முருகப்பெருமான் அருளாசி அனைவருக்கும் கிடைக்கட்டும்
0 notes
Thiruparankundram Murugan Temple: வைகாசி சுபமுகூர்த்த நாள்.. திருப்பரங்குன்றத்தில் ஒரே நாளில் 125 திருமணம்..
தொடர்புடைய செய்திகள்
முருகனின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடானது மதுரை திருப்பரங்குன்றம் கோவில் ஆகும். இக்கோவிலில் முருகப்பெருமான் குன்றின் மேல் அமர்ந்த நிலையிலும், தெய்வானையுடன் திருமணக்கோலத்திலும் பக்தர்களுக்குக் காட்சி தந்து வருகின்றார்.
இதனால் இந்த இக்கோவிலில் பக்தர்கள் திருமணம் செய்து கொள்வது என்பது வழக்கமாக இருந்து வருகின்றது. இந்த நிலையில் வைகாசி மாதத்தின் முதல் வளர்பிறை சுபமுகூர்த்த…
0 notes
முருகப்பெருமான். அருள் மற்றும் ஆசியுடன். இந்த நாள் இனிய நாள் ஆகட்டும். இனிய தைப்பூசம் வாழ்த்துக்கள்
Use JAN10 to avail a 10% discount above 300. Shopping links are in bio
0 notes
இரு தரப்பினரிடையே மோதல் - திருவள்ளூரில் 6 பேர் கைது | Clash between two parties - 6 people arrested in Thiruvallur
திருவள்ளூர்: அத்திமாஞ்சேரிப்பேட்டையில் முருகப்பெருமான் மற்றும் அம்பேத்கர் ஊர்வலத்தின்போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டை அடுத்த அத்திமாஞ்சேரிப் பேட்டையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு முருகப் பெருமான் திருவீதி உலா நடைபெற்றது.அப்போது, மற்றொரு பிரிவினர் சட்டமேதை பி.ஆர். அம்பேத்கர் பிறந்தநாளைக்…
View On WordPress
0 notes
தாயின் வயிற்றில் இருந்து எப்போது குழந்தையின் தலை பூமியில் படுகிறதோ அந்த நொடியில் இருந்தே நரகம் தான்.
- முருகப்பெருமான்
From the moment when a child lands it's head on the Earth from the mother's womb, then on begins hell.
- Lord Murugan
0 notes
சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் திருமண சீர்வரிசை வழங்கும் விழா- திரளாக பக்தர்கள் பங்கேற்பு
சுவாமிமலை:
அறுபடை வீடுகளில 4-ம் படைவீடான சுவாமிமலையில் சுவாமிநாதசாமி கோவில் உள்ளது.
இக்கோவிலில் பங்குனி மாதத்தில் வள்ளிநாயகி திருமண நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி, 2-ம் ஆண்டாக நேற்று வள்ளி நாயகி, முருகப்பெருமான் திருமணம் நடைபெற்றது. முன்னதாக, குன்றக்குறவர் இன மேலப்பாடி வள்ளிநாயகிக்கும், குறவேடன் காவடி முருகப்பெருமானுக்கும் தாய் வீட்டு திருமண சீர்வரிசை குன்றக்குறவர்கள் வழங்கும் நிகழ்ச்சி…
View On WordPress
0 notes
சுட்ட பழம்! 🫐
நாவற்பழ சீசன் என்று நினைக்கின்றேன். கல்முனை, மட்டக்களப்பு நகர்களிலும், கல்முனையிலிருந்து மட்டக்களப்பு செல்லும் வழி சாலையோரங்களிலும் ஆங்காங்கே குவியல் குவியலாக இந்த கருவண்டுப்பழங்களை வைத்து, கொத்துக் கொத்தாக அளந்து விற்கின்றார்கள். ஆவி பறக்க "வா" என்றழைக்கும் உப்பிட்டு அவித்த சோளனுடன் சேர்ந்துகொண்டு இந்த கருவண்டுப்பழங்களும் நம்மை சுண்டியிழுக்கின்றன.
கண்கவர் வர்ணத்திலாகட்டும், நவிலூறும் சுவையிலாகட்டும், மருத்துவ குணத்திலாகட்டும் ஒரு மஹா மேதையே இந்த நாவற்பழம். (blue jambu fruit/ black plum/ jamun)
நாவல் மர உச்சியில் பேயுண்டு என்று கூறுவதில் உண்மையுண்டா இல்லையா என்பதை யாமறியோம். ஆனால் நம் உச்சியிலிருந்து உள்ளங்கால் வரையுள்ள நீரிழிவு முதலிய பல நோய்களை அடியோடு விரட்டிவிடுவதில் இந்நாவற்பழத்திற்கு மகத்துவமான பங்குண்டு என்பதில் மட்டும் ஐயமேதுமில்லை.
இந்த மகத்துவம் புரிந்துதானோ என்னவோ முருகப்பெருமான் கூட ஔவைப்பாட்டிக்கு இந்நாவற்பழங்களை வைத்தே ஞானம் புகட்டினார்!
தற்காலத்தில் விலை முன்னையதைவிட சற்றே அதிகம் போல தோன்றினாலும் கூட, மனம் கோணாமல் வாங்குங்கள்.
6% வரியையும், இதர விலையேற்றங்களையும் வாய்மூடி ஏற்றுக்கொண்டிருக்கும் நாம், ஒரு 5, 10 ரூபாய்க்காக இவர்களிடம் பேரம் பேசத்தேவையில்லை. ஒரு சுண்டு விற்றுவரும் 10 ரூபாய் லாபத்தில் அவர்கள் ஒன்றும் ஆகாயத்தில் அடுக்குமாடி கட்டிவிடப்போவதில்லை. மாறாக, அவர்கள் அடுப்படி உலையில் ஒருபிடி அரிசி மேலதிகமாக கொதிக்கக்கூடும்.
நாவற்பழ இனிமையில் நம் நாக்கு நனைவதுபோன்று, நிறையட்டும் அவர்கள் வயிறுகளும்!
வாழட்டும் அவர்கள் குடும்பங்களும்! ❤️
மிச்சமுள்ள ஞானப்பழங்களையும் சுவைத்துவிடவேண்டும், சென்றுவருகின்றேன்! 😌
0 notes
பத்து மலை கோயிலின் புராண கதை இந்த பத்துமலையில் இரு குகைகள் உள்ளது. ஒன்று மிக ஆழமாகச் செல்வதாகவும் மிகவும் இருண்டதாகவும் உள்ளது. மற்றொரு குகையில் தான் முருகன் கோயில் கொண்டிருக்கிறார். புலவர் நக்கீரரை ஒரு பூதம் ஒரு குகைக்குள் அடைத்து விட்டதாகவும், அங்கு ஏற்கனவே 999 பேர் அடைக்கப்பட்டு இருந்ததாகவும் நக்கீரரையும் சேர்த்து இவர்கள் எண்ணிக்கை 1000 ஆகிவிட்டதாகவும், நபர்களின் எண்ணிக்கை ஆயிரமான பின்பு இவர்களைத் தின்ன பூதம் திட்டமிட்டிருந்தது. முருகனின் வேல் வந்து பூதத்தை பிளந்து நக்கீரனை காப்பாற்றியதாகவும் புராண வரலாறு. ஆயிரம் பேரை அடைத்து வைக்கக் கூடிய அளவிலான குகைகளை உடைய முருகனின் மலைக் கோயில்கள், தமிழ்நாட்டில் எதுவுமில்லை. பூதங்கள் கடல் கடந்து செல்லக் கூடிய ஆற்றலுடையவை - என்பதால் நக்கீரர் அடைபட்டுக் கிடந்தது இந்த மலேசிய பத்துமலைக் குகையாகத்தான் இருக்கும். எனவேதான் இங்கு முருகனின் வேல், தமிழ்ப் பக்தர் ஒருவருக்குத் தென்பட்டது. அதன் பிறகுதான் இங்கு முருகன் கோயில் அமைக்கப்பட்டது என்றும் இங்குள்ள ஒரு சாரார் தெரிவிக்கின்றனர். முருகப் பெருமான் சிலையின் பெருமைகள் பத்துமலை முருகன் கோவிலின் சிறப்பு வாய்ந்த முருகப்பெருமான், அந்த மலையின் அடிவாரத்தில் பக்தர்களை வரவேற்க காத்து நிற்கிறார். சிலையின் உயரம் 42.7 மீட்டர் (140.09 அடி). உலகளவில் மலேசியாவை அடையாளம் காட்டும் விதமாக இந்த கோயில் அமைந்துள்ளது. இந்த சிலை அமைக்கும் பணி 2003-ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட பணி 2006-ஆம் ஆண்டில் நிறைவு பெற்றது. சிலை அமைக்க 2006-ஆம் ஆண்டில் இந்திய மதிப்பில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவாகி இருக்கிறது. தாய்லாந்தில் இருந்து தயாரிக்கப்பட்ட விசேஷ பொன்னிற கலவையால் முருகனின் மேனி மின்னுகிறது. வரலாறு 1860 ஆண்டுகளில் பத்துமலைப் பகுதிகளில் வாழ்ந்த சீனர்கள் காய்கறி பயிரிட்டு வந்தனர். அவர்களுடைய விவசாயத்திற்கு உரம் தேவைப்பட்டது. ஆகவே, அவர்கள் பத்துமலைக் குகைகளிலிருந்து வௌவால் சாணத்தைத் தோண்டி எடுத்துப் பயன்படுத்தி வந்துள்ளனர். அதற்கு முன்னர் இந்தக் குகைகளில் தெமுவான் எனும் மலேசியப் பழங்குடியினர் வாழ்ந்து வந்தனர் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. இவர்களும் பத்துமலையைத் தங்களின் புனிதத் தலமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். அமெரிக்க தாவரவியலாளர் 1878-இல் பத்துமலைப் பகுதிகளில் இருந்த சுண்ணாம்புக் குன்றுகளை ஆய்வு செய்த அமெரிக்க தாவரவியலாளர் வில்லியம் ஹோர்னடே என்பவர் பத்துமலையைப் பற்றி வெளியுலகத்திற்கு அறிவித்தார். பத்துமலையின் பெயர் புகழடைந்தது. அதன் பின்னர் 14 ஆண்டுகள் கழித்து 1891-இல் தம்புசாமி (at Sri Raghavendra Swamy Temple) https://www.instagram.com/p/Ch-YIIxvqWo/?igshid=NGJjMDIxMWI=
0 notes
திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் https://www.instagram.com/p/Ce5VbJTL2cO/?igshid=NGJjMDIxMWI=
0 notes
நாளை தேரோட்டம் || tamil news பங்குனி திருவிழா பழனி முருகன் கோவில்
நாளை தேரோட்டம் || tamil news பங்குனி திருவிழா பழனி முருகன் கோவில்
பழனியில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் பல்வேறு ஊர்களில் இருந்து காவடிகளுடன் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினந்தோறும் முருகப்பெருமான் வெள்ளிக்காமதேனு, தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழாவின்…
View On WordPress
0 notes
இனிய தைப்பூசம் நல்வாழ்த்துக்கள் 2022
Download
தைப்பூசம் நல்வாழ்த்துக்கள் 2022
வணக்கம் நண்பர்களே நாளை தைப்பூசம் திருநாள்.. முருகனுக்கு உகந்த நாள்.. உலகமெங்கிலும் உள்ள தமிழர்கள் முருகனை நினைத்து வழிபாடும் நாள்.. இத்தகைய பொன்னாளில் தைப்பூசம் வாழ்த்துக்களை தெரிவிக்க இங்கு சில Images-ஐ பதிவு செய்துள்ளோம் அவற்றை டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள் நன்றி வணக்கம்.
இனிய தைப்பூசம் நல்வாழ்த்துக்கள் 2022:
Download
முருகப்பெருமான்
அருள் மற்றும்…
View On WordPress
0 notes
அருள்மிகு மருதமலை முருகன் கோயில். மருதமலை. கோயம்புத்தூர் மாவட்டம். மூலவர்:- மருதச்சலமூர்த்தி அம்மன்:- வள்ளி,தெய்வானை 🚩ஸ்தலவரலாறு:- பாம்பாட்டிச் சித்தர் இளம்வயதிலேயே பாம்புகளை பிடித்து விஷம் முறிப்பது.பாம்புகடிக்கு மருந்து தயாரிப்பது போன்ற வேலைகளை செய்து வந்தார். 🚩 மக்கள் இவரை பாம்பு வைத்தியர் என்று அழைத்தனர். ஒரு சமயம் இவர் நாகரத்தினம் பாம்பை தேடி மருதமலைக்கு வந்தார். அப்போது சட்டைமுனிவர் இவருக்கு காட்சி தந்தார். 🚩உடலுக்குள் இருக்கும் பாம்பை(குண்டலினிசக்தி) கண்டறிவது தான் பிறப்பின் பயனாகும் அதைவிடுத்து பாம்பை தேடி அலைவது வீண் வேலையே.!என்றார். 🚩அவரது சொல் கேட்ட பாம்பாட்டி சித்தர் ஞானம் பெற்றார்.உயிர்களைத் துன்புறுத்துவதில்லை என்ற முடிவுக்கு வந்தார். 🚩முருகனை வணங்கி தியானத்தில் ஈடுபட்டார். முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக காட்சி தந்து ஞான உபதேசம் செய்தார். 🚩இங்கு விநாயகர் முருகன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றனர். #lordmurugan #lordmuruga #lordmurugan🙏 #godmurugan #ommuruga🙏 #ommurugasaranam #muruganadimai #keralatemples #velvel #keralatemple #lordkarthikeya #muruganthunai #templesofsouthindia #keralatemplephotography #keralafestivals #murugasaranam #keralafestival #skandasasti #haripadtemple #hindukovil #murugan #murugantemple #muruganthunai🙏 #arogara #lordmurugantemple #arogara🙏 #thaipusam2021 #haripadsreesubhramanyaswamitemple #arohara #haripadsreesubhramanyaswamitemle (at Maruthamalai Arulmigu Subramaniyaswamy Thirukkoil Higher Secondary School) https://www.instagram.com/p/CVzIYzTPUeF/?utm_medium=tumblr
0 notes
பணப்பிரச்சினைகள் அகல வழிபட வேண்டிய கோவில்
பணப்பிரச்சினைகள் அகல வழிபட வேண்டிய கோவில்
செவ்வாய்க்கிழமை காலையில் இவருக்குப் பாலபிஷேகம் செய்து, அர்ச்சித்தால் விரைவில் திருமணம் நடக்கும். எனவே ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையிலும் ஏராளமான பெண்கள் இங்கு வருகிறார்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம் பகுதியில் மலைக் குன்றின் மீது முருகப்பெருமான் கோவில் இருக்கிறது. இது சூரபத்மன் வழிபாடு செய்த திருத்தலமாகும். இங்கு மயில் வடிவ மலை உருவத்தில் சூரபத்மன் இருப்பதாக தல புராணம் சொல்கிறது.
மயிலம்…
View On WordPress
0 notes
பல்லடம் முருகன் கோவில்களில் பங்குனி உத்திர வழிபாடு
பல்லடம் :
பல்லடம் வட்டார பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதன்படி பல்லடம் மங்கலம் சாலையில் உள்ள தண்டாயுதபாணி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. இதில் முருகப்பெருமானுக்கு, பன்னீர், சந்தனம், இளநீர், தேன், பால் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான்…
View On WordPress
0 notes