Tumgik
dhanapal · 3 years
Text
வீட்டில் இருக்கும் சமையல் பொருட்களே போதும்.. கொரோனாவுக்கு எதிராக உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தலாம்
சிறந்த நோயெதிர்ப்பு சக்தியை கொண்டவர்கள் நோய்த்தொற்றுகளை சிறப்பாக சமாளிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, வீட்டிலேயே அதற்கான சிறந்த மருத்துவம் உள்ளது. சிறந்த நோயெதிர்ப்பு சக்தியை கொண்டவர்கள் நோய்த்தொற்றுகளை சிறப்பாக சமாளிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, வீட்டிலேயே எளிதில் தயாரிக்கக்கூடிய மூலிகை பானங்களை பற்றி நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம். அவை உங்களைப் வலுவாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் உங்கள் ஒட்டுமொத்த நோயெதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்த உதவும். இந்த வகையான ஊட்டச்சத்து பானங்களை உங்கள் சமையலறையில் எளிதில் கிடைக்கும் பொருட்களை வைத்தே தயாரிக்கலாம். என்னமாதிரியான பானங்கள் அவற்றை எப்படி செய்யலாம் என்பதை பின்வருமாறு காணலாம். மஞ்சள் டீ (Turmeric tea): பெயர் குறிப்பிடுவது போல, இந்த தேநீர் மஞ்சள், தேன் மற்றும் எலுமிச்சை கொண்டு தயாரிக்கப்படுகிறது. மஞ்சள், குர்குமின் எனப்படும் ஒரு கலவையைக் கொண்டுள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை நல்ல முறையில் மாற்றியமைக்க வல்லது. மேலும் அதன் வலுவான அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கம் மற்றும் வலியை நீக்க உதவும். இந்த தேநீரை தயாரிப்பதற்கு நீங்கள் ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் மற்றும் சிறிதளவு மஞ்சள் தூளை சேர்த்து 15-20 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அடுப்பை அனைத்து மஞ்சள் தண்ணீரில் சிறிதளவு எலுமிச்சை மற்றும் தேன் சேர்த்து கலந்து சூடாக குடிக்கவும். மசாலா டீ (Masala tea): நோய் எதிர்ப்பு சக்தியை பூஸ்ட் செய்ய உதவும் மசாலா டீ தயாரிக்க தேவையான அனைத்து பொருட்களும் உங்கள் சமையலறையிலேயே எளிதாகக் கிடைக்கும். இந்த டீயில் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மட்டுமல்ல, தொற்றுநோய்களைத் தடுக்கும் சேர்மங்களும் நிறைந்துள்ளன. டீயில் பயன்படுத்தப்படும் தேனில் உள்ள பைட்டோநியூட்ரியன்களில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் தடுப்பு பண்புகள் உள்ளன. அவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் நோயை எதிர்த்துப் போராட உதவுகின்றன. மேலும் மசாலா டீயை தயாரிக்க நசுக்கிய இஞ்சி, இலவங்கப்பட்டை, மிளகுத்தூள், கிராம்பு, ஏலக்காய் மற்றும் துளசி இலைகளை அரை கப் தண்ணீரில் சேர்த்து 30 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அதனை வடிகட்டி சிறிது தேன் சேர்த்து கலந்து சூடாக குடிக்கலாம். கிரீன் ஸ்மூத்தி (Green Smoothie): இந்த ஆரோக்கியமான மற்றும் சுவையான கிரீன் ஸ்மூத்தி குடிப்பது கோடைகாலத்திற்கு சரியான தீர்வாக இருக்கும். இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம் மற்றும் பிற ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. அவை வீக்கத்தைத் தடுக்கின்றன மற்றும் உடலில் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. இந்த ஸ்மூத்தியை தயார் செய்ய சிறிது கீரை, மாம்பழம் அல்லது அன்னாசி, எலுமிச்சை சாறு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பாதாம் பால் அல்லது தயிர் ஆகியவற்றை எடுத்து அனைத்தையும் மிக்சியில் சேர்த்து அரைக்க வேண்டும். பின்னர் இதனை சிறுது நேரம் பிரிட்ஜ்ஜில் வைத்து குளிர்ச்சியாக பரிமாறவும். தேன் லெமனேட் (Honey Lemonade): இது எந்தவித தொந்தரவும் இல்லாத எளிதில் தயாரிக்கக்கூடிய மற்றொரு பானமாகும். இது தொண்டை புண் அறிகுறிகள் மற்றும் இருமலுக்கு சிகிச்சையளிப்பது மட்டுமல்லாமல், சுவாசக் குழாயை நீரேற்றமாக வைத்திருப்பதோடு கூடுதல் சளி சேருவதை எதிர்த்துப் போராடுகிறது. இதனை தயார் செய்ய ஒரு கெட்டியான கடாயில் நான்கு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதில் அரைத்த இஞ்சி, ஒரு அங்குல இலவங்கப்பட்டை குச்சி, மூன்று நறுக்கிய பூண்டு, இரண்டு கிராம்பு, ஒரு டீஸ்பூன் புதினா சாறு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும். இதனை சில நிமிடங்கள் கலந்துவிட்டு, பின்னர் இந்த குடிநீரில் தேன் சேர்த்து சூடாக குடிக்கவும். கசாயம்: பொதுவான சமையலறை பொருட்களுடன் வீட்டில் தயாரிக்கப்பட்ட காஷாயங்கள் மிகவும் பாரம்பரியமான பானங்களில் ஒன்றாகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மக்களால் அடிக்கடி உட்கொள்ளப்படுகிறது. சளி மற்றும் இருமலை எதிர்த்துப் போராடுவதில் கஷாயம் மிகவும் நன்மை பயக்கும். இது சுவாசக் கோளாறுக்கும் சிகிச்சையளிக்கிறது. துளசி, கிராம்பு, இலவங்கப்பட்டை, இஞ்சி, ஓமம், மஞ்சள் தூள் மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றைக் ஒன்றாக கொதிக்க வைப்பதன் மூலம் இந்த கஷாயம் தயாரிக்கப்படுகிறது. இதில் சுவைக்கு ஏற்ப தேன் அல்லது வெல்லம் சேர்த்து பருகலாம்.
9 notes · View notes
dhanapal · 3 years
Text
🕉🔆🕉🔆🕉🔆🕉🔆🕉🔆🕉
ஆதி சங்கரரின் பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா என்ற படைப்பு புகழ் பெற்றது. அதில் இடம் பெற்றுள்ள கேள்வி, பதில்களிருந்து சில...
1. எது இதமானது ?
தர்மம்.
2. நஞ்சு எது ?
பெரியவர்களின் அறிவுரையை அவதிப்பது.
3. மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது ?
பற்றுதல்.
4. கள்வர்கள் யார் ?
புலன்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள்.
5. எதிரி யார் ?
சோம்பல்.
6. எல்லோரும் பயப்படுவது எதற்கு ?
இறப்புக்கு.
7. குருடனை விட குருடன் யார் ?
ஆசைகள் அதிகம் உள்ளவன்.
8. வீரன் யார் ?
கெட்ட வழியில் மனம் செல்லாமல், அதை அடக்குபவன்.
9.மதிப்புக்கு மூலம் எது ?
எதையும் யாரிடமும் கேட்காமல் இருப்பது.
10. எது துக்கம் ?
மன நிறைவு இல்லாமல் இருப்பது.
11. உயர்ந்த வாழ்வென்று எதைச் சொல்லலாம் ?
குற்றங்கள் புரியாமல் வாழ்வதை.
12. தாமரையிலை மேல் தண்ணீரைப் போல நிலையில்லாதவை எவை ?
இளமை, செல்வம், ஆயுள் ஆகியவை.
13. சந்திரனுடைய கிரணங்களைப் போல் மற்றவர்களுக்கு இன்பம் தருபவர்கள் யார் ?
நல்லவர்கள்.
14. எது சுகமானது ?
அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பற்றின்றி வாழ்வது.
15. எது இன்பம் தரும் ?
நல்ல மனதுடையோர்களின் சிநேகிதம்.
16. எது மரணத்துக்கு இணையானது ?
அசட்டுத்தனம்.
17. விலை மதிப்பற்றதென எதைக் குறிப்பிடலாம் ?
காலமறிந்து செய்யும் உதவி.
18. இறக்கும் வரை உறுத்துவது எது ?
ரகசியமாகச் செய்த பாவம்.
19. எவரை நல்வழிப்படுத்துவது கடினம் ?
துஷ்டர்கள், எப்போதும் சந்தேகத்திலேயே இருப்பவர்கள்,
சோகத்திலேயே சுழல்பவர்கள்,
நன்றி கெட்டவர்கள்... ஆகியோர் !
20. சாது என்பவர் யார் ?
ஒழுக்கமான நடத்தை உள்ளவர்.
21. உலகத்தை யாரால் வெல்ல முடியும் ?
சத்தியமும், பொறுமையும் உள்ளவரால்.
22. யாரைத் தேவர்களும் வணங்குகின்றனர் ?
எல்லாவற்றின் மீதும் கருணை உள்ளவனை.
23. செவிடன் யார் ?
நல்லதைக்கேட்காதவன்.
24. ஊமை யார் ?
சரியான சந்தர்ப்பங்களில் தகுந்த இனிமையான
சொற்களைச் சொல்லத் தெரியாதவன்.
25. நண்பன் யார் ?
பாவ வழியில் போகாமல் தடுப்பவன்.
26. யாரை விபத்துகள் அணுகாது ?
மூத்தோர் சொல் கேட்டு நடப்பவனையும், அடக்கமுள்ளவனையும்.
ஸ்ரீ குருப்யோ நமஹ !
🟨🟩🟨🟩🟨🟩🟨🟩🟨🟩🟨
0 notes
dhanapal · 3 years
Text
Very good
Tumblr media
1 note · View note