Link
கதை சொல்லு கூகுள் - kathai sollu google
மரண தூதனின் செய்தி உன்னகும் என்னகும் வந்தது கதை சொல்லு கூகுள் - kathai sollu google
0 notes
Link
Tamil story learn how to death angel come to human life Tamil story | death angel story in Tamil | Tamil tale story | Tamil fairy tale story
0 notes
Link
0 notes
Link
அரேபிய இரவுக் கதைகள்
0 notes
Link
1001 arabian story in tamil | அரேபிய இரவுக் கதைகள்
0 notes
Link
Tamil Story
0 notes
Link
Tamil Story - 1970யில் மாட்டுவண்டியின் நகைசுவை
0 notes
Link
0 notes
Link
0 notes
Text
Tamil Story | சிறையில் அடைபட்ட வெண்புறா.
Tamil story
Tamil Story | சிறையில் அடைபட்ட வெண்புறா.
Tamil Story
(Tamil story)அங்கும் இங்கும் ஆனந்தமாக பறந்து கொண்டு. இந்த பூமியை சிறியது என்று நினைக்கும் அந்த வெண்புறா. தான் பறந்து செல்ல இந்த பூமி சிறியது என்று சொல்லி வானத்தையை தனது சிறகால் மூடுவது போல வேகமாக பறந்தது.
எங்கு இருந்தோ வந்த அம்பு புறாவின் சிறகில் பாய மயங்கி கிழ விழுந்தது.தன் கண்களை அந்த வெண்புறா திறந்து பார்க்கையில் அது சிறையில் அடைப்பட்டது. உலகத்தையை சுதந்தரமாக சுற்றி வந்த புறாவுக்கு அந்த சிறைவாசம் நரகம் போல் இருந்தது.
தான் தப்பிக்க வழியை தேடியது . மீண்டும் சுதந்திரமாக பறக்க ஆசைகொண்டது. ஆனால் தப்பிக்க வழியே இல்லை. வேலை தவறாமல் அந்த புறாவுக்கு உணவு தண்ணிர் வந்தது.(Tamil story)
பல நாட்கள் பல வாரங்கள் பல மாதங்கள் ஏன் பல வருடங்கள் கடந்து போனது. அந்த புறா எதிர்பார்த்த அந்த நாள் வந்தது. அந்த சிறை திறந்து இருந்தது . வெளிய வந்த அந்த புறா பறந்து சென்றது’.
பறந்து சென்ற அந்த வெண்புறா எங்க செல்வது என்று தெரியாமல் மீண்டும் தான் சிறைபட்ட அந்த இடத்துக்கே திரும்பி வந்தது. அந்த வெண்புறா சாகும் வரை தன்னை அடிமைதனத்திற்கு ஒப்புகொடுத்தது.(Tamil story)
Tamil story | நீதி கருத்து :-
அந்த வெண்புறா சுதந்திரத்தை மறந்துபோனது.
வாழ்நாள் முழுவதும் சிறைபடுவதை பார்க்கிலும் .
ஒரு நாள் சுதந்திரமாக வாழ்ந்து மறிப்பது நலம்.
Tamil Story - puthisali kathaigal (puthisalikathaikal.blogspot.com)
0 notes
Text
Tamil Story - பூதத்தின் சேட்டை
Tamil Story - பூதத்தின் சேட்டை
Tamil story
(tamil story) - லூசா பெயரையுடைய வாலிபன் நிம்மதியை தேடி கால் போன போக்கில் போய் ஒரு மரத்தடியில் அமர்ந்தான். அப்படியே தூங்கிவிட்டான்.அவன் கண்களை திறந்து பார்க்கும் போது அவன் பக்கத்தில் ஒரு பூதம் நின்றுகொண்டு இருந்தது . அந்த பூதத்தை பார்த்த அவன் பயந்து விட்டான் .
அந்த பூதம் அவனை பார்த்து பயப்பட வேண்டாம் நான் ஒரு அப்பாவி பூதம் .உங்களிடத்தில் உதவியை தேடி வந்தேன் . என் தாயாரை ஒரு மந்திரவாதி அடைத்து வைத்து இருக்கின்றான் . அந்த மந்திரவாதிகிட்ட இருந்து என் தாயாரை காப்பற்ற உங்கள் ஒருவரால் தான் ஆகும் என்று சொல்லி. லூசாவின் காலில் விழுந்து அல ஆரமித்தது. (tamil story)
உடனே லூசாவும் உதவி செய்ய ஒப்புக்கொண்டான். லூசா பூதத்தின் தோல் மேல் ஏறிக்கொண்டான் . ஏழு கடல்களை தாண்டி வேகமாக பறந்து சென்றது அந்த பூதம் .
மந்திரவாதியை சந்தித்தல்-manthiravathi (tamil story)
மந்திரவாதியிடம் வந்து இரங்கியை பூதம் லூசாவை கிழ இறக்கி விட்டு .மந்திரவாதி காலில் விழுந்து வணங்கி எசமான்னே இன்று உமக்கு ஒரு மானிட பிறவியை கொண்டு வந்துல்ளேன், அவனை பலியிட்டு உங்கள் சக்தியை அதிகரிக்க செய்யுங்கள் என்று சொன்னது .
ஒரு கணம் திகைத்து போன லூசா வசமாக பூதத்திடமும் மந்திரவாதிடமும் மாட்டிக்கொண்டோம் என்று கலங்கினான் . பின்பு அவன் எப்போ இருந்தாலும் சாவதான் போறோம் இப்போ செத்தாலும் என்ன என்று யோசித்து.
மந்திரவாதியை பார்த்து என்ன பலியிட்டால் உம்மக்கு என்ன கிடைக்கும் என்று கேட்டான் . அதற்கு மந்திரவாதி சகல பூதத்தையும் ஆளுகை செய்��ின்ற சக்தி வரும் என்றான் .(tamil story)
உடனே லூசா நன்று என்னை பலியிட நான் முழு மனதுடன் சம்மதிக்கின்ரேன்அதற்கு முன்னாள் என்னை ஏமாத்தி கொண்டு வந்த பூதத்தை ஒரு சிறு பாத்திரத்தில் அடைத்து வைக்க உம்மால் முடியுமா என்று கேட்டான் .
உடனே மந்திரவாதி தன் மந்திரக்கோலை எடுத்து அந்த பூதத்தை ஒரு சிறு ஜாடியில் அடைத்து வைத்தான் . உடனே லூசா மந்திரவாதியை தாக்கி அவனை கொன்று போட்டான் . அடைப்பட்ட பூதத்தை லூசா எடுத்து என்னை ஏமாற்றினதற்கு இதுதான் உன்னக்கு தண்டனை என்று சொல்லி பூமியில் மிக பெரிய பள்ளம் தோண்டி அந்த பூதத்தை புதைத்து விட்டான் . (tamil story)
TAMIL STORY CONTINUE
(tamil story)
#tamil story#tamil stories#tamil story for kids#story in tamil#story tamil#tamil story 2021#best tamil story#tamil fairy tale#tamil horror story#best kids tamil story
0 notes
Text
Tamil story - Tenali Raman Stroies 03
வித்தைக்காரனை வென்ற கதை -Tamil story
(tamil story) Tenali Raman கிருஷ்ணதேவராயரின் புகழைக் கேள்விப் பட்டு அவரைக் காண்பதற்காக விஜயநகரத்தை நோக்கிப் புறப்பட்டான். பல நாட்கள் அவ்வூரில் தங்கி முயற்சித்தும் அரசரைக் காண இயலவில்லை. எப்படியாவது அரசரைப் பார்த்து விடுவது என்று முயற்சித்துக் கொண்டே அவ்வூரிலேயே தங்கியிருந்தான். தினமும் அரண்மனைக்குப் போவதும் திரும்பி வருவதுமாக இருந்தான்.
ஒருநாள் வித்தைகள் செய்து வேடிக்கைகள் செய்து காட்டும் செப்படி வித்தைக்காரனைச் சந்தித்தான். அவனும் அரசரிடம் தன் வித்தைகளைக் காட்டிப் பரிசு பெரும் எண்ணத்துடன் இருப்பதைப் புரிந்து கொண்டான். அவனுடனேயே தானும் ஒரு வித்தைக்காரனைப்போல. சேர்ந்து கொண்டான். அரசர் கிருஷ்ணதேவராயர் முன்னிலையில் வித்தைக்காரன் செப்படி வித்தைகளைச் செய்து காட்டி அனைவரையும் மகிழ்வித்தான். அரசரும் அவன் செய்து காட்டிய வித்தைகளால் மிகவும் மகிழ்ந்து ஆயிரம் பொன் பரிசளித்தார்.(tamil story)
Tamil story - Tenali Raman Stroies 03
ஆனால் அவன் அந்தப் பரிசைப் பெறுமுன்பாகவே இராமன் "அரசே! இவனை விட வித்தையில் வல்லவனான நான் இருக்கிறேன். நான் செய்யும் வித்தையை இவனால் செய்ய முடியுமா என்று கேட்டுப் பாருங்கள். பிறகு பரிசு யாருக்கு என்று முடிவு செய்யுங்கள் " என்றவாறு முன்னால் வந்து நின்றான்.
அரசருக்கு மிக்க மகிழ்ச்சி. போட்டி என்று வந்து விட்டாலே அது மிகவும் சுவை யுடையதாகவே இருக்குமல்லவா? எனவே ' உன் வித்தைகளையும் காட்டு ' என்று அனுமதி வழங்கினார் மன்னர். செப்படி வித்தைக்காரனுக்கு ஒரே கோபம். "உனக்கு என்னென்ன வித்தைகள் தெரியும். செய்து காட்டு. நீ செய்யும் அத்தனை வித்தைகளையும் நான் செய்து காட்டுகிறேன்."என்று சவால் விட்டான். அனைவரும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். Tenali Ramanனோ பதட்டம் ஏதுமின்றி முன்னால் வந்து நின்றான்."அய்யா! எல்லா வித்தைகளையும் செய்யவில்லை. ஒரே ஒரு வித்தை மட்டும் செய்கிறேன். அதுவும் கண்களை மூடிக்கொண்டு செய்கிறேன். நீங்கள் கண்களைத் திறந்து கொண்டு அதே வித்தையைச் செய்து காட்டுங்கள். உங்களால் முடியாவிட்டால் அரசர் தரும் ஆயிரம் பொற்காசுகளில் பாதியை எனக்குத் தந்து விட வேண்டும்."என்றான்.
வித்தைக்காரனோ வெகு அலட்சியமாக "ப்பூ, நீ கண்ணை மூடிக்கொண்டு செய்யும் வித்தையை நான் கண்களைத் திறந்துகொண்டே செய்ய வேண்டும் அவ்வளவுதானே? நீ செய்து காட்டு" என்றான். உடனே இராமன் அரசரை வணங்கி விட்டுக் கீழே அமர்ந்தான். தன் கை நிறைய மணலை வாரி எடுத்துக் கொண்டு மூடிய தன் கண்கள் நிறைய கொட்டிக் கொண்டான். அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்து சிரித்தனர். மன்னரும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். பிறகு இராமன் தன் கண்களிலிருந்து மணலைத் தட்டிவிட்டுவிட்டு வித்தைக்காரனைப் பார்த்து "இந்த வித்தையை நீர் உம கண்களைத் திறந்து கொண்டே செய்து காட்டுங்கள்" என்றான். வித்தைக்காரனால் எப்படி முடியும்? " நான் தோற்றுப் போனேன். என்னை மன்னித்து விடுங்க" ளென்று தலை குனிந்து நின்றான். மன்னர் மகிழ்ந்து இராமனை அழைத்து அவனைப் பற்றி அறிந்து கொண்டார்.பிறகு " Tenali Raman ராமகிருஷ்ணா! உன் புத்தி சாதுர்யத்தை மெச்சினேன். நீ சொன்னபடி ஐநூறு பொற்காசுகளைப் பெற்றுக் கொள் " என்றார்.(tamil story)
இராமன் "அரசே! இந்த வித்தைக்காரன் வித்தை காட்டுவதில் தனக்கு மிஞ்சியவர் யாருமில்லை என்று பேசிக் கொண்டிருந்தான். அவன் கர்வமாகப் பேசியதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை உணர்த்தவும் அவன் கர்வத்தை அடக்கவும் நான் இவ்வாறு செய்தேன். நான் வித்தைக்காரன் என்று போய் சொன்னதற்கு என்னை மன்னியுங்கள். ஆயிரம் பொன்னையும் அவருக்கே அளியுங்கள்." என்று கேட்டுக் கொண்டான்.
அரசர் கிருஷ்ணதேவராயர் மனம் மகிழ்ந்து இராமன் சொன்னபடியே வித்தைக்காரனுக்கு ஆயிரம் பொற்காசுகளையும் பரிசாக அளித்தார்.. பின்னர் Tenali Ramanக்கும் பரிசளித்து அவனைத் தன் ஆஸ்தான விகடகவியாக அமர்த்திக் கொண்டார்.(tamil story)
முட்டாள்களும் சூரியனும் ( புத்திசாலி கதைகள் ) (puthisalikathaikal.blogspot.com)
Thenali Raman Stroies
#tamil stories#tamil story#story in tamil#tamil story for kids#story tamil#tamil story about nature#tamil story about life#tamil story books#tamil story ghost#tamil drama story#tamil story fairy#tamil story historical#tamil story kids
0 notes
Text
Tamil story - Tenali Raman Stroies 02
ராஜகுருவின் நட்பு -Thenali Raman Stroies
(tamil story) விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் அரண்மனையில் தாத்தாச்சாரியார் என்பவர் ராஜகுருவாக இருந்தார்.Tenali Raman கிராமத்துக்கு அருகில் உள்ள ஊர் மங்களகிரி அவ்வூருக்கு ராஜகுரு தாத்தாச்சாரியார் வந்திருந்தார்.
அவ்வூர் மக்கள் ராஜகுருவை வணங்கி ஆசி பெற்றுச் சென்றனர். இதையறிந்த Tenali Raman ராஜகுருவை சந்தித்தான். தன்னுடைய விகடத் திறமையாலும் பேச்சாற்றலாலும் ராஜகுருவின் "சிஷ்யன் ஆனான். ராஜகுருவின் நட்பு கிடைத்த பின் தன் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதாகவும் அதனால் மன்னர் கிருஷ்ணதேவராயரிடம் சிபாரிசு செய்து அரண்மனையில் வேலை கிடைக்க ஏற்பாடு செய்யுமாறும் வேண்டிக் கொண்டான். அவன் வேண்டுகோள்படியே ராஜகுருவும் அரண்மனையில் வேலையில் சேர்த்து விடுவதாக வாக்களித்தார்.(tamil story)
நான் போய் ஆள் அனுப்புகிறேன். அதன் பின் நீ வா என்று சொல்லி விஜயநகரத்துக்குச் சென்று விட்டார்.
Tamil story - Tenali Raman Stroies 02
Tenali Raman மிகக் கெட்டிக்காரனாக இருக்கிறான். இவனை மன்னரிடம் சொல்லி அரண்மனையில் விகடகவியாக சேர்த்துவிட்டால் நம் வேலை போய்விடும் என்று எண்ணிய ராஜகுரு Tenali Raman ஆள் அனுப்பவே இல்லை.
Tenali Raman ராஜகுருவிடமிருந்து ஆள் வரும் வரும் என்று எதிர்பார்த்து பல மாதங்கள் ஓடிவிட்டன. எந்தத் தகவலும் அவனுக்குக்கிட்டவில்லை. ஆகையால் விஜயநகரம் சென்று ராஜகுருவை நேரில் பார்த்து அரண்மனையில் சேர்ந்து விட வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டான்.
அதன்படியே மனைவி, மகனுடன் பல நாட்கள் நடந்து விஜய நகரம் வந்து சேர்ந்தான்.
பலவித இடையூறுகளுக்கிடையே Tenali Raman ராஜகுருவை அவரது இல்லத்தில் சந்தித்தான்.
Tenali Raman பார்த்ததும் ராஜகுரு அதிர்ச்சி அடைந்தார். யாரப்பா நீ? உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். இதைக் கேட்ட Tenali Raman பதறினார்.
ராஜகுருவே நான்தான் Tenali Raman . தாங்கள் மங்களகிரிக்கு வந்த போது நண்பர்கள் ஆனோம். நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தாங்கள் அரசவையில் என்னைச் சேர்த்து விடுவதாகச் சொன்னீர்கள். ஆள் அனுப்பிய பின் வா என்றீர்கள். பல மாதங்களாக தங்களிடமிருந்து ஆள் வராததால் தான் நான் நேரில் வந்துள்ளேன். தயவு செய்து என்னை பற்றி மன்னரிடம் சொல்லி அரசபையில் சேர்த்து விடுங்கள் என்று வேண்டினான்.
உன்ன��� யாரென்றே எனக்குத் தெரியாதப்பா...... மரியாதையாக வெளியே போ, இல்லையேல் அவமானப்படுவாய் என்று விரட்டினார்.
வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட Tenali Raman பழிக்குப்பழி வாங்கத் துடித்தான். காளி மகாதேவியைத் துதித்தான்.(tamil story)
விடுகதைகள் - tamil vidukathaigal : tamil riddles (puthisalikathaikal.blogspot.com)
Thenali Raman Stroies
#tamil story#tamil stories#story in tamil#tamil story for kids#story tamil#tamil story in tamil#tamil story 2021#puthisali#kathaigal#தமிழ் கதைகள்புத்திசாலி
0 notes
Text
Tamil story - Tenali Raman Stroies 01
காளியிடம் வரம் பெற்ற கதை - Tamil story
(tamil story )சுமார் நானூற்று எண்பது வருடங்களுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் ஓர் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தான் Tenali Raman. இளமையிலேயே அவன் தன் தந்தையை இழந்தான். அதனால் அவனும் அவனுடைய தாயாரும் தெனாலி என்னும் ஊரில் வசித்து வந்த அவனுடைய தாய் மாமன் ஆதரவில் வாழ்ந்து வந்தனர். Tenali Ramanபள்ளி சென்று படிப்பது என்பது வேப்பங்காயாகக் கசந்தது. ஆனால் மிகவும் அறிவுக்கூர்மையும் நகைச் சுவையாகப் பேசக்கூடிய திறனும் இயற்கையாகவே பெற்றிருந்தான். வீட்டுத்தலைவர் இல்லாத காரணத்தால் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலை Tenali Ramanku ஏற்பட்டது. அதனால் என்ன செய்வது என்ற கவலை அவனை வாட்டியது.ஒருநாள் Tenali Raman ஒரு முனிவர் வந்தார். அவர் இராமனின் நிலையைக்கண்டு அவனுக்கு ஒரு மந்திரத்தைக் கற்றுக் கொடுத்தார். அந்த மந்திரத்தை பக்தியுடன் ஜபித்தால் காளி பிரசன்ன மாவாள் என்றும் சொல்லிச் சென்றார். அதன்படியே இராமனும் ஊருக்கு வெளியே இருந்த காளி கோயிலுக்குச் சென்று முனிவர் கற்றுக் கொடுத்த மந்திரத்தை நூற்றியெட்டு முறை ஜெபித்தான். காளி பிரசன்னமாகவில்லை. இராமன் யோசித்தான். சட்டென்று அவனுக்கு நினைவுக்கு வந்தது. முனிவர் சொன்னது ஆயிரத்துஎட்டு முறை என்பது. உடனே மீண்டும் கண்களை மூடிக் கொண்டு காளியை ஜெபிக்கத் தொடங்கினான்.இரவும் வந்து விட்டது. ஆனாலும் இராமன் காளி கோயிலை விட்டு அகலவில்லை. திடீரென்று காளி அவன் எதிரே தோன்றினாள்.“என்னை ஏன் அழைத்தாய்? உனக்கு என்ன வேண்டும்?” என்று கோபமாகக் கேட்டாள் காளி. அவளை வணங்கி எழுந்த இராமன் கைகளைக் கூப்பித் தொழுதவாறே கேட்டான்.“தாயே நானோ வறுமையில் வாடுகிறேன். என் வறுமை அகலும் வழியும் எனக்கு நல்லறிவும் தரவேண்டுகிறேன். காளி பெரிதாகச் சிரித்தாள்.” உனக்குப் பேராசைதான். கல்வியும் வேண்டும் செல்வமும் வேண்டுமா?”
Tamil story - Tenali Raman Stroies
“ஆம் தாயே. புகழடையக் கல்வி வேண்டும். வறுமை நீங்கப் பொருள் வேண்டும். இரண்டையும் தந்து அருள் செய்ய வேண்டும்.” என்றான் இராமன்.காளி புன்னகையுடன் தன் இரண்டு கரங்களை நீட்டினாள். அதில் இரண்டு கிண்ணங்கள் பாலுடன் வந்தன. அந்தக் கிண்ணங்களை இராமனிடம் தந்தாள் காளி.“இராமா! இந்த இரண்டு கிண்ணங்களிலும் உள்ள பால் மிகவும் விசேஷமானது. வலது கிண்ணம் கல்வி. இடது கிண்ணம் செல்வம். நீ ஒரு கிண்ணத்திலுள்ள பாலை மட்டுமே குடிக்க வேண்டும். உனக்கு எது மிகவும் தேவையோ அந்தக் கிண்ணத்தின் பாலை மட்டும் குடி” என்றாள் புன்னகையுடன்.இராமன் ” என்ன தாயே! நான் இரண்டையும் தானே கேட்டேன்.ஒரு கிண்ணத்தை மட்டும் அருந்தச் சொல்கிறாயே. நான் எதை அருந்துவது தெரியவில்லையே” என்று சற்று நேரம் சிந்திப்பது போல நின்றான். பிறகு சட்டென்று இடது கரத்திலிருந்த பாலை வலது கரத்திலிருந்த கிண்ணத்தில் கொட்டிவிட்டு அந்தக் கிண்ணத்துப் பாலை மடமடவெனக் குடித்து விட்டுச் சிரித்தான். காளி திகைத்து நின்றாள்.“நான் உன்னை ஒரு கிண்ணத்திலுள்ள பாலைத்தானே குடிக்கச் சொன்னேன்!”“ஆம் தாயே, நானும் ஒரு கிண்ணத்துப் பாலைத்தானே குடித்தேன்.” என்றான்.“ஏன் இரண்டையும் ஒன்றாகக் கலந்தாய்?”“கலக்கக் கூடாது என்று நீ சொல்லவில்லையே தாயே!”(tamil story)காளி புன்னகை புரிந்தாள். “இராமா! என்னையே ஏமாற்றி விட்டாய். நீ பெரும் புலவன் என்று பெயர் பெறாமல் விகடகவி என்றே பெயர் பெறுவாய்.” என்று வரம் தந்து விட்டு மறைந்தாள்.இராமன் விகடகவி என்று சொல்லிப் பார்த்துச் சிரித்துக் கொண்டான். திருப்பிப் படித்தாலும் விகடகவி என்றே வருகிறதே என்று மகிழ்ந்தான்.(tamil story)
Tamil story vidukathaikal
THENALI RAMAN STROIES
#tamil story#tamil stories#story in tamil#tamil story for kids#story tamil#tamil story in tamil#tamil story 2021#puthisali tamil story#puthisali kathaigal#puthisali tamil story 2020
0 notes
Link
tamil story
#puthisali#puthisalikathaigal#puthisali kathaigal#puthisali tamil story#puthisali tamil story 2020#tamil stories#tamil story#story in tamil#tamil story for kids#tamil
0 notes