📰 பிரதமரை 'துஷ்பிரயோகம்' செய்ததற்காக ராகுல் காந்தியை கிழித்த ஆசாத்; 'பாஜகவின் விசுவாசமான சிப்பாய்' என்று காங்
📰 பிரதமரை ‘துஷ்பிரயோகம்’ செய்ததற்காக ராகுல் காந்தியை கிழித்த ஆசாத்; ‘பாஜகவின் விசுவாசமான சிப்பாய்’ என்று காங்
செப்டம்பர் 14, 2022 05:02 PM IST அன்று வெளியிடப்பட்டது
காங்கிரஸ் முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத் மீண்டும் ராகுல் காந்தியை குறிவைத்தார். காஷ்மீர் செய்திச் சேவையிடம் பேசிய ஆசாத், ‘ராகுல் காந்தியைப் போல, பிரதமர் மோடி மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்துவதில்லை’ என்றார். மேலும், ஏழு ஆண்டுகள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பிரதமர் மோடியின் கொள்கைகளை நாடாளுமன்றத்தில் அமர்ந்து விமர்சித்தேன். இதற்கிடையில்,…
View On WordPress
2 notes
·
View notes
வீட்டு வாடகைகள் 5%-15% வரை அதிகரித்துள்ளன, ECR வில்லாக்களுக்காக வெளிநாட்டினர் மீண்டும் ஏமாற்றுகின்றனர் | சென்னை செய்திகள்
வீட்டு வாடகைகள் 5%-15% வரை அதிகரித்துள்ளன, ECR வில்லாக்களுக்காக வெளிநாட்டினர் மீண்டும் ஏமாற்றுகின்றனர் | சென்னை செய்திகள்
சென்னை: இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதால், நகரின் வடக்குப் பகுதிக்கு குடியிருப்பு வாடகைகள் 5% – 15% வரை அதிகரித்துள்ளன. OMR இன் IT மையத்தில் உள்ள பண்புகள் மற்றும் அதனுடன் ECR, தொற்றுநோய்களின் போது காலியாக இருந்தவை, வெளிநாட்டவர்கள் உட்பட தங்கள் குத்தகைதாரர்களைத் திரும்பப் பெறுகின்றன. நகரின் முக்கியப் பகுதிகளில், கீழ்நிலை அடுக்குமாடி…
View On WordPress
0 notes
“கபில்தேவ் எனும் களநாயகன்”
மேக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டத்தை பலர் கபில்தேவ் 1983 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே உடன் அடித்த 175* அடித்த ஆட்டத்தோடு ஒப்பிடுகிறார்கள்! கபிலின் ஆட்டம் ரொம்ப ஸ்பெஷலானது, தனித்துவமானது! அதை எந்த ஆட்டக்காரரின் ஆட்டத்துடனும் ஒப்பிடக் கூடாது! அதுபற்றி அறிய என்னோடு வாருங்கள்! பாஸ்போர்ட் விஸா ஏதுமின்றி ENGLAND போவோம்!
இந்த அழகிய மைதானத்தை பாருங்களேன்! இது KENT எனும் இங்கிலாந்து கவுண்டியில் Tunbridge Wells என்னும் இடத்தில் உள்ளது. இந்த மைதானத்தின் பெயர் Nevill Ground, நம்ம திருப்பூர், திருப்பத்தூர் போல இங்கிலாந்தின் நாட்டிங்ஹாமில் உள்ள மைதானத்திற்கு Trent Bridge என்று பெயர்! நம் கபில் ஆடிய டன்ப்ரிட்ஜ் வெல்ஸ் மைதானத்தில் இதுவரை மொத்தமே..
இரண்டு சர்வதேச ஒருநாள் ஆட்டமே நடந்துள்ளது! மிகச் சிறிய மைதானம்! 6 ஆயிரம் நபர்கள் அமர்ந்து மேட்ச் பார்க்கலாம்! 1983 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் கிரிக்கெட் ஆட்டங்கள் என்றாலே இன்றைய இந்தியா பாகிஸ்தான் மேட்ச் போல வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியுஸிலாந்து போன்றவை மோதினால் தான் கூட்டம் வரும்! ஆகவே 1983 உலகக் கோப்பை..
அட்டவணையில் இங்கிலாந்தின் புகழ் பெற்ற லார்ட்ஸ், ஹெடிங்லி, மான்செஸ்டர், ஓவல், ஓல்டு டிராஃபோர்ட் போன்ற மைதானங்களை பெரிய அணிகள் மோதும் மேட்சிற்கு தந்துவிட்டு ஆசிய ஆப்பிரிக்க அணிகளுக்கு மட்டும் டன்பிரிட்ஜ்வெல்ஸ் போன்ற மைதானத்தை ஒதுக்கித் தந்தனர்! இங்கு KENT கவுண்டியின் கிரிக்கெட் மட்டுமின்றி ஹாக்கி, கால்பந்து அணிகளும் இந்த மைதானத்தை..
குத்தகைக்கு எடுத்து ஆடிவந்தன! முதல் முறையாக இங்கு நடந்த சர்வதேச ஒருநாள் போட்டி இந்தியா ஜிம்பாப்வே மோதிய போட்டியாகும்! டன் பிரிட்ஜ் வெல்ஸ் இங்கிலாந்தின் அழகிய தோட்டங்கள் உள்ள ஊர்! இந்த மைதானமே பச்சைப் பசேலென மரங்களும் பூஞ்செடிகளும் சூழ்ந்த மைதானம்! நல்ல குளிர் வீசும் கவுண்டியும் கூட ! இதற்கு நடுவில் கிரிக்கெட் ஆடுவதே..
தனி ஆனந்தமாக இருக்கும்! 1983 ஜுன் 18 அன்று மேட்ச் துவங்கும் நாளில் பி.பி.சி ஒளிபரப்பு நிறுவனத்தில் ஏதோ பிரச்சனை என வேலை நிறுத்தம் அறிவித்தது! அதன் காரணமாக அந்த மேட்சை எந்த ஒரு அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமும் அன்று படம் பிடிக்கவில்லை! அன்றைய மேட்சில் இந்திய விக்கெட்டுகள் மடமடவென சரிந்து கபில் ஆட வரும் போது ஸ்கோர் 17/5 என்றிருந்தது! கபிலின்..
அந்த வரலாற்றுப் புகழ் மிக்க ஆட்டம் எப்படி இருந்தது தெரியுமா? இந்த ஸ்கோரின் நடுவிலிருந்த / இந்த சாய்வுக் குறியை மட்டும் நீக்கி 175 அடித்தார் ருத்திர தாண்டவமாக! அன்று இந்திய அணி 78 ரன்கள் வருவதற்குள் மேலும் 2 விக்கெட்டுகள் இழந்தது! பின்னி, மதன்லால் உதவியுடன் 140 ரன்களைக் கடந்தார், அன்றைய மேட்சில் இந்திய அணி கொஞ்சம் பதட்டத்தில் ஆடும் டவுன்களை மாற்றி..
வழக்கத்திற்கு மாறாக கிர்மானியை கடைசி ஆளாக அனுப்பியது! அன்று 140 ரன்களில் 7 ஆவது விக்கெட்டாக விழுந்தது யார் தெரியுமா? இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் ஓபனிங் பேட்ஸ்மெனும் ஆன ரவி சாஸ்திரி கடைசியில் கிர்மானி அவுட்டின்றி 24 ரன்கள் அடித்து கபிலுக்கு உறுதுணையாக நிற்க 16 பவுண்டரிகள் 6 சிக்ஸர்களுடன் 175 நாட் அவுட் எனும் மெகா ஸ்கோரை..
அடித்திருந்தார் கபில்! அதுதான் அப்போதைய ஒரு நாள் ஆட்டத்தின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்! காலையில் அங்கு வீசிய குளிர் காற்று அதனால் உண்டான ஸ்விங் இதனால் முதல் 5 விக்கெட்டுகள் தடாலென வீழ்ந்தன! கபில் களத்தில் நிலைத்த பின்பு குளிர் விட்டுப் போன அவரது அதிரடி பேட்டிங்கை பார்த்து இங்கிலாந்தின் குளிர் காற்றும் அலறி வழி விட்டது! நன்றாக யோசித்துப் பாருங்கள்!
40 ஆண்டுகளுக்கு முந்தைய கிரிக்கெட்! தேர்ட் அம்பயர், DRS, பேட்ஸ்மென் ரிவ்யூ, பேட்டிங் & ஃபீல்டிங் கட்டுப்பாடுகள், பவர்ப்ளே, ஃப்ரீ ஹிட் என எந்த நவீன தொழில் நுட்பமும் அன்று கிடையாது. அம்பயர் அவுட் கொடுத்தா போயிட்டே இருக்கணும்! (மேக்ஸ்வெல்லுக்கு அவுட் தரப்பட்டது) ஒரு சின்ன தவறு செய்தாலும் அவ்வளவு தான்! மேலும் 83ஆம் ஆண்டில் ஒரு நாள் ..
கிரிக்கெட் என்பதே பாரம்பரிய கிரிக்கெட் ரசிகர்களுக்கு புதிது! 150 பந்துகளில் 50 ரன்கள் அடித்தாலே கொஞ்சம் நிதானமா ஆடுன்னு சொன்ன காலம் அது! அந்த காலத்தில் ஒருவன் வெறும் 138 பந்துகளில் 175 ரன்கள் அடித்தான் என்ற செய்தி வந்ததும் யாருடா இந்த ராட்சன்னு எல்லாரும் வியந்தார்களாம்! முதன் முறையாக இப்படி ஒரு மேட்சை ஒளிப்பதிவு செய்யாமல் போனோமே..
என்று பிபிசி வருந்தியது! செண்டிமெண்ட் நிறைந்த இந்திய அணியில் கபில் ஆடிக் கொண்டிருக்கும் போது வெங்க்சர்கார் ஒரு மரத்தடியில் நிற்க கடைசி வரை அவரை அங்கிருந்து நகர விடவில்லை, ஶ்ரீகாந்தை சிறுநீர் கழிக்கக் கூட போகாதே என்று நிறுத்தி, கவாஸ்கர் அமர்ந்த நாற்காலியை விட்டு எழுந்திருக்காமல் இப்படி நிறைய செண்டிமெண்ட் பார்த்தார்களாம்!
இன்னும் சொல்லப் போனால் கபிலின் இந்த ஆட்டத்தை பார்த்து தான் நமது மொத்த இந்திய அணிக்கும் நாம இந்த உலகக் கோப்பையில் ஏதாவது செஞ்சே ஆகணும்னு ஒரு லட்சிய வெறி வந்ததாம்! அப்படிப்பட்ட ஒரு உணர்வுப்பூர்வமான தோல்வி நெருப்பு சூழ அதன் மீது நடந்த நெருப்பான பொறுப்பான ஆட்டம் அது! நான் இந்த இடத்தில் மேக்ஸ்வெல்லின் திறமையை, அதிரடியை..
குறை கூறவில்லை! கபிலின் ஆட்டத்தையும் மேக்ஸின் ஆட்டத்தையும் ஒப்பிடக் கூடாது என்கிறேன்! கபிலின் ஆட்டம் பாரம்பரிய தெருக்கூத்து என்றால் மேக்ஸின் ஆட்டம் ஓடிடியில் வரும் வெப் சீரிஸ்! அது ரீசிவர் டெலிபோன், இது ஸ்மார்ட் ஐ போன், அது தந்தி இது SMS, இரண்டு காலகட்டங்களும் வேறு வேறு! இதை எப்படி ஒப்பீடு செய்யக்கூடாதோ அப்படித்தான் இவர்கள்..
இருவரின் ஆட்டமும்! இன்றைக்கு இந்தியாவில் எல்லா மைதானங்களிலும் IPL மூலம் பல ஆண்டுகள் ஆடி இந்த பருவநிலையையும் மைதானத்தின் தன்மையையும் மேக்ஸ்வெல் அறிந்திருப்பதை போல அன்று கபில் இங்கிலாந்தின் பருவநிலையில் பரிச்சயம் இன்றியே ஆடினார்! இருவரின் அதிரடி வேகத்தை, ரன் குவிக்கும் வெறியை, தனி ஒருவனாக நின்று போராடிய..
குணத்தை வேண்டுமானால் ஒப்பிடலாம்! நிச்சயம் கபில் இங்கிலாந்தில் ஆடி அடித்த 175* மேக்ஸ்வேல் இந்தியாவில் அடித்த 201* இரண்டும் வெவ்வேறு காலத்தை சேர்ந்தவை! கபில் முதல் பேட்டிங்கில் மேக்ஸ்வெல் சேஸிங்கில்! இருந்தாலும் இங்கே மேக்ஸ்வெல்லுக்கு நிறைய வசதி, வாய்ப்புகள் இருந்தது! கபிலுக்கு அதுஇல்லை! ஆகவே ஒப்பீடு செய்யவே முடியாதது கபிலின் ஆட்டமே!
#OWC2023
0 notes
உலக சனத்தொகையில் முதலிடத்தில் இந்தியா - சீனா கூறுவது என்ன தெரியுமா..!
உலக மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு, இந்தியா முதல் இடத்துக்கு வந்துள்ளது என ஐ.நா. மக்கள் தொகை நிதியம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் மக்கள் தொகை 142.86 கோடி, சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடி என தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இது குறித்து பேசிய சீன வெளியறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின்னிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
140 கோடியைத் தாண்டிய மக்கள்
அதற்கு பதில் அளித்து அவர்…
View On WordPress
0 notes
இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைந்தது சீனக் கப்பல் - தீவிர கண்காணிப்பில் இந்தியா!
பங்களாதேஷை சுற்றியுள்ள கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வில் ஈடுபட்டு வரும் சீன ஆய்வுக் கப்பலான ஹை யாங் ஷி யூ 760ஐ இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவுக்குச் சொந்தமான இந்த நில அதிர்வு ஆய்வுக் கப்பல் கடந்த ஆண்டு டிசம்பர் 29ஆம் திகதி இரவு மலாக்கா வழியாக இந்தியப் பெருங்கடலில் நுழைந்து, கடந்த ஜனவரி மாதம் முதல் பங்களாதேஷ் உடன்…
View On WordPress
0 notes
மனிஷ் காஷ்யப், பீகார் யூடியூபர் மற்றும் பத்திரிக்கையாளர், தமிழ்நாடு புலம்பெயர்ந்தோர் தாக்குதல் போலி செய்தி வழக்கில் சரணடைந்தார் | இந்தியா செய்திகள்
பாட்னா: “தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள்” என்ற போலி வீடியோவைப் பகிர்ந்ததாகக் கூறி பீகார் காவல்துறையால் தேடப்படும் யூடியூபர் மணீஷ் காஷ்யப், மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் சனிக்கிழமை சரணடைந்தார் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகார் காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOU) காஷ்யப் மற்றும் பலர் மீது “தமிழகத்தில்…
View On WordPress
0 notes
கிழக்கே வாழும்
தீப்பறவை, இந்தியா.
ஓஷோ...
பொதுவாக ஞானிகள் தான் இறக்கும் காலத்தில் இந்தியா வந்தபின் தான் காணாமல் போகிறார்கள்.
லாவோட்சூ என்ற சீன ஞானி இந்தியாவில் வந்த பின் தான் மறைந்து போனார்.
போதி தர்மர் இந்தியாவில் இருந்து சீனா சென்றிருந்தாலும் புத்தருடைய பொக்கிஷங்களை நல்ல சீடனிடம் ஒப்படைத்து விட அலைந்து இறுதியாக இந்தியா வந்து தான் மறைந்து போனார்.
புராணங்களுக்கெல்லாம் இருப்பிடமாக இந்தியா இருக்கிறது.
இங்கே எழுதப்படாத புராணங்கள் உலகில் எங்கேயுமில்லை.
உலகைக் காண இருவிதமான கண்ணோட்டங்கள் உள்ளன.
ஒன்று விஞ்ஞானம் இரண்டு புராணம்.
கிரேக்க மனதிலிருந்து விஞ்ஞானம் பிறந்தது.
இந்திய மனதிலிருந்து புராணம் பிறந்தது.
விஞ் ஞானம் மூலம் பார்ப்பது என்றால் கணிதத்தின் துணையோடு தர்கத்தோடு பார்ப்பதாகும்.
சாக்ரடீஸ் வழியாக உலகை சந்தேகக் கண்ணோடு வேறு விதமாக காண்பதாகும்
புராணம் மூலம் பார்ப்பது என்பது அன்பு மூலமாக பார்ப்பதாகும்.
உண்மையான கதைகளை சொல்லாமல் கற்பனைக் கதைகளை காதலோடு சொல்வதாகும்.
கற்பனைக் கதைகள் உண்மையான கதைகளை விட உண்மையானவைகளாகும்.
இது வெளி உலக நிகழ்வுகளை கண்டுகொள்வதில்லை.
மாறாக உள் ஆழத்தை கொடுக்கிறது.
இந்தியாவிற்கென்று வரலாறு இல்லை.
புராணங்கள் இதிகாசங்கள் மட்டுமே உள்ளன.
இராமனும் கிருஷ்ணனும் இருந்திருக்கலாம் அல்லது இல்லாமலும் போயிருக்கலாம். அதைப் பற்றியெல்லாம் இந்தியா கவலை கொள்ளவில்லை.
சக்கரம் நகர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் அதன் மையம் நகராமல் அப்படியே உள்ளது.
சக்கரம் வரலாறு போன்றது. அதன் மையம் தான் புராணங்கள்.
அதனால் சரித்திரத்தில் இந்தியா கவலைக் கொள்ளாமல் மையத்தின் மீது கவனம் செலுத்துகிறது.
சரித்திரம் என்பது ஆரம்பமும் முடிவும் இருப்பது. பிறப்பும் இறப்பும் இருப்பது.
சரித்திரம் முதுமையடைந்து விடுகிறது.
பிறப்பின்மைக்கும் இறப்பின்மைக்கும் இடையே உள்ளது தான் புராணங்கள்.
இராமனும் கிருஷ்ணனும் இங்கே பிறக்கவுமில்லை. இறக்கவுமில்லை. அவர்கள் எப்போதும் இங்கே இருக்கிறார்கள்.
புராணங்கள் காலத்தைப் பற்றியதல்ல. அவை அழியாமைப் பற்றியது.
சரித்திரம் காலத்துடன் நகர்ந்து கொண்டிருக்கிறது.
புராணங்கள் நகர்வதேயில்லை.
புராணங்கள் பழமையாகிவிடுவதில்லை.
செய்தித் தாள்கள் ஒரு சரித்திரம். நேற்றைய செய்தித் தாள்கள் இன்று பழையதாகிவிடுகிறது.
இராமர் செய்தித் தாள்களில் இடம் பெற்றவரில்லை. அவர் செய்தி அல்ல. அவர் வரலாறாக மாற மாட்டார். எப்பொழுதும் நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
எப்பொழுதும் அர்த்தமுடையவராக இருக்கிறார்.
சக்கரத்தின் மையத்தைப் போல நகராமல் இங்கேயே இருக்கிறார்.
நீங்கள் இராமனுடைய கிருஷ்ணனுடைய முதுமைப் பருவத்தை எங்காவது கண்டிருக்கிறீரா?.
இராமர் ஹார்மோன் குறைபாடு உடையரல்ல. அவர் மீசை தாடியோடு எப்போதும் காட்சி தந்ததில்லை.
தாடி வளர்ந்துவிட்டால் அது வெண்மையாகிவிடும்.
முதுமையடைந்த இராமர் இறந்துவிட்டார் என நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.
சமணர்களின் 24 தீர்த்தங்கர்களும் தாடி மீசையோடு இருந்ததில்லை.
அவர்களை இளமையாக காட்டுவதன்மூலம் அழிவற்ற தன்மையை வெளிக்காட்டுகிறார்கள்.
காலமின்மையை வெளிக்காட்டுகிறார்கள்.
நீங்கள் இப்போது இளமையாக இருக்கிறீர்கள்.
பின்னாளில் முதுமையடை��்துவிடுவீர்கள்.
இப்பொழுது ஆரோக்கியமாக இருக்கிறீர்கள். பின்பு நோய்வாப்படுவீர்கள்.
முழு வாழ்க்கையோடு இன்று வாழ்கிறீர்கள். பின்பு இறந்துவிடுவீர்கள்.
இவையெல்லாம் சரித்திரத்தின் சக்கரம்போல மேலெழுந்தவாரியாக தெரிகிறீர்கள்.
ஆனால் இப்பொழுதும் உங்கள் ஆழத்தில் அழியாமை இருந்து கொண்டு தான் இருக்கிறது.
அதற்குள் காலமின்மை இருக்கிறது.
அதனால் அதற்கு முதுமை என்பதே கிடையாது.
அந்த கிழக்கு நாடு உங்களுக்குள் தான் உள்ளது. அது தான் இந்தியா.
அதனால் தான் இந்தியா பூகோளத்தின் ஒரு பாகம் என நான் சொல்வதில்லை.
அது சரித்திரத்தின் ஒரு பகுதியாகவும் இல்லை.
எப்பொழுது ஒரு மனிதன் தன்னளவில் ஆழத்திற்கு வருகிறானோ அவன் இந்தியாவை அடைந்துவிட்டான்.
இந்தியா காந்தம் போல மற்ற நாட்டவர்களை கவர்ந்திழுப்பதற்கு காரணம் அது தான்.
எவனொருவன் வாழ்வில் அதிருப்தி அடைகிறானோ அவன் இந்தியா நோக்கி நகரத் தொடங்குகிறான்.
வெளியிலிருந்து உள்ளே செல்ல விரும்புபவன் இந்தியா சென்று சேர்கிறான்.
அதனால் தான் லாவோட்சூ ''கிழக்கே வாழும் தீப்பறவை'' என இந்தியாவை சொல்கிறார்.
ஓஷோ.
THE EMPTY BOAT.
0 notes
இந்தியாவின் அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல், ஆப் அடிப்படையிலான பயிற்சி: மையம்
எக்ஸ்பிரஸ் செய்தி சேவை
புதுடெல்லி: இந்தியா தனது முதல் டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு தயாராகி வருகிறது, மேலும் 130 கோடிக்கும் அதிகமான இந்திய குடிமக்களின் சரியான எண்ணிக்கை, வகுப்பு, பாலினம், வயது, வேலைவாய்ப்பு மற்றும் பிற சமூக-பொருளாதாரத் தரவுகள் போன்ற தளத்தில் அரசாங்கம் ஏற்கனவே பல தொழில்நுட்ப முன்னேற்றங்களைச் செய்துள்ளது. கைப்பற்றப்பட்டு வகைப்படுத்தப்படும்.
உள்துறை இணை அமைச்சர் நித்யநாத்…
View On WordPress
0 notes
டெல்லி ரகசியம்: பேசவில்லை | டெல்லி ரகசிய செய்தி, இந்தியன் எக்ஸ்பிரஸ்
டெல்லி ரகசியம்: பேசவில்லை | டெல்லி ரகசிய செய்தி, இந்தியன் எக்ஸ்பிரஸ்
லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, சபையில் ஒழுக்கத்தை கடைபிடிப்பதாக அடிக்கடி கூறி வருகிறார். புதன்கிழமை, பிர்லா தனது கட்சி சகாக்களுடன் உரையாடியதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எச்சரிக்கை விடுத்தது ஒரு உதாரணம். சோனியா சபைக்குள் நுழைந்ததும், இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனை உட்பட பல பிரச்சனைகள் குறித்து விவாதம் செய்ய முயன்ற ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் கௌரவ் கோகோய் ஆகியோரிடம் பேசத் தொடங்கினார்.…
View On WordPress
0 notes
#தேசிய_பத்திரிகை_தினம்!
🗣️ தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட நவ. 16-ம் நாள்தான், தேசிய பத்திரிகையாளர் தினமாக 1996-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பதில் முக்கியப் பங்காற்றும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின் பணிகளைக் கவுரவிக்க தேசிய பத்திரிகை தினம்கொண்டாடப்படுகிறது.
🗣️ நாள்தோறும் தவறாமல் ஜனநாயக கடமையாற்ற வேண்டி மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் ஏன் பல நேரங்களில் தங்கள் உடலையும் உயிரையும் பணயம் வைத்து செய்தி சேகரித்து மக்களிடம் கொண்டு சேர்க்கும் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றியும் வாழ்த்தும் உரித்தாகுக!.
0 notes
பாரம்பரிய குடும்ப மருத்துவர்-நோயாளி உறவை மாற்றும் டிஜிட்டல் சுகாதார தொழில்நுட்பங்கள்
பிரதிநிதித்துவ படம். செய்தி 18
இந்தியாவில், மாறிவரும் வாழ்க்கை முறையின் காரணமாக நாள்பட்ட நோய்கள் அதிகரித்து வருகின்றன, இது சிறப்பு மருத்துவர்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்துகிறது. LASI அறிக்கையின்படி, அதிக கொழுப்பு, நீரிழிவு மற்றும் உடல் உழைப்பின்மை ஆகியவை இருதய-வாஸ்குலர் நோய்களின் நிகழ்வுகளுக்கு முக்கிய ஆபத்து காரணிகளாகும். மேலும், இந்தியா உலகின் நீரிழிவு தலைநகரமாக மாறி வருகிறது மற்றும் அதனுடன்…
View On WordPress
0 notes
📰 'பிரதமர் மோடி சீனாவுக்கு நிலம் கொடுத்தார்': இந்தியாவும் சீனாவும் பிரிந்து செல்லும் நிலையில் ராகுலின் புதிய தாக்குதல்
📰 ‘பிரதமர் மோடி சீனாவுக்கு நிலம் கொடுத்தார்’: இந்தியாவும் சீனாவும் பிரிந்து செல்லும் நிலையில் ராகுலின் புதிய தாக்குதல்
செப்டம்பர் 14, 2022 03:43 PM IST அன்று வெளியிடப்பட்டது
இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி புதிய தாக்குதலைத் தொடங்கினார். 1000 சதுர கிலோமீட்டர் நிலத்தை சீனாவுக்கு பிரதமர் கொடுத்ததாக ராகுல் குற்றம் சாட்டியதோடு, அந்த நிலத்தை எப்படி மீட்பது என்பது குறித்து இந்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளார். கிழக்கு லடாக்கில் உள்ள கோக்ரா – ஹாட் ஸ்பிரிங்ஸில் உள்ள ரோந்துப் புள்ளி-15ல்…
View On WordPress
0 notes
இழப்பீட்டுத் தொகையை உயர்த்தக் கோரி ஃபோர்டு ஊழியர்கள் வேலைநிறுத்தம் | சென்னை செய்திகள்
இழப்பீட்டுத் தொகையை உயர்த்தக் கோரி ஃபோர்டு ஊழியர்கள் வேலைநிறுத்தம் | சென்னை செய்திகள்
சென்னை: என ஃபோர்டு இந்தியாகள் மறைமலை நகர் ஆலை மூடும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால், தொழிலாளர்கள் ஏ வேலைநிறுத்தம் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தக் கோரி. ஊழியர்கள் திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தொழிற்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் – அவர்களில் பாதி கடைத் தளத்திலும், மீதமுள்ளவர்கள் வெளியேயும் உள்ளனர். தொழிற்சங்க வட்டாரங்களின்படி,…
View On WordPress
0 notes
“மைசூர்பாக் ஆகுமா மைசூர்பா”
அப்படியே சாஃப்டா வாயில போட்டா கரையும் யம்மி மைசூர்பா என்று சிலாகிப்பவரா நீங்க? உங்களுக்குன்னே தான் கனியிருப்ப காய் கவர்ந்தற்று என்று 2054 வருடங்களுக்கு முன்பு குமரி முனையில் சிலையாக நிற்பவர் ஒண்ணே முக்கால் அடியில் எழுதி வச்சிட்டு போயிருக்காரு! ஆம்! மைசூர்பா மைசூர்பாக் ஆகாது!
ஏங்க! ஒரு க் தானே வித்யாசம்! இதென்ன புதுப் பொரளியா இருக்கேன்னு உங்க மைண்ட் வாய்ஸை கேட்ச் பண்ணிட்டேன். பொதுவா ஜாங்கிரிக்கும் ஜிலேபிக்கும் வித்தியாசம் தெரியாத மரத்தமிழர்கள் அல்லவா நாம்! மைசூர்பாக் என்னும் ஒரு அற்புத இனிப்பை இவய்ங்க என்ன செஞ்சிவச்சிருகாங்கன்னு கொஞ்சம்..
தெரிஞ்சுக்குவோமா! இன்னிக்கு நாம சாப்பிடுற மைசூர்பா வேற மைசூர்பாக் வேற! மைசூர்பாக்குக்கு என்றே ஒரு நிறம் இருக்கு நடுவில் பிரவுனாவும் மேலும் கீழும் மஞ்சளாவும் இருக்கணும்! சீஸ் கட்டிகளில் இருப்பது போல அதன் மேலே துளைகள் தெரியணும் முக்கியமா அதை முறுக்கு போல கடிச்சி சாப்பிடணும்!
இந்த செய்தி இன்றைய 2k கிட்ஸ்களுக்கு வேடிக்கையா இருக்கும் ஆனா மைசூர்பாக்கின் பக்குவமே அதான்! மைசூர்பாக் சிவாஜி கணேசன் போல பாத்திரத்தில் ஒன்றிவிடும்! ஆம்! கணநேரம் தாமதித்தாலும் சட்டியில் இருந்து அதை உடைச்சு தான் எடுக்கணும்! சிலநேரங்களில் சட்டியையே உடைக்கணும்!
மைசூர்பாக் நெய் மணக்க நான் சொன்ன நடுப்பகுதி பிரவுன் மேலும் கீழும் மஞ்சள் நிறங்கள் மற்றும் ஆறியதும் இறுகும் பதம் ஆகியவற்றிற்கு பயந்து கண்டுபிடிக்கப்பட்டதே இன்றைய மைசூர்பா! புரியறா மாதிரி சொன்னா சோற்றை முக்கால் பதத்தில் வடிப்பது போல! அதை இன்னும் கொஞ்சம் கிளறினால் தான்..
ரியல் மைசூர்பாக் கிடைக்கும்! ஆனால் அந்த இறுகும் பக்குவத்திற்கு பயந்து தான் அந்த முக்கால் பதத்தில் இன்று எடுத்துவிடுகின்றனர்! வாரப் பத்திரிக்கைகளில் கடிச்சா பல் உடையும், உடைக்க சுத்தியல் வேணும், பலகை போல உறுதியா இருக்கும் போன்ற ஜோக்குகள் வர மைசூர்பாக்கே காரணம்!
மைசூர்பாக் கிளறும்போதே கண்ணிமைக்கும் நேரத்தில் பக்குவம் மாறி இறுகிவிடும்! அந்த செய்முறைக்கும், ஜோக் கேலிகளுக்கும் தயங்கியே அந்த காலத்தில் தீபாவளிக்கு வீட்டில் மைசூர்பாக் செய்வதை நாசூக்காக தவிர்த்துவிடுவார்கள்! மைசூர்பாக் செய்முறையிலும் பட்டையைக் கிளப்பும் பெண்கள் உண்டு!
அந்த மைசூர்பாக் சாப்பிடுவதே ஒரு இன்பமயம். அதிலும் அதை சூடா சாப்பிடும் போது ஒரு ருசியிலும் ஆறிப்போனால் இன்னொரு ருசியிலும் இனிக்கும்! சூடா சாப்பிடும் போது அந்த சூடும், வெந்த கடலை மாவும், நெய்யும், சர்க்கரையும் கலந்த ஒரு ருசி உங்கள் வாய்க்குள் பரவும்! அந்த ருசி நிச்சயம் இன்றைய மைசூர்பாவில்..
கோடிகள் கொடுத்தாலும் கிடைக்காது! அதே போல இறுகிய பிறகு கைகளால் விண்டு சாப்பிடும் போது அனுபவிக்கும் ருசியும் மிகவும் அருமையாக இருக்கும்! அந்த காலத்தில் பள்ளிகளுக்கு வெளியே கூட பெட்டிக் கடைகளில் மைசூர்பாக் கிடைக்கும்! ஆனால் அவை அந்த அற்புத அனுபவத்தை தராது!
மைசூர்பாக்கின் மேற்புறத் துளைகள் அதைக் கிளறும் போது அந்த இறுகும் பதம் வரும் போது தெரியும்! அந்த சூட்சுமம் மட்டும் தெரிந்துவிட்டால் போதும்! நீங்கள் மாஸ்டர் தான்! எதுக்கு ரிஸ்க்னு சுகப்பிரசவம் எனும் மைசூர்பாக் செய்முறையை விட்டு விட்டு இன்று சிசேரியனில் பிறந்த மைசூர்பாவை ருசிக்கிறோம்!
எங்காவது அந்த பாரம்பரிய மைசூர்பாக் கிடைக்குதான்னு தேடினா கடல்லியே இல்லியாம் போல கைவிரிக்கிறார்கள்! மைசூர்பாக் கிளற பயந்து மைசூர்பாவா அதைக் கிளறி இதுதான் மைசூர்பான்னு நமக்கு அல்வா தந்துட்டாங்க! ஆமாங்க மறந்துட்டேன் நாம் சாப்பிடும் அல்வாவும் ரியல் அல்வா அல்ல…
விளம்பர இடைவேளைக்குப் பிறகு ….
சேலத்தில் என் தம்பியின் கிச்சனில் இன்றைய மைசூர்பா வகைகள் கிடைக்கிறது! கேரட் மைசூர்பா, ஹார்லிக்ஸ் மைசூர்பா, ஆரஞ்சு மைசூர்பா, மேங்கோ மைசூர்பா, பிஸ்தா மைசூர்பா, முந்திரி மைசூர்பா, நெய் மைசூர்பா என பல வகைகளிலும் பாரம்பரிய மைசூர்பா எனும் சிங்கம் சிங்கிளாவும் கிடைக்கும்!
தீபாவளி, ஆயுதபூஜை ஆர்டர்கள் ஏற்கப்படும் இந்தியா முழுவதும் அனுப்பும் கூரியர் வசதியும் உண்டு.. ஆர்டர்கள் தொடர்புக்கு.. 9047569901
அல்வாவின் சரித்திரம் அடுத்த பதிவாக…
0 notes
சந்தோச செய்தி
HappyNews
IndiaTamilnadu MaduraiVeerapandi
இந்தியா தமிழ்நாடு மதுரை வீரபாண்டி
0 notes
இந்தியா பாலம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 60 பேர் இறந்தனர், பலர் காயமடைந்தனர்
இந்தியா பாலம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 60 பேர் இறந்தனர், பலர் காயமடைந்தனர்
புதுடெல்லி – மேற்கு இந்திய மாநிலமான குஜராத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை கேபிள் பாலம் ஆற்றில் இடிந்து விழுந்ததில் குறைந்தது 60 பேர் இறந்தனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாநிலத்தின் மோர்பி மாவட்டத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மச்சு ஆற்றில் மூழ்கியதாக அதிகாரிகள் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தனர். பாலத்தில் எத்தனை பேர் இருந்தனர்…
View On WordPress
0 notes