#கடலை மாவு
Explore tagged Tumblr posts
venkatesharumugam · 5 months ago
Text
#வெங்கிஸ்_கிச்சன்
🟢 மதுரை உருளைக்கிழங்கு மசாலா 🟢
🥔 கிழங்கு பொட்டலம் 🥔
{4 -5 நபர்களுக்கு}
தேவையானவை: மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு, வேகவைத்து, தோலுரித்து, துண்டாக்கியது - 8, கடலை எண்ணெய் - 100 மிலி, 1/2 தேக்கரண்டி கடுகு, 1/2 தேக்கரண்டி சீரகம், 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம், 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள், 1 தேக்கரண்டி மஞ்சள் தூள், 4 தேக்கரண்டி கடலை மாவு, நறுக்கிய 8 பல் பூண்டு, நறுக்கிய 4 பச்சை மிளகாய், நறுக்கிய 4 பெ. வெங்காயம், சிறிது கறிவேப்பிலை நறுக்கியது, சிறிது புதினா இலைகள் நறுக்கியது, சிறிது கொத்தமல்லி இலைகள் நறுக்கியது, 1/2 தேக்கரண்டி பெருங்காயம், 1 -1/2 தேக்கரண்டி உப்பு.
செய்முறை: ஒரு வாணலியில் எண்ணெயை சூடாக்கவும் அதில் கடுகு, சீரகம் மற்றும் பெருஞ்சீரகம் சேர்த்து பொரிய தாளித்து பின்பு நறுக்கிய பூண்டு, கறிவேப்பிலை, புதினா/ கொத்தமல்லி இலைகள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
பிறகு வெங்காயம் சேர்த்து அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம், மிளகாய் தூள் சேர்க்கவும். வெங்காயம் நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும். இதில் கடலைமாவு சேர்த்து அரை நிமிடம் வதக்கவும். இந்தக் கலவையில் அரை கப் தண்ணீர் சேர்க்கவும்.
இப்போது அவித்து வைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து, கரண்டியின் பின்புறத்தில் சிறிது மசித்து கடாயில் ஐந்து நிமிடங்கள் பிரட்டி வதக்கி இறக்கி சூடாகப் பரிமாறவும்! பாரம்பரிய மதுரை பொட்டலம் உருளைக்கிழங்கு இது!
பிற ஆயில்களும் பயன்படுத்தலாம் கடலை எண்ணெய் தான் பெஸ்ட்! கடுகோடு உளுந்து சேர்த்து தாளிப்பது உங்கள் விருப்பம்!
Tumblr media
1 note · View note
karuppuezhutthu-blog · 8 months ago
Text
சமையல் எண்ணெய், முந்திரி, நெய், விலை அதிகரிப்பு எதிரொலி: தீபாவளி இனிப்பு பலகார வகைகள் கிலோவுக்கு ரூ.50 உயர்வு | diwali sweet price increased dur to Cooking oil, cashew ghee price increased
கோவை: தமிழகத்தில் சமையல் எண்ணெய், முந்திரி, நெய் மற்றும் கடலை மாவு விலை உயர்வு காரணமாக தீபாவளி இனிப்பு, பலகார வகைகளின் விலை கிலோவுக்கு ரூ.40 முதல் ரூ.50 வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக முந்திரி பருப்பில் இருந்து தயாரிக்கப்படும் காஜு கத்தலி உள்ளிட்ட இனிப்புகளின் விலை கிலோவுக்கு ரூ.200 முதல் ரூ.250 வரை விலை உயர்ந்துள்ளது. இந்தியாவில் சமையல் எண்ணெய் இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும், விவசாயிகளின் வருவாயை…
0 notes
esamayal · 2 years ago
Text
மொறு மொறு தோசை வேண்டுமா? மெத்தென்ற தோசை வேண்டுமா? இதோ டிப்ஸ் !
முறுகலான ரவா தோசை வார்க்க சிறிது அரிசி மாவு ரவை சமமாக எடுத்து ஒரு மேஜை கரண்டி கடலை மாவு அல்லது வறுத்து அரைத்த உளுத்த மாவு சேர்த்து தோசை வார்த்தால் மொறு மொறு தோசை கிடைக்கும்.
மிருதுவான தோசை வேண்டுமா ஒரு கைப்பிடி சாதத்தை தண்ணீர் விட்டு மிக்ஸியில் அடித்து மாவில் சேர்த்து பார்த்தால் மிருதுவாய் தோசை வரும். சாதம் வடித்த கஞ்சியை சிறிதளவு மாவில் கலந்து வார்த்தாலும் பட்டு பட்டாய் தோசை வரும்..
0 notes
thinamnew · 3 years ago
Text
தயிர் மற்றும் கடலை மாவு ஃபேஸ் பேக் தயார் செய்வது எப்படி?
தினமும் முக அழகிற்கு, கடலை மாவு பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றத்தை உணரலாம். கடலை மாவுடன் கொஞ்சம் வெள்ளரி சாறு கலந்து நன்கு குழைத்து பாதிப்பு உள்ள சரும பகுதிகளில் நன்கு பூசவும்.
பின் இருபது நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். சருமம் வழுவழுப்புடன் திகழும். கடலை மாவில் சிறிது நீரை கலந்து, முகத்தில் பூசி கொள்ளுங்கள்.
0 notes
universaltamilnews · 6 years ago
Text
கருப்பாக இருக்கிறோம் என்ற கவலையா? இதைச் செய்து பாருங்கள் மாற்றம் தெரியும்!!
கருப்பாக இருக்கிறோம் என்ற கவலையா? இதைச் செய்து பாருங்கள் மாற்றம் தெரியும்!! #turmeric #உருளைக்கிழங்கு #கடலைமாவு #ut #utlifestyle #tamilnews #universaltamil
கடலை மாவு தினமும் ��ரவில் தூங்கும் முன், கடலை மாவுடன் நீர் சேர்த்து குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவி வர முகம் வெண்மையாகவும்.
கற்றாழை கற்றாழை ஜெல்லை வாரம் இருமுறைமுறை முகத்தில் பூசி மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து கழுவினால் முகம் மென்மையாகவும், வெண்மையாகவும் மாறும்.
தக்காளி, பாசிப்பயறு இரண்டு நாட்டுத் தக்காளி எடுத்து மிக்ஸியில் தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ளவும். இந்த தக்காளி…
View On WordPress
0 notes
tamilwealth-blog · 7 years ago
Photo
Tumblr media
கடலை மாவினால் முகத்தை கழுவினால் என்ன பயன் தெரியுமா? நம்மில் பெரும்பாலும் தினமும் முகத்தை கழுவ சோப்பை மட்டுமே பயன்படுத்துகின்றனர். இதை அதிக அள்வில் செய்யும் போது முகத்தில் உள்ள எண்ணெய் பசை முழுவதும் வெளியேறிவிடுகிறது. இதனால் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. இதை தடுப்பதற்கு சோப்பிற்கு பதிலாக கடலை மாவை பயன்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும். கடலை மாவினால் முகத்தை கழுவினால் கிடைக்கும் பயன்கள்:- சோப்பினை பயன்படுத்தி முகத்தை கழுவினால் வெயிலால் ஏற்படும் கருமையான சருமத்தை சரி செய்ய முடியாது. ஆனால் கடலை மாவை பயன்படுத்தி முகத்தை கழுவினால் கருமை நீங்கி அழகு பெறலாம். கடலை மாவை பயன்படுத்தி முகத்தை கழுவினால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் முற்றிலும் வெளியேற்றப்பட்டு புதிய செல்கள் உருவாகும், இதனால் சருமம் பளிச்சென்று மாறும். இதில் அதிக அளவில் உள்ள ப்ளீச்சிங் தன்மை முகத்தை வெள்ளையாக்குவது மட்டுமில்லாமல் முகப்பரு வராமல் பாதுகாக்கும். தூக்கமின்மையால் ஏற்படும் கருவளையத்தை சரி செய்ய கடலை மாவினால் முகத்தை கழுவினால் கருவளையம் எளிதில் மறையும். சிலருக்கு சருமத்தில் ஏற்படும் சுருக்கம் மற்றும் புள்ளிகளை சரி செய்ய கடலை மாவினால் முகத்தை கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.
0 notes
imageindiamagazine · 4 years ago
Link
0 notes
pooma-tamilchannel · 4 years ago
Text
🔴 வாழைப்பழத்தின் காம்பு பகுதியை பிளாஸ்டிக்கால் சுற்றிவைதால், நான்கு நாட்கள்வரை கருக்காமல் அப்படியே இருக்கும்!!!
*கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும்.
*இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போடவும். இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும் இருக்கும்.
*தோசைகல்லில் தோசை சுடும் போது தோசை மாவில் சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் மொரு மொறுப்பாக வரும்.
*கறிவேப்பிலை காய்ந்து விட்டால் அத���ை தூக்கி எரிந்துவிடாமல் இட்லி பானையில் அடியில் தண்ணீரில் கறிவேப்பிலையை போட்டு இட்லி சுட்டால் வாசனையாக இருக்கும்.
*வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார் சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.
*கிழங்குகள் சீக்கிரம் வேக வைப்பதற்கு பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து விட்டு வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
*வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.
*சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது
.*பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.
*கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருப்பதற்காக சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் வண்டு பிடிக்காது
*காப்பர் பாட்டம் பாத்திரம் மங்காமல் இருப்பதற்காக சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் பூசி துணியால் அழுத்தி தேய்த்தால் பாத்திரம் பளிச்சின்னு இருக்கும்.
*மிக்ஸி ஜாடியில் உள்ள பிளேடை கழற்ற இயலாமல் இருந்தால், அதை கழற்றுவதற்கு ஜாடியில் பிளேடு மூழ்கும் வரை வெண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வரை வைக்கவும். பின்பு நீரை கிழே ஊற்றி விட்டு பிளேடை கழற்றினால் எளிதில் கழற்றலாம்.
*இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.
*உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி ஊற்றி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்
*வற்றல் குழம்பு வைக்கும்போது சிறிதளவு கடுகு, மஞ்சள்தூள், மிளகாய் வற்றல் போன்றவற்றை வெறும் பாத்திரத்தில் போட்டு வறுத்து அதனை தூளாக்கி குழம்பில் போட்டு இறக்கினால் நல்ல மணமாக இருக்கும்.
*சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க வேண்டுமானால் சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் சூடாக இருக்கும்.
*உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும். *ரசம் செய்யும்போது அதனுடன் தேங்காய் தண்ணீரைச் சேர்த்தால் அருமையான ருசியாக இருக்கும்.
*காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.
*முட்டைகோசில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். *காய்கறிகள் வறுக்கும்போது எண்ணெய் சூடாகும் போது சிறிது சர்க்கரை சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.
*இட்லி சுடும்போது மாவில் ஒரு கிண்ணம் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து இட்லி சுட்டால் மிருதுவாக இருக்கும். இரண்டு நாட்கள் கெடாமலும் இருக்கும்
. *சமையலில் உப்பு அதிகமாக போய்விட்டால் உருளைகிழங்கை அதில் அறிந்து போட்டால் உப்பை எடுத்துவிடும
*கொத்தமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து விட்டு, தண்ணீரில் அலசி காய வைத்து, காற்று புகாத டப்பாவில் வைத்தால் நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.
*உருளைக்கிழங்கு ��ோண்டா செய்வது போல எல்லா காய்கறிகளையும் போட்டு வதக்கி அதை உருட்டி கடலை மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தால் வெஜிடபுள் போண்டா செய்யலாம். குழந்தைகள் காய்கறிகளை சாப்பிடுவதற்கு எளிய வழியாக இருக்கும்.
*சமையல் அறையில் உள்ள பாத்திரம் கழுவும் தொட்டியை சுத்தமாக வைத்துக் கொள்ள பழைய செய்தித்தாள்களைக் கொண்டு தேய்த்தால் அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும்.
*காபி டிகாஷன் போடுவதற்கு முன் சுடு தண்ணீரில் டிகாஷன் பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன் போட்டால் சீக்கிரம் காப்பித்தூள் இறங்கிவிடும்.
*அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்.
*சேனைகிழங்கு சீக்கிரம் வேக வைப்பதற்கு வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது உப்பு போட்டு வெடிக்கும் வரை வறுத்துவிட்டு, பின்பு தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் கிழங்கை போட்டால் சீக்கிரம் வெந்துவிடும்
*புளிகுழம்பு வைக்கும் போது கடைசியில் மிளகு, சீரகம் அரைத்து பொடியை போட்டால் சுவையாக இருக்கும்.
*இறைச்சியை வேக வைக்கும் போது சிறிது பாக்கு சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும்.
*எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில் வைக்கும்போது உப்பைத் துணியில் முடிந்து வைத்தால் காரல் வாடை வராது.
*சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.
*தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்
*காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும்.
*ரவா உப்புமா அதிகமாகி விட்டால் அதில் சிறிதளவு அரிசி மாவைக் கலந்து வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையாக இருக்கும்.
*ரவா,மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.
*கொழுக்கட்டை மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்து கொழுக்க��்டை சுட்டால் விரிந்து போகாமல் இருக்கும்.
*தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.
*தயிர் புளிக்காமல் இருக்க ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால் புளிக்காது.
*வாழைப்பூ வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கி மோர் கலந்த நீரில் வைத்தால் நிறம் மாறாமல் இருக்கும். கரையும் பிடிக்காது. அதில் உள்ள துவர்ப்பும் நீங்கி விடும்.
*மழைகாலத்தில் உப்பில் நீர் சேர்ந்து விடாமல் இருப்பதற்காக நாலைந்து அரிசியை உப்பு ஜாடியில் போட்டு வைத்தால் தண்ணீர் படியாமல் இருக்கும்.
*நெய் ப்ரெஷ்ஷாக இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால் ப்ரெஷ்ஷாக இருக்கும்.
*இடியாப்பம் செய்து மீந்து விட்டால் அதனை ஒரு நாள் முழுவதும் புளித்த தயிரில் ஊற வைத்துவிட்டு, நிழலில் உலர்த்தி வற்றலாக்கி வைத்துக் கொள்ள���ாம். நன்றாக காய்ந்த பின் டப்பாவில் எடுத்து வைத்துக் கொண்டு தேவையான போது வறுத்து சாப்பிடலாம்.
*பாகற்காயை சமைப்பதற்கு முன்னால் அரைமணி நேரம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்தால் அதன் கசப்பு போய்விடும்... அம்முசிவா
Tumblr media
0 notes
tholseertamilchuvai · 4 years ago
Video
youtube
கடலை மாவு அல்வா | Besan Halwa Recipe | Dessert | Chickpea Flour Halwa R...
0 notes
gagter · 4 years ago
Text
கோதுமை மாவு, அரிசி மாவு என மாவுப் பொருட்கள் வண்டு , புழு வைக்காமல் நீண்ட நாட்களுக்கு ஃப்ரெஷ்ஷாக இருக்க டிப்ஸ்..!
கோதுமை மாவு, அரிசி மாவு என மாவுப் பொருட்கள் வண்டு , புழு வைக்காமல் நீண்ட நாட்களுக்கு ஃப்ரெஷ்ஷாக இருக்க டிப்ஸ்..!
கோதுமை மாவு , அரிசி மாவு, கேழ்வரகு மாவு, கடலை மாவு என மாவு வகைகளை இன்ஸ்டண்டாக பயன்படுத்த பலரும் நீண்ட நாட்களுக்கு தேவைப்படும் வகையில் வாங்கி ஸ்டாக் வைத்திருப்பார்கள். ஆனால் அவை ஒரு சில மாதங்கள் அல்லது நாட்களில் கெட்டுப்போய்விடும். அதில் வண்டு, புழு வைக்க ஆரம்பிக்கும். இதனால் அவற்றை விலை கொடுத்து வாங்கி குப்பையில் கொட்டுவதுபோல் ஆகிவிடும். எனவே இந்த பிரச்னையை சமாளிக்க சூப்பரான டிப்ஸ் இருக்கு. அது…
Tumblr media
View On WordPress
0 notes
venkatesharumugam · 1 year ago
Text
#அசைவமெனும்_அமுதம்
எனது தம்பி மீன் சமைக்கும் போது மீன் குழம்பு வாசத்திலேயே அதில் பூண்டு போட்டுருக்கா இல்ல மாங்காய் போட்டு இருக்கான்னு அதன் மணத்திலேயே அறிந்து கொள்வேன்! அதிலும் விரால் மீன் கருவேப்பிலை ரோஸ்ட் எனது ஃபேவரைட்! மட்டன் ஈரல் குழம்போ அல்லது சுரைக்காய் & சோயா போட்ட மட்டன் குழம்போ கொதிக்கும் போதே அல்சேஷன் போல என்னால் நுகர முடியும்!
சிலசமயம் கத்திரிக்காய் & முருங்கைக்காய் போட்டு வைக்கும் மட்டன் குழம்பில் இருவகை! 1. இளசான முருங்கையை அப்படியே வெட்டிப்போட்டு செய்யும் முருங்கை மட்டன் குழம்பு! 2. முருங்கையை வெட்டிப்போட்டு அதைத் தனியாக நன்கு வேகவைத்து முருங்கைக்கு நடுவில் உள்ள ஜெல்லியை மட்டும் தனியாக வழித்து எடுத்து பெப்பர் தூவிய மட்டன் சுக்கா வருவலுடன் செய்யும் கூட்டு.!
சில நேரங்களில் கண்மாய் கத்திரிக்காயுடன் கோழி சாஃப்ட் ஈரலுடன் தேங்காய் எண்ணெய்யில் வதக்கிய கோழி ஈரல் குழம்பு வைப்பார்.! அது அதகளம்! தோசை இட்லி எல்லாம் தொட்டுக் கொண்டால் பல ஈடு இட்லிகளை ஒருவரே சாப்பிடும் ஈடு இணையில்லாத குழம்பு அது! மதியம் கொஞ்சம் தளர்வாகவும் இரவில் அது கெட்டியாகவும் இரட்டை வேடத்தி��் பின்னியெடுக்கும்! சுவையும் ஜோர்!
மீன்குழம்பில் பூண்டுகளை போட்டு பூண்டையே மீனாக்கி செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய்யை ஊற்றி வைக்கும் விரால் மீன் & அயிரை மீன் குழம்புகளுக்கு ஆயிரம் ஏக்கர்களை அவர் பெயரில் எழுதி வைக்கலாம்.! அது சாதத்திற்கும் சரி இட்லிக்கும் சரி செம காம்போவாக இருக்கும்! தேங்காய், சீரகம், மிளகு, மஞ்சள் சேர்த்து அம்மியில் அரைத்து அவர் வைக்கும் பிச்சுபோட்ட சிக்கன் பிரட்டலுக்கு எல்லாம் சாதமே அதைத் தேடி ஓடிவரும்!
உருளைக்கிழங்கு, வெள்ளை சோயாபீன்ஸ், நுக்கோல் போட்டு செய்யும் மட்டன் நெஞ்செலும்பு சாப்ஸை சாதத்துடனோ, இட்லியுடனோ, இடியாப்பத்துடனோ, சப்பாத்தியுடனோ எதில் வைத்து சாப்பிட்டாலும் சுவை அள்ளும். சில நேரங்களில் அதில் அவித்த முட்டையும் போடுவார்! நான் பெரும்பாலும் மதியம் சமைத்த அந்த முட்டையை இரவில் தான் சாப்பிடுவேன்! அதுவே அக்குழம்பின் சாறுகளில் ஊறி செமையாக இருக்கும்!
கறிவேப்பிலை & புதினாவை மை போல அரைத்து அதில் ஊறவைத்த மட்டன் அல்லது சிக்கனை சமைத்துச் சாப்பிடுவது இன்னொரு இன்பம்! மட்டன் கைமாவில் கோலா உருண்டை உருட்டி பொட்டுக்கடலையை மாவு போல் இடித்து பிரட்டி நுணுக்கிய முந்திரிகள் சேர்த்து வாழை நார் சுற்றி கடலை எண்ணெயில் பொரித்து எடுக்கும் மட்டன் கோலா உருண்டைகள் எல்லாம் வேற லெவலில் இருக்கும்!
வாவல் எனும் போஃம்ப்ரிட் மீனை ப்ளேட் கட்டிங்கில் அறுத்து எலுமிச்சை பிழிந்து ஊறவைத்து பிறகு மசாலா சேர்த்து அதை ஃபிரிட்ஜில் டிப்ரோஸ்ட் செய்து செய்யும் லெமன் தவா ஃபிஷ் அல்லது தந்தூரி ஃபிஷ் அதுவும் குடைமிளகாய் வெங்காயம் ச்செடா சீஸ் சேர்த்து சாப்பிடுவது இன்னும் சிறப்பாகும்! சிக்கன் லாலிபாப்புடன் மைனீஸ், சாஸ் ஏதும் இன்றி புதினா சட்னியுடன் சாப்பிட்டுப் பார்த்தால் சுவர்க்கம் அருகில்!
எலும்பில்லாத கறியை குக்கரில் அரைத்து எடுக்கும் ஸ்மாஷ்டு மீட் எனப்படும் அரைத்த கறி.. ஃபிஷ், சிக்கன் அல்லது மட்டன் இப்படி எதுவானாலும் இதோடு தக்காளி, புதினா, ஆனியன், ஆலிவ் ஆயில், ஸ்பானிஷ் மிளகாய், பாப்ரிக்கா (குடை மிளகாய்தூள்) துருவிய ச்செடா சீஸ், கார்லிக் பேஸ்ட், ஒயிட் பெப்பர், முட்டைகோஸ் தழைகள், துருவிய சின்ன வெங்காயம் எல்லாம் சேர்த்து வதக்கலாக சமைத்தால் ஆஹா அதுவல்லவோ ருசி! டிரை பண்ணிப்பாருங்க!
டிஸ்கி : இப்போது நான் அதிதீவிர டயட்டில் உள்ளேன்!
Tumblr media
0 notes
karuppuezhutthu-blog · 9 months ago
Text
SVS: வேல்மார்ட் சூப்பர் மார்க்கெட்டை மதுரை தொடங்கிய SVS நிறுவனம்|Madurai SVS Foods Inaugurate their new super market on 4 th Oct 2024
மதுரை மக்களின் பேராதரவுடன் நான்கு தலைமுறையாக மதுரையில் 90 ஆண்டுகளாய் இயங்கி வரும் SVS நிறுவனம் . கடலை மாவு கேப்பை மாவு மற்றும் உணவு இடு பொருட்களை உற்பத்தி செய்து தமிழகமெங்கும் விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் அடுத்த அத்தியாயமாக கடந்த அக்டோபர் 4 – ம் தேதி வேல்மார்ட் சூப்பர் மார்க்கெட்- ஐ மதுரை தெப்பக்குளம் அருகில் உள்ள SVS தொழில் கூட வளாகத்தில் வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப பிரத்யேகமான…
0 notes
esamayal · 5 years ago
Link
ஸ்பெஷலான கடலை மாவு பர்பி செய்வது எப்படி?
0 notes
tamilindia · 4 years ago
Text
மீதமான சாதத்தில் சூப்பர் முறுக்கு ரெசிபி உங்களுக்காக. முறுக்கு மாவில் செய்தாலும் கூட இப்படி ஒரு முறுக்கை சுட்டு எடுக்க முடியாது.
மீதமான சாதத்தில் சூப்பர் முறுக்கு ரெசிபி உங்களுக்காக. முறுக்கு மாவில் செய்தாலும் கூட இப்படி ஒரு முறுக்கை சுட்டு எடுக்க முடியாது.
அரிசி மாவில் செய்யும் முறுக்கு கூட இந்த அளவிற்கு சூப்பராக வராது. ஆனால் மீதமான சாதத்தை வைத்து இப்படி ஒரு முறை முறுக்கை சுட்டு எடுத்துப் பாருங்கள். இதன் சுவை மொறுமொறுவென அட்டகாசமாக இருக்கும். அதேசமயம் மீதமான சாதத்தை நாம் வீணாகாமலும் இருக்கலாம். சரி பழைய சாதத்தில் முறுக்கு எப்படி செய்வது நேரத்தைக் கடத்தாமல் இப்போதே தெரிந்து கொள்வோமா. முதலில் மீதமான சாதம் – 1 கப், கடலை மாவு – 1/4 கப், அரிசி மாவு –…
Tumblr media
View On WordPress
0 notes
universaltamilnews · 6 years ago
Text
முகப் பருக்கள் மற்றும் தேமலை போக்கும் மருத்துவ குணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சள்…
முகப் பருக்கள் மற்றும் தேமலை போக்கும் மருத்துவகுணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சள்… #Facialpimples #கடலைமாவு #ut #utlifestyle #tamilnews #universaltamil
கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது.
சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கியோ கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும்.
முகப் பருக்கள், தேமல்கள் ஆகியவை வராது. கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூள் செய்து துணியில் சலித்து எடுக்க வேண்டும். இதனை தேனில் கலந்து சாப்பிட்டால் குன்ம…
View On WordPress
0 notes
tamilwealth-blog · 8 years ago
Photo
Tumblr media
சருமத்தை ஆரோக்கியமானதாகவும் அழகானதாகவும் மாற்ற எளிய வழிகள்! அழகான சருமம் உள்ளவர்கள் எப்போதும் எந்த ஒரு குருப்பிலும் தனித்தன்மை பெற்றவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கென தனி மரியாதை கொடுப்பார்கள் சிலர். ஆனால் எல்லோரும் வெள்ளையாக இருப்பதில்லை. எண்ணெய் பசை சருமம், வெயிலால் ஏற்பட்ட கருமை போன்றவற்றால் சரும நிறம் மாறி இருக்கும். இதை சரி செய்து சருமத்தை அழகானதாக மாற்ற உதவும் வழிமுறைகளை இப்போது பார்க்கலாம். சருமத்தை ஆரோக்கியமானதாகவும் அழகானதாகவும் மாற்ற எளிய வழிகள்:- • வெள்ளரிக்காயை நன்றாக அரைத்து அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த ந���ரில் கழுவினால் வெயிலினால் ஏற்பட்ட கருமை நீங்கும். • தயிர் மற்றும் ஸ்ட்ராபெர்ரி கலந்த கலவையை முகத்தில் தடவினால் போதும். இந்த இரண்டிலும் ப்ளீச் தன்மை உள்ளது. அதனால் முகத்தின் கருமையை நீக்கி நிறத்தை அதிகரிக்க உதவுகிறது. • கடலை மாவுடன் சிறிது உருளைக்கிழங்கு சாறு சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீக்கப்பட்டு சருமம் பொலிவ்டையும். • பால் பவுடருடன் சிறிது தேங்காய் பால் சேர்த்து முகத்தில் தேய்த்து காய்ந்தவுடன் கழுவினால் முகத்தின் ஈரப்பதத்தை அதிகரிக்கும். • சந்தனத்தை அரைத்து, சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவினால் அழகான சருமத்தை பெற முடியும். சென்ஸிடிவ் சருமம் உள்ளவர்களுக்கு இது நல்ல பலனை அளிக்கும்.
0 notes