ஸ்ரீரங்கத்தில் 100 ஆண்டு பாரம்பரியத்துடன் வழுக்கு மரம் ஏறும் உறியடி விழா கொண்டாடப்பட்டது...
திருச்சியின் ஸ்ரீரங்கம் பகுதியில் கிருஷ்ணர் கோவிலில் நடைபெறும் இந்த வழுக்கு மரம் ஏறும் நிகழ்வு மிகவும் பிரபலமானது. இவ்விழா கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி விழாவை ஒட்டி, ஸ்ரீரங்கம் கீழவாசல் பகுதியில் அமைந்துள்ள கண்ணன் பஜனை மடத்தில் இந்த உறியடி உற்சவம் மிகுந்த கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது.
விழாவின் முக்கிய அம்சமாக, 50 அடி உயரத்தில் வழுக்கு மரம்…
நெஞ்சு வலி மாரடைப்பு நுரையீரல் ஆஸ்துமா பரிகார கோயில்
ஆஸ்துமா மற்றும் நாட்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி போன்றவற்றை குணப்படுத்துவதாக நம்பப்படும் கோயில் உள்ளது
இதய பிரச்சனைகள், நுரையீரல் நோய்கள், ஆஸ்துமா மற்றும் நாட்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி போன்றவற்றை குணப்படுத்துவதாக நம்பப்படும் கோயில் உள்ளது.
இங்கு கோவிலின் உள் கூரை இதயத்தின் நான்கு அறைகளைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. ராஜசிம்மன் என்ற பல்லவ மன்னன் சிவபெருமானுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகத்திற்கு முஹூர்த்தம் ஏற்பாடு செய்தான் கும்பாபிஷேகத்திற்கு முந்தைய நாள் இரவு, மன்னனின் கனவில் சிவபெருமான்…
காந்தியாரை அனுமதிக்க மறுத்து அவமதித்த அந்த மனை தற்போது 'கள் இறக்கும் தொழிலாளர்களுடைய சங்கத்தின்' அலுவலகமாக செயல்படுகிறது. வரலாறானது முன்னோக்கியே நகரும் என்பதற்கான முன்னுதாரணம் இது. - தோழர் பினராயி விஜயன்
பினராயி விஜயன்
கேரள முதல்வர்
(கேரளாவில் நடைபெற்ற வைக்கம் சத்தியாக்கிரக போராட்டத்தின் நூற்றாண்டு தொடக்க விழாவில், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆற்றிய உரை இங்கு தமிழில் தரப்படுகிறது – ஆசிரியர்குழு)
வைக்கம் சத்தியாக்கிரக போராட்டம், ஈடு இணையில்லாத, மிகப்பெரிய போராட்டம் ஆகும். அந்த போராட்டத்தின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தை இன்று தொடங்குகிறோம். கேரளத்தில் மாறுமரக்கல் சமரம், அருவிபுரம் சிலை வைத்தல்,…
கருவறையில் உள்ள சிலையை சூரியனின் கதிர்கள் எவ்வாறு எப்பொழுதும் தொடுகின்றன, சிலையின் நிழல் நாள் முழுவதும் இருத்தல், இத்தகைய ஆச்சரியமிக்க கோயில்கள் பட்டியல் நீண்டது. இவற்றில் பல கோயில்கள் பற்றி எனது ஆங்கில வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளேன்.
மயிலாடுதுறை அருகே ஒரு பழங்கால கோயில் உள்ளது, அங்கு சிவலிங்கம் ஒரு நாளைக்கு ஐந்து முறை அதன் வண்ணங்களை மாற்றுகிறது, இது கால பூஜையுடன் ஒத்துப்போகிறது.
மாயூரம் அருகே இத்தலம் வலங்கைமான்/பாபநாசம் அருகே அமைந்துள்ளது,
கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில்.
பஞ்ச வர்ணேஸ்வரர் கோயில் எனவும் அழைக்கப்படும் சிவபெருமானின் சுயம்பு மூர்த்தி பகலில் ஒரு நாளைக்கு ஐந்து முறை தன் வண்ணங்களை மாற்றிக் கொள்கிறது.
மற்றொரு தனித்துவமான அம்சம், கருவறையில் இரண்டு சிவ லிங்கங்கள் உள்ளன.
சிவபெருமான் துறவி திருநாவுக்கரசர் இறைவனின் பாதங்களை தரிசனம் செய்த இடம் இது என்பதால் வைணவ நடைமுறையான 'சடாரி' யால் பக்தர்கள் ஆசிர்வதிக்கப்படுகின்றனர்.
மூலவர்: கல்யாண சுந்தரேஸ்வரர், பஞ்சவர்ணேஸ்வரர்
உற்சவர். கல்யாணசுந்தரேஸ்வரர்
அம்மன் / தாயார்: கல்யாணசுந்தரி
தல விருட்சம்: வில்வ
தீர்த்தம்: சப்தசாகரம்.
பழைய ஆண்டு : 1000-2000 ஆண்டுகள் பழமையானது
வரலாற்றுப் பெயர்: திருநல்லூர், நல்லூர்
மாவட்டம்: தஞ்சாவூர்.
தஞ்சாவூர்
பிப்ரவரி-மார்ச் மாதங்களில் மகா சிவராத்திரி மற்றும் டிசம்பர்-ஜனவரி மாதங்களில் மார்கழி திருவாதிரை ஆகியவை கோயிலின் திருவிழாக்கள்.
அன்னை திருப்புரசுந்தரி தனி சன்னதியில் இருந்து பக்தர்களை ஆசீர்வதிக்கிறார். காசி விஸ்வநாதர், அகஸ்தியர், கணநாதர் மற்றும் மூன்று சைவ ஞானிகளான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோருடன் நடனமாடும் தோரணையில்( 8 கைகளுடன்) நடராஜருக்கு சன்னதி உள்ளது.
முகவரி மற்றும் கோயில் நேரங்கள்.
ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) கோயில், திருநல்லூர்-614 208, வலங்கைமான் தாலுகா, கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.
அய்யாசாமி குருக்கள் திருநல்லூர்.094868 13059.
திருநல்லூர் கோயில் கடை வினோத் .094436 68306
கோயில் காலை 7.30 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
(கோவில் கனவில் வந்தால் என்ன பலன் – kovil kanavil vanthal enna palan) Kanavupalangal in tamil வணக்கம் நண்பர்களே இன்று நாம் இந்த பதிவில் என்ன பார்க்கப் போகிறோம் என்றால் நீங்கள் கோவில் சம்பந்தமான கனவுகளை கண்டால் என்ன பலன் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
கோயில் கனவில் வந்தால் என்ன பலன்
கோவில் கனவில் வந்தால் உங்களுக்கு எம் மாதிரியான பலன்களை இந்த கனவுகள் உங்களுக்கு கொடுக்கப் போகிறேன் என்பதை…
ஆகட்டும், தாயே" என்று சொல்லிவிட்டு மதுராந்தகர் புறப்பட்டார். அரண்மனையில் அவர் தங்கியிருந்த பகுதிக்குப் போனார். அவருடைய உள்ளத்தில் ஆத்திரமும், அசூயையும் கொழுந்து விட்டு எரிந்தன. யாரோ வழியோடு போகிற ஆண்டிப் பண்டாரத்துக்கு எவ்வளவு தடபுடலான மரியாதைகள்! இராஜ குலத்தின் கௌரவத்துக்கே தம் தாயினால் பங்கம் நேர்ந்துவிடும் போலல்லவா இருக்கிறது! பழுவேட்டரையர்கள் தம் அன்னையைப் பற்றி அடிக்கடி குறை சொல்லுவதில் வியப்பு ஒன்றுமில்லை. உடம்பில் சாம்பலைப் பூசிக்கொண்டு ருத்திராட்ச மாலைகளை அணிந்து கொண்டு யார் வந்தாலும் பெரிய மகாராணிக்குப் போதும்! பதிகம் ஒன்றும், அவன் பாடிக்கொண்டு வந்துவிடவேண்டும்; அல்லது கோயில், குளம், திருப்பணி என்று சொல்லிக் கொண்டு வந்துவிட வேண்டும். இப்படிப்பட்டவர்களுக்கு அள்ளிக் கொடுத்து இராஜாங்க பொக்கிஷத்தையே இவர் சூனியமாக்கி விடுவார் போலிருக்கிறது! போதாதற்கு இளவரசி குந்தவை ஒருத்தி எப்போதும் அருகில் இருக்கிறாள். கோவில் திருப்பணி செய்து மிச்சம் ஏதேனும் இருந்தால், அதை மருத்துவச் சாலை ஏற்படுத்துவதற்காகச் செலவிட்டு விடுகிறாள். இப்படியெல்லாம் இவர்கள் செய்வதற்கு இடம் கொடுத்து வந்தால் நாளை நம்முடைய மனோரதம் எப்படி நிறைவேறும்? சோழ சிங்காதனத்தில் ஏறி நாலா திசைகளிலும் சோழ சைன்யங்களை அனுப்பி இந்த நில உலகம் முழுவதையும் வென்று ஒரு குடை நிழலில் ஆளுவது எவ்விதம் நடைபெறும்?”
Excerpt From
Ponniyin Selvan Anaithu Pagangal (Tamil Edition)
Kalki
This material may be protected by copyright.
Context::Madhurantakan meeting his mother, just after their conversation.
“So be it, mother!” saying so, Madhurantakar left. He went to the part of the palace where he was staying. Anger and dissatisfaction were burning in his heart. How they heaped respect on some wayfaring nobody! It seems that the prestige of the royal clan was in danger because of his mother! There is no surprise in the complaints the Pazhuvettarayars made frequently against his mother. It is enough for the elder queen if.anyone comes bearing the sacred ash ad rudraksha beads on his body! He’d come singing a hymn, or saying that a temple or holy place was in need of repair. It seems like she would reduce the treasury to nothing, giving heaps t men such as these! As if that wasn’t enough, there is one Princess Kundavai forever at her side. If.there is anything left after repairing temples, she’d take it citing need for hospitals. If they are allowed to do such things, how will our dreams be fulfilled in the future? How will it be possible to ascend the Chozha throne and rule all the lands of the world under one flag?
Spiteful as he is, Madhurantaan has a point.How will the Kingdom afford the expenses of wars of conquest if everything is used in these pursuits?
Another snippet of the series! Tagging @mizutaama @celestesinsight @whippersnappersbookworm @harinishivaa @racoonpaws @rdx-dcm @deadloverscity @favcolourrvibgior @willkatfanfromasia @humapkehaikaun @themorguepoet @thereader-radhika @thelekhikawrites
சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் 2,000 ஏக்கர் நிலங்களை விற்றதாக புகார்: அரசிடம் அறிக்கை கேட்கும் ஐகோர்ட் | Allegation that Dikshitars of Chidambaram Temple have sold 2000 acres of land: HC Order to file report
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான 2 ஆயிரம் ஏக்கர் நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்துள்ளதாக அறநிலையத் துறை தரப்பில் குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அது தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த போது ஆண்டுக்கு ரூ. 3 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டிய…
ஒவ்வொரு பிரதோஷ பூஜையிலும், பக்தர்களே பூஜை, வழிபாடு செய்து ஆத்ம திருப்தி அடைகின்றனர்.
பக்தர்கள் அனைவரும் "பிரதோஷ பூஜை"யில் கலந்து கொண்டு சிவனருள் பெறவும்.
******************
*ருணம் என்பது கடனை குறிக்கக் கூடியது*
*பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் கடன் பிரச்னை தீரும்.*
ருண விமோசன பிரதோஷ வேளையில், சிவபெருமானையும் நந்தியையும் வணங்கினால், கடன் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம்.
அதோடு செவ்வாய் பகவானையும் வணங்கி வழிபட்டால், தீராத கடன்களும் தீரும்.
மக்களுக்கு நன்மை செய்வதற்காகவே, மக்களை காக்கும் பொருட்டு ஆலகால விஷத்தை தனக்குள் ஏற்றுக் கொண்டார் சிவபெருமான்.
விஷத்தின் வீரியத்தினால் மயக்கமடைந்திருந்த இறைவன், திரயோதசி நாளில் மாலை வேளையில் கண் விழித்தார்.
சிவ தரிசனம் கண்டு அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
பிரதோஷம் விரதம் ஏற்பவர்கள் வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும், திரயோதசி திதியில், அதிகாலையில் எழுந்து நீராடி, நித்திய கடன்களை முடிக்க வேண்டும்.
மாலையில் கோயில் சென்று சிவ தரிசனம் செய்து, நந்திக்கு பச்சரிசி, வெல்லம் படைத்து, நெய் தீபங்கள் ஏற்றி வணங்கி வர வேண்டும்.
*ருணம் என்றால் கடன்*
கடன் பிரச்சினையால் இன்றைக்கு பலரும் தத்தளிக்கின்றனர்.
*ரோகம் என்றால் நோய்*
கடனும், நோயும்தான் இன்றைக்கு மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது.
நோயினால் பலரும் கடனாளியாகின்றனர்.
* அபிஷேகப் பிரியரான சிவபெருமானுக்கு, கறந்த பசும் பாலில் அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பு.
* தூய்மையான இளநீரில் அபிஷேகம் செய்வதும் மிக நன்று.
இறைவன், இயற்கையை விரும்பக் கூடியவர்.
இயற்கையான வில்வ இலை, தும்பைப் பூ மாலை, கறந்த பால் ஆகியவற்றைக் கொண்டு, பிரதோஷ நாளில் அபிஷேகம் செய்தால்,
சகல தோஷங்களும், ஏழேழு ஜென்மங்களில் உண்டான தோஷங்களும், ஏன் பிரம்மஹத்தி தோஷமே நீங்கும் என்று புராணங்கள் அறுதியிட்டுக் கூறுகின்றன.
ருத்ர மூர்த்தியும், நரசிம்மரும் சேர்ந்த உருவமான ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தியை, பிரதோஷ காலத்தில்,
முக்கியமாக ருண விமோசன பிரதோஷ காலத்தில் வழிபட்டால், தீராத கடன் கூட தீர்ந்து விடும்.
மேலும் கடன் தீர்ப்பதில் கேது பகவானும், செவ்வாய் பகவானும் மிகப் பெரும் பங்காற்றுகின்றனர்.
*கடன் வாங்குவதற்கு நேரம் காலம் ரொம்ப முக்கியம்.*
*திருப்பி அடைப்பதற்கும் நேரம் காலம் ரொம்ப முக்கியம்.*
*ராகு, கேது போன்ற பாம்பு கிரகங்களுடன், குரு சேர்ந்து நிற்கும்போது, புதிய கடன்கள் வாங்கவோ அல்லது கடன் அடைக்கவோ முயற்சி செய்யக் கூடாது*
*ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி ஆகியவை நடைபெறும்போது கடன் வாங்க முயற்சி செய்ய கூடாது.*
*சந்திரன் பலமற்ற நாளில், கடன் வாங்கும் முயற்சியில் இறங்கக் கூடாது*
*முக்கியமாக செவ்வாய் கிழமையில் கடன் வாங்கவே கூடாது.*
*அதற்குப் பதிலாக செவ்வாய் கிழமைகளில் கடன் அடைக்கலாம்.*
சிவனுக்கு மட்டுமல்ல, ஸ்ரீ மஹா விஷ்ணுவிற்கும் பிரதோஷ நேரம் உகந்த காலம்தான்.
பிரஹலாதனின் பக்தியை மெய்ப்பிக்கவும், ஹிரண்ய கசிபுவை வதம் செய்து உலகைக் காக்கவும், தூணிலிருந்து நர நாராயண ரூபமாய், உக்ர நரசிம்ம மூர்த்தியாக வெளிவந்த காலம், இந்த பிரதோஷ காலம்தான்.
எப்படி ஈசனுக்கு சனிப் பிரதோஷம் மிகவும் மகிமை வாய்ந்ததோ, அதே போல நரசிம்மருக்கு செவ்வாய் கிழமைகளிலும், சுவாதி நட்சத்திரத்திலும் வரும் பிரதோஷங்கள் மிகவும் விசேஷமானவை.
செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாக கொண்டவர்கள், செவ்வாய் அன்று வரும் பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும்.
*மனிதனுக்கு வரும் ருணத்தை மற்றும் ரணத்தை நீக்கக் கூடிய பிரதோஷம் இது.*
*செவ்வாயால் வரும் கெடு பலன் நீ��்கும்; பித்ரு தோஷம் நீங்கும்.*
*கடன் தொல்லை தீரும்*
*எந்த ராசி, நக்ஷத்திரத்தை உடையவராக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷமாவது வைத்தீஸ்வரன் கோவில் சென்று, சித்தாமிர்த தீர்த்தத்தில், பிரதோஷ நேரத்திலே குளித்து விட்டு, வைத்தியநாதனை வழிபட்டால், அவர்களுக்கு ஏற்பட்ட ருணமும், ரணமும் (கடனும், நோய்களும்) நீங்கும் என்பது சிவ வாக்கு.*
*உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும்; வருமானம் அதிகரிக்கும்.*
இந்த தினத்தில் சிவலிங்கத்திற்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்த��� பூஜித்தால், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
பிரதோஷ நாளில் இருக்கும் மௌன விரதம் கூடுதல் பலன் தரும்.
இந்த நாளில் சிவபுராணம், நீலகண்ட பதிகம், கோளறு பதிகம், திருக்கடவூர், திருப்பாசூர் பதிகங்கள் போன்றவற்றைப் பாராயணம் செய்வது நல்ல பலனைத் தரும்.
அம்பலம் இணைய இதழில் சுஜாதா எழுதிய கேள்வி பதில்கள்….
கேள்வி: சுஜாதா சார்! கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர் என்று பேசுகிறீர்களே… கொஞ்சம் சாப்பாட்டைப் பற்றிப் பேசலாமே. உங்கள் கணிப்பொறி நிறுவனத்தில் கேன்டீன் எப்படி? -
பதில்: கணிப்பொறி, கேன்டீன் இரண்டிற்கும் அடிக்கடி ஒரே பிரச்சினைதான் : ‘‘சர்வர் ப்ராப்ளம்’’.
கேள்வி: திருமணத்திற்கும் மரபுக் கவிதைக்கும் என்ன சார் தொடர்பு?
பதில்: இரண்டிலும் சீர் உண்டு. திருமணமும் ஒரு ‘தளை’தானே? இரண்டும் வளமடையத் தேவை ‘பொருள்’தான். இரண்டிலும் வெற்றி பெற நன்கு யோசித்து ‘அடி’யெடுத்து வைக்க வேண்டும். இரண்டிலும் இலக்கணப் பிழைகள் இருக்கக் கூடும். மணம் புரிந்து கொண்ட மனைவி ‘வஞ்சிப்பா’ளானால் வாழ்க்கை ‘வருத்தப்பா’ ஆகிவிடும்.
கேள்வி: ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையாக இருந்தால் ‘கள்’ சேர்த்துக் கொள்கிறோம். (உம்) பறவை, பறவைகள்; நூல் நூல்கள் -இப்படி. ஆனால் 1330 இருந்தும் அதனை திருக்குறள் என்றுதானே சொல்கிறோம். திருக்குறள்கள் என்று சொல்வதில்லையே.
பதில்: திருக்குறள் கள்ளை அனுமதிப்பதில்லை.
கேள்வி: ‘மானும் மழுவமேந்தி மலர்ப் பாதம் தூக்கி ஆடும் இறைவன்’ என சிவனை கவிஞர்கள் பாடுகிறார்களே; ‘மலர்ப் பாதம்’ பெண்களுக்குத் தானே பொருந்தும். சிவனுக்கு எப்படி? –
பதில்: சிவனே என்றிராமல் இப்படியொரு சக்தியுள்ள கேள்வி கேட்டிருக்கிறீர்கள். மலர்ப்பாதம் என்ற சொல்லுக்கு மலர் போன்ற பாதம் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் என்பதில்லை. மலர்களால் அர்ச்சிக்கப்படுகிற பாதம் என்று பொருள் கொள்ளலாமல்லவா? உவமைத் தொகையை மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையாகப் புரிந்து கொள்ளுங்களேன்.
கேள்வி: தற்போதைய பட்டிமன்றங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? –
பதில்: கி.வா.ஜ., குன்றக்குடி அடிகளார், திருச்சி தேசியக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராதாகிருஷ்ணன் போன்றோர் காலங்களில் பட்டிமன்றங்கள் சிந்தனையைத் தூண்டின. இப்போது பெரும்பாலான பட்டிமன்றங்கள் நகைச்சுவை என்ற பெயரில் சிரிப்பாய்ச் சிரிக்கின்றன.
கேள்வி: லால்குடி ஜெயராமனு்க்கும், லால்குடியில் காவேரிக் கரையில் விவசாயம் செய்யும் விவசாயிக்கும் ஏதேனும் ஒற்றுமை உண்டா?
பதில்: உண்டே. இவர் ஸ்வரம் பாடுகிறார்; அவர் உரம் போடுகிறார். இவர் பண் மூலம் பண்படுத்துவது மனதை; அவர் மண் மூலம் பண்படுத்துவது நிலத்தை. மொத்தத்தில் இருவருமே வயலின் மேன்மைக்காகப் பாடுபடுகிறார்கள்.
கேள்வி: சமையலில் மனைவிக்கு உதவி செய்வீர்களா?
பதில்: சமையல் கலை இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஒன்று சமைப்பது. இன்னொன்று சாப்பிடுவது. நான் இரண்டாவது பகுதியில் உதவுவதுண்டு.
கேள்வி: நீங்கள் மரபுக் கவிதைகள் எழுதுவது உண்டா? உங்களுடைய ஏதாவது ஒரு மரபுக் கவிதை ப்ளீஸ்!
பதில்: உண்டு. எப்போதாவது. ‘வேண்டாம் வரதட்சணை’ என்ற ஈற்றடிக்கு முன்பு தினமணி கதிரில் ஒரு நேரிசை வெண்பா எழுதினேன். அது-
பத்து பவுன் தங்கம் பளிச்சென்ற கல்வளையல்
முத்திலே சின்னதாய் மூக்குத்தி - மத்தபடி
பாண்டு வைத்து ஊர்கோலம் பாட்டு இவைதவிர
வேண்டாம் வரதட் சிணை!
பதில்: இலங்கைத் தமிழர்களுடன் கதைக்கும் போது அவர்கள் பாவிக்கும் சில தமிழ் வார்த்தைகள் சொக்கிலேற்றுகளாய்த் தித்திக்கும் என்று நம்மால் அவதானிக்க முடிகிறது. கனகாலமாய் அவற்றைப் படித்து வருவதால் சென்னைத் தமிழைப் பொறுத்தவரை அதிக அளவில் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தும் வட்டாரத் தமிழ் அதுதான்.
கேள்வி: காதல் கவிதை எழுதக் காதலித்துத்தான் ஆக வேண்டுமா?
பதில்: சரிதான்… துப்பறியும் கதை எழுத கொலை செய்ய வேண்டும் என்பீர்களா?
கேள்வி: ஊழல் பெருச்சாளிகள் எங்கிருந்து வருகிறார்கள்?
பதில்: பெரும்பாலும் அரசியல் சாக்கடையிலிருந்துதான்.
கேள்வி: ஆலய உண்டியலில் பணம் போடுவது, ஏழையொருவனுககு அறம் செய்வது. -நற்பயன் தரக் கூடியது?
பதில்: ‘நடமாடும் கோயில் நம்பர்க்கொன்று ஈந்தால் அது படமாடும் கோயில் பரமற்கு போய்ச் சேரும் என்கிறார் திருமூலர். ஏழை சப்-போஸ்ட் ஆபீஸ், கடவுள் ஹெட் போஸ்ட் ஆபீஸ். ஏழைக்குக் கொடுத்தால் கடவுளுக்குப் போகும்.
கேள்வி: தினமும் பூண்டு சாப்பிட்டால் இதய நோய் வராதாமே?
பதில்: தொடர்ந்து அதன் நாற்றத்தைச் சகித்துக் கொள்வதில் உறுதிபூண்டு செயல்பட்டுப் பாருங்கள்.
கேள்வி: இடமிருந்து வலமாக வாசித்தாலும், வலமிருந்து இடமாக வாசித்தாலும் ஒரே வார்த்தையைத் தரும் ‘விகடகவி’யைப் போல் வேறு ஏதாவது?
பதில்: ‘தேருவருதே’, ‘மோருபோருமோ’ தமிழில் ஒரு முழுக்குறள் வெண்பாவே இப்படி இருக்கிறது. ‘நீவாத மாதவா தாமோக ராகமோ தாவாத மாதவா நீ’
நெஞ்சு வலி மாரடைப்பு நுரையீரல் ஆஸ்துமா பரிகார கோயில்
இதய பிரச்சனைகள், நுரையீரல் நோய்கள், ஆஸ்துமா மற்றும் நாட்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி போன்றவற்றை குணப்படுத்துவதாக நம்பப்படும் கோயில் உள்ளது.
இங்கு கோவிலின் உள் கூரை இதயத்தின் நான்கு அறைகளைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. ராஜசிம்மன் என்ற பல்லவ மன்னன் சிவபெருமானுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகத்திற்கு முஹூர்த்தம் ஏற்பாடு செய்தான் கும்பாபிஷேகத்திற்கு முந்தைய நாள் இரவு, மன்னனின் கனவில் சிவபெருமான்…
@aazhkadalvedan திருக்கோயிலூர் வீரட்டேஸ்வரர் கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இச்சிவத்தலம் இந்தியா தமிழ்நாடு மாநிலத்தில் விழுப்புரம் மாவடத்திலுள்ள திருக்கோவிலூர் ஊரில் கீழூர் என்ற பகுதியில் அமைந்துள்ளது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டுத் தலங்களில் ஒன்றாகும். [1] மேலும் இது அட்டவீரட்டத் தலங்களில் ஒன்று ஆகும்Thirukovilur Series Kabilar Kundru :https://youtu.be/hUeFKDeTH50Map location :https://maps.app.goo.gl/m6T7wRjDo96ysuow6Please do Like, Comment and Subscribe to our channel Facebook Link: https://www.facebook.com/aazh.kadalvedab/Twitter Link : https://twitter.com/aazhkadalvedanInstagram Link: https://www.instagram.com/aazhkadalvedan/ Please support our other channel THE ROYAL ROUND YOUTUBE CHANNEL LINK - food Review, Hotel stay
கோவிலில் மணி அடிக்க இனி மறக்காதீங்க….!
கோவிலில் மணி அடிப்பதற்கு பின் ஒளிந்துள்ள ரகசியம்…!!
கோவிலில் அடிக்கும் மணி ஓசைக்கும், மனிதர்களின் மூளைக்கும் இடையே தொடர்பு உள்ளது என சாஸ்திரத்தில் நமது முன்னோர்கள்கூறியிருக்கின்றனர்.
பூஜை செய்யும் போது பயன்படுத்தப்படும் ஒரு பொருளாக உள்ள மணி ஓசையின் பின் ஒரு அறிவியல் நுண்ணறிவும் இருக்கிறது.
கோவில் மணி அடித்துவிட்டு வணங்கினால், தங்களின் வேண்டுதலை…