சீனாவின் சோசலிசமும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் !
சீனாவின் சோசலிசமும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் !
இரா. சிந்தன்
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் புதிதாக ஒரு சினிமா வெளியாகியிருந்தது. கணிணி தொழில்நுட்பத்தில் வல்லவரான ஒரு பெண், கணிணி மென்பொருட்களில் புகுந்து அவற்றின் பிழைகளைக் கண்டறிந்து, அதனை முடக்கக் கூடிய வேலையை செய்கிறார். உலகத்திற்கு ஆபத்தானசூழலை கொடுக்கும் சில பெரிய நிறுவனங்களின் கணிணியை முடக்கி அவர்களின் சொத்துக்களை ஏதாவது நலப்பணிகளுக்கு திருப்பி விடுகிறார். இந்த சமயத்தில், அவரால் பாதிக்கப்பட்ட…
View On WordPress
0 notes
விடியலை நோக்கி 75ம் ஆண்டு சுதந்திர தின நிறைவு விழா 76ம் ஆண்டு துவக்க விழா கலை விழா பொதுக்கூட்டம், உரைவீச்சு
நாள்: 14.08.2023, திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு
இடம்: சுதேசி மில் அருகில், புதுச்சேரி
அனைவரும் வருக
இந்திய நாடு சுதந்திரம் பெற்று 75 வது ஆண்டு விழாவை நாடு முழுவதும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான பிஜேபி அரசு பதவி ஏற்ற நாளில் இருந்து சுதந்திரத்தின் மாண்புகளை ஒவ்வொன்றாக சிதைத்து வருகிறது.
சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்ற மாண்புகளின் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன. தொழிலாளர் வர்க்கம் நூற்றாண்டுகளாக போராடி பெற்ற உரிமைகள் இன்று பறிக்கப்படுகின்றன.
அரசு மற்றும் அரசு துறை பணியிடங்கள் நிரப்பப்படாமல் ஒப்பந்தங்கள் மூலமாகவும் அவுட்சோர்சிங் என்ற முறையில் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
இதன் மூலம் அவர்களின் பதவி நிரந்தரம் மற்றும் சலுகைகள் பறிக்கப்பட்டு அடிமைகள் போல் வேலை வாங்கப்படுகின்றனர்.
தொழிற்சாலைகளிலும் உற்பத்தி சார்ந்த இடங்களில் ஒப்பந்த தொழிலாளர்களை பயன்படுத்தக்கூடாது என சட்டம் இருந்தாலும், ஒப்பந்த தொழிலாளர்களை 240 நாட்கள் பணி முடித்தால் அவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என சட்டம் இருந்தாலும் அது அமல்படுத்தப்படுவது கிடையாது.
பத்து ஆண்டுகள் ஆனாலும் நிரந்தரமில்லை. பென்ஷன் உரிமைகள் பறிக்கப்படுகின்றன குறைந்தபட்ச சம்பளம் கூட கிடையாது.
விவசாயிகள் நிலங்களை பறித்து கார்ப்பரேட்களுக்கு கொடுக்கும் வகையில் சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. இது சம்பந்தமாக விவசாயிகள் கொரானா கொடும் தொற்று அபாயத்திலும் வெயில், மழை பாராமல் டெல்லியில் கூடி போராட்டம் நடத்தி உயிர் தியாகங்கள் செய்து அந்த சட்டத்தை நிறுத்தினார்கள். விவசாய தொழிலாளர்கள் மற்றும் சாதாரண கிராம புற மக்கள் வேலையின்றி தவிக்கும் காலகட்டத்தில் இடதுசாரிகள் ஆதரவோடு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் 100 நாள் வேலை திட்டத்தை அறிவித்தது. அந்த வேலை திட்டம் தற்போதைய பிஜேபி ஆட்சியாளர்களால் வெட்டி சுருக்கப்பட்டு வருகிறது.
மேலும் புதிய புதிய வரிகளை GST என்ற பெயரில் போட்டு அனைத்து தரப்பு மக்களையும் வதைத்து வருகிறது ஒன்றிய அரசு. மேலும் பாராளுமன்ற ஜனநாயக மாண்புகளை கூட மதியாத ஒரு அரசாங்கமாக இன்றைய மோடி தலைமையிலான பிஜேபி அரசு செயல்பட்டு வருகிறது.
எனவே பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்கள் என அனைத்து உழைக்கும் மக்களும் ஒன்று கூடி புதியதோர் இந்தியாவை படைப்போம்.
ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோசலிசம் ஆகிய கொள்கைகளை பின்பற்றுவோம் என உறுதி ஏற்று 76வது சுதந்திர தின கொடியை நள்ளிரவு ஏற்றி விழாவை கொண்டா���ுவோம்.
அனைத்து பகுதி தொழிலாளர்களும் விவசாய பெருமக்களும் விவசாயத் தொழிலாளர்களும் 100 நாள் திட்ட பயனாளிகளும் தங்களது குடும்பங்களோடு இந்த விழாவிற்கு வருகை தந்து விழாவை சிறப்பித்து தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இன்னும் பல பல நிகழ்ச்சிக்களுடன் கலை இரவு.
புதுச்சேரி சப்தர் ஹஷ்மி கலைக்குழு.
புதுக்கோட்டை பூபாலம் கலைக்குழுவின் அரசியல் நையாண்டி,
உரை வீச்சு
தோழர். களப்பிரன் Kalapiran Kalam
துணைத்தலைவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்.
தோழர். S.G. ரமேஷ்பாபு Ramesh Babu தமிழ் மாநில ஒருங்கிணைப்பாளர், மனிதம்
இந்திய தொழிற்சங்க மையம் (CITU) அகில இந்திய விவசாயிகள் சங்கம் (AIKS) அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் (AIAWU)
#SocialismIsFuture #CITU #Puducherry #india #v4india #AIKS #AIAWU
0 notes
நாட்டிற்கு சரியான கோட்பாட்டு ரீதியான வேலைத் திட்டம் தேவை - சஜித் பகிரங்கம்
நமது நாட்டிற்கு சரியான கோட்பாட்டு ரீதியான வேலைத் திட்டம் தேவை என்றும், இந்த கோட்பாட்டை நாட்டுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும் என்றும், இந்நாட்டில் எப்போதும் ஊசலாடியது தீவிர முதலாளித்துவம் அல்லது தீவிர சோசலிசமாகும் என்றாலும், ஐக்கிய மக்கள் சக்தி மூன்றாவது பாதையான மனிதநேய முதலாளித்துவத்தை நம்புவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சோசலிசம்,பாட்டாளி வர்க்கம் மற்றும் தொழிலாளர் உரிமைகள்…
View On WordPress
0 notes
நாட்டிற்கு சரியான கோட்பாட்டு ரீதியான வேலைத் திட்டம் தேவை - சஜித் பகிரங்கம்
நமது நாட்டிற்கு சரியான கோட்பாட்டு ரீதியான வேலைத் திட்டம் தேவை என்றும், இந்த கோட்பாட்டை நாட்டுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும் என்றும், இந்நாட்டில் எப்போதும் ஊசலாடியது தீவிர முதலாளித்துவம் அல்லது தீவிர சோசலிசமாகும் என்றாலும், ஐக்கிய மக்கள் சக்தி மூன்றாவது பாதையான மனிதநேய முதலாளித்துவத��தை நம்புவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சோசலிசம்,பாட்டாளி வர்க்கம் மற்றும் தொழிலாளர் உரிமைகள்…
View On WordPress
0 notes
📰 'என் கனவில் கிருஷ்ணர்...': அகிலேஷ் யாதவ் ஏன் உ.பி., தேர்தலில் வெற்றி பெறுவார்
📰 ‘என் கனவில் கிருஷ்ணர்…’: அகிலேஷ் யாதவ் ஏன் உ.பி., தேர்தலில் வெற்றி பெறுவார்
ஜனவரி 04 2022 12:06 PM அன்று வெளியிடப்பட்டது
உத்தரபிரதேசத்தில் வரும் சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைப்பேன் என கிருஷ்ணர் தனது கனவில் தோன்றுவதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் பஹ்ரைச் எம்எல்ஏ மாதுரி வர்மாவை தனது கட்சியில் சேர்த்துக்கொள்ளும் நிகழ்ச்சியின் போது அகிலேஷ் இவ்வாறு கூறினார். “ராம ராஜ்ஜியத்திற்கான பாதை சமாஜ்வாத் (சோசலிசம்) பாதையில் உள்ளது.…
View On WordPress
0 notes
கல்விக்கான போராட்டத்தில் எழுச்சிமிகு 50 ஆண்டுகள்
இந்திய மாணவர் சங்கத்தின் பொன்விழா துவக்கம்
கல்விக்கான போராட்டத்தில் எழுச்சிமிகு 50 ஆண்டுகள்
- க.நிருபன் சக்கரவர்த்தி
நமது நிருபர்
டிசம்பர் 30, 2019
இரண்டாம் உலகப்போரின் துவக்க காலகட்டம். இந்திய விடுதலைப் போராட்டம் பற்றியெரிந்து கொண்டிருந்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தேசம் முழுவதும் மக்கள் அலைஅலையாக திரண்டு விடுதலைக்கான பாதையில் வீறுநடை போட்டு முன்னேறிக் கொண்டிருந்தனர். இப்போராட்டங்களில் தவிர்க்கமுடியாத அங்கமாக மாணவர்கள் தங்களை ஏற்கனவே இணைத்து கொண்டிருந்தனர். நாடு முழுவதும் போராடும் இயக்கங்களில் மாணவர்களின் பங்கு அளப்பரியதாக இருக்கும் போது மாணவர்களுக்கான ஒரு அமைப்பு வேண்டும் என்பதிலிருந்து தேசம் முழுமைக்குமான அமைப்பாக 1936 ஆகஸ்ட் 12ல் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்(ஏ.ஐ.எஸ்.எப்) தோற்றுவிக்கப்பட்டது. ஜவஹர்லால் நேரு, நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் மற்றும் ம��கமதுஅலி ஜின்னா உள்ளிட்ட தலைவர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றிருந்தனர். அனைவருக்குமான ஜனநாயகப்பூர்வ கல்வி கிடைத்திட, தேச விடுதலைக்கான போராட்டத்தில் அனைத்துப் பகுதி மாணவர்களும் பங்கேற்பது என்ற அழைப்பை ஏற்று எண்ணற்ற மாணவர்கள் அனைத்து பகுதிகளிலும் தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றனர். நாடு விடுதலையடைந்த பின்னர் காங்கிரஸ் ஆட்சி மக்களின் வாழ்வில் எந்தவொரு அடிப்படையான மாற்றத்தையும் ஏற்படுத்த தவறியது. தேசம் முழுவதும் ஏற்பட்ட மாற்றம் என்பது இந்திய முதலாளிகளுக்கும், நிலப்பிரபுக்களுக்கும் சாதகமாக அமைந்தது. நேரு கடைபிடித்த கலப்பு பொருளாதாரம் சில பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உருவாக உதவியதே தவிர, அனைவருக்குமான கல்வி, வேலை, விவசாயிகளுக்கான நில உரிமை போன்றவற்றில் ஏற்பட்ட தேக்கம் சமூக ஏற்றத் தாழ்வை அதிகப்படுத்தியது. இதற்கெதிராக மாணவர்கள் களத்தில் இறங்கி போராடிக் கொண்டிருக்கும் போது ஏ.ஐ.எஸ்.எப் தலைமை, காங்கிரஸ் கட்சி இந்தியாவிற்கான மாற்றத்தை மட்டு மல்ல; சோசலிசத்தையே கொண்டு வந்துவிடுமென அதீத நம்பிக்கையில் இருந்தது. இதனால் போராடும் மாண வர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் மாநில அளவில் அமைப்பு களை ஏற்படுத்திக்கொண்டனர். தமிழக மாணவர் சங்கம், கேரள மாணவர் சங்கம் - இப்படி மேற்குவங்கம், ஆந்திரா, திரிபுரா என பல மாநில அமைப்புகளாக செயல்பட துவங்கினர்.
அறுபதுகளின் இறுதியில்...
அறுபதுகளின் இறுதியில் தேசம் முழுமைக்கும் வறுமை தலைவிரித்தாடுகையில் இந்திரா காந்தியின் அரசு வறுமையை மேலும் தீவிரப்படுத்தவே செய்தது. இக்காலகட்டத்தில் கல்விக்கான போராட்டம் தீவிர மடைந்திருந்தபோது இந்தியா முழுவதிலும் அரசின் கொள்கைகளுக்கு எதிராக போராடும் மாநில அளவிலான மாணவர் அமைப்புகளை ஒன்றிணைத்து 1970 ஆகஸ்டில் மேற்கு வங்கத்தின் டம்டம் நகரில் கூடி இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் சார்ந்த மாணவர் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து தேசம்முழுமைக்கும் ஒரே அமைப்பாக விடுதலைப் போராட்டக் காலத்தின் அதே பாரம்பரியத்தோடு தோற்றுவிப்பது என முடிவெடுக்கப் பட்டது. அதன்படி 1970 டிசம்பர் 27 முதல் 30 வரை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நான்கு நாட்கள் இம்மாநாடு நடைபெற்றது. சுமார் 600 பிரதிநிதிகள், 500 பார்வையாளர்கள் கலந்து கொண்ட இம்மாநாட்டில் “இந்திய மாணவர் சங்கம்” (எஸ்எப்ஐ)தோற்றுவிக்கப்பட்டது. “சுதந்திரம், ஜனநாயகம், சோசலிசம்” என்ற உயரிய குறிக்கோளோடு, “படிப்போம், போராடுவோம்” என்ற முழக்கத்தை முன்வைத்து பலகட்ட போராட்டங்களை இயக்கங்களை நடத்தியுள்ளது. பள்ளிக்கல்வி முதல் மருத்துவம், பொறியியல், சட்டம், தொழிற்நுட்பம், தொழிற்கல்வி, ஆராய்ச்சிக் கல்வி என அனைத்துத் துறைகளிலும் பல மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது. இடஒதுக்கீடு, பெண்கல்வி, ரேகிங் எதிர்ப்பு, பஸ்பாஸ், கல்வி உதவித்தொகை, விடுதி மாணவர்கள் நலன், அரசுக் கல்லூரிகள் பாதுகாப்பு, சமச்சீர் கல்வி என இன்னும் எத்தனையோ மைல்கல்லை கடந்து இந்திய மாணவர் சங்கம் ஐம்பதாமாண்டில் அடியெடுத்து வைக்கிறது. கடந்த 21ம் தேதி தமிழக காவல்துறையின் உளவுப் பிரிவிடமிருந்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச்செயலாளர் வீ. மாரியப்பனுக்கு ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது அதில் “கடந்த திங்கள்கிழமை முதல் குடியுரிமை சட்ட திருத்ததிற்கு எதிராக தமிழகத்தின் பெரும்பாலான கல்லூரிகளில் உங்கள் அமைப்புதான் போராட்டம் நடத்தி வருகிறது. அதனால் மற்ற இயக்கங்களும், மாணவர்களும் தன்னெழுச்சியாக தற்போது போராட்டங்களில் இறங்கியுள்ளனர். அடுத்தகட்ட உங்கள் திட்டமிடல் என்ன?” என்று கேட்டனர். அவர்கள் கேட்பது இதுவொன்றும் புதிதான விசயமல்ல. சமீபத்தில் நீட் தேர்வுக்கு எதிராக, புதியக்கல்வி கொள்கைக்கு எதி ராக, பேருந்து கட்டண உயர்வு, கல்விக் கட்டணக் கொள்ளை, பாலியல் வன்கொலைகள், கல்வி வளாக படுகொலைகள் போன்றவற்றையெல்லாம் எதிர்த்து ஒவ்வொரு போராட்டத்தின் போதும் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட அளவிலான தலைவர்களுக்கு மட்டுமல்லாமல் கிளையளவிலான நிர்வாகிகளுக்கும் இது போன்ற அழைப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. மாணவர் அமைப்புகள் என்றாலே ஏதேனும் ஒரு கட்சியின் பிரிவாக, தலைவர்களின் ஆணைக்கு காத்தி ருக்கும் மாணவர் அணியாக இல்லாமல், சுயேட்சையான ஜனநாயகப்பூர்வ அமைப்பாக எஸ்.எப்.ஐ துவக்ககாலம் முதல் இன்று வரை இருந்து வருகிறது.
கல்வி வளாகங்கள் எங்கள் கைகளில்தான்
எனவேதான் ஒட்டுமொத்த இந்தியாவும் வலதுசாரி அரசியலின் பாசிசப் பிடிக்குள் சிக்குண்டு கிடக்கையில் கல்வி வளாகங்கள் மாணவர்களின் போராட்டத்தால் இன்று இடதுசாரி முற்போக்கு மாணவர்களின் கைவசம் இருக்கிறது. பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவையை பல்வேறு அரசியல் போராட்டங்களுக்கு மத்தியில் இந்தாண்டு எஸ்.எப்.ஐ கைப்பற்றியுள்ளது. பதிமூன்று ஆண்டுகளுக்கு பின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவையின் தலைவர் பதவியை கைப்பற்றியுள்ளது. ஹைதரபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் வகுப்பு வாததிற்கு எதிரான முழக்கத்தோடு பேரவை தலைவராக மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளது. மேற்குவங்கதில் மம்தாவின் காட்டுத் தர்பாரை முறியடித்து ஒன்பதாண்டுகளுக்கு பின் கொல்கத்தா பிரசிடன்சி பல்கலைக்கழகத்தின் அனைத்து பொறுப்பு களையும் எஸ்.எப்.ஐ வென்றுள்ளது. கேரளாவின் அனைத்து மாணவர் பேரவை தேர்தலிலும் வெற்றிபெற்று வரலாற்று சிறப்புமிக்க பங்களிப்பை எஸ்.எப்.ஐ செலுத்தி வருகிறது. ராஜஸ்தானில் 55 கல்லூரிகள், மூன்று பல்கலைக்கழகங்களில் போட்டியிட்டு 21 தலைவர், 41 துணை தலைவர், 19 செயலாளர், 37 இணை செய லாளர் பொறுப்புகளை மாநிலம் முழுவதும் வென்றுள்ளது. அதேபோல் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பிரிவினை வாத மதவாத சக்திகளை பின்னுக்கு தள்ளி துணை தலை வர் பதவியை வென்றுள்ளது. குஜராத் பல்கலைக்கழ கத்திலும் அரசின் கல்வி கொள்கைக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்திவருகிறது. மத்திய - மாநில அரசுகளின் மாணவர் விரோத நடவடிக்கைகளால் மாணவர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல் அதிகரித்துள்ளது. தற்போதுகூட குடியுரிமை சட்டத்திற்கு எதிராகப் போராடிய தில்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் 10,000 பேர் மீது வழக்கு புனைந்துள்ளது. மேலும் காவி கார்ப்பரேட் கல்விக் கொள்கையான புதியக்கல்வி கொள்கையின் மூலம் இந்தியாவின் பெரும்பாலான மக்களுக்கான கல்வி மறுக்கப்படவுள்ளது. கல்விக்கான நிதியை ஜிடிபியில் 2 சதத்திற்கும் குறைவாக குறைப்பது; குலக்கல்வி முறையை புகுத்தி மூன்றாம் வகுப்பு முதல் பொதுத்தேர்வு, தாய்மொழி வழிக்கல்வியை சிதைத்து மும்மொழிக்கொள்கை, அனைத்து உயர்கல்விக்கும் நுழைவு தேர்வு, தனியாரிடம் கல்வியை ஒப்படைப்பது என கல்வி மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இனம், மொழி, மதத்தை முன்வைத்து மக்களைப் பிரித்து குடியுரிமையைப் பறிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கல்வி, வேலைக்கான மாணவர்களின் பொதுப்போராட்டங்களை திசை திருப்பும் ஆளும் அரசுகளின் இந்நடவடிக்கைகளுக்கு எதிராக மாணவர்களின் ஜனநாயக உரிமைக்கான போராட்டத்தில் இன்னுயிர் ஈந்த இந்திய மாணவர் சங்கத்தின் புடம் போட்ட தியாகிகள் சோமு, செம்பு முதல் மதவாதம் தகரட்டும் என முழங்கிய அபிமன்யு வரை 278 மாணவத் தியாகிகளின் கனவை நெஞ்சில் ஏந்தி முழங்குவோம்; இந்தியாவின் மதச்சார்பற்ற முற்���ோக்கு கல்வியை பாதுகாப்போம் என்று. 26 துண்டுகளாக உடல் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அஸ்ஸாமின் மாணவர் தலைவர் நிரஞ்சன் தாலுக்தார் எழுப்பிய முழக்கத்தை விண்ணதிர மீண்டும் முழங்குவோம் ‘‘இந்தியாவை கூறுபோட விடமாட்டோம்” என்று!
கட்டுரையாளர்: மாநிலத்துணை தலைவர்,
இந்திய மாணவர் சங்கம்
0 notes
சோசலிசம்-மம்தா பானர்ஜி திருமணம் ஒரு குறைந்த முக்கிய விவகாரம்
சோசலிசம்-மம்தா பானர்ஜி திருமணம் ஒரு குறைந்த முக்கிய விவகாரம்
கட்டூருக்கு அருகிலுள்ள தம்பதியினரின் சொந்த கிராமத்தில் ஒரு எளிய நிகழ்வில் COVID-19 நெறிமுறைகளைத் தொடர்ந்து திருமணம் நடத்தப்பட்டது.
கடந்த வாரம் சமூக ஊடகங்களில் பேச்சாக மாறிய சோசலிசம் மற்றும் மம்தா பானர்ஜி என்ற தம்பதியினரின் திருமணம் ஞாயிற்றுக்கிழமை இங்கு குறைந்த முக்கிய முறையில் நடந்தது.
சோசலிசம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் ஏ.மோகனின் மகன். மம்தா பானர்ஜி காங்கிரஸ்…
View On WordPress
0 notes
சோசலிசம்-மம்தா பானர்ஜி திருமணம் ஒரு குறைந்த முக்கிய விவகாரம்
சோசலிசம்-மம்தா பானர்ஜி திருமணம் ஒரு குறைந்த முக்கிய விவகாரம்
கடந்த வாரம் சமூக ஊடகங்களில் பேச்சாக மாறிய சோசலிசம் மற்றும் மம்தா பானர்ஜி என்ற தம்பதியினரின் திருமணம் ஞாயிற்றுக்கிழமை சேலத்தில் நடந்தது.
சோசலிசம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் ஏ.மோகனின் மகன் என்றாலும், மம்தா பானர்ஜி ஒரு காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
இங்குள்ள கட்டூருக்கு அருகிலுள்ள தம்பதியினரின் சொந்த கிராமத்தில் ஒரு எளிய நிகழ்வாக COVID-19 நெறிமுறைகளைத் தொடர்ந்து திருமணம்…
View On WordPress
0 notes
தமிழ்நாட்டின் சேலத்தில் மம்தா பானர்ஜியை திருமணம் செய்ய சோச��ிசம்; கம்யூனிசம், லெனினிசம், மார்க்சியம் இருக்க வேண்டும்
தமிழ்நாட்டின் சேலத்தில் மம்தா பானர்ஜியை திருமணம் செய்ய சோசலிசம்; கம்யூனிசம், லெனினிசம், மார்க்சியம் இருக்க வேண்டும்
விழாவில் மார்க்சியம் இருக்கும்.
கம்யூனிசம் மற்றும் லெனினிசம் முன்னிலையில் மம்தா பானர்ஜியுடன் சோசலிசத்தின் திருமணம், இந்த வார இறுதியில் சேலத்தில் உள்ள நகரத்தின் பேச்சு. திருமண அழைப்பு சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
சோசலிசம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மாவட்ட செயலாளர் ஏ.மோகனின் மகன். மணமகள் காங்கிரஸ் ஆதரவாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
திரு மோகன் தனது மகன்களுக்கு இடது…
View On WordPress
0 notes