களில் தெரியும் நிலாவை விட சற்று பெரிதாகவும் வெளிச்சமாகவும் தெரியும். நிலா பூமியை மற்ற கோள்களைப் போல் நீள்வட்டத்தில் சுற்றி வருவதால் பூமியும் நிலவும் மிக அருகில் வந்தால் பெரியதாக வெளிச்ச்மாக தெரியும் அதுவே சூப்பர் வோர்ம் மூண். 1979ஆம் ஆண்டில் முதன் முதலில் இதற்கு சூப்பர் மூண் என பெயரிடப்பட்டது. அதன் பிறகு நாள் செல்ல இது பிரபலமானது. சூப்பர் வோர்ம் மூண் என பெயர் எப்படி வந்தது? மார்ச் மாதத்தில் அதாவது வசந்தா காலங்களில் மண் புழுக்கள் அதிகம் உற்பத்தி ஆகிற காலங்கள் இதனால் பறவைகளுக்கும் விவசாய உற்பத்திக்கும் நல்வழி வகுக்கும். இது வோர்ம் மூண் என அழைக்க காரணம். மேலும் இந்த வரும் ஸ்பிரிங் ஈக்குவனிக்ஸ் மார்ச் 19ஆம் தேதி வருகிறது. கடந்த 100 வருடங்களுடன் ஒப்பிடுகையில் மிக சீக்கிரமாக வரப்போகிறது. சூப்பர் ப்ளட் வோல்ஃப் மூன்: சந்திர கிரகணம் இந்த சூப்பர் மூணை நாடு மக்களின்  காலாச்சாரத்திற்கு ஏற்ப வெவ்வேறு பெயர்களில் அழைக்கின்றனர். அவை பின்வருமாறு க்ரோ மூண், கிரஸ்ட் மூண், ஷாப் மூண், சுகர் மூண், லேண்டான் மூண்(the crow moon, the crust moon, the sap moon, the sugar moon and the Lenten moon). சூப்பர் வோர்ம் மூன் எப்பொழுது தெரியும் மார்ச் 9ல் ஆரம்பித்து மூன்று நாட்களுக்கு தெரியும். திங்கட்கிழமை இரவு மிகவும் வெளிச்சமாகவும் பெரிதாகவும் தெரியும். அடுத்த சூப்பர் மூண் ஏப்ரல் 8ஆம் தேதி 2020 இல் வரும் இதற்கு சூப்பர் பிங்க் மூண் என பெயர். பொதுவாக வருடத்திற்கு மாதத்திற்கு ஒன்று என 12 பவுர்ணமி வரும் இந்த வருடம் அக்டோபர் மாதம் இரண்டு பவுர்ணமி 1ஆம் மற்றும் 31ஆம் தேதிகளில் வருகிறது. இதற்கு புளு மூண் என பெயர். Read the full article
0 notes
mrpuyal · 5 years
Text
கொரோனா வெயிலுக்கு பரவுமா? உலக சுகாதார மையம் கூறுவது என்ன?
Tumblr media
கொரோனா வெயிலுக்கு பரவுமா? உலக சுகாதார மையம் கூறுவது என்ன? வெப்பமான சூழ்நிலையில் கொரோனா பரவாதா? கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதிக வெப்பநிலையில் கொரோனா வைரஸ் பரவாது என சிலர் தெரிவித்து வருகின்றனர். அது குறித்து உலக சுகாதார மையம் என்ன கூறியது என இப்பதிவில் காண்போம். உலகத்தில் ஒரு லட்சத்திற்கு மேலான மக்கள் கொரோனா வைரஸால் பாதிப்படைந்து உள்ளனர். இதுவரை 3500க்கும் மேற்பட்ட உயிர் பழி ஆகியுள்ளது. இந்நிலையில் உலகம் முழுவதும் எவ்வளவு பாதிப்பு நடவடிக்கை எடுத்தாலும் கொரோனாவை கட்டுபடுத்த இயலவில்லை. இந்தியாவிலும் ஒரே வாரத்தில் 39 உறுதிபடுத்தப்பட்ட கொரோனா பாதிப்பாளர்கள் உள்ளனர். அனைவரையும் தனி வார்டில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். வெப்பமான சூழ்நிலையில் கொரோனா பரவாதா? உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரி டெட்ராஸ், வெப்பமான சூழ்நிலையில் இந்த வைரஸ் பரவாது என்பது இதுவரை எங்கும் நிரூபிக்கப்படவில்லை. ஆகையால் இந்தச் சூழலில் பயம் கொள்ளாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவதே முக்கியம்' என்கின்றனர் சுகாதாரத்துறை அதிகாரிகள். உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரி டெட்ராஸ் இதுகுறித்துப் பேசும்போது, "உலகம் முழுக்க எந்தவிதக் கட்டுப்பாடுமின்றி நோய் இப்போது பரவி வருகிறது. ஆகவே மக்கள் அனைவரும், நோயின் தீவிரத்தன்மையை புரிந்துகொண்டு, புத்திசாலித்தனமாக நோயை எதிர்த்து நிற்பது மட்டுமே இப்போது அவசியமாக இருக்கிறது. கரோனா வைரஸ் என்றால் என்ன? – Coronavirus Tamil
Tumblr media
பருவநிலை வெப்பமான சூழ்நிலையில் இந்த வைரஸ் பரவாது என்பது இதுவரை எங்கும் நிரூபிக்கப்படவில்லை அதனால் அலட்சியத்தோடு செயல்பட்டு நோய்ப் பரவுதலுக்கு வழிவகுத்துவிட வேண்டாம். சென்னையைச் சேர்ந்த தொற்றுநோயியல் மருத்துவர் ராமசுப்ரமணியத்திடம் இது குறித்து கூறுகையில், கொரோனா மட்டுமில்ல எந்த ஒரு வைரஸும் வெப்பம், குளிர், மிதமான சூழல் என எதைப் பொறுத்தும் வைரஸின் தீவிரம் அதிகரிக்கவோ குறையவோ செய்வதில்லை. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  ஹேண்ட் வாஷ், சோப் போன்றவற்றில் ஏதேனுமொன்றின் மூலம் நேரம் கிடைக்கும்போதெல்லாம் கைகழுவிக் கொண்டே இருங்கள். அடுத்ததாக, சுயசுத்தம் மிக முக்கியம், இருமல், தும்மலின்போது மூக்கையும் வாயையும் மூடிக்கொள்ளுங்கள். Corona Virus – கரோனா வைரஸ் – ஆபத்தானதா? Read the full article
0 notes
mrpuyal · 5 years
Text
09/03/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் - Horoscope Tamil
Tumblr media
09/03/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் - Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். மேஷம் ராசிபலன் இன்று அவநம்பிக்கை எ��்ணங்கள் தோன்றும். உங்கள் தன்னம்பிக்கையினால் அனைத்தும் சாதகமாக மாற்றுவது தங்கள் கையில் தான் உள்ளது. பணியில் தடைகளை உடைத்து வெற்றி காண்பீர்கள். தங்களின் துணையை சமாதனமாக வைப்பது கடினம். பணவரவு சுமாராக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சந்திர சேகரரை வணங்க தடைகள் விலகும். ரிஷபம் ராசிபலன் இன்றைய நாள் உங்களின் தேவைகளை பூர்த்தி செய்யாது. பணிகளை கவனமாக கையாள வேண்டி இருக்கும். வாக்கு வாதங்களை தவிர்க்கவும். வீட்டில் சிறு பிரச்சனைகளையும் பெரிதாகக்க வேண்டாம். பண வரவில் சிக்கல் ஏற்படும். மகிழ்ச்சி ஒன்று உங்களின் மனநிலையை சீராக வைக்கும். சந்திர பகவானை வெள்ளை நிற மலர் சாற்றி வழிபட குழப்பம் தீரும். மிதுன ராசிபலன் இன்று உங்களுக்கு மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள். நீங்கள் உங்களின் திறமையை அறிந்து செயலாற்றுவீர்கள். பணியில் பாராட்டுகள் குவியும். நண்பர்கள் இல்லம் சென்று வருவீர்கள். நட்புறவு மேம்படும். எதிர்பாராத பணவரவு வர வாய்ப்புண்டு. உடல்நிலை உற்சாக இருக்கும். அம்பிகையை வழிபட கூடுதல் பலன் உண்டு. கடக ராசிபலன் உங்களின் பிராத்தனை மற்றும் வழிபாடு ஒன்றே உங்களின் நாளை சிறப்பாக இருக்கும். பதட்டத்தை குறைத்து பணியாற்றவும். தங்களின் துணையிடம் சுமுகமான மனநிலை இருக்காது. தன லாபம் குறைவாக இருக்கும். விநாயகருக்��ு தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்ற நன்மைகள் கிடைக்கும். சிம்மம் ராசிபலன் உங்களின் வாழ்வில் திருப்பங்கள் வரலாம். நெருங்கிய நண்பர்களின் ஆலோசனைகள் உங்கள் நாளை வளமாக்கும். துணையிடம் மகிழ்ச்சியின்மை காணப்படும். வரவும் செலவும் சமமாக இருக்கும். மன சோர்வு இருக்கும். சந்திரனை வழிபட கவலைகள் குறையும். கன்னி ராசிபலன்  இன்று கடினமான சவாலான நாளாக இருக்கும். இறை பக்தி அவசியம். பணிசுமை அதிகமாக காணப்படும். வீட்டில் சூடான விவாதங்கள் ஏற்படும். மருத்துவ செலவுகள் ஏற்படும். தலை வலி காணப்படும் சோர்வாக இருப்பீர்கள். பெருமாளை வழிபட துன்பங்கள் அகலும். துலாம் ராசிபலன் இன்று முன்னேற்றமான நாளாக இருக்கும். பணியில் வெற்றி காண்பீர்கள். பொன்னான நாளாக அமையும். கணவன் மனைவியிடையே காதல் அதிகரிக்கும். லாபம் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் குறையில்லை. மகாலட்சுமியை வழிபட பலன்கள் கூடும். விருச்சிக ராசிபலன் இன்று அனைத்து காரியங்களிலும் வளர்ச்சி கிடைக்கும். தடைப்பட்டு நின்ற காரியங்கள் முடிவுகளை எட்டும். பணியில் பாராட்டுகள் குவியும். லாபம் அதிகரிக்கும். துணையிடம் அன்பான நல்லிணக்க நிலை உண்டாகும். கடன் பணம் திரும்பி வரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். விநாயகரை வழிபட பலன்கள் கூடும். தனுசு ராசிபலன் இன்று விரைவான முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். மகிழ்ச்சிக்கான வழியை தேடுவீர்கள். அன்றாட பணிகளை செய்வதில் கவனம் தேவை. துணையுடன் மனம் திறந்து பேசவும். பணவரவ சிறப்பாக இருக்காது. கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அம்பிகையை வேண்ட நல்ல பலன்கள் வரும். மகரம் ராசிபலன்  இன்று பதட்டமான நாளாக இருக்கும். ஆன்மீக பயணம் மற்றும் குருமார்கள் சொற்பொழிவுகள் கேட்க மனம் ஆறுதல் அடையும். பணியில் திட்டமிடல் அவசியம். கணவன் மனைவியிடையே அனுசரணை தேவை. நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. முதுகு பிரச்சனைகள் வரலாம். சிவபெருமானை வழிபட நல்ல பலன்கள் கிடைக்கும். கும்ப ராசிபலன் இன்று தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி நிச்சயம். பணியில் ஊக்கத்துடன் இருப்பீர்கள். கணவன் மனைவி இடையே அர்பணிப்பு உணர்வு காணப்படும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். உங்களின் நேர்மைக்கு பாராட்டுகள் கிடைக்கும். உடல்நிலை சீராக இருக்கும். மகாலட்சுமியை விளக்கேற்றி வழிபட கூடுதல் பலன்கள் கிடைக்கும். மீனம் ராசிபலன்  இன்று இனிமையான நாளாக அமையும். மெல்லிசை கேட்டு மகிழ மனம் சீராக இயங்கும். பணியில் சக ஊழியர்கள் ஆதரவு கிடைக்கும். துணையுடன் மகிழ்ச்சியாக பேசி மகிழ்வீர்கள். போதுமான பணம் கிடைக்கும். பணத்தை சேமியுங்கள். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிவ பெருமானை வழிபட பலன்கள் கூடும். 09/3/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம். Read the full article
0 notes
mrpuyal · 5 years
Text
கொரோனா அப்டேட்; கேரளாவில் ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு பாதிப்பு
Tumblr media
கொரோனா அப்டேட்; கேரளாவில் ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு ப���திப்பு சீனாவில் உருவான கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி வருகிறது.  இந்தியாவிலும் பாதுகாப்பு நடவடிக்கை என்னதான் எடுத்தாலும் இதுவரை 34 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இன்று கேரளாவில் ஒரே குடும்பத்தில் 5 நபருக்கு கொரோனா பதிப்பு உறுதியாகிறுக்கிறது. இதனால் இந்தியாவில் 39 உறுதிபடுத்தப்பட்ட கொரோனா கேஸ் ஆகிவிட்டது. தமிழகத்தில் கொரோனா; முதல் உறுதிபடுத்தப்பட்ட கேஸ் அவர்கள் இத்தாலியில் இருந்து கடந்த மாதம் 29ஆம் தேதி இந்தியா வந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். Read the full article
0 notes
mrpuyal · 5 years
Text
சர்வதேச மகளிர் தினம் 2020; பெண்களுக்கு இலவச பெட்ரோல்
Tumblr media
சர்வதேச மகளிர் தினம் 2020; பெண்களுக்கு இலவச பெட்ரோல். petrol price low free in Coimbatore. womens day celecbration. பெண்கள் தின கொண்டாட்டம் பெட்ரோல் இலவசம் உலக பெண்கள் தினம் ஒவ்வொரு வருடமும் மார்ச் 8-ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்தக் கலாச்சாராம் 100 வருடமாக பின்பற்றப்படுகிறது. சர்வதேச மகளிர் தின கவிதைகள், ஸ்டேட்டஸ், மெசேஜ் சென்னையில் மகளிர் பேரணி இதை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இருக்கும் மத்திய தகவல் பரப்பு மையம் பேரணி ஒன்றை நடத்தியது. இதில் குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி பங்கேற்றார். சமூதாயத்தில் பெண்களின் வளர்ச்சி, சம உரிமை, சுதந்திரம் ஆகியவற்றை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதே உலக மகளிர் தினத்தின் நோக்கம். உலக பெண்கள் தினம்; வரலாறும் நோக்கமும் மகளிர் தினத்திற்காக இலவச பெட்ரோல் கோயம்பெத்தூரில் உள்ள எச்.பி பெட்ரோல் நிலையத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 8ஆம் நாள் முதலில் வாகனம் ஒட்டி வரும் 100 பெண்களுக்கு 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாகவும் பெண்கள் முன்னேற்றம் பற்றி முகமும் நடத்த இருப்பதாக கூறியுள்ளனர். International Women’s Day 2020 Theme Read the full article
0 notes
mrpuyal · 5 years
Text
எஸ் பேங்க் ரானாகபூர் கைது; அமலாக்கத் துறை அதிரடி முடிவு
Tumblr media
எஸ் பேங்க் ரானாகபூர் கைது; அமலாக்கத் துறை அதிரடி முடிவு நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் எஸ் பேங்க் சேவையை கையில் எடுத்த ஆர்‌பி‌ஐ சில வரைமுறைகளையும் கொண்டு வந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர். வங்கி நிறுவனர் ரானாகபூர் கைது யெஸ் வங்கி நிறுவனர் ரானாகபூர் அதிரடியாக கைது செய்யப்பட்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமலாக்கத் துறை அதிகாரிகள் விடிய விடிய ரனாகபூரை விசாரணை செய்ததாகவும் பலமணி நேர விசாரணைக்கு பிறகே அவரை கைது செய்ததாக தகவல்க வெளிவந்துள்ளன. மேலும் ரனாகபூர் மீது பண மோசடி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து வருவதாகவும் அவர் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றிய குற்றச்சாட்டு அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தது. Yes Bank சேவையை கையில் எடுத்த RBI ஒரே நாளில் 50% மேல் பங்குகள் விலை குறைவு Read the full article
0 notes
mrpuyal · 5 years
Text
கொரோனா பயமில்லை: வெளிநாட்டுக்கு சென்ற விஜய் - வைரல் வீடியோ!
Tumblr media
கொரோனா பயமில்லை: விஜய் வெளிநாட்டிற்கு புறப்பட்டுச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Vijay Master Audio Launch மாஸ்டர் இசை வெளியீடு (Master Audio Launch) வரும் 15 ஆம் தேதி நடக்க இருக்கும் நிலையில், அவர் வெளிநாட்டிற்கு புறப்பட்டுச் செல்லும் வீடியோ, புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாஸ்டர் விஜய் (Master Vijay) பிகில் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. தற்போது போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. மாஸ்டர் குறித்து ஒவ்வொரு நாளும் அப்டேட் வந்து கொண்டே இருக்கிறது. மாஸ்டர் இசை வெளியீடு (Master Audio Launch) அந்த வகையில், மாஸ்டர் இசை வெளியீடு வரும் 15-ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, சன் டிவி நிறுவனம் மாஸ்டர் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை தங்களது தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்கிறது. மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சைக் கேட்பதற்கு கோடான கோடி ரசிகர்கள் இப்போதிலிருந்தே ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், மாஸ்டர் இசை வெளியீட்டிற்கு முன்பாக விஜய் குறுகிய கால சுற்றுலாவாக வெளிநாட்டிற்கு புறப்பட்டுச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் (Vijay Abroad) சென்னை விமான நிலையத்தில் டிக்கெட்டுடன் வந்த விஜய்யின் புகைப்படம், வீடியோ வைரலாகிறது. விஜய் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த பிறகு மாஸ்டர் இசை வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது. ஒவ்வொரு நடிகரும் படப்பிடிப்பு முடிந்த பிறகு வெளிநாட்டிற்கு புறப்பட்டுச் செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து மாஸ்டர் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி65 (Thalapathy65) மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் தளபதி65 படத்தில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. மாஸ்டர் படம் திரைக்கு வந்த பிறகு தளபதி65 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read the full article
0 notes
mrpuyal · 5 years
Text
8/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் - Horoscope Tamil
Tumblr media
8/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் - Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். மேஷம் - செலவு முக்கியமான விஷயத்தில் முடிவுகளை எடுக்க வேண்டாம். விட்டுக் கொடுத்து செல்லுதல் அவசியம். பணியில் கடினமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே ஈகோ பிரச்சனைகள் வரலாம். குடும்ப செலவுகள் அதிகரிக்கும். தாயின் உடல் நலத்தில் கவனம் வேண்டும். சூரிய பகவானிற்கு விளக்கேற்றி வழிபடுங்கள் ரிஷபம் - மகிழ்ச்சி உங்களுக்கு மகிழ்சிகரமான நாள். உற்சாகமாக இருப்பீர்கள். பணியில் வளர்ச்சி காணப்படும். அனைவரிடமும் இனியமாக பேசுவீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தில் குறையில்லை. அனுமனை தரிசித்து கூடுதல் நற்பலன் கிடைக்கும் மிதுனம் - பயணம் ஆன்மீகம் தொடர்பான பயணம் செய்ய உகந்த நாள். கவலைகளை எண்ணுதலை கைவிடவும். துணையிடம் பேசுவதில் கவனம் தேவை. பணவரவு சிறப்பாக இருக்காது. ஆரோக்கியத்திற்கான செலவுகள் அதிகரிக்கும். சிவ பெருமானை தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் வரும் கடகம் - குழப்பம் இன்று உணர்ச்சி வசம் அதிகமாக இருக்கும். கட்டுபாட்டில் வைத்து கொள்ளவும். மனம் குழப்பம் வேண்டாம். பணிகளை பொறுமையாக கையாளவும். துணையிடம் தங்கள் கவலைகளை திணிக்க வேண்டாம். பணவரவு சுமாராக இருக்கும். தலை வழி ஏற்பட வாய்ப்புண்டு. தன்வந்திரிக்கு விளக்கேற்றி வழிபட நற்பலன்கள் உண்டு. சிம்மம் - உழைப்பு இன்று உங்களின் கடினமான உழைப்பு மட்டுமே பலன்களை தரும். பணியில் நல்ல நிலைப்பாடு இருக்காது. துணையிடம் தகவல் பரிமாற்றம் நன்றாக இருக்காது. தன லாபம் குறைவு. பணம் இழக்க வாய்ப்புண்டு. கால்களில் வலி ஏற்படலாம். சரபேஸ்வரரை விளக்கேற்றி வழிபடத் தொல்லைகள் குறையும். கன்னி - பாராட்டு திட்டமிடல் நன்றாக இருக்கும். பணியில் பாராட்டுகள் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். பணவரவு அதிமாக இருக்கும். அவசியம் சேமிக்க வேண்டும் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். நாராயணனை வழிபட கூடுதல் பலன்கள் உண்டு. துலாம் - ஆரோக்கியம் இன்று பயணங்கள் செல்ல வாய்ப்புண்டு. இனிமையான இசையைக் கேட்டு ரசிக்கவும். பணியினால் திருப்தியான பலன் இருக்காது. கணவன் மனைவி இடையே விவாதங்கள் வரும். பணவரவு சற்று குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தில் எந்த குறைபாடும் இருக்காது. சூரியன் தரிசனம் செய்ய ஆரோக்கியம் மேலும் சிறப்பாக இருக்கும். விருச்சிகம் - பணிச்சுமை இன்று உங்களின் உணர்வுகளை கட்டுபாட்டில் வைக்க வேண்டும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். உணர்வுகளை எவரிடமும் திணிக்க வேண்டாம். பணத்தில் கவனம் தேவை. நல்ல உரக்கமே ஆரோக்கியமாக வைத்திருக்கும். பைரவரை வழிபட நற்பலன்கள் உண்டு. தனுசு - சவால் இன்று சவாலான நாளாக அமையும்.  உழைபிற்கேற்ற ஊதியம் கிடைக்காது. வேலையில் சாமர்தியம் அவசியம். துணையிடம் புரிதல் அவசியம். பணவரவில் சிக்கல் இருக்கும். குளிர்ந்த உணவுகளை தவிர்க்கவும். ஆரோக்கியம் சுமாராக இருக்கும். ராம நாமம் சொல்ல தொல்லைகள் தீரும். மகரம் - அன்பு இன்று உங்கள் தன்னம்பிக்கை உங்களின் வெற்றிக்கு காரணமாகும். அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். குடும்பத்தில் அன்பு மிகுந்து இருக்கும். காதலுக்கு வெற்றி கிடைக்கும். பணம் தாராளமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அம்பிகையை வழிபட்டு வர அதிக நன்மைகள் உண்டு. கும்பம் - வளர்ச்சி இன்று உங்களின் வளர்ச்சிக்கு உகந்த நாளாகும். உங்களின் நேர்மைக்கு பாராட்டுகள் குவியும். துணையுடன் காதல் பெருகும். ஆனந்தம் பொங்கும். சுப செலவுகள் வரும். ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் தேவை. பைரவரை விளக்கேற்றி வழிபட ஆரோக்கியத்தில் குறை வராது. மீனம் - சோர்வு அமைதியும் தன்னம்பிக்கையும் வேண்டும். பணியில் போதுமான லாபம் இல்லை. மன சோர்வுடன் இருப்பீர்கள். குடும்பத்தில் சகஜமான பேச்சு அவசியம் தேவை. அன்பை வெளிபடுத்த கவலைகள் தீரும். விரைய செலவுகள் வர வாய்ப்புண்டு. ஜீரண கோளாறுகள் வரலாம் உணவு கட்டுப்பாடு அவசியம் தேவை. அனுமனுக்கு நெய் விளக்கேற்றி வர நற்பலன்கள் கிடைக்கும். 8/3/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம். Read the full article
0 notes
mrpuyal · 5 years
Text
AjithKumar Fake Letter: அஜித் சார்பில் வக்கீல் நோட்டீஸ்!
Tumblr media
AjithKumar Fake Letter; அஜித் சமூக வலைதள பக்கங்களில் இணைவதாக அவரது கையெழுத்து உடன் கூடிய கடிதம் ஒன்று டிரெண்டானது. இதற்கு தற்போது வழக்கறிஞர் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அஜித் Ajith Facebook நடிப்பில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. கடந்த சில தினங்களாக அஜித் குறித்த அப்டேட் அடுத்தடுத்து வெளியாகி வந்தது. அஜித்தின் மகன் ஆத்விக் பிறந்தநாள், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் 2ம் ஆண்டு நினைவு தின திதி நிகழ்வில் அஜித் கலந்து கொண்ட புகைப்படம், வீடியோ வெளியானது. Valimai வலிமை படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலானது. இறுதியில், அஜித் நடிப்பில் வந்த காதல் மன்னன் திரைக்கு வந்து 22 ஆண்டுகள் ஆகியுள்ளது. இப்படி தொடர்ந்து அஜித் குறித்து தகவலும், அப்டேட்டும் வந்து கொண்டே இருந்த நிலையில், டுவிட்டரில் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்யும் செய்தியும் வெளியானது. அதாவது, அஜித் சமூக வலைதளங்களில் Ajith Twitter Account  இணையப்போவதாக கையெழுத்துடன் கூடிய கடிதம் ஒன்று வெளியானது. ஆனால், அது போட்டோஷாப் செய்யப்பட்ட போலியான கடிதம் என்று தெரியவந்தது. இந்த நிலையில், தற்போது அஜித் சார்பில் அவரது சட்ட ஆலோசகர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். AjithKumar Fake Letter அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 6 ஆம் தேதி அஜித்குமார் வெளியிட்டதாக கடிதம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருவது அவரது கவனத்திற்கு வந்துள்ளது. அதில், சமூக ஊடகங்களில் மீண்டும் சேர முடிவு செய்துள்ளதாகவும், அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளது போல் உள்ளது. அந்த கடிதம் அஜித்குமாரால் AjithKumar வெளியிடப்படவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் முற்றிலும் மறுக்கப்படுகின்றன என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கவே இந்த அறிவிப்பை வெளியிட விரும்புகிறார். கடந்த காலங்களில் அஜித் (Ajith Fake Letter) ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், தனக்கு எந்தவொரு சமூக ஊடகக் கணக்குகள் இல்லை என்றும், சமூக ஊடகங்களின் அதிகாரப்பூர்வ ரசிகர் பக்கத்தையும் கொண்டிருக்கவில்லை அல்லது ஆதரிக்கவில்லை என்றும் பலமுறை தெரிவித்திருந்தார். அதையே தற்போதும் வலியுறுத்த விரும்புகிறார். அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்குகள் இல்லை. எந்தவொரு சமூக ஊடகங்களிலும் இணைய விரும்பவில்லை. சமூக ஊடகங்களின் எந்தவொரு கருத்தையும் மற்றும் எந்தவொரு ரசிகர் பக்கத்தையும் குழுவையும் அவர் ஆதரிக்கவில்லை. மீண்டும் சமூக ஊடகங்களில் சேரப்போவதாக கூறி வந்த இந்த போலி கடிதத்தை அவர் வெளியிடவில்லை. கடைசியாக தவறான அறிவிப்பை வெளியிட்ட மற்றும் எங்கள் கட்சிக்காரரின் கையொப்பத்தை மோசடி செய்த குற்றவாளியை கண்டுபிடிப்பதற்குத் தேவையான மற்றும் பொருத்தமான சட்ட நடவடிக்கைகள் முடிந்தவரை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட விரும்புகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, இந்த செய்தி அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், அஜித் குறித்து வெளியான தவறான தகவலுக்கு அவர்கள் மிகவும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. Read the full article
0 notes