#செரிமானம்
Explore tagged Tumblr posts
Text
மாம்பழக் கழிவுகளில் சைலேஜ் செய்வது எப்படி?
மாம்பழ சைலேஜ்:
மாம்பழத்தை கொட்டை நீக்கி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அத்துடன்
100 கிலோவுக்கு 1.0 கிலோ சமையல் உப்பை சேர்த்து கலந்து வழக்கம் போல சைலேஜ் செய்யலாம் அல்லது மாம்பழத்துடன் சமையல் உப்பு, சிறிது மொலாசஸ் மற்றும் யூரியா கலந்து அதை மக்காச்சோள தட்டையுடன் கலந்து
4-5 வாரங்கள் காற்று புகாமல் சேமித்து வைத்து சைலேஜ் செய்யலாம். அஸ்பெரிஜில்லஸ் நைகர் ( Asperigillus niger ) என்ற நுண்ணுயிரை மாம்பழத் தோலுடன் கலந்தால் தரமான சைலேஜ் கிடைக்கும்.
மாம்பழத்தோல்:
கோடை காலம் மாம்பழ சீசன் பருவம். மாம்பழம் பதனிடும் தொழிற்சாலைகள் மாம்பழத்தை வாங்கி பதப்படுத்துகின்றன. மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் மாம்பழத்திலிருந்து சதை பகுதியை பிரித்தெடுத்த பின், அதன் தோல் மற்றும் கொட்டைகள் கழிவாக கிடைக்கின்றன.
சாலை ஓரங்களில் கொட்டப்படும் இந்த கழிவுகளில் ஈரப்பதம் அதிகம் இருக்கும். நாள்பட்ட இந்த கழிவுகளில் சில அமிலங்கள் உற்பத்தியாகி சுற்றுசூழல் பாதிப்பை ஏற்படுத்தும். இதை அந்தப்பகுதியில் மேயும் மாடுகள் உட்கொண்டால் மாடுகளில் அமிலத்தன்மை ஏற்படும்.
மாம்பழத்தோலில் சுமார் 10-14 % வரை சதை பகுதி ஒட்டிக்கொண்டிருப்பதால் அதில் சர்க்கரை சத்து அதிகம் இருக்கும். எரிச்சத்து மிகுந்த இந்த சர்க்கரை சத்து மற்றும் தோலில் இருக்கும் நார்ச்சத்துக்களை உபயோகப்படுத்தும் வகையில் கால்நடை தீவனமாக இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதை நன்கு உலரவைத்து அரைத்து வைத்துக் கொண்டால் கலப்பு தீவனத்தில் சேர்தளிக்கலாம்.
மாம்பழத்தோலில் உலர்நிலையில் புரதம் 4.6%, நார்12.6% ,NDF நார் 35.5% , ADF நார் 17.3% , கொழுப்பு 3.8% , சுண்ணாம்புச்சத்து 8.1% மற்றும் பாஸ்பரஸ் சத்து 2.8% உள்ளது. இத���் தோல் மாடுகளில் சுமார் 74% வரை செரிமானம் ஆகிறது.
மாம்பழத்தோலில் சுண்ணாம்பு சத்து மிக அதிகமாகவும், பாஸ்பரஸ் சத்து குறைவாகவும் உள்ளதால் மாடுகளில் சுண்ணாம்பு சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் மாம்பழத் தோலை தீவனமாக அளித்தால், மறக்காமல் ��ோதுமை தவிடு அல்லது அரிசி தவிடை தீவனத்தில் சேர்த்து அளிக்க வேண்டும்.
மாம்பழத்தோலில் ஈரப்பதம் 70-75% இருப்பதால் மாடுகள் இதை உட்கொள்ளாது. அதனால் ஈரப்பதம் மிக குறைவாக உள்ள பிற தீவனங்களை இத்துடன் சேர்க்க வேண்டும். இதை தவிர புரதச்சத்து மிக குறைவாகவும் இருப்பதால் புரதச்சத்தை அதிகரிக்க யூரியாவை சேர்த்து சைலேஜ் செய்ய வேண்டும்.
மாம்பழத்தோலுடன் ஈரப்பதம் குறைந்த தீவனங்களை உதாரணமாக குச்சிக்கிழங்குதிப்பி, தவிடு போன்றவற்றை சேர்த்து பயன்படுத்த வேண்டும்.
சுமார் 60 கிலோ மாம்பழத்தோலுடன் 40 கிலோ குச்சிக்கிழங்கு திப்பியை நன்கு கலந்தால், இந்த கலவையின் ஈரப்பதம் மாடுகள் உட்கொள்ள ஏற்ற அளவுக்கு குறைந்துவிடும். இந்த கலவையில் செரிக்கக் கூடிய புரதம் 2.0%மும், மொத்த செரிமான ஊட்டச்சத்துக்கள் 57%மும் இருக்கும். சர்க்கரை சத்து அதிகம் உள்ள மாம்பழத் தோலை மட்டும் உட்கொள்வதால் ஏற்படும் அமிலத் தன்மையை குச்சிக்கிழங்கு திப்பியை சேர்ப்பதால் தவிர்த்து விடலாம்.
மாம்பழத் தோல் சைலேஜ்:
மாம்பழத் தோலை முதலில் பிளாஸ்டிக் விரிப்பின் மேல் நன்கு பரப்பி ஒரு நாள் முழுவதும் உலர வைத்து, அதில் இருக்கும் 78% ஈரப்பதத்தை 30%மாக குறைக்க வேண்டும். இத்துடன் சமையல் உப்பை மட்டும் சேர்த்து வழக்கம் போல காற்று
புகாமல் 42 நாட்கள் மூடி வைத்து தரமான சைலேஜ் செய்ய முடியும். இத்துடன் யூரியாவை சேர்த்தோ அல்லது சேர்க்காமாலோ சைலேஜ் செய்யலாம். யூரியா சேர்க்கப்பட்டால் மாடுகளுக்கு கிடைக்கும் புரதச்சத்தின் அளவு அதிகரிக்கும்.
கம்பு –நேப்பியர் வீரிய ஒட்டுப் புல்லுடன் மாம்பழத் தோல் சைலேஜ்:
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழகத்தில் மாம்பழத் தோலை சைலேஜ் செய்யும் முறை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கம்பு- நேப்பியர் வீரிய ஒட்டுப் புல்லுடன் மாம்பழத் தோலை 10% சேர்த்து சுவைக்காக சமையல் உப்பு 1% கலந்து 5 -6 வாரங்கள் காற்று புகாமல் மூடிவைத்து சைலேஜ் செய்யலாம். இதில் சர்க்கரைச்சத்து அதிகம் இருப்பதால் சர்க்கரை பாகு சேர்க்க வேண்டியதில்லை.
இந்த சைலேஜில் செரிக்கக்கூடிய புரதம் 3.9% வரையும் மொத்த செரிமான ஊட்ட சத்துக்கள் 52.7% வரையும் இருக்கும். செம்மறி ஆடுகளுக்கு இதை நார்ச்சத்து கொண்ட தீவனமாக வழக்கமாக அளிக்கப்படும் தீவனத்துடன் ஒப்பிட்டு ஆராய்ந்தபொழுது, ஆடுகள் உட்கொண்ட மொத்த தீவன அளவிலோ, ஆடுகளின் வளர்ச்சியிலோ எந்தவித குறிப்பிடத்தக்க மாற்றமும் ஏற்படவில்லை. இந்த தீவனம் ஆடுகளில் எந்த பக்கவிளைவையும் ஏற்படுத்தவில்லை. அதே சமயம் ஆடுகளுக்கு அளிக்கப்பட பசும்புல் 10% வரை சேமிக்கப்பட்டது.
ஒரு ஆய்வில் மாம்பழத்தோல் ஒரு நாள் வரை வெயிலில் உலர வைக்கப்பட்டு யூரியாவுடன் சேர்த்து சைலேஜ் செய்யப்பட்டது. இந்த சைலேஜை வளர்ந்த கிடாரிகளுக்கு தீவனமாக அளித்த பொழுது தீவனம் உட்கொண்ட அளவும் கிடேரிகளில் வளர்ச்சியும் அதிகரித்தன.
கிடேரிகளின் மொத்த தீவனத்தில் 30% மாம்பழத்தோல் சைலேஜ் சேர்த்த பொழுது மொத்த தீவன தரம் மற்றும் தீவனத்தில் இருந்த மொத்த நார்ச்சத்தின் தரம் சுமார் 5.5% அதிகரித்த��ு.
ஒரு ஆய்வில் வைக்கோல் அளிக்கப்பட்ட ஆடுகளின் தீவனத்தில் மாம்பழத் தோலை மட்டுமே அளிப்பதை விட அத்துடன் 10% மாம்பழ கொட்டை பருப்புடன் யூரியாவை சேர்த்தளித்த பொழுது செம்மறி ஆடுகள் தினசரி 50 கிராம் வளர்ச்சி அடைந்தன என்று அறியப்பட்டது. யூரியாவுக்கு பதில் யூரியா மொலாஸஸ் தீவன கட்டியை அளிக்கலாம்.
சைலேஜ் செய்ய வெல்லப்பாகுக்கு மாற்றாக மாம்பழத்தோலை பயன்படுத்த முடியும். ஒரு ஆய்வில் வாழைப்பழத் தோலை சைலேஜ் செய்ய மொலாசஸ் அல்லது அதற்கு மாற்றாக மாம்பழத்தோல் பயன்படுத்தப்பட்டது. இந்த சைலேஜுகள் மேயும் செம்மறி ஆடுகளுக்கு அளித்து ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வு முடிவில் வாழைப்பழத் தோலுடன் மாம்பழத்தோல் சேர்த்து செய்யப்பட்ட சைலேஜ் உட்கொண்ட ஆடுகளின் உடல் வளர்ச்சி வாழைப்பழத் தோலுடன் மொலாசஸ் சேர்த்து செய்யப்பட்ட சைலேஜ் உட்கொண்ட ஆடுகளின் உடல் வளர்ச்சிக்கு இணையாக இருந்தது.
பின்னொரு ஆய்வில் மாம்பழத்தோல் கழிவுடன் கூடுதல் எரிச்சத்திற்காக தீவனத்தில் தானியங்கள் 10 % சேர்த்து அளிக்கப்பட்டது. இதை வைக்கோல் மற்றும் யூரியா கலந்த தீவனமாக உட்கொண்ட செம்மறி ஆடுகளில் வளர்ச்சி கூடுதலாக இருந்ததாக பதிவு செய்யப்பட்டது.
மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்��ோடு பண்ணுங்க, நன்றி. யுவர்பார்ம் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-tn-may15-blogger கால்நடை வளர்ப்பு பற்றி தகவல்களை பெற யுவர்பார்ம் வாட்சப் சேனலுடன் இணைந்திடுங்கள்: https://whatsapp.com/channel/0029VaNRo3KDzgT49lgkAZ31
0 notes
Text
#நோட்டு_அடித்ததை_நோட்டம்_விட்டோம்
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திற்கு சென்றிருந்த போது டாலஸில் நண்பர் சவுந்தர் வீட்டில் தங்கியிருந்தோம்! இந்த ஊரில் சுற்றிப் பார்க்க முக்கியமான இடங்கள் என்னென்ன? எனக் கேட்டபோது அமெரிக்க டாலர் நோட்டு ப்ரிண்ட் பண்ற ப்ரஸ் இங்க தான் இருக்கு பார்க்குறிங்களா என்றார். கண்கள் விரிய அங்க எல்லாம் பப்ளிக் அலவ் பண்றாங்களா என்றோம் வியப்புடன்.!
ஆம் என்றவர் அன்று காலையே நண்பர் நந்தாவுடன் எங்களை அனுப்பி வைத்தார். தீபாவளி பட்டாசை கையில் கொடுத்துவிட்டு சத்தமில்லாம வெடிங்க என்று சொல்வது போல வாசலில் இருந்த செக்யூரிட்டி முக்கியமாக உள்ளே காமிரா செல்போனுக்கு அனுமதி இல்லை என்றார்! கட்டிடத்தின் நான்கு புறமும் இரும்பு வேலிகளில் ஹைவோல்டேஜ் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்க மெயின்..
பில்டிங்கிற்கும் ரிசப்ஷனுக்கும் இடையே ஒரு சேப்பாக்கம் கிரவுண்ட்டே கட்டலாம். ரிசப்ஷன் மெட்டல் ஸ்கேனர் எங்களை கற்பழித்து புனிதமானவர்கள் என சான்றிதழ் ��ளிக்க உள்ளே அனுமதிக்கப் பட்டோம். உள்ளே சென்று ஒரு பஸ் ஸ்டாப்பில் நின்ற 35 விநாடி பேட்டரி கார் வந்தது.. வெளுத்த வெள்ளரிப்பழ நிறத்தில் போலீஸ் சீருடையில் ஒரு பெண்மணி கண்ணிலேயே சிரித்து..
வரவேற்று வண்டியேற்றினார்! 5 நிமிட பிரயாணம் மெயின் பில்டிங் உள்ளே மீண்டும் மெட்டல் யாக குண்டத்தில் இறங்கி எங்களை நிரூபித்து உள்ளே நுழைந்தோம்! முதலில் இருந்தது இன்பர்மேஷன் சென்டர், அங்கு டாலர்கள் பற்றிய அழகிய ப்ரவுஷர்களை அச்சிட்டு வைத்திருந்தனர்! அவை இலவசம் தான் எடுத்துக் கொண்டோம். அடுத்து டாலர்களின் புகைப்பட கண்காட்சி மற்றும் டாலர் தாள்களின்,
பிளாக்குகள் டாலரில் உள்ள வாட்டர் மார்க்குகள் டாலர் நோட்டின் சீரியல் எண்கள் இவற்றின் மாதிரிகளை கண்டோம். சிலவற்றை டச் ஸ்க்ரீனில் டச் செய்து நாமே பார்க்கும் வசதி இருந்தது அடுத்து டாலர் நோட்டு பற்றிய விநோத செய்திகள் அரங்கு. அமெரிக்காவில் மட்டுமே டாலரை கிழித்து தந்தாலும் செல்லும்! ஒரு மாடு விவசாயியின் 6000 டாலர்களை தின்றுவிட அந்த மாட்டை வெட்டி அதன் வயிற்றில்..
சரியாக செரிமானம் ஆகாமலிருந்த நோட்டுகளை சரிபார்த்து அந்த விவசாயிக்கு 5000 டாலர்களை திருப்பித் தந்த செய்தி ஆச்சர்யமாக இருந்தது! தீ விபத்தில் பாதி எரிந்த நோட்டுகள், முழுதும் கருகியவை கரையான் அரித்த நோட்டுகள், மழை வெள்ளத்தில் ஊறிய நோட்டுகள் இப்படி எந்த நிலையில் பணம் தந்தாலும் அதற்கு நிகரான டாலராக மாற்றித் தருகிறார்கள். அவர்கள் பணம் எந்நிலையிலும் மதிப்பு..
மாறாத பணம் அடுத்து டாலர் ப்ரிண்ட்டிங் செய்யும் ப்ரஸ்! இங்கு நுழைபவர்களுக்கு ஒரு வாக்கி டாக்கி தரப்படுகிறது அதில் ஆங்கிலம், ஸ்பானிஷ், சீனம் முதலான 8 மொழிகளில் அறிவிப்பு வரும். குறிப்பிட்ட இடத்தில் போய் நின்று அங்கு அறிவிப்பு பலகையில் உள்ள மொழியின் எண்ணை வாக்கி டாக்கியில் அழுத்தினால் அந்த இடத்தைப் பற்றிய அறிவிப்பை அந்த மொழியில்..
வாக்கி டாக்கியில் கேட்கலாம் டாலர் ப்ரிண்ட் செய்யும் இடத்தை கழுகுப் பார்வையில் பார்க்கும் படி ஏற்பாடு! புல்லட் ஃப்ரூப் கண்ணாடிகள் வழியாக துல்லியமாக தெரிந்தது. உலகின் மதிப்பு மிக்க பணம் அங்கு ஷீட் ஷீட்டாக ப்ரிண்ட் ஆகி தனித்தனியாக கட் செய்து மிஷின் மூலம் கட்டுகளாகியது. ஒரு இடத்தில் இருந்த சிறிய குவியலில் நீங்கள் பார்க்கும் டாலர் குவியல் 16 மில்லியன் என..
டாப் ஆங்கிளிலிருந்து நாம் படிக்கும்படி எழுதியிருந்தனர். லட்சகணக்கில் அடிக்கும் கட்சி போஸ்டர்கள் போல பணம் அச்சடிக்கப்பட்டு அதை குவியல் குவியலாக அடுக்கியிருந்தனர்! அமெரிக்காவில் இரண்டு இடங்களில் மட்டுமே டாலர் அச்சிடப்படுகிறதாம் ��ன்று வாஷிங்டன் இன்னொன்று டாலஸ்! பலவிதமான வாட்டர் மார்க் நுணுக்கமான எண்கள் குறியீடுகள்..
எல்லாம் ஒவ்வொரு செக்ஷனில் பூர்த்தியாக இறுதியில் கட்டுகளாகிறது.பிறகு டாலர் பற்றி ஒரு திரைப்பட காட்சியையும் பார்த்து விட்டு வெளியேறினால் டாலர் கிஃப்ட் ஷாப்! வித விதமான கீ செயின்கள், போஸ்டர்கள், டேபிள் வெயிட்டுகள், பொம்மைகள் எல்லாம் டாலர் படம் போட்டு ஒரு புறம் ப்ரிண்ட் ஆன டாலர் ஷீட் கூட விற்றார்கள்.. ஞாபகத்துக்கு ஒரு போஸ்டர் மட்டும் வாங்கினேன்.
இந்த இடத்தை பற்றி ஃபேஸ்புக்கில் எழுதப் போவதால் சில புகைப் படங்கள் எடுத்துக் கொள்ளலாமா என செக்யூரிட்டி அதிகாரியிடம் பணிவோடு கேட்டேன். அதற்கு அவர் கஞ்சா கருப்புவை பார்த்த வீனஸ் வில்லியம்ஸ் பார்வையில் என்னை பார்த்து அதோ தூரத்தில் (சுமார் 2கி.மீ) இருக்கும் நுழைவு வாயிலில் போட்டோ எடுத்துக் கொள் என்றார் வெகு அலட்சியமாக! கண்ணால் சிரித்த கண்ணழகி..
மெரிலின் தான் இந்த பிரஸ் பற்றி கூகுளில் போட்டோக்கள் கிடைக்கும் என்று! அவர் சொன்னதன்படி இங்கே எடுத்து பதிவிட்டு உள்ளேன்! வாசலில் நாங்கள் போட்டோ எடுத்துக் கொண்டோம்! மெரிலினோடு போட்டோ எடுக்க முடியவில்லை டாலர் பற்றி எழுத உதவி செய்த அவருக்கு அடுத்த முறை மீனாட்சி அம்மன் கோவில் டாலரை நேரில் பரிசளிக்க அந்த மீனாட்சி தான் அருள வேண்டும்!










0 notes
Text

நண்பர்கள், தோழர்கள், நலம் விரும்பிகள் மற்றும் உலகெங்கும் உள்ள தமிழ் உள்ளங்களுக்கு, உங்களுடைய wellness குருஜி உடைய, அன்பான காலை வணக்கங்கள்.
தலைமுடியுடைய, குறைகிறது, அப்படிங்கிற ஒரு, யாராவது ஒருத்தர் வந்து, என்னப்பா, உனக்கு தலைமுடி எல்லாம், குறைஞ்சு போச்சு? தலை சொட்டை ஆயிடுச்சு, அப்படின்னு, ஒரு வார்த்தை கேட்டாலே, அதோட, நம்முடைய தன்னம்பிக்கையே, குறைந்து போய் விடுவதை, பார்க்கிறோம். அதே போல, நிறைய நிறுவனங்கள்ல, வேலை பார்க்கக்கூடிய, குறிப்பாக, மேல் அதிகாரிகளாக இருக்கக்கூடிய, அந்த பெண் ஆண் அதிகாரிகள், அவர்களுடைய தோற்றமும், அவர்களுடைய வேலைக்கும், அவர்களுடைய உத்தரவாதத்திற்கும், மிகப்பெரிய அளவு, முக்கியத்துவம் வலிக்கிறது, அப்படிங்கிறதுனால, அழகுக்காக, இன்றைக்கு, நிறைய போராடுபவர்களை, நினைக்கிறோம். ஆனால், இந்த தலைமுடி சார்ந்த சிரமங்கள் ஏற்படும்போது மட்டும், நம்ம எல்லாருக்குமே, ஒரு மிகப்பெரிய குழப்பம். இந்த தலைமுடிக்காக, நான் மருந்து சாப்பிடுறேன். தேங்காய் எண்ணெய் போடுறேன். விலையுயர்ந்த, தலைமுடியை, வளர வைக்கக்கூடிய எண்ணெய்களை, நான் பயன்படுத்துறேன். ஆனாலும், எனக்கு தலைமுடி சார்ந்த, சிரமம் தீருவதே இல்லை. தலைமுடி, நாளுக்கு நாள் குறைகிறது. செயற்கை முறை, தலைமுடியை, சொருகி வளர வைக்கக்கூடிய, செயற்கை முறை, முடி வளர்க்கக்கூடிய சிகிச்சைக்கு கூட, போயாகிவிட்டது, sir. ஆனாலும், எனக்கு பலன் இல்லைன்னு சொல்லக்கூடிய, நிறைய பேரை, நான் பார்க்கிறேன். ஏன்னா, தலைமுடி பிரச்சனையை, வெறும் தலைமுடி பிரச்சனையாக, பார்க்கின்ற வரை, நமக்கு, அதில், தீர்வு கிடையாது.
FULL LINK - https://fb.watch/qKdajrWu1W/
தலைமுடி கொட்டுதல், தலைமுடி குறைதல், உடைதல், பொடுகு, இது எல்லாமே, உடலில் இருக்கக்கூடிய செரிமானம், எலும்பு மண்டலம், மற்றும், ரத்த மண்டலம், இந்த மூன்று மண்டலங்கள்ல, இருக்கக்கூடிய, பலவீனம் சார்ந்த நோய், அப்படிங்கிறதை, நம்ம யார��ம், புரிஞ்சுக்கிறது இல்ல. இந்த பலவீனத்தை, மாற்றினால் ஒழிய, தலைமுடி சார்ந்த, சிரமங்களையோ, இளநரையையோ, மாற்றுவது, முடியாத விஷயம். அந்த வகையில, தலைமுடியை ஆரோக்கியமாக வளர வைப்பதற்கும், தலைமுடி சார்ந்த சிரமங்கள் வராமல் இருப்பதற்கும், இளநரையோ, இளவயதிலேயே முடி கொட்டி விட்டதுங்கிற கவலை இல்லாமல் இருப்பதற்கும், உதவி செய்யக்கூடிய, #தலைமுடிவளரகசாயம் ன்னு சொல்லக்கூடிய, ஒரு அழகான ��ருமருந்தை பற்றிதான், இன்றைக்கு உங்களோடு, நான் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.
இந்த கஷாயம், செய்ய தேவையான பொருட்கள் என்னங்கிறதை, விவரமாக இப்ப நம்ம பார்ப்போம். #தலைமுடி வளர கஷாயம், செய்ய தேவையான பொருட்கள், #முதியோர்கூந்தல், #வெற்றிலை, #தாழை, #கையாந்தகரை, தலைமுடி ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, செரிமான மண்டலத்தை பலப்படுத்தி, அதனால் உருவாகின்ற ரத்த அணுக்களை சீர்படுத்தி, எலும்பு மண்டலத்தை பலப்படுத்தி, நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய, தலைமுடி வளர கஷாயம் எவ்வாறு செய்வதுன்னு பார்ப்போம்.
Wellness Guruji Dr Gowthaman
SHREEVARMA Ayurveda Hospitals
099526 66359 / 04446094900
www.drgowthaman.com
www.shreevarma.online
#wellnessgurujicamps #wellnessgurujitips #wellnessguruji #wellbeing #Shreevarma #DrGowthaman #shreevarmaayurveda #hairfashion #HairFall #hairfallcontrolchallenge #hairfallsolution #Hairsalon #hairtransformation #hairfashion #keshyamruth
0 notes
Text
சாப்பிட்டவுடன் குளிக்க கூடாது ஏன் தெரியுமா?
இரப்பையில் உணவானது செரிமானம் செய்ய நொதிகள் சுரக்கிறது. செரிமான மண்டலம் செயல்படத் தொடங்குகிறது. மேலும் அச்சமயத்தில் இரத்த ஓட்டமும் இரப்பை பகுதிக்கு அதிகரிக்கிறது.
ஏனெனில் குடல் உறிஞ்சுகள் மூலம் நாம் சாப்பிட்ட உணவிலிருந்து சத்துகளை இரத்தமானது எடுத்துச் செல்லும் பொருட்டு. தோல் மற்றும் பிற உறுப்புகளுக்கும் செல்ல ஆரம்பிக்கும்.
அதனால் செரிமான பிரச்னையும், உடலில் படபடப்பும் ஏற்படலாம். இந்த நொதிகள் அதிகம் சுரக்கும் நேரமும், வயிற்று பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும் நேரமும் உணவு செரிமானம் நடைபெறும் சமயத்தில் நிகழ்கிறது.
0 notes
Text
முள்ளங்கி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
தாது உப்புக்களான கால்சியம், காப்பர், இரும்புச் சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம், பொட்டாசியம் போன்றவை உள்ளன.
மேலும் இதில் குறைந்த எரிசக்தி, கார்போ ஹைட்ரேட், புரதச்சத்து, அதிகளவு நார்சத்து போன்றவை காணப்படுகின்றன.
முள்ளங்கியை உண்ணும் போது அவை குறைந்த அளவு எரிசக்தியுடன் வயிறு நிரம்பிய உணர்வினை ஏற்படுத்துகின்றது. இக்காயில் நார்சத்து மற்றும் அதிகளவு நீர்ச்சத்தும் உள்ளது.
எனவே உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு இக்காய் சிறந்த தேர்வாகும். முள்ளங்கியில் அதிக ஊட்டச்சத்துகள் உள்ளது. முள்ளங்கி வாசம் சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம்.
ஆனால் அதில் அடங்கியுள்ள மருத்துவ குணங்களைக் கேட்டால் நிச்சயம் பிடிக்கும். முள்ளங்கியில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. இதனால் செரிமானம் மேம்படும்.
0 notes
Text
#Acidity#acidity problem medicines tamil#acidity problems#digestion#Hydrochloric acid#nenju erichal#stress#tamil medicines for acidity#ஆரோக்கியமான உணவுகள்#ஆரோக்கியம்#உடற்பயிற்சி#எதுகளித்தல்#ஏப்பம்#செரிமான கோளாறு#செரிமானம்#நெஞ்செரிச்சல்#நெஞ்செரிச்சல் சரியாக மருந்துகள்#நெஞ்செரிவு#மருத்துவம்#தமிழ்செய்திகள்
0 notes
Text
0 notes
Photo

1. உடல் - உணவை கேட்கும் மொழி - பசி 2. உடல் - தண்ணீரை கேட்கும் மொழி - தாகம் 3. உடல் - ஓய்வை கேட்கும் மொழி - சோர்வு, தலைவலி 4. உடல் - நுரையீரலை தூய்மை செய்யும் மொழி - தும்மல், சளி, இருமல். 5. உடல் - உச்சி முதல் பாதம் வரை உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - காய்ச்சல் 6. உடல் - காய்ச்சலின் போது உணவை உண்ணாதே என்று சொல்லும் மொழி - வாய் கசப்பு மற்றும் பசியின்மை 7. உடல் - காய்ச்சலின் போது நான் உடலை தூய்மை செய்கிறேன், நீ எந்த வேலையும் செய்யாதே என்று சொல்லும் மொழி - உடல் அசதி 8. உடல் - எனக்கு செரிமானம் ஆகாத உணவை நான் வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வாந்தி 9. உடல் - நான் குடல்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - பேதி 10. உடல் - இரத்தத்தில் உள்ள நச்சை நான் தோல் வழியாக வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வியர்வை 11.. உடல் - நான் வெப்பநிலையை சீர் செய்து இரத்தத்தில் உள்ள நச்சை முறிக்கப்போகிறேன் என்று சொல்லும் மொழி - உறக்கம் 12. உடல் - நான் முறித்த நச்சை இதோ வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - சிறுநீர் கழித்த��் 13. உடல் - உணவில் உள்ள சத்தை பிரித்து இரத்தத்தில் கலந்து, சக்கையை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - மலம் கழித்தல் எனவே நாம் அனைவரும் உடலின் மொழி அறிந்து, நமக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் அதை உடனே மருந்தோ, மாத்திரையோ கொண்டு தடை செய்ய வேண்டாம். உடல் தன் வேலையை சீராக செய்ய நாம் அனுமதித்தால் தான், நாம் நோய் எனும் பிணியில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும். நாம் அனைவரும் முதலில் நம் உடலை நேசிப்போம், நம் உடல் உள் உறுப்புகளை நேசிப்போம், நாம் நம்மை நேசிப்போம். நாம் வெளி உறுப்புகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ, அதே அளவிற்கு நம் உள் உறுப்புகளின் உணர்வுகளும், மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நாம் ஆரோக்கியமாகவும், அழகான தோற்றத்துடனும் இருக்க முடியும். #நம்_உடலை_நேசிப்போம்! (at Chennai, India) https://www.instagram.com/p/CLLvdn_BzKU/?igshid=1mgq5qou62t3
1 note
·
View note
Text
நாம் உண்ணும் உணவு நம் உடலில் எப்படி செரிமானம் ஆகிறது?
நாம் உண்ணும் உணவு நம் உடலில் எப்படி செரிமானம் ஆகிறது?
நமது செரிமான மண்டலம் ஒரு விந்தையான உறுப்பு எனலாம். உதட்டிலிருந்து தொடங்கி ஆசனவாயில் வரை நீளும் நமது செரிமான மண்டலத்தின் நீளம் எவ்வளவு தெரியுமா? சுமார் இருபத்தெட்டு அடி நீளம் கொண்ட செரிமான பாதை (Digestive Tract) ஆகும். உணவு மற்றும் திரவங்கள் இந்த செரிமானப் பாதை வாயிலாகக் கடந்து சென்று செரித்த பின்னர் சத்துக்களாக மாற்றப்பட்டு இரத்த ஓட்டத்தில் கலக்கின்றன. இப்பாதையின் வாயிலாகவே கழிவுகளும்…
View On WordPress
0 notes
Text
நெஞ்சின் மேல் கற்பூரத்தை வைத்து தூங்குவதால் இவ்வளவு நன்மைகளா……? வாய் பிளக்க வைக்கும் அறிவியல் உண்மைகள்………
நெஞ்சின் மேல் கற்பூரத்தை வைத்து தூங்குவதால் இவ்வளவு நன்மைகளா……? வாய் பிளக்க வைக்கும் அறிவியல் உண்மைகள்……… #செரிமானம் #gas #கற்பூரம் #ut #utlifestyle #tamilnews #universaltamil
கற்பூரத்தை நாம் ஆன்மீகப் பொருளாகத்தான் பார்க்கிறோம். ஆனால், இதில் அடங்கியிருக்கும் நன்மைகள் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்.கற்பூரத்தில் நன்மை வாசனையே சுவாசத்திற்கு நல்லது. சிலருக்கு கற்பூரம் நேரடியாக சருமத்தில் படும் போது சரும கோளாறுகள் உண்டாகலாம்.
அதனால், இதை ஒரு சிறு துணியில் கட்டி, கயிற்றில் கோர்த்து கழுத்தில் தொங்கவிட்டு பய��்படுத்தலாம்.இரவு முழுவதும் கற்பூரத்தை இதயத்தில் கட்டி உறங்குவதால்…
View On WordPress
0 notes
Text
கால்நடைகளுக்கு அன்னாசி பழக் கழிவை தீவனமாக கொடுக்கலாமா?
ஒரு அன்னாசி பழத்தில் சுமார் 30% மட்டுமே நாம் சாப்பிட ஏற்புடையது. மீதமுள்ள 70% கழிவாக கிடைக்கின்றது. இந்த பழக் கழிவில் சுமார் 65-70% வரை ஈரப்பதமும் 50% மேல் சர்க்கரை சத்தும் உள்ளது. இதன் காரணமாக இந்த பழக் கழிவை இரண்டு நாட்களுக்கு மேல் சேமித்து வைக்க முடியாது.
இதில் சர்க்கரைச்சத்து இயல்பாகவே அதிகம் உள்ளதால் எளிதாக சைலேஜ் முறையில் பதப்படுத்தி சேமிக்க முடியும். இதில் சர்க்கரைச்சத்து நிரம்பி உள்ளதால் சைலேஜ் செய்யும் பொழுது வெல்லப்பாகு அல்லது வெல்லம் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
இலையோடு கூடிய மேல்பகுதி, பழத்தோல் மற்றும் சக்கையை கொண்டது தான் அன்னாசி பழ கழிவு. அன்னாசிப்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் இதை கழிவாக கொட்டி வைத்திருப்பார்கள். இந்த கோடையிலும் எல்லா ஊர்களிலும் அன்னாசி பழச்சாறு கடைகளில் இந்த கழிவு கிடைக்கின்றது.
இதில் சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் மிக சரியான விகிதத்தில் உள்ளது. நோய் எதிர்ப்பு சத்தை அதிகரிக்கும் துத்தநாகம் மற்றும் செலினியம் தாதுசத்து நிரம்பியது.இந்த கழிவை கொண்டு தரமான சைலேஜ் செய்து கால்நடைகளுக்கு தீவனம் அளிக்கலாம்.
அன்னாசி பழக் கழிவு சைலேஜ்: இந்த கழிவை மண் நீங்க நன்கு நீரில் அலசி தீவன புல்வெட்டும் கருவி கொண்டு 1-2 அங்குல அளவில் வெட்டி சிறிது நேரம் வெயிலில் உலர்த்தி அதில் இருக்கும் ஈரப்பதத்தை 60% அளவுக்கு குறைக்க வேண்டும். பின்பு பசும் புல்லைக்கொண்டு சைலேஜ் செய்யும் அதே முறையில் மொலாசஸ் ச���ர்க்காமல் சமையல் உப்பு மட்டும் தெளித்து கழிவை நன்கு மிதித்து அதன் இடையே இருக்கும் காற்றை அகற்றி, மண் கொண்டு மூடி காற்று புகாமல் 20 நாட்கள் வரை வைத்திருந்தால் நல்ல சைலேஜ் கிடைக்கும். நீங்கள் சைலேஜ் செய்யும் இந்த கழிவில் இலையோடு கூடிய மேல்பகுதி 4 பங்கும் மீதமுள்ள கழிவுகள் 1 பங்கும் இருந்தால் சைலேஜ் இன்னும் தரமுடன் இருக்கும். சைலேஜ் குழி வெட்ட முடியாதவர்கள் 50 கிலோ கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் ட்ரம்களை பயன்படுத்தலாம்.
அன்னாசி பழக் கழிவு சைலேஜில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மக்காச்சோள தீவன புல்லுக்கு இணையாக உள்ளன.
ஒரு ஆய்வில் இதை கலப்பு தீவனத்துடன் வழக்கம் போல சேர்த்தளித்த பொழுது பால் உற்பத்தி நாள் ஒன்றுக்கு 2-3 கிலோ வரை அதிகரித்தது.
அன்னாசி பழக் கழிவில் இருக்கும் நார்ச்சத்தின் நீளம் பிற தீவனங்களில்
( நேப்பியர் புல்லைவிட) இருக்கும் நார்ச்சத்தின் நீளத்தை விட குறைவாக இருப்பதால் அன்னாசிப்பழக்கழிவு மாடுகளின் குடலில் சற்று வேகமாக நகர்ந்து, அதனால் மாடுகள் இந்த கழிவை அதிகமாக உட்கொள்ளும். அதே சமயம் இந்த கழிவின் செரிமானம் குறைந்தாலும் மாடுகளுக்கு இந்த கழிவின் மூலம் கிடைக்கும் மொத்த செரிமான ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கும்.
இதை தவிர அன்னாசி பழக்கழிவில் ப்ரோடியெஸ் ( Protease ) என்ற நொதி
( Enzyme ) இயல்பாகவே உள்ளதால் அது இந்த பழக்கழிவில் இருக்கும் புரதத்தின் செரிமானத்தை அதிகரிக்கும்.
அன்னாசி பழக்கழிவில் இருக்கும் ப்ரோமிலெய்ன் ( Promilein ) எனப்படும் மற்றொரு நொதி மாடுகளின் குடல் ஆரோக்கியத்தை பலப்படுத்தும்.
ஒரு ஆய்வில் நேப்பியர் புல்லுடன் அன்னாசி பழக்கழிவை சேர்த்து சைலேஜ் தயாரித்து மாடுகளுக்கு அளித்தபொழுது மொத்த சைலேஜின் செரிமானம் அதிகரித்தது..
வெள்ளாடுகளின் தீவனத்தில் 10% அளவுக்கு அன்னாசி பழ கழிவை ஈஸ்ட்டுடன் சேர்த்து அளித்தபொழுது ஆடுகளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது. அது மட்டுமின்றி ஆடுகளுக்கு பசும்புல்லுக்கு மாற்றாக அன்னாசி பழ கழிவை பயன்படுத்தலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது
இந்த சைலேஜுடன் கலப்பு தீவனமும் சேர்த்து செம்மறி ஆடுகளுக்கு தீவனம் அளித்த பொழுது ஆடுகள் நாள் ஒன்றுக்கு 140 கிராம் வரை வளர்ச்சி அடைந்தன எனவும், இதை உட்கொள்வதால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை எனவும் பதிவு செய்யப்பட்டுள்ளது .
ஒரு ஆய்வில் நேப்பியர் புல் சைலேஜ், அன்னாசிப்பழ சைலேஜ் மற்றும் கலப்பு தீவனம் மாடுகளுக்கு அளிக்கப்பட்டது அதன் முடிவுகள் கீழே அளிக்கப்பட்டுள்ளன.
அதே போல கறவை மாடுகளுக்கு இதை தீவன மக்காச்சோள புல்லுக்கு மாற்றாக கலப்பு தீவனத்துடன் சேர்த்தளித்த பொழுது பால் தினசரி உற்பத்தி 20% வரையும், பாலில் கொழுப்புச்சத்து 0.6% அளவும் அதிகரித்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது .
முடிவாக….
அன்னாசி பழக் கழிவில் சுமார் 50% மேல் சர்க்கரை சத்து உள்ளது. இதில் சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் மிக சரியான விகிதத்தில் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துத்தநாகம் மற்றும் செலினியம் தாதுச்சத்து நிரம்பியது.
இந்த பழக் கழிவை இரண்டு நாட்களுக்கு மேல் சேமித்து வைக்க முடியாது. இதில் சர்க்கரைச்சத்து இயல்பாகவே அதிகம் உள்ளதால் எளிதாக சைலேஜ் முறையில் பதப்படுத்தி சேமிக்க முடியும்.
அன்னாசி பழக் கழிவு சைலேஜில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மக்காச்சோள தீவனப்புல்லுக்கு இணையாக உள்ளன.
இந்த கழிவ�� நன்கு உலர வைத்து மாடுகளின் கலப்பு தீவனத்தில் 10-15% சேர்த்து கலப்பு தீவனத்தை சேமிக்கலாம்.
கம்பு நேப்பியர் வீரிய புற்களுடன் கலந்து சைலேஜ் செய்யலாம். 45% கம்பு நேப்பியர் வீரிய ஒட்டுப்புல் சைலேஜ் + 25% அன்னாசி பழக் கழிவு சைலேஜ் + 30% கலப்பு தீவனம் மாடுகளுக்கு சிறந்தது.
எழுத்தாளர் பற்றி
பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ���ட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.
யுவர்பார்ம் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-ap17-2024
கால்நடை வளர்ப்பு பற்றி தகவல்களை பெற யுவர்பார்ம் வாட்சப் சேனலுடன் இணைந்திடுங்கள்: https://whatsapp.com/channel/0029VaNRo3KDzgT49lgkAZ31
YourFarm - Apps on Google Play
24/7 Instant Veterinary Assistance- Online Animal Husbandry Platform (33 kB)
ஆரோக்கியமான கறவை மாட்டு பண்ணையம் | WhatsApp Channel
0 notes
Photo

செரிமான பிரச்சனையா? அதை தீர்க்க உதவும் சில எளிய வழிகள்! கடைகளில் கிடைக்கும் கண்ட உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் செரிமான மண்டலம் பாதிப்படைவது தான். செரிமான மண்டலத்தின் சீரான இயக்கத்திற்கு உதவும் சில எளிய வழிமுறைகளை இப்போது பார்க்கலாம். செரிமான பிரச்சனையை தீர்க்க உதவும் சில எளிய வழிகள்:- திராட்சை, பீச், பேரிக்காய் மூன்றையும் பயன்படுத்தி கிடைக்கும் பழச்சாறினை குடிப்பதன் மூலம் உடலில் செரிமான பிரச்சனை ஏற்படாமல் பாதுகாத்து கொள்ளலாம். வயதானவர்களுக்கு ஏற்படும் நெஞ்செரிச்சல், செரிமான பிரச்சனை போன்றவை இஞ்சி துண்டுகளை மென்று சாப்பிடுவதன் மூலம் குறைக்கலாம். சுடுநீரில் இஞ்சி சேர்த்து குடிப்பதன் மூலம் செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்து கொள்ள முடியும். மேலும் சாக்லேட் சாப்பிட்டாலும் செரிமான பிரச்சனை ஏற்படாமல் பார்த்து கொள்ள முடியும். எப்பொழுதும் உணவு உட்கொண்ட பின்னர் பழங்கள் சாப்பிட்டால் செரிமான பிரச்சனை ஏற்படும். இதை தடுக்க சாப்பிட்ட பின்னர் பழங்கள் சாப்பிடுவதை குறைத்து கொள்ள வேண்டும். சாப்பிடும் முன்னோ அல்லது பின்னோ தண்ணீர் குடித்தால் உடலில் உள்ள கேஸ்ட்ரிக்கின் தன்மைக் குறைக்கப்படுகிறது. இதனால் செரிமான மண்டலம் வலுவிழக்கிறது. எனவே சாப்பிடும் போது நீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
0 notes
Text
செரிமான மண்டல கோளாறுகள்ல, மிக முக்கியமான கோளாறு, பித்தப்பையில் ஏற்படுகின்ற கற்களும், கல்லீரல் சார்ந்த நோய்களும்தான். இன்றைக்கு கல்லீரல் நோய்கள், மிகப்பெரிய அளவில், நம்மை பாதித்துக் கொண்டிருக்கிறது.
பித்தப்பையில் கற்கள் இருக்கிறது. ஆனால், அதைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல், செரிமானம் சரியில்லை, அப்படிங்கிற ஒரு விஷயத்திற்காக மட்டும், மருந்துகளை தொடர்ந்து சாப்பிட்டு, பித்தப்பை கற்களால் ஏற்படுகின்ற, அவதிகளையும் நம்ம பார்க்கிறோம். அதே போல, பித்தப்பையில் கற்கள் ஏற்படும் போது, அறுவை சிகிச்சை மட்டும்தான் தீர்வு அப்படின்னு, உடனடியாக அறுவை சிகிச்சையை நோக்கி, ஓடக்கூடியவர்களும் இருக்கிறதை பார்க்கிறோம்.
சிகிச்சை இல்லாமல், பித்தப்பை கற்களை குணமாக்கிக் கொள்ளவும். ஈரல் சார்ந்த நோய்களிலிருந்து, முழுமையாக விடுதலை பெற்று, ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை வாழமோ, உதவி செய்யக்கூடிய,
#பித்தப்பைகல்தீரகஷாயம் -கிறதை பற்றிதான், இன்றைக்கு உங்களோடு, நான் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். பித்தப்பை, கல்தீர கஷாயம், செய்ய தேவையான பொருட்கள் என்னங்கிறதை, விவரமாக இப்ப நம்ம பார்ப்போம்.
Full Link: https://fb.watch/qK9xq3XpKU/
பித்தப்பை கல் தீர கஷாயம், செய்ய தேவையான பொருட்கள்,
#ஆவாரம்பூ, #அதிமதுரம், #ஆடாதோடை, #கீழாநெல்லி,
#தேற்றான்கொட்டை, #திரிபலா, #வில்வம், #சுக்கு, #நிலவேம்பு, #மஞ்சள், #மரமஞ்சள், அறுவை சிகிச்சை பித்தப்பை கற்களை மட்டுமல்ல, #கல்லீரல் நோய்களையும், #ஒற்றைத்தலைவலி சார்ந்த சிரமங்களையும், செரிமான குறைபாடினால் ஏற்படுகின்ற வாந்தி, மயக்கம், #பித்தவாந்தி சார்ந்த சிரமங்களையும் குறைக்கக்கூடிய, #பித்தப்பைகல்தீரகஷாயம் எவ்வாறு செய்வதுங்கிறதை பார்ப்போம்.
Wellness Guruji Dr Gowthaman
SHREEVARMA Ayurveda Hospitals
099526 66359 / 04446094900
www.drgowthaman.com
www.shreevarma.online
#wellnessguruji #wellnessgurujitips #wellnessgurujicamps #Shreevarma #DrGowthaman #Gallstones #gallstonestreatment #shreevarmaayurveda #migrainerelief #migraine #ayurveda
0 notes
Text
சர்க்கரை வியாதி உள்ளவங்க வெல்லம் சாப்பிடலாமா?
ஆயுர்வேதத்தில் பதட்டம், ஒற்றைத் தலைவலி, செரிமானம் மற்றும் சொர்வு உள்ளிட்ட பலவிதமான உடல்நல பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க பல ஆண்டுகளாக வெல்லம் பயன்படுத்தப் படுகிறது.
அதே நேரம் எல்லா பொருளும் போன்று வெல்லத்துக்கும் தீமைகள் அளிக்கும் பக்க விளைவுகளும் உண்டு. அது தரம் மற்றும் எடுத்து கொள்ளும் அளவு பொறுத்தது. வெல்லம் உண்டாக்கும் பக்க விளைவுகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
0 notes
Text
ஸ்பெஷல் நெய் பன் பரோட்டா தயாரிப்பது எப்படி?
நாம் பரோட்டாவை அதிகளவு சாப்பிட்டால்., பரோட்டா செரிமானம் அடைவதற்கு அதிகளவு நேரத்தை எடுத்து கொள்கிறது.
இதனால் நமது உடலில் செரிமான கோளாறுகள் ஏற்பட்டு., நமது இதயத்திற்கு இரத்தம் செல்லவிடாமல் தடுக்கிறது. இதன் காரணமாக நமது இதயம் பலவீனம் அடைந்து நமது மரணத்திற்கும் வழிவகை செய்கிறது.
நாம் பரோட்டாவை அதிகளவு சாப்பிட்டால்., பரோட்டா செரிமானம் அடைவதற்கு அதிகளவு நேரத்தை எடுத்து கொள்கிறது. பரோட்டாவின் இருக்கும் எண்ணெயால் கொலஸ்ட்ரால் அதிகரித்து., உடலுக்கு சோர்வை அதிகரிக்கும்.
0 notes
Text
இந்த உணவுப் பொருட்களுடன் சண்டை காலம் வீக்கம் மற்றும் செரிமான சிக்கல்கள் | ஆரோக்கியம்
பல தனிநபர்களுக்கு யார் மாதவிடாய்அவர்களின் மாதவிடாய் சுழற்சியின் போது வீக்கம் மற்றும் செரிமான சிக்கல்களை அனுபவிப்பது ஒரு பொதுவான நிகழ்வாகும். காலம் வீக்கம் என்பது வயிற்றுப் பகுதியில் ஏற்படும் வீக்கம் மற்றும் அசௌகரியத்தைக் குறிக்கிறது ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் செரிமானம் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுப் பிடிப்பு போன்ற பிரச்சனைகள் மாதவிடாய் வீக்கத்துடன் சேர்ந்து, ஒட்டுமொத்த அனுபவத்தை…

View On WordPress
0 notes