claythoughts
claythoughts
ravishankar
14 posts
Don't wanna be here? Send us removal request.
claythoughts · 6 years ago
Text
அஜீத் அடித்த 5 மாங்காய்!
அஜீத் அடித்த 5 மாங்காய்!
அஜீத் அடித்த 5 மாங்காய்!
  இரா.ரவிஷங்கர்
Tumblr media
x
  தமிழ்நாட்டில், கோடிகளில் கோலாகலமாக எடுக்கப்படும் பெரிய நட்சத்திரங்களின் படங்களில்… எல்லாம் இருந்தும் சம்திங் மிஸ்ஸிங் என்ற  பேச்சு கிளம்பி அப்படங்கள் பாக்ஸ் ஆபீஸில் படாதபாடு படும்போதெல்லாம்,…. ஃபரீ பப்ளிசிட்டிக்கு கைக்கொடுக்கும்…. தமிழ்சினிமாவின் ’ப்ராண்ட் அம்பாஸிடராக’ அவதாரம் எடுத்திருக்கும் பாரதிய ஜனதாவின் தமிழகத் தலைவர் தமிழிசை தற்போது மீண்டும்…
View On WordPress
0 notes
claythoughts · 7 years ago
Text
TOP 10 POWERFUL PERSONALITIES OF TAMIL CINEMA - 2018
TOP 10 POWERFUL PERSONALITIES OF TAMIL CINEMA – 2018
தமிழ் சினிமாவின் டாப் 10 பவர்ஃபுல் பர்ஸனாலிட்டிகள்!
– இரா. ரவிஷங்கர்
  இன்றைய சூழலில், தமிழ்சினிமாவின் பவர்ஃபுல்லான டாப் 10 பர்ஸனாலிட்டிகள் யார்? ஏதாவது ஒரு வகையில் தமிழ்சினிமாவில் தாக்கத்தை உருவாக்கியிருக்கும் இந்த தலைமுறையைச் சேர்ந்தவர்களில் முக்கியமானவர்கள் யார்? இந்த கேள்விக்கான விடையைப் பார்க்கும் முன்பு, காலமும், தலைமுறைகளும் கடந்த பின்பும் கூட, தமிழ்சினிமாவில் ரஜினிகாந்த, கமல்ஹாஸன், அஜீத்…
View On WordPress
0 notes
claythoughts · 7 years ago
Text
கலைஞரின் விஜி!
கலைஞரின் கேப்டன்!!
Tumblr media
வெள்ளித்திரையில் தீவிரவாதிகளையும், வில்லனின் ஆட்களையும் மெஸ்ஸி ப்ளஸ் பீலேவையும் கலந்தடித்த பாணியில்  ஒரே ‘கிக்’கில்  பந்தாடிய அட்ரெனலின் ஆக்‌ஷன்  ஹீரோ விஜயகாந்தை…
கபினி அணை, முல்லைப் பெரியாறு அணை  போல ரசிகர்கள் பட்டாளத்தை தங்கள் வசம் தேக்கி வைத்திருந்த ரஜினி மற்றும் கமல் என்ற வசீகர நட்சத்திரங்களையும் மீறி, தமிழகத்தின் கடைகோடி கிராமங்களிலும் தனக்கென ரசிகர்கள் மன்றத்தைப்…
View On WordPress
0 notes
claythoughts · 8 years ago
Text
https://twitter.com/claythoughts/status/927408892446781443
View On WordPress
0 notes
claythoughts · 9 years ago
Text
#Kabali - My View
#Kabali – My View
Tumblr media
கபாலி – விமர்சனம் 2016-ம் ஆண்டில் அதிக எதிர்பா��்புகளுக்குள்ளான திரைப்படம்! சில வருடங்களுக்கு முன்பு வரையில் வயதான கெட்டப்பில் நடித்துவந்த ரஜினிகாந்த், முதல் முறையாக தனது வயதுக்குரிய கதாபாத்திரத்தில் ‘சால்ட் & பெப்பர்’ தோற்றத்தில் நடித்திருக்கும் படம். மலேஷியாவில் எதிர்பார்ப்பை மட்டுமல்ல, ட்ரெண்ட்டிங்கையும் உருவாக்கியிருக்கும் முதல் தமிழ்ப்படம். இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதிலும் பரவலாக…
View On WordPress
0 notes
claythoughts · 9 years ago
Text
Rajini Kanth Now! - Latest Update.
Rajini Kanth Now! – Latest Update.
Rajini Now! Countless whispers have been enountered  seriously in regards to the Veteran Actor Rajini Kanth. Honestly just what happened to the Super Star? Exclusively enquired concerning his wellness  with his closed circle. If our sources are tend to be correct, subsequently this what happened to the Super Star. The primary thing we would like to express to his enthusiasts is actually… he is…
View On WordPress
0 notes
claythoughts · 9 years ago
Text
suriya's #24 movie - review
suriya’s #24 movie – review
Tumblr media
‘ஓங்கி அடிச்சா ஒன்னரை டன் வெயிட்டு’ என வழக்கமான கமர்ஷியல் சிங்கமாக கர்ஜித்த சூர்யாவை, ஒரு வீல் சேரில் உட்கார வைத்தே அதிர வைத்திருக்கிறார்கள். ‘வில்லாதி வில்லன்கள்’ க்ளப்பிற்கு  இந்த அசால்ட் ‘ஆத்ரேயா’ புதுவரவு! ஹாலிவுட்டின் டைம் பாஸூக்கு அங்குள்ள கதை இலாகாக்கள்  அவ்வப்போது தொடும் ‘டைம் மெஷின்’தான் ’24’ படத்தின் கதைக்களம். இதை வைத்து லாஜிக் எதுவும் மிஸ் ஆகாமல், திரைக்கதையை வடிவமைத்திருப்பதில்…
View On WordPress
0 notes
claythoughts · 9 years ago
Text
HOW SOCIAL MEDIA RUIN THE STARDOM AND THEIR PERSONALITY? -A MICRO ANALYSIS
HOW SOCIAL MEDIA RUIN THE STARDOM AND THEIR PERSONALITY? -A MICRO ANALYSIS
Tumblr media
ட்விட்டும்… ரிவிட்டும்… தமிழ் சினிமாவில் சமூக ஊடகங்கள் மூலம் தலையெடுக்கும் பஞ்சாயத்துகள். சென்னையின் தீடீர் வெள்ளப் பெருக்கின் பாதிப்புக்குப் பிறகு, மனதைக் கணக்க வைத்த உயிரிழப்புகள், இருபது வருட உழைப்பை இரண்டே நாட்களில் மொத்தமாய் இழந்த லட்சக்கணக்கான க���டும்பங்கள், பலவீனமாகிவரும் அதன் நிவாரணப் பணிகள், சிதைந்து வரும் மக்களின் எதிர்பார்புகள், அரசாங்கத்தின் செயல்பாடுகள் மீதான விமர்சனங்கள், தொடரும்…
View On WordPress
0 notes
claythoughts · 9 years ago
Text
how to make 'SUCCESSFUL' Cinema? - an inside view to the beginners and all!
how to make ‘SUCCESSFUL’ Cinema? – an inside view to the beginners and all!
Tumblr media
 ’வெற்றிகரமான’ சினிமா எடுப்பது எப்படி? 2015– ல் வெளியான படங்கள்  –   204    2015-ல் தணிக்கை செய்யப்பட்டு, வெளிவர காத்திருக்கும் படங்கள் – இதற்கு முன்னரே தணிக்கை முடிந்தும் வெளியாகமல் இருக்கும் படங்கள் – 439   இப்பொழுது புரிந்திருக்கும் இக்கட்டுரையின் தலைப்பிற்கான காரணம். திரைப்படத்தை வெற்றிகரமாக எடுப்பதற்கும், வெற்றிகரமான திரைப்படம் எடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இந்த வித்தியாசத்தையும்,…
View On WordPress
3 notes · View notes
claythoughts · 10 years ago
Text
chennai flood impact: meaningless expectations of people over tamil film stars
chennai flood impact: meaningless expectations of people over tamil film stars
Tumblr media
தமிழ் சினிமாவில்…. வடிந்த வெள்ளமும், தெளிந்த உள்ளமும். சென்னைவாசிகளின் அனைத்து ’அடையாளத்தையும்’ அடியோடு இழுத்துச் சென்ற அதே வேகத்தில் இதுவரை காணாமல் போயிருந்த ’மனிதாபிமானத்தை’ கரைச் சேர்த்திருக்கிறது….. மழை! மழையின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக வடியத் தொடங்கிய நிலையில், வெள்ள நிவாரணத்திற்காக யார் யார் எவ்வளவு உதவி தொகை அளித்திருக்கிறார்கள் என்ற எதிர்பார்பு சார்ந்த விமர்சனங்கள் கட்டுக்கடங்காமல் எகிற…
View On WordPress
0 notes
claythoughts · 10 years ago
Text
The Oscars & Film Festivals -Untold about Tamil Cinema
The Oscars & Film Festivals -Untold about Tamil Cinema
தமிழ் சினிமா: ஆஸ்கர் விருது  பில்டப்களும், திரைப்பட விழாக்களின் பப்ளிசிட்டியும்!       ’திருவிளையாடல்’ படத்தில் வருவது போல், சிவனுக்கும், தருமிக்கும் இடையில் மீண்டுமொரு  கேள்வி-பதில் அனுபவம் நிகழ்ந்தால், தமிழ் சினிமாவின் பாதிப்பால் அது இப்படியாகவும் இருக்கலாம். ”தவிர்க்கவே முடியாதது?” “கொரியா படங்களும், ஐரோப்பியப் படங்களும்.” ”சேர்ந்தே இருப்பது?” ஒவர் பில்டப்பும், பொய்யான பப்ளிசிட்டியும்”…
View On WordPress
0 notes
claythoughts · 10 years ago
Text
தமிழ் சினிமாவை கதறடிக்கும் ’வசூல் ராஜாக்கள்’!
Admission Tickets
     தீபாவளி, பொங்கல் வந்துவிட்டால் போதும், படம் வெளியான அன்று ’அந்த’ மூன்றெழுத்து ஹீரோவின் படம் 5 கோடி வசூல், ‘இந்த’ மூன்றெழுத்து ஹீரோ படம் 3 கோடி வசூல் என ’பாக்ஸ் ஆபீஸ்’ புள்ளியியல் புலிகளின் சைபர் யுத்தம் ட்விட்டரில் ஆரம்பமாகி விடும். அதற்கு பிறகு அந்த ஹீரோவின் ரசிகர்களும், இந்த ஹீரோவின் ரசிகர்களும் கமெண்ட்களால் தெறிக்க தெறிக்க பரஸ்பரம் தாக்கி கொள்வார்கள். ஆனால் அப்படம் சம்பந்தபட்ட ஹீரோக்களோ அமைதியாக, அடுத்தப் படவேலைகளில் இருப்பார்கள். ஆனால் தயாரிப்பாளர்களோ, விநியோகஸ்தர்களோ அல்லது திரையரங்கு அதிபர்களோ (பட ரிசல்ட்டைப் பொறுத்து) அதிகப்படியான சந்தோஷத்தினாலோ அல்லது துக்கத்தினாலோ பேச முடியாத நிலைமைக்கோ போய் இருப்பார்கள்.
     உண்மையில் இந்த வசூல் புள்ளியியல் விவரங்கள் சாத்தியப்படுமா? இது நிஜமா? யார் இதை தீர்மானிக்கிறார்கள்? இதனால் யாருக்கு லாபம்? தமிழ் சினிமாவையே சைலண்ட்டாக காலி பண்ணும் இந்த வசூல் கலாட்டாவை பத்தி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்..
பாக்ஸ் ஆபீஸ் என்பது என்ன?
தயாரிப்பாளர் மூதலீடு (பட்ஜெட்) செய்து ஒரு படத்தைத் தயாரிக்கிறார். பட்ஜெட்டில் படத்திற்கான ப்ரமோஷன் மற்றும் விளம்பர செலவுகள் அடங்காது. படம் முழுமையாக முடிவடைந்ததும் அதன் திரையரங்கு உரிமையை விநியோகஸ்தர்களிடம் (டிஸ்ட்ரிப்யூட்டர்) குறிப்பிட்ட தொகைக்கு விற்கிறார். விநியோகஸ்தர் தனது பகுதியில் இருக்கும் திரையரங்குகளில் திரையிடுகிறார். அதில் வரும் வருமானத்தில் விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் (எ��்ஸிபிட்டர்) தங்களது பங்கைப் பிரித்து எடுத்துகொள்கிறார்கள். இது வழக்கமாக மல்ட்டி ஃப்ளெக்ஸ்களில் 50:50 என்ற ஷேரில் இருக்கும். மாஸ் ஹீரோவின் படங்கள் என்றால் சிங்கிள் ஸ்கிரீனிங்கிற்கு, 70% முதல் 80% வரை விநியோகஸ்தர்களின் பங்கு அதிகப்படும். விற்கும் டிக்கெட்டின் விலையில், கேளிக்கை வரியாக 30% கழிக்கப்பட்டு மீதம் இருக்கும் தொகையே ஒரு டிக்கெட்டிற்கான வசூலாகும். படம் வாங்கப்பட்டிருக்கும் விலையில் இருந்து, விநியோகஸ்தரின் பங்கை கழித்துப் பார்க்கும் போது, விநியோகஸ்தரின் பங்கு அதிகமிருப்பின் லாபம். இல்லையெனில் நஷ்டம். இதுதான் பாக்ஸ் ஆபீஸ் ஃபார்மூலா.
வசூலைச் சொல்லும் உரிமை யாருக்கு?
ஒரு படம் வெளியானதும், அப்படம் திரையிட்ட திரையரங்குகளின் உரிமையாளர்கள் தங்களது விநியோகஸ்தர்களுக்கு புக்கிங் முடிந்த உடனேயே விற்ற டிக்கெட்களின் விவரம் மற்றும் வசூல் நிலவரங��களைத் தெரிவித்து விடுவார்கள். விநியோகஸ்தர் இந்த விவரங்களை தயாரிப்பாளருக்கு தெரிவிப்பார். இதனால் ஒரு படத்தின் வசூல் விவரங்களை, அதிகாரப்பூர்வமாக வெளியிடும் தகுதி அப்படத்தின் தயாரிப்பாளருக்கே மட்டுமே இருக்கிறது.
பாக்ஸ் ஆபீஸ் ட்ரெண்ட்டின் பின்னணி
1996-வரை நன்றாக இருந்த தமிழ் சினிமாவின் நிலை, பல பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளின் ஆக்ரமிப்பாலும், 2005-க்கு பிறகு திருட்டு விசிடி அராஜகத்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக தடுமாற ஆரம்பித்தது. இதனால் தமிழ் சினிமாவை மீட்டெடுக்கும் என்ற நல்ல எண்ணத்தில் முதல்வர் ஜெயலலிதாவால் ’டிக்கெட் விலையை விருப்பப்படி நிர்ணயம் செய்யும் முறையும்’, முன்னாள் முதல்வர் கருணாநிதியால் ‘கேளிக்கை வரி தள்ளுப்படியும்’ (30%) திரையுலகுக்கு அளிக்கப்பட்டது. இந்த நல்ல முயற்சிகளானது, ஒட்டுமொத்த திரையுலகுக்கும் நன்மையளிக்கும் என்ற எதிர்பார்பு நிறைவேறாமல், நட்சத்திரங்களுக்கே அதிக வளத்தைக் கொட்டிக் கொடுக்கும் வரமாகி போனது என்பதே நிஜம்.
டிக்கெட் விலையை நிர்ணயிக்கும் அனுமதி கிடைத்த்தாலும், கூடவே மல்ட்டி ஃப்ளெக்ஸ்களின் அறிமுகமும், வசூலை அள்ளும் நோக்கில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான ஸ்கிரீனிங்களில் திரையிடும் ட்ரெண்ட் உருவானதாலும், பெரிய ஹீரோக்களின் மெகா பட்ஜெட்டிலான படங்களுக்கான டிக்கெட் விலை இரு மடங்கு முதல் மூன்று மடங்கு வரை உயர்த்தப்பட்டது. இதனால் தங்களால் தானே டிக்கெட் விலைக்கு இவ்வளவு டிமாண்ட் என சம்பளத்தை உயர்த்தியது நட்சத்திர வட்டாரம். கூடுதலாக, பிரம்மாண்டம், மேக்கிங் என பல புதிய ட்ரெண்ட்டினால் படத்தின் பட்ஜெட், மூன்று மடங்கு உயர்ந்திருப்பதை யாரும் குறிப்பிடுவது இல்லை. உதாரணத்திற்கு (தோராயமாக)
  பட்ஜெட்           டிக்கெட் விலை      வரி         நிகர டிக்கெட் விலை
10 கோடி              80 ரூபாய்          30%                56 ரூபாய்
50 கோடி              200 ரூபாய்         30%                140 ரூபாய்
  இதேபோல், கேளிக்கை வரி தள்ளுபடியும், நட்சத்திரங்களுக்கே சாதகமாகி இருக்கிறது. பெரிய நட்சத்திரங்களின் மெகா பட்ஜெட் படங்களுக்கான கேளிக்கை வரி தள்ளுபடி பெரிய தொகையாக இருக்கும். காரணம் அதன் பெரிய பட்ஜெட். இந்த தொகையானது படத்தின் பட்ஜெட்டிலிருந்து கழித்து கிடைக்கும் லாபக் கணக்காகவே பார்க்கப்படுகிறது. இந்த லாபக் கணக்கும் நட்சத்திரங்களின் இமேஜை அடிப்படையாக வைத்தே பார்க்கப்படுகிறது. இப்படியாக தொடங்கிய வசூல் வேட்டை டிரெண்ட் இன்று ஹாலிவுட்டின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன்களையும் மிஞ்சும் வகையில், பலப்பல பில்டப்களுடன் சமூக இணையதளங்களிலும், தனிநபர் ப்ளாக்குகளிலும் அசுரத்தனமாக தாக்க அரம்பித்திருக்கிறது. இது நட்சத்திரங்கள் மற்றும் டெக்னீஷியன்களின் வருமானத்தை உயர்த்த உதவுமே தவிர, தமிழ் சினிமாவை புத்துயிர் பெற வைக்காது.
அப்படியானால் தீர்வு என்ன?
முதலாவதாக, கேளிக்கை வரி இனி அனைத்துப் படங்களுக்கும் விதிக்கப்படவேண்டும்.  ஐந்து கோடிகளுக்கு குறைவான படங்களுக்கு 15%, ஐந்து கோடிக்கு மேற்பட்ட மெகா பட்ஜெட் படங்களுக்கு 30% என்ற அளவில் வரி விதிப்பது நல்ல பலன் தரும். இதன் மூலம் அரசுக்கு குறைந்தபட்சம் 300 முதல் 500 கோடிகள் வரை ஆண்டொன்றுக்கு வருவாய் கிடைக்கும்.
இரண்டாவதாக தமிழக முழுவதும் ஒரே டிக்கெட் விலையை நிர்ணயிக்கப்படவேண்டும். இதிலும் அரசுக்கு வருவாய் கிட்டும்.
தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் வெற்றிப் பெற்றால்தான், சினிமா வெற்றிப் பெறும் என கொண்டுவந்த கேளிக்கை வரி தள்ளுபடி மற்றும் டிக்கெட் விலை நிர்ணயம் ஆகிய இரண்டையும் மீண்டும் கொண்டுவருவதால், அரசுக்கு கிடைக்கும் வருவாயில் நல்லப் படங்களுக்கான மானியத்தை நேரடியாக தயாரிப்பாளர்களுக்கு அளிப்பது தமிழ் சினிமாவுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும்.
இது பழைய ட்ரெண்ட்டுக்கு யூ டர்ன் அடிப்பதுதான். ஆனால் இதனால் இன்றைய சூழ்நிலையில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வரமுடியும். ஒரே டிக்கெட் விலை மற்றும்  விலைக் குறைப்பு மக்களை திரையரங்குகளுக்கு ஈர்க்கும். வேறு வழியில்லாமல் நட்சத்திரங்களின் சம்பளம் கட்டுக்குள் வரும். பட்ஜெட் நியாயமானதாகும். ரசிகர்களும் திரையரங்குகளுக்குப் போய் படம் பாருங்கள். திருட்டு டிவிடிக்களுக்கு குட்பை சொல்லுங்கள்.
அடுத்ததாக நட்சத்திரங்களை மட்டுமே குறைச் சொல்வதாக நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது. படமெடுத்த நஷ்டமடைந்த தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமை வாங்கி கஷ்டப்படும் விநியோகஸ்தர்கள், படங்களைத் திரையிட்டு, திருமண மண்டபங்களுக்காக திரையரங்குகளை விற்கும் அதன் உரிமையாளர்களையும் ஆயிரக்கணக்கில் பார்க்கலாம். ஆனால் படம் நடித்ததால், நஷ்டமடைந்தேன்; எந்த லாபமும் இல்லை என நட்சத்திரங்களால் சொல்ல முடியுமா?
இனியும் வேண்டாம் வசூல் பப்ளிசிட்டி
இன்று சமூக இணையதளம் என்ற வாய்ப்பு இருப்பதால், ஆளாளுக்கு தங்களை வசூல் ராஜக்களாக நினைத்து கொண்டு இதுதான் முதல் நாள் வசூல், முதல் வார வசூல் என குத்துமதிப்பாக குறிப்பிடுகிறார்கள். படத்தின் வசூல் அதிகம் என்றால் படம் நன்றாக இருக்கும் போலிருக்கிறதே என ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவார்கள் என்பதால் அப்படம் சம்பந்தபட்ட யாரும் வசூலைப் பற்றி குறிப்பிடுவதே இல்லை. தயாரிப்பாளர்களும் ‘வரலாறு காணாத வசூல் மழை’ என்று விளம்பரமும் செய்வார். படம் வெளியான இரண்டு மாதங்கள் கழித்து, அப்படம் சம்பந்தமாக ஏதாவது பஞ்சாயத்து கிளம்பும் போதுதான், ‘பெரும் நஷ்டம். ஹீரோவும், டைரக்டரும்தான் சம்பளத்தை விட்டுக்கொடுத்து உதவினார்கள்’ என்ற உண்மையைப் போட்டு உடைப்பார் தயாரிப்பாளர். உச்ச நட்சத்திரங்களின் படங்களுக்கும் இன்று இதே நிலைமைதான். இதற்குள் ஒவ்வொரு ஹீரோவின் ரசிகர்களும் தங்களை மறந்து, மோசமான வார்த்தைகளால், போட்டுத் தாக்க ஆரம்பித்திருப்பார்கள். அதேநேரம் உண்மையில் வசூலை அள்ளிக்குவித்தாலும் கூட, அப்பட தயாரிப்பாளர் வாயைத் திறக்கவே மாட்டார். திறந்தால், அடுத்த வாரமே வருமானவரித்  துறையை வரவேற்க அவரது வீட்டுக் கதவைத் திறக்க வேண்டியிருக்கும் என்ற பயம். ஆகவே இந்த பாக்ஸ் ஆபீஸ், வசூல், என நம்மை நாமளே ஏமாற்றுகிற புள்ளியியல் விளையாட்டுகள் இனியும் வேண்டாம்.
  பின் குறிப்பு:
இக்கட்டுரையானது, 22 நவம்பர் 2015 ‘தினசெய்தி’ நாளிதழில் பிரசுரிக்கப்பட்டது.
    IS OUR TAMIL CINEMA BOX OFFICE REPORTS ARE AUTHENTIC? – TAMIL CINEMAVAI KATHARADIKKUM ‘VASOOL RAJAKKAL’ தமிழ் சினிமாவை கதறடிக்கும் ’வசூல் ராஜாக்கள்’!      தீபாவளி, பொங்கல் வந்துவிட்டால் போதும், படம் வெளியான அன்று ’அந்த’ மூன்றெழுத்து ஹீரோவின் படம் 5 கோடி வசூல், ‘இந்த’ மூன்றெழுத்து ஹீரோ படம் 3 கோடி வசூல் என ’பாக்ஸ் ஆபீஸ்’ புள்ளியியல் புலிகளின் சைபர் யுத்தம் ட்விட்டரில் ஆரம்பமாகி விடும். அதற்கு பிறகு அந்த ஹீரோவின் ரசிகர்களும், இந்த ஹீரோவின் ரசிகர்களும் கமெண்ட்களால் தெறிக்க தெறிக்க பரஸ்பரம் தாக்கி கொள்வார்கள். ஆனால் அப்படம் சம்பந்தபட்ட ஹீரோக்களோ அமைதியாக, அடுத்தப் படவேலைகளில் இருப்பார்கள். ஆனால் தயாரிப்பாளர்களோ, விநியோகஸ்தர்களோ அல்லது திரையரங்கு அதிபர்களோ (பட ரிசல்ட்டைப் பொறுத்து) அதிகப்படியான சந்தோஷத்தினாலோ அல்லது துக்கத்தினாலோ பேச முடியாத நிலைமைக்கோ போய் இருப்பார்கள்.      உண்மையில் இந்த வசூல் புள்ளியியல் விவரங்கள் சாத்தியப்படுமா? இது நிஜமா? யார் இதை தீர்மானிக்கிறார்கள்? இதனால் யாருக்கு லாபம்? தமிழ் சினிமாவையே சைலண்ட்டாக காலி பண்ணும் இந்த வசூல் கலாட்டாவை பத்தி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.. பாக்ஸ் ஆபீஸ் என்பது என்ன? தயாரிப்பாளர் மூதலீடு (பட்ஜெட்) செய்து ஒரு படத்தைத் தயாரிக்கிறார். பட்ஜெட்டில் படத்திற்கான ப்ரமோஷன் மற்றும் விளம்பர செலவுகள் அடங்காது. படம் முழுமையாக முடிவடைந்ததும் அதன் திரையரங்கு உரிமையை விநியோகஸ்தர்களிடம் (டிஸ்ட்ரிப்யூட்டர்) குறிப்பிட்ட தொகைக்கு விற்கிறார். விநியோகஸ்தர் தனது பகுதியில் இருக்கும் திரையரங்குகளில் திரையிடுகிறார். அதில் வரும் வருமானத்தில் விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் (எக்ஸிபிட்டர்) தங்களது பங்கைப் பிரித்து எடுத்துகொள்கிறார்கள். இது வழக்கமாக மல்ட்டி ஃப்ளெக்ஸ்களில் 50:50 என்ற ஷேரில் இருக்கும். மாஸ் ஹீரோவின் படங்கள் என்றால் சிங்கிள் ஸ்கிரீனிங்கிற்கு, 70% முதல் 80% வரை விநியோகஸ்தர்களின் பங்கு அதிகப்படும். விற்கும் டிக்கெட்டின் விலையில், கேளிக்கை வரியாக 30% கழிக்கப்பட்டு மீதம் இருக்கும் தொகையே ஒரு டிக்கெட்டிற்கான வசூலாகும். படம் வாங்கப்பட்டிருக்கும் விலையில் இருந்து, விநியோகஸ்தரின் பங்கை கழித்துப் பார்க்கும் போது, விநியோகஸ்தரின் பங்கு அதிகமிருப்பின் லாபம். இல்லையெனில் நஷ்டம். இதுதான் பாக்ஸ் ஆபீஸ் ஃபார்மூலா. வசூலைச் சொல்லும் உரிமை யாருக்கு? ஒரு படம் வெளியானதும், அப்படம் திரையிட்ட திரையரங்குகளின் உரிமையாளர்கள் தங்களது விநியோகஸ்தர்களுக்கு புக்கிங் முடிந்த உடனேயே விற்ற டிக்கெட்களின் விவரம் மற்றும் வசூல் நிலவரங்களைத் தெரிவித்து விடுவார்கள். விநியோகஸ்தர் இந்த விவரங்களை தயாரிப்பாளருக்கு தெரிவிப்பார். இதனால் ஒரு படத்தின் வசூல் விவரங்களை, அதிகாரப்பூர்வமாக வெளியிடும் தகுதி அப்படத்தின் தயாரிப்பாளருக்கே மட்டுமே இருக்கிறது. பாக்ஸ் ஆபீஸ் ட்ரெண்ட்டின் பின்னணி 1996-வரை நன்றாக இருந்த தமிழ் சினிமாவின் நிலை, பல பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளின் ஆக்ரமிப்பாலும், 2005-க்கு பிறகு திருட்டு விசிடி அராஜகத்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக தடுமாற ஆரம்பித்தது. இதனால் தமிழ் சினிமாவை மீட்டெடுக்கும் என்ற நல்ல எண்ணத்தில் முதல்வர் ஜெயலலிதாவால் ’டிக்கெட் விலையை விருப்பப்படி நிர்ணயம் செய்யும் முறையும்’, முன்னாள் முதல்வர் கருணாநிதியால் ‘கேளிக்கை வரி தள்ளுப்படியும்’ (30%) திரையுலகுக்கு அளிக்கப்பட்டது. இந்த நல்ல முயற்சிகளானது, ஒட்டுமொத்த திரையுலகுக்கும் நன்மையளிக்கும் என்ற எதிர்பார்பு நிறைவேறாமல், நட்சத்திரங்களுக்கே அதிக வளத்தைக் கொட்டிக் கொடுக்கும் வரமாகி போனது என்பதே நிஜம். டிக்கெட் விலையை நிர்ணயிக்கும் அனுமதி கிடைத்த்தாலும், கூடவே மல்ட்டி ஃப்ளெக்ஸ்களின் அறிமுகமும், வசூலை அள்ளும் நோக்கில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான ஸ்கிரீனிங்களில் திரையிடும் ட்ரெண்ட் உருவானதாலும், பெரிய ஹீரோக்களின் மெகா பட்ஜெட்டிலான படங்களுக்கான டிக்கெட் விலை இரு மடங்கு முதல் மூன்று மடங்கு வரை உயர்த்தப்பட்டது. இதனால் தங்களால் தானே டிக்கெட் விலைக்கு இவ்வளவு டிமாண்ட் என சம்பளத்தை உயர்த்தியது நட்சத்திர வட்டாரம். கூடுதலாக, பிரம்மாண்டம், மேக்கிங் என பல புதிய ட்ரெண்ட்டினால் படத்தின் பட்ஜெட், மூன்று மடங்கு உயர்ந்திருப்பதை யாரும் குறிப்பிடுவது இல்லை. உதாரணத்திற்கு (தோராயமாக) பட்ஜெட்           டிக்கெட் விலை      வரி         நிகர டிக்கெட் விலை 10 கோடி              80 ரூபாய்          30%                56 ரூபாய் 50 கோடி              200 ரூபாய்         30%                140 ரூபாய் இதேபோல், கேளிக்கை வரி தள்ளுபடியும், நட்சத்திரங்களுக்கே சாதகமாகி இருக்கிறது. பெரிய நட்சத்திரங்களின் மெகா பட்ஜெட் படங்களுக்கான கேளிக்கை வரி தள்ளுபடி பெரிய தொகையாக இருக்கும். காரணம் அதன் பெரிய பட்ஜெட். இந்த தொகையானது படத்தின் பட்ஜெட்டிலிருந்து கழித்து கிடைக்கும் லாபக் கணக்காகவே பார்க்கப்படுகிறது. இந்த லாபக் கணக்கும் நட்சத்திரங்களின் இமேஜை அடிப்படையாக வைத்தே பார்க்கப்படுகிறது. இப்படியாக தொடங்கிய வசூல் வேட்டை டிரெண்ட் இன்று ஹாலிவுட்டின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன்களையும் மிஞ்சும் வகையில், பலப்பல பில்டப்களுடன் சமூக இணையதளங்களிலும், தனிநபர் ப்ளாக்குகளிலும் அசுரத்தனமாக தாக்க அரம்பித்திருக்கிறது. இது நட்சத்திரங்கள் மற்றும் டெக்னீஷியன்களின் வருமானத்தை உயர்த்த உதவுமே தவிர, தமிழ் சினிமாவை புத்துயிர் பெற வைக்காது. அப்படியானால் தீர்வு என்ன? முதலாவதாக, கேளிக்கை வரி இனி அனைத்துப் படங்களுக்கும் விதிக்கப்படவேண்டும்.  ஐந்து கோடிகளுக்கு குறைவான படங்களுக்கு 15%, ஐந்து கோடிக்கு மேற்பட்ட மெகா பட்ஜெட் படங்களுக்கு 30% என்ற அளவில் வரி விதிப்பது நல்ல பலன் தரும். இதன் மூலம் அரசுக்கு குறைந்தபட்சம் 300 முதல் 500 கோடிகள் வரை ஆண்டொன்றுக்கு வருவாய் கிடைக்கும். இரண்டாவதாக தமிழக முழுவதும் ஒரே டிக்கெட் விலையை நிர்ணயிக்கப்படவேண்டும். இதிலும் அரசுக்கு வருவாய் கிட்டும். தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் வெற்றிப் பெற்றால்தான், சினிமா வெற்றிப் பெறும் என கொண்டுவந்த கேளிக்கை வரி தள்ளுபடி மற்றும் டிக்கெட் விலை நிர்ணயம் ஆகிய இரண்டையும் மீண்டும் கொண்டுவருவதால், அரசுக்கு கிடைக்கும் வருவாயில் நல்லப் படங்களுக்கான மானியத்தை நேரடியாக தயாரிப்பாளர்களுக்கு அளிப்பது தமிழ் சினிமாவுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும். இது பழைய ட்ரெண்ட்டுக்கு யூ டர்ன் அடிப்பதுதான். ஆனால் இதனால் இன்றைய சூழ்நிலையில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வரமுடியும். ஒரே டிக்கெட் விலை மற்றும்  விலைக் குறைப்பு மக்களை திரையரங்குகளுக்கு ஈர்க்கும். வேறு வழியில்லாமல் நட்சத்திரங்களின் சம்பளம் கட்டுக்குள் வரும். பட்ஜெட் நியாயமானதாகும். ரசிகர்களும் திரையரங்குகளுக்குப் போய் படம் பாருங்கள். திருட்டு டிவிடிக்களுக்கு குட்பை சொல்லுங்கள். அடுத்ததாக நட்சத்திரங்களை மட்டுமே குறைச் சொல்வதாக நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது. படமெடுத்த நஷ்டமடைந்த தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமை வாங்கி கஷ்டப்படும் விநியோகஸ்தர்கள், படங்களைத் திரையிட்டு, திருமண மண்டபங்களுக்காக திரையரங்குகளை விற்கும் அதன் உரிமையாளர்களையும் ஆயிரக்கணக்கில் பார்க்கலாம். ஆனால் படம் நடித்ததால், நஷ்டமடைந்தேன்; எந்த லாபமும் இல்லை என நட்சத்திரங்களால் சொல்ல முடியுமா? இனியும் வேண்டாம் வசூல் பப்ளிசிட்டி இன்று சமூக இணையதளம் என்ற வாய்ப்பு இருப்பதால், ஆளாளுக்கு தங்களை வசூல் ராஜக்களாக நினைத்து கொண்டு இதுதான் முதல் நாள் வசூல், முதல் வார வசூல் என குத்துமதிப்பாக குறிப்பிடுகிறார்கள். படத்தின் வசூல் அதிகம் என்றால் படம் நன்றாக இருக்கும் போலிருக்கிறதே என ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவார்கள் என்பதால் அப்படம் சம்பந்தபட்ட யாரும் வசூலைப் பற்றி குறிப்பிடுவதே இல்லை. தயாரிப்பாளர்களும் ‘வரலாறு காணாத வசூல் மழை’ என்று விளம்பரமும் செய்வார். படம் வெளியான இரண்டு மாதங்கள் கழித்து, அப்படம் சம்பந்தமாக ஏதாவது பஞ்சாயத்து கிளம்பும் போதுதான், ‘பெரும் நஷ்டம். ஹீரோவும், டைரக்டரும்தான் சம்பளத்தை விட்டுக்கொடுத்து உதவினார்கள்’ என்ற உண்மையைப் போட்டு உடைப்பார் தயாரிப்பாளர். ���ச்ச நட்சத்திரங்களின் படங்களுக்கும் இன்று இதே நிலைமைதான். இதற்குள் ஒவ்வொரு ஹீரோவின் ரசிகர்களும் தங்களை மறந்து, மோசமான வார்த்தைகளால், போட்டுத் தாக்க ஆரம்பித்திருப்பார்கள். அதேநேரம் உண்மையில் வசூலை அள்ளிக்குவித்தாலும் கூட, அப்பட தயாரிப்பாளர் வாயைத் திறக்கவே மாட்டார். திறந்தால், அடுத்த வாரமே வருமானவரித்  துறையை வரவேற்க அவரது வீட்டுக் கதவைத் திறக்க வேண்டியிருக்கும் என்ற பயம். ஆகவே இந்த பாக்ஸ் ஆபீஸ், வசூல், என நம்மை நாமளே ஏமாற்றுகிற புள்ளியியல் விளையாட்டுகள் இனியும் வேண்டாம். பின் குறிப்பு: இக்கட்டுரையானது, 22 நவம்பர் 2015 ‘தினசெய்தி’ நாளிதழில் பிரசுரிக்கப்பட்டது.
0 notes
claythoughts · 10 years ago
Text
'Top 5' Expectations from Tamil Cinema
‘Top 5’ Expectations from Tamil Cinema
Tumblr media
தமிழ் சினிமாவிடம் எதிர்பார்த்திருக்கும் ’டாப் 5’ எதிர்பார்புகள்! ஒரு திரைப்படத்தின் தலைவிதி, இன்று ஒரு சில நொடிகளில் தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. ரசிகர்களின் விருப்பத்திற்குரிய மாஸ் ஹீரோக்கள் நடித்த படங்களானாலும், முதல் பாதியிலேயே படம் இப்படிதான் என பெரும்பாலோனோர் ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.  இதன் தொடர்ச்சியாக ஒரு ரசிகருக்குள் இருக்கும் விமர்சகர், தான் பார்க்கும் திரைப்படத்தின் சுய…
View On WordPress
0 notes
claythoughts · 10 years ago
Text
An interaction with @KAMALHAASAN during his Screen Writing workshop
@kamalhaasan speaks about films, screenplay and more… ”’விதை விதைச்சதும் பழம் சாப்பிடணும்னு நினைக்க முடியுமோ. இன்னைக்கு நான் விதைக்கிறேன். நாளக்கு நீ பழம் சாப்பிடுவ. அப்புறம் உன் பையன் சாப்பிடுவான். அதுக்கு அப்புறம் அவன் பையன் சாப்பிடுவான்.அதெல்லாம் பார்க்க நான் இருக்க மாட்டேனே. ஆனால் விதை நான் போட்டது. கடமை..கடமை..’ என்று ஒரு வசனம் ‘தேவர் மகன்’ படத்தில் வரும். தன்னுடைய மகன் அமெரிக்கா செல்ல…
View On WordPress
0 notes