Best places to spend Christmas in USA
0 notes
Land pollution in Tamil
Link: https://bit.ly/NST-LandpollutioninTamil
0 notes
Air pollution in Tamil
Link: https://bit.ly/NST-AirpollutioninTamil
0 notes
What is the land in Tamil?
Link: https://bit.ly/NST-WhatisthelandinTamil
0 notes
What is air in Tamil?
Link: https://bit.ly/NST-WhatisairinTamil
0 notes
Natural disasters in Tamil
Link: https://bit.ly/NST-NaturaldisastersinTamil
0 notes
நீரின் முக்கியத்துவம்
இயற்கையன்னையாலும் இறைவனாலும் உலகுக்கு படைக்கப்பட்ட அற்புதமான வரப்பிரசாதமே நீராகும். “நீரின்ன்றி அமையாது உலகு” என்பதற்கிணங்க, நீரையே ஆதாரமாக கொண்டு இயங்குகிறது இவ்வுலகும் உயிர்களும்.
“வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று ” என்று திருக்குறள் மூலம் இவ்வுலகத்தையே வாழவைப்பது மழையாக இருப்பதனால் தான் இது அமிழ்தம் எனப் போற்றப்படுகிறது என்று பொருள்படுகிறது.
இத்தகைய வரமான நீரின் முக்கியத்துவமானது ஒன்றல்ல இரண்டல்ல எண்ணற்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
பூமியில் பிறந்த எல்லா உயிரினங்களும் உயிர் வாழ்வதற்கு அடிப்படை காரணமாக நீர் அமைகிறது. 6 அறிவுள்ள மானிடன் முதல் ஐயறிவுள்ள பிராணிகள் வரை அனைத்திற்கும் இது பொதுவே.
உணவில்லாமல் கூட சில நாட்கள் இருந்து விடலாம். ஆயினும், நீரின்றி ஒரு நாளை கடப்பதே சிரமம். அத்தனை முக்��ியத்துவம் வாய்ந்தது நீர்.
நீரின் முக்கியத்துவம் (Importance of water in Tamil)
நீரின் முக்கியத்துவ��்தை பற்றி பார்ப்பின், மனிதனின் தாகத்தை தீர்ப்பதே முதல் முக்கியத்துவமாக இருக்கிறது.
மேலும், உடற் கழிவுகளை அகற்றி தூய்மைபடுத்துவதற்கும் உடல் வெப்பநிலையை தணித்து குளிர்மைபடுத்துவதற்கும் வாயினுள் உமிழ்நீர் சுரப்பியானது சரியாக சுரந்து செயற்படுவதற்கும் நீர் இன்றி அமையாது.
சருமத்தை இளமையாகவும் பிரகாசமாகவும் வைத்திருப்பதற்கும் உடற் பருமனையும் பாரத்தையும் சரியாக பராமரிப்பதற்கும் நீர் மிக முக்கியமாகும்.
இவ்வாறு மனிதன் தன்னை உடல் ரீதியாகப் பராமரிப்பத்ற்கு அல்லது பாதுகாத்துக் கொள்வதற்கு நீர் துணைபுரிகிறது.
முழுமையாக வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்.
1 note
·
View note
தமிழ் மொழியின் சிறப்பு
உலகின் முதன் மொழி, மூத்த மொழி, ஆதி மொழி என்றெல்லாம் அழைக்கபடும் மொழியானது தமிழ் மொழியாகும். இது தொண்மை மொழி என சிறப்பிக்கப்படுவதோடு அத்தனை பெருமைகளையும் சிறப்பம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
உலகின் மற்ற மொழிகளுக்கு மத்தியில் நமது தாய் மொழியான தமிழ் மொழி அத்தனை சிறப்பம்சங்களையும் தன்வசப்படுத்தியுள்ளமை பெருமைபடக்கூடிய விடயமே.
இன்று மக்களால் பேசப்படும் பல மொழிகளுக்கு மூல மொழியாக தமிழ் உள்ளது என்றால் மிகையில்லை.
தமிழ் மொழியின் சிறப்பு பற்றி இனி விரிவாகப் பார்க்கலாம்.
தமிழ் மொழியின் சிறப்பு
தமிழ் மொழியானது உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள் 18, உயிர்மெய் எழுத்துக்கள் 216, ஆயுத எழுத்து 1 என மொத்தமாக 247 எழுத்துக்களை கொண்டது.
இத்தமிழ் இயல், இசை, நாடகம் என 3 பிரிவுகளாக பிரித்து நோக்கப்படுகிறது.
தமிழ் வரலாற்றைப் பற்றி நாம் எடுத்து நோக்கின் தமிழர் குடியானது,
“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே – வாளோடு
முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி” என்று சிறப்புரிமை பெறுகிறது.
இதன் மூலம், தமிழ் நிலையானது என்ற அந்தஸ்தை நிரந்தமாக பெறுகிறது எனலாம்.
முழுமையாக வாசிக்க தயவுசெய்து இங்கே க்ளிக் செய்யவும்.
0 notes
மரம் வளர்ப்போம்
இயற்கை அன்னை ஈன்றெடுத்த செல்வங்களுள் அற்புதமான செல்வம் மரங்களாகும். மரங்களின்றி அமையாது எதுவும். சகலதும் மரங்களை சார்ந்தே நிகழும்; மரங்களை சார்ந்தே இருக்கும்.
ஒரு மரம், இரு மரம் இன்றி பல்லாயிரக்கனக்கான தாவரங்களை கொண்டு அமைந்ததே காடுகளாகும். ஒவ்வொரு மரமும் ஒரு சுற்றுச் சூழல் அமைப்பை உருவாக்கும்.
ஆகவே நாமும் மரம் வளர்ப்போம் என்று நினைத்து செயல்பட வேண்டும். காரணம் மரங்களே இப்பூமியின் மூச்சாகும்.
மரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக திகழ்கின்றன.
ஏனெனில், ஐந்தறிவு படைத்த ஜீவன்கள் முதல் ஆறறிவு கொண்ட மானிடன் வரை அனைவரும் சுவாசிப்பதற்கு தேவையான ஒட்சிசனை தருவது இம்மரங்களே என்பதனாலாகும்.
இத்தாவரப் போர்வை இல்லையேல் பூமியில் உயிரினங்கள் இல்லை என்றால் அதில் எவ்வித பொய்யுமில்லை.
இனி மரங்களின் முக்கியத்துவம் பற்றியும் அவற்றின் பயன்கள் பற்றியும் பார்க்கலாம் வாருங்கள்.
மரத்தின் பயன்கள்
பூமியைப் பொருத்தவரையில் மரங்கள் இல்லையேல் பூமி பாலைவனமே. பாலைவனத்தை கூட சோலைவனங்களாக்கும் வல்லமை மரங்களிற்கு உண்டு.
மரங்கள் காபனீரொட்சைட்டை உட்சுவாசித்து ஒட்சிசனை வெளியிடுவதனாலேயே நாம் தூய்மையான காற்றை சுவாசிக்க முடிகிறது. அத்துடன் மரங்கள் வளியை தூய்மைபடுத்துகின்றன.
சூழலிலுள்ள வெப்பத்தை தனித்து குளிர்மையான காற்றை மரங்கள் எமக்குத் தந்துதவுகின்றன.
பூமிக்குத் தேவையான நீரை பெற்றுத்தருவதில் மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மரங்கள் இருப்பதால் தான் புவிக்கு மழைவீழ்ச்சி கிடைக்கின்றது.
சூழல் வெப்பத்தை போக்கி குளிர்ச்சியடையச் செய்யும் மழையானது மரங்கள் பெருமளவு இருப்பதனாலேயே பூமிக்கு கிடைக்கிறது.
முழுமையாக வாசிக்க தயவுசெய்து இங்கே க்ளிக் செய்யவும்.
0 notes
இயற்கையை பாதுகாப்போம்
இப்பூமியானது உயிர்பெற்று நிலைத்திருப்பதற்கான அடித்தளமான காரணம் இயற்கை என்று சொன்னால் மிகையில்லை.
ஏனெனில், உயிர் வாழத்தேவையான காற்று முதல் உணவு, உறையுள் உட்பட அனைத்தும் இவ்வியற்கையை சார்ந்தே காணப்படுகிறது.
அத்துடன், உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்து விடயங்களும் இயற்கைக்குள் அடங்குகின்றன.
இயற்கையின் சிறப்பு
இயற்கையின் சிறப்பினை பற்றி நோக்கின் இப்பூமியானது கடல், ஆறுகள், குளங்குட்டைகள், சிற்றோடைகள், நீர்வீழ்ச்சிகள் என ¾ % மான நீர்ப்பரப்பினையும் மலைகள், காடுகள், சோலைகள், வயல் வெளிகள் என ¼ % மான பகுதி தரைப் பிரதேசத்தினையும் கொண்டு அமையப்பெற்றது.
அத்துடன், விலங்கினங்கள், பறவையினங்கள், பூச்சிப் புழுக்கள் என உயிரினப் பல்வகைமையை தனக்குள் அடக்கியுள்ளது இவ்வியற்கை.
இவ்வனைத்தையும் ஒன்றினைத்தே நாம் “இயற்கை” என ஓர்பெயர்க் கொண்டு அழைக்கிறோம்.
சூரிய மண்டலத்தில் உயிர்கள் வாழக் கூடியு ஒரே கோள் பூமியாகும். இந்த பூமியில் எண்ணிலடங்காத இயற்கை வளங்கள் கொட்டிக்கிடக்கின்றன.
நாம் பயன்படுத்துகிற எந்த பொருளாக இருந்தாலும் அது இயற்கை வளம் மூலமாக தயாரிக்கப்பட்ட பொருளாகத் தான் இருக்கும். இயற்கை இல்லையென்றால் இவ்வுலகமே இருக்க முடியாது.
இத்தனை சிறப்பும் பெருமையும் வாய்ந்த இயற்கையினை பல்வேறு வழிகளில் மாசுபடுத்தியும் வளங்களை அழித்தும் தீங்குவிளைவித்துக் கொண்டிருக்கிறோம் நாம்.
முழுமையாக வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்.
0 notes
மரம் என்றால் என்ன?
மரம் என்பது இவ்வுலகில் வாழும் உயிர்களுக்கு கிடைத்த இன்றியமையாத இயற்கை வளம் ஆகும். நாம் உயிர் வாழ நிலம், நீர், காற்று எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு இந்த மரங்கள் அவசியம் வாய்ந்தவையாகும்.
உண்மையாக சொன்னால், இவை எல்லாவற்றையும் பாதுக்காப்பதே இந்த மரங்கள் தான்.
நமது அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறையுள் ஆகிய இவை மூன்றுக்கும் மூல ஆதாரமாக நாம் மரங்களையே பயன்படுத்துகிறோம்.
மரங்கள் என்றால் என்ன (What is a tree in Tamil) என்றும் மரங்கள் பற்றிய முக்கியமான தகவல்களையும் இனி பார்க்கலாம் வாருங்கள்.
மரம் என்றால் என்ன?
மரம் என்றால் இலைகளின் துணையுடன் நீண்ட நடுத்தண்டை கொண்ட பல ஆண்டுகள் வாழக்கூடிய தாவரம் ஆகும்.
பல மரங்கள் தண்டின் அங்கங்களாக கிளைகளை கொண்டிருக்கின்றன. சில மரங்கள் கிளைகள் இன்றியும் உயரமாக வளர்கின்றன. உதாரணமாக தென்னை மரம், பனை மரம், வாழை மரம் போன்ற மரங்களை குறிப்பிடலாம்.
மரங்கள் அவற்றின் உறுதிக்காக மர திசுக்களை கொண்டிருக்கின்றன. அத்துடன், பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பதற்கு அவற்றின் தண்டை சுற்றி மரப்பட்டைகளை கொண்டுள்ளன.
மேலும், மூலப்பொருட்களை ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு கொண்டு செல்ல செல்குழாய் நாளம் சார்ந்த திசுக்களை தன்னகத்தே வைத்திருக்கின்றன.
பல வகையான மரங்கள் சூரிய ஒளியை பெறுவதற்கு ஏனைய மரங்களுடன் போட்டியிட்டு உயரமாகவும் பரவலாகவும் வளர தண்டும் கிளைகளும் அவற்றுக்கு தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
முழுமையாக வாசிக்க தயவுசெய்து இங்கே க்ளிக் செய்யவும்.
1 note
·
View note
நீர்
இந்த உலகில் உயிர்கள் வாழ்வதற்கு மிக முக்கியமான முதல் காரணி நீர் ஆகும். உணவின்றி கூட சில காலம் வாழ முடியும். என்னும், நீரின்றி எந்த உயிராலும் அதிக நாள் வாழ முடியாது. நீரின் முக்கியத்துவத்தை (Water resource in Tamil) இதை விட வேறு எந்த முறையாலும் விளக்கமாக கூற முடியாது.
நீர் (Water in Tamil) என்பது இறைவனால் இவ்வுலகுக்கு கொடுக்கப்பட்ட விலைமதிக்க முடியாத ஒரு பெரும் பொக்கிஷமாகும். நீரின் அவசியத்தை பற்றி கூறிக்கொண்டே போகலாம்.
வாருங்கள்! இனி, நீரை பற்றி முழுமையாக தெரிந்துகொள்வோம்.
நீர் என்றால் என்ன?
நீர் என்பது இரண்டு ஐதரசன் அணுக்களும் ஒரு ஒட்சிசனும் பங்கீட்டுவலுப்பிணைப்பால் உருவான ஒரு அசேதன சேர்மானமாகும். தூய நீரிற்கு நிறமில்லை; மனமில்லை; சுவையில்லை; அத்துடன், இது ஒளிபுகவிடக்கூடிய ஒரு இரசாயன பொருளாகும்.
பூமியின் மேற்பரப்ப���னது 71% நீராலும் 29% நிலத்தாலும் உருவாகியுள்ளது. மேலும், பூமியில் நீரின் முழு அளவில் 96.5% கடல்களாலும் சமூத்திரங்களாலும் சூழப்பட்டுள்ளது.
அத்துடன், 1.76% பனிப்பாறைகளாகவும் பனி மேற்பரப்புகளாகவும் 1.69% நிலத்தடி நீராகவும் ஏனைய சதவீதமானவை ஏரிகளாகவும், ஆறுகளாகவும், வளிமண்டல நீராவியாகவும், சேற்று நில நீராகவும் உயிரியல் நீராகவும் உள்ளது.
குறிப்பாக, 97% ஆன நீரானது உப்பு நீராகவும் 3% ஆன நீரானது சுத்தமானதாகவும் உள்ளது. எனினும், இந்த 3% நீரில் 0.5% வை மட்டுமே திரவமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
சுத்தமாக திரவ நிலையில் உள்ள நீரையே மனிதனும் நிலத்தில் வாழ்கின்ற பல உயிரினங்களும் பயன்படுத்துகின்றன. இருந்தபொழுதிலும், உப்பு நீரிலும் பல வகையான உயிரினங்கள் வாழ்கின்றன என்பதும் குறிப்பிடவேண்டிய விடயமாகும்.
முழுமையாக வாசிக்க தயவுசெய்து இங்கே க்ளிக் செய்யவும்.
0 notes
கணனியை கண்டுபிடித்தவர் யார்?
கணனி (Compute in Tamil) என்பது தற்போதைய காலத்தில் இன்றியமையாத ஒரு சாதனமாக மாறிவிட்டது. காரணம், இன்று உலகமே கணனிமயமாகிவிட்டது. உண்மையிலேயே, நமது வேலைகளை மிக இலகுவாக செய்து முடிக்கக்கூடிய ஒரு சிறந்த கருவி கணனியாகும். இவ்வளவு சிறப்புமிக்க கணனியை கண்டுபிடித்தவர் யார் (Who invented the computer in Tamil) என்று உங்களுக்கு தெரியுமா? சரி, வாருங்கள் இனி கணனியை கண்டுபிடித்தவர் பற்றி விரவாகப்பார்க்கலாம்.
கணனியை கண்டுபிடித்தவர் யார் (Who invented the computer in Tamil) என்றால் சார்லஸ் பாபேஜ் என்ற பல்துறை மேதையே கணனியை கண்டுபிடித்தவர் ஆவார்.
சார்லஸ் பாபேஜ் (Charles Babbage in Tamil) ஒரு கணித மேதை, முதலீட்டாளர், தத்துவஞானி மற்றும் இயந்திர பொறியியலாளர் ஆவார்.
ஆரம்ப வாழ்க்கை
சார்லஸ் பாபேஜ் 1791 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி லண்டனில் பிறந்தார்.
இவரின் தந்தையின் பெயர் பெஞ்சமின் பாபேஜ் (Benjamin Babbage in Tamil) ஆகும் இவரின் தந்தை ஒரு வங்கியாளர் ஆவார். சார்லஸ் அவர்களின் தாயாரின் பெயர் பெட்ஸி பிளம்லீக் டீப் (Betsy Plumleigh Teape in Tamil) ஆகும்.
முழுமையாக வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்.
0 notes
இயற்கை வளம்
இயற்கை என்றால் என்ன (What is nature in Tamil) என்று நாம் உணரும் அக்கணத்திலிருந்து நாம் நிச்சயமாக இயற்கையை நேசிக்க ஆரம்பிப்போம். தானாகவே தோன்றி இயல்பாகவே இருக்கின்ற அனைத்துமே இயற்கை (Nature in Tamil) என்று பொருள்படும்.
இயற்கை (Iyarkai) என்பது இறைவனால் கொடுக்கப்பட்ட வரப்பிரசாதமாகும். இயற்கை (Iyarkai in Tamil) இன்றி இங்கு எதுவுமே இல்லை.
மனிதனும் இயற்கையின் ஒரு அங்கமாகிறான். இயற்கையில் உள்ள ஒரு சிறந்த படைப்பு மனிதன் ஆவான்.
இயற்கையானது பல வகையான வளங்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது. அவற்றின் துணையுடனே இவ்வுலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும் உயிர் வாழ்கின்றன.
சரி வாருங்கள் இனி இயற்கை வளம் (Iyarkai valam in Tamil) பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
இயற்கை வளம் என்றால் என்ன? (What is natural resource in Tamil)
இயற்கை வளம் என்பது மனிதனின் தலையீடுகள் எதுவுமின்றி இயல்பாக இருக்கும் வளமாகும். அதாவது இயற்கையாக தோன்றிய நிலம், நீர், காற்று, ஆகாயம், கனிமங்கள், தாவரங்கள் உயிரினங்கள் இவை அனைத்துமே இயற்கை வளங்களாகும்.
இவையின்றி மேலும் பல வகையான வளங்கள் இவ்வுலகத்தில் கொட்டிக்கிடக்கின்றன.
இயற்கை வளங்கள் மனித வாழ்க்கைக்கும் மற்ற உயிர்களின் வாழ்வாதாரத்திற்கும் முழுமையாக துணை புரிகின்றன. உலகில் தயாரிக்கப்படும் அனைத்து உற்பத்திக்கும் மூலாதாரம் இயற்கை வளங்கள் என்பதை நாம் என்றும் மறக்கக்கூடாது.
மேலும் முழுமையாக தெரிந்துகொள்ள கீழுள்ள லிங்கை க்ளிக் செய்யவும்
https://bit.ly/NST-NaturalResource
0 notes
Oppo F21 Pro
0 notes