Tumgik
#குமரன்
karuppuezhutthu-blog · 2 months
Text
ஒற்றுமையை உணா்த்தும் உன்னதத் திருவிழா
கே.எஸ்.கே. குமரன். சமயப் பெரியோா்களிடையே வேற்றுமையை விலக்கி ஒற்றுமையை வளா்க்கக் காரணமாய் அமைந்தது சங்கரன்கோவில் ஆடித்தவசுத் திருவிழா. அது காலங்காலமாய் இன்றும் தொடா்கின்றது. ஆடித்தவசுக் காட்சியன்று தொண்டு நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் போட்டிபோட்டு பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கின்றனா். தனியாா் நிறுவனங்கள் தங்கள் கடைகளின் முன்பு நீா், மோா், பானக்கரம்…
0 notes
drnivesdental-100 · 2 months
Text
பல் ஏ டூ இசட் தகவல்கள்!
பல் போனால் சொல் போகும்... பற்களை பாதுகாப்பது எப்படி? ஏ டூ இசட் தகவல்கள்!
Tumblr media
ஒரு மனிதனின் ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பது வாய்தான். வாயை  'உடலின் நுழைவாயில்' என்கிறார்கள் மருத்துவர்கள். வாயின் செயல்பாட்டுக்கு பற்களே பிரதானம். பற்களில் ஏற்படும் சிறு பாதிப்பு கூட உடலைப் பாதிக்கும். 'பல்'லாண்டு வாழ பற்களின் ஆரோக்கியம் அவசியம்.
பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எப்படி? பற்களில் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது எப்படி? பல் மருத்துவர் செந்தில் குமரன் விரிவாக ஆலோசனை தருகிறார்
பல்லின் அமைப்பு…
"பற்களை மொத்தம் 8 வகையாகப் பிரிக்கலாம். அதிலும், இடப்பக்கம் எட்டும் வலது பக்கம் எட்டும் என மேல் அடுக்கு 16 அதன் கண்ணாடி பிரதிபலிப்பைப் போல கீழ் அடுக்கு 16 என, ஒரு வளர்ச்சியடைந்த மனிதனுக்கு  மொத்தம் 32 பற்கள் உள்ளன. 
'பல் போனால் சொல் போகும்' என்னும் பழமொழிக்கேற்ப, நாம் பேச உதவுபவை பற்கள்தான். நாம் பேசும்போது குரல்வளையில் இருந்துவரும் காற்றானது பற்களின் இடுக்குகளில் மோதி வெளிவரும்போது குரல் பிறக்கிறது. பல் ஆரோக்கியம் என்பது முக அழகுக்காக மட்டுமல்ல... இதயநோய்கள், சர்க்கரை நோய்கள், வயிற்றுக்கோளாறுகளுக்கும் பற்களுக்கும் தொடர்பு உண்டு. உள்ளுறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கான அறிகுறிகள் பெரும்பாலும் வாய் மற்றும் பற்களில்தான் பிரதிபலிக்கும். 
பற்களை எப்படி சுத்தமாக வைத்துக்கொள்வது?  
பற்களை சுத்தமாக வைத்திருக்க சில செயல்களை தினசரி பின்பற்றவேண்டும். அவை, 
* தினசரி காலை எழுந்தவுடன், இரவு உணவுக்குப்பின் பல் துலக்க வேண்டும்.
* எப்போது சாப்பிட்டாலும், வெந்நீர் அல்லது கல்லுப்பு கலந்த வெந்நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். 
*  பற்களைத் துலக்கும் முன் பிரஷை, குழாயைத் திறந்துவிட்டு நேரடியாகத் தண்ணீரில் கழுவ வேண்டும். கப்பில் பிடித்துவைத்த நீரில் கழுவக்கூடாது.  
செய்யக்கூடாதவை!
* நீண்ட நேரம்  பற்களைத் தேய்க்கக் கூடாது. அழுத்தியும் தேய்க்கக்கூடாது.
* இனிப்புகள், குளிர்ந்த மற்றும் சூடான உணவுகளை அதிகமாக உட்க்கொள்ளக்கூடாது.
* தூங்கி எழுந்ததும் பல் துலக்காமல் காபி, பால் போன்றவற்றைப் பருகக்கூடாது. இவை, பற்களில் உள்ள உணவுத் துணுக்குகளை வயிற்றுக்குள் கொண்டு சென்று விடும். அதனால் பல வயிற்று உபாதைகள் ஏற்படும்.
* கடினமான பொருள்களை கடிக்கக்கூடாது. பற்களை, குளிபானங்களைத் திறக்கும் ஓப்பனர்களாகப் பயன்படுத்தக்கூடாது. 
* புகைப்பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.
பல் துலக்கும் முறை...
பற்களை துலக்கும்போது, பிரஷை மேலும் கீழுமாக தேய்க்க வேண்டும். பக்கவாட்டில் தேய்ப்பது பல்லில் உள்ள எனாமலை நீக்கிவிடும். மேலும், நீண்ட நேரம் பற்களைத் தேய்க்கக்கூடாது. பிரஷை 45 டிகிரி கோணத்தில் வைத்துத் தேய்க்க வேண்டும். முன்னே இருக்கும் பால் பற்களையும் பக்கவாட்டில் உள்ள அரவைப் பற்களையும் இரண்டுமுறை மேலும் கீழுமாகத் தேய்க்க வேண்டும். கடவாய்ப் பற்களை ரொட்டேசன் முறை எனப்படும் சுற்றித் தேய்க்கும் முறையில் த���லக்க வேண்டும். பற்களின் உட்புறமாகவும் தேய்க்க வேண்டும். அல்ட்ரா சாஃப்ட், சாஃப்ட் மற்றும் மீடியம் பிரஷ்களைக் கொண்டு பல் துலக்கலாம். கடினமான பிரஷைத் தவிர்க்க வேண்டும். பிரஷ்ஷை அழுத்திப் பிடித்துப் பல் துலக்கக் கூடாது. 
பிரஷ் செல்லமுடியாத  இடத்தில், பற்களுக்கு இடையே உள்ள கிருமிகள் மற்றும் உணவுத் துணுக்குகளை மெல்லிய நூல் வடிவில் உள்ள டென்டல் ஃப்ளாஸ் (Dental Floss) மூலம் சுத்தம் செய்ய வேண்டும். பற்களைச் சுத்தம் செய்வதுபோல் நாக்கை சுத்தம் செய்வதும் அவசியம். பிரஷின் பின்புறம் இருக்கும் டங்க் கிளீனர் (Tongue Cleaner) பயன்படுத்தி மெதுவாக நாக்கைச் சுத்தம் செய்ய வேண்டும். இறுதியாக மவுத்வாஷ் பயன்படுத்தி வாயைக் கொப்பளிக்க வேண்டும். 
பல் சொத்தை
காரணம்: நீண்ட நேரம் பற்களுக்கு இடையில் உணவு இருப்பதாலோ சரியாக பல் துலக்காததாலோ பல் சொத்தை ஏற்படும். எச்சிலில் உள்ள ஆசிட் மற்றும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட் இரண்டும் சேர்ந்து பல் சொத்தையை உருவாக்கும். 
தீர்வு: பல் சொத்தை உள்ளது என்று தெரிந்த உடனே மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும். ஃபில்லிங் மெட்டீரியலைக் கொண்டு அடைத்தல், ஆர்சிடி (Root Canal Treatment) என்னும் வேர் சிகிச்சை மூலம் பல் சொத்தையை ஆரம்ப கட்டத்திலேயே சரிசெய்யலாம். பல் சொத்தை அதிகமாக இருந்தால் அந்த பல்லை அகற்ற வேண்டும். இதனால், அடுத்தப் பல்லுக்குப் பரவுவது தடுக்கப்படும். அகற்றிய பல்லுக்குப் பதிலாக செயற்கை பற்களைப் பொருத்திக்கொள்ளலாம். 
தவிர்க்க: இனிப்பு சாப்பிடுவதால் மட்டும்தான் பல் சொத்தை உண்டாகும் என்றில்லை. எந்த வகை உணவாக இருப்பினும் அதை உண்ட பின்னர் அந்த உணவுத் துகள்கள் பற்களில் படியாதவாறு வாயைக் கொப்பளித்தல், பல் துலக்குதல் போன்றவற்றைப் பின்பற்றினால் பல் சொத்தை ஏற்படாது தடுத்துவிடலாம். 
பல் கறைகள்
காரணம்: புகையிலைப் பொருள்களை நீண்ட நேரம் வாயில் வைத்திருப்பது, மதுப்பழக்கம், டீ, காபி போன்றவற்றை அதிக அளவு குடிப்பது, சரியாகப் பல் துலக்காதது  போன்ற செயல்களால் பற்களில் கறை உண்டாகும். சிலருக்கு பிறப்பு முதலே கறை இருக்கும். குடிக்கும் நீரில் உள்ள ஊட்டச்சத்து குறைபாட்டாலும் பற்களில் கறை உண்டாகலாம்.
தீர்வு: நல்ல தண்ணீரைக் குடிநீராகப் பயன்படுத்த வேண்டும். வொயிட் க்ளீனர் எனக்கூடிய பற்களை வெண்மையாக்கும் முறையை மருத்துவரின் ஆலோசனை பெற்று செய்துகொள்ளலாம்.
தவிர்க்க: மது மற்றும் புகையிலைப் பொருள்களின் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும். டீ, காபி, குளிபானங்கள் குடித்தபின்னர் வாயைக் கொப்பளிக்க வேண்டும். 
பல் வலி
தீர்வு: பல் வலிக்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றுக்கான சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும். உதாரணமாக, சர்க்கரை நோயாளிகளுக்கு, ரத்த சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்த முடியாத அளவுக்குச் சென்றால் பல்வலி ஏற்படலாம். அந்த தருணத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க முயற்சிக்க வேண்டும். 
தவிர்க்க: தினசரி காலை மற்றும் இரவு வேளைகளில் இளஞ்சூடான நீருடன் கல்லுப்பு சேர்த்து வாய்க்கொப்பளிக்கவும்.
வாய்ப்புற்றுநோய் 
காரணம்: புகைப்பிடித்தல், பான்மசாலா, புகையிலை போன்றவற்றை வாய்க்குள் நீண்ட நேரம் வைத்திருப்பதால் 'ஓரல் கேன்சர்' எனப்படும் வாய்ப்புற்றுநோய் உண்டாகும். ஆரம்பத்தில் வாயின் உள்பகுதியில் புண் உண்டாகும். அதுவே கொஞ்சம் கொஞ்சமாக உதடு, கன்னம், தொண்டை, உணவுக் குழாய் என பல பகுதிகளைத் தாக்கவும் வாய்ப்புண்டு.
தீர்வு: ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, மது, புகைப்பழக்கம், புகையிலைப் பழக்கத்தை தவிர்த்தல் போன்ற செயல்களின் மூலம் புற்றுநோயின் தாக்கத்தைக் குறைக்க முடியும். மருத்துவரின் ஆலோசனை பெற்று, தகுந்த சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும்.
தவிர்க்க: புகையிலை, பாக்கு போன்ற பழக்கங்களை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். வாயில் சிறிய புண் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.
வாய் துர்நாற்றம் 
காரணங்கள்: வயிற்றில் கோளாறுகள் ஏற்படும்போது, அதில் உள்ள அமிலங்கள் வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். அல்சர் நோய் உள்ளவர்களுக்கு வாய் துர்நாற்றப் பிரச்னை இருக்கும். உடலில் நீர் வறட்சி ஏற்பட்டாலோ, நாக்கில் எச்சில் சுரக்காமல் போனாலோ,  தொண்டையில் உள்ள டான்சில் சுரப்பி, சுரத்தலில் தடைகள் ஏற்பட்டாலோ, உணவுக் குழாய், உணவு மண்டலத்தில் பிரச்னைகள் இருந்தாலோ, உணவு செரிமானம் ஆகாமல் உணவுக்குழாயில் தங்கினாலோ, அசிடிட்டி ஏற்பட்டாலோ வாய் துர்நாற்றம் ஏற்படலாம். பற்களின் இடுக்குகளில் கிருமிகள் சேர்வதாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். சில நேரங்களில் கல்லீரல், சிறுநீரகங்களில் பிரச்னைகள் ஏற்பட்டாலும் வாய் துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.
Tumblr media
தீர்வு: மவுத் வாஷர் திரவங்களை பயன்படுத்தி, வாய் துர்நாற்றத்தைப் போக்கலாம். தினசரி காலையில் வெதுவெதுப்பான நீருடன் உப்பு சேர்த்து வாய் கொப்புளிக்க, வாய் துர்நாற்றம் போகும். அல்சர் உள்ளவர்கள், அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். வயிற்றில் நீர் இருந்தால் அமிலங்களின் தாக்கம் குறையும்.
தவிர்க்க: காலை, இரவு என இரு வேளைகளும் பல் துலக்க வேண்டும். பல் இடுக்குகளில் உள்ள உணவுப் பொருட்களை நீக்க, நூலை வைத்து சுத்தப்படுத்தும் பழங்கால முறையை பின்பற்றலாம். அதிகப் புளிப்பு மற்றும் அதிகக் கார உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.  அசைவ உணவுகளை உண்ட பின்பு, பல்துலக்க வேண்டும். இவற்றையும் தாண்டி துர்நாற்றம் இருந்தால்  மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
ஈறுகளில் வீக்கம்...
தீர்வு: மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று அவரது ஆலோசனையைப் பின்பற்றவேண்டும். நோய்களால் ஈறுகளில் வீக்கம் ஏற்படின், அவற்றுக்கான சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும். 
தவிர்க்க: தினசரி அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரே சமயத்தில் அதிக அளவு குடிக்காமல், சிறிது இடைவெளி விட்டு சிறிது சிறிதாக குடிக்கலாம். இளஞ்சிவப்பு  அல்லது பிங்க் நிறத்தில் ஈறுகள் இருப்பின் அவை ஆரோக்கியமானதாகும். கறுப்பு நிறத்தில் இருப்பதும் ஆரோக்கியம் தான். அடர் சிவப்பு நிறத்தில் இருந்தால் ஈறுகள் பாதிப்படைந்துள்ளன என்று புரிந்து கொள்ளலாம்.  
பற்கூச்சம்
காரணம்: எனாமல் தேய்வதாலும், அதிகக்  குளிர்ச்சி அல்லது சூடான உணவுகளை எடுத்துக்கொள்வதாலும் பற்கூச்சம் ஏற்படும். 
தீர்வு: தினசரி மவுத் வாஷ் பயன்படுத்தலாம். மருத்துவரின் ஆலோசனையின்படி, பிரஷ் மற்றும் பேஸ்ட்களைப் பயன்படுத்தலாம். 
தவிர்க்க: சாப்ட் அல்லது மீடியம் பிரஷ்ஷால் பல் துலக்கலாம். அழுத்தித் தேய்க்கக் கூடாது. வாயைச் சுத்தமாக வைத்திருக்கவேண்டும். அதிக அளவு சூடான மற்றும் குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்க்கலாம்.
குழந்தைகளின் பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க... 
* குழந்தைகளுக்கு தினமும் ஒருமுறை பற்களை சுத்தம் செய்ய வேண்டும். குறைந்தபட்சம், தண்ணீர் வைத்து பற்களைத் தேய்த்துவிட வேண்டும்.
* அதிக நேரம் பால் புட்டியை வாயில் வைத்திருப்பதை குழந்தைக்கு பழக்கப்படுத்தாதீர்கள்.
*  சிலர், குழந்தைகளை பால் புட்டியை வாயில் வைத்தபடியே தூங்கவைப்பார்கள். அப்படி செய்வதால், பாலில் உள்ள இனிப்பானது பாக்டீரியாக்களுடன் வினைபுரிந்து, குழந்தைகளின் பால் பற்களில் பிரச்னைகளை ஏற்படுத்தும். ஆகையால், இந்த பழக்கத்தைப் பெற்றோர் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். 
* 7 முதல் 12 வயது குழந்தைகளுக்கு பால் பற்கள் விழுந்து, நிரந்தரப் பற்கள் முளைக்கும். இந்த காலகட்டத்தில் அவர்கள் விரல்களைச் சூப்பினால், சீரான பல் வரிசை ஏற்படாது. எத்திய நிலையில், சீரற்று வளர்ந்துவிடும். 
* குழந்தைகளுக்கு விவரம் தெரிய ஆரம்பிக்கும் பருவத்திலேயே, பெற்றோர்கள் அவர்களை பல் துலக்கப் பழக்க வேண்டும். 
Tumblr media
பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் உணவுகள்...
சிறுதானியங்கள், பிரவுன் பிரட், அரிசி, கோதுமை, நட்ஸ் போன்றவற்றை நன்கு மென்று சாப்பிட வேண்டும். பழங்கள் மற்றும் பச்சைக் காய்கறிகள் போன்றவை தினசரி உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். பால், பால் பொருள்கள், பருப்பு வகைகள் போன்றவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மீன், இறைச்சி, முட்டை, சோயா போன்றவற்றை வாரம் இருமுறை எடுத்துக்கொள்ளலாம். பல்லில் பிரச்னை இருக்கும்பட்சத்தில் இனிப்பு உணவுகள் மற்றும் சிட்ரஸ் பழங்களைத் தவிர்க்க வேண்டும். தயிர், கீரை வகைகள், நட்ஸ், தேங்காய் போன்ற உணவுகள் பற்களுக்கு பலம் தரும். அதிலும், கேரட், ஆப்பிள் போன்றவற்றை நறுக்காமல் கடித்துச் சாப்பிடுவது சிறந்தது. 
வெண்மையா, மஞ்சளா எது ஆரோக்கியம்?
கர்ப்பகாலத்தில்!
கர்ப்பினிகளுக்கு சில சமயங்களில் ஈறுகளில் வீக்கம், ரத்தக் கசிவு, பல் பாதிப்புகள் போன்றவை ஏற்படக்கூடும். இதற்குக் காரணம், ஹார்மோன் மாற்றங்கள். இப்படியான பல் பிரச்னைகள் கர்ப்பக்காலங்களில் ஏற்படின், உடனடியாக மருத்துவனை அணுகுவது நல்லது.  
க்ளிப் அணிந்த பற்களுக்கு...
பல் வரிசையை சீர்செய்வதற்காக அணியப்படுவது க்ளிப். அதை அணிந்திருக்கும் காலகட்டத்தில் பற்களை கவனமாகப் பராமரிக்க வேண்டும். க்ளிப் அணிந்திருப்பவர்களுக்குப் பல் துலக்க பிரத்யேகமான ஆர்த்தோ பிரஷ்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. அவை, க்ளிப்புகளுக்கு இடையில் படிந்திருக்கும் சிறிய உணவுத் துகள்களை நீக்க உதவும். மேலும், க்ளிப் அணிந்திருப்பவர்கள் கடினமான உணவுகளை தவிர்க்க வேண்டும். உணவு மென்மையானதாக இருப்பது நல்லது.  
பற்களின் ஆரோக்கியத்தைப் பதம்பார்க்கும் எட்டு பழக்கங்கள்!
* அதிகப்படியான இனிப்பு உணவுகளை சாப்பிடக்கூடாது. மேலும், அவற்றை நீண்டநேரம் வாயில் வைத்திருப்பதால் பல் சொத்தை, பல்வலி, பற்சிதைவு போன்றவை ஏற்படும்.
* சோடா, கார்பனேட்டட் பானங்கள், டீ, காபி போன்றவற்றை  அதிகம் பருகக்கூடாது. இவற்றில் உள்ள அமிலத்தன்மை பல்லின் எனாமலை பாதிக்கும். மாறக, இளநீர், பழச்சாறு பருகலாம்.
* புகைப்பழக்கம், பாக்கு போடுபவர்களுக்கு ஈறுகளில் பாதிப்பு ஏற்படும். அவை, பற்கள் விழுவதற்கான  வாய்ப்புகளை அதிகமாக்கும். மேலும், பற்களில் கறையையும் உண்டாக்கும்.
* குழந்தைகள் பால் குடித்தபின்னர், பற்களை சுத்தம் செய்யாமல் விட்டால் பால் பற்களைப் பாதிக்கப்படும்.
* பற்களை பாட்டில்களின் ஓப்பனராகப் பயன்படுத்துவது. பாலித்தின் பாக்கெட்டுகளை பற்களால் கடித்து கிழிப்பது போன்ற செயல்களால்
பல்லின் உறுதித் தன்மையில் பாதிப்பு ஏற்படும்.
* நகம் கடித்தல், கோபம் அல்லது மனஉளைச்சலின்போது பற்களைக் கடித்தல் போன்ற பழக்கங்கள் பற்சிதைவை உண்டாக்கக்கூடும். பற்கள் தேயக்கூடும்.
* சீரற்ற முறையில் பல் துலக்குவதால் பற்களின் எனாமல் பாதிக்கப்படும்.
* குளிந்த மற்றும் சூடான உணவுகளை உண்ணுவது பற்கூச்சத்தை ஏற்படுத்தும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
* உணவு உண்ட பின்னும் குளிர்பானங்கள் அருந்திய பின்னும் ஃபுளூராய்டு டூட்பெஸ்ட் பயன்படுத்தி பல் துலக்க வேண்டும். இதில் உள்ள மினரல், பற்சிதைவில் இருந்து நம்மைக் காக்கும். வாய் துர்நாற்றத்தை சரிசெய்யும்.
* சாப்பிபிட்ட பின்னர், இளஞ்சூடான நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இது பற்களுக்கு இடையே ஒட்டிக்கொண்டுள்ள உணவுத் துணுக்குகளை நீக்க உதவும். மேலும், வாய் துர்நாற்றம் ஏற்படாது இருக்க உதவும்.
* 'பாயில் இன்ஃபெக்சன்' ஏதேனும் ஏற்பட்டிருப்பின், பல்துலக்கும் பிரஷ்ஷை மாற்றலாம்.
* ஒரு நாளைக்கு  குறைந்தது இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இது வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும். 
* மூன்று மாதங்களுக்கு ஒரு முறை டூட் பிரஷ்ஷை மாற்ற வேண்டும்.
மருத்துவர் பரிந்துரை!
பொதுவாக பற்களில் வலி வந்தபிறகுதான் மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும் என்பதில்லை. பிரச்னைகள் இருந்தாலும், இல்லை என்றாலும், கட்டாயமாக ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவரை அணுகி  பற்களில் பாதிப்பு இருக்கிறதா என பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இது உங்களின் புன்னகையை மட்டுமல்ல உங்களின் தன்னம்பிக்கையையும் மெருகூட்டும்.
Tumblr media
Dr.NIve's Dental Clinic
Address: No:107, Velachery Main Rd, Devi Karumariamman Nagar, Pallikaranai, Chennai, Tamil Nadu 600100
Phone: 089253 99973
Location: https://g.page/r/CVPIWA4bNSTYEBM/review
#drnivesdental
@drnivesdental
#drnives
@drnives
#drnivesdentalclinic
@drnivesdentalclinic
#drnivethini
@drnivethini
@drnivesdentalclinic
#drnivesdentalclinic
#drnivesdentalclinicpallikaranai
0 notes
senthilkumarvision · 1 year
Text
பூமி பந்து எனும் உலக உருண்டையில் மூன்றாம் உலகப் போர் நடப்பதற்கு எந்த ஒரு நிகழ்வும் அமைந்து விடக்கூடாது எனும் லட்சியமுடன் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய "ஓப்பன்ஹைமர்" படத்தை, அப்துல் கலாமின் நினைவு தினமன்று கோவை நகரின் அவிநாசி சாலையில் திருப்பூர் குமரன் மில்ஸ் எதிர்புறமுள்ள ஃபன் சினிமாஸில் பார்த்த வேளை, பேராசிரியரான ஓப்பன்ஹைமருடன் சக நண்பர்கள் பேசும் உரையாடல்களும், காட்சி அமைப்புகளும் பிரமிக்கும்படியாக இருந்தது.
Tumblr media
1 note · View note
topskynews · 1 year
Text
கர்ப்பிணி உடலுடன் சிசுவின் உடலையும் கணவர் வீட்டு வாசலில் புதைத்த உறவினர்கள்
எட்டு மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் அவரின் உடலையும் உயிரிழந்த எட்டு மாத சிசுவின் உடலையும் அப்பெண்ணின் கணவர் வீட்டின் வாசலில் குழி தோண்டி புதைத்து உள்ளார்கள் உறவினர்கள்.  புதுக்கோட்டை மாவட்டத்தில் குளத்தூர் அடுத்த மேல சவேரியார் பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் குமரன்.  இவரின் மகள் நாகேஸ்வரி.  22 வயதான இந்த இளம் பெண் திருப்பூர் அடுத்த விலாப்பட்டி மேட்டுக்களம் பகுதியைச் சேர்ந்த…
Tumblr media
View On WordPress
0 notes
tamilnewspro · 1 year
Text
வாய்க்கால் அமைக்கும் பணி-எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார்
 புதுச்சேரி: புதுவை கொம்பாக்கம் வார்டுக்குட்பட்ட பாப்பா ஞ்சாவடி, திருவள்ளுவர் நகர், ஒட்டாம்பாளையம் புது தெரு, கொம்பாக்கம் குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் எல் வடிவ வாய்க்கால் அமைக்கும் பணி நகராட்சி மூலம் ரூ.1 கோடியே 2 லட்சம் செலவில் அமைக்கப்படுகிறது. இதற்க்கான பூமி பூஜை விழா நடந்தது. எதிர்க்கட்சி தலைவர் சிவா பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்தார். இதில், நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், இளநிலைப்…
Tumblr media
View On WordPress
0 notes
rajeshmiki · 1 year
Text
முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு...கோவையில் மற்றுமொரு உணவுப்புரட்சி
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்  தொகுத்தவற்று ளெல்லாந் தலை. இவையெல்லாம் வள்ளுவர் வாக்கு. அவர்தம் வாக்கை மெய்ப்பிக்க RVS குழுமத்தின் பத்மாவதி சோஷியல் சர்வீஸ் மையம் கோயம்புத்தூரில் சூலூர் குமரன் கோட்டத்தில் திறந்துள்ள உணவகத்தில் 30 ரூபாய்க்கு சைவச் சாப்பாடு தருகிறார்கள்.  இன்று திறக்கப்பட்ட இந்த சேவை நோக்கிலான உணவகத்தில் காலை ,…
Tumblr media
View On WordPress
0 notes
ciniglitz · 2 years
Text
பிரபல நடிகர் விஜய் டிவி சீரியலில் இருந்து விலகல்.. இனி இந்த பிரபல நடிகரா..?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலம். அதுவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ஆரம்பித்தில் இருந்தே ரசிகர்கள் பட்டாளம் உண்டு.இல்லத்தரசிகளை விட இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்புகளை எகிற வைத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ்.இந்த சீரியலில் எக்கச்சக்கமான கதாபாத்திரங்களை மாற்றிக்கொண்டே இருந்தனர். குறிப்பாக முல்லை கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருபவர் 3வது முறையாக மாற்றப்பட்டுள்ளார்.
Tumblr media
ஆனால் தம்பியாக கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் குமரன். யார் விலகி போனாலும், தன்னுடைய கதாபாத்திரத்தை செமயாக நடித்து வருகிறார்.ஆனால் தற்போது இவர் சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஓடிடியில் மாயத்தோற்றம் என்ற வெப் சீரியஸில் நடிக்க உள்ளதாக அவரே தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
Tumblr media
ஏற்கனவே வதந்தி சீரியஸில் நடித்ததில் இருந்தே வாய்ப்புகள் குவிந்து வருவதாகவும், என்னுடைய நடிப்பை பார்த்து உங்களது கருத்துகளை சொல்லுங்கள் என கூறியுள்ளார்.இதனால் சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குமரன் சீரியலில் தொடர்வாரா அல்லது சினிமா பக்கம் சாய்வார என்பது குறித்து முடிவெடுத்து வருவதாக கூறப்படுகிறது.
ஒருவேளை குமரன் சென்றுவிட்டால் அந்த இடத்திற்கு மாஸ்டர் மகேந்திரன் நடிக்க வைக்க உள்ளதாகவும் பேச்சுகள் எழுகிறது. இது குறித்த உறுதியான தகவல் கூறப்படவில்லை.
1 note · View note
trendingwatch · 2 years
Text
ரியோ ராஜின் அடுத்த படத்தின் தலைப்பு நாளை வெளியாகிறது
ரியோ ராஜின் அடுத்த படத்தின் தலைப்பு நாளை வெளியாகிறது
ரியோ ராஜின் அடுத்த திட்டம் கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்டதாக நாங்கள் முன்பே தெரிவித்திரு���்தோம். ஹரிஹரன் ராம் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை, விஷன் சினிமா ஹவுஸ் மூலம் டி அருளானந்து வழங்குகிறார். இப்படத்தின் தலைப்பு நாளை வெளியிடப்படும் என படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இப்படத்தில் பவ்யா திரிகா மற்றும் இளங்கோ குமரன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ராகுல் கேஜி…
Tumblr media
View On WordPress
0 notes
Text
*திருப்பூர் குமரன் நினைவு நாள்*
11-01-2023ந் தேதி புதன்கிழமை திருப்பூர் குமரன் நினைவு நாளாகிய இன்று
திருப்பூரில் உள்ள திருப்பூர் குமரன் மணிமண்டபத்திலுள்ள அவரது சிலைக்கு
Tumblr media Tumblr media Tumblr media
விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் சார்பாக மலர்தூவி
நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
0 notes
deshamukalamu · 2 years
Photo
Tumblr media
அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் ஸ்ரீரங்கம் மார்கழி மாதம் முதல் நாள் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் , உற்சவர் நந்தகோபன் குமரன் அலங்காரத்தில் சிறப்பு படங்கள் (at Srirangam, Tamilnadu) https://www.instagram.com/p/CmN8oVbr9o0/?igshid=NGJjMDIxMWI=
1 note · View note
karuppuezhutthu-blog · 2 months
Text
உமா குமரன்: பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரான தமிழ் அகதிகளின் பிள்ளை
பட மூலாதாரம், http://www.umakumaran.co.uk கட்டுரை தகவல் பிரிட்டனில் ஜூலை 4-ஆம் திகதி நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார் இலங்கைத் தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட உமா குமரன். இந்தத் தேர்தலில் லேபர் கட்சி பெருவெற்றி பெற்று 14 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. அந்தக் கட்சியின் சார்பில் தலைநகர் லண்டனில் பல்வேறு சமூகங்கள் செறிந்துவாழும்…
0 notes
nvsrworld · 2 years
Text
December 16th:Thiruppavai song 1
December 16th:Thiruppavai song 1
திருப்பாவை-பாடல் 1 மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான்பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் பொருள்அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில்…
View On WordPress
0 notes
topskynews · 1 year
Text
திருப்பூரில் தாறுமாறாக ஓடிய லாரியால் விபத்து: கோயில் பூசாரி உயிரிழப்பு; வாகனங்கள் நொறுங்கி சேதம் | An accident caused by a wrong-way lorry
திருப்பூர்: திருப்பூர் மாநகரில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விபத்து ஏற்படுத்திய விறகு ஏற்றி வந்த லாரியால், கோயில் பூசாரி உயிரிழந்தார். மேலும் 4 பேர் காயமடைந்தனர். திருப்பூர் மாநகர போக்குவரத்தில் பிரதான சாலையாக இருப்பதுகுமரன் சாலை. தொழில் நகரமாக இருப்பதால், போக்குவரத்து போலீஸார் சார்பில் கனரக வாகனங்கள் மாநகர எல்லைக்குள் வருவதற்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குமரன்…
Tumblr media
View On WordPress
0 notes
venkatesharumugam · 2 years
Text
#ஒரு_அமுதசுரபியின்_கதை
கிட்டத்தட்ட 10 லிட்டர் தண்ணீர் பிடிக்கும் கொள்ளளவு உள்ள கல்ச(தொ)ட்டி அது! மற்றவர்களுக்கு அது வெறும் கல்சட்டி எங்களுக்கு அது அமுதசுரபி! என் பாட்டி வீட்டில் சமையலறையின் ஒரு ஓரத்தில் வீற்றிருக்கும். பாட்டி வீட்டில் நாங்கள் எல்லாரும் கூடும் போது மட்டும் அது சமையலறையின் மத்திக்கு வரும்.! வரும் என்றால் அதன் கனத்திற்கு அதைத் தூக்க முடியாது.
டெலிவரி பாய் கேஸ் சிலிண்டரை உருட்டி வருவது போல ஒரு பக்கம் சாய்த்து உருட்டி வருவோம். நான், தம்பி பாலு, தங்கை உமா, இன்னொரு தம்பி குமரன், சித்திகளின் பிள்ளைகள் ஹேமா, ராஜு, கார்த்தி, அகிலா, அருண், அப்புறம் பாட்டிக்கே பிள்ளைகளான மணி மாமா, கெளரி மாமா, சிவி (சிவக்குமார்) மாமா, பாஸ்கர் மாமா ஜெயபாரதி சித்தி, சாந்தி சித்தி..
கீதா சித்தி (கொஞ்சம் இருங்க) ஆம் எங்கள் குடும்பம் பெரிது! (யோவ் தாத்தா!) இந்த அனைவரும் கூடி வட்டமாக அமர்ந்து விடுவோம். அது அவ்ளோ பெரிய வீடுமல்ல! நடுநாயகமாக சாலமன் பாப்பையா போல பாட்டி அவரது கை பழைய சாத நீராகாரத்தை பிழிந்துவிட்டு அதை கல்சட்டியில் போட்டுக் கொண்டிருக்கும் ஆனால் பார்வை எங்கள் அனைவரின் மீதும் இருக்கும்.
‘கார்த்தி நீ அந்த மாவடு ஊறுகாயை எடு, உமா நீ கால் கழுவிட்டு வா., பாலு நல்லா உக்காருடா, ஹேமா கல் உப்பை எடுடி’ கமெண்டுகள் பறந்து கொண்டிருக்க அதற்குள் பழைய சாதத்தை பிழிந்து போட்டு எருமைத் தயிரை ஊற்றி கல் உப்பு போட்டு அபாரமாக பிசைந்து இருப்பார். வெங்கி வா உப்பு போதுமா பார் என்பார். அப்போதே நான் தான் டேஸ்ட் செக்கர் இன்றளவும்..
அது என் வீட்டிலும் தொடர்கிறது! நல்ல நாக்குடா உனக்கு என்பார் பாட்டி. அவருக்குத் தெரியாத சட்டங்கள் ஒன்றுமில்லை யுவர் ஆனர் என இப்போது சொல்லத் தோன்றுகிறது. வெறும் தயிர்சாதம் தான். பாட்டி வீட்டில் ஊறுகாய் தயாரிப்பு இருப்பதால் நிச்சயம் 3 விதமான ஊறுகாய் இருக்கும் சில வேளைகளில் பழைய வத்தக் குழம்பு எனும் அமுதமும் கிடைக்கும்!
கடைக் குட்டியான கீதா சித்தி பாட்டிக்கு டெபுடி! குழம்பு ஊற்றுவது அவர் தான். பாட்டியின் கவளம் கவனமாக இருக்கும் எனக்கு ஒரு சிறிய பந்து அளவிற்கு என்றால் சிறிய கொய்யா அளவிற்கு தம்பிக்கு, எலுமிச்சை சைசில் என் தங்கைக்கு, கடலை உருண்டை சைசில் பொடியர்களுக்கு அவரவர் முன் ஊறுகாய் இருக்கும் குழம்பு என்றால் அகப்பையில் கீதா சித்தி ஊற்றுவாள்!
சாத உருண்டையை நடுவே குழி பண்ணிக்கொள்ளவேண்டும். மாமா சித்திகளுக்கு கவளம் சாத்துக்குடி சைசில் கிடைக்கும்! நெய் விட்டு பிசைந்த பருப்பு சாதம், உருளைக் காரக் கறி, வெந்தயக் குழம்பு, சுட்ட அப்பளம், செக்கு எண்ணெய் விட்டு ப��சைந்த சுண்டைக்காய் வத்தக்குழம்பு, பூசணி பருப்புக் கூட்டு, சின்ன வெங்காயச் சாம்பார், வடகம் என அவ்வப்போது..
அந்த அமுதசுரபியில் மெனுக்கள் மாறும். அரட்டை, சிரிப்பு, கும்மாளம் என வீடே அதிரும். ஆஹா! அதுவொரு அழகிய கனாக் காலம்! 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு மிகப்பெரிய பஃபே விருந்துக்கு போயிருந்தேன்! ஒருவருக்கு 150 டாலர்கள் அன்றைய மதிப்பில் கிட்டத்தட்ட 12ஆயிரம் ரூபாய்.! 240 உணவுகள் என 67வது மாடி உச்சியில் நடந்த ஆடம்பர விருந்து!
கலந்து கொண்டேன், அனைத்தும் மிக நன்றாகத் தான் இருந்தது, ஆனால் மனம் பாட்டி வீட்டு விருந்துக்குத் தான் முதல் மதிப்பெண் தந்தது.! வெறும் பழைய சாதம்& ஊறுகாய் தான்! ஆனால் அது தந்த சந்தோஷம் அந்த 240 வகை ஆடம்பர உணவுகள் தரவில்லை. அன்று ஒருநாள் பாஸ்கர் மாமாவுடன் போனில் பேசிக் கொண்டிருந்த போது பேச்சின் இடையில் மாமா பாட்டி..
நமக்கெல்லாம் சாதம் பிசைஞ்சு தர்ற அந்த கல்சட்டி இன்னும் வீட்டில் இருக்கு தானே ? என்றபோது, மாமா சில நொடிகள் மவுனித்துவிட்டு அது உடைஞ்சிடுச்சுடுடா கண்ணு என்றார். ஏனோ என் பாட்டி இறந்த அன்று அழுததை விட அன்று அதிகம் அழுதேன்.! ஒரு வேளை அன்று மவுனித்த நொடிகளில் எதிர் முனையில் என் மாமாவும் அழுதிருப்பார் என்றே நினைக்கிறேன்.!
(மீள் பதிவு)
Tumblr media
0 notes
oneminuteonebook · 2 years
Text
இறந்து கிடந்த தென்றல் - Crime Novel
இறந்து கிடந்த தென்றல் – Crime Novel
சென்னையில் இருந்து சொந்த ஊரான கோவைக்கு சொந்த வேலையாக பஸ்ஸில் சென்று கொண்டிருந்தான் ரிப்போர்ட்டரான குமரன். வழியில் ரயில்வே கேட் போடப்பட்டிருந்ததால், இயற்கை உபாதைக்காக  பஸ்ஸை விட்டு இறங்கி ஒதுக்குப்புறமாகப் பார்த்து ஒதுங்குகிறான். திடீரென காலில் ஏதோ தட்டுப்பட, அரைகுறை வெளிச்சத்தில் கீழே பார்த்த குமரன் திடுக்கிட்டான். கணுக்கால் அளவு வெட்டப்பட்டிருந்த நைந்து போன மனிதக் கால். ரிப்போர்ட்டர் என்பதால்…
Tumblr media
View On WordPress
0 notes
trendingwatch · 2 years
Text
ரியோ ராஜின் அடுத்த கட்டம் தொடங்குகிறது
ரியோ ராஜின் அடுத்த கட்டம் தொடங்குகிறது
ரியோ ராஜின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு ஞாயிற்றுக்கிழமை சென்னையில் தொடங்கியது. முறைப்படி படப்பிடிப்பு தொடங்கியது poojai சிறப்பாக நடத்தப்பட்ட விழா விக்ரம் படத்தின் தயாரிப்பாளர் லோகேஷ் கனகராஜ் முதல் காட்சிக்கு கைதட்டினார். இப்படத்தை விஷன் சினிமா ஹவுஸ் மூலம் டாக்டர் தாருளானந்து வழங்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் பவ்யா திரிகா மற்றும் இளங்கோ குமரன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.…
Tumblr media
View On WordPress
0 notes