“ஒரே நாடு, ஒரே தேர்தல் இந்த ஜென்மத்தில் நடக்காது” - நாராயணசாமி கருத்து | One nation, one election will not happen in this life: Former Puducherry CM Narayanasamy
புதுச்சேரி: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ இந்த ஜென்மத்தில் நடக்காது என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று (செப்.20) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “ஒரே நாடு ஒரே தேர்தல் இந்த ஜென்மத்தில் நடக்காது. மாநிலத்தில் ஆட்சி கலைந்துவிட்டாலோ, நாடாளுமன்றம் கவிழ்ந்தாலோ என்ன ஆகும் என்ற கேள்வி எழுகிறது. குடியரசுத் தலைவர் ஆட்சி…
0 notes
#சென்னையின்_பாரம்பரிய_உணவகங்கள்
கட்டுரையாளர் திரு.ராண்டார் கை எழுதிய “ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்” என்கிற கட்டுரையில் இருந்து..
1950 ஆம் ஆண்டுவரை உணவகங்கள் பிராமணாள் காப்பி ஓட்டல் என்ற பெயர் தாங்கியே இருந்தன.100 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை என்றால் மயிலாப்பூரில் இருந்து ஹைகோர்ட் & பாரி முனை வரைக்கும் தான்! அன்று வட சென்னை தான் முழு மெட்ராஸ் சிட்டியும்.! சிறந்த ருசிக்கும், தரத்திற்கும், தனித்துவத்திற்கும்..
புகழ் பெற்ற பல உணவகங்கள் இருந்தன! அதில் சில ஹோட்டல்கள் இன்றும் அதே பெயரோடு இருக்கின்றன, 100 வருடங்களுக்கு முன்பு மின்ட் சாலை எனப்படும் தங்கசாலையில் காசிப் பாட்டி ஓட்டல் (gossip அல்ல) காசிக்கு சென்று வந்த பிராமணப் பாட்டி ஒருவர் நடத்திய ஆச்சாரமான ஓட்டல்! இங்கு பிராமணர்களுக்கு மட்டுமே..
அனுமதி! முக்கியமாக அவர்களுக்கும் சந்தியாவந்தனம் செய்து விட்டு வந்தால் தான் பந்தியில் உட்கார அனுமதிக்கபடுவார்களாம்! இங்கே கிடைக்கும் உணவுகள் அவ்வளவு ருசியாகவும் தரமாகவும் இருக்குமாம்! இதன் புகழைக் கேட்டு தமிழ்த் தாத்தா உ.வே.சா வந்திருக்கிறார். அவரையே போய் சந்தியாவந்தனம் செய்து விட்டு..
அதன்பின்பு பந்திக்கு வாரும் என்று கறாராகச் சொன்னாராம் காசி பாட்டி. தாத்தாவும் சந்தியா வந்தனம் செய்து விட்டு வந்தே அங்கு கை நனைத்தார் என்கிறார்கள். காசிப் பாட்டி ஹோட்டலில் சாப்பாடு இரண்டணா! அருவி போல நெய்யை ஏராளமாக விடுவார்களாம்.
சென்னை உயர்நீதி மன்றத்தில் அன்றே வக்கீல்கள் நான்காயிரம் பேர்களாம். இதுபோக நீதிபதிகள், அலுவலர்கள், போலீஸ், கட்சிக் காரர்கள், உறவினர்கள், பொது மக்கள், சாட்சிகள் இப்படி மொத்த எண்ணிக்கை எவ்வளவு இருக்கும்? அத்தனை பேரும் பசியாற வேண்டாமா? எனவே தான் கோர்ட் அருகில் ஓட்டல்கள் அதிகம்!
இந்தக் கட்டுரையாளர் ராண்டார் கை சட்டக் கல்லூரியில் படித்த போது அவருக்கு ஒரு நாளைக்கு பாக்கெட் மணி நாலணா! ஓரணாவிற்கு ஒரு செட் போண்டா, மூன்றணாவிற்கு ஒரு மைசூர் மசால் தோசை சாப்பிட்டுவிட்டு, காப்பியை அவரது வீட்டிற்கு போய் சாப்பிட்டு கொள்வதாக குறிப்பிடுகிறார்! அம்பீஸ் கபே, சங்கர் கபே..
ராமகிருஷ்ணா லஞ்ச் ஹோம் எல்லாம் மிக பேர் பெற்ற உணவகங்கள்! மனோரமா லஞ்ச் ஹோம் என்று தம்பு செட்டி தெருவில் ஒரு ஓட்டலை A. நாராயணசாமி ஐயர் தொடங்கினார். K.S. ஜெயராம ஐயர் போன்ற ஜாம்பவான் வக்கீல்கள் எல்லாம் மனோரமா லஞ்ச் ஹோமில் தான் லஞ்ச் சாப்பிடுவார்கள். மைசூர் நெய் மசாலா தோசையை..
சென்னைக்கு அறிமுகம் செய்தவர் சீதாராம ராவ்! ஹோட்டல் சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்ட கே.சீதாராம ராவ் தம்பு செட்டித் தெருவில் தான் முதல் ஹோட்டலைத் தொடங்கினார்! 1990 வரை கூட தம்பு செட்டித் தெருவில் புகழோடு விளங்கிய மாடர்ன்கஃபே இத்தெருவுக்கு புகழ் சேர்த்த ஹோட்டல்! 2 இட்லிக்கு 2 பக்கெட் சாம்பார் சாப்பிடுவார்களாம்! லேசான இனிப்புடன் வெல்லம்..
சேர்த்த சின்ன வெங்காய சாம்பாருக்கு அன்று பெரிய ரசிகர் மன்றமே இருந்திருக்கிறது! சங்கர ஐயர்,அவரது மருமகன் மற்றும் சென்னை மேயராக இருந்த V.R. ராமனாத ஐயர் ஆகியோர் சேர்ந்து துவக்கியது தான் இன்றும் இருக்கும் ராமகிருஷ்ணா லஞ்ச் ஹோம்! திருவல்லிக் கேணி பைகிராஃப்ட்ஸ் சாலையில் கோயமுத்தூர் கிருஷ்ணய்யர் என்ற பெயர்ப் பலகையுடன் ஒரு ஹோட்டல். ஒரு மிடில் கிளாஸ்..
வீடு போலவே இருக்கும்! பாதாம் அல்வாவிற்கு அன்று மிகப் புகழ் பெற்ற ஹோட்டல்! விகடன் அதிபர் S.S.வாசன், எழுத்தாளர் கல்கி போன்றவர்களின் அபிமான ஹோட்டல் இது! ஹை கோர்ட்டுக்கு எதிரே பாம்பே மியூச்சுவல் கட்டிடத்திற்கு அருகே கராச்சி கஃபே என்ற ஹை கிளாஸ் ஹோட்டல் இருந்தது! கராச்சியைச் சேர்ந்த..
சிந்திகாரர்களான மிக பிரபலமான கிஷன் சந்த்ஸ், செல்லராம்ஸ் ஜவுளி வணிகர்களுக்குச் சொந்தமானது இந்த கராச்சி கஃபே! இங்கே கிடைக்கும் கராச்சி அல்வா இந்த ஓட்டலின் ஸ்பெஷலான தின்பண்டமாகும்! அன்றைக்கு காப்பி குடிப்பது ஆச்சார விரோதம்! அதுவும் காபியில் உயிர் வாழும் பிராமணர்கள் வீடுகளிலேயே அப்படி..
ஒரு வழக்கம் இருந்திருக்கிறது! வீட்டுக்கு தெரியாமல் தினமும் காபி குடிப்பதற்கென்றே பல காபி கிளப்புகள் அன்று இருந்து இருக்கின்றன! அந்த கிளப்களில் காபி குடிக்க ஆடிட்டர்கள், வக்கீல்கள், பெரும் அரசு அதிகாரிகள் சனி,ஞாயிறுகளில் ஏதேனும் பொய் சொல்லிவிட்டு கிளப் பக்கம் வந்து திருட்டு காபி குடிப்பார்கள்!
மவுண்ட் ரோடில் கிருஷ்ண விலாஸ் என்கிற பெயரில் ஹோட்டல் நடத்தி வெற்றி கண்ட கிருஷ்ணா ராவ் பிறகு உட்லண்ட்ஸ் ஓட்டல்களை நடத்தினார். பூந்தமல்லி நெடுஞ் சாலையில் எவரெஸ்ட் ஹோட்டல்..இன்றும் இருக்கிறது. கோவிந்தப்பன் நாயக்கன் தெருவில் ஆரிய பவன், ஸ்வீட்ஸ் புகழ் அகர்வால் பவன் இருந்தன!
இன்றைய மயிலாப்பூர் ரயில் நிலையம் இருக்கும் இடத்தில் இருந்த அமரஜோதி கபே மற்றும் இன்றும் பிரபலமாக இருக்கும் ராயர் ஹோட்டல்! மிகவும் புகழ் வாய்ந்தவை! இந்த ராயர் ஹோட்டலில் ரெகுலர் கஸ்டமர்கள் கே.பாலச்சந்தர், ஜெமினி கணேசன். பி.பி. ஶ்ரீநிவாஸ், மேஜர் சுந்தர்ராஜன் போன்ற திரைப்பிரபலங்கள்!
ராண்டார் கை எழுதிய இக்கட்டுரையில் அசைவ உணவகங்கள் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை! அன்று மிலிடெரி ஓட்டல்கள் என்றழைக்கப்பட்டவை நான் வெஜ் ஓட்டல்கள்! 1960களுக்கு பிறகு புகழ் பெற்ற புகாரி, தாஸ்ப்ரகாஷ், பிலால், சுக்குபாய், மதுரை பாண்டியன் போன்றவை தமிழக மக்கள் அறிந்த உணவகங்களாகும்!
{உங்களுக்கு சென்னையின் பாரம்பரிய அசைவ ஓட்டல்களின் வரலாறு தெரிந்தால் அது பற்றி இங்கே கமெண்ட்டில் குறிப்பிடலாம்}
0 notes
பெரியப்பா ராமசாமி அவர்களை ஊரில் உள்ள மக்கள் "தலைவர்" என அழைப்பார்கள். கல்லூரி வர�� படித்தவர். இவருக்கு வத்சலா என்ற ஒரே மகள். ஊரில் உள்ள தனது வீட்டில் தீப்பெட்டி குச்சிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை நடத்தி வந்தார். ஊரில் உள்ள பெண்கள் எல்லோருமே ஒரு மாதமாவது இங்கே வேலை செய்திருப்பார்கள். தனது வீட்டின் ஒரு பகுதியில் தபால் நிலையமும் நடத்தி வந்தார். பெரியப்பா ராமசாமி உடன் பிறந்த தம்பியின் பெயர் நாராயணசாமி. இவர் கல்லூரி படிப்பு முடித்து கோவை நகரிலுள்ள புகழ்பெற்ற பூ.சா.கோ பொறியியல் கல்லூரியில் மனித உரிமையியல் துறையில் பேராசிரியராக பணிபுரிகையில் விடுதி வார்டனாகவும் பணி புரிந்தார். பின்னர் பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரியின் முதல்வராக 1988ம் ஆண்டு மே 19 வியாழக்கிழமை அன்று பதவியேற்றதை.. 2012ம் ஆண்டு டிசம்பர் 30 அன்று கல்லூரியில் ஒரு தேர்வு எழுதச் சென்றபோது புகைப்படம் எடுக்கையில் கண்டது. டிசம்பர் 30.. இந்திய விண்வெளித் துறையின் விடிவெள்ளி விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் நினைவு தினம்.
விக்ரம் சாராபாய் அமரத்துவமான 1971ம் ஆண்டு.. பீம்லா நாயக் படத்தில் நடித்த தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் செப்டம்பர் 2 அன்று பிறந்தார். முந்தைய 1970ம் ஆண்டு செப்டம்பர் தினமாக.. முக்கடலின் சங்கமமான கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்த நினைவுப் பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் திறப்பு விழா கண்டது, ஒரு சிறப்பம்சமாகும்.
பெரியப்பா ராமசாமியின் மகளான வத்சலா அவர்கள், பூ.சா.கோ பொறியியல் கல்லூரியில் முதுகலை கணிப்பொறி படித்த பின்பு கத்தார் நாட்டிற்கு பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் பணிக்குச் சென்றதை சிறு வயதில் பெரியப்பா சொல்லி அறிந்தது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆசிரியராக பணி புரிந்தார். மாமன்னர் பூலித்தேவனின் 307வது ஆண்டு பிறந்த தினமன்று.. சென்னை நகரில் தனது மகனுக்கு திருமண வைபவத்தை சிறப்பாக நடத்தி முடித்ததை.. பாட்ஸா படத்தின் புரொடியூஷர் ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் பிறந்த தினமன்று(செப்டம்பர் 9).. கோவில்பட்டி அருகிலுள்ள உப்பத்தூர் ஊரின் அருகில் வத்சலா அவர்கள் நடத்தும் பள்ளிக்கூடத்திற்கு விஜயமானபோது, திருமண வைபவத்தை அறிந்து மகிழ்ச்சி அடைந்தது.
1993ம் ஆண்டு ரிலீசாகி உலகெங்கும் பெரும் வரவேற்பை பெற்ற ஜுராஸிக் பார்க் படத்தை இயக்கிய ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் பிறந்த நாளன்று.. கடந்த ஆண்டு டிசம்பர் 18 தினமாக.. கத்தார் நாட்டில் நடைபெற்ற உலககோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை வென்று கேப்டன் மெஸ்ஸி விளையாடிய அர்ஜென்டினா அணி கோப்பையை வென்றதை மறுதினம்.. வத்சலா அவர்களிடம் சொல்லி பெருமிதம் அடைந்தேன்.
குறிப்பு: மாமன்னர் பூலித்தேவனின் போர் படைத் தளபதி ஒண்டிவீரன். ஒண்டிவீரனின் இருநூறாவது ஆண்டு நினைவு தினம்.. 1971ம் ஆண்டு ஆகஸ்டு 20.
ஓம் நமசிவாய..
1 note
·
View note
புதுச்சேரி: ``ஒவ்வொரு பத்திரப் பதிவுக்கும் முதல்வர் அலுவலகத்துக்கு பணம் செல்கிறது!” – நாராயணசாமி
புதுச்சேரியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கிறது. அனைத்து மருத்துவ இடங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிக்கின்றனர். செவிலியர் படிப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என அறிவித்திருக்கின்றனர். மாநிலங்களை டம்மியாக்கிவிட்டு மத்திய அரசு அனைத்து அதிகாரத்தையும் பறித்துக்கொள்ளும்…
View On WordPress
0 notes
பா.ஜ.க.வின் பிரபலத்தால் கலக்கமடைந்த காங்கிரஸ், சமூக வலைதளங்களில் மோடிக்கு எதிராக பிரச்சாரம்.. நாராயணசாமி
மாநிலத்தில் மோடி சுனாமி நிலவுகிறது, மாநிலத்தில் பா.ஜ.க.வின் பிரபலத்தால் கலக்கமடைந்த காங்கிரஸ், சமூக வலைதளங்களில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது என்று கர்நாடக பா.ஜ.க. மேலவை உறுப்பினர் சலவாடி நாராயணசாமி தெரிவித்தார்.
கர்நாடகாவில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், காங்கிரஸ் கட்சியினர் என்னை 91 முறை பலவிதமாக அவமதிப்பு செய்துள்ளனர் என்று குற்றம் சாட்டினார்.…
View On WordPress
0 notes
குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.1,000- 13,000 பேருக்கு தரப்பட்டுள்ளது- ரங்கசாமி
புதுச்சேரியில் ஆட்சி செயல்படவில்லையென்றால் ரூ. 8 கோடிக்கு சாலை அமைக்க பூமி பூஜை போடமுடியுமா என்று நாராயணசாமி குற்றச்சாட்டுக்கு முதல்வர் ரங்கசாமி பதில் கொடுத்தார்.
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதியில் சுத்துக்கேணி சாலை (கூனிமுடக்கு முதல் சுத்துக்கேணி பங்களா வரை), லிங்காரெட்டிப்பாளையம் முதல் சுத்துக்கேணி பங்களா சந்திப்பு வரையிலான ஆர்சி 32 சாலை, திருக்கனூர் முதல் மண்ணாடிப்பட்டு வரையிலான சாலை என…
View On WordPress
0 notes
உழவ��் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு வாழ்ந்த வீடு நூலகமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்:அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் பிறந்தநாளை ஒட்டி, கோவை மாவட்டம், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வையம்பாளையத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி, மலர் தூவியும், அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்தும், மரியாதை செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் பிறந்தநாளான…
View On WordPress
0 notes
*அன்புடையீர் வணக்கம்*
*மாண்புமிகு முதல்வர் கழகத் தலைவர் அன்புத் #தளபதியார் அவர்கள் நல்லாசியுடன்.*
*இளைஞர்களின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம், கழக இளைஞரணி செயலாளருமான #சின்னவர் அவர்கள் வாழ்த்துக்களுடன்.*
*#கோவைமாவட்டபொறுப்பு அமைச்சரும் மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அண்ணன் #V_செந்தில்பாலாஜி அவர்கள் கட்டளையை ஏற்று.*
*எங்கள் கோவை தெற்கு மாவட்டசெயலாளர் மரியாதைக்குரிய அண்ணன். #தளபதிமுருகேசன் அவர்களின் வழிகாட்டுதலின்படியும்.*
*இன்று 23-11-2022 புதன்கிழமை மாலை 7 மணி அளவில் தீத்திபாளையம் A.KC நகரில் #ஒன்றியசெயலாளர் திரு ஏ நாராயணசாமி அவர்களின் மில் வளாகத்தில் ,*
*அவைத் தலைவர் #C_சதாசிவம் அவர்கள் தலைமையில்,*
*#தொண்டாமுத்தூர் கிழக்கு #ஒன்றியசெயலாளர் திரு #a_நாராயணசாமி அவர்கள் சிறப்புரையில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன*
*#தீர்மானங்கள்#*
🏴🚩 *நவம்பர் 27 அன்று திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும் கழக இளைஞரணி செயலாளருமான மாண்புமிகு #சின்னவர் அவர்களின் பிறந்தநாளை மாதம் முழுதும் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடுவதென தீர்மானம் செய்யப்பட்டது*
*🏴🚩 கழக மாநில இளைஞரணிச் செயலாளராக மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ள சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர், #சின்னவர் திரு.#UdhayanidhiStalin அவர்களுக்கு #தொண்டாமுத்தூர்கிழக்குஒன்றியம் #திமுக சார்பாக வாழ்த்துகள் தெரிவித்துக்கொள்கிறோம்.*
*🏴🚩#தலைமைக்கழகம் அறிவித்துள்ளதன்படி #பாகமுகவர்கள் பணியினை தொடர்ந்து 100 வாக்காளர்களுக்கு ஒரு நிர்வாகி நியமிக்கப்பட்டு தலைமைக் கழகம் கொடுத்துள்ள வாக்காளர் பதிவேடு புத்தகத்தில் அனைத்து வாக்காளர்களையும் வரிசைப்படுத்தி பதிவு செய்து வருகின்ற 27 ஆம் தேதிக்குள் மாவட்ட கழகத்தில் ஒப்படைப்பது என தீர்மானிக்கப்பட்டது*
🏴🚩 *வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி பொள்ளாச்சியில் நடைப��ற உள்ள மாபெரும் தனியார் #வேலைவாய்ப்பு முகாமில் நமது #தொண்டாமுத்தூர்கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆகியோர் பயன்பெறும் வகையில் நமது கழக நிர்வாகிகள் அனைவரும் அனைத்து தரப்பினருக்கும் தெரியப்படுத்தி அழைத்து வர இக்கூட்டம் தீர்மானிக்கப்பட்டது*
*🏴🚩#கழகவளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.*
*இக்கூட்டத்தில் தொண்டாமுத்தூர் கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள்,கழக மூத்த முன்னோடிகள், அனைத்து சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், பாக முகவர்கள் BLA-2(BOOTH LEVEL AGENT-2) , கலந்து கொண்டனர்*🖤❤️
0 notes
காங்கிரஸைத் தூக்கி எறியுங்கள்; நாடு முழுவதும் மக்கள் புறக்கணிக்கின்றனர்: புதுச்சேரியில் பிரதமர் மோடி பேச்சு
காங்கிரஸைத் தூக்கி எறியுங்கள்; நாடு முழுவதும் மக்கள் புறக்கணிக்கின்றனர்: புதுச்சேரியில் பிரதமர் மோடி பேச்சு
புதுச்சேரியில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் அமையும் அரசு, மக்கள் விரும்பும் ஆட்சியைக் கொடுக்கும் என உறுதியளிக்கிறேன் என, பிரதமர் மோடி தெரிவித்தார்.
பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று (பிப். 25) புதுச்சேரிக்கு வருகை தந்தார். ஜிப்மரில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்த பின்னர், லாஸ்பேட்டை விமான நிலைய சாலையில் நடைபெற்ற பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி…
View On WordPress
0 notes
BREAKING புதுச்சேரி: நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு! Narayanasamy
0 notes
“கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்டுவதை புதுச்சேரி காங். எதிர்க்கிறது” - நாராயணசாமி | Former Chief Minister Narayanasamy on construction of Mekedatu Dam by the Karnataka government
புதுச்சேரி: கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்ட முயற்சிப்பதை புதுச்சேரி காங்கிரஸ் எதிர்க்கிறது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். அவர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியது: “இந்தியாவில் அருணாச்சலப் பிரதேசம், லடாக் பகுதியை சீனா ஆக்கிரமித்து வருவதாக காங்கிரஸ் தெரிவித்ததை பிரதமர் மோடி மறுத்தார். ஆனால் தமிழக ஆளுநர் ரவி தற்போது, இந்தியாவில் 5,500 க��.மீ பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாக…
0 notes
காரைக்காலுக்கு கிடையாது ஹைட்ரோ கார்பன் திட்டம்! நாராயணசாமி
காரைக்காலுக்கு கிடையாது ஹைட்ரோ கார்பன் திட்டம்! நாராயணசாமி
ஹைட்ரோ கார்பன் திட்டம் காரைக்காலுக்கு கிடையாது என்று மத்திய மந்திரி கூறியதாக புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
டெல்லியில் முகாமிட்டுள்ள முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
காரைக்காலிலும் ஹைட்ரோ கார்பன் திட்டம் அமல்படுத்த ஒப்பந்தம் செய்து இருப்பதாக வந்த தகவலை அடுத்து இன்று மத்திய பெட்ரோலிய மந்திரி தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசினேன். அப்போது அவர் இது சம்பந்தமான…
View On WordPress
0 notes
📰 சரோஜ் நாராயணசாமி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்
அகில இந்திய வானொலி செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசாமி மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் மும்பையில் உள்ள தனது வீட்டில் சனிக்கிழமை காலமானார்.
இது குறித்து திரு.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மறக்க முடியாத சம்பவங்களுடன் பின்னிப்பிணைந்த அந்த குரல் நேற்று மௌனமாகியிருப்பது வேதனையளிக்கிறது.எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
View On WordPress
0 notes
மூத்த AIR செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசாமி காலமானார்
மூத்த AIR செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசாமி காலமானார்
:
பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசாமி மும்பையில் உள்ள அவரது வீட்டில் சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 86. ���யது தொடர்பான நோய்களால் காலமானார். அவர் ஒரு மகள் மற்றும் ஒரு மகன் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் வாழ்கிறார்.
ஆல் இந்தியா ரேடியோவை ஆர்வத்துடன் கேட்பவர்கள் அவரது குரல், தெளிவான பேச்சு மற்றும் சரியான இடங்களில் இடைநிறுத்தப்பட்டதை நினைவில் கொள்வார்கள். புது தில்லி அகில இந்திய…
View On WordPress
0 notes
அண்ணாமலை ஒரு தமிழின துரோகி- நாராயணசாமி
கர்நாடகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது, விழாவில் கலந்துகொண்ட தமிழக பாஜக தலைவர் அதை வேடிக்கை பார்த்தார். அவர் ஒரு தமிழின துரோகி என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டினார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “துச்சேரி அமுதசுரபியை பொறுத்தவரை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நஷ்டத்தில் இயங்கினாலும் சம்பளம் வழங்கி…
View On WordPress
0 notes
5ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - அரசு பேருந்து ஓட்டுநர் கைது
ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பேருந்து ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி அடுத்த ஓலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி. இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். தன் வீட்டின் அருகே வசித்து வந்த ஐந்தாம் வகுப்பு படித்து வரும் சிறுமிக்கு இவர் பாலியல் தொந்தரவு அளித்திருக்கிறார்.
இதை…
View On WordPress
0 notes