முன்னாள் பிரதமர் ரணிலை எதிர்கட்சி தலைவராக நியமிக்குமாறு கோரிக்கை #UNP #RanilWickramasinghe #AkilaVirajKariyawasam #KaruJayasuriya #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை எதிர் கட்சி தலைவராக நியமிக்குமாறு ஐக்கிய தேசிய கட்சி சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் கடிதம் ஒன்றை கரு ஜயசூரியவிற்கு அனுப்பி தெரிவித்துள்ளார்.
0 notes
ஐ.தே.கவின் புதிய தலைவராகும் கரு ஜயசூரிய!!
| விவரம்: - | https://www.yarlthinakkural.com/2019/11/blog-post_89.html
#YT
0 notes
பத்தரமுல்லையில் இடம் பெற்ற உயிர்நீத்த இராணுவ வீரர்களின் ஞாபகார்த்த நிகழ்வுகள் தேசிய நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்பும் நோக்கில் தமது உயிரை துச்சமாக நினைத்து சேவையாற்றி மாண்ட 30 000ற்கும் மேற்பட்ட படையினரை நினைவு கூறும் தேசிய இராணுவ தசாப்தகால நிறைவு நாளானது மதிப்பிற்குறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் போன்றோரின் பங்கேற்றலுடன் இன்று மதியம் (19) பத்தரமுல்லையில் உள்ள தேசிய இராணுவ வீரர்களின் நினைவுத் தூபியில் இடம் பெற்றது. அந்த வகையில் ஒவ்வொரு 19ஆம் திகதி மே மாதமும் கொடிய பயங்கரவாத யுத்தத்தின் போது போரிட்டு மாண்ட முப்படைகள் மற்றும் பொலிஸ் போன்றவற்றில் சேவையாற்றியவர்களை நினைவு கூறும் நாளாக அமைவதுடன் 18ஆம் திகதி மே 2009ஆம் ஆண்டு முதல் இந் நாளானது நினைவு கூறப்படுகின்றது. மேலும் இந் நிகழ்வுகள் ரணவிரு சேவா அதிகார சபையால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதன் போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட மதிப்பிற்குறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் ரணவிரு சேவா அதிகார சபையில் தலைவரான மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜம்மிக்க லியனகே பாதுகாப்பு அமைச்சரான ருவன் விஜேவர்தன மற்றும் பாதுகாப்பு செயலாளரான மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஷாந்த கோட்டேகொட போன்றோரால் வரவேற்கப்பட்டனர். மேலும் சதாப்தகால நிறைவாண்டின் நிகழ்வுகளின் போது பல மதத் தலைவர்களின் பங்களிப்புடன் விளக்கேற்றப்பட்டதுடன் இராணுவ மரியாதை நிகழ்வுகளும் இதன் போது இடம் பெற்றன. இதன் போது மதிப்பிற்குறிய பிரதமர்; ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற பேச்சாளர் மதிப்பிற்குறிய தேஷபந்து கரு ஜயசூரிய மதிப்பிற்குறிய எதிர் கட்சித் தலைவரான மஹிந்த ராஜபக்ச மதிப்பிற்குறிய மேற்கு மாகான ஆளுனர் எம் அசாட் சாலி மதிப்பிற்குறிய போக்கு வரத்து மற்றும் சிவில் போக்க வரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க பாதுகாப்பு அமைச்சரான மதிப்பிற்குறிய ருவன் விஜேவர்தன ஜனாதிபதி செயலாளர் பாதுகாப்பு செயலாளர் முப்படைத் தளபதிகள் மற்றும் உயிர் நீத்த படையினரின் உறவினர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். இதன் போது கலந்து கொண்ட அதிதிகள் அனைவரையும் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜம்மிக்க லியனகே அவர்கள் வரவேற்றார். ஆதைத் தொடர்ந்து உயிர் நீத்த படையினருக்கான இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆதனைத் தொடர்ந்து கலாச்சரா அம்சங்கள் உள்ளடங்களான வாத்தியக்குழுவினரால் ரணபெர ஹவிசி மகுல் பெர கெட பெர போன்றன வாசிக்கப்பட்டன. ஆத்துடன் முப்படை மற்றும் பொலிஸ் போன்றவற்றின் பேண்ட் வாத்திய நிகழ்வுகளும் இடம் பெற்றன. அத்துடன் மதிப்பிற்குறிய ஜனாதிபதி மற்றும் பிரதி அமைச்சர் உள்ளடங்களாக பலரால் நினைவுத் தூபியில் மலர்மாலைகள் இடப்பட்டன. மேலும் இந் நிகழ்வானது பிரிந்த உறவுகளிடையே துயரத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் படைத் தளபதிகள் உயிர் நீத்த படையினரின் உறவினர்கள் போன்றோர் கண்ணீர் மல்க தமது அஞ்சலியை செலுத்தினர். அத்துடன் இதன் போது கலந்து கொண்ட பலர் மலர்களை ஏந்திய வண்ணம் நினைவுத் தூபியில் தமது அஞ்சலியை செலுத்தினர். மேலும் உயிர் நீத்த படையினரின் பிள்ளைகள் தமது கைகளில் மலர்கள் மற்றும் மெழுகுவர்தி போன்றவற்றுடன் அஞ்சலி செலுத்தினர். இதன் போது முப்படை மற்றும் பொலிசினரால் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மதிப்பிற்குறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் உயிர்நீத்த படையினரின் உறவினர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து 30வருட கால பயங்கரவாத யுத்தத்தை நிறைவு செய்து தமது உயிரை நீத்த படையினரின் ஞாபகார்த்த தூபியில் ஆலோக பூஜா நிகழ்வானது முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் திணைக்கள அதிகாரிகளால் இடம் பெற்றது. @ஊர்குருவி by Oor Kuruvi - ஊர்குருவி
0 notes
வடமாகாண சபையினர் அனைவரும் அரசர்களா?
ஸ்ரீலங்காவிற்குள் மாகாண சபைகளில் ஒன்றாக செயற்படும் வடமாகாண சபை, ஒற்றையாட்சியை மறந்துவிட்டு தனிநாடு என்ற உணர்வில் செயற்படுவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர குற்றம் சாட்டியுள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்றைய தினம் காலை 9.30 அளவில் கூடிய அவையில்
வாய்மொழி விடைக்கான கேள்வி நேரத்தின்போது சபையில் எழுந்த நாடாளுமன்ற உறுப்பினர் உதயசாந்த குணசேகர, வவுனியா…
View On WordPress
0 notes
எதிர் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவா? சபாநாயகர் வெளியிட்ட செய்தி
எதிர் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவா? சபாநாயகர் வெளியிட்ட செய்தி #RanilWickramasinghe #KaruJayasuriya #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka
முன்னாள் பிரதமர் மற்றும் ஐக்கிய தேசிய முன்னிணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை எதிர்க்கட்சி தலைவராக ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/KaruOnline/status/1199503858696896513
View On WordPress
0 notes
ஐ தே கட்சியில் இருவர் போட்டியிட்டால் எமது வெற்றி உறுதி - விமல் வீரவன்ச
ஐ தே கட்சியில் இருவர் போட்டியிட்டால் எமது வெற்றி உறுதி - விமல் வீரவன்ச #UNP #WimalWeerawansa #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka
வரும் ஜானாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து இருவர் போட்டியிட்டால் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் வெற்றியை மேலும் உறுதிப்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
ஹங்வெல்ல பிரதேசத்தில் ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த போதே விமல் வீரவன்ச இதனை குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சியில் இடம்பெறும் அதிகார போட்டி அக்கட்சியின் முடிவை நோக்கி கொண்டு செல்வதாக அவர் இதன்போது…
View On WordPress
0 notes
நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு
நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு #மக்கள்விடுதலைமுன்னணி #karujeyasuriya #jvp #President #PM #SriLanka #SriLankaBlasts #SriLankaTerrorAttacks #ut #universaltamil #utnews #lka #tamilnews #EasterSundayAttacksLK #lka #ut #universaltamil
அரசாங்கத்துக்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியால், கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையானது சற்றுமுன் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
View On WordPress
0 notes
தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பிலான தீர்மானம் நாளை பாராளுமன்றத்தில்….
தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பிலான தீர்மானம் நாளை பாராளுமன்றத்தில்….….#BombBlast #KaruJayasuriya #DineshGunawardena #ut #utnews #tamilnews #universaltamil
நாளைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கடந்த 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பிலான விவாத காலம் குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கைக்கு அமைய, விவாதத்திற்கு மேலதிக…
View On WordPress
0 notes
எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்ஸ நியமனம்
எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்ஸ நியமனம் #UPFA #mahinda #ranil #unp #karujeyasuriya #ut #utnews #tamilnews #universaltamil #lka
தேசிய அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு விலகியதன் காரணமாக பாராளுமன்றத்தில் தற்போது பெரும்பான்மை ஆசனங்களை கொண்டுள்ளதனால் அதன் பாராளுமன்ற குழு தலைவர் மஹிந்த ராஜபக்ஸவை எதிர்க்கட்சி தலைவராக நியமிப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
பாராளுமன்றம் இன்று பிற்பகல் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.
இதேவேளை,ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாக விஜித்…
View On WordPress
0 notes
ஐ.தே.க தற்காலிக தலைவராக கரு ஜயசூரியவை நியமிக்க கோரிக்கை?
ஐ.தே.க தற்காலிக தலைவராக கரு ஜயசூரியவை நியமிக்க கோரிக்கை? #unp #LGpollSL #ut #utnews #tamilnews #universaltamil #lka
உள்ளுராட்சி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்தமைக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் கபீர்ஹாசீம் பதவிவிலக தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் தனது இராஜினாமா கடிதத்தில் சபாநாயகர் ‘கரு ஜயசூரிய’வை ஐக்கிய தேசியக் கட்சியின் தற்காலிக தலைவராக…
View On WordPress
0 notes
ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் இலங்கை முன்னோடியாகத் திகழ்கிறது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் இலங்கை ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். காலி - நுகதுவ பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட உள்ள சர்வதேச கருத்தரங்கு மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே சபாநாயகர் இவ்வாறு குறிப்பிட்டார். ஜனநாயகத்தை பாதுகாத்த நாடு என்ற வகையில் இலங்கை சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது இது நாட்டிற்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என்றும் அவர் கூறினார். (அரசாங்க தகவல் திணைக்களம்)
0 notes
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் அமையவேண்டுமென்பதே இந்தியாவின் விருப்பமாம்! மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் ஒன்று அமையவேண்டுமென்பதே இந்தியாவின் விருப்பமென தெரிவித்துள்ள பொதுஜன பெரமுன கட்சி, எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்காவில் மாற்றம் ஒன்று நிகழுமென்ற நம்பிக்கை இந்தியாவிற்கு காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச மாநாடு ஒன்றில் பங்கேற்றிருந்த தமது தரப்பிடம் இந்திய பிரதிநிதிகள் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் ஒன்றிற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியதாக அந்தக் கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவரான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ராஜகிரியவில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச நிகழ்வு ஒன்றில் இந்திய உப ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர். புத்தி ஜீவிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் பங்கேற்றனர். இந்த வருடத்திற்குள் ஸ்ரீலங்காவில் மாற்றம் ஒன்று நிகழும் என்ற எதிர்ப்பார்ப்பு அவர்களிடம் காணப்பட்டதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. தேசிய தேர்தல் ஒன்று நடைபெற்றால் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அரசாங்கம் ஒன்று உருவாகுமென்ற நம்பிக்கை அவர்களிடம் காணப்பட்டதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அதிகாரத்தை கைப்பற்றுவது எமது நோக்கமல்ல என்பதை நாங்கள் அவர்களுக்கு தெளிவுபடுத்தினோம். அரசாங்கத்தின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கா�� மாத்திரம் நாம் செயற்படப்போவது இல்லை. எதிர்வரும் 10 வருடங்களுக்கு இந்த நாட்டை வழிநடத்துவதற்கான கொள்கை ரீதியிலான அடித்தளத்தை இடுவதே எமது நோக்கம். அடிமட்டத்தில் இருந்து அந்த கொள்கை உருவாவதற்கான பணிகளை ஆற்றுவதே எமது பிரதான நோக்கம். ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சிக்கு வந்ததன் பின்னர் கொண்டுவரப்பட்ட அரசியல் அமைப்பின் 19ஆவது திருத்தத்தில் சில மாற்றங்களை மேற்கொண்டு அரசியல் அமைப்புச் சபைத் தலைவரின் அதிகாரங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பொதுஜன பெரமுன கட்சி வலியுறுத்தியுள்ளது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் எற்பட்ட ஆட்சி மாற்றத்தின்போது தமது கட்சியின் பிரதானமாக நோக்கமாக இந்த விடயமே காணப்பட்டதாக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிக்கின்றார். மஹிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்தின் கீழ் 19ஆவது திருத்தத்தில் சில மாற்றங்களை செய்ய தீர்மானித்திருந்தோம். அந்த திருத்தத்தை ஒரு வெற்றிகரமான திருத்தமாக நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். ஆகவே அதற்கு சில திருத்தங்கள் அவசியம். சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்துக்கொள்ளும் பொருட்டே 19ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. திணைக்களங்களுக்கான தலைவர்களை சுயாதீனமாக நியமிப்பதே அதன் நோக்கம். எனினும் சபாநாயகர் தலைமையில் இயங்கும் அரசியல் அமைப்புச் சபையில் அந்தப் பணி ஓரளவேணும் நிறைவேற்றப்படுகின்றதா? என்பது கேள்விக்குறியே. நீதிபதிகளை நியமிக்கும் நடைமுறையில் சில சிக்கல்கள் தோன்றியுள்ளன. இந்த நாட்டின் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்கும்போது அவர்களது அனுபவத்தை மாத்திரம் கவனத்திற்கொள்ளப்போவது இல்லை என்ற வகையில் சபாநாயகர் கரு ஜயசூரிய கருத்து வெளியிட்டிருந்தார். அனுபவத்தை மாத்திரம் கருத்திற்கொண்டு நியமனங்களை வழங்கமுடியுமெனின் அரசியல் அமைப்புச் சபை ஒன்றின் அவசியம் என்னவென அவர் கேள்வி எழுப்பினார். அதில் பிரச்சினைக் காணப்படுகின்றது. அனுபவத்தை மாத்திரம் கருத்திற்கொண்டு ஏனைய விடயங்களை புறந்தள்ளினால் நீதிபதிகளின் திறமைகளை எவ்வாறு மதிப்பீடு செய்வது என்பதே சபநாயகரின் கருத்து. இதற்கு அரசியல் அமைப்புச் சபை என்ன நடவடிக்கைகளை தேற்கொண்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பது தொடர்பில், அரசியல் அமைப்புச் சபைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்மொழிந்த பெயர்களை நிராகரித்தமைக்கான காரணம்; இதுவரை அந்தச் சபையால் தெளிவுபடுத்தப்படவில்லை. நியமனங்கள் அரசியல் ரீதியாக இடம்பெறுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது? அதனைவிட அரசியல் அமைப்புச் சபைத் தலைவரின் அதிகாரங்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும். அந்த சபைக்கு நியமிக்கப்படும் சிவில் சமூக பிரதிநிதிகள் தொடர்பில் சில பொறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
0 notes
ஜனாதிபதி தெரிவித்த கருத்திற்கு சபாநாயகர் விளக்கமளிக்க முற்பட்டதால் சபையில் அமளி அரசியலமைப்பு பேரவை தொடர்பில் ஜனாதிபதி நேற்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து குறித்து அரசியலமைப்பு பேரவையின் தலைவர், சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று பாராளுமன்றத்தில் பதிலளித்தார். அதன் பின்னர் சபையில் அமளி துமளி ஏற்பட்டது.
0 notes
ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகளை நடாத்துவதை தடைசெய்வதற்கான சட்ட மூலம் விரைவில் பாராளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகளை நடாத்துவதை தடைசெய்வதற்கான சட்ட மூலம் ஒன்று கொண்டு வரப்படவுள்ளது. இந்த சட்ட மூலத்தை நிறைவேற்றுவதன் மூலம் அறநெறி பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அதிகளவில் கலந்து கொள்ள செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. காலத்தின் கட்டாயம் அறநெறி பாடசாலைகளை ஊக்குவிப்பது. அதன் மூலம் ஒரு சிறந்த மாணவ சமூகத்தை உருவாக்க முடியும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்��ன் தெரிவித்துள்ளார். நுவரெலியா இந்து கலாசார பேரவையின் பொங்கல் விழா நேற்று (26) நுவரெலியா ஹாவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது கோலப்போட்டி, சுவையான பொங்கல் வைத்தல் போட்டி, மாலை கட்டுதல் போட்டி என பல்வேறு போட்டிகளும் நடாத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. இதில் பிரதம அதிதியாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் கலந்து கொண்டார். நிகழ்வுகள் அனைத்தும் நுவரெலியா இந்து கலாசார பேரவையின் தலைவரும் முன்னாள் நுவரெலியா மாநகர சபை உறுப்பினருமான ஆர்.பாலகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது. நுவரெலியா மாநகர சபையின் பிரதி முதல்வர் யதர்சனா புத்திரசிகாமணிஇமாநகர சபை உறுப்பினர்களான விஸ்னுவரதன், கேதீஸ், திருமதி.சிவரஞ்சனி ஆகியோரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர், மலையகத்தில் இருக்கின்ற இது போன்ற அமைப்புகள் தொடர்ச்சியாக தமிழ் கலாசராத்தை பிரதிபலிக்கின்ற வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவது மிகவும் இன்றியமையாத ஒரு விடயமாகும். அதற்கு காரணம் எங்களுடைய எதிர்கால சந்ததியினருக்கு எமது கலை கலாசாரத்தை கொண்டு சேர்க்க வேண்டிய பாரிய பொறுப்பு இந்த பொது அமைப்புகளுக்கு இருக்கின்றது. எனவே அவ்வாறான அமைப்புகளுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு எங்களுடைய அமைச்சு தயாராக இருக்கின்றது. அண்மையில் பாராளுமன்ற கட்டிட தொகுதியில் விசேட கலந்துரையாடல் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நானும் அமைச்சர் மனோ கணேசனும் கலந்து கொண்டோம். எங்களை தவிர வேறு மதங்களை பிரதிநதித்துவம் செய்கின்ற வகையில் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள். இந்த கூட்டமானது சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாராளுமன்றத்திற்கு மிக விரைவில் ஞாயிற்றுக்கிழமைகளில் விசேட வகுப்புகளை நடாத்துவதை தடை செய்யும் வகையில் சட்டம் ஒன்றை கொண்டு வருவதற்கு கூட்டத்தில் கலந்து கண்ட அனைவரும் ஏகமனதாக தீர்மானித்தனர். ஏனென்றால் அந்தந்த மதத்தை பிரதி பலிக்கின்ற வகையில் ஞாயிற்றுக் கிழமைகளில் விசேட மத சார்பான வகுப்புகள் ஆலயங்களிலும் பள்ளிவாசல்களிலும் விகாரைகளிலும் கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நடைபெற்று வருகின்றது. இந்த வகுப்புகளுக்கு மாணவர்கள் சென்று வருவது மிகவும் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே. அதற்கு காரணம் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறுகின்ற தனியார் வகுப்புகளே, கட்டாயமாக இந்த வகுப்புகளுக்கு மாணவரகள் சென்று வர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அதன் மூலமாகவே எங்களுடைய எதிர்காலத்தை சமூகத்தை சிறந்த ஒரு சமூகமாக உருவாக்க முடியும். எனவே அனைவரும் இணைந்து இந்த சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 notes
ஜனாதிபதியின் பரிந்துரைகளை நிராகரிக்கும் செயற்பாடு ஏற்புடையதல்ல ஜனாதிபதியின் பரிந்துரைகளை நிராகரிக்கும் வகையில் அரசியலமைப்புப் பேரவை நடந்துகொள்வது ஏற்புடையதல்ல என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். அரசியல் ரீதியாகக் கொடுக்கப்படும் அழுத்தங்களுக்கு அமையவே அரசியலமைப்புப் பேரவையின் ஊடாக நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். அரசியலமைப்புப் பேரவையின் செயற்பாடு தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாதப் பிரதிவாதத்தின்போது கருத்துத் தெரிவிக்கும்போதே தினேஷ் குணவர்தன எம்.பி இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். அரசியலமைப்புப் பேரவையில் சிரேஷ்டத்துவம், திறமை என்பவற்றுக்கு மதிப்புக் கொடுப்பதில்லை. அரசியல் ரீதியான விருப்பு வெறுப்புக்கு மாத்திரமே மதிப்புக்கொடுக்கின்றனர். ஜனாதிபதியின் பரிந்துரைகளை நிராகரிக்கும் வகையில் அரசியலமைப்புப் பேரவை செயற்படுவது பொதுத்தமான நடவடிக்கையாக அமையாது. அரசியலமைப்புக்கு அமைவான கொள்கைக்கு அது முரணானதாகும். உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு ஜனாதிபதி மதிப்பளித்தார். எனினும், ஐக்கிய தேசியக் கட்சி தனது அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கு அரசியலமைப்புப் பேரவையில் தற்பொழுது பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. அரசியலமைப்புப் பேரவை பின்பற்றும் கொள்கை ரீதியான நடவடிக்கை என்ன என்பது கூட இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை. ஒரு மாதம் ஒரு முடிவும், அடுத்த மாதம் மற்றுமொரு முடிவும் எடுக்கின்றனர் என்றார். இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த விமல் வீரவன்ச எம்பி, அரசியலமைப்புப் பேரவையில் அரசியல் ரீதியான முடிவுகளே எடுக்கப்படுகின்றன. பிரதமர் தாக்கம் செலுத்துகின்றார். நீதித்துறை சுயாதீனமாக செயற்படுவதாயின், எப்.சி.ஐ.டி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டது எனக்கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகள் முடிந்தும் ஏன் இன்னமும் நீதிமன்றம் தீர்ப்பை வெளியிடாமல் உள்ளது என்றும் அவர் கேள்வியெழுப்பினார். பிரதம நிதியரசராக ஈவா வனசுந்தரவின் பெயரை ஜனாதிபதி பரிந்துரைத்தபோது அரசியலமைப்புப் பேரவை அதனை நிராகரித்தது என்றும் குற்றஞ்சாட்டினார். எனினும், நீதியரசர் ஈவா வனசுந்தரவின் பெயரை ஜனாதிபதி அரசியலமைப்பு பேரவைக்கு ஒருபோதும் அனுப்பிவைக்கவில்லையென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். அத்துடன், அரசியலமைப்பு பேரவையினால் இதுவரை எடுக்கப்பட்ட முடிவுகள் யாவும் அரசியலமைப்புக் உட்பட்டு சட்டரீதியான சுயாதீனமான முடிவுகளாகும். எவருடைய முகங்களைப் பார்த்தும் நாம் எந்த நியமனங்களையும் வழங்குவதில்லையென்றார்.
0 notes
ஐ.தே.கட்சியின் மூன்று தலைவர்களும் இன்று முக்கிய சந்திப்பு
ஐ.தே.கட்சியின் மூன்று தலைவர்கள���ம் இன்று முக்கிய சந்திப்பு #karujeyasuriya, #ranil #sajith #today #unp #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் இன்று சந்தித்து முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.
இன்று மாலை 6 மணிக்கு, இந்தச் சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.
ஐதேகவின் இந்த மூன்று தலைவர்களும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக முடிவெடுப்பார்கள் என்று பிரதமர் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த…
View On WordPress
0 notes