tamilwealth-blog
tamilwealth-blog
Tamil Wealth
1K posts
Don't wanna be here? Send us removal request.
tamilwealth-blog · 7 years ago
Photo
Tumblr media
ஆப்பிளில் இவ்வளவு நன்மையா? இதனால் தான் மருத்துவரிடம் செல்ல அவசியம் இல்லையோ! தினம் ஒரு ஆப்பிள் பழம் சாப்பிட்டால் மருத்துவரை பார்க்க தேவை இல்லை அது மட்டுமில்லாமல் எல்லா விதமான நோயிலிருந்தும் நம்மை பாதுகாக்கலாம் என்பது அனைவரும் அறிந்த ஒரு உண்மை. ஆப்பிள் மட்டுமில்லை அதை பதப்படுத்தி அதிலிருந்து பெறப்படும் வினிகரும் பல்வேறு நன்மைகளை தருகிறது. அதன் நன்மைகளை இப்போது பார்க்கலாம். ஒரு சிலருக்கு உடலில் ஏற்படும் அதிகப்படியான அலர்ஜியை குறைக்க உதவும். இதற்கு காரணம் க்வெர்செடின் என்ற பொருள் தான் காரணம். பச்சை நிற ஆப்பிளை துண்டாக்கி அதன் மணத்தை நுகர்வதால் அதிகப்படியான தலைவலி குணமாகும். ஆப்பிள் பழத்தினை துண்டாக்கி சாப்பிடாமல் கடித்து சாப்பிடுவதால் பல் சம்மந்தமான பிரச்சனைகளை வராமல் தடுக்கலாம். வயதானவர்களுக்கு ஏற்படும் முழங்கால் மற்றும் மூட்டுவலியை சரி செய்து குணப்படுத்தும். மற்ற பழங்கள் மற்றும் காய்கறிகள் காயாக இருந்தால் அதை பழுக்க வைக்க ஆப்பிளை அந்த காய்களோடு சேர்த்து வைத்தால் ஒரே நாளில் பழுக்க வைக்க முடியும். இதனால் எந்தவிதமான பக்கவிளைவுக் கிடையாது. ஆப்பிள் சைடர் வினிகரை நீரில் கலந்து தலைமுடியை அலசினால் தலைமுடியில் உள்ள இரசாயனங்கள் நீங்கும். இதன் காரணமாக தலைமுடி நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.
0 notes
tamilwealth-blog · 7 years ago
Photo
Tumblr media
தலைவலிக்கு இதில் ஏதாவது நிச்சயம் உங்களுக்கு தீர்வு அளிக்கும்! இன்றைய காலக்கட்டத்தில் அதிகப்படியான வேலைப்பளு, நிம்மதியின்ம��� காரணமாகவும் தலைவலி ஏற்படுகிறது. இதற்கு பெரும்பாலானோர் மாத்திரைகளை சாப்பிடுவார்கள். அது தீர்வாக இருந்தாலும் நாள் போக்கில் பல பின் விளைவுகளினை ஏற்படுத்தும். அதற்கு மாறாக வீட்டில் உள்ள சில இயற்கை பொருள்களை பயன்படுத்தி தலைவலியை எப்படி சரி செய்யலாம் என்பது பற்றி இப்போது பார்க்கலாம். கொத்தமல்லி இலையை அரைத்து நீரில் கலந்து தினமும் குடித்து வந்தால் அடிக்கடி தலைவலி ஏற்படுவது குறையும். கிராம்பை அரைத்து பசை போல் மாற்றி அதை லேசாக சூடேற்றி நெற்றியில் தடவினால் தலைவலி உடனே குணமாகும். 30 கிராம் சீரகப் பொடியை 1 லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து அதை வாரத்திற்கு இருமுறை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் தலைவலி குணமாகும். குங்குமப்பூவை சிறிது பால் சேர்த்து பசையாக்கி நெற்றியில் தடவினால் தலைவலி மறையும்.. வெற்றிலையை இதமாக சூடேற்றி நெற்றியில் சிறிது நேரம் வைத்தால் தலைவலி குணமாகும். பட்டையினை பொடியாக்கி நீர் சேர்த்து பசையாக்கி கொள்ள வேண்டும் பின்பு நெற்றியில் தடவினால் தலைவலி நீங்கும். இஞ்சியை கொதிக்க வைத்து அந்த நீரில் தேன் கலந்து சாப்பிட தலைவலியை வராமல் தடுக்கலாம்.
0 notes
tamilwealth-blog · 7 years ago
Text
பாத வெடிப்பை குணமாக்க சில சிறந்த மற்றும் எளிய வழிகள்!
பாதத்தை நாம் சரியாக பராமரிக்காமல் இருப்பதாலும், பாதத்தில் வறட்சி ஏற்படுவதன் மூலமும் வெடிப்பு ஏற்படுகிறது.  பாதங்களை பராமரிப்பது பற்றியும் வெடிப்பை சரி செய்வதை பற்றியும் இப்போது பார்க்கலாம்.
பாத வெடிப்பை குணமாக்க சில சிறந்த மற்றும் எளிய வழிகள்:-
மிருதுவான பாதம் வேண்டுமெனில் தினமும் குளிக்கும் போது பீர்க்கங்காய் நாரை பயன்படுத்தி பாதத்தை தேய்த்து குளித்தால் போதும்.
பாத நகங்களில் இடையில் உள்ள அழுக்கை…
View On WordPress
0 notes
tamilwealth-blog · 7 years ago
Photo
Tumblr media
சரும அழகை அதிகரிக்க உதவும் பழங்களை பற்றி தெரியுமா? உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க எப்போதும் அதிக அளவிலான புரோட்டின் மற்றும் விட்டமின்கள் தேவைப்படுகிறது. பெரும்பாலும் இவை பழங்களில் அதிகம் உள்ளது. பழங்கள் ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன் உங்கள் அழகையும் அதிகரித்து தோலில் சுருக்கமில்லாமல் பளபளப்பாக்கவும் உதவுகிறது. எந்தெந்த பழங்கள் சரும அழகை அதிகரிக்க உதவுகிறது என்று இப்போது பார்க்கலாம். சரும அழகை அதிகரிக்க உதவும் பழங்கள்:- மாம்பழம் அதிக அளவில் சாப்பிடுவதால் அதில் உள்ள விட்டமின் ஈ, ஏ, கே, சி, போன்றவை சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை மறைத்து முதுமை வராமல் தடுக்கிறது. எலுமிச்சை பழம், வெண்ணெய், தேன் மூன்றையும் கலந்து முகத்தில் தடவினால் சரும சுருக்கம் மறைந்து எப்போதும் இளமையாக இருக்கலாம். பப்பாளியை அதிக அளவில் சாப்பிட்டால் அதில் உள்ள என்சைம் சருமத்தில் இறந்த செல்களை வெளியேற்றி புதிய செல்களை உற்பத்தி செய்கிறது. மேலும் இதை சருமத்தில் பூசுவதன் மூலம் சுருக்கங்கள் வராமல் தடுக்கலாம். வாழைப்பழத்துடன் தேன் கலந்து முகத்தில் தடவினால் இளமையான சருமம் கிடைக்கும். இதில் உள்ள பொட்டாசியம் தோல் மற்றும் முடிக்கும் நன்மை அளிக்கிறது. ஆப்பிளை சாப்பிடுவதால் சருமத்தில் புதிய செல்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. பாலுடன் கலந்து முகத்தில் தடவினால் முகம் பொலிவு பெறும்.
0 notes
tamilwealth-blog · 7 years ago
Photo
Tumblr media
கோடை வெயிலை சமாளித்து சருமத்தை அழகாக்க உதவும் மாதுளை பேஸ் பேக்! மாதுளைப் பழம் பொதுவாக எல்லா காலத்திலும் எல்லா இடத்திலும் எளிதில் கிடைக்க கூடிய ஒன்று. இவை உடலுக்கு பலவிதமான நன்மைகளை அளிக்கிறது. உடலுக்கு  மட்டுமில்லாமல் சரும ஆரோக்கியத்திற்கும் மாதுளையை பயன்படுத்தலாம். இதற்கு காரணம் மாதுளையில் உள்ள அதிக அளவிலான வைட்டமின் கே, பி, சி மற்றும் ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் தான். மாதுளை பழத்தை பயன்படுத்தி பேஸ் மாஸ்க் செய்யும் முறையை இப்போது பார்க்கலாம். சருமத்தை அழகாக்க உதவும் மாதுளை பேஸ் பேக்:- மாதுளை பழத்தை அரைத்து அதனுடன் சில துளி எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் சருமத்தில் ஏற்பட்ட கருமை மற்றும் சரும அலர்ஜி போன்றவை நீங்கும். மாதுளை பழத்துடன் கிரீன் டீ சேர்த்து பசையாக்கி முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் சருமத்தில் ஏற்படும் சரும சுருக்கம் மறையும். மாதுளையை பசையாக்கி தேன் சேர்த்து முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவினால் முகம் புத்துணர்ச்சியாக மின்னும். மாதுளை பழத்துடன் கோ கோ பவுடரை கலந்து முகத்தில் அக்கலவையை தடவி 20 நிமிடம் கழித்து கழுவினால் சருமத்தில் ஏற்பட்ட வறட்சி நீங்கி ஈரப்பசையுடன் எப்போதும் இருக்கும். இதனால் பருக்கள் வராது. மாதுளை பழ விதைகளுடன் தயிர் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் பளிச்சென்று மாறும். மேலும் சுருக்கமில்லாமல் அழகான சருமம் கிடைக்கும்.
0 notes
tamilwealth-blog · 7 years ago
Photo
Tumblr media
வெயிலினால் ஏற்படும் சரும பிரச்சனைக்கு தயிரை பயன்படுத்தும் முறை! கோடை காலம் ஆரம்பித்து விட்டது. பலருக்கும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைக்காது. கொளுத்தும் வ��யிலிலும் சுற்றி திரிய வேண்டியிருக்கும். இதனால் சருமம் பல பிரச்சனைகளை சந்திக்கும். இதை தடுக்க தயிரை பயன்படுத்தலாம். தயிரை உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமில்லை சரும ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தலாம். சருமத்திற்கு தயிரை பயன்படுத்தும் வழிமுறைகளை பற்றி இப்போது பார்க்கலாம். வெயிலினால் ஏற்படும் சரும பிரச்சனைக்கு தயிரை பயன்படுத்தும் முறை:- 50 கிராம் அளவுள்ள தயிரை முகத்தில் பயன்படுத்தினால் அதில் உள்ள ஆஸ்ட்ரினண் எனும் பொருள் சரும செல்களின் வளர்ச்சியை அதிகரித்து கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருக்கள் வராமல் பார்த்து கொள்ள முடியும். தயிரில் உள்ள கால்சியம் சத்துகள் சருமத்தில் தடவுவதன் மூலம் சரும வறட்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது. மேலும் தயிர் நமது சருமத்திற்கு தேவையான ஈரப்பசையை அளிக்கிறது. தயிரில் உள்ள லேட்டிக் ஆசிட் சருமத்தில் சிறந்த மாய்ச்சுரைசராக செயல்பட்டு சரும சுருக்கம் ஏற்படாமல் பார்த்து கொள்கிறது. வெளியில் சுற்றி திரிவதால் ஏற்படும் சரும களைப்பை போக்க தயிரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவினால் சரும்ம் புத்துணர்ச்சியாக இருக்கும். தயிரை தினமும் முகத்தில் தடவி பேஸ் மாஸ்க் செய்தால் முகத்தில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்ற உதவுகிறது.
0 notes
tamilwealth-blog · 7 years ago
Text
செர்ரி பழத்தை பயன்படுத்தி அழகான சருமத்தை பெற முடியுமா?
சருமத்தை அழகாக்க கிரிம்களை பயன்படுத்தி அழகாகும் செயற்கை வழிமுறைகளை விட ஏராளமான இயற்கை வழிமுறைகள் உள்ளன. இதை பயன்படுத்தினால் எந்த விதமான பக்க விளைவும் ஏற்படாது. அந்த வகையில் செர்ரி பழங்களை சரும அழகிற்கு பயன்படுத்தும் முறையை இப்போது பார்க்கலாம்.
முகத்தை நன்றாக கழுவிய பின்னர் அரைத்த பழங்களை முகத்தில் தடவினால் சருமம் மென்மையாகவும் பளிச்சென்றும் மாறும். உங்களது சருமம் எண்ணெய் பசை நிறைந்ததாக இருந்தால்…
View On WordPress
0 notes
tamilwealth-blog · 7 years ago
Photo
Tumblr media
வெயில் காலத்தில் சருமத்தில் ஏற்படும் பிரச்சனையை சரி செய்ய தக்காளியை பயன்படுத்தும் முறை பற்றி தெரியுமா? அனைத்து சமையலிலும் சேர்க்க கூடிய ஒரு பொருளாக இது உள்ளது. உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமில்லாமல் சரும ஆரோக்கியத்திற்கும் இது உதவுகிறது. இதன் விலை குறைவாக இருப்பதோடு மட்டுமில்லாமல் சந்தைகளில் எளிதில் கிடைக்க்க் கூடிய பொருளாகவும் உள்ளது. இதை சருமத்தின் அழகை அதிகரிக்க பயன்படுத்தக் கூடிய முறை பற்றி இப்போது பார்க்கலாம். தக்காளி பழத்தின் சாற்றினை சருமத்தில் தடவி உலர வைத்தால் சிறந்த சன் ஸ்கிரீன் போன்று செயல்பட்டு சருமத்தை பாதுகாக்கும். இதற்கு காரணம் இதில் உள்ள லைகோபைன் எனும் ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் தான். தினமும் தக்காளி பழத்தின் சாறினை கொண்டு மசாஜ் செய்தால் சருமத்தை எப்போதும் இளமையாக வைத்திருக்க முடியும். எலுமிச்சை பழச் சாறினை தக்காளி பழச் சாறுடன் கலந்து முகத்தில் தடவி வந்தால் சருமத்தில் உள்ள துளைகள் சரியாகி முகப்பருக்கள் வருவது குறையும். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் தினமும் தக்காளி பழச் சாறினை முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை குறையும். கோடையில் ஏற்படும் சரும எரிச்சலை தடுக்க தினமும் தக்காளி பழத்தினை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். தக்காளி பழச் சாறுடன் தேன் கலந்து முகத்தில் தடவினால் சருமம் அழகாக மாறுவது மட்டுமில்லாமல் மென்மையாகவும் மாறும். தக்காளி பழத்தை தலைமுடியில் தடவி சிறிது நேரம் கழித்து தலைமுடியை அலசினால் பொடுகு பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
0 notes
tamilwealth-blog · 7 years ago
Photo
Tumblr media
தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி பொடுகை போக்கும் வழிமுறைகள் பற்றி தெரியுமா? எல்லா காலத்திலும் தலைமுடி உதிர்வு மற்றும் பொடுகு பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பானது தான். இதற்கு முக்கிய காரணம் போதிய அளவு ஊட்டச்சத்துகள் தலைமுடிக்கு கிடைக்காதது தான் காரணம். மேலும் தலைமுடியில் போதுமான ஈரப்பசை இல்லாமல் இருந்தால் முடி உதிர்வு மற்றும் பொடுகு பிரச்சனை ஏற்படும். தேங்காய் எண்ணெயை கீழ்கண்ட வழிகளில் பயன்படுத்தினால் பொடுகு பிரச்சனையிலிருந்து விடுபடலாம். தேங்காய் எண்ணெய் மற்றும் கற்பூரவள்ளி எண்ணெயை 5 : 1 என்ற விகிதத்தில் எடுத்து தலைமுடியின் அடிவரையிலும் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின்னர் சீயக்காய் அல்லது ஷாம்பு போட்டு அலசினால் பொடுகு நீங்கும். தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறினை கலந்து தலைமுடியில் அடிப்பகுதியில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் தலைமுடியை அலசினால் பொடுகு பிரச்சனை நீங்கும். காற்று புகாத ஒரு பாட்டிலில் தேங்காய் எண்ணெய் மற்றும் கற்பூரத்தை சேர்த்து தினமும் இரவு தூங்கும் முன்னர் தலையில் தடவி மசாஜ் செய்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும். தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் தயிர் இவை மூன்றையும் சரியான அளவில் எடுத்து தலையின் அடிப்பகுதியில் படும்படி மசாஜ் செய்து வந்தால் விரைவில் பொடுகு தொல்லை நீங்கும். வறட்சியான சருமத்தை சரி செய்ய ரோஸ்மேரி எண்ணெய்க்கு முக்கிய பங்கு உண்டு. இந்த எண்ணெயை தேங்காய் என்ணெயுடன் சரி அளவில் எடுத்து தடவி முடியில் ஊற வைத்து சிறிது நேரம் கழித்து கழுவினால் பொடுகு பிரச்சனை நீங்கும்.
0 notes
tamilwealth-blog · 7 years ago
Photo
Tumblr media
கடலை மாவினால் முகத்தை கழுவினால் என்ன பயன் தெரியுமா? நம்மில் பெரும்பாலும் தினமும் முகத்தை கழுவ சோப்பை மட்டுமே பயன்படுத்துகின்றனர். இதை அதிக அள்வில் செய்யும் போது முகத்தில் உள்ள எண்ணெய் பசை முழுவதும் வெளியேறிவிடுகிறது. இதனால் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. இதை தடுப்பதற்கு சோப்பிற்கு பதிலாக கடலை மாவை பயன்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும். கடலை மாவினால் முகத்தை கழுவினால் கிடைக்கும் பயன்கள்:- சோப்பினை பயன்படுத்தி முகத்தை கழுவினால் வெயிலால் ஏற்படும் கருமையான சருமத்தை சரி செய்ய முடியாது. ஆனால் கடலை மாவை பயன்படுத்தி முகத்தை கழுவினால் கருமை நீங்கி அழகு பெறலாம். கடலை மாவை பயன்படுத்தி முகத்தை கழுவினால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் முற்றிலும் வெளியேற்றப்பட்டு புதிய செல்கள் உருவாகும், இதனால் சருமம் பளிச்சென்று மாறும். இதில் அதிக அளவில் உள்ள ப்ளீச்சிங் தன்மை முகத்தை வெள்ளையாக்குவது மட்டுமில்லாமல் முகப்பரு வராமல் பாதுகாக்கும். தூக்கமின்மையால் ஏற்படும் கருவளையத்தை சரி செய்ய கடலை மாவினால் முகத்தை கழுவினால் கருவளையம் எளிதில் மறையும். சிலருக்கு சருமத்தில் ஏற்படும் சுருக்கம் மற்றும் புள்ளிகளை சரி செய்ய கடலை மாவினால் முகத்தை கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.
0 notes
tamilwealth-blog · 7 years ago
Photo
Tumblr media
கசகசாவை அடிக்கடி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா? கசகசா விதைகள் பல நூற்றாண்டுகளாக பிரசித்தி பெற்றது. முன்னர் காலத்தில் அழுகின்ற குழந்தைகளை  சரிசெய்ய கசகசாவை பால் மற்றும் தேனுடன் கலந்து சாப்பிடக் கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் சரியாகிவிடும். கசகசாவில் உள்ள பல்வேறு நன்மைகளை பற்றி இப்போது பார்க்கலாம். கசகசாவில் கரையாத நார்சத்துகள் அதிக அளவில் உள்ளன. எனவே இதை சாப்பிட்டால் முறையான செரிமானம் உண்டாகி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. நமது உடல் அதிகப்படியான வேலையை செய்வதால் ஆற்றலை இழக்கிறது. அந்த சமயத்தில் உடலுக்கு தேவையான கார்போஹைட்டு மற்றும் கால்சியத்தை கொடுக்க வல்லது. உங்களுக்கு அடிக்கடி வாய்ப்புண் ஏற்பட்டால் பொடியாக்கிய சர்க்கரையுடன் தேங்காய் துருவல் சேர்த்து சிறு உருண்டையாக பிடித்து சாப்பிட்டால் வாய்ப்புண்ணிலிருந்து விடுபடலாம். எலும்புகளின் வலிமைக்கு தேவையான அளவு கால்சியத்தை இவை அதிக அளவில் கொண்டிருப்பதால் 40 வயதுக்கு மேல் ஏற்படும் மூட்டுவலியை வராமல் தடுக்கிறது. இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் கசகசா அடங்கிய உணவுகளை அதிக அளவில் உட்கொண்டால் விரைவில் இரத்த அழுத்தம் கட்டுபடுத்தப்படும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமில்லாமல் சுவாசம் சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.
0 notes
tamilwealth-blog · 7 years ago
Photo
Tumblr media
நார்த்தம்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் நமக்கு கிடைக்குமா? நார்த்தம்பழம் எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழங்களை போலவே புளிப்பு சுவையுடையது. இதில் அதிக அளவிலான சிட்ரஸ் அமிலம், மக்னீசியம், தாது உப்புகள் அடங்கியுள்ளன. நார்த்தம்பழம் உடலுக்கு புத்துணர்ச்சியை அழிக்க கூடியது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் ஆற்றலை கொண்ட பழம். மேலும் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து நன்மை அளிக்கக்கூடியது. இதன் மற்ற பிற பலன்களை இப்போது பார்க்கலாம். நார்த்தம் பழத்தில் மிகச்சிறிய அளவு கூட கொலஸ்ட்ரால் இல்லாத காரணத்தால் இதயத்திற்கு எந்த விதத்திலும் ஆபத்தை ஏற்படுத்தாது. எனவே இதய நோயாளிகள் இதை தைரியமாக சாப்பிடலாம். நம்முடைய ஒரு நாளுக்கு தேவையான கால்சியத்தின் 60% பங்கை ஒரு நார்த்தம் பழம் கொண்டுள்ளது. எனவே தினமும் இரண்டு நார்த்தம்பழத்தை சாப்பிட்டால் எலும்பு மற்றும் பற்கள் சம்மந்தமான பிரச்சனை வராமல் பார்த்து கொள்ள முடியும். ஆண்களின் விந்தணுக்களின் வளர்ச்சிக்கும், வளமானதாக மாற்றவும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. புற்றுநோய், பக்கவாதம் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் எதுவும் ஏற்படாமல் பாதுகாக்கிறது. அதிக அளவிலான நார்ச்சத்துகள் அடங்கியுள்ளதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கலாம். சிறுநீரக கற்களை கரைக்க நார்த்தம் பழம் முக்கியமாக பயன்படுகிறது. சிறுநீரக கற்களை எவ்வளவு வேகமாக கரைக்க முடியுமோ அவ்வளவு வேகமாக கரைக்கும் மற்றும் சிறுநீரக கற்கள் உருவாகாமல் பார்த்து கொள்ளும். இதில் உள்ள வைட்டமின் பி அதிகமாக உள்ளதால் வாயில் துர்நாற்றம் ஏற்படுவதை தடுக்கிறது. அது மட்டுமில்லாமல் பற்கள் மற்றும் ஈறுகள் சம்மந்தமான பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கும்.
0 notes
tamilwealth-blog · 7 years ago
Photo
Tumblr media
பாலில் வெல்லம் சேர்த்து குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா? தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் பால் அல்லது பால் சார்ந்த பொருளை சாப்பிடாமல் யாரும் இருக்க மாட்டார்கள். பாலுடன் நீங்கள் சர்க்கரை சேர்த்து இதுவரை குடித்து இருப்பீர்கள். ஆனால் அதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து குடித்தால் பலவிதமான நன்மைகள் நமக்கு கிடைக்கும். பாலில் அதிக அளவிலான கால்சியம் நிறைந்துள்ளது. இது எலும்புகளை அதிகமாக வலிமையாக்குவதுடன் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் அதிகரிக்கிறது. குளிர்காலத்தில் இதை தொடர்ந்து குடித்தால் பாக்டீரியாக்கள் நமது உடலை பாதிப்பது குறையும். அஜீரண கோளாறால் ஏற்படும் மலச்சிக்கல், குடலியக்கம் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய பாலுடன் வெல்லத்தை கலந்து தினமும் குடித்து வந்தால் செரிமான மண்டலத்தின் இயக்கம் சீராகும். வயதானவர்களுக்கு ஏற்படும் மூட்டு வலி மற்றும் எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய பாலுடன் வெல்லத்தை கலந்து குடித்தால் சிறப்பான பலன் கிடைக்கும். கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் இரத்த சோகையை சரி செய்ய இது உதவுகிறது. மேலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதை குடித்து வந்தால் நல்ல பலனை தரும். பாலில் வெல்லத்தை சேர்த்து குடிப்பதன் மூலம் சரும பிரச்சனையை சரி செய்து அழகான மற்றும் பொலிவான சருமத்தை பெற முடியும். இரத்தத்தில் உள்ள நச்சுகளை வெளியேற்றி இரத்தத்தை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியை சரி செய்யவும் இது உதவுகிறது.
0 notes
tamilwealth-blog · 7 years ago
Photo
Tumblr media
வெறும் வயிற்றில் காலையில் நெய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? அதிகாலை எழுந்ததும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பழக்கத்தை பின்பற்றுகிறார்கள். அதில் குறிப்பாக சொன்னால் காலையில் எழுந்ததும் டீ, காபி குடிப்பது அல்லது தண்ணீர் குடிப்பது அல்லது வெந்நீரில் தேன் கலந்து குடிப்பது போன்றவற்றை சொல்லலாம். அந்த பழக்கத்தை விட இந்த பழக்கத்தை பின்பற்றினால் நமக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும். வெறும் வயிற்றில் காலையில் நெய் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்:- வெறும் வயிற்றில் நெய்யை சாப்பிடும் போது உடலில் உள்ள எல்லா செல்களுக்கும் ஊட்டமளித்து ஒரே சீராக இயங்கும். இதனால் செல்கள் புத்துணர்ச்சியாக இருக்கும். சரும செல்களை புத்துணர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவக் கூடிய பொருள் நெய்யிற்கு உண்டு. இதனால் சருமம் பொலிவாக மாறும். சருமத்தில் ஏற்படக் கூடிய சொரியாசிஸ் பிரச்சனைகளையும் குணமாக்கும். மூட்டு இணைப்புகள் மற்றும் திசுக்களில் ஏற்படும் தேய்மானத்தை சரி செய்கிறது. இதனால் மூட்டு வலி மற்றும் ஆர்திரிடிஸ் மூட்டு வலி வராமல் தடுக்கிறது. நம்மில் பெரும்பாலும் நெய் சாப்பிட்டால் உடல் பருமன் அதிகரிக்கும் என்றே நினைப்பார்கள். ஆனால் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் உடலில் உள்ள மெட்டபாலிசம் குறைந்து உடல் எடை குறையும். தலைமுடி மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ற ஊட்டச்சத்துகளை இது கொண்டுள்ளது. மேலும் இதில் புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றலும் கொண்டது.
0 notes
tamilwealth-blog · 7 years ago
Photo
Tumblr media
சாக்லேட்டினால் சருமத்தில் ஏற்படும் இந்த பிரச்சனைகளை சரி செய்யலாமா? சாக்லேட் பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். வீட்டில் குழந்தைகள் அதிகமாக சாக்லேட் சாப்பிட்டால் பெரியோர்கள் திட்டுவார்கள். ஆனால் சாக்லேட்டில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. அதை பற்றி இப்போது பார்க்கலாம். சாக்லேட்டின் நன்மைகள்:- சாக்லேட்டில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் மற்றும் விட்டமின்களை கொடுக்கிறது. பொதுவாக வறண்ட சருமம் உள்ளவர்கள் சாக்லேட் மாஸ்க் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். மாசு அதிகமாக உள்ள இடங்களில் பணிபுரிபவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை இந்த மாஸ்கினை செய்வதன் மூலம் நோய் தொற்று ஏற்படாமல் பார்த்து கொள்ள முடியும். இதில் உள்ள அதிகப்படியான விட்டமின்கள் மற்றும் மினரல்ஸ்கள் ஆகியவை சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கி சருமத்தில் ஏற்படும் அலர்ஜி மற்றும் தேமலை சரி செய்யலாம். சருமத்தில் உள்ள இறந்த செல்களை அழித்து புதிய செ��்களை உருவாக்குகிறது. இதன் மூலம் சருமத்தின் நிறம் அதிகரிக்கும். சாக்லேட்டை பாலுடன் கலந்து மாய்சரைசராக செய்து முகத்தில் தடவினால் சருமத்தில் ஏற்படும் அதிகப்படியான சுருக்கம் மற்றும் முதுமை தன்மையை குறைக்கிறது. முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை சரி செய்யவும் சாக்லேட் மாஸ்க் பயன்படுகிறது. சாக்லேட்டை பயன்படுத்தி ஸ்க்ரப் செய்து முகத்தை கழுவினால் சருமம் ஜொலிக்கும்.
0 notes
tamilwealth-blog · 7 years ago
Photo
Tumblr media
துர்க்கை அம்மனை வழிபடும் போது சொல்ல வேண்டிய 108 மந்திரங்கள்! துர்க்கையை வழிபட்டால் வாழ்வில் எல்லா துன்பங்களும் மறைந்து போகும். துர்க்கையை வணங்கும் முன்னர் சில வழிமுறைகளை பின்பற்றினால் நல்ல பலனை அடையலாம். ஓம்அகிலாண்ட நாயகியே போற்றி ஓம்ஆதி பராசக்தியே போற்றி ஓம்அபிராமியே போற்றி ஓம்ஆயிரங்கண்கள் உடையவளே போற்றி ஓம்அம்பிகையே போற்றி ஓம்ஆசைகளை அறுப்பாய் போற்றி ஓம்அன்பின் உருவே போற்றி ஓம்ஆபத்தைத் தடுப்பாய் போற்றி ஓம்அச்சம் தீர்ப்பாய் போற்றி ஓம்ஆனந்தம்அளிப்பாய் போற்றி ஓம்அல்லல்தீர்ப்பாய் போற்றி ஓம்ஆற்றல்தருவாய் போற்றி ஓம்இமயவல்லியேபோற்றி ஓம்இல்லறம்காப்பாய் போற்றி ஓம்இருசுடர் ஒளியே போற்றி ஓம்இருளைநீக்குவாய் போற்றி ஓம்ஈசனின்பாதியே போற்றி ஓம்ஈஸ்வரியேபோற்றி ஓம்உமையவளேபோற்றி ஓம்உளைமான்கொண்டாய் போற்றி ஓம்உள்ளரவம்தீர்ப்பாய் போற்றி ஓம்உற்சாகம்அளிப்பாய் போற்றி ஓம்ஊழ்வினைதீர்ப்பாய் போற்றி ஓம்ஊக்கம்அளிப்பாய் போற்றி ஓம்என்துணை இருப்பாய் போற்றி ஓம்ஏக்கம்தீர்ப்பாய் போற்றி ஓம்எம்பிராட்டியேபோற்றி ஓம்ஏற்றம்அளிப்பாய் போற்றி ஓம்ஐமுகன்துணையே போற்றி ஓம்ஐயுறுதீர்ப்பாய் போற்றி ஓம்ஒளிர்வுமுகத்தளவே போற்றி ஓம்ஓச்சம்அளிப்பாய் போற்றி ஓம்கங்காணியேபோற்றி ஓம்காமாட்சியேபோற்றி ஓம்கடாட்சம்அளிப்பாய் போற்றி ஓம்காவல்தெய்வமே போற்றி ஓம்கருணைஊற்றே போற்றி ஓம்கற்பூரநாயகியே போற்றி ஓம்கற்பிற்கரசியேபோற்றி ஓம்காமகலா ரூபிணியே போற்றி ஓம்கிரிசையேபோற்றி ஓம்கிலியைத்தீர்ப்பாய் போற்றி ஓம்கீர்த்தியைத்தருவாய் போற்றி ஓம்கூர்மதிதருவாய் போற்றி ஓம்குவலயம்ஆள்பவளே போற்றி ஓம்குலத்தைக்காப்பாய் போற்றி ஓம்குமரனின்தாயே போற்றி ஓம்குற்றம்பொறுப்பாய் போற்றி ஓம்கொற்றவையேபோற்றி ஓம்கொடுந்துயர்தீர்ப்பாய் போற்றி ஓம்கோமதியேபோற்றி ஓம்கோன்ரிவாகனம்கொண்டாய் போற்றி ஓம்சங்கரியேபோற்றி ஓம்சாமுண்டேஸ்வரியேபோற்றி ஓம்சந்தோஷம்அளிப்பாய் போற்றி ஓம்சாந்தமனம் தருவாய் போற்றி ஓம்சக்திவடிவே போற்றி ஓம்சாபம்களைவாய் போற்றி ஓம்சிம்மவாகனமே போற்றி ஓம்சீலம்தருவாய் போற்றி ஓம்சிறுநகை புரியவளே போற்றி ஓம்சிக்கலைத்தீர்ப்பாய் போற்றி ஓம்சுந்தரவடிவழகியே போற்றி ஓம்சுபிட்சம்அளிப்பாய் போற்றி ஓம்செங்கதிஒளியே போற்றி ஓம்சேவடிபணிகிறேன் போற்றி ஓம்சோமியேபோற்றி ஓம்சோதனைதீர்ப்பாய் போற்றி ஓம்தண்கதிர் முகத்தவளே போற்றி ஓம்தாயேநீயே போற்றி ஓம்திருவருள்புரிபவளே போற்றி ஓம்தீங்கினைஒளிப்பாய் போற்றி ஓம்திரிபுரசுந்தரியேபோற்றி ஓம்திரிசூலம்கொண்டாய் போற்றி ஓம்திசையெட்டும்புகழ் கொண்டாய் போற்றி ஓம்தீரம்அளிப்பாய் போற்றி ஓம்துர்க்கையே! அம்மையே போற்றி ஓம்துன்பத்தைவேரறுப்பாய் போற்றி ஓம்துணிவினைத்தருவாய் போற்றி ஓம்தூயமனம்தருவாய் போற்றி ஓம்நாராயணியேபோற்றி ஓம்நலங்கள்அளிப்பாய் போற்றி ஓம்நிந்தனைஒழிப்பாய் போற்றி ஓம்பகவதியேபோற்றி ஓம்பவானியேபோற்றி ஓம்பசுபதிநாயகியே போற்றி ஓம்பாக்கியம்தருவாய் போற்றி ஓம்பிரபஞ்சம்ஆள்பவளே போற்றி ஓம்பிழைதீர்ப்பாய் போற்றி ஓம்புகழினைஅளிப்பாய் போற்றி ஓம்பூஜிக்கிறேன்துர்க்கா போற்றி ஓம்பொன்னொளிமுகத்தவளே போற்றி ஓம்போர்மடத்தைஅளிப்பாய் போற்றி ஓம்மகிஷாசூரமர்த்தினியேபோற்றி ஓம்மாதாங்கியேபோற்றி ஓம்மலைமகளேபோற்றி ஓம்மகாமாயிதாயே போற்றி ஓம்மாங்கல்யம்காப்பாய் போற்றி ஓம்தவன்தங்கையே போற்றி ஓம்மனக்குறை தீர்ப்பாய் போற்றி ஓம்மண்ணுயிர் காப்பாய் போற்றி ஓம்வேதவல்லியே போற்றி ஓம்வையம் வாழ்விப்பாய் போற்றி ஓம்ஜெயஜெய தேவியே போற்றி ஓம்ஜெயங்கள் அளிப்பாய் போற்றி ஓம்ஜெயஜெய தேவியே போற்றி ஓம்ஜெயங்கள் அளிப்பாய் போற்றி ஓம்துர்க்காதேவியே போற்றி
0 notes
tamilwealth-blog · 7 years ago
Photo
Tumblr media
கேரட் சாப்பிடுவதால் கிடைக்கக் கூடிய சில நன்மைகள்! கேரட் பொதுவாக எல்லா இடங்களிலும் எல்லா கடைகளிலும் கிடைக்க கூடிய ஒரு காய்கறி தான். இதன் விலையும் மிகக் குறைவு. ஆனால் இதில் கிடைக்க கூடிய நன்மையோ அதிகம். இதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை இப்போது பார்க்கலாம். கேரட் சாப்பிடுவதால் கிடைக்கக் கூடிய சில நன்மைகள்:- நமது உடலை எப்போதும் அழகாகவும் மினுமினுப்பாகவும் வைத்திருக்க கேரட் மிகவும் உதவுகிறது. அது சாப்பிட்டால் கண்களுக்கு மிகவும் ஏற்றது. அதேபோல் சருமத்திற்கும் அழகைத் அழிக்கும் ஆற்றல் கொண்டது. உடல் மற்றும் சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உடலில் சரியான செரிமான சக்தி இருக்க வேண்டும். அதற்கு தினமும் சாப்பாட்டிற்கு பின்னர் ஒரு கேரட்டை சாப்பிட்டால் போதும். இதனால் வாயில் உமிழ்நீர் சுரப்பு அதிகரித்து, உடலில் இருக்கும் கிருமிகள் அழிந்துவிடுவதோடு, உடலில் செரிமான சக்தியும் அதிகரிக்கும். கேரட்டில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து கெட்டியாக அரைத்து பின்னர் அதை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்தால்   முகத்திற்கு போதுமான இரத்த ஓட்டம் இருக்கும். இதனால் முகத்தில் உள்ள இறந்த செல்கள், முகப்பரு, கரும்புள்ளி மற்றும் மற்ற சரும நோய்களை நீக்கி, சருமத்தை மென்மையாக அழகாக வைக்கும். தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸை பருகினால் சருமத்தில் எந்த விதமான நோயும் ஏற்படாமல் பாதுகாக்கலாம். மேலும் முகச்சுருக்கம் ஏற்படாமலும் தடுக்கலாம்.
0 notes