comn19
comn19
Co1 Comn 19
359 posts
Social Blog Posts, Fun videos, Images and more in the year 2019 powered by Co1 Internet
Don't wanna be here? Send us removal request.
comn19 · 5 years ago
Text
#முக்கிய_செய்திகள்
#பிரிவு_உபச்சார_விழா
அன்பர்களே!
🙏🙏🙏🙏🙏
வருகின்ற டிசம்பர் 31 ஆம் தேதி திருவாளர்.
#2019 ஓய்வு பெறுகிறார்..*…
அவருடைய
12 மனைவிகளும்,*
52 பிள்ளைகளும்,*
365 பேரக்குழந்தைகளும்*,
#டிசம்பர் 31 அன்று , 23.59 மணிக்கு, இந்த பிரிவு உபச்சார விழாவற்கு வருகை தந்து சிறப்பிக்க உள்ளனர்!*
திருவாளர்.2019*
அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்கு நற்செய்தியாக கூறுவது என்னவென்றால்"
“ஓய்வு பெறும் அப்பொழுதே *உங்களுடைய அனைத்து பிரச்சனைகளையும் துக்கங்கள், வஞ்சகங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள், நிராகரிப்பு,கெட்ட எண்ணங்கள் இன்ன பிறவற்றைகளையும் தன்னுடனே எடுத்து செல்லவதாக கூறியுள்ளார்!”
அடுத்ததாக
#குமாரர்_2020ஜனவரி 1 ம் நாள் 12:01 AM. பதவி ஏற்க போகிறார்!*
*குமாரர் 2020 கூறியதாவது..
“நீங்கள் 2019ல், இழந்தவற்றிற்கு ஈடாக.. வெற்றி,நீண்ட ஆயுள், ஆரோக்கயம், அன்பு, மகிழ்ச்சியும், மன சமாதானம்,வற்றாத நிதியமும், தாளாத கீர்த்தியும், வளமையும் , இன்னபிர நீங்கள் நினைக்கும் அனைத்து நற்சிந்தனைகளையும் வாரி வழங்கப்போவதாக சூழுரைத்துள்ளார்!”
#இனிய_2020_
புத்தாண்டு_
நல்வாழ்த்துகள்!!!💐
0 notes
comn19 · 6 years ago
Text
மனிதன்,
5 வயதில் விரல்களை எண்ணினான்,
10 வயதில் எண்களை எண்ணினான்,
15 வயதில் மதிப்பெண்களை எண்ணினான்,
20 வயதில் தேர்வு வினாக்களை எண்ணினான்
25 வயதில் சம்பளத்தை எண்ணினான்,
30 வயதில் நண்பர்களை எண்ணினான்,
35 வயதில் வாரிசுகளை எண்ணினான்,
40 வயதில் கடன்களை எண்ணினான்,
45 வயதில் நோயை எண்ணினான்,
50 வயதில் சொந்தங்களை எண்ணினான்,
55 வயதில் மாத்திரையை எண்ணினான்,
60 வயதில் பேரக் குழந்தைகளை எண்ணினான்,
அதற்கு பின் வயதை எண்ணினான்,
இறந்த பின், தனக்காக அழும் உள்ளங்களை எண்ணினான்.
எண்ணிப் பார்க்கையில் ,
தன்னிடம் கூடவே இருந்தது
கணிதம் மட்டும் தான்
என எண்ணினான் !! விடை என்னவோ
தொடக்கமும் முடிவும்"0" தான்.
1 note · View note
comn19 · 6 years ago
Text
#Not_Easy_to_be_a_Teacher
😂😂🤣🤣😜😜😂🤣😜
*Teacher:* ''Construct a sentence using the word "sugar''
*Pupil:* ''I drank tea this morning.''
*Teacher:* ''Where is the word sugar.''
*Pupil:* ''It is already in the tea..!!''
*Not Easy to be a Teacher !!!!!*
*TEACHER*: Our topic for today is Photosynthesis.
*TEACHER* : Class, what is photosynthesis?
*Student*: Photosynthesis is our topic today.
*Not Easy to be a Teacher !!!!!*
*TEACHER* : John is climbing a tree to pick some mangoes. ( Begin the sentence with Mangoes)
*Student* : Mangoes, John is coming to pick you...
*Not Easy to be a Teacher !!!!!*
*TEACHER* : What do you call mosquitoes in your language?
*Student*: We don't call them, they come on their own...
*Not Easy to be a Teacher !!!!!*
*TEACHER* : Name the nation, people hate most
*Student*: Exami-nation...
*Not Easy to be a Teacher !!!!!*
*TEACHER* : How can we keep our school clean?
*Student*: By staying at home...
*Not Easy to be a Teacher !!!!!*
*TEACHER* : One day our country will be corruption free. What tense is that??
*Student*: Future impossible tense...
*AND THE STRUGGLE CONTINUES!!!!!
God Bless Our, Teachers 😂😂
0 notes
comn19 · 6 years ago
Text
காவல்துறை புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது என்னவென்றால் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பெண்கள் வீட்டிற்கு செல்ல வாகனம் எதுவும் இல்லை என்றால் காவல்துறை உதவி எண்கள் 1091 & 7837018555 என்ற எண்களுக்கு தொடர்புகொண்டு வாகன உதவி கேட்கலாம் மேலும் இந்த சேவையானது வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் செயல்படும்... அப்படி போன் செய்து கேட்கும் பொழுது அருகிலுள்ள காவல்துறை வாகனம் அவர்களை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு பத்திரமாக கொண்டு போய் சேர்க்கும், மேலும் இது முற்றிலும் இலவசமாக சேவையாகும்...
இந்த பதிவை அனைவருக்கும் அனுப்புங்கள்....
0 notes
comn19 · 6 years ago
Text
நோய் வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்!
💊 முகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் ---
கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம்.
💊 வயிற்றுவலியோ வயிற்றாலையோ இருந்தால் ---
கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என அர்த்தம்.
💊 கண்களோ மூக்கோ தொடர்ந்து அரிக்குமானால் ---
ஜலதோசம் பிடிக்கப்போகிறது என அர்த்தம்.
💊 காதில் அதீத குடைச்சலோ வலியோ வந்தால் ---
காய்ச்சல் வர நேரம் வந்துவிட்டது என அர்த்தம்.
💊 கைமடிப்பு, கழுத்து மடிப்பு, கால் இடுக்கில் கருப்பான பட்டை விழுந்தால் ---
கணையத்தில் இன்சுலினின் சுரப்பு அதிகமாகிறது என அர்த்தம்.
💊 உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக பசி எடுக்கிறதென்றால் ---
அது நீரிழிவின் ஆரம்பம் என அர்த்தம்.
💊 கால் பாதங்களில் வெடிப்பு உண்டானால்--
உடலில் அதிக அழுத்தமும் சூடும் இருக்கிறது என அர்த்தம்.
💊 முழுங்கால் மூட்டு அல்லது கால்களின் மணிக்கட்டு வலியெடுத்தால் ---
உடலில் அதிக எடை கூடிவிட்டது அதனைக் குறைக்கவேண்டும் என அர்த்தம்.
💊 தொடர்ந்து முதுகுத்தண்டு அல்லது இடுப்புப் பகுதி வலிக்குமானால் ---
அந்த இரு எலும்புகளும் மிருதுவாகி தேய்மானம் தொடங்குகிறது என அர்த்தம்.
💊 உதட்டில் அல்லது மேல்தோலில் வெடிப்பு, பிளவு, தோல் உரிதல் உண்டாகுமானால் ---
உடலில் நீர்ச்சத்தும் எண்ணெய்ப்பசையும் குறைந்துவிட்டது என அர்த்தம்.
💊 தோள்பட்டை, முதுகுத்தாரை, குதிங்கால் இவற்றில் இறுக்கமோ வலியோ வந்தால் ---
உடலில் காற்றின் அழுத்தம் கூடி வாயு தேங்கியுள்ளது என அர்த்தம்.
💊 கைவிரல் நகங்களுக்கு மேல் மெல்லிய கருப்புக்கோடு விழுமானால் ---
இருதயத்தில் பிரச்சினை தொடங்குகிறது என அர்த்தம்.
0 notes
comn19 · 6 years ago
Text
*ஒரு பெண் தன்னந்தனி ஆளாக நின்று, 171 அடி உயரத்துக்கு பிரமாண்டமான ஒரு ஆலய கோபுரத்தைக் கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல.*
*அதுவும் 18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் ஆட்சி நடந்தபோது இந்த சாதனையை அந்த பெண் நிகழ்த்தியது பிரம்மிக்கத்தக்கது.*
அந்தப் பெண் சாதாரணப் பெண் அல்ல. அவர் ஒரு சித்தப் புருஷர். சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு உயர் சித்த நிலைப் பெற்றவர். பொதுவாக ஒவ்வொரு சித்தருக்கும் குரு என்று யாராவது இருப்பார்கள். ஆனால் இந்தப் பெண்ணுக்கு சிவபெருமானே குருவாக இருந்தார். குரு என்று வேறு யாரையும் தேடாமல் பிறவியிலேயே சிவன் மீது சித்தம் வைத்த அந்தப் பெண் நடத்திய அற்புதங்கள் ஏராளம்.
அந்தப் பெண்ணின் பெயர் அம்மணி அம்மாள். பஞ்சப் பூதத் தலங்களில் அக்னித் தலமான திருவண்ணாமலையில் அவர் வாழ்ந்தார் என்று சொல்வதை விட அற்புதங்களை நிகழ்த்தி அருளாளராகத் திகழ்ந்தார் என்றே சொல்லலாம்.
அந்த ஆலயத்தில் வடக்குப் பகுதி கோபுரம் மட்டும் கட்டப்படாமல் இருந்தது.
அதாவது கோபுரம் கட்ட அடித்தளம் போடப்பட்டு,
பிறகு ஏனோ கட்டப்பட முடியாமல் அப்படியே மொட்டையாக நின்று போனது. எத்தனையோ பேர் முயன்றும் அந்த கோபுரத்தைக் கட்ட இயலவில்லை.
ஈசனுக்குத் தெரியும், எந்த வேலையை, யாரிடம் கொடுத்து, எப்படி முடிக்க வேண்டும் என்று. அதன்படி திருவண்ணாமலை ஆலய வடக்குக் கோபுரத்தைக் கட்ட அம்மணி அம்மாளை ஈசன் தேர்வு செய்து அருள் புரிந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் உள்ள சென்னசமுத்திரத்தில் கோபால் பிள்ளை- ஆயி தம்பதிக்கு 1735-ம் ஆண்டு மார்கழி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் அம்மணி அம்மாள் பிறந்தார். அவரது உண்மையான பெயர் அருள்மொழி.
சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவருக்கு சிறு வயதிலேயே திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மீது அளவு கடந்த பக்தி ஏற்பட்டது.
தங்கள் மகள் எப்போதும் அருணாசலேஸ்வரர் பெயரை உச்சரித்துக் கொண்டே இருப்பதைப் பார்த்து பயந்து போன அவர் பெற்றோர் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர். சொந்த மாமன் மகனை மணமகனாகப் பேசி முடித்தனர்.
இதை அறிந்த அம்மணி அம்மாள், “நான் இதற்காக பிறவி எடுக்கவில்லை” என்று கூறி, வேதனைத் தாங்காமல் சுமார் 1 மைல் தொலைவில் உள்ள கோமுட்டி குளத்துக்குள் குதித்து விட்டார்.
ஊரே திரண்டு வந்து குளத்துக்குள் இறங்கித் தேடினார்கள். அம்மணி அம்மாளை காண முடியவில்லை. மூன்றாவது நாள் குளத்தில் இருந்து அம்மணி அம்மாள் வெளியில் வந்தார். ஊரே திரண்டு ஆச்சரியப்பட்டது.
குளக்கரை மண்ணை எடுத்து அவர் கொடுக்க, அது அவல் பொரியாக மாறியது. அம்மணி அம்மாள் சித்தப்புருஷராக மாறி இருப்பது அப்போதுதான் அவர் பெற்றோருக்கும், ஊருக்கும் தெரிய வந்தது.
தினமும் அண்ணாமலையாருக்கு தொண்டு செய்வதும், கிரிவலம் செல்வதுமாக இருந்த அவருக்கு ஒருநாள், “வடக்குக் கோபுரத்தை கட்டும் பணியைத் தொடங்கு” என்று ஈசன் உத்தரவிட்டார்.
அம்மணி அம்மாள் சித்தர் சக்தி பெற்றிருந்தாலும் முதலில் அவருக்கு பிரமிப்பாகத்தான் இருந்தது.
அம்மணி அம்மாளின் ஆற்றலை அறிந்து வியந்த வணிகர்களும், பொதுமக்களும் தங்களால் இயன்றதைக் கொடுத்தனர். இப்படி சேர்ந்த பணத்தைக் கொண்டு கோபுரம் கட்டும் வேலையை அவர் மேற்கொண்டார்.
கோபுரம் ஒவ்வொரு நிலையாக கட்டி முடிக்கப்பட்டது. ஒன்று முதல் ஐந்து நிலைகள் வரை கட்டி முடிக்கப்பட்டபோது, அம்மணி அம்மாளுக்கு மீண்டும் பணம் தேவைப்பட்டது.
பொது மக்களிடமும், வணிகர்களிடமும் திரும்ப, திரும்ப எத்தனைத் தடவைதான் பண உதவியும், பொருள் உதவியும் கேட்க முடியும்? எனவே மைசூர் மகாராஜாவிடம் போய் பொன் பொருள் உதவிகள் கேட்க அவர் தீர்மானித்தார்.
மறுநாளே மைசூருக்கு பயணமானார். அரண்மனையை அடைந்தபோது வாசலில் நின்ற வாயிற்காப்பாளன் அவரை உள்ளே விட மறுத்தான்.
அம்மணி அம்மாளின் எளிமையானக் கோலத்தைப் பார்த்து சந்தேகம் அடைந்த வாயிற்காப்பாளன் அவரை ஒரு ஓரமாக உட்கார வைத்தான். காலையில் வந்தவர் மதியம் வரை அதே இடத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார்.
அதே சமயத்தில் அரண்மனை உள்ளே தர்பார் மண்டபத்தில் ஒரு சுவாரசியம் நடந்து கொண்டிருந்தது.
லகிமா ஆற்றலால் உலகின் எந்தப் பகுதிக்கும் சென்று வந்து விடும் சக்தியைப் பயன்படுத்தி அம்மணி அம்மாள் அரண்மனைக்குள் சென்றிருந்தார்.
பொதுவாக சித்தர்களுக்கு ஒரே நேர���்தில் 2 அல்லது 3 இடங்களில் தோன்றும் ஆற்றல் உண்டு.
இந்த ஆற்றலைப் பயன்படுத்தி அம்மணி அம்மாள் அரண்மனைக்குள் சென்றிருந்தார். அதே சமயத்தில் அரண்மனை வாசலில் வாயில் காப்பாளனால் தடுக்கப்பட்ட இடத்திலும் அம்மணி அம்மாள் இருந்தார்.
உரிய அனுமதியின்றி ஒரு பெண் தன் அருகே வந்து நிற்பதைக் கண்டதும் மகாராஜா மிகவும் ஆச்சரியமடைந்தார். “நீ யார்? எப்படி உள்ளே வந்தாய்? உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்.
அம்மணி அம்மாள் தன்னைப் பற்றியும், திருவண்ணாமலை ஆலயத்தில் கோபுரம் கட்டி வரும் தகவலையும் சொல்லி, அந்த கோபுரப் பணியை நிறைவு செய்ய பொன்னும், பொருளும் கேட்க வந்திருப்பதாக கூறினார்.
மேலும் வாயிற்காப்பாளன் தன்னை உள்ளே விட மறுத்ததால், ஒரே நேரத்தில் 2 இடங்களில் தோன்றும் சித்தாடல் மூலம் உள்ளே வந்ததாக தெரிவித்தார். இதைக் கேட்டதும் மைசூர் மகாராஜா நம்ப முடியாமல் பார்த்தார்.
பிறகு வாயிற்காவலனை வரச் சொல்லி உத்தரவிட்டார். மகாராஜா இருக்கும் அவைக்குள் வந்த வாயிற் காவலன், சற்று அதிர்ச்சியுடன் அம்மணி அம்மாளைப் பார்த்து, “உங்களை நான் உள்ளே விடவில்லையே. வெளியில்தானே அமர்ந்திருந்தீர்கள்.
உள்ளே எப்படி வந்தீர்கள்?” என்றான். உடனே மகாராஜா, நீண்ட நேரமாக அந்த அம்மாளுடன் தான் பேசிக் கொண்டிருப்பதாக கூறி விட்டு, வாயிற் காவலனுடன் விறுவிறுவென வாசல் பகுதிக்கு வந்தார்.
அங்கும் ஒரு ஓரமாக அம்மணி அம்மாள் அமர்ந்திருந்தார். அவரை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றபோது, சபைக்குள்இருந்த அம்மணி அம்மாள் மாயமாய் மறைந்திருந்தார்.
உடனே வந்திருப்பவர் சாதாரண பெண் அல்ல என்பதை மகாராஜா புரிந்து கொண்டார்.
அம்மணி அம்மாள் வடிவில் அண்ணாமலையாரே வந்து விட்டதாக கருதினார். நன்கு உபசரித்தார். பட்டுச்சேலை ஒன்று பரிசளித்தார்.
பிறகு தனது பட்டத்து யானை மற்றும் குதிரைகள், ஓட்டகங்களில் நிறைய பொன்னும், பொருளும் ஏற்றி கோபுரத்தைக் கட்டி முடிக்குமாறு அம்மணி அம்மாளை மகாராஜா அனுப்பி வைத்தார்.
மைசூர் மகாராஜா கொடுத்த பொன், பொருட்களைக் கொண்டு கோபுரத்தின் 6-வது மற்றும் 7-வது நிலைகளை எளிதாகக் கட்டி முடித்தார்.
இன்னும் 4 நிலைகள் கட்ட வேண்டும். பணத்துக்கு என்ன செய்வது என்று தவித்தார். அண்ணாமலையாரே வழி காட்டுங்கள் என்று ��ழ்ந்த தவத்தில் அமர்ந்து விட்டார்.
அப்போது அண்ணாமலையார், அவர் கனவில் தோன்றி, “கோபுர வேலையைத் தொடங்கு. தினமும் வேலை முடிந்ததும் பணியாளர்களுக்கு விபூதியை அள்ளிக் கொடு. நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.
அதன்படியே கோபுர வேலை நடந்தது. தினமும் மாலை பணியாட்களுக்கு சம்பளத்துக்கு பதில், அம்மணி அம்மாள் திருநீறை அள்ளிக் கொடுக்க, அது அவரவர் செய்த வேலைக்கு ஏற்ற கூலியாக மாறியது. இப்படி கோபுரத்தின் 11 நிலைகளும் கட்டி முடிக்கப்பட்டன.
இதன் மூலம் மனதில் துணிச்சலும், இறை அருளும் இருந்தால் எதையும் செய்து முடிக்க முடியும் என்பதை அம்மணி அம்மாள் தெளிவுபடுத்தினார். அவரது விடாமுயற்சியைக் கண்டு ஆங்கிலேயர்களும் வியந்து நின்றனர்.
171 அடி உயரத்துக்கு கட்டப்பட்ட அந்த கோபுரம், கிழக்கில் உள்ள ராஜகோபுரத்துக்கு இணையானதாகக் கருதப்படுகிறது.
ஏனெனில் அம்மணி அம்மன் கோபுரத்திலும், ராஜகோபுரத்திலும் ஒரே மாதிரி தலா 13 கலசங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தெற்கில் உள்ள திருமஞ்சன கோபுரமும் (157 அடி) மேற்கில் உள்ள பே கோபுரமும் (144 அடி) வடக்கு கோபுரத்தை விட உயரம் குறைந்ததாகும்.
திருவண்ணாமலை ஆலயத்தில் ராஜகோபுரத்துக்கு அடுத்தப்படியாக பெரிய கோபுரத்தைக் கட்டி சாதனை படைத்ததால் அந்த கோபுரத்தை எல்லோரும் “அம்மணி அம்மன் கோபுரம்” என்று அழைக்க நாளடைவில் அது நிலைத்துப் போனது.
இந்தக் கோபுரம் கட்டி முடித்ததும், கோபுரத்துக்கும், ஆலயத்துக்கும் அம்மணி அம்மாள் தாமே முன்நின்று கும்பாபிஷேகத்தை நடத்தினார்.
பிறகு துறவி போல வாழ்ந்த அவர் பல்லாயிரக்கணக்கான வர்களுக்கு திருநீறு கொடுத்து நோய் தீர்த்தார்.
திருநீறு மூலம் அற்புதங்கள் செய்து புகழ் பெற்ற அம்மணி அம்மாள் தன் 50-வது வயதில் 1875-ம் ஆண்டு தைப்பூசம் தினத்தன்று பரிபூரணம் அடைந்தார்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் 8-வது லிங்கமான ஈசான்ய லிங்கம் எதிரில் அவருக்கு ஜீவசமாதி அமைக்கப்பட்டுள்ளது.
நன்றி வெங்கடகிருஷ்ணன்
0 notes
comn19 · 6 years ago
Text
பெற்றோர்களின் கனிவான கவனத்திற்கு:
இனி, நம் குழந்தைகள் ÷ அனைவரும் 1,6,9,11 வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் புதிய கற்பித்தல் முறைகளுக்காக
' smartphones'
பயன்பாடும், ' cam scanner,
Diksa, Mx Videoplayer, Es file manager'
போன்ற Android Apps,
' You tube 'யும்
பயன்படுத்த தேவையும்
வரலாம். அவ்வாறு பயன்படுத்தும் போது,
அடிக்கடி இடையிடையே சில முகம் சுளிக்கும் விளம்பரங்களும் வரலாம். எனவே,
முன்னெச்சரிக்கையாக
'Phone 'ல்
செய்ய வேண்டியது;
' Play store' சென்று
' Settings' ல்
' Parent control' option
ஐ 'on' செய்யவும்.
அதன் கீழே உள்ள
'Apps and Games'
ஐ கிளிக் செய்து '12+'ல் டிக் செய்யவும்.
அடுத்ததாக ' Films' ஐ கிளிக் செய்து ' U' என்பதை டிக் செய்யவும்.
அதேபோல் ' YOU TUBE' settings
ல் ' Restriction mode ' ஐ 'On' செய்யவும்.
இப்போது, நம் குழந்தைகளின் smartphone ல்,
தேவையற்ற விளம்பரம்,Video
குறுக்கிடாமல் பயன்படுத்துவதற்கு
பாதுகாப்பானதாக இருக்கும்.
(சமூக நலன் கருதி
திரு.
செந்தில் காவல் ஆய்வாளர் அவர்கள்,
திரு. வெங்கடாசலம்
உதவி ஆய்வாளர் அவர்கள்,
எடப்பாடி காவல் நிலையம்,
சேலம் மாவட்டம்.
பயனுள்ள பதிவு)
0 notes
comn19 · 6 years ago
Text
*💐இன்று தமிழ்நாட்டின் பிரபலமான திரைப்படப் பின்னணிப் பாடகி எல்.ஆர் .ஈஸ்வரி அவர்களின் பிறந்த நாள்.*💐
*💐பாடகி எல். ஆர். ஈஸ்வரி பிறந்த நாள் : டிசம்பர் 7 , 1939*.💐
எல். ஆர். ஈஸ்வரி (பிறப்பு: திசம்பர் 7 , 1939 ) தமிழ்நாட்டின் பிரபலமான ஒரு திரைப்படப் பின்னணிப் பாடகி. 1958 ஆம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் பாடி வரும் இவர் ஆயிரக்கணக்கான பாடல்களை பல மொழிகளில் பாடியுள்ளார்.
வாழ்க்கைச் சுருக்கம்
பரமக்குடிக்கு அருகே இளையான்குடி என்ற ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட அந்தோனி தேவராஜ், ரெஜினாமேரி நிர்மலா ஆகியோருக்கு சென்னையில் பிறந்தார் ஈசுவரி. இவரது தாயார் எம். ஆர். நிர்மலா ஜெமினி ஸ்டூடியோவில் குழுப்பாடகியாக இருந்தவர். ஈஸ்வரியின் இயற்பெயர் "லூர்துமேரி ராஜேஸ்வரி".
எழும்பூரில் உள்ள மாநிலப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இளம் வயதிலேயே தந்தை (36) இறந்து விட்டார். அமல்ராஜ் என்ற தம்பியும், எல். ஆர். அஞ்சலி என்ற தங்கையும் இவருக்கு உண்டு.
திரையுலகில்
மனோகரா ( 1954 ) படத்திற்காக எஸ். வி. வெங்கட்ராமன் இசையமைப்பில் "இன்ப நாளிலே இதயம் பாடுதே" என்ற பாடலை
ஜிக்கி குழுவினர் பாடினர். அப்பாடலில் தாய் நிர்மலாவுடன் இணைந்து ஈஸ்வரியும் குழுவினருடன் சேர்ந்து பாடினார். அன்று முதல் இவரும் குழுப் பாடகியானார். முதன் முதலில் தனியாகப் பாடும் சந்தர்ப்பம் நல்ல இடத்துச் சம்பந்தம் ( 1958 ) திரைப்படத்துக்காக கே. வி. மகாதேவனின் இசையமைப்பில் இவரே தான் அவரே அவரே தான் இவரே என்ற பாடலைப் பாடினார். இதுவே இவரது முதல் பாடலாகும். {பொண்ணு மாப்ப்பபிளே ஒன்த்தினாபோகுது ஜிகு ஜிகு வண்டியிலே}🎊குறிப்பு:திரைஞானம்🎊 ஈஸ்வரி நான்கு பாடல்களைப் பாடினார்.
இதனையடுத்து 1959 இல் வெளிவந்த நாலு வேலி நிலம் படத்துக்காக திருச்சி லோகநாதனுடன் இணைந்து ஊரார் உறங்கையிலே என்ற பாடலைப் பாடினார். இதனையும் கே.வி.மகாதேவனே இசையமைத்திருந்தார். 1961 இல் வெளிவந்த பாசமலர் திரைப்படத்தில் இவர் பாடிய வாராயென் தோழி என்ற பாடல் இவருக்கு மிகவும் புகழைத் தேடித்தந்த பாடல். இது இன்றும் திருமண விழாக்களில் ஒலிக்கும் பாடலாகும். "எலந்தைப் பழம்", முத்துக்குளிக்க வாரியளா போன்ற பாடல்கள் இவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்த ஏனைய பாடல்கள்.
பக்திப் பாடல்கள்
பிற்காலத்தில் இவர் துள்ளிசைப் பாடல்களையே நிறையப் பாடினார்.
எழுபதுகளின் பிற்பகுதியில் ஈஸ்வரிக்கு திரைப்பட வாய்ப்புக் குறைந்தது. இருந்தாலும் பக்திப் பாடல்களை திரைப்படங்களிலும், வெளியிலும் அதிகம் பாடி வந்தார்.
கூட்டத்தோடு கூட்டமாக "கோரஸ்'' பாடத்தொடங்கிய எல்.ஆர்.ஈஸ்வரி வெகு விரைவிலேயே சிறந்த பின்னணி பாடகியாக உயர்ந்தார்.
எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் ஒருவித வசிய சக்தி இருக்கும், பாடும் முறையில் "கிக்'' இருக்கும். எனவே, லட்சக்கணக்கான ரசிகர்களை அவர் பெற்றார்.
"இது எனக்கு இறைவன் கொடுத்த வரம்'' என்று கூறிய ஈஸ்வரி, தொடர்ந்து சொன்னார்:
"ஏழ்மையில் பிறந்த நான், இந்த அளவு உயர்ந்திருக்கிறேன் என்றால், அதற்காக நான் பட்ட கஷ்டங்கள் ஏராளம். எனக்குப் பெற்றோர்கள் வைத்த பெயர் டி.எல்.ராஜேஸ்வரி. பரமக்குடிதான் எங்களுடைய பூர்வீகம். ஆனால், நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை புதுப்பேட்டைதான்.
எழும்பூரில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில்தான் நான் பிறந்தேன். எனது தந்தை பெயர் அந்தோணி தேவராஜ். தாயார் ரெஜினா மேரி நிர்மலா. எனக்கு அமல்ராஜ் என்ற தம்பியும், எல்.ஆர்.அஞ்சலி என்ற தங்கையும் உண்டு.
எனது தந்தை இளம் வயதிலேயே (36 வயது) இறந்து விட்டார். அப்போது எனக்கு வயது 6. வறுமையின் பிடியில் சிக்கி தவித்த எங்களது குடும்பத்தை எனது தாயார் சினிமாவில் கோரஸ் பாடி, அதில் கிடைத்த மிக சொற்ப வருமானத்தைக் கொண்டு காப்பாற்றி வந்தார்.
எப்படியோ கஷ்டப்பட்டு என் தாயார் என்னைப் பள்ளி இறுதி வகுப்பு வரை படிக்க வைத்தார். அதற்கு மேல் கல்லூரிக்கு என்னை அனுப்பி படிக்க வைக்க முடியாத சூழ்நிலை எனது தாயாருக்கு. ஆகவே, எனது தாயாருக்கு உதவி செய்ய நான் உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டேன்.
அப்போது எனக்கு வயது 16. என் தாயார் சினிமாவில் கோரஸ் பாடச் செல்லும்போது, அவருடன் செல்வேன். அவர்கள் பாடுவதை கேட்டு அதே மாதிரி நா���ும் பாடுவேன்.
ஒரு நாள் ஏ.பி.நாகராஜன் தயாரித்த "வடிவுக்கு வளைகாப்பு'' என்ற படத்திற்கு கோரஸ் பாட எனது தாயார் சென்றபோது, நானும் அவருடன் சென்றேன். பாடலின் இடையே "ஹம்மிங்'' கொடுக்க வேண்டிய பெண் அன்று வராததால், தற்செயலாக நான் அந்தப் பாட்டுக்கு "ஹம்மிங்'' கொடுத்தேன். இதுதான் நான் முதன் முதலில் சினிமாவிற்கு கொடுத்த குரல்.
இதைக்கேட்ட அங்கிருந்த ஏ.பி.நாகராஜனும், இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனும் "உனக்கு நல்ல குரல் வளம் இருக்கிறது. நீ எதிர்காலத்தில் பெரிய பாடகியாக வருவாய், பார்!'' என்று மிகவும் பாராட்டினார்கள்.
இதைக்கேட்டவுடன் அந்த நிமிடமே எங்களது குடும்ப கஷ்டமெல்லாம் பறந்து விட்டதுபோல் உணர்ந்தேன். இது எனக்கு வாழ்க்கையில் பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது.
"வடிவுக்கு வளைகாப்பு'' படத்தை அடுத்து ஏ.பி.நாகராஜனும், வி.கே.ராமசாமியும் சேர்ந்து "லட்சுமி பிக்சர்ஸ்'' என்ற படக்கம்பெனியைத் தொடங்கி, "நல்ல இடத்து சம்பந்தம்'' என்ற படத்தைத் தயாரித்தனர். அதில் கே.வி.மகாதேவன் இசை அமைப்பில் எனக்கு பாட வாய்ப்பு கிடைத்தது.
"புதுப்பெண்ணே புதுப்பெண்ணே நிமிர்ந்து பாரு; உன் பிறந்த இடத்தை மறந்து விடாதே நினைத்துப்பாரு.''
"பொண்ணு மாப்பிள்ளை ஒன்னா போகுது ஜிகு ஜிகு வண்டியிலே.''
"இவரேதான் அவரு அவரேதான் இவரு''
"துக்கத்திலும் சிரிக்கணும்; துணிவுடனே இருக்கணும்'' என்ற 4 பாடல்கள் பாடுமë வாய்ப்பை எனக்கு ஏ.பி.நாகராஜன் வழங்கினார்.
எனது பெயர் டி.எல்.ராஜேஸ்வரி என்று இருந்ததை சுருக்கமாக "எல்.ஆர்.ஈஸ்வரி'' என்று மாற்றி வைத்தவரும் ஏ.பி.நாகராஜன்தான்.
அப்போதெல்லாம் ஒரு பாடல் பாடினால் 100 ரூபாய் சம்பளம் கிடைக்கும். அக்காலத்தில் அது பெரிய தொகை. வறுமையில் வாடிக்கொண்டிருந்த என் குடும்பத்தை, வசதியாக வாழ வைக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது'' என்றார் எல்.ஆர்.ஈஸ்வரி.
0 notes
comn19 · 6 years ago
Text
உண்மையான அன்பு என்றால்?
ஒருநாள் குருவும் அவரது சீடனும் குளக்கரையில் அமர்திருந்தார்கள்.
சீடன் பல கேள்விகளை குருவிடம் கேட்டுக்கொண்டிருந்தான்;
குருவும் நிதானமாக பதிலளித்துக் கொண்டிருந்தார். “குருவே! சுயநலமிக்க அன்பிற்கும் சுயநலமில்லாத அன்பிற்கும் வித்தியாசம் என்ன? எனக்கு கொஞ்சம் விளக்கமாக கூறுங்களேன்” என்றான்.
குரு சீடனுக்கு பதிலை எப்படி விளக்குவது என்று சற்றும் முற்றும் பார்த்தார். ஒரு இளைஞன் குளக்கரையில் தூண்டிலைப் பிடித்துக்கொண்டு அமர்திருந்தான். அவனருகில் கூடையில் அவன் பிடித்துப் போட்ட மீன்கள் துடித்துக் கொண்டிருந்தது.
குரு அந்த இளைஞனிடம் பேச்சு கொடுத்தார். “தம்பி! மீன் என்றால் ரொம்ப பிடிக்குமோ?” என்றார். அவனும் “ஆமாம் ஐயா! மீன் என்றால் எனக்கு உயிர். பிடித்து வைத்த மீன்களையெல்லாம் இன்றிரவு என் மனைவியை சமைக்கச் சொல்லி ஒரு பிடி பிடிக்கப் போகிறேன்; உங்களுக்கு வேண்டுமானால் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள்; குளத்தில் நிறைய மீன் கிடக்கிறது” என்றான்.
குருவோ, “எனக்கு வேண்டாம் தம்பி!” என்று புன்சிரிப்புடன் கூறி மறுத்துவிட்டார். நடப்பதையெல்லாம் சீடன் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்.
அந்த இளைஞனும் சற்று நேரத்தில் மீன் பிடித்து விட்டு கிளம்பிவிட்டான்.
ஒரு வயது முதிர்ந்த பெரியவர் குளக்கரையை நோக்கி வருவதை குரு பார்த்துவிட்டார். அவர் கையில் ஒரு வெள்ளை நிறப் பை இருந்தது. குரு அதை உற்றுப் பார்த்தார்; அது பையின் நிறமல்ல, அதிலிருக்கும் பொரியின் நிறம் என்பதை தெரிந்து கொண்டார்.
அந்த பெரியவர் குளக்கரையில் வந்து அமர்ந்தார். பையிலிருந்த பொரியை எடுத்து தண்ணீரில் தூவினார். நூற்றுக்கணக்கான மீன்கள் பொரி இருக்கும் இடத்தை எறும்புகள் போல மொய்த்தன.
குரு அவரிடமும் பேச்சு கொடுத்தார். “என்ன பெரியவரே! மீன் என்றால் ரொம்ப பிடிக்குமோ?” என்று சற்றுமுன் அந்த இளைஞனிடம் கேட்ட அதே கேள்வியை பெரியவரிடம் கேட்டார்.
பெரியவரும், “ஆமாம் ஐயா! மீன் என்றால் எனக்கு உயிர்; நேரம் கிடைக்கும் போதெல்லாம் இங்கு வந்து இங்குள்ள மீன்களுக்கு உணவளிப்பேன்” என்றார்.
அவரிடம் பேசிமுடித்து விட்டு சீடனின் பக்கம் திரும்பினார். “பார்த்தாயா! இருவரும் மீனின் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறார்கள் என்பது அவர்கள் ‘மீனென்றால் உயிர்’ என்று கூறும்போதே தெரிந்திருக்கும்.
அந்த இளைஞன், மீன்களை ‘ருசி’ என்னும் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொண்டான். அவன் தன்னுடைய சந்தோஷத்தில் மட்டுமே கவனம் செலுத்தினான்.
ஆனால் அந்த பெரியவர் மீன்கள் பசியாறுவதற்கு சுயநலமில்லாமல் உணவளித்தார். இருவருக்கும் மீன்கள் பிடித்திருந்தது, ஆனால் இருவரின்
நோக்கம் வேறு.
மொத்தத்தில், அன்பில் சுயநலம் இருந்தால் அது அன்பே இல்லை; சுயநலமில்லாத அன்பு தான் உண்மையானது, நிரந்தரமானது” என்று குரு சீடனுக்கு புரியவைத்தார்....
அன்பு மட்டுமே நிரந்தரம் ... மருந்து மாத்திரை இல்லாமல் எந்த ஒரு நோயையும் குணப்படுத்தும் சக்தி அன்புக்கு மட்டுமே உண்டு ..
0 notes
comn19 · 6 years ago
Text
சாவு வீட்டில் சாவைத் தவிர பணத்திற்காக ஒருத்தரும் அழக்கூடாது...
தவறாக எண்ண வேண்டாம்:
கௌரவ குறைவாக நினைக்க வேண்டாம்.
குடும்ப உறுப்பினர் ஒருவர் திடீரென இறந்து போகையில் கையில் காசு இல்லாமல் திணரும் அந்த குடும்பத்தின் முக்கிய நபரை கவனித்தது உண்டா...?
உண்மையில் பிச்சை எடுக்காத குறையாக அந்த நாள் மாறி விடும்.
எளிமையாக பார்த்தாலும்::
ப்ரீசர் பாக்ஸ், ஆம்புலன்ஸ், ரெண்டு மாலை, போட்டு சுடுகாட்டு செலவு செய்தாலே இன்றைய தேதிக்கு 30,40 ஆயிரம் இல்லாமல் முடியாது. அப்படி இருக்க உறவொன்று இறந்ததை நினைத்து அழுவதா????.
சிலமணி நேரத்தில் பணம் எப்படி தயார் செய்வது????
என்ற நெருக்கடியை நினைத்து அழுவதா..?.
கடன் பழக்கமே, இல்லாதவர்களைக் கூட அச்சூழல் வட்டிக் கடைக்கும், அடகு கடைக்கும் கொண்டு போய் தள்ளும்.
.
இது விசயத்தில் முக்கியமான ஒரு கருத்தை எல்லோரும் தயவு செய்து ஏற்க வேண்டும் அல்லது இனிமேலாவது இந்த செயலை ஏற்படுத்த வேண்டும்...
அப்படி என்ன செயல்?...
இனிமேல் எந்த துக்கம் வீட்டுக்கு சென்றாலும், யாரும் பூ மாலை வாங்கி போட வேண்டாம். தேவையானால் மரியாதைக்கு உதிரி பூ தூவுங்கள். ஏன்?...
நாம் மாலை வாங்கி போட்ட அடுத்த நிமிடமே அந்த மாலையை வெளியே எடுத்து வந்து ஒரு இடத்தில் மாட்டி விடுவார்கள்.
அந்த பூ மாலைக்கு ரூ100/- 200 500 1000 என செலவு செய்வதை விட..
இறந்து போன குடும்பத்திற்கு பணமாக கொடுத்தால், அவர்களுக்கு ஈமக்கிரியை செலவுக்கு ஆகும்.
ஏழையோ பணக்கார குடும்பமோ எல்லா இடங்களிலும் கூலர் பாக்ஸ் தள்ளிக்கிட்டு போக, ஓட்டிகிட்டு போக வண்டி என ஏகப்பட்ட செலவுகள் வந்து விடும். ஓர் இருபது வருடங்களுக்கு முன்பு கையில்தான் தூக்கி போவார்கள். ஆனால் இன்று உடலிலும் தெம்பு இல்லை. மனதிலும் தெம்பு இல்லை.
எனவே....இனி வரும் காலத்தில் இதை பற்றி சிந்திக்க வேண்டும்.
திருமண வீடுகளில் மொய் எழுத்தும் பழக்கம் நாம் அறிந்த ஒன்று தான்.
“ஏதோ கடன உடன வாங்கி கல்யாணம் பண்றான்.
நாம எழுதுற மொய்ப் பணம் கொஞ்சம் அவனுக்கு உதவியா இருக்குமே” என்பதால் தான், இந்த மொய்பழக்கம்.
கல்யாணம் என்பது திடீர் செலவு இல்லை.
நம்ம வசதிக்கு தகுந்த மாதிரி நாள்/ மண்டபம் குறிச்சு நம்ம திட்டப்படி கல்யாணம் நடத்திக்கலாம்.
பல சடங்கு சம்பிரதாயங்கள் இப்படி ஏதோ காரணத்துக்காக ஏதோ ஒரு கால நெருக்கடியில உருவாகி இருக்கலாம்.
ஆனா கல்யாண வீட்டை விட சாவு வீட்டில தான் ... மொய் எழுதும் பழக்கம் அவசியம் இன்றைய விலைவாசி கால நிலைமைக்கு தேவை.
சில ஏரியாகளில் இந்த பழக்கம் இருக்கலாம்.. தெரியல??
ஆனா பெரும்பாலும் இல்லைதானே.
அம்மாவை, அப்பாவை, அண்ணனை, தம்பியை, பிள்ளையை, இழந்த ஒருத்தன் நம்ம கண்ணு முன்னாடி சாவு செலவுக்கு காசில்லாம அலையலாமா...?. தன்மானம் சுட அவனை நா��் கடனோ உதவியோ கேட்க விடலாமா..?
உண்மையில் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் சக மனிதன் ஒருவனின் கரங்களை இறுக பற்றி
“நாங்க இருக்கோம்யா, தைரியாமா இருய்யா. செலவை நாம் எல்லோரும் பாத்துக்கலாம்” என சக மனிதனாக, உறவுக்காரனாக நாம் சொல்ல வேண்டிய தருணம் மற்றதை விட அதுதான்.
இதுவரை இல்லாவிட்டாலும்..... இனி இப்படியொரு பழக்கத்தை துவங்குதல் நல்லது.
சாவு வீட்டில் சாவைத் தவிர பணத்திற்காக ஒருத்தனும் அழக்கூடாது.
நம் நண்பன் வீடாக இருந்தாலும் சரி.
நாம் அனைவரும் மனம் வைத்தால் கண்டிப்பாக ஓர் நல்ல மாற்றம் கிடைக்கும் செய்வோமா?.
*கண்டிப்பாக செய்தே தீர வேண்டும்*
தொகை முக்கியம் அல்ல.
இயன்றது.
இந்த பதிவை மனித நேயம் உள்ள ஒரு மனிதர் பதிவிட்டுள்ளார் அதை சற்று மாற்றி நான் உங்களுக்கு பகிர்கிறேன்.
அனைத்து குழுமங்களிலும் பகிருங்கள்.
தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.
0 notes
comn19 · 6 years ago
Text
சென்னையிலிருந்து மயிலாடுதுறை சென்று கொண்டிருந்த பேருந்து..
தாம்பரம் அருகில் வந்த போது வயதான அம்மா ஒருவர் எழுந்து கண்டக்டரிடம், “திண்டிவனம் வந்திடுச்சா?” என்று கேட்டார்.
“திண்டிவனமா? அதுக்கு இன்னும் ரொம்ப தூரம் இருக்கும்மா”
“சரி”
செங்கல்பட்டு வந்தது.
“சார்.. திண்டிவனம் வந்திடுச்சா?”
“அட.. இன்னும் இல்லைம்மா”
மேல்மருவத்தூரைத் தாண்டியது.
“திண்டிவனம் வந்திடுச்சா?”
“ஐயோ அம்மா.. உங்க இம்சை தாங்கலை. பேசாம கண்ணை மூடிட்டு தூங்கும்மா. திண்டிவனம் வந்தா நானே சொல்றேன்”
“சரி”
அந்தம்மா கண்களை மூடித் தூங்கலானார்.
பேருந்து கடலூரைத் தாண்டிக் கொண்டிருந்தது.
“கண்டக்டர் சார்... திண்டிவனம் வந்திடுச்சா?” - தூங்கி எழுந்த அந்தம்மா கேட்டார். கண்டக்டருக்குத் தூக்கி வாரிப் போட்டது. “ஐயையோ.. நான் மறந்திட்டேனே. நீ ஏம்மா தூங்கின?” பழியை அந்தம்மா மீது தூக்கிப் போட்டார் கண்டக்டர். பேருந்தில் இருந்த அத்தனை பேரின் கோபமும் கண்டக்டர் மீது திரும்பியது. “பாவம் அந்தம்மா.. வண்டியைத் திருப்புய்யா.. திரும்ப திண்டிவனத்துலே கொண்டு போய் அந்தம்மா விட்டுட்டு திரும்பி வா” - அநேகமாக சொன்ன நபருக்கு கும்பகோணமாக இருக்க வேண்டும்.
கண்டக்டருக்கு வேறு வழி தெரியவில்லை. பேருந்தைத் திருப்பினார். வந்த வழியே திண்டிவனத்துக்குச் சென்றது.
ஒரு வழியாக சில மணி நேரங்களில் திண்டிவனம் வந்தது. “எம்மா.. இறங்கும்மா” - சலித்தபடியே கண்டக்டர் கூறினார். பேருந்தில் இருந்த அந்த கும்பகோணத்துக்காரருக்கு முகத்தில் வெற்றிப் புன்னகை.
சாவகாசமாக எழுந்த அந்தம்மா மேலே இருந்து பையை எடுத்துப் பிரித்து அதிலிருந்து பிரஷர் மாத்திரையை எடுத்துப் போட்டு முழுங்கி தண்ணீர் குடித்து திரும்ப அமர்ந்து தூக்கத்தைத் தொடர்ந்தார்.
“என்னம்மா.. திண்டிவனத்துலே இறங்கலையா?” - கண்டக்டர் கேட்டார்.
“நான் ஏன் திண்டிவனத்துலே இறங்கணும்? திண்டிவனம் வந்தவுடனே பிரஷர் மாத்திரை மறந்திடாம போட்டுடுன்னு என் பையன் சொல்லி அனுப்பினான். அதான். நான் மயிலாடுதுறை'ல போகணும்?”
இப்போது கண்டக்டருக்கு பிரஷர் படு பயங்கரமாக எகிறத் தொடங்கியது.
(படித்ததில் பிடித்தது)
0 notes
comn19 · 6 years ago
Text
✍🏼.... திருமண அழைப்பிதழில் மணமக்கள் பெயருக்கு முன்னாள்
🍁திருவளர்ச்செல்வன்/செல்வி என்றால் அது அந்தக் குடும்பத்தின் மூத்த மகன்/மகளின் திருமணமாகும்.
🍁 திருநிறைச்செல்வன்/செல்வி என்றால் இளைய மகன்/மகளின் திருமணமாகும்.
🌱திருவளர்ச்செல்வன்/செல்வி எனும் போது, "திருமணம் நிகழவிருக்கும் எங்கள் மகன்/மகளுக்கு, இளைய சகோதர/சகோதரிகள் உள்ளனர். இது எங்கள் இல்லத்தின் முதல் திருமணம் ஆகும்.
எங்கள் இளைய குமாரன்/குமாரிக்குத் திருமண வயது நிரம்பும் போது, உங்கள் மகன்/மகளுக்கு, திருமண வயது நிரம்பி இருந்தால், வரன் கேட்டு வரலாம்," என்பதைப் பெரியவர்கள் நினைவில் கொள்ள, மறைமுகமாகத் தெரிவிப்பதாகும்.
🌳திருநிறைச்செல்வன்/செல்வி என்றால் எங்கள் இல்லத்தில் திருமணங்கள் நிறைவுற்றன, இத்திருமணமே இறுதியானதாகும், இனி எங்கள் இல்லத்தில் மணமக்கள் யாரும் இல்லை என்று பொருள்படும்.
👆 *திருமண பத்திரிக்கை அச்சிடும் போது கவனத்தில் கொள்வோம்*
🤔🤔🤔🤔🤔🤔
0 notes
comn19 · 6 years ago
Text
நினைவிருக்கிறதா..?
1984-டிசம்பர் 3-ம் தேதி...!!!
போபால் ரயில்வே ஸ்டேஷனில் 'துருவே' என்ற ஸ்டேஷன் மாஸ்டருக்கு இரவு நேரப் பணி.
போபால் ஸ்டேஷன் வழியாக லக்னோ வில் இருந்து மும்பை செல்லும் ரயிலுக்கு சிக்னல்
கிளியரன்ஸ் கொடுத்துவிட்டு
வெளியே வந்தார்.
அவரால் காற்றில் ஏதோ வித்தியாசத்தை உணர முடிந்தது. அவசர அவசரமாக சிக்னல்
அறைக்கு ஓடினார்.
எப்படியாவது லக்னோ டு
மும்பை ரயிலைத் தடுத்து விடுவதுதான் அவரது
நோக்கம்.
ஆனால், அந்த ரயில்
ஏற்கெனவே கிளம்பிவிட்டது. துருவேயால் ஒன்றும் செய்ய முடியவில்லை. லக்னோ-மும்பை
ரயில் வந்தது.
அதில் இருந்து இறங்கிய
பயணிகள் எல்லாம் விஷ வாயுவைத் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தார்கள்.
ஓடியவர்கள் இன்னும் சீக்கிரம்
இறந்தார்கள்.
கொஞ்ச நேரத்தில் போபால் ரயில்
நிலையத்தில் 191 பிணங்கள் கிடந்தன. அந்தக்
காட்சி துருவேயை நிலை குலைய வைத்தது.
பதற்றத்தோடு சிக்னல் அறைக்கு ஓடினார். அங்கு அவருக்குக்
கீழ் பணிபுரியும் சிக்னல் மேன் வாயில் ரத்தம் வழிய செத்துக் கிடந்தார். அவரை
ஓரமாக நகர்த்திப்போட்டுவிட்டு, எந்த ரயிலும்
போபால் வழியே வந்துவிட வேண்டாம்' என்று
தகவல் அனுப்பத் தொடங்கினார்.
அதையும் மீறி வரும் ரயில்கள் ஜன்னலை மூடிக் கொண்டு போபால் ஸ்டேஷனில் நிற்காமல் வேகமாகப் போய் விடுமாறு
அறிவுறுத்தினார்.
மூக்கிலும் வாயிலும் வழிந்த ரத்தத்தைத் துடைத்துக் கொண்டு, இரவு முழுவதும்
விழித்திருந்து வேலை பார்த்தார். அந்த இரவு விடிந்தது.
அடுத்த நாள் சிக்னல் அறையைத்
திறந்தபோது, ஸ்டேஷன் மாஸ்டர் துருவே வாயில்
ரத்தம் வழிந்த நிலையில் சிக்னல் அனுப்பும் கருவியை ஒரு கையால் பிடித்தபடி செத்துக் கிடந்தார்.
துருவே மட்டும் இல்லை எனில், போபால் விஷ வாயுக் கசிவின் மரண எண்ணிக்கை இன்னும்
சில ஆயிரங்கள் கூடியிருக்கும்.
ஆனால்,
போபால் நகரத்தில் விஷவாயு கசிந்த அந்த இரவில் மாநில முதல்வர் அர்ஜுன் சிங்,
நகரில் இருந்து 14 கி.மீ ஓடோடிச் சென்று தப்பித்தார்.
’துருவே’ போன்ற தேச வீரர்களின் தியாகம் ஏனோ அங்கீகரிக்கப் படுவதும் இல்லை.
மக்களுக்கு ஞாபகம் இருப்பதும் இல்லை.😢
பகிரவாவது செய்வோம்.🙏🏼
0 notes
comn19 · 6 years ago
Text
💐💐💐🙏🏻🌹🌹🌹இன்றைய சிந்தனை.( 03..12.2019.)
.................................
"சுயநலமும்,பொது நலமும்..’
.................................
மற்றவர்களுக்கு உதவ நமக்கு ஒவ்வொரு நாளும் ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கின்றன.
ஆனால், இன்று நிறைய பேர் தங்களைப் பற்றி மட்டுமே யோசிக் கிறார்கள்.
சொல்லப்போனால், இந்த உலகமே இப்போது சுயநலத்தில்தான் சுழன்று கொண்டு ருக்கிறது.....
ஒருமுறை ஒருவரின் மகனுக்குக் கடுமையான காய்ச்சல்.மருத்துவ மனைக்கே செல்ல முடியாத நிலை. டாக்டரே அவர் வீட்டிற்கு வந்தார். '
தொற்று நோய்க் கி��ுமியால் வந்து இருக்கும் காய்ச்சல். ஏற்கெனவே, இதை எவ்வளவு பேருக்கு உங்கள் மகன் பரப்பி விட்டானோ? இனி, உடம்பு சரியாகும் வரை பள்ளிக்குப் போக வேண்டாம்' என்று எச்சரித்தார்.
சிகிச்சை சில நாட்களுக்குத் தொடர்ந்தது. மகனுக்கு ஒரு வழியாகக் காய்ச்சல் குறைந்து குணமாகி விட்டான்.
டாக்டர் பில்லை நீட்டினார்.
தொகையை பார்த்த மகனின் தந்தை கடும் கோபமாக டாக்டரிடம் சண்டைக்குப் போய் விட்டார்.
டாக்டர் விளக்கம் கொடுத்தார். "ஒன்பது முறை, உங்கள் வீட்டுக்கே வந்து ,மருந்து, மாத்திரை கொடுத்து இருக்கிறேன்.. ஊசியும் போட்டு வந்தேன் என்றார்.
பிள்ளையின் தந்தை கொதித்தார்.
"விளையாடுகிறீர்களா? என் மகன் ஊரெல்லாம் காய்ச்சலைப் பரப்பியதால்தானே உங்கள் மருத்துவ மனைக்கு இப்போது ஏகப்பட்ட கூட்டம்.
உங்கள் தொழில் இன்று படு பிசியாக போய்க் கொண்டு இருக்கிறது. என்னிடம் எப்படி நீங்கள் பணம் கேட்கலாம்? நியாயமாக நீங்கள் அல்லவா எனக்குப் பணம் தர வேண்டும்?"
இப்படித்தான் எது கிடைத்தாலும், அதனால் ஆதாயம் உண்டா?அதை வைத்துக் கொண்டு எப்படியாவது உலகத்துப் பணத்தை எல்லாம் சுருட்டித் தன் பாக்கெட்டில் போட்டுக் கொள்ள முடியுமா? என்று ''சுயநலம்'' கொண்டு பலர் அலைவதை பார்க்கின்றோம்..
ஆம்.,நண்பர்களே..,
பொதுநலம் புல்லாங்குழல் போன்றது..சுயநலம் என்பது கால்பந்து போன்றது.
இவை இரண்டுமே காற்றால் இயங்குகிறது. ஆனால் ஒன்று முத்தம் இடப்படுகின்றது. ஒன்று உதைக்கப் படுகின்றது..
தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்து இருப்பதால் கால்பந்து உதைக்கப் படுகின்றது.ஆனால் தான் வாங்கிய காற்றை இசையாக தருவதால் புல்லாங்குழல் முத்தமிடப் படுகின்றது
சுயநலம் உள்ளவன் புறக்கணிக்கப்படுவான்., பொதுநலம் உள்ளவன் போற்றப் படுவான்.🌹🙏🏻💐
0 notes
comn19 · 6 years ago
Text
1. What should a *woman* do if she finds herself alone in the company of a strange male as she prepares to enter a lift in a High Rise apartment late at night …?????
Experts Say : Enter the lift ……… If you need to reach the 13th floor, *press all the buttons up to your destination*. No one will dare attack you in a lift that stops on every floor.
2. What to do if a stranger tries to attack you when you are alone in your house, run into the kitchen.
Experts Say : You alone know where the *chili powder and turmeric* are kept. And where the knives and plates are. All these can be turned into deadly weapons. If nothing else, start throwing plates and utensils all over. Let them break. *Scream*… Remember that noise is the greatest enemy of a molester. He does not want to be caught.
3. Taking an Auto or Taxi at Night.
Experts Say : Before getting into an auto at night, note down its *registration* number. Then use the *mobile* to call your family or friend and pass on the details to them in the language the driver understands. Even if no one answers your call, pretend you are in a conversation. The driver now knows someone has his details and he will be in serious trouble if anything goes wrong. He is now bound to take you home safe and sound. A potential attacker is now your de facto protector.
4. What if the driver turns into a street he is not supposed too and you feel you are entering a danger zone …
Experts Say : Use the *handle* of your purse or your stole (dupatta) to wrap around his neck and pull him back. Within seconds, he will feel choked and helpless. In case you don’t have a purse or stole just pull him back by his *collar*. The top button of his shirt would then do the same trick.
5. If you are stalked at night …
Expert Say : enter a shop or a house and explain your predicament. If it is night and shops are not open, go inside an *ATM box*. ATM centers always have close circuit television. Fearing identification, no one will dare attack you.
After all, being mentally alert is the greatest weapon you can ever have.
Please spread it to all those women u care & spread awareness as this is the least we can do for a social & moral cause and for the safety of our women.
Guys please forward it to your *MOMS … SISTERS … WIVES and female FRIENDS* …… Better safe than sorry friends. Plzz frwrd to all *GIRLS* u know.....👍
To All the *WOMEN*
🙏
0 notes
comn19 · 6 years ago
Text
Logo Designed for King Aquarium
Tumblr media Tumblr media
0 notes
comn19 · 6 years ago
Text
☁️🌧️🌨️🌩️ மழை...
தொடங்கும் போது
காதலியைப் போல்
மகிழ்ச்சியாய்த் தெரிந்த மழை....
தொடர்ந்து கொண்டே
இருப்பதால்
மனைவியைப் போல்
தொல்லையாய்த்
தெரிகிறது.....
இன்னும் நீடித்தால்
மருமகளைப் போல்
வீட்டுக்குள் புகுந்து
நம்மை வெளியேற்றி விடுமோ
என்றே தோன்றுகிறது.....
0 notes